பவர் ஸ்டார் முத்தம் கொடுத்ததால் கோபித்துக் கொண்ட நடிகை!

Actress Irked Over Powerstar Srinivasan Sudden Kiss   

அழகன் அழகி படத்தின் ஷூட்டிங்கின்போது பவர் முத்தம் கொடுத்ததால் உடன் நடித்த நடிகை கோபித்துக் கொண்டு, இனி இப்படியெல்லாம் முயற்சி பண்ணாதீங்க என்று எச்சரித்தாராம்.

நந்தா பெரியசாமி இயக்கத்தில், ஸ்ரீஅண்ணாமலையார் எஸ் குருராஜன் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜோ நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆருசி நடிக்கிறார்.

விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் ஒரு பாடலுக்கு ஏகப்பட்ட அழகிகளுடன் நடனமாடுகிறார்.

நேற்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அருகில் உள்ள பின்னி மில்லில் நடந்த படப்பிடிப்பில் பவர் ஸ்டார் சீனிவாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.

அது ஒரு மெலடியான ஆங்கிலப் பாடல். அந்தப் பாடலுக்கு ஏக மேக்கப்புடன் ஏராளமான அழகிகளுடன் இரவுப் பின்னணியில் ஆடிக் கொண்டிருந்தார் சீனிவாசன்.

ஒரு கட்டத்தில் நடனமாடிக் கொண்டிருந்த சீனிவாசன், கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு, உடன் ஆடிய அழகி ஒருவருக்கு முத்தம் கொடுத்துவிட்டார்.

பல் பட்டுவிட்டதோ என்னமோ.. அந்த நடிகை ஏக கோபத்துடன் சத்தமில்லாமல் திட்டிக் கொண்டே, இன்னொரு முறை இப்படியெல்லாம் முயற்சி பண்ணாதீங்க என்று எச்சரித்தார்.

ஆனால் பவரோ இதற்கெல்லாம் அசருவதாக இல்லை. சிரித்துக் கொண்டே, அதே பெண்ணின் மீது கைபோட்டபடி புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுக்க ஆரம்பித்தார். முதலில் உர்ரென்றிருந்த அந்தப் பெண், பின்னர் சகஜமாகி சீனிவாசன் கையைப் பிடித்துக் கொண்டு சிரித்தபடி போஸ் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்!

A new actress has irked over Powerstar Srinivasan's sudden kiss during the shooting of Azhagan Azhagi.

 

சோனியா காந்தி கதை: பிரியாமணியை விசாரித்த உளவுத்துறை

Priyamani Playing Sonia Gandhi Chandi

பிரியாமணி தெலுங்கில் நடிக்கும் "சாண்டி" படம் சோனியாவைப் பற்றியது என்ற தகவல் கசிந்துள்ளதால் உளவுத்துறை விசாரித்து முழு ஸ்கிரிப்டையும் வாங்கிச் சென்றுவிட்டதாக தெரிகிறது.

சாருலதா படமும் கைவிட்டு விட்டதால் தமிழில் சரியான பிரேக் இல்லாத பிரியாமணி தெலுங்கில் கவனம் செலுத்தினார். அவருக்கு கிடைத்த சாண்டி திரைப்படம் பட பூஜையில் இருந்தே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது காங்கிரஸ் தலைவர் சோனியாவின் வாழ்க்கை கதை என்று கிசுகிசுக்கப்பட்டது. ஐதராபாத்தில் இதன் துவக்க விழா நடந்தபோது பிரியாமணி படத்தில் நடிக்கும் கெட் அப்பிலேயே வந்து கிசுகிசு செய்தியை உறுதி செய்தார்.

அவரது உடை அலங்காரம், நடை ஆகியவை சோனியாவை போன்று இருந்ததால், இது சோனியா கதைதான் என்று தெலுங்கு மீடியாக்கள் பரபரப்பாக செய்திகள் வெளியிட்டன. இந்த தகவல் டெல்லிக்கு போகவே விசாரித்து தகவல் அனுப்புமாறு ஆந்திரா போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து ஆந்திர போலீசார் படத்தின் இயக்குனர் சமுத்திராவிடமும், நடிகை ப்ரியாமணியிடமும் கதை பற்றி விசாரித்ததாக கூறப்படுகிறது.

பெண் அரசியல்வாதி

"சாண்டி படத்தில் பெண் அரசியல்வாதி கேரக்டரில் நடிக்கிறேன். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். கதை முழுமையாக தெரியாது" என்று பிரியாமணி கூறியுள்ளார். இயக்குனர் சமுத்திராவோ எதற்கு வம்பு என்று படத்தின் ஸ்கிரிப்டின் பிரதியையே போலீசிடம் கொடுத்துவிட்டதாகவும் அதை போலீசார் உள்துறைக்கு அனுப்பி விட்டதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

"இது அரசியல் கதைதான். ஆனால் தனிப்பட்ட யாரைப் பற்றியதும் அல்ல, சிலருடைய வாழ்க்கையை முன்னுதாரணமாக கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் சமுத்ரா. ஆந்திர அரசியலில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சிகள் காட்சிகளாக இடம் பெறுகிறது. அரசியலிலும் பெண்களால் சாதிக்க முடியும் என்கிற கருத்தைச் சொல்லும் படம்"

"ஆந்திர அரசியலில் புகழ்பெற்ற இளம் தலைவர் ஒருவர் அவரது அரசியல் எதிரிகளால் கொல்லப்படுகிறார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் அவரது தங்கையை கட்சிக்கு தலைமை தாங்குமாறு தொண்டர்கள் அழைக்கிறார்கள். கட்சியையும், நாட்டையும் காப்பாற்ற கல்லூரி மாணவியான பிரியாமணி அரசியல் கட்சியின் தலைவியாகிறார். தனது புத்தி கூர்மையாலும், ராஜதந்திரத்தாலும் எதிரிகளிடமிருந்து கட்சியை காப்பாற்றி தேர்தலில் வெற்றி பெற்று எப்படி ஆட்சி அமைக்கிறார் என்பதுதான் கதை என்கிறார் சமுத்ரா.

 

விஜயின் ஜில்லாவுக்கும் அஜீத்தின் மங்காத்தாவுக்கும் என்ன தொடர்பு?

What S The Connection Between Jilla Mankatha

சென்னை: விஜய் நடிக்கும் ஜில்லா படத்திற்கும் அஜீத் குமாரின் மங்காத்தாவுக்கும் ஒரு தொடர்பு உள்ளது.

விஜய் நடிக்கவிருக்கும் ஜில்லா படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடப்படுகிறது. இந்த படம் மூலம் மீண்டும் விஜயுடன் ஜோடி சேர்ந்துள்ளார் காஜல் அகர்வால். துப்பாக்கியில் தான் பெயருக்கு அவ்வப்போது வந்துவிட்டு போனார். இந்த படத்திலாவது அவரது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கிறதா என்று பார்க்கலாம்.

இந்நிலையில் ஜில்லா குறித்து ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது அஜீத்தின் மங்காத்தா படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்த மகத் ஜில்லா படத்தில் விஜயின் தம்பியாக நடிக்கிறாராம். நேசன் இயக்கும் இப்படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன் லாலும் உள்ளார்.

இதற்கிடையே மகத் தெலுங்கில் பியா பாஜ்பாயுடன் சேர்ந்து பேக் பெஞ்ச் ஸ்டூடண்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.

 

லைஃப் ஆப் பைக்கு ஆஸ்கர்... சந்தோஷத்தில் மிதக்கும் புதுவை மாணவன்!

புதுவை: இயக்குநர் ஆங் லீயின் லைஃப் ஆப் பைக்கு ஆஸ்கர் விருதுகள் கிடைத்ததை மகிழ்ச்சி பொங்க அனைவருக்கும் சொல்லி வருகிறான் ஒரு சிறுவன். அவன் பெயர் கணேஷ் கேசவ்.

லைஃப் ஆப் பையில் நடித்த சிறுவன்தான் இந்த கணேஷ் கேசவ். புதுவை ஆச்சார்யா பள்ளியை சேர்ந்த மாணவன் கணேஷ் கேசவ்வை இயக்குனர் ஆவ்லீ டூப்பாக பயன்படுத்தி உள்ளார். இன்னும் சில காட்சிகளில் கதாநாயகனுடன் பள்ளியில் பயிலும் சக மாணவராகவும் கணேஷ் கேசவ் நடித்துள்ளார்.

'லைப் ஆப் பை' படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளதால் அந்த படத்தில் பங்கேற்ற முறையில் சக மாணவர்களும் ஆசிரியர்களும், நண்பர்களும் கணேஷ் கேசவ்விற்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்களாம். தான் நடித்த படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது மாணவன் கணேஷ் கேசவ்வை மகிழ்ச்சியில் திளைக்க வைத்திருக்கிறது. இதை அனைவரிடமும் சொல்லிச் சொல்லி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறான் சிறுவன் கணேஷ்.

life pi actor enjoys oscar winning
கணேஷ் கேசவ் இதுகுறித்துக் கூறுகையில், "புதுச்சேரியில் 'லைப் ஆப் பை' படக்குழுவினர் படத்தில் நடிக்க பல மாணவர்களை அழைத்தனர். அவர்களுடன் நானும் சென்றிருந்தேன். அப்போது கதாநாயகனின் சிறுவயது தோற்றத்தில் நடிக்கும் மாணவரும் நானும் ரஇரட்டையர்கள்போல் இருந்தோம்.

இதனால் இயக்குனர் என்னை 'டூப்பாக' நடிக்க வைத்தார். அதோடு என்னை கதாநாயகனின் மாணவ பருவ படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் எல்லாம் அவருக்கு பதிலாக எப்போதும் என்னை வைத்திருந்தனர்.

எனக்கு விஞ்ஞானியாக விருப்பம் உள்ளது. ஆனால் வாய்ப்புக் கிடைத்தால் நடிக்கவும் ஆசையாக உள்ளது," என்றார்.

 

அமெரிக்காவில் இளையராஜாவின் ராஜாங்கம் - ரசிகர்கள் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவம்!

நுவர்க்(யு.எஸ்): நியூஜெர்ஸி மாநிலம் நுவர்க் நகரில் பிரம்மாண்டமான ப்ருடென்ஷியல் அரங்கில் இசைஞானி இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

ஐந்து மணி நேரம் இடைவிடாமல் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இளையராஜா இசையில் வெளிவந்த தமிழ், தெலுங்கு பாடல்கள் இடம்பெற்றன.

ஏற்கெனவே கனடாவில் சுமார் 25 ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தி முடித்துவிட்டு வந்திருந்த இளையராஜா, நுவர்க்கில் நடந்த நிகழ்ச்சியில் இன்னும் பிரமாதப்படுத்திவிட்டார்.

ilayaraajaa s us concert an unforgettable experience

எஸ்பிபியுடன் மனோவும் சித்ராவும்

எஸ்பி பாலசுப்ரமணியம், மனோ, சித்ரா, கார்த்திக், யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, பவதாரிணி உள்ளிட்ட பதினைந்திற்கும் மேற்பட்ட பிண்ணனி பாடகர்கள் பங்கேற்றனர். சுமார் 60க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் உடன் இசைத்தனர்.

மாலை ஏழு மணிக்கு ஆரம்பமான கச்சேரி நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு நிறைவு பெற்றது. ஐந்து மணி நேரமும் மேடையிலேயே நின்று கொண்டு இசை ராஜாங்கம் நடத்தினார் இளையராஜா. பத்து நிமிடம் மட்டுமே சின்ன ப்ரேக் எடுத்துக்கொண்டார். ஆனால் நிகழ்ச்சி இடைவேளை இல்லாமல் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருந்தது.

இசையுணர்ச்சியுடன் இளையராஜா

இளையராஜா இசையை எந்த அளவு நேசிக்கிறார், சுவாசிக்கிறார் என்பதற்கு இந்த நிகழ்ச்சியும் எடுத்துக்காட்டாக அமைந்தது. நடுவில் சில இசைக்கலைஞர்கள், ஈடுகொடுத்து வாசிக்க முடியாமல் போனது. பெரும்பாலான ரசிகர்களுக்கு அதை தெரிந்து கொள்வது கூட இயலாது. ஆனாலும், அதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார் இளையராஜா.


'உங்களுக்கு தரமான இசையை தரவேண்டும் என்ற காரணத்தினால் மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே இசைக் கலைஞர்களுக்கு நோட்ஸ் வழங்கி பயிற்சி செய்கிறோம். ஆனால் கூட சில தவறுகள் நேர்ந்து விடுகிறது. அது கலைஞர்களின் குறை அல்ல. கால அவகாசம் இல்லாததால்தான் அப்படி நேர்கிறது. சரியான இசையை கொடுக்க முடியாதபோது அது மனவருத்தத்தை தருகிறது. அதனால் தான் நான் வெளிநாடுகளில் இசைக் கச்சேரிகளை ஏற்றுக்கொள்வதில்லை, தவறுகளுக்கு மன்னித்துக் கொள்ளுங்கள்' என்று சொன்னார்.

இளையராஜாவுக்கும் இசைக்கும் உண்டான இணைபிரியா பந்தத்தை உணர்ந்த ரசிகர்கள் உறைந்து விட்டனர்.

'நிலா அது வானத்து மேலே' ஆக மாறிய தாலாட்டு

அக்னி நட்சத்திரத்தில் இடம்பெற்ற நின்னுக்கோரி வர்ணம் என்ற பாடலை சித்ரா பாடி முடித்த போது கட்டுக்கடங்காத கரகோஷம். அப்போது கையில் இருந்த 'நோட்ஸ்' எடுத்துக் காட்டிய ராஜா, இது 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி எழுதப்பட்ட நோட்ஸ். அதைத்தான் அப்படியே இசைக் குழுவினருக்கும் கொடுத்தேன். இதோ உங்களுக்கும் காண்பிக்கிறேன் என்றார். அதைப் பார்த்து அரங்கமே ஆர்ப்பரித்தது.

நாயகன் படத்தில் 'நிலா அது வானத்து மேலே' பாடலை பாடும் முன்பாக அது உருவான கதையை விவரித்தார். முன்னதாக, தாய் இறந்த பிறகு பிள்ளைகளுக்கு ஆறுதலாக தாலாட்டு பாடலாகத்தான் அதை அமைத்திருந்தாராம். பாடலைக் கேட்ட மணிரத்னம், இதை கொஞ்சம் வேகமாக மாற்றி, படகு மேல் போகும் போது துள்ளலான பாடலாக மாற்ற முடியுமா என்று கேட்டிருக்கிறார். ராஜாவும் தாலாட்டை அப்படியே மாற்றி நிலா அது வானத்து மேலேவாக மாற்றி விட்டார். முதலில் தாலாட்டு பாடலை பாடி, எப்படி மாற்றினார் என்பதையும் பாடிக் காட்டும் போது கைத்தட்டல்களில் அரங்கம் அதிர்ந்தது.

அமெரிக்க பாப் பாடல்

திடிரென்று ஒரு அமெரிக்க ஆங்கிலப் பாடலை மேடையில் ஒலிக்கச் செய்தார். என்னவென்று எல்லோரும் யோசித்த வேளையில் தன்னுடைய இசையை எப்படி இங்கே காப்பி அடித்துள்ளார்கள் என்று கேட்டுவிட்டு, ராகவேந்திரா பட பாடலை பாடினார். கொஞ்சம் அங்கே இங்கே மாற்றி அப்படியே அப்பட்டமாக காப்பி அடிக்கப்பட்டிருந்த்து அந்த பாடல். இதுக்கெல்லாம் ராயல்டி கேட்டு இளையராஜா. கேஸ் போட மாட்டார் என்ற தைரியம் அமெரிக்கா வரைக்கும் போய்விட்டது போலிருக்கு.

ஒரு சமயத்தில் ரசிகர்கள் கூச்சல் செய்து ஆர்ப்பாட்டம் செய்த போது, தாய் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டுவது போல், உங்களுக்காக கலைஞர்களுடன் மூன்று மாதம் ஒத்திகை பார்த்து வந்து இசையை ஊட்டுகிறேன். அமைதியாக இருந்து ரசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று உணர்ச்சிபூர்வமாக வேண்டுகோள் விடுத்தார்.

நிகழ்ச்சியை காண கனெக்டிகட், நியூஜெர்சி, நியூயார்க், பென்சில்வேனியா, மேரிலாண்ட், வர்ஜீனியா போன்ற வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமல்லாமல் டெக்சாஸ் போன்ற தொலைதூரத்து மா நிலங்களிலிருந்தும் ரசிகர்கள் வருகை தந்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்து அரங்கத்தை விட்டு, பல்லாயிரம் பேர் மொத்தமாக வெளியேறிய போது, நள்ளிரவிலும் ட்ராபிக் ஜாம் ஆனது.

- நியூஜெர்ஸியிலிருந்து சிட்னி ஸ்ரீராம் மற்றும் உதயன்

 

மார்ச் 1... ஒரே நாளில் ஒன்பது படங்கள்!

9 Releases On March 1

ஒரு நாளுமில்லாத திருநாளாய் வரும் மார்ச் மாதம் முதல் தேதியன்று மட்டுமே 9 படங்கள் வெளியாகப் போகின்றன.

இந்த பிப்ரவரி மாதத்தில் கிட்டத்தட்ட 25 படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருந்தன. ஆனால் விஸ்வரூபம் படத்துக்கு அதிகபட்சமாக 500 அரங்குகள் கொடுத்ததால் மற்ற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பது கஷ்டமாகிவிட்டது.

இதன் விளைவு பெரும்பாலான படங்களை தள்ளி வைத்துவிட்டனர். அந்தப் படங்கள் இப்போது வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டன.

வரும் மார்ச் 1-ம் தேதி மட்டும், கருணாஸ் நடித்த சந்தமாமா, புதுமுகங்கள் நடித்த வெள்ளச்சி, கண்பேசும் வார்த்தைகள், கரும்புலி, நினைவோடு கலந்துவிடு, நேசம் நெசப்படுதே, ஆண்டவ பெருமாள், நான்காம் பிறை 3 டி, சுண்டாட்டம், ரொம்ப நாளாக பராக் பராக் என்று சொல்லிக் கொண்டிருக்கும் லொள்ளு தாதா போன்ற படங்கள் திரையைத் தொடுகின்றன.

இந்தப் படங்கள் வெளியாகும் தியேட்டர்கள் லிஸ்ட் கூட வெளியாகியுள்ளது.

இந்த ஒன்பது படங்களும் ஒரே நாளில் வெளியானால், அதிகப் படங்கள் வெளியான சாதாரண வெள்ளிக்கிழமை இந்த வாரம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சூர்யாவின் தேதிக்காக மோதும் கவுதம் மேனன் - லிங்குசாமி!

Goutham Menon Lingusamy Compete Get Suryas Date

சிங்கம் 2 முடிந்த பிறகு சூர்யாவின் தேதி யாருக்கு..? இந்த கேள்வியோடு சூர்யாவைத் துரத்த ஆரம்பித்துள்ளனர் இயக்குநர்கள் கவுதம் மேனனும் லிங்குசாமியும்.

மாற்றானுக்குப் பிறகு சூர்யா நடித்துவரும் படம் சிங்கம் 2. ஹரி இயக்கும் இந்தப் படம் முடிவடையும் தறுவாயில் உள்ளது.

அடுத்து இரு படங்களில் நடிக்க சம்மதித்துள்ளார் சூர்யா. இதில் ஒரு படத்தை கவுதம் மேனன் இயக்குகிறார். படத்துக்கு தலைப்பு துப்பறியும் ஆனந்தன்.

இன்னொருவர் இயக்குநர் லிங்குசாமி. இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக சமந்தாவை ஒப்புந்தம் செய்துவிட்டு ஸ்க்ரிப்டோடு காத்திருக்கிறார் லிங்குசாமி.

இருவருமே சூர்யா ரெடி என்றதும் ஷூட்டிங் செல்லக் காத்திருக்கிறார்கள். எனவே யாருக்கு முதலிடம் தருவது என்பதில் சூர்யாவுக்கே பெரும் குழப்பமாக உள்ளதாம்.

இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க, இரண்டு படங்களுக்கும் சமமாக தேதிகள் ஒதுக்கி ஒரே நேரத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் சூர்யா.

இரண்டு கதைகளுமே நிச்சய வெற்றி என்ற நம்பிக்கை சூர்யாவுக்கு இருப்பதால், மாற்றானில் விட்டதை அடுத்தடுத்து ஹாட்ரிக் அடித்து சரிகட்டிவிடலாம் என்கிறாராம் தெம்போடு!

 

பரதேசி வரும் தேதி மார்ச் 15... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Bala S Paradesi From March 15   

பாலா படங்களில் பெஸ்ட் இதுதான் என பலரும் பாராட்டி வரும் பரதேசி படம் வரும் மார்ச் 15-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. இந்தப் படத்தின் வெளியீடு குறித்து பல்வேறு தேதிகளை யூகமாகக் கூறி வந்த பாலாவும் அவரது குழுவினரும் இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பரதேசி படத்தை முதலில் பிவிபி நிறுவனம் தயாரித்தது. ஆனால் பட்ஜெட் எகிறியதால் பாலாவே, பி ஸ்டுடியோஸ் எனும் பேனரில் தயாரிக்கிறார்.

ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

மறைந்த முரளியின் மகன் அதர்வா, வேதிகா, தன்ஷிகா மற்றும் பலர் நடிக்கும் இந்தப் படம் ரெட் டீ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. 1930களில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தைப் பார்த்த இயக்குநர்கள் பாலு மகேந்திரா, மணிரத்னம், அனுராக் காஷ்யப் போன்றவர்கள் படத்தைப் பாராட்டியுள்ளனர்.

இந்த நிலையில், படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அனுப்பி வைத்துள்ளார் இயக்குநர் பாலா.

இதனால் பட வெளியீட்டை தள்ளி வைத்திருந்தார். இப்போது வரும் மார்ச் 15-ம் தேதி படத்தை வெளியிடவிருப்பதாக அறிவித்துள்ளார் பாலா.

படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தனது ட்விட்டரில் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜேஎஸ்கே பிலிம்ஸ் சதீஷ்குமார் இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ளார்.

 

திரைப்பட இயக்குநர் யார் கண்ணனுக்கு தமிழ் கலைக் காவலர் பட்டம்

சென்னை: திரைப்பட இயக்குநர் யார் கண்ணனுக்கு தமிழ் கலைக் காவலர் பட்டம் வழங்கப்பட்டது.

சென்னை வியாசர்பாடி கண்ணதாசன் நகரில் எண்ணம் அறக்கட்டளையும், எழுத்தேணி அறக்கட்டளையும் தமிழ் எழுச்சிப் பேரவையுடன் இணைந்து முப்பெரும் விழா நடத்தின.

இந்த விழாவில் திரைப்பட இயக்குநரும், பாடல் ஆசிரியரும், நடிகருமான யார் கண்ணன் அவர்களுக்கு தமிழ் கலைக் காவலர் என்ற பட்டமும், தமிழகத் துறைமுகங்கள் பற்றியும் தமிழரின் கடலியல் பற்றியும் ஆய்வு நடத்தி வரும் ஒரிசா பாலசுப்பிரமணியன், தமிழக வரலாற்றுச் செய்திகளை தம் நாட்காட்டியில் வெளியிட்டுள்ள பூர்விகா நிறுவனத்தின் வடிவமைப்பாளர் துரை குமார், தமிழக நாட்டு மாடுகளைப் பாதுகாத்து வரும் கோவை வட வள்ளி சண்முகம், தமிழக நெல்விதைகளைப் பாதுகாத்து வரும் திருத்துறைப்பூண்டி செயராமன் ஆகியோர் தமிழ் மரபுக் காவலர் பட்டமும் நினைவுப் பரிசும் வழங்கிப் பாராட்டப் பெற்றனர்.

கவிஞர் பன்னீர் செல்வன், கவிஞர் மறத்தமிழ்வேந்தன், திராவிடப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் செல்லன், கல்லூரி கல்வித்துறைத் துணை இயக்குநர் அ.மதிவாணன், முனைவர் இறையரசன் ஆகியோர் பாராட்டிப் பேசினர்.

 

மனோ மகனை நடுக்கடலில் பயமுறுத்திய எம்எஸ் பாஸ்கர்!

Ms Bhaskar S Fun At Mid Sea

நீண்ட இடைவெளிக்கு பிறகு பழ. கருப்பையா ஒரு படம் தயாரிக்கிறார். படத்துக்குப் பெயர் 'நாடி துடிக்குதடி'. இந்த படத்தை செல்வா இயக்கியுள்ளார். இந்த படத்தின் படபிப்டிப்பு பிஜி தீவுக்களில் நடைபெற்றது.

இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கூறுகையில், "பிஜி தீவிலிருந்து வனலேவு தீவுக்கு எட்டு மணி நேரம் போட்ல போகணும். அப்படி போய்விட்டு திரும்பும் போது நாங்க சென்ற போட்டு பயங்கரமா ஆடியது.

நான் வெளியே வந்து பார்த்தேன். அலைகள் பயங்கரமா வந்து போட்டுல மோதியது. போட்டு கவுந்திடுரா மாதிரி ஆடுது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பாடகர் மனோவின் மகன் ஜாகீர், ‘என்ன மாமா கடல் இப்படி கொடூரமா கொந்தளிக்குது. இப்போ என்ன பண்றது' என்று என்னிடம் கேட்டார்.

'இறை நம்பிக்கை இருந்தால் பிரே பண்ணு. மேக்சிமம் இப்படியே போச்சுன்னா ஆளுக்கு ஒரு லைப் ஜாக்கெட் தருவாங்க. அதை வாங்கிட்டு இந்த பசிபிக் கடலில் குதிக்க வேண்டியதுதான். என்ன எந்த பக்கம் கரை இருக்குன்னே தெரியாது. மெதந்துகிட்டே போக வேண்டியதுதான். அப்படியே மெதக்காலமுன்னாலும், கடல் கொந்தளிப்பு ஒரு புறம், குளிர் இன்னொரு புறம் கடுமையா இருக்கு''. என்று நான் சொல்லி முடிப்பதற்குள், சரசரன்னு ஒரு பெரிய மீன் அருகே வந்து வாலாட்டிச் சென்றது.

இதை பார்த்ததும் ஜாகீர் இன்னும் மிரண்டு போனார். அவரை பார்த்து, "என்ன இவுங்க மாதிரி ஆளுங்கல்லாம் வருவாங்க. அதையெல்லாம் ஏதிர்த்து நாம போகணும்,'' என்றேன்.

அவர் அவ்வளவுதான். அரண்டு ஆடி போய்விட்டார். பிறகு போட் ஒட்டியவரிடம் கடல் கொந்தளிப்பை பற்றி கேட்டோம். "உங்களுக்கு இது புதுசு. எங்களுக்கு இது பழகிவிட்டது என்றார். அப்பப்போ இந்த மாதிரி சீற்றம் இருக்கும். அதை பற்றி காவலை படமுடியுமா. சில சமயம் படகு கவிழ்ந்து பயணிகள் இறந்த அனுபவமும் உண்டு,'' என்று கூலாக சொன்னார்.

அப்போது ஒரு பெரிய ராட்சச அலை வந்து மடார் என்று போட்டை தாக்க, அது அப்படியும் இப்படியும் தள்ளாடியாது. நாங்கள் கரைசேரும் வரையில் உயிரை பிடித்துக்கொண்டுதான் வந்து சேர்ந்தோம்," என்றார்.

நாடி துடிக்குதடி படத்தின் கதை பிஜி தீவில் நடப்பதுபோல படமாக்கி வருகிறார் இயக்குனர் செல்வா. விடுமுறைக்காக பிஜி தீவு செல்லும் இளைஞன் அங்கு வசிக்கும் ஒரு பெண்ணின் மீது காதல் கொள்கிறான். அதனால் ஏற்படும் விளைவுகள்தான் படத்தின் கதை.

நாடி துடிக்குதடி, ரணம், சரவண பொய்கை, சொல்லித்தர நானிருக்கேன், சுட்டகதை, ரகளபுரம், சந்தாமாமா, இருவர் உள்ளம், காதல் பிரதேசம், நகராஜசோழன், தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் ஒரு படம், தமிழ், மலையாளம் இரு மொழிகளில் உருவாகும் ஒரு படம் என கைவசம் ஒரு டஜன் படங்களில் நடித்து வருகிறார் எம்.எஸ்.பாஸ்கர்.

 

ரஜினி படம்... ஒப்புக் கொண்ட ஈராஸ்... மறுக்கும் கேவி ஆனந்த்!

Eros Produce Rajinikanth S Next Movie

சென்னை: கேவி ஆனந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்நடிக்கும் புதிய படத்தை தாங்கள்தான் தயாரிக்கவிருப்பதாக ஈராஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் இது வதந்தி என கேவி ஆனந்த் மறுத்துள்ளார்.

ஈராஸ் இன்டர்நேஷனலுக்காக ஏற்கெனவே கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ராணா படம் தொடங்கப்பட்டது. ரஜினியின் உடல்நிலை காரணமாக படம் தள்ளி வைக்கப்பட்டது.

ரஜினி உடல்நிலை குணமடைந்து வந்த பிறகு கோச்சடையான் தொடங்கப்பட்டது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் இந்தப் படம் கோடை ஸ்பெஷலாக வரவிருக்கிறது.

இந்த நிலையில், கோச்சடையானுக்குப் பிறகு ரஜினி நடிக்கவிருக்கும் படம் குறித்து ஏராளமான செய்திகள் வந்தன. இந்தப் படத்தை கே வி ஆனந்த் இயக்குகிறார், ஏஜிஎஸ் தயாரிக்கிறது.. அட்வான்ஸ் கூட கொடுத்துவிட்டார்கள் என்று செய்திகள் வந்தன.

ஆனால் இப்போது அந்தப் படத்தையும் ஈராஸ்தான் தயாரிக்கிறது என்ற தகவலை அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலர் கமல் ஜெயின் தெரிவித்துள்ளார்.

இந்தப் படம் குறித்து எகனாமிக் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், "ரஜினிகாந்தை வைத்து மூன்று படங்கள் தயாரிக்க ஒப்பந்தம் போட்டுள்ளோம். அதில் ராணாவும் கோச்சடையானும் தயாரிப்பில் உள்ளன. அடுத்த படத்தை கேவி ஆனந்த் இயக்குகிறார். பெயர், நடிகர்கள் எதுவும் இன்னும் முடிவு செய்யவில்லை. இது ரஜினியின் படம். எனவே ரூ 100 கோடிக்கு மேல் பட்ஜெட் இருக்கும்," என்று கூறியுள்ளார்.

கேவி ஆனந்த் ரஜினியுடன் சிவாஜியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். 'மாற்றானுக்குப் பிறகு ரஜினிக்காக கதை உருவாக்கும் பணியில் தீவிரமாக உள்ளார் கேவி ஆனந்த். கோச்சடையான் வெளியாகும் முன்பே இந்த புதிய பட அறிவிப்பு வரக்கூடும்,' என்கிறார்கள்.

மறுக்கும் கேவி ஆனந்த்

ஆனால் இந்த செய்தி குறித்து ட்விட்டரில், மறுப்பு தெரிவித்துள்ளார் கேவி ஆனந்த். "என்னுடைய ‘மாற்றான்' போய் கையெழுத்திட்டிருந்தால்தான் இது சாத்தியம். இப்போது கதையை உருவாக்குவதில்தான் தீவிரமாக உள்ளேன். மற்றபடி இப்போதைக்கு எல்லாமே வதந்திதான்," என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.