மோடி பதவியேற்பு விழாவில் ஐஸ்வர்யா தனுஷ்... லதாவும் பங்கேற்றார்?

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவில் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் நேற்று கலந்து கொண்டார்.

இந்த விழாவுக்கு வருமாறு சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரடியாக தொலைபேசியில் அழைத்ததோடு, அரசு அழைப்பிதழையும் அனுப்பி வைத்தார் நரேந்திர மோடி.

ஆனால் இந்த விழாவில் தமிழினப் படுகொலையை அரங்கேற்றிய இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வதால், தமிழர்கள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்ற கோரிக்கை தமிழகத்தில் எழுந்தது.

மோடி பதவியேற்பு விழாவில் ஐஸ்வர்யா தனுஷ்... லதாவும் பங்கேற்றார்?

எனவே இந்த விழாவில் ரஜினி கலந்து கொள்ளவில்லை. லிங்கா படப்பிடிப்புக்காக மைசூரிலேயே தங்கிவிட்டார் ரஜினி.

அவருக்குப் பதிலாக அவர் மனைவி லதா செல்வார் என்று கூறப்பட்டது.

ஆனால் விழா நடந்த குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில், ரஜினியின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா பங்கேற்றார். தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பில் ஐஸ்வர்யாவை சில முறை காட்டினார்கள். அவர் தனியாகவே அமர்ந்திருந்தார். அருகில் லதாவோ, கணவர் தனுஷோ இல்லை.

லதா ரஜினி விழாவுக்குச் சென்றாரா என்று அவரது இல்லத்தில் விசாரித்த போது, அவர்கள் எந்த பதிலும் சொல்லவில்லை.

இதன்மூலம் விழாவுக்கு லதா சென்றாரா இல்லையா என்பதை வெளியில் சொல்ல ரஜினி குடும்பம் விரும்பவில்லை என்பது தெளிவாகிறது.

 

கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் ரஜினியின் கோச்சடையான்!

கேன்ஸ்: உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படம் திரையிடப்பட்டது.

இப்படத்தில் பணியாற்றிய சவுன்ட் டிசைனரான ரசூல் பூக்குட்டி இந்த திரையிடலில் பங்கேற்றார்.

கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் ரஜினியின் கோச்சடையான்!

கேன்ஸ் விழாவில் தான் பங்கேற்றதை, கோச்சடையான் பேனருடன் நின்று படமெடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டே கேன்ஸ் விழாவில் கோச்சடையான் ட்ரலைவர் வெளியிடப்படும் என்றும், ரஜினி அதில் பங்கேற்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால் ரஜினியால் பங்கேற்க முடியவில்லை. அதன் பிறகு பல மாதங்கள் கழித்தே கோச்சடையான் ட்ரைலர் வெளியானது.

இந்த ஆண்டு கேன்ஸ் தொடங்கும்போது, படமே வெளியீட்டுக்கு தயாராகிவிட்டதால், இப்படத்தை கேன்ஸ் விழாவின் போட்டியற்ற பிரிவில் திரையிட முடிவு செய்து அனுப்பி வைத்தனர்.

கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் ரஜினியின் கோச்சடையான்!

கோச்சடையான் திரையிடலின்போது, படத்தில் பணியாற்றிய ஆஸ்கர் விருது வென்ற சவுன்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி கலந்து கொண்டார்.

கோச்சடையான் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.

வரும் மே 23-ம் தேதி கோச்சடையான் உலகெங்கும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

 

அனுஷ்காவுக்கு சுளுக்கு.. படப்பிடிப்பு ரத்து!

ருத்ரமாதேவி படத்தில் சண்டைக்காட்சியில் நடித்த போது அனுஷ்காவுக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டதால், படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

தெலுங்கில் 'ருத்ரமாதேவி', ‘பாகுபலி' என இரு சரித்திரப் படங்களில் நடித்து வருகிறார் அனுஷ்கா. இந்த இரு படங்களுமே தமிழிலும் வெளியாகவிருக்கின்றன.

‘ருத்ரமாதேவி'யில் ராணியாக நடிக்கும் அனுஷ்கா, வாள் சண்டை, குதிரை சவாரி காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது.

அனுஷ்காவுக்கு சுளுக்கு.. படப்பிடிப்பு ரத்து!

ஏற்கெனவே யோகா டீச்சர் என்பதால், இதற்கான பயிற்சிகளை ஒரு மாதத்தில் கற்றுக் கொண்டார். தனித்தனி ஸ்டனட் நடிகர்கள் இதற்காக அவருக்கு நியமிக்கப்பட்டிருந்தனர்.

ருத்ரமாதேவி படப்பிடிப்பு நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அனுஷ்கா பங்கேற்ற வாள் சண்டைக் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது.

கொஞ்சம் கடினமான சண்டைக் காட்சி அது. ஒரு கட்டத்தில் அனுஷ்காவுக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டுவிட்டது. மிகுந்த வலியால் அவதிப்பட்ட அவர், தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தற்காலிகமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

இப்போது அனுஷ்கா ரெஸ்ட் எடுத்து வரும் அனுஷ்கா, தினமும் புத்தூர் தைலம் தேய்த்து சிகிச்சை பெற்று வருகிறாராம்!

இதனால் ரஜினி, அஜீத் படங்களில் நடிக்க அவர் கொடுத்த தேதிகள் தள்ளிப் போய் உள்ளதாம்.

 

நயன்தாரா - சிம்புவின் இது நம்ம ஆளு.. மீண்டும் தொடங்கியது!

சிம்பு படங்கள் தொடங்குவதுதான் வெளியில் தெரியும். படம் முடிந்ததா, வெளிவருமா என்பதெல்லாம் சிதம்பர ரகசியம்தான்.

இன்றைய தேதிக்கு அவர் நடிக்கும் நான்கு படங்கள் வாலு, வேட்டை மன்னன், கவுதம் மேனன் படம் மற்றும் இது நம்ம ஆளு... ஆரம்பிக்கப்பட்டதோடு சரி. எப்போது வருமென்று தெரியாது.

திடீர் திடீரென இந்தப் படங்களை தூசி தட்டுவார்கள், அப்புறம் திடீரென கிடப்பில் போட்டு விடுவார்கள்.

நயன்தாரா - சிம்புவின் இது நம்ம ஆளு.. மீண்டும் தொடங்கியது!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்புவும் நயன்தாராவும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்த படம் இது நம்ம ஆளு. இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பரபரப்பாக செய்திகள் வந்ததோடு சரி. திடீரென ஒரு நாள் படம் நின்றுவிட்டதாகச் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முதல் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பித்துள்ளது இந்தப் படத்துக்கு. வேக வேகமாக படத்தை எடுத்து முடித்து வெளியிடப் போகிறார்களாம்.

இந்தப் படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் டி ராஜேந்தர் தயாரிக்கிறார், சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

படத்தை இப்போது முடித்தாலும், வாலு படம் வெளியான பிறகுதான் வெளியிடப் போகிறார்களாம்.

 

'கவர்ச்சியா நடிச்சது உண்மைதான்... ஆனா அதை வெளியிட மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணாங்க!'

தெலுங்கு சினிமாக்காரர்களின் கோபம், ஸ்ருதிஹாஸனை வழிக்குக் கொண்டுவந்துவிட்டது. கவர்ச்சியா நடிச்சது உண்மைதான். ஆனா அதை வெளியிட மாட்டோம்னு ப்ராமிஸ் பண்ணவங்க, கடைசில மீறிட்டாங்களே என்று புலம்ப ஆரம்பித்துள்ளார்.

எவடு படத்தில் படு கவச்சியாக நடனமாடியிருந்தார் ஸ்ருதி ஹாஸன். இந்தப் படங்கள் இணைய தளங்களிலும் வெளியாகி, பரபரப்பு கிளப்பின. கிட்டத்தட்ட டாப்லெஸ் எனும் அளவுக்கு முன்னழகைக் காட்டியபடி போஸ் கொடுத்திருந்தார் அவர்.

'கவர்ச்சியா நடிச்சது உண்மைதான்... ஆனா அதை வெளியிட மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணாங்க!'

இந்தப் படங்கள் வெளியானது குறித்து அவர் போலீசில் புகார் தெரிவித்திருந்தார். சினிமா படப்பிடிப்புகளை படம் எடுக்கும் பத்து போட்டோ கிராபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இதனை தெலுங்கு தயாரிப்பாளர்கள் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. எனவே, நமக்குள்ளே பேசித் தீர்க்க வேண்டியதை இப்படி போலீஸ் வரை கொண்டு போய்விட்டாரே என்று ஸ்ருதி மீது அதிருப்தி காட்டினர்.

'கவர்ச்சியா நடிச்சது உண்மைதான்... ஆனா அதை வெளியிட மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணாங்க!'

அவரை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்யவும் தயக்கம் காட்டினர்.

இதனால் தனது புகாரை வாபஸ் பெற்றுக் கொள்ளலாமா என யோசிக்க ஆரம்பித்துள்ளார் ஸ்ருதி.

'கவர்ச்சியா நடிச்சது உண்மைதான்... ஆனா அதை வெளியிட மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணாங்க!'

இது அவரது பேச்சிலும் எதிரொலித்தது. இந்த வழக்கு குறித்து கேட்டபோது, "விசாரணையில் இன்னும் எந்த முடிவும் கிடைக்கவில்லை.

நான் அந்தப் பாடலுக்கு ஆடியபோது எடுத்த படங்களை வெளியிடக்கூடாது என உறுதியளித்தனர். நானும் நம்பினேன். இப்போது அவ்வளவு படங்களையும் வெளியிட்டுவிட்டனர்.

எல்லா இடத்திலும் இருப்பது போல் சினிமாவிலும் கெட்டவர்களும், நல்லவர்களும் உள்ளனர். நான் நல்லவர்கள் மீதும் நல்ல விஷயங்கள் மீதும் இனி என் கவனத்தை செலுத்தப் போகிறேன். இப்போதைக்கு இந்த பிரச்சினையைவிட்டு வெளியில் வரவே விரும்புகிறேன்," என்றார்.