புதிய தமிழ்ப் படத்தில் ஒப்பந்தமானார் அஞ்சலி.. ஜெயம் ரவிக்கு ஜோடி!

சென்னை: ஒரு வழியாக மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் அஞ்சலி. புதிய படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அவர் நடிக்கிறார்.

படத்தை இயக்குபவர் தலைநகரம், மருதமலை, படிக்காதவன் (தனுஷ்) படங்களை இயக்கிய சுராஜ்.

புதிய தமிழ்ப் படத்தில் ஒப்பந்தமானார் அஞ்சலி.. ஜெயம் ரவிக்கு ஜோடி!  

லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் இரண்டு நாயகிகள். இவர்களில் ஒரு நாயகியாகத்தான் அஞ்சலியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனை இயக்குநர் சுராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.

சித்தி கொடுமையால், சென்னையில் உள்ள சொந்த வீட்டைவிட்டு ஹைதராபாத்துக்கு போனார் அஞ்சலி. தனது சொத்துக்களையெல்லாம் இயக்குநர் களஞ்சியமும் தன் சித்தியும் அபகரிக்க முயல்வதாகக் குற்றம்சாட்டினார். பின்னர் திடீரென சில தினங்கள் தலைமறைவாகி பரபரப்பு கிளப்பியவர், ஒரு வழியாக திரும்பி வந்தார்.

சில தெலுங்குப் படங்களில் மட்டும் நடித்தார். சென்னைப் பக்கமே வரவில்லை. தமிழ்ப் படங்களிலும் ஒப்பந்தமாகவில்லை. சென்னையில் அவர் தொடர்பான வழக்குகளிலும் ஆஜராகவில்லை. அவர் கோரிக்கையின் பேரில் நீதிமன்றமும் விலக்களித்துவிட்டது.

இந்த நிலையில் இயக்குநர் களஞ்சியம், தன் படத்துக்கு கால்ஷீட் கொடுத்து விட்டு, பின்னர் நடிக்க மறுக்கிறார் என அஞ்சலி மீது போகுமிடமெல்லாம் புகார் வாசிக்க ஆரம்பித்தார். இயக்குநர் சங்கத்திலும் புகார் தந்துள்ளார். அஞ்சலி எந்தப் படத்தில் நடித்தாலும் பிரச்சினை பண்ணுவேன் என்று அறிக்கைவிட்டார்.

ஆனால் அஞ்சலியோ, என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது. நான் அனைத்துப் பிரச்சினைகளிலிருந்தும் விடுபட்டுவிட்டேன். தமிழ்ப் படங்களில் இனி நடிப்பேன், என பதில் அறிக்கை விட்டார்.

இதனைத் தொடர்ந்துதான் அஞ்சலியை ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்துள்ளார் இயக்குநர் சுராஜ்!

 

ரு... இப்படி ஒரு தலைப்பில் புதிய தமிழ்ப் படம்!

'ரு' என்பது தமிழில் ஒரு உயிர்மெய் எழுத்து என்பது தெரியும்... ஆனால் சுத்தத் தமிழில், அது ஒரு எண்.

5 என்பதை தமிழில் ரு என்றுதான் குறிப்பிடுவார்கள். இன்றும் தமிழ் எண்களைப் பயன்படுத்த விரும்புவோர் இப்போதும் தங்கள் வாகனங்களில் இந்த தமிழ் எண் உருக்களைப் பயன்படுத்துவதைப் பார்க்கலாம்.

ரு... இப்படி ஒரு தலைப்பில் புதிய தமிழ்ப் படம்!

இன்னொன்னு சென்டிமென்ட், நம்பிக்கைப்படியும் ஐந்து என்ற எண்ணுக்கு ரொம்பவே முக்கியத்துவம் உண்டு.

இப்போது இந்த 'ரு' என்பதையே தலைப்பாக்கியிருக்கிறார்கள், ஒரு புதிய படத்துக்கு.

சமூகத்தில் வாழ கூடாத,வாழ தகுதி இல்லாத ஐந்து மனித மிருகங்களை வேட்டையாட விழைகிறான் ஒரு இளைஞன். சினிமாவில் நாயகனாக வர கனவு காணும் அவன், நிஜ வாழ்வில் நாயகனாக ஆகிறானா என்பதை அந்த ஐந்து பேர்தான் தீர்மானிக்கின்றனர்.

சர்வதேச அரங்கில் நமது நாடு தலை குனிய வைக்கும் ஒரு மிக பெரிய சமூக அவலத்தை இந்தப் படத்தில் காட்டப் போவதாகக் கூறுகிறார் 'ரு ' இயக்குநர் சதாசிவம்.

தொலை காட்சி தொடர் மூலம் அறிமுகமாகி இன்று திரை உலகில் கால் ஊன்றி நிற்கும் இர்பான் 'ரு ' படத்தில் நாயகனாக நடிக்கிறார். ரக்ஷிதா நாயகியாக நடிக்கிறார்.

இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் உள்ள இந்தப் படம் ஜூலையில் வெளியாகிறது.

 

ஹாலிவுட்டின் 'லேடி அஜீத்' டயான் க்ரூகர்: பணிப்பெண்ணுக்கு வீடு பரிசு

கலிபோர்னியா: ஹாலிவுட் நடிகை டயான் க்ரூகர் தன்னிடம் நீண்ட காலமாக வேலை பார்த்து வரும் பெண்ணுக்கு தனது வீட்டையே பரிசாக அளித்துள்ளார்.

ஹாலிவுட்டின் 'லேடி அஜீத்' டயான் க்ரூகர்: பணிப்பெண்ணுக்கு வீடு பரிசு

பிரபல ஹாலிவுட் நடிகை டயான் க்ரூகர்(37). அவர் தனது வீட்டில் பலகாலமாக வேலை பார்த்து வரும் பெண்ணுக்கு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள தனது வீட்டை பரிசாக அளித்துள்ளார். மேலும் பணிப்பெண்ணின் குடும்பத்தார் அமெரிக்காவில் குடியேற விண்ணப்பித்தபோது அவர்களின் பயண செலவு மற்றும் சட்ட செலவுகளை ஏற்றுக் கொண்டார்.

ஜெர்மனியைச் சேர்ந்த டயான் ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். டயான் க்ரூகர் செய்ததை நினைக்கையில் அஜீத் குமார் தன்னிடம் நீண்ட காலமாக வேலை பார்ப்பவர்களுக்கு நிலம் வாங்கி வீடு கட்டிக் கொடுப்பது தான் நினைவுக்கு வருகிறது.

நடிகர், நடிகைகள் தங்கள் வீட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு உதவி செய்வது பாராட்டுக்குரியது.

 

சென்னையில் சிங்களப் படம்... திரையரங்குகளை முற்றுகையிட முடிவு!

சென்னையில் சிங்களப் படம்... திரையரங்குகளை முற்றுகையிட முடிவு!

சென்னை: சென்னையில் உள்ள இரண்டு திரையங்குகளில் சிங்கள படம் திரையிட முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்படுவதால், தமிழ் அமைப்புகள் அந்த அரங்குகளை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளன.

ஈழத்தில் தமிழருக்கு எதிரான இனப்படுகொலையை அரங்கேற்றி, லட்சக்கணக்கான மக்களைக் கொன்றொழித்தனர் சிங்கள ராணுவத்தினர். இதை இலங்கை அதிபர் ராஜபக்சே நியாப்படுத்தி பேசி வருகிறார். ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகள் இலங்கை அரசு மீது போர்க் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த நிலையில், ஒரு சிங்களப் படத்தை தமிழகத்தில் அதுவும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் திரையிட முயற்சித்துள்ளனர்.

பி.வி.ஆர் நிறுவனம், பிரசன்னா விதானகே என்ற சிங்களவர் இயக்கிய "ஒப நாதுவா, ஒப ஏக்க (With you, with out you)" என்ற சிங்கள படத்தை இந்திய முழுவதும் ஆங்கில மொழிப் பெயர்ப்புடன் திரையிடுகின்றனர்.

இது 2012-ம் ஆண்டு வெளியான படம். ஈழப்போருக்கு பின் நடக்கும் காதல் கதை. நாயகியின் பெயர் செல்வி. ஒரு முன்னாள் சிங்கள ராணுவ வீரருக்கும் தமிழ்ப் பெண்ணான செல்விக்குமிடையேயான காதல் கதை.

சென்னையில் அமைந்தகரை ஸ்கைவாக் வணிக வளாகத்தில் உள்ள பி.வி.ஆர் திரையரங்கில் இரவு 7 மணிக் காட்சியும், ராயபேட்டை மணிக்கூண்டு அருகே உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யு வளாகத்தில் எஸ்கேப் திரையரங்கில் இரவு பத்து மணிக் காட்சியும் திரையிடப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் அறிந்த தமிழ் அமைப்புகள் அரங்குகளை முற்றுகையிட முடிவு செய்துள்ளன.

மும்பை, பெங்களூரு, டெல்லி, புனே போன்ற நகரங்களில் உள்ள பிவிஆர் மால்களில் இந்தப் படம் இன்று வெளியாகிறது.

 

அதிரடி ஆட்குறைப்பு… வாகனக் குறைப்பு… டிவி சேனலில் நடப்பது என்ன?

அரசியல்வாதிகள் ஆளுக்கு ஒரு சேனல் வைத்துக்கொண்டு தங்களின் கட்சி செய்திகளை ஒளிபரப்பி வருகின்றனர். பொழுதுபோக்கு சேனல் தொடங்கிய கையோடு 24 மணிநேர செய்தி சேனலும் தொடங்குவதும் வாடிக்கையாகி வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு பல டிவி சேனல்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கிவிட்டனவாம். முக்கிய அரசியல்வாதியின் சேனலில் ஒரே நாளில் 90 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ஆட்குறைப்பும் நியாயமாக நடைபெறவில்லை என்கின்றனர். நீண்ட நாட்களாக பணியில் இருப்பவர்களை மற்றும் திறமையாக பணியாற்றுபவர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளளனர். ஹெச் ஆர், செய்தி ஆசிரியர் மற்றும் ரிசப்சனிஸ்ட் ஆகியோர் தங்களுக்கு வேண்டியவர்களை எல்லாம் பணியில் வைத்து விட்டு, வேண்டாத அதே சமயம் திறமையானவர்களை பணியில் இருந்து விரட்டியுள்ளனர் என்கின்றனர் தகவல் அறிந்தவர்கள்.

ஆட்குறைப்பு நடவடிக்கையில் ரிசப்சனிஸ்டிற்கு என்ன வேலை என்று ஆச்சர்யம் அடைய வேண்டாம். ரிசப்சனிஸ்ட்தான் அங்கு அதிகாரம் மிக்கவராம்.

ஒட்டுமொத்தமாக திடீரென நிறைய பேர் விலக்கபட்டுள்ள செய்தி ஒட்டுமொத்த ஊடகத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது முழுக்க உறவினரின் தன்னிச்சையான முடிவென்றும், வெளிநாட்டில் உள்ள தலைவருக்கு இதுகுறித்த தகவல் ஏதும் தெரியவில்லையென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தலைமை செயலகத்தில் சிலர் ஒன்றிணைந்து முதல்வர் தனிப்பிரிவில் ஒட்டுமொத்தமாக புகார் கொடுத்திருக்கிறார்களாம். கூடவே லேபர் டிபார்ட்மென்டிலும் புகார் கொடுப்பார்கள் என தெரிகிறது.

சேனலில் ஆட்குறைப்பை தொடர்ந்து தற்போது வாகன குறைப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. ரிப்போர்ட்டர்கள் பயன்பாட்டில் இருந்த சுமார் 5 இன்டிகா வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. காலை மற்றும் மதிய ஷிப்ட் ரிப்போட்டர்களுக்கு மட்டுமே தனி வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

பொது ஷிப்ட் ரிப்போர்ட்டர்கள் மூன்று பேருக்கும் ஒரே வாகனம். அந்த ஒரு வாகனத்தில் மூன்று பேரும் சென்று தங்களுக்கு உரிய இடத்தில் இறங்கிக்கொள்ள வேண்டும் என்ற பாணி கடைபிடிக்கப்படுகிறது.

ஆட்களை மேலும் குறைப்பதற்கான ஒப்புதலை நிர்வாகம் வழங்கிவிட்டதாகவும், அடுத்த கட்ட ஆட்குறைப்பு இந்த மாத இறுதியில் இருக்கும் என்றும் தகவல்.

 

நடிகை மீனாவின் தந்தை மரணம்

சென்னை: நடிகை மீனாவின் தந்தை துரைராஜ் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 67.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை மீனா. இவரது தந்தை துரைராஜுக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

நடிகை மீனாவின் தந்தை மரணம்

உடனே சிகிச்சைக்காக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.

அவரது உடல் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு பின்புறம் உள்ள ஸ்ரீ நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அவருக்கு ராஜ் மல்லிகா என்ற மனைவியும், மீனா என்கிற மகளும் உள்ளனர். இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடக்கின்றன.

 

இசை என்பது ஒரு மாமருந்து என்பதை படித்திருப்பீர்கள். இதோ ஒரு அனுபவம்...

ரஜினி நடித்த 'ஜானி', 'கைகொடுக்கும் கை', 'மன்னன்', கமல் நடித்த 'வெற்றி விழா', 'மை டியர் மார்த்தாண்டன்' மற்றும் 'உதிரி பூக்கள்', 'நெஞ்சத்தை கிள்ளாதே', 'மெட்டி', 'நடிகன்', 'மலபார் போலீஸ்', 'கோவில்பட்டி வீரலட்சுமி' உள்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, பெங்காலி, கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 120 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்த ஜாம்பவான், அசோக்குமார்!

இசை என்பது ஒரு மாமருந்து என்பதை படித்திருப்பீர்கள். இதோ ஒரு அனுபவம்...

தமிழில் சில்க் ஸ்மிதா நடித்த 'அன்று பெய்த மழையில்', அன்றைய காலகட்டத்தில் ஆந்திராவை ஒரு கலக்கு கலக்கிய தெலுங்கு 'அபி நந்தனா', இந்தி 'காமாக்னி' உள்பட சில படங்களை அவர் இயக்கியுள்ளார்.

இசை என்பது ஒரு மாமருந்து என்பதை படித்திருப்பீர்கள். இதோ ஒரு அனுபவம்...

'ஜென்மபூமி', 'நெஞ்சத்தை கிள்ளாதே' படங்களுக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது வாங்கியுள்ளார்.

திரையுலகில் எண்ணற்ற சாதனைகள் படைத்து, மற்ற மொழி தொழில்நுட்பக் கலைஞர்களை கோலிவுட் பக்கம் திரும்ப வைத்த பெருமைக்குரியவர் அசோக்குமார். இப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லை. சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில், உயரிய சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் விரைவில் உடல்நிலை தேற வேண்டும் என்று தமிழ் திரையுலகினர் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

நிற்க. சொல்ல வந்த விஷயம் என்ன தெரியுமா?

அசோக்குமாரை அருகிருந்து கவனித்துக் கொள்ளும் அவரது மகனும், 'தொட்டால் பூ மலரும்' உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவருமான ஆகாஷ், சொன்ன ஒரு தகவல் மெய் சிலிர்க்க வைத்தது.

அசோக்குமாருக்கு பழைய ஞாபகங்களைக் கொண்டு வருவதற்காக, தினமும் அவரது செவிகளில் ஹெட்போன் வைத்து இளையராஜாவின் பாடல்களை ஒலிக்க வைக்கிறார்களாம்.

இளையராஜா இசையில், மகேந்திரன் இயக்கத்தில், அசோக்குமாரின் அற்புதமான ஒளிப்பதிவில், 'நெஞ்சத்தை கிள்ளாதே' படத்துக்காகப் உருவாக்கப்பட்ட 'பருவமே... புதிய பாடல் பாடு' என்ற பாடலை அடிக்கடி ஒலிக்க வைக்கிறாராம். அசோக்குமார் ஒளிப்பதிவு செய்ததில், இந்தப் பாடல் காட்சிதான் அவருக்கு மிகவும் பிடித்ததாம். அதனால் அதை ஒலிபரப்பி, அவருக்கு பழைய ஞாபகம் திரும்பவும் வருகிறதா என்று ஆவலுடன் காத்திருக்கிறாராம்!

இசை என்பது ஒரு மாமருந்து என்பதை படித்திருப்பீர்கள். இதோ ஒரு அனுபவம்...

'பருவமே...' பாடலைக் கேட்கும்போது மட்டும், அசோக்குமாரிடம் சின்னச்சின்ன அசைவுகள் தெரிகிறதாம்... இதைக் கேட்கும்போதே நமக்கு மெய்சிலிர்த்தது. அதனால்தான் அவசர அவசரமாக இந்தப் பதிவு.

'இசை கேட்டால் புவி அசைந்தாடும்', 'இசையால் வசமாகா இதயம் எது' போன்ற பாடல்கள் இசையின் மேன்மையை நமக்குச் சொல்கின்றன. இசைமேதை இளையராஜாவின் இசை, அசோக்குமார் என்கிற உன்னதமான ஒளிப்பதிவுக் கலைஞனின் நினைவுகளை சில நிமிடங்களாவது மீட்டுத் தருகிறதே என்பதே மிகப் பெரிய ஆறுதல்தானே!

 

திருப்பதியில் மொட்டை போட்டார் நடிகர் சித்தார்த்

திருப்பதி திருமலை கோயிலுக்குச் சென்ற நடிகர் சித்தார்த், தலையை மொட்டை போட்டுக் கொண்டார்.

தமிழில் ஜிகர்தண்டா, காவிய தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் சித்தார்த். இரண்டு படங்களுமே முடிந்துவிட்டன. விரைவில் வெளி வரவிருக்கின்றன.

திருப்பதியில் மொட்டை போட்டார் நடிகர் சித்தார்த்

இந்த நிலையில் திருப்பதி திருமலை கோவிலுக்குச் சென்றார் சித்தார்த். முதலில் மொட்டை போட்டுக் கொண்டார். பின்னர் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டார்.

அடுத்து வரவிருக்கும் தனது ஜிகர்தண்டா படம் வெற்றி பெற கடவுளிடம் வேண்டிக் கொண்டார். சித்தார்த்துடன் ஜிகர்தண்டா படக்குழுவினரும் திருப்பதியில் சாமி கும்பிட்டார்கள்.

"திருமலைக்கு வந்து பிரார்த்தனை செய்வது எப்போதுமே மனசுக்கு நிறைவான விஷயம். இந்த முறை ஜிகர்தண்டா படம் வெற்றி பெற ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டேன்," என்றார்.

சித்தார்த்துக்கு தெலுங்கில் பொம்மரிலு படத்துக்குப் பிறகு ஒரு வெற்றிப் படம் கூட அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.