பிக்பாஸ் 7: சல்மான் கானுக்கு பதில் ஷாருக் கான்?

Shah Rukh Khan Set Replace Salman Khan

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் 7 வது சீசனை பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பானது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளன. இந்த நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கி வந்தார்.

இதன் அடுத்த சீசன் தொடங்க உள்ளது. ஆனால் இந்த சீசனை சல்மான்கானுக்கு பதிலாக ஷாருக்கான் தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது.

தன்னுடைய அடுத்த பட சூட்டிங்கில் பிஸியாக உள்ள சல்லு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவது சந்தேகம்தான் என்று நினைத்த தயாரிப்பாளர்கள் ஷாருக்கானை அணுகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஷாருக் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ரசிகர்களை கவர்வாரா? நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போதுதான் தெரியவரும்.

 

கலாச்சாரத்தை சீர்குலைக்கிறார்கள்: கமல், கவுதமி, பிரகாஷ்ராஜ், விஜய் டிவி மீது போலீசில் புகார்

சென்னை: நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது போன்று நடந்து கொண்டதாக கமல், கவுதமி, பிரகாஷ்ராஜ், திவ்யதர்ஷினி மீது இந்து மக்கள் கட்சி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.

இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் குமார் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் விஜய் டிவி மீது புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் மக்கள் அதிகம் பார்க்கக் கூடிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியில் நடிகர் பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கும் "நீங்களும் வெல்லலாம்' என்ற பொது அறிவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

complaint against vijay tv kamal gouthami prakashraj

கடந்த 15,16,17ம் தேதிகளில் ஒளிப்பரப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன், நடிகைகள் கவுதமி, திவ்யதர்ஷினி மற்றும் குடும்ப பெண்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடும்ப பெண்களிடம் நடிகர் கமலஹாசன் பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் நடிகர் பிரகாஷ்ராஜ், ஒரு நடுத்தர வயது பெண்மணியை பார்த்து, உங்களுக்கு நடிகர் கமலஹாசனை பிடிக்குமா என்று கேட்கிறார். அதற்கு அந்த நடுத்தர வயது பெண்மணி, எனக்கு வெறித்தனமாக பிடிக்கும் என்கிறார். மீண்டும் உங்களுக்கு நிறைவேறாத ஆசைகள் என்ற கேள்விக்கு பதிலளித்த அந்த பெண்மணி, கமலை கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டும் என்கிறார்

அதுபோலும், லட்சக்கணக்கான மக்கள், குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசனை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கிறார்.

அதுபோல் நடிகை திவ்யதர்ஷினியும், எனக்கும் அந்த ஆசை இருக்கிறது என தெரிவித்து, கமலை கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார். அந்த நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தினால் என்ன தவறு இருக்கிறது என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது.

பொது அறிவு நிகழ்ச்சி என்று அறிவிக்கப்பட்டு ஒளிபரப்படும் நிகழ்ச்சியில் ஒரு ஆணை அடுத்தவர் வீட்டு மனைவி அல்லது பெண்கள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது தான் இந்திய நாட்டு கலாச்சாரமா?

நாட்டில் பெருகி வரும் பாலியல் பலாத்காரத்திற்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் தூண்டுகோளாக இருந்து வருகின்றன. எனவே அன்றைய நிகழ்ச்சிகளில் இந்திய நாட்டு கலாச்சாரத்தை சீரழித்த குற்றத்திற்காக நடிகர்கள் கமலஹாசன், பிரகாஷ்ராஜ், நடிகைகள் கவுதமி, திவ்யதர்ஷினி, மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கமலுக்கு முத்தமிட்ட நடுத்தர வயது பெண் மற்றும் இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பிய விஜய் டி.வி. நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

அஞ்சலி மீதான ஹேபியல் கார்பஸ் வழக்கு வாபஸ் இல்லை: சித்தி பாரதிதேவி வழக்கறிஞர்

சென்னை: அஞ்சலி நீதிமன்றத்தில் ஆஜராகும் வரை ஆட்கொண்ரவு மனுவை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று அஞ்சலியின் சித்தி பாரதி தேவியின் வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

அஞ்சலி தன்னை தனது சித்தி பாரதிதேவி பணத்திற்காக கொடுமைப்படுத்துவதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறினார். போல் பச்சன் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஹைதராபாத் சென்றார். அங்குள்ள ஹோட்டலில் தங்கியிருந்த அவர் கடந்த 8ம் தேதி திடீர் என்று மாயமானார். அவரை யாரோ கடத்திவிட்டதாக அவரது சித்தி பாரதிதேவி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.

பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து சென்னை மற்றும் ஹைதராபாத் போலீசார் அஞ்சலியை தேடி வந்தனர். இந்நிலையில் அஞ்சலி ஹைதராபாத் போலீசார் முன்பு ஆஜராகி தன்னை யாரும் கடத்தவில்லை என்று தெரிவித்தார். அவர் தற்போது புனேவில் தங்கி போல் பச்சன் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். படப்பிடிப்பு இன்றுடன் முடிகிறது.

anjali s aunt not a mood withdraw habeas corpus

இந்நிலையில் பாரதிதேவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு வரும் 26ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அன்றைய தினம் அஞ்சலி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். ஆனால் அவர் வருவாரா என்று தெரியவில்லை. சென்னை போலீசார் இந்த வழக்கு தொடர்பாக அஞ்சலியிடம் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இதற்கிடையே வழக்கை பாரதிதேவி வாபஸ் பெறுகிறார் என்று கூறப்பட்டது. இது குறித்து பாரதி தேவியின் வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில், அஞ்சலி வரும் 26ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். போலீசார் அஞ்சலியிடம் விசாரணை நடத்தியதாக எந்த தகவலும் இல்லை. அஞ்சலி நீதிமன்றத்தில் ஆஜராகும் வரை வழக்கை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றார்.

 

கேன்ஸ் திரைப்பட விழா நடுவராக வித்யா பாலன், ஆங் லீ நியமனம்

Vidya Balan Enters The Cannes Film Festival 2013

டெல்லி: 66வது கேன்ஸ் திரைப்பட விழா நடுவர்களில் ஒருவராக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா வரும் மே மாதம் 15ம் தேதி துவங்கி 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாட்டு படங்கள் திரையிடப்படும். விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான நடிகர்கள், நடிகைகள் கலந்து கொள்வார்கள்.

சிறந்த படத்தை தேர்வு செய்ய 9 நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தலைமையிலான நடுவர் குழுவில் லைஃப் ஆஃப் பை இயக்குனர் ஆங் லீ, பாலிவுட் நடிகை வித்யா பாலன், ஹாலிவுட் நடிகை நிக்கோல் கிட்மேன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இவ்விழாவில் 19 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

இந்த விழாவில் அமிதாப் பச்சன் நடித்த முதல் ஹாலிவுட் படமான 'தி கிரேட் கேட்ஸ்பி' திரையிடப்படுகிறது. திரைப்பட விழாவில் அமிதாப் பச்சன் கலந்து கொள்கிறார். ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் கலந்து கொள்ளும் ஐஸ்வர்யா ராய்க்கு இந்த ஆண்டும் விழாவுக்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

 

மம்முட்டியுடன் இணையும் கெளதம் மேனன்... தாய் மொழிக்கு திரும்பினார்!

Gautham Menon Eyes Mammootty The First Time

தமிழ், தெலுங்கு, இந்தி திரை உலகில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த கெளதம் மேனன் முதன் முறையாக தனது தாய்மொழியில் படம் இயக்க இருக்கிறார். முதல் படத்திலேயே மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் இணைகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளாவைச் சேர்ந்த இயக்குநர் கெளதம் மேனன் தமிழில் மின்னலே தொடங்கி நீதானே என் பொன் வசந்தம் வரை பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

தெலுங்கு, இந்தியிலும் அவரது படங்களை ரீமேக் செய்வார் கவுதம் மேனன். ஆனால் மலையாளத் திரை உலகின் பக்கம் திரும்பி கூட பார்த்ததில்லை.

முதன் முறையாக மம்முட்டியை வைத்து படம் இயக்கப் போகிறாராம். அதற்கான கதை, ஸ்கிரிப்ட் எல்லாம் ரெடி செய்துவிட்டாராம். மம்முட்டி படத்திற்குப் பின்னர் பாசில் மகனை வைத்து மற்றொரு மலையாளப் படம் இயக்கப் போகிறாராம்.

இப்போது சூர்யா உடன் துருவ நட்சத்திரம் படத்தில் பிஸியாக உள்ள கெளதம் மேனன் 2014ம் ஆண்டில் இருந்து மம்முட்டி படத்தை இயக்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

என் படத்தில் நடிக்கவில்லை என்றால், அஞ்சலி மீது புகார் கொடுப்பேன்: இயக்குனர் களஞ்சியம்

Anjali Angers Kalanjiyam

சென்னை: ஊர் சுற்றி புராணம் படத்தில் நடிக்க வரவில்லை என்றால் நடிகை அஞ்சலி மீது நடிகர்கள் சங்கத்தில் புகார் கொடுப்பேன் என்று இயக்குனர் களஞ்சியம் தெரிவித்துள்ளார்.

நடிகை அஞ்சலி கடந்த 8ம் தேதி ஹைதராபாத் ஹோட்டல் ஒன்றில் இருந்து மாயமானார். போல் பச்சன் தெலுங்கு ரீமேக் ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத்தில் தங்கியவர் மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் ஹைதராபாத் செல்லும் முன்பு தன்னை சித்தி பாரதி தேவியும், இயக்குனர் களஞ்சியமும் கொடுமைபடுத்துவதாக தெரிவித்தரா்.

ஆனால் தான் அஞ்சலியை கொடுமைப்படுத்தவில்லை என்றும், அவர் ஹைதராபாத் செல்லும் முன்பு தன்னுடன் ஜோடி சேர்ந்துள்ள ஊர் சுற்றி புராணம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றும் களஞ்சியம் தெரிவித்தார். அஞ்சலி தனக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டு தான் சென்றார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் மாயமான அஞ்சலி 5 நாட்கள் கழித்து ஹைதராபாத் போலீசார் முன்பு ஆஜராகி தன்னை யாரும் கடத்தவில்லை என்றார். தற்போது அவர் போல் பச்சன் தெலுங்கு ரீமேக் பட ஷூட்டிங்கிற்காக புனே சென்றுள்ளார். நேற்றில் இருந்து 5 நாட்கள் களஞ்சியத்திற்கு கால்ஷீட் கொடுத்த அஞ்சலி ஷூட்டிங்கிற்கு வரவில்லை.

இது குறித்து களஞ்சியம் கூறுகையில்,

அஞ்சலி ஊர் சுற்றி புராணம் படத்தில் 10 நாட்கள் நடித்தார். மீண்டும் 23ம் தேதியில் இருந்து 5 நாட்கள் கால்ஷீட் கொடுத்தார். ஆனால் அவர் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள சென்னை வரவில்லை. அஞ்சலி ஒப்புக்கொண்டபடி என் படத்தில் நடித்து முடிக்காவிட்டால் அவர் மீது நடிகர்கள் சங்கத்தில் புகார் கொடுப்பேன் என்றார்.