காமெடியில், 'நண்பேன்டா' மற்றுமொரு 'ஓகே ஓகே': உதயநிதி ஸ்டாலின்

சென்னை: ஜெகதீஷ் இயக்கத்தில், உதய நிதி ஸ்டாலின் தயாரித்து, நடிக்கும் திரைப்படம், நண்பேன்டா. சந்தானம், நயன்தாரா போன்ற முன்னணி ஸ்டார்களும் படத்தில் உண்டு.

இந்நிலையில், செய்தி ஏஜென்சி ஒன்றுக்கு, உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி: மூன்று குழந்தை பருவ நண்பர்கள், சண்டைபோட்டு, பிரிந்து மீண்டும் பல ஆண்டுகளுக்கு பிறகு இணைவதுதான், நண்பேன்டா படத்திந், ஒன்லைன் ஸ்டோரி.

காமெடியில், 'நண்பேன்டா' மற்றுமொரு 'ஓகே ஓகே': உதயநிதி ஸ்டாலின்

ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் நானும், சந்தானமும் இணைந்து வந்த காட்சிகளுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். அதேபோல, நண்பேண்டா படத்திலும், ரசிகர்களை மகிழ்விக்க தேவையான அனைத்து விஷயங்களும் உள்ளன. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் இரண்டாம் பாகம் போல நண்பேன்டா இருக்க போகிறது.

ஆதவன் படத் தயாரிப்பு முதலே, நடிகை நயன்தாரா எனக்கு பழக்கம். நண்பேன்டா படத்தின் கதையை கேட்டதும், தனது கேரக்டருடன் ஒத்துப்போக கூடிய ஹீரோயின் கதாப்பாத்திரம் படைக்கப்பட்டுள்ளதாக கூறி மகிழ்ந்த நயன்தாரா, இப்படத்தில் நடிக்க சம்மதித்தார். அவருடன் இணைந்து நடித்தது ஜாலியான அனுபவமாக இருந்தது.

ஒரு கல் ஒரு கண்ணாடியில், என்னைவிட, சந்தானத்துக்கு அதிக முக்கியத்துவம் இருந்ததாக நண்பேன்டா இயக்குநர் கருதினார். எனவே, இப்படத்தில், இருவருக்கும் சரிசமமான கேரக்டர்கள் தரப்பட்டுள்ளன. நான் பொதுவாக ஆக்ஷன் செய்ய விரும்புவதில்லை. காமெடியோடு நிறுத்திக்கொள்ள விரும்புவேன். ஆனால் ரசிகர்களின் கோரிக்கையை மனதில் வைத்து, நண்பேன்டா படத்தில் சிறு ஆக்ஷன் காட்சியை வைத்துள்ளோம்.

லண்டன், பாலி, அயர்லாந்து ஆகிய பகுதிகளில், 3 பாடல்களை ஷூட் செய்துள்ளோம். பாடல்கள் கண்களுக்கு குளிர்ச்சியாக வரும். இவ்வாறு உதய நிதி ஸ்டாலின் கூறியுள்ளார். உதயநிதி, அடுத்ததாக 'கெத்து' என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக 'இதயம் முரளி' என்ற படத்திலும் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

யாருமே கண்டுகொள்ளவில்லை: இறங்கி வந்த மனிஷா யாதவ்

சென்னை: பட வாய்ப்புகள் இல்லாததால் மனிஷா யாதவ் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க சம்மதித்துள்ளார்.

பெங்களூரில் பிறந்து வளர்ந்த மனிஷா யாதவ் பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அதன் பிறகு ஆந்திரா பக்கம் சென்றவர் அங்கும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

மவுசு இல்லை: இறங்கி வந்த மனிஷா யாதவ்

ஆந்திரா சென்ற வேகத்தில் தமிழ்நாட்டிற்கு திரும்பியவர் இரண்டு படங்களில் நடித்தார். அதன் பிறகு பாவம் மனிஷாவை யாருமே கண்டுகொள்ளவில்லை. விளைவு அவர் கையில் படங்கள் இல்லை. இப்படி சென்றால் என்ன செய்வது என்று யோசித்தார் மனிஷா.

சரி, மார்க்கெட் நன்றாக ஆகும் வரை இரண்டாவது ஹீரோயின் வாய்ப்பு வந்தாலும் கூட நடிக்க வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்தார். அந்நேரம் பார்த்து அவரை இரண்டாவது நாயகியாக நடிக்குமாறு கேட்டு த்ரிஷா இல்லன்னா நயன்தாரா தயாரிப்பாளர்கள் வந்தனர்.

தேடி வந்த வாய்ப்பை கைநழுவவிட விரும்பாத அவர் அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். இதையடுத்து தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். சும்மா இருந்தால் அனைவரும் மறந்துவிடக்கூடும் என்பதால் வரும் வாய்ப்புகளை ஏற்கிறார் மனிஷா.

 

லிங்கா விநியோகஸ்தர்கள் ப்ளாக்மெயில் செய்வதை நிறுத்த வேண்டும்! - வேந்தர் மூவீஸ் மதன்

சென்னை: லிங்கா படத்தின் விநியோகஸ்தர்கள் ப்ளாக்மெயில் செய்வதை நிறுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று வேந்தர் மூவீஸ் மதன் எச்சரித்துள்ளார்.

ரஜினியின் லிங்கா படத்தை தமிழகம் மற்றும் கேரளாவில் விநியோகித்தவர் வேந்தர் மூவீஸ் மதன்.

லிங்கா விநியோகஸ்தர்கள் ப்ளாக்மெயில் செய்வதை நிறுத்த வேண்டும்! - வேந்தர் மூவீஸ் மதன்

இந்தப் படத்தை அவரிடமிருந்து வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள் படத்துக்கு எதிராக செய்த பிரச்சாரங்கள், போராட்டங்களின்போது, எந்த அறிக்கையும் வெளியிடாமல் இருந்தார். இப்போதுதான் முதல் முறையாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை:

வேந்தர் மூவிஸ் நிறுவனம் எனது சொந்த நிறுவனம் ஆகும். பாரிவேந்தர் அவர்கள் மீது நான் கொண்டுள்ள பற்றும் பாசமும் மரியாதையின் காரணமாகவே எனது நிறுவனத்திற்கு வேந்தர் மூவீஸ் என பெயர் வைத்துள்ளேன். இந்த நிறுவனத்திற்கும் பாரிவேந்தர் அவர்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈராஸ் நிறுவனத்திடமிருந்து ‘லிங்கா' திரைப்படத்தை ரூ.67 கோடிக்கு வாங்கினேன். உடனே இப்படத்தை விநியோகஸ்தர்கள் அனைவரும் பலத்த சிபாரிசுகளுடன் வந்து எங்களை வற்புறுத்தி என்ஆர்ஐ என்ற முறையில் நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு வாங்கினார்கள். அவ்வாறு வாங்கியதில் கோவை, சேலம் தவிர மற்ற விநியோகஸ்தர்கள் ரூபாய் 3 கோடியே 30 லட்சம் தராமல் ஏமாற்றி விட்டார்கள். நான் அதையும் பொறுத்துக் கொண்டு அவர்கள் படத்தை வெளியிட அனுமதி கொடுத்தேன்.

ஆனால் இவர்கள் படம் வெளியான ஐந்தாவது நாளே படத்தை பற்றி மிக மோசமாக, ரஜினி சாரை பற்றி இழிவாக ஊடகங்களில் பேச ஆரம்பித்து விட்டார்கள். இதனால் படத்தின் வசூல் பலமாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக செய்திகளின் தாக்கம் சென்னையில் அதிகமாக இருப்பதால் நான் நேரடியாக வெளியிட்ட சென்னை நகர வசூலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு அதில் மட்டும் என்று நாலே கால் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

விநியோகஸ்தர்களின் தரக்குறைவான நடவடிக்கைகளையும் பேச்சுக்களையும் அறிக்கைகளையும் நிறுத்தச் சொல்லி பலமுறை நான் சொல்லியும் கேட்கவில்லை. நான்கு வாரம் பொறுத்துக் கொள்ளுங்கள் நானே ரஜினிகாந்த் அவர்களிடம் பேசி தகுந்த இழப்பீட்டுக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னேன். அதையும் அவர்கள் கேட்கவில்லை.

மாறாக உண்ணாவிரத போராட்டம், பிச்சை எடுக்கும் போராட்டம், கீழ்தரமான அறிக்கைகள் என்று தொடர்ந்து தவறுகளை செய்து கொண்டிருந்தார்கள். ஒருவேளை நான் சொல்வதை கேட்டு ஒழுங்காக நடந்திருந்தால் ரஜினி அவர்கள் இன்னும் பெரிய அளவில் உதவி செய்திருப்பார்கள். ஆனால் இவர்களையெல்லாம் மன்னித்து பெரிய மனதோடும் அன்போடும் ரஜினிகாந்த் அவர்கள் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் அவர்களுடன் இணைந்து ஒரு பெரிய தொகையை வழங்கியுள்ளார்கள்.

இதை ரஜினி சார் அவர்களின் அழைப்பின் பெயரில் கோவை மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், தமிழ் திரைப்பட சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, சென்னை செங்கல்பட்டு மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி, விநியோகஸ்தர்-தயாரிப்பாளர் அன்பு செழியன் ஆகியோர் மேற்படி பணத்தை சரியான முறையில் பிரித்து கொடுக்க முன்வந்தனர்.

அதற்காக ஒரு சரியான தீர்வையும் கொடுத்தனர். ஆனால் விநியோகஸ்தர்களில் நான்கு பேர் மட்டும் அவர்களை மதிக்காமல் எங்கள் நான்கு பேருக்கும் இவ்வளவு வேண்டும் என்றும் யார் யாருக்கு எவ்வளவு வேண்டுமென்றும் நாங்கள்தான் முடிவு செய்வோம் என்றும் வழக்கமான ப்ளாக்மெயில் வேலையை தொடங்கிவிட்டனர்.

அதன் தொடர்ச்சியாக ‘லிங்கா' படத்தை திட்டி, ரஜினி சாரை திட்டி, ராக்லைன் வெங்கேடஷ் அவர்களைத் திட்டி, வேந்தர் மூவிஸை திட்டி அறிக்கை விட்டவர்கள் தற்போது ரஜினி சாரின் அழைப்பின் பேரில் செட்டில்மெண்டில் கலந்துகொண்டுள்ள கோவை மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவரும் மூத்த விநியோகஸ்தருமான சுப்ரமணியம் அவர்களைத் திட்டி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஏனென்றால் இந்த பணியை அவரை செய்யுமாறு கேட்டுக் கொண்டது ரஜினிகாந்த் அவர்களும், ராக்லைன் வெங்கேடஷ் அவர்களும்தான். மேலும் இந்த இழப்பீட்டு தொகையையும் ராக்லைன் வெங்கேடஷ் அவர்கள் திருப்பூர் சுப்ரமணியம் அவர்களிடம்தான் கொடுத்துள்ளார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனிமேல் இதுபோல் அறிக்கை வெளியிட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை சட்டப்படி எடுக்கப்படும் என்று எச்சரிக்கிறேன். இதுவரை பரபரப்பாக அறிக்கைகள் கொடுத்துக் கொண்டிருந்த சிங்காரவேலன் இப்போது மௌனமாக இருப்பது ஏன்? மற்ற விநியோகஸ்தர்களுக்கு துரோகம் செய்துவிட்டு அவர் மட்டும் தனியாக ஏதும் வாங்கிக் கொண்டாரா அப்படி என்றால் வாங்கிய பணம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு தராமல் எங்கே போனது? இதுமட்டும் போதாது என்று போராட்டம் நடத்திய செலவுகளையும் வழக்கு நடத்திய செலவுகளையும் எனக்கு தனியாக கொடுத்தாக வேண்டுமென்று மிரட்டி வருகிறார் சிங்காரவேலன்.

இந்த மோசடி விநியோகஸ்தர்கள் மீதும் எனக்கு ஒப்பந்தப்படி பணம் தராமல் ஏமாற்றிய விநியோகஸ்தர்கள் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். எங்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் ரஜினிகாந்த் தரும் பணத்தை சரியான அளவில் எல்லோருக்கும் ஒரே அளவு சதவிகிதத்தில் பிரித்துத் தரவேண்டும்.

அதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகியோர் இணைந்து ஒரு கமிட்டியை உருவாக்கி இதை சுமூகமாகவும், நியாயமாகவும் முடித்து கொடுக்க வேண்டுமென்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். அதேபோல் தியேட்டர் டெபாசிட் முழுமையாக திருப்பி கொடுக்கப்பட வேண்டும்.

அதற்கு அந்தந்த ஏரியா விநியோகஸ்தர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும். கீழ்த்தரமான அறிக்கைகள் தருவதை நிறுத்திவிட்டு ப்ளாக்மெயில் செய்யும் கலாச்சாரத்தை அடியோடு கைவிட்டு விட்டு நியாயமான பாதைக்கு வரவேண்டுமென விநியோகஸ்தர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

கொம்பன் படம் பார்க்க லேட்டாக வந்த கிருஷ்ணசாமி.. கோபத்தில் கிளம்பிப் போன நீதிபதிகள்!

சென்னை: நீதிமன்ற உத்தரவின்படி கொம்பன் படத்தைப் பார்த்து கருத்து சொல்ல வந்த நீதிபதிகளைப் படம் பார்க்க விடாமல் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் அவரது ஆட்கள் தொந்தரவு செய்ததால் படத்தைப் பார்க்காமலேயே நீதிபதிகள் கோபமாகக் கிளம்பிவிட்டனர்.

இப்போது மாலையில் மீண்டும் அவர்களுக்கு படம் திரையிடப்படுகிறது. அவர்களுடன் கிருஷ்ணசாமியும் படம் பார்க்கிறார்.

கொம்பன் படம் பார்க்க லேட்டாக வந்த கிருஷ்ணசாமி.. கோபத்தில் கிளம்பிப் போன நீதிபதிகள்!

கொம்பன் படம் சாதி மோதல்களைத் தூண்டும் விதத்தில் உள்ளதாகக் கூறி அப்படத்துக்கு தடை கோரி வருகிறார் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி. அவருக்கு சில அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் படத்துக்கு தடை கோரி அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, படத்தை கிருஷ்ணசாமி, இரண்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு பார்த்து கருத்து தெரிவித்த பிறகே தீர்ப்பளிப்பதாகக் கூறிவிட்டார்.

அதைத் தொடர்ந்து மதுரையிலிருந்து இரு நீதிபதிகள் விமானம் மூலம் இன்று காலை சென்னை வந்தனர்.

நுங்கம்பாக்கம் ஃபோர் பிரேம்ஸ் அரங்கில் படம் 7 மணிக்கே திரையிடப்பட்டது. அப்போது கிருஷ்ணசாமி வரவில்லை. ஒரு மணிநேரம் கழித்துதான் வந்தாராம்.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஒரு மணி நேரம் தாமதமாக வந்த கிருஷ்ணசாமி, மீண்டும் முதலிலிருந்துதான் படம் பார்ப்பேன் என அடம் பிடித்தார். அதுமட்டுமல்ல, இந்தக் காட்சி என்ன.. அதன் ஸ்கிரிப்டைக் கொடுங்கள் என்றெல்லாம் கேட்டு தொந்தரவு செய்தார். இதனால் படம் பார்க்க வந்த நீதிபதிகள் கோபமடைந்து படம் பார்க்காமலேயே சென்றனர்," என்றார்.

இந்த நிலையில் மீண்டும் இன்று மாலை நீதிபதிகள் படம் பார்க்கப் போவதாகவும், அவர்களுடன் கிருஷ்ணசாமி உள்ளிட்டோரும் படம் பார்ப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

 

நாளையே வெளியாகிறது கொம்பன் - தயாரிப்பாளர் அறிவிப்பு

பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள கொம்பன் படத்தை ஒரு நாள் முன்பாக, நாளையே வெளியிடப் போவதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிவித்துள்ளார்.

கொம்பன் படத்துக்கு சாதிய பின்னணியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் நாடார் அமைப்புகளும் இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

நாளையே வெளியாகிறது கொம்பன் - தயாரிப்பாளர் அறிவிப்பு

இந்தப் படத்துக்கு எதிரான வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை பிலிம்சேம்பரில் சந்தித்த ஞானவேல்ராஜா, படத்தை அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 2-ம் தேதிக்கு ஒரு நாள் முன்பாக, நாளை (புதன் கிழமை) வெளியிடவிருக்கிறோம்," என்றார்.

இதன் மூலம் கொம்பன் படம் எதிர்ப்புகளை மீறி வெளியாவது உறுதியாகிவிட்டது.

 

ஐ சப்போர்ட் கொம்பன்! - ட்விட்டரில் தனுஷ்

கொம்பன் படத்துக்கு தான் முழு ஆதரவு தெரிவிப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ்.

கார்த்தி - லட்சுமி மேனன், ராஜ்கிரண் நடித்துள்ள கொம்பன் படத்தை, குட்டிப் புலி படம் இயக்கிய முத்தையா இயக்கியுள்ளார்.

ஐ சப்போர்ட் கொம்பன்! - ட்விட்டரில் தனுஷ்

ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்தப் படம், சாதி மோதல்களைத் தூண்டும் வகையில் உள்ளதாகக் கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி.

அவருக்கு ஆதரவாக சில அமைப்புகளும் போராட்டதத்தில் குதித்துள்ள நிலையில், படத்துக்கு திரையுலகினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இயக்குநரும் நாம் தமிழர் கட்சித் தலைவருமான சீமான் படத்துக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளார்.

பல நடிகர் நடிகைகளும் படத்துக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தேசிய விருது பெற்ற நடிகர் - தயாரிப்பாளர் தனுஷ், படத்தை ஆதரிப்பதாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். ஐ சப்போர்ட் கொம்பன் என்று அவர் தனது ட்விட்டில் தெரிவித்துள்ளார்.

 

சவாலே சமாளி... இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியான இசை.. போலீசில் புகார்!

சென்னை: சவாலே சமாளி' திரைப்பட பாடல்களை இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் கவிதா பாண்டியன், சென்னை மாநகர காவல் ஆணையரிடம் திங்கள்கிழமை மனு கொடுத்தார்.

அந்த மனுவில், "எங்களது திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் 'சவாலே சமாளி' என்ற திரைப்படத்தைத் தயாரித்து வருகிறோம். இந்தத் திரைப்படத்தை இயக்குநர் சத்யசிவா இயக்குகிறார், தமன் இசையமைத்துள்ளார்.

நடிகர் நாசர், அசோக் செல்வன், ஜெகன், நடிகை பிந்துமாதவி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

சவாலே சமாளி... இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியான இசை.. போலீசில் புகார்!

இந்தத் திரைப்படத்தின் பாடல்களை வெளியிடுவற்குரிய உரிமத்தை, ஒரு தனியார் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளோம்.

இந்த நிலையில் அந்த திரைப்படத்தின் பாடல்களை சில மர்ம நபர்கள், திருட்டுத்தனமாக இணைய தளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால் எங்களது நிறுவனத்துக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதில் ஈடுபட்டுள்ள நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கொம்பனில் எந்த சாதியையும் இழிவுபடுத்தவில்லை! - ஞானவேல் ராஜா

சென்னை: கொம்பன் படத்தில் எந்த சாதியையும் இழிவுபடுத்தவில்லை. இது முழுமையான குடும்பப் படம், வெளியாக உதவுங்கள் என்று படத்தின் தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கொம்பன்' படத்தில் சாதிய ரீதியான வசனங்களும், காட்சிகளும் இடம்பெற்றிருப்பதாகக் கூறி எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, நாடார் அமைப்புகள் போன்றவை போராட்டத்தில் இறங்கியுள்ளன. படம் வெளியாகுமா இல்லையா என்பது குறித்து இன்று நீதிமன்றம் தீர்ப்பு கூறிவிடும்.

கொம்பனில் எந்த சாதியையும் இழிவுபடுத்தவில்லை! - ஞானவேல் ராஜா

இந்நிலையில், தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா 'கொம்பன்' திரைப்படத்தில் சாதிய ரீதியான காட்சியமைப்போ, வசனங்களோ இல்லை என்று மறுத்திருக்கிறார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,''ஏப்ரல் 2 அன்று எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண் நடிப்பில் வெளியாக இருக்கும் 'கொம்பன்' திரைப்படம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் எங்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த திரைப்படத்தில் எந்த ஒரு ஜாதியைக் குறிப்பிடும் வசனங்களோ, காட்சியமைப்போ இடம்பெறவில்லை. இது முழுக்க முழுக்க ஒரு குடும்பத்தில் மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டம்.

கொம்பனில் எந்த சாதியையும் இழிவுபடுத்தவில்லை! - ஞானவேல் ராஜா

இதில் ஒரு குறிப்பிட்ட சாதியை உயர்த்தியோ அல்லது குறிப்பிட்ட சாதியை தாழ்த்தியோ எந்த ஒரு கருத்தும் இடம்பெறவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.

யூகத்தின் அடிப்படையில் 'கொம்பன்' திரைப்படத்தைப் பற்றி தவறான கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன.

'கொம்பன்' திரைப்படம் மக்களை சென்றடைவதற்கு முழுமையான ஒத்துழைப்பு தரும்படி வேண்டுகிறேன்,'' என ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.

'கொம்பன்' திரைப்படம் மறு தணிக்கை செய்யப்பட்டு யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ரஜினி கொடுத்த பணத்தைப் பிரிப்பதில் கட்டப் பஞ்சாயத்து - முட்டல் மோதல்!

லிங்காவுக்காக ரஜினி கொடுத்த பணத்தை பிரிப்பதில் கட்டப்பஞ்சாயத்து நடப்பதாகக் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளனர், அதன் விநியோகஸ்தர்களில் ஒரு குழுவினர்.

இதுகுறித்து லிங்கா' படத்தின் செங்கல்பட்டு ஏரியா விநியோகஸ்தர் மன்னன், வட, தென் ஆற்காடு விநியோகஸ்தர் கிருஷ்ணமூர்த்தி, நெல்லை விநியோகஸ்தர் ரூபன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

லிங்கா படத்தினை வெளியிட்ட வகையில் செங்கல்பட்டு ஏரியாவுக்கு ஏழரை கோடி ரூபாயும், ஆற்காடு ஏரியாவுக்கு நான்கு கோடி ரூபாயும், நெல்லை ஏரியாவுக்கு இரண்டரை கோடி ரூபாயும் இழப்பு ஏற்பட்டுள்ளது. பல கட்டப் போராட்டங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் அறிவுறுத்தல் பேரில் பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் 12.5 கோடி ரூபாயை நஷ்டஈடாக தர ஒப்புக் கொண்டார்.

ரஜினி கொடுத்த பணத்தைப் பிரிப்பதில் கட்டப் பஞ்சாயத்து - முட்டல் மோதல்!

நஷ்டம் என்று கூறி நிவாரணம் பெற்று தர சங்கங்களை அணுகியபோது யாரும் ஆதரவு தரவில்லை. தற்போது ரஜினிகாந்த் பணம் தருகிறார் என்றதும் பங்கு போட்டு தருவதாக கூறி சங்கங்கள் மூக்கை நுழைப்பதன் மர்மம் புரியவில்லை.

இந்த படத்தை வெளியிட்ட வகையில் நஷ்டம் அடைந்திருப்பது விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் மட்டுமே. அவர்களை கலந்து பேசாமல் திருப்பூர் சுப்பிரமணி தான் தோன்றித்தனமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது.

ரஜினி நடித்த பல படங்களை திரையிட்டு கோடி கோடியாய் சம்பாதித்தவர் திருப்பூர் சுப்பிரமணி. பாபா படத்தில் இழப்பு என்றதும் அசலுடன் லாபமும் கேட்டு பெற்றார். ஆனால் லிங்கா விஷயத்தில் விநியோகஸ்தர்கள் நஷ்டத்தை ஏற்க வேண்டும் என்று சொல்வது முரண்பாடாக உள்ளது.

விநியோகஸ்தர்களுக்கு அநீதி இழைப்பதை இவர் நிறுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறோம். ராக்லைன் வெங்கடேஷ் பணத்தை ஏரியா வாரியாக பிரித்து கொடுத்தால்தான் பிரச்சினை முடியும். மாறாக கட்ட பஞ்சாயத்து நடந்தால் போராட்டங்கள் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

விஷால், ஆர்யா, விஷ்ணு... எல்லாம் 'நண்பன்' விக்ராந்துக்காக!

விஜய்யின் 'ஒண்ணுவிட்ட' தம்பியாக தமிழில் அறிமுகமான விக்ராந்த்துக்கு, விஜய்க்கு அமைந்தது மாதிரி படங்களும் கேரியரும் அமையவில்லை.

ஆனால் நல்ல நண்பர்கள் அமைந்தார்கள். விஷால்-ஆர்யா-விஷ்ணு இம்மூவரும் விக்ராந்துக்கு சினிமாவில் ஒரு திருப்பம் அமைய வேண்டும் என விரும்புபவர்கள். அதற்கான வாய்ப்பையும் உருவாக்கி வருகிறார்கள்.

விஷால் தயாரித்து, நடித்திருந்த பாண்டிய நாடு படத்தில் விக்ராந்துக்கு சிறிய, ஆனால் மிக நல்ல வேடம் கொடுத்து உயர்த்தியவர் விஷால்.

விஷால், ஆர்யா, விஷ்ணு... எல்லாம் 'நண்பன்' விக்ராந்துக்காக!

இப்போது விக்ராந்த் நாயகனாக நடித்து வரும் படம் பிறவி. இந்தப் படத்தில் ஒரு பாடலில் நண்பன் விக்ராந்துக்காக விஷால், ஆர்யா, விஷ்ணு ஆகியோர் இணைந்து ஆடியுள்ளனர்.

விஷால், ஆர்யா, விஷ்ணு... எல்லாம் 'நண்பன்' விக்ராந்துக்காக!

சமீபத்தில் இந்தப் பாடலை சென்னையில் உள்ள பின்னி மில்லில் படமாக்கினர்.

சஞ்சீவ் இயக்கி வரும் இந்தப் படம் விக்ராந்த் எதிர்ப்பார்க்கும் திருப்பத்தைத் தரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர் இந்த நண்பர்கள். நல்லது!

 

கார்த்தியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்தார் தமன்னா... அப்போ 'தடை' நீங்கிருச்சா?

ஒரு நேரத்தில் திரும்பிய பக்கமெல்லாம் தன் படங்களாகவே இருந்த கோடம்பாக்கத்திலிருந்து திடீரென்று காணாமல் போனார் தமன்னா.

அதாவது கார்த்தியுடன் சிறுத்தை படம் நடித்த பிறகு நான்கு ஆண்டுகள் தமன்னா தமிழில் நடிக்கவே இல்லை.

கார்த்தியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்தார் தமன்னா... அப்போ 'தடை' நீங்கிருச்சா?

பையா, சிறுத்தை படங்களில் நடித்தபோது கார்த்தியுடன் அவருக்கு ஏற்பட்ட காதல்தான் இதற்கெல்லாம் காரணம் என சிலர் செய்திகள் வெளியிட்டனர். கார்த்தியுடன் நடிக்கக் கூடாது என தமன்னா மிரட்டப்பட்டதாகக் கூட கிசுகிசுத்தனர்.

கார்த்தியும் திருமணம், குடும்பம் என செட்டிலாகிவிட்டார். தெலுங்குப் பக்கமே இருந்த தமன்னாவும் மெல்ல வீரம் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார்.

[தமன்னா படங்கள்]

இப்போது 5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கார்த்தியுடன் ஜோடி சேருகிறார் தமன்னா.

பிவிபி சினிமா நிறுவனம் தமிழ் - தெலுங்கில் தயாரிக்கும் மெகா பட்ஜெட் படத்திலிருந்து ஸ்ருதிஹாஸன் விலகிக் கொண்டார் அல்லவா.. அந்த வாய்ப்புதான் தமன்னாவுக்குப் போயிருக்கிறது. ஆக 'தடை' நீங்கிவிட்டது. வெற்றிப் பட ஜோடி மீண்டும் சேர்ந்திருக்கிறது. சுபம்!

 

எஸ்பி முத்துராமனும் இலியானா இடுப்பும் இயக்குநர் பேரரசுவும்...

இப்போதெல்லாம் இயக்குநர் பேரரசுவை ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் பார்க்க முடிகிறது. அவரும் குண்டக்க மண்டக்க பேசி வைக்கிறார்.

சமயத்தில் அவர் பேச்சு ரசிக்கும்படியும் அமைந்துவிடும்.

எஸ்பி முத்துராமனும் இலியானா இடுப்பும் இயக்குநர் பேரரசுவும்...

சமீபத்தில் கைபேசி காதல் என்ற படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். எஸ்.ஏ.வி. பிக்சர்ஸ்' சார்பில் த.சக்திவேல் தயாரிக்கும் படம் இது.

இதில் கிரண், அர்பிதா, தர்ஷன், மாஸ்டர் விக்னேஷ், டாக்டர் சூரி இவர்களுடன் நடிகர் கிஷோரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் உருவாகிறது. திம்மம்பள்ளி சந்திரா என்பவர் படத்தை இயக்கியுள்ளார்.

விழாவில் பேசிய பேரரசு, தான் சொந்த ஊரிலிருந்து 20 கி.மீ. சைக்கிளில் சென்று முரட்டுக்காளை படப்பிடிப்பு பார்த்த அனுபவத்தைக் கூறினார்.

எஸ்.பி.முத்துராமனின் எளிமையைப் பற்றிக் குறிப்பிட்டவர், "திறமை உள்ளவர்களுக்கு கர்வம். தலைக்கனம் இருக்கலாம். அது கர்ப்பிணிப் பெண்ணின் வயிறைப் போல மரியாதை தரக் கூடியது.

திறமையில்லாதவர்களின் தலைக்கனம் என்பது தொப்பை பெண்ணின் வயிறு போன்றது. தொப்பையை ரசிக்க முடியுமா?

திறமையும் இருந்து கர்வமும் இல்லாதவர்கள் இலியானாவின் வயிறு, இடுப்பு போன்றவர்கள். இலியானாவின் இடுப்பு மெலிதாக இருக்கும் ரசிக்கத் தக்கது. அப்படி ரசிக்கத் தக்க ஒருவர்தான் எஸ்.பி.முத்துராமன். என்றும் எளிமைக்குச் சொந்தக்காரர். நான் ஏவிஎம்மில் படப்பிடிப்பில் இருந்த போது அங்கு வந்து என்னைப் பாராட்டினார். பாராட்டுபவர்களைச் தேடிச் சென்று பாராட்டும் அந்த உயர்ந்த பண்பை அவரிடம் கற்றுக் கொண்டேன்," என்றார்.

 

கமலின் உத்தம வில்லன் இப்போ ரிலீஸ் இல்லை... தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு!

சென்னை: மறு தேதி குறிப்பிடப்படாமல் கமல் ஹாஸனின் உத்தம வில்லன் படத்தின் ரிலீஸை தள்ளி வைத்துள்ளனர் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தினர்.

முன்னதாக ஏப்ரல் 10-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன், மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர், கே.விஸ்வநாத், பூஜாகுமார்,ஆண்ட்ரியா, ஊர்வசி, பார்வதி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'உத்தம வில்லன்'.

கமலின் உத்தம வில்லன் இப்போ ரிலீஸ் இல்லை... தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு!

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஈராஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

இசை வெளியீடு, இறுதிகட்டப் பணிகள் என அனைத்தும் முடிந்து ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது சென்சார் பணிகள் இன்னும் முடிவடையாத காரணத்தில், ஏப்ரல் 10ம் தேதி வெளியாக வாய்ப்பில்லை என தெரிகிறது.

'உத்தம வில்லன்' படத்தை அமெரிக்காவில் வெளியிடும் ப்ரைம் மீடியா நிறுவனத்தினர் "உத்தம வில்லன் 10ம் தேதி வெளியாகவில்லை. வெளியீட்டு தேதி சென்சார் பணிகள் முடிந்ததும் அறிவிக்கப்படும்" என்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்கள்.

ஏப்ரல் இறுதியில் படம் வெளியாகலாம் என்கிறார்கள்.

இந்தப் படம் முதலில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியாகும் என அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.