இயக்குநர் ஃபாஸில் மகனும், நடிகருமான பஹத் தெரிவித்த காதலை ஏற்க மறுத்துள்ளார் நடிகை ஆன்ட்ரியா.
நடிகை ஆண்ட்ரியாவை காதலிப்பதாக மலையாள நடிகர் சமீபத்தில் பஹத் பரபரப்பு அறிவிப்பு வெளியிட்டார். இருவரும் அன்னையும் ரசூலும் என்ற மலையாள படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது ஆண்ட்ரியா மேல் பஹத்துக்கு காதல் ஏற்பட்டது. இவர் பிரபல மலையாள இயக்குனர் பாசிலின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஒரு மலையாளப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "நானும் ஆன்ட்ரியாவும் டேட்டிங் வைத்துக் கொள்ளும் அளவுக்கு நெருக்கமாக பழகி வருகிறோம். அவரை நான் தீவிரமாக காதலிக்கிறேன். அன்னயும் ரசூலும் படத்தில் நடிக்கும் போதே இருவரும் காதலிக்க ஆரம்பித்துவிட்டோம்," என்றார்.
இதற்கு ஆண்ட்ரியா இதுவரை பதில் சொல்லாமல் இருந்தார். இப்போது விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், "நான் யாரையும் காதலிக்கவில்லை. என் முழு கவனமும் சினிமாவில்தான் இருக்கிறது.
பகத் என்னை விரும்புவதாக கூறியுள்ளார். அது அவர் ஆசையாக இருக்கலாம். ஆனால் அதை அவர் என்னிடம் சொல்லவில்லை. இருந்தாலும் எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை. நான் அவரை காதலிக்க வில்லை. உடனடியாக திருமணம் செய்து கொள்ளும் திட்டமும் எனக்கு இல்லை. சினிமாவில் இன்னும் வெரைட்டியாக நடிக்க வேண்டும்," என்றார்.