சொந்தக் கதையைப் படமாக்குவதால் ஷகிலாவுக்கு கொலை மிரட்டல்

தன் சொந்தக் கதையைப் படமாக்கி வரும் பிரபல நடிகை ஷகிலாவுக்கு யாரோ சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்களாம்.

கவர்ச்சி நடிகை ஷகிலா தெலுங்கில் ‘ரொமான்டிக் டார்கட்' என்ற படத்தை இயக்கி வருகிறார். தன் வாழ்க்கையில் நடந்த பாலியல் கொடுமைகள் உள்பட, இருட்டு உலகுக்குள் நடக்கும் பல அவலங்களை இந்தப் படத்தில் சொல்லப் போகிறாராம் அவர்.

சொந்தக் கதையைப் படமாக்குவதால் ஷகிலாவுக்கு கொலை மிரட்டல்

இதில் அரசியல்வாதிகள், முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் பற்றியும் காட்சிகள் உள்ளனவாம்.

இதனால் ஷகிலாவுக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன. படத்தை வெளியிட்டால் விபரீத விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று சிலர் போனில் எச்சரிக்கிறார்களாம்.

ஹைதராபாதில் நேற்று நடந்த இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஷகிலா இவற்றைத் தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது, ‘‘மிரட்டல்களுக்கு நான் பயப்பட மாட்டேன். தடைகளை மீறி படத்தை வெளியிடப் போகிறேன்'' என்றார்.

இந்த படத்தில் நரேஷ் நாயகனாகவும், ஸ்வேதா சைனி நாயகியாகவும் நடித்துள்ளனர்.

 

'அஞ்சல'... விமல் - நந்திதா நடிக்கும் டீ கடை படம்!

டீ கடையை மையப்படுத்தி ஒரு படம் உருவாக்கப்படுகிறது. அதற்கு அஞ்சல என்று தலைப்பிட்டுள்ளனர்.

இயக்குனர்கள் ரத்ன குமார், மூர்த்தி மற்றும் சக்தி சௌந்தர்ராஜன் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்த தங்கம் சரவணன் இப்படத்தை இயக்குகிறார். மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் படமாக்கபட்டுள்ளது.

விமல் - நந்திதா

யமஹா ஷோரூம் வைக்கும் லட்சியத்துடன் உழைக்கும் மெக்கானிக்காக விமல், கல்லூரி மாணவியாக நந்திதா நடிக்கிறார்கள்.

'அஞ்சல'... விமல் - நந்திதா நடிக்கும் டீ கடை படம்!

டீ கடையும்

பசுபதி ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் மற்றும் இமான் அண்ணாச்சி, ஆடுகளம்' முருகதாஸ், சுப்பு பஞ்சு இவர்களுடன் ‘டீ' கடை மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது. அனைவரயும் கவரும் ஒரு நகைச்சுவை கலந்த காதல் பொழுது போக்கு பாடமாக வருகிறது ‘ அஞ்சல'.

திலீப் சுப்பராயன்

தனது ஃபார்மர்'ஸ் மாஸ்டர் ப்ளான் புரோடக்ஷன் சார்பில் திலிப் சுப்பராயன் இப்படத்தை தயாரிக்கிறார்.

"ஒரு நாள் தற்செயலாக ஸ்டன்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயனிடம் இந்த கதையை கூறினேன். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே இப்படத்தை தானே தயாரிக்க முன் வந்தார்," என்கிறார் இயக்குநர்.

திலிப் சுப்புராயன் பிரபல சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்புராயனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் சுப்பராயன்

இந்தப் படத்துக்கு சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சியினை மேற்கொள்ள, ரவி கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். வெற்றி படங்களான உஸ்தாத் ஹோட்டல், பெங்களூர் டேஸ் திரைப்படங்களுக்கு இசையமைத்த கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

நம்ம கதை

"நம் வாழ்வில் நடந்த, நடக்கும், நடக்கவிருக்கும் அன்றாட நிகழ்வுகளின் கோர்வையே அஞ்சல'. படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, பின் தயாரிப்பு வேலைகள் நடந்து வருகிறது. விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்," என்கிறார் தங்கம் சரவணன்.

 

ஹாலிவுட் நடிகை லுபிதாவின் முத்து பதித்த ரூ.93 லட்சம் கவுன் மாயம்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது வழங்கும் விழாவுக்கு நடிகை லுபிதா நியாங்கோ அணிந்து வந்த முத்துக்கள் பதித்த ரூ.93 லட்சம் மதிப்புள்ள கவுனை யாரோ திருடிவிட்டனர்.

ஹாலிவுட் நடிகை லுபிதா நியாங்கோ அண்மையில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். விழாவுக்கு அவர் பிரான்சிஸ்கோ காஸ்டா டிசைனர் கவுன் அணிந்து வந்தார். அந்த கவுனில் 6 ஆயிரம் முத்துக்கள் பதிக்கப்பட்டிருந்தன. விழா முடிந்த பிறகு லுபிதா அந்த கவுனை மேற்கு ஹாலிவுட்டில் உள்ள லண்டன் ஹோட்டலில் தான் தங்கியிருந்த அறையில் வைத்திருந்தார்.

ஹாலிவுட் நடிகையின் 6,000 முத்து பதித்த ரூ.93 லட்சம் கவுன் அபேஸ்!

லுபிதா வெளியே சென்ற நேரத்தில் அந்த கவுனை யாரோ திருடிவிட்டனர். அந்த கவுனின் விலை ரூ.93 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். லுபிதா தங்கிய ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவானவை ஆய்வு செய்யப்பட்டது. கவுன் கடந்த புதன்கிழமை மாலை மாயமாகியுள்ளது.

கென்யாவைச் சேர்ந்த லுபிதா 12 ஸ்லேவ்ஸ் என்ற படத்திற்காக சிறந்த துணை நடிக்கைக்கான ஆஸ்கர் விருதை கடந்த ஆண்டு பெற்றார்.

 

ராம் சரண்- காஜல் அகர்வால் நடிக்கும் ராம்லீலா

மகதீரா ஜோடியான ராம்சரண் - காஜல் அகர்வால் தெலுங்கில் நடித்த கோவிந்துடு அந்தரிவாடலே படம் ராம் சரண்- காஜல் அகர்வால் நடிக்கும் ராம்லீலா  

இந்தப் படத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், கமலினி முகர்ஜி, ரகுமான், பிரகதி, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு சமீர்ரெட்டி, இசை யுவன் சங்கர் ராஜா.

கிருஷ்ண வம்சி இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு தமிழில் வசனம் எழுதியுள்ள ஷாஜி, படம் குறித்துக் கூறுகையில், "அப்பா பிரகாஷ்ராஜுக்கும் மகன் ரகுமானுக்கும் ஏற்பட்ட பிரச்சனைகளை பேரன் ராம்சரண் தீர்த்து வைத்து உறவு சங்கிலி அறுந்து விடாமல் ஒன்று சேர்த்து வைக்கிறான்.

இந்த குடும்பக் கதையை நகைச்சுவை, காதல், ஆக்ஷன் கலந்து கமர்ஷியல் பார்முலா படமாக கிருஷ்ணவம்சி உருவாக்கியுள்ளார். விரைவில் இப்படம் தமிழில் திரைக்கு வருகிறது," என்றார்.

தெலுங்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. கடந்த ஆண்டு அதிகம் வசூலித்த தெலுங்குப் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நாளை நடிகர் சங்க செயற்குழு- திருட்டு வி.சி.டியை தடுப்பது பற்றி ஆலோசனை

சென்னை: நடிகர் சங்க செயற்குழு நாளை சரத்குமார் தலைமையில் கூடுகிறது. இதில் திருட்டு வி.சி.டி.யை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

செயற்குழு கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் ராதாரவி, துணை தலைவர்கள் விஜயகுமார், காளை, பொருளாளர் வாகை சந்திர சேகர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

நாளை நடிகர் சங்க செயற்குழு- திருட்டு வி.சி.டியை தடுப்பது பற்றி ஆலோசனை

சிம்பு, சத்யபிரியா, நளினி, சார்லி, சின்னஜெயந்த், ஸ்ரீகாந்த், குண்டு கல்யாணம், குயிலி, மனோ பாலா, சகுந்தலா, கே.ஆர்.செல்வராஜ், எம்.ராஜேந்திரன் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர்.

திரைப்படத் துறைக்கு பெரும் சவாலாக உள்ள திருட்டு வி.சி.டி, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நடிகர் நடிகைகளின் அந்தரங்க ஆபாச வீடியோக்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

 

ஏப்ரல் 10-ம் தேதி மிரட்ட வருகிறாள் காஞ்சனா பேய்!

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கும் காஞ்சனா 2 படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

டான்ஸ் மாஸ்டராக இருந்து நடிகராகவும், பின்னர் இயக்குநராகவும் உயர்ந்தவர் ராகவா லாரன்ஸ்.

தமிழில் அவர் இயக்கிய முதல் படம் முனி. அடுத்தடுத்து தெலுங்கில் பல வெற்றிப் படங்களை இயக்கிய லாரன்ஸ், மீண்டும் முனி படத்தின் இரண்டாம் பகுதியாக காஞ்சனாவை இயக்கினார். படம் தாறுமாறான வெற்றியைப் பெற்றது.

ஏப்ரல் 10-ம் தேதி மிரட்ட வருகிறாள் காஞ்சனா பேய்!

இப்போது காஞ்சனாவின் இரண்டாம் பகுதியை உருவாக்கியுள்ளார்.

டாப்சி, கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

நகைச்சுவை, திகில், ஆக்ஷன் நிறைந்த படமாக உருவாகியுள்ள காஞ்சனா 2 வரும் ஏப்ரல் 10-ம் தேதி, சித்திரைப் புத்தாண்டுக்கு ஒரு வாரம் முன்பே உலகெங்கும் வெளியாகிறது. தேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தமிழகத்தில் வெளியிடுகிறது.

 

மலையாள ஹிட்டான வெள்ளிமூங்காவை ரீமேக்கும் சுந்தர் சி

மலையாளத்தில் பெரும் வெற்றிப் படமாக ஓடிய வெள்ளிமூங்காவை தமிழில் ரீமேக் செய்கிறார் இயக்குநர் சுந்தர் சி.

தமிழில் கமர்ஷியல் இயக்குநர்களில் முன்னணியில் இருப்பவர் சுந்தர் சி. இவரது படங்கள் தயாரிப்பாளர்களையும் சரி, ரசிகர்களையும் சரி பெரும்பாலும் ஏமாற்றுவதில்லை.

மலையாள ஹிட்டான வெள்ளிமூங்காவை ரீமேக்கும் சுந்தர் சி

சமீபத்தில் வந்த அரண்மனை படம் பெரும் வசூலைக் குவித்தது. ஆம்பள படமும் வெற்றியைப் பெற்றுள்ளது.

மலையாள ஹிட்டான வெள்ளிமூங்காவை ரீமேக்கும் சுந்தர் சி

அடுத்து இவர் அரண்மனை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது தனது திட்டத்தை மாற்றிக் கொண்டுள்ளார் சுந்தர்.

மலையாள ஹிட்டான வெள்ளிமூங்காவை ரீமேக்கும் சுந்தர் சி

மலையாளத்தில் பெரிய வெற்றியைப் பெற்ற வெள்ளிமூங்கா படத்தின் ரீமேக் உரிமையைப் பெற்றுள்ளார். ஒரு நாற்பது வயது முரட்டு அரசியல்வாதி, இளம் பெண்ணின் மீது காதல் கொள்ள, அதன் விளைவுகளை நகைச்சுவையுடன் சொல்லும் படம் இந்த வெள்ளிமூங்கா. சுந்தர் சியே நாயகனாகவும் நடிக்கிறார்.

இந்தப் படத்தை சுந்தர் சி தன் பாணியில் இயக்கினால் எப்படி இருக்கும்?

ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்து நிச்சயம்!

 

இன்று சிவகார்த்திகேயன் நடித்த காக்கிச் சட்டை.. அதிக அரங்குகளில் வெளியீடு

உலகெங்கும் இன்று 800 அரங்குகளில் சிவகார்த்திகேயன் நடித்த காக்கிச் சட்டை வெளியானது.

எதிர்நீச்சல் படத்துக்குப் பிறகு, அதே காம்பினேஷனில் தனுஷின் வுண்டர்பார் நிறுவனமும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் காக்கிச் சட்டை.

இன்று சிவகார்த்திகேயன் நடித்த காக்கிச் சட்டை.. அதிக அரங்குகளில் வெளியீடு

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். பிரபு, மனோபாலா, இமான் அண்ணாச்சி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படம் இன்று உலகம் முழுவதும் 800-க்கும் அதிகமான அரங்குகளில் வெளியானது. சிவகார்த்திகேயன் நடித்த படம் ஒன்று இத்தனை அரங்குகளில் வெளியாவது இதுவே முதல் முறையாகும்.

சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் இது முக்கிய கட்டமாகும். வளரும் நடிகர் என்ற நிலையிலிருந்து, முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு இந்தப் படம் அவரை உயர்த்தியுள்ளது.