கத்தி: விஜய் ஒன்னு சொல்றார், போராட்டக்காரங்க ஒன்னு சொல்றாங்க: குழப்பத்தில் தியேட்டர் உரிமையாளர்கள்

சென்னை: கத்தி விஷயத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர்.

விஜய் நடித்துள்ள கத்தி படத்தை வெளியிட சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்து படத்தின் விளம்பரங்களில் தயாரிப்பாளரான லைக்கா நிறுவனத்தின் பெயரை நீ்க்கிவிடுமாறு சென்னை போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தினார். அவரது அறிவுரையை ஏற்று லைக்காவின் பெயரை நீக்க ஒப்புக் கொண்டுவிட்டதாக கூறப்பட்டது.

விஜய் ஒன்னு சொல்றார், போராட்டக்காரங்க ஒன்னு சொல்றாங்க: குழப்பத்தில் தியேட்டர் உரிமையாளர்கள்

இந்நிலையில் கத்தி பிரச்சனை தீர்ந்துவிட்டது. இந்த பிரச்சனை தீர ஆதரவளித்த அம்மாவுக்கு நன்றி என்று விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால் பெயரை நீக்க லைக்கா ஒப்புக் கொள்ளவில்லை என தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே கத்தியை ரிலீஸ் செய்ய விடவே மாட்டோம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி. வேல்முருகன் தெரிவித்துள்ளார். கத்தி பிரச்சனை தீர்ந்துவிட்டது என்று விஜய் சொல்வது, போராட்டக்காரர்கள் வேறுவிதமாக சொல்வது ஆகியவற்றால் என்ன செய்வது என்று தெரியாமல் தியேட்டர் உரிமையாளர்கள் தான் கடும் குழப்பத்தில் உள்ளனர்.

 

லைக்கா பெயர் நீக்கம்: கத்தி நாளை ரிலீஸாவது உறுதி

சென்னை: கத்தி பிரச்சனை ஒருவழியாக தீர்வுக்கு வந்தது. படம் அறிவித்தபடியே நாளை தமிழகத்தில் ரிலீஸாகிறது.

கத்தி படத்திற்கு அதன் தயாரிப்பாளர் லைக்காவால் தான் பிரச்சனை ஏற்பட்டது. படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என சில தமிழ் அமைப்புகள் வரிந்து கட்டிக் கொண்டு நின்றன. இந்நிலையில் படம் நாளை ரிலீஸாகுமா என்ற சந்தேகம் எழுந்தது.

ஒரு வழியாக கத்தி பிரச்சனை தீர்ந்தது: நாளை ரிலீஸாவது உறுதி

இந்த பரப்பான சூழலில் இன்று காலை தியேட்டர் உரிமையாளர்களின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. படத்தின் விளம்பரம் உள்பட அனைத்தில் இருந்தும் லைக்கா பெயரை நீக்க சம்மதித்து அந்நிறுவனம் கடிதம் அளித்துள்ளது.

இதையடுத்து கத்தி படம் அறிவித்தபடி நாளை தமிழகத்தில் ரிலீஸ் செய்யப்படும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். கத்தி தமிழகத்தில் மட்டும் மொத்தம் 440 தியேட்டர்களில் நாளை ரிலீஸாகிறது.

 

காதல்னா என்னங்க?.... கேட்பது நடிகை தேவிக்ருபா

தென்றல் தொடரின் புஜ்ஜிம்மாவாக வந்து கலக்கியவர் சின்னத்திரை நடிகை தேவிக்ருபா.

எத்தனையோ சீரியல்களில் நடித்திருந்தாலும் புஜ்ஜிம்மாதான் சின்னத்திரை ரசிகர்களிடம் தேவிக்ருபாவை அடையாளப்படுத்தியது.

எட்டாவது படிக்கும்போதே நிகழ்ச்சித்தொகுப்பாளினியாக டிவி சேனலுக்குள் நுழைந்த தேவிக்ருபா, சீரியல், சினிமா என்று கலக்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு இதுவரை காதல் அனுபவமே ஏற்பட்டதில்லையாம். அப்படி என்றால் என்ன? அது எப்படி இருக்கும் என்று கேட்கிறார்.

காதல்னா என்னங்க?.... கேட்பது நடிகை தேவிக்ருபா

தமிழின் பெரும்பாலான முன்னணி தொலைக்காட்சிகளில் இவர் நடித்த சீரியல்கள் ஒளிபரப்பாகியுள்ளன. இவருடைய தம்பி கோகுலும் சீரியல் நடிகர்தான். தற்போது சன்டிவியின் தேவதை சீரியலில் நடித்து வருகிறார் கோகுல். ஒரே வீட்டில் இரண்டு நடிகர்கள் இருக்கின்றனர்.

சீரியல் பயணம்

"இணைக் கோடுகள்', "ஆனந்தம்', "தீர்க்க சுமங்கலி', "கஸ்தூரி' ஆகிய சீரியல்களில் நடித்த தேவிக்ருபா, "பயமறியான்' படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தார்.

ரசிகர்களின் புஜ்ஜிம்மா

சினிமாவிற்காக சில காலம் சீரியலுக்கு லீவ் விட்ட தேவிக்ருபா,மீண்டும்"தென்றல்' சீரியலில் புஜ்ஜிமாவாக நடித்து சின்னத்திரை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

வரிசைகட்டும் சீரியல்கள்

தென்றலைத் தொடர்ந்து,"புகுந்த வீடு', "மாமா மாப்ளே', "மை நேம் இஸ் மங்கம்மா', "மாயா', "பிள்ளைநிலா' என சீரியல் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தெலுங்கிலும் ஏகப்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார் தேவிகிருபா.

ஹீரோவின் தங்கை

"தற்போது "இலக்கணமில்லா காதல்' என்ற படத்திலும், ஜெய் ஆகாஷுக்கு தங்கையாக ஒரு படத்திலும், ஜோடியாக ஒரு படத்திலும் நடித்திருக்கிறாராம் தேவிகிருபா.

காதல் திருமணம்தான்

சின்ன வயதில் இருந்து மீடியாவில் இதுவரை காதல் மனுக்கள் எதுவும் வரவில்லையாம்.ஆனால், கண்டிப்பாக காதல் கல்யாணம்தான். ஆனால், காதல் எப்படி வரும்னுதான் தெரியலை என்கிறார். அந்த அளவிற்கு நீங்க வெகுளிப் பொண்ணா தேவிக்ருபா?

 

லைகா பெயர் இல்லாமல் விளம்பரங்கள்... நாளை வெளியாகுமா கத்தி?

லைகா நிறுவனத்தின் பெயரை நீக்கிவிட்டு இன்று கத்தி பட விளம்பரங்கள் வெளியாகியிருந்தாலும், நாளை தமிழகத்தில் படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கத்தி படப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. படத்தின் தயாரிப்பாளர்களான லைகா நிறுவனம் ராஜபக்சேவுடன் தொடர்புள்ளவர்கள் என்று கூறி, அந்த பேனரில் படம் வெளியாவதை அனுமதிக்க மாட்டோம் என தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் மாணவர் அமைப்புகள் கூறிவிட்டன.

இந்த சூழலில் படத்தை வெளியிடுவது சரியல்ல என்றும், பண்டிகை நேரத்தில் அத்தனை திரையரங்குகளுக்கும் பாதுகாப்பு தருவது இயலாத காரியம் என்றும் தமிழக காவல் துறை கத்தி திரைப்படக் குழுவுக்கு அறிவுரைத்தது.

லைகா பெயர் இல்லாமல் விளம்பரங்கள்... நாளை வெளியாகுமா கத்தி?

ஆனால் படத்திலிருந்து லைகா பெயரையோ, அந்தப் பெயர் வரும் காட்சிகளையோ நீக்க தயாரிப்பாளர்கள் தரப்பில் மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று மட்டும் மூன்று வெவ்வேறு கூட்டங்கள் இந்தப் படம் தொடர்பாக நடந்தது.

இறுதியில் இரவு 10 மணிக்குப் பிறகு, கத்தி படப் பிரச்சினை சுமூகமாக முடிந்தது. திட்டமிட்டபடி படம் வெளியாகிறது என்று மட்டும் அறிவிப்பு வெளியானது. லைகா பெயர் இல்லாமல்தான் படம் வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இது உறுதியாக சொல்லப்படாததால், நேற்று இரவு சத்யம் மற்றும் உட்லண்ட்ஸ் அரங்குகளின் முன்பக்க கண்ணாடி கதவுகள் அடித்து நொறுக்கப்பட்டன. பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.

இதைத் தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு கத்தி தயாரிப்பாளர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சந்தித்துப் பேசி வருகின்றனர்.

இன்னொரு பக்கம், சுமூகத் தீர்வு ஏற்பட்டதாகக் கூறுவதை மறுத்து, எதிர்ப்பில் பிடிவாதமாக உள்ளது வேல்முருகன் தரப்பு.

இந்தக் கூட்டத்தில் லைகா பெயர் எந்த இடத்திலும் வராமல் பார்த்துக் கொள்வதாக கடிதம் மூலம் உறுதியளிக்கப்படும் என்று தெரிகிறது. அப்படியே கடிதம் கொடுத்தாலும், படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டி இருக்கும். இன்னும் ஒரு நாள் கூட இல்லாத நிலையில் இது சாத்தியமா என்று தெரியவில்லை.

எனவே படம் வெளியாகுமா என்ற கேள்வி இன்னமும் நீடிக்கிறது.

 

'கத்தி'யை எதிர்ப்பதை விட்டுட்டு வேறு வேலை இருந்தா பாருங்கய்யா: குஷ்பு

சென்னை: கத்தி படத்தை எரித்து போராட்டம் நடத்துபவர்கள் வேறு வேலையை பார்க்குமாறு நடிகை குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்வீட்டில் கத்தி படத்தின் பெயரை தெரிவிக்காவிட்டாலும் அவர் அதை தான் குறிப்பிடுகிறார்.

விஜய் நடித்துள்ள கத்தி படத்தை தயாரித்துள்ள சுபாஷ்கரன் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இலங்கையில் பல லட்சம் தமிழர்களை கொன்று குவித்த ஒருவருக்கு நெருக்கமானவர் தயாரித்த படம் என்பதால் கத்திக்கு சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

பிரச்சனையை தவிர்க்க பட விளம்பரங்களில் இருந்து சுபாஷ்கரன் மற்றும் அவரின் லைகா நிறுவன பெயரை நீக்குமாறு சென்னை போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தினார்.

இந்நிலையில் இது குறித்து நடிகை குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஒவ்வொரு முறையும் ஒரு படம் ரிலீஸாகும்போது சில அமைப்புகள் அதை எதிர்க்கின்றன. அவர்கள் இவ்வாறு செய்வதே அவர்களை பற்றி பிறர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தான். இல்லை என்றால் அவர்களை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். வேறு வேலை இருந்தால் பாருங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

கத்தி படம் வெளியாகும் அரங்குகளுக்கு பாதுகாப்பு கொடுங்கள்! - அய்ங்கரன் கருணா மனு

'கத்தி' படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் தயாரிப்பாளர் கருணாமூர்த்தி மனு கொடுத்தார்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள கத்தி படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.

கத்தி படம் வெளியாகும் அரங்குகளுக்கு பாதுகாப்பு கொடுங்கள்! - அய்ங்கரன் கருணா மனு

ஆனால் லைகா நிறுவனத்தின் பெயரோடு வெளியிடுவதை கடுமையாக எதிர்த்தனர் தமிழ் அமைப்புகள் மற்றும் கட்சிகள்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு சுபாஷ்கரன் நெருக்கமாக இருக்கிறார், இலங்கை ஏர்லைன்சுடன் கூட்டாளியாக உள்ளார் என்று குற்றம்சாட்டின.

எதிர்ப்பை மீறி ‘கத்தி' படத்தை நாளை மறுநாள் (22-ந்தேதி) தீபாவளியன்று ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. இந்த நிலையில்தான் சத்யம், உட்லண்ட்ஸ் அரங்குகள் அடித்து நொறுக்கப்பட்டன.

இன்று வெளியான கத்தி விளம்பரங்களில் லைகா நிறுவனப் பெயர் நீக்கப்பட்டிருந்தது. ஆனாலும் சமாதானமடையாத போராட்டக்காரர்கள், தாங்கள் கத்தி தயாரிப்பாளர்களுடன் சமரசமாகவில்லை என்று அறிவித்துள்ளனர்.

எனவே இந்தப் படத்துக்கான புக்கிங்கை இந்த நிமிடம் வரை நிறுத்தி வைத்துள்ளன தமிழக திரையரங்குகள். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் எந்தப் பிரச்சினையுமின்றி கத்தி வெளியாகிறது.

இதற்கிடையில் ‘கத்தி' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கருணாமூர்த்தி சென்னை கமிஷனரிடம் ‘கத்தி' படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்துள்ளார். லைகா பெயர் இல்லாமல் படத்தை வெளியிடத் தயார் என்று கூறியதாகத் தெரிகிறது.

ஆனால் அப்படி வெளியிட்டாலும் படத்துக்கு எதிர்ப்பு தொடர்வதால், திரையரங்கு உரிமையாளர்கள் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளனர்.

 

கமல் மாதிரி விஜய்யும் 'போல்டா' பேசணும்: எதிர்பார்க்கும் திரையுலகினர்

சென்னை: கத்தி பிரச்சனை தீர்க்க விஜய் தானாக வந்து பேச வேண்டும் என திரையுலகினர் எதிர்பார்க்கிறார்கள்.

கத்தி பிரச்சனை தீர்ந்துவிட்டது என்று இளையதளபதி விஜய் அறிக்கை விட்டுள்ளார். ஆனால் படத்தை எதிர்த்து போராட்டம் நடத்தும் தமிழ் அமைப்புகளோ பிரச்சனை தீரவில்லை, படத்தை வெளியிட விட மாட்டோம் என்கின்றன.

இந்நிலையில் இது குறித்து திரையுலகினர் கூறுகையில்,

கமல் மாதிரி விஜய்யும் 'போல்டா' பேசணும்: எதிர்பார்க்கும் திரையுலகினர்

விஜய் தான் பேச வேண்டும். இது அவருடைய படம். அவர் முன்வந்து பேசி ஒரு நிலையை எடுக்க வேண்டும். ஆனால் அவரோ பிறர் பேச வேண்டும் என எதிர்பார்க்கிறார் என்றனர்.

விஸ்வரூபம் படத்திற்கு எதிராக பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்தபோது கமல் ஹாஸன் துணிச்சலாக பேசினார், அவருக்கு திரை உலகினரும் தங்களின் ஆதரவை தெரிவித்தனர். தற்போது விஜய்யும் அது போன்று பேச வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.