புலனாய்வு அதிகாரியாக களமிறங்கும் ஆண்ட்ரியா... புதிய திருப்பங்கள்

Actress Andriya Plays As Investigation Officer New Film

சென்னை: சிருங்காரம் இயக்குநரின் அடுத்த படைப்பான குழந்தைக் கடத்தல் கதையில் ஆண்ட்ரியா புலனாய்வு அதிகாரியாக நடிக்கிறாராம்.

சமீப காலமாக பவர்ஸ்டாருக்கு அடுத்த படியாக அதிகம் செய்திகளில்பேசப்படுபவர் ஆண்ட்ரீயாவாகத் தான் இருப்பார். ஆனாலும் தமிழில் அவருக்கு சொல்லிக் கொள்கிற மாதி‌ரி படங்களில்லை.

பாட்டுப் பாடதான் வாய்ப்புகள் வருகின்றன. தற்போது, அவர் நடிக்கிற ஒரேயொரு முக்கியமான படம் புதிய திருப்பங்கள் தான்.

அடுத்த சிங்காரம்...

சிருங்காரம் படத்தை இயக்கிய சாரதா ராமநாதன் இயக்கும் படம் புதிய திருப்பங்கள். பெண் இயக்குனர் என்றாலும் துணிச்சலான சப்ஜெக்டை எடுத்திருக்கிறார்.

குழந்தை கடத்தல் படம்...

உலகில் இரண்டாது பெ‌ரிய குற்றம் குழந்தை கடத்தல் தான். டிவியை ஆன் செய்தாலும், செய்தித்தாளை பி‌ரித்தாலும் குழந்தை கடத்தல்தான் கண்ணில்படுகிறது. ஒரு மணி நேரத்தில் ஆயிரம் குழந்தைகள் கடத்தப்படுவதாக புள்ளி விவரம் கூறுகிறது. அதன் பின்னணி என்ன என்று ஆராய்ந்தபோது உருவானதுதானாம் புதிய திருப்பங்கள்.

புலனாய்வு வேடமாம்...

"ஆண்ட்‌ரியாவுக்கு இதில் புலானாய்வு பத்தி‌ரிகையாளர் வேடம். கதையை கேட்டு உடனே நடிக்க வந்திட்டார். அவருக்கு இது ரொம்பவே முக்கியமான படமாக இருக்குமாம்.

சூப்பரா இருக்காம்...

ஆண்ட்‌ரியா இதுவரை புலனாய்வு பத்தி‌ரிகையாளராக நடித்ததில்லை. அவரது போர்ஷன் சிறப்பாக வந்திருப்பதாக சாரதா ராமநாதன் தெ‌ரிவித்துள்ளார்.

நந்தா ஹீரோ...

புதிய திருப்பங்களில் அமெ‌ரிக்க கனவுடன் இருக்கும் இளைஞனாக நந்தா நடித்திருக்கிறார். அவர்தான் படத்தின் ஹீரோ. விரைவில் படம் வெளிவரவிருக்கிறது.

 

சூது கவ்வும் படக்குழுவை ஆபீஸுக்கு வரவழைத்து பாராட்டிய கமல்

Kamal Congratulates Soodhu Kavvum Team

சென்னை: சூது கவ்வும் படக்குழுவை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து பாராட்டியுள்ளார் உலக நாயகன் கமல் ஹாசன்.

விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் நளன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான சூது கவ்வும் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் உலக நாயகன் கமல் ஹாசன் இப்படத்தை பார்த்துள்ளார். படத்தைப் பார்த்தவர் அசந்துவிட்டாராம். படக்குழுவை நேரில் பார்த்து பாராட்ட விரும்பியுள்ளார்.

இதையடுத்து சூது கவ்வும் படக்குழுவினரை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து மனதார பாராட்டியுள்ளார். படத்தின் நாயகன் விஜய் சேதுபதியால் மட்டும் கமல் அலுவலகத்திற்கு வர முடியவில்லை.

உலக நாயகனே தங்களை அழைத்து பாராட்டிய பெருமை படக்குழுவினரின் முகத்தில் தெரிந்தது.

 

த்ரிஷா-ஓவியா-பூனம் பாஜ்வா இணையும் புதுப் படம்!

வயசாகி, சினிமாவுக்கு குட்பை சொல்லும் நேரம் நெருங்கும்போது, ஒவ்வொரு முன்னணி நடிகையும் பெண்கள் சம்பந்தப்பட்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள்.

அம்பிகா, ராதா, ரோஜா, ரம்பா, ரேவதி என பல நடிகைகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

இப்போது த்ரிஷா. பத்தாண்டுகளுக்கு மேல் நாயகியாக நடித்துவரும் த்ரிஷா இப்போது கிட்டத்தட்ட தனது கடைசி ரவுண்டில் இருக்கிறார். அடுத்து திருமணம் என்று பேச்சு அடிபடும் சூழலில், இப்போது பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

trisha oviya poonam bajwa as inseperable friends
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை பாண்டியன் இயக்குகிறார். இதற்கு முன் ப்ரியம் என்ற படத்தை இயக்கியவர் இவர்.

டி இமான் இசையமைக்கும் இந்தப் படத்தில், த்ரிஷாவுடன் இணைகிறார்கள் ஓவியாவும் பூனம் பாஜ்வாவும். மூவரும் இணைபிரியா தோழிகளாக நடிக்கின்றனர்.

தனி ஹீரோ என்று யாரும் இந்தப் படத்தில் இல்லை. இயக்குநர் சமுத்திரக்கனி, தம்பி ராமையா போன்றவர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

குறுகிய கால படமாக தயாராகும் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகிறது.

 

லட்சுமி ராய் 25: நடுக்கடலில் கேக் வெட்டி கொண்டாட்டம்

Lakshmi Rai 25 Birthday Celebrated In Mid Sea   

நடிகை லட்சுமிராய் தனது 25 வது பிறந்த நாளை நடுக்கடலில், ‘கேக்' வெட்டி கொண்டாடினார்.

ஐ.பி.எல் மேட்ச் ஆரம்பித்தாலே டோணி - லட்சுமி ராய் கிசு கிசு ஆரம்பித்து விடும். அந்த அளவிற்கு சென்னையில் டோணியுடன் பைக்கில் சுற்றியவர் லட்சுமி ராய்.

திருமணத்திற்குப் பின்னர் இந்த கிசு கிசு இல்லை என்றாலும் மே 5ம் தேதி பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது லட்சுமி ராய்க்கு டோணியின் நினைவு வராமல் இருக்காது.

லட்சுமிராய் தனது பிறந்த நாளை ஒவ்வொரு வருடமும் மிக சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு பிறந்தநாளை நடுக்கடலில், கொண்டாட முடிவு செய்தார்.

இதற்காக, மும்பையில் உள்ள தனது குடும்பத்தினருடன் 2 படகுகளில் ஏறி நடுக்கடலுக்குச் சென்றனர். அங்கே லட்சுமிராய் ‘கேக்' வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருடைய குடும்பத்தினர் அவரை வாழ்த்தி, பிறந்த நாள் பாடலை பாடினார்கள். பின்னர், லட்சுமிராயும் குடும்பத்தினரும் பத்திரமாக கரைக்கு திரும்பினார்கள்.

பெங்களூரை சேர்ந்த லட்சுமி ராய்க்கு மும்பையிலும் சொந்தமாக வீடு இருக்கிறது. இப்போது மும்பையில் உள்ள அந்த வீட்டில்தான் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

 

நடிகை அஞ்சலி மீது சேலம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு

Defamation Case Filed Against Anjali

சேலம்: நடிகை அஞ்சலி மீது சேலம் நீதிமன்றத்தில் இயக்குனர் களஞ்சியம் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கற்றது தமிழ், அங்காடித் தெரு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் அஞ்சலி. தனது உயிருக்கு தனது சித்தி மற்றும் திரைப்பட இயக்குனர் களஞ்சியம் ஆகியோரால் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியேறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் அஞ்சலி கூறியது பொய் என்று களஞ்சியம் விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் தமிழர் நலம் இயக்க நிர்வாகிகள் சார்பில் அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஓமலூர் ஆணைக்கவுண்டம்பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவர் சேலம் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், சென்னை வளசரவாக்கத்தில் வசிக்கும் நடிகை அஞ்சலி, எங்கள் இயக்கத் தலைவர் களஞ்சியத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவரால் தன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி அவதூறு பரப்பியுள்ளார். இதனால் இயக்கத்தின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு அதன் வளர்ச்சிக்கும் கலங்கம் ஏற்படுத்தியுள்ளார். இதனால், எங்களுக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே, நடிகை அஞ்சலி மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

இமயமலையில் தொடங்கிய சிகரம் தொடு!

யுடிவி தயாரிக்கும் சிகரம் தொடு படம் இமயமலையில் ஹரித்வார் அருகே தொடங்கியது.

தூங்கா நகரம் படத்தை இயக்கிய கவுரவ் இயக்கும் இரண்டாவது படம் சிகரம் தொடு. சேட்டை படத்துக்குப் பிறகு யுடிவி இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

விக்ரம் பிரபு - மோனா கஜ்ஜார் ஜோடியாக நடிக்க, இவர்களுடன் சத்யராஜும் எதிர்நீச்சல் சதீஷும் நடிக்கின்றனர். கோவை சரளா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

விஜய் உலகநாதன் ஒளிப்பதிவு செய்ய, பிரவீண் ஸ்ரீகாந்த் எடிட்டிங்கை கவனிக்கிறார். டி இமான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை சென்டிமென்டாக இமயமலையில் உள்ள ஹரித்வார் சண்டிதேவி ஆலயத்தில் சமீபத்தில் நடந்தது. தொடர்ந்து பத்து நாட்கள் இந்தப் பகுதியில் ஷூட்டிங் நடக்கிறது.

படம் குறித்து யுடிவியின் தெற்கு பொறுப்பாளர் தனஞ்செயன் கூறுகையில், "இந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட் ரொம்ப அருமையாக வந்திருக்கிறது. வேக வேகமாக படப்பிடிப்பு நடக்கிறது," என்றார்.

 

தரமணி எம்.ஜி.ஆர். திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் அனிமேஷன் டிப்ளமோ: ஜூலையில் மாணவர் சேர்க்கை

சென்னை: எம்.ஜி.ஆர். அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் இந்த ஆண்டு அனிமேஷன் டிப்ளமோ படிப்பு துவங்கப்பட உள்ளது.

எம்.ஜி.ஆர். அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் சென்னை தரமணியில் செயல்பட்டு வருகிறது. இங்கு சினிமா, வீடியோ படங்கள் தயாரிப்புக்குத் தேவையான தொழில்நுட்பங்களும், பிற திரைப்பட துணைப் பாடங்களும் மாணவர்களுக்கு கற்றுத் தரப்படுகின்றது.

மேலும் இயக்கம் மற்றும் திரைக்கதை வசனம் எழுதுதல், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு மற்றும் ஒலிப் பொறியியல், படத்தொகுப்பு போன்ற பல்வேறு படிப்புகளுக்கு டிப்ளமோ படிப்புக்கள் மூன்று ஆண்டு காலத்தில் பயிற்றுவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், 2013-14ம் கல்வியாண்டு முதல் அனிமேஷன் மற்றும் காட்சிப் பயன்கள் எனும் புதிய பட்டயப் படிப்பு துவங்கப்பட உள்ளது. இதற்கான சேர்க்கை ஜூலை மாதம் துவங்க உள்ளது.

 

'ரஜினி சார் பாராட்டிட்டார்...' - மகிழ்ச்சியில் இனியா!

Iniya Is On Cloud Nine

சென்னையில் ஒரு நாள் படம் பார்த்து தன் நடிப்பை ரஜினி பாராட்டியதை பெரும் மகிழ்ச்சியுடன் சொல்லி வருகிறார் நடிகை இனியா.

ஆரம்பத்தில் ரொம்ப சுமாரான படங்களில் தலை காட்டி வந்த இனியாவுக்கு பெரிய பிரேக் கொடுத்தது வாகை சூட வா. அதன் பிறகு வந்த மௌனகுரு படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

தொடர்ந்து பாரதிராஜா படத்தில் ஒப்பந்தமாகி, பின் நீக்கப்பட்டார். பெரிய அளவில் வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட இனியா, ஏமாற்றத்தையே தந்தார். சீனியர் நடிகர் ராம்கியுடன் நடிக்கும் நிலைக்குப் போய்விட்டார்.

இந்த நிலையில் ராதிகா சரத்குமார் தயாரித்த சென்னையில் ஒரு நாள் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

இந்தப் படத்தின் வெற்றி இனியாவுக்கு மீண்டும் பல வாய்ப்புகளை பெற்றுத் தந்துள்ளது.

இதுகுறித்து இனியா கூறுகையில், "சென்னையில் ஒரு நாள் படம் எனது சினிமா வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. நிறைய பேர் பாராட்டினார்கள். படம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. ரஜினி சார் இந்த படத்தை பார்த்து கைதட்டி பாராட்டினார். எனது நடிப்பும் நன்றாக இருந்ததாகச் சொன்னார். ரஜினி சார் பாராட்டியது விருது வாங்கியது போல் மிகவும் சந்தோஷமாக உள்ளது," என்றார்.

இனியா இப்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

 

மூன்றாவது முறை கைகோர்க்கும் விக்ரம்- பாலா!

Bala Join Hands With Vikram Again

இயக்குநர் பாலாவும் நடிகர் விக்ரமும் மூன்றாம் முறையாக இணைகிறார்கள். ஷங்கரின் ஐ படத்தை முடித்த கையோடு இந்தப் படத்தில் நடிக்கிறாராம் விக்ரம்.

விக்ரம், பாலா இருவருமே திரையுலகில் ஒன்றாகத்தான் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். பாலாவை விட பத்தாண்டுகள் முன்பே சினிமாவில் நடிக்க ஆரம்பித்தாலும், சேது படம்தான் இருவருக்குமே பெரிய பிரேக் ஆக அமைந்தது.

தொடர்ந்து பிதாமகன் படத்தில் பாலாவும் விக்ரமும் சிகரம் தொட்டனர். இந்தப் படம் விக்ரமுக்கு தேசிய விருதினைப் பெற்றுத் தந்தது. தமிழ் சினிமாவின் முக்கிய படமாகக் கருதப்படுகிறது.

அதன் பிறகு நான் கடவுள், அவன் இவன், பரதேசி என மூன்று படங்களைச் செய்துவிட்டார் பாலா. ஆனால் இருவரும் மீண்டும் இணையவில்லை.

இப்போது பாலாவும் விக்ரமும் மீண்டும் கைகோர்க்க திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்துக்கு, பரதேசி பட ஒளிப்பதிவாளர் செழியன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஜிவி பிரகாஷ்குமாரே இந்தப் படத்துக்கும் இசை அமைக்கிறார். முதல் முறையாக நகரத்துப் பிரச்சினைகளை மையப்படுத்தி இந்தப் படத்தை உருவாக்குகிறார் பாலா. படம் குறித்த பிற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.