'ஜிகினா' என்பது நான்தான்!- விஜய் வசந்த்

இன்றைய சமூகத்தில் நிலவும் ஒரு முக்கிய பிரச்சினை ஆன சமூக வளைத் தளங்களில் வரும் போலி அடையாளங்களைப் பற்றியக் கதைதான் 'Jigina is non other than me, says Vijay Vasanth  

இதை குறையாக நினைத்து, போலி அடையாளம் மூலம் மற்றவரைக் கவர நினைக்கும் ஒரு இளைஞனைப் பற்றியக் கதைதான் 'ஜிகினா'.

'ஜிகினா' படத்தை இயக்குனர் லிங்குசாமியின் நிறுவனம் மூலம் வெளியிட இருப்பதே எனக்குப் பெருமை. அதற்காக லிங்குசாமி சாருக்கும், போஸ் சாருக்கும் நன்றிகள் பல.

என்னுடையக் கதாபாத்திரத்தை இயக்குனர் ரவி நந்தா பெரியசாமி மிக அருமையாக வடிவமைத்துள்ளார். படம் பார்த்த பின்னர், அரங்கில் இருந்து வெளி வரும் ரசிகர்கள் இடையே என்னுடைய கதாப்பாத்திரம் பெரிய அளவுக்கு பேசப்படும் என்பதில் எனக்கு தீவிர நம்பிக்கை உண்டு.

Jigina is non other than me, says Vijay Vasanth  

வளர்ந்து வரும் என்னைப் போன்ற நடிகர்களுக்கு கிடைக்கும் இத்தகையக் கதா பாத்திரம் மிக பெரிய வரமாகும். நமது வாழ்வில் இன்றி அமையாத அங்கமாகி விட்ட பேஸ்புக்தான், 'ஜிகினா'வின் முக்கிய கதாபாத்திரம்.

'ஜிகினா' இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான படமாக இருக்கும் என்பதிலும், இதுவே வர்த்தக ரீதியாக இந்தப் படம் பெரும் வெற்றிப் பெற உதவும் என்பதில் சந்தேகமே இல்லை,' என்றார்.

 

நிஜத்தில் ஒரு கிராமத்தை தத்தெடுத்த செல்வந்தன் நாயகன்

ஹைதராபாத்: தெலுங்கு உலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு தெலுங்கானா மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய மெகபூப் மாவட்டத்தில் இருந்து ஒரு கிராமத்தை தத்தெடுத்து இருக்கிறார்.

சமீபத்தில் மகேஷ்பாபு நடிப்பில் வெளிவந்த ஸ்ரீமந்துடு திரைப்படம் (தமிழில் செல்வந்தன்) தெலுங்கானா மாநிலத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.

Actor Mahesh Babu Adopt One Village

தெலுங்கானா மட்டுமல்லாது திரையிட்ட இடமெல்லாம் படம் ஓரளவிற்கு நன்றாக ஓடி வசூலைக் குவித்து வருகிறது, படத்தின் கதைப்படி மகேஷ்பாபு தான் பிறந்த கிராமத்தை தத்தெடுத்து அதன் வளர்ச்சிக்காக பாடுபடுவார்.

சமீபத்தில் இந்த படத்தை பார்த்த தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் மகன், தாராக ராமராவ் மகேஷ்பாபுவை வெகுவாகப் பாராட்டி இருக்கிறார்.

மேலும் படத்தைப் பற்றிக் கூறும்போது தெலுங்கானா மாநில அரசு செயல்படுத்தி வரும் ‘‘கிராம ஜோதி'' திட்டத்தை பிரபலப்படுத்தும் வகையில், படம் அமைந்து இருப்பதாக கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதோடு மிகவும் பின் தங்கியுள்ள மெகபூப் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை நீங்கள் தத்து எடுக்க வேண்டும் என்றும், அவர் மகேஷ்பாபுவை கேட்டுக் கொண்டார்.

இந்த யோசனையை மகேஷ்பாபு ஏற்றுக் கொண்டதுடன் நீங்களே ஒரு கிராமத்தை சொல்லுங்கள், அதனை நான் தத்து எடுத்துக் கொள்கிறேன் என்று ராமராவிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

ராமராவ் யோசனைப்படி மெகபூப் மாவட்டத்தில் உள்ள பாலமோர் கிராமத்தை மகேஷ்பாபு தத்து எடுத்திருக்கிறார். இதனைப் பற்றி மகேஷ்பாபு கூறும்போது "விரைவில் அந்த கிராமத்துக்கு சென்று கிராம மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு தீர்த்து வைப்பேன்" என்று உறுதி அளித்திருக்கிறார்.

தெலுங்கானா முதல்-மந்திரி அவர்கள் மகனின் பாராட்டு எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மகேஷ்பாபு, விரைவில் தனது தந்தை (நடிகர் கிருஷ்ணா) பிறந்த குண்டூர் மாவட்டத்தில் உள்ள புர்ரி பாளையத்துக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு நலத்திட்டங்களை செய்து தரவும் முடிவு செய்திருக்கிறார்.

பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதிலும், நிருபர்களுக்கு பேட்டி அளிப்பதையும் தவிர்த்து வரும் நடிகர் மகேஷ்பாபு, முதல் முறையாக அரசின் கிராம ஜோதி திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

மகேஷ்பாபு உண்மையிலேயே சூப்பர் ஸ்டார் தான்.

 

கோயில்களில் படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு தடை.. திரையுலகம் அதிருப்தி!

பாரம்பரியம் மிக்க முக்கிய கோயில்களில் படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் கோலிவுட் பிரமுகர்கள் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.

தமிழ் சினிமா மற்றும் டிவி உலகினர் அதிகமாக ஷூட்டிங் நடத்தும் இடங்களில் கோவில்கள் முக்கியம் இடம் வகிக்கின்றன.

Film industry upsets over govt's ban to shoot in Temples

ஆனால் இந்த புராதான கட்டிட கலையை உயர்த்திப் பிடிக்கும் கோயில்களில், படப்பிடிப்பு நடத்துவதாகக் கூறிக் கொண்டு, சேதப்படுத்தி வந்ததால், இங்கெல்லாம் ஷூட்டிங் நடத்த மக்களும் அகழ்வாராய்ச்சியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

எனவே கோவில்களில் படப்பிடிப்பு நடத்த தற்போது அறநிலையத்துறை தடைவிதித்துள்ளது. இதனால், சினிமா பிரபலங்கள் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

முன்பெல்லாம் பெரிய ஸ்டுடியோக்களில் நிரந்தரமாக கோயில் செட்கள் இருந்தன. படமாக்க வசதியாகவும் செலவு குறைவாகவும் இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. எனவேதான் கோயில்களை நாட வேண்டிவந்தது.

அதேபோல இந்த கோயில்களை சினிமாவில் காட்டுவது நமது பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்க உதவியாக இருந்தது. அதைத் தடுக்கும் வகையில் அரசு உத்தரவு அமைந்துள்ளதே என வருத்தம் தெரிவித்துள்ளனர்.

 

பட்டணத்தில் பூதம்.. நாசர் நடிக்கும் புதிய நாடகம்!

என்னதான் சூப்பர் ஸ்டார்களுடன் சூப்பர் ஹிட் படங்களுடன் நடித்திருந்தாலும் நாசருக்கு தன் தாய் வீடான நாடகங்களின் மீதுதான் தீராக் காதல்.

தான் இயக்கிய அவதாரம், தேவதை போன்ற படங்களில் கூட நாடகங்களே மைய இழையாக அமையும்படி பார்த்துக் கொண்டார் அவர்.

Nasser to act in a play titled Pattanathil Boothaam

அடுத்து குழந்தைகளுக்காக கார்த்திக் ராஜா இசையமைத்து சினிமா பாணியில் தயாரிக்கும் ஒரு நாடகத்தில் நடிக்கிறார்.

அந்த நாடகத்துக்கு பட்டணத்தில் பூதம் என்று தலைப்பிட்டுள்ளனர். பாடலாசிரியர் பா விஜய் வசனம் எழுதுகிறார்.

இந்தப் படத்தில் பாடகர்களான ராகுல் நம்பியார், சின்மயி உள்ளிட்டோரும் நடிக்கவிருக்கிறார்கள். செப்டம்பர் 16 இல் இந்த நாடகம் சென்னையில் நடக்கவிருக்கிறது.

நான்கு நாட்கள் இந்த நாடகத்தை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த நாடகம் வெற்றி பெற்றால், இதையே முழுநீளத் திரைப்படமாக எடுக்கப் போகிறார்களாம்.

 

தல அஜித் பட சூட்டிங்கிற்கு மழை செய்த இடையூறு.. திரைப்பட யூனிட்டுக்கு கூடுதல் செலவு

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு மழையால் பாதிக்கப்பட்டால் பல லட்சம் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாம்.

சிறுத்தை, வீரம் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய சிவா, மீண்டும் அஜித்துடன் இணைந்துள்ளார்., பெயர் சூட்டப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட பல இடங்களில் நடந்து வருகிறது.

Ajith's new film will be shoot in Kolkata

ஏற்கெனவே கொல்கத்தா போனபோது திட்டமிட்டபடி மொத்தப்படப்பிடிப்பையும் முடிக்கமுடியாத அளவு கடும்மழை பெய்துள்ளது. வெளிப்புறப் படப்பிடிப்புக்காகவே அங்கு போனார்கள் என்பதால் மழை நேரத்தில் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை.

எனவே, சென்னையில் சூட்டிங் முடிந்தபிறகு திரும்பவும் கொல்கத்தா போய் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தவேண்டியிருக்கிறது. அல்லது, தற்போது சென்னையில் நடைபெறும் சூட்டிங் காட்சிகளோடு படத்தின் பணிகள் முடிவடைந்திருக்கும்.

எதிர்பாராத இயற்கை தடை காரணமாக திரும்பவும் படக்குழு கொல்கத்தா செல்ல வேண்டியிருக்கிறது. இதனால் பல லட்சங்கள் அதிகமாக செலவீனம் ஏற்பட்டுள்ளது.

 

மெட்ரோ ரயிலில் ஷூட்டிங்... 1 ஹவருக்கு ஜஸ்ட் 4 லட்சம் தான் பாஸ்

சென்னை: சென்னையின் புதிய அடையாளங்களில் ஒன்றாக மாறியிருக்கும் மெட்ரோ ரெயில்களில், சினிமா படப்பிடிப்புகளை நடத்திக் கொள்ள மெட்ரோ ரெயில் அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.

சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில்(கோயம்பேடு- ஆலந்தூர்) மட்டுமே மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது, அதுவும் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே என்பதால் ஆரம்பத்தில் பயணிகளிடம் இருந்த வரவேற்பு தற்போது இல்லை.

Chennai Metro Rail to Allow The Cinema Shooting

இதனால் மெட்ரோ ரெயில் சரிவை நோக்கி பயணிக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது, இதனை சரி செய்ய என்ன செய்யலாம் என்று அதிகாரிகள் யோசித்த போது சினிமா துறையினர் மெட்ரோ ரெயில்களில் படம் பிடிக்க ஆர்வமுடன் இருந்தனர்.

முதலில் படப்பிடிப்புக்கு மறுத்தாலும் மெட்ரோ ரெயிலின் வருமானம் மற்றும் மும்பை, டெல்லி மெட்ரோ ரெயில்களில் சினிமா படப்பிடிப்புகளை நடத்த அங்குள்ள அதிகாரிகள் அனுமதி அளித்தது போன்றவற்றை கணக்கில் கொண்டு தற்போது சென்னை மெட்ரோ ரெயில்களிலும் சினிமா படப்பிடிப்புகளை நடத்த அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.

அனுமதி அளிக்கும் முன்பு டெல்லி மற்றும் மும்பை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகளுடன் இங்குள்ள அதிகாரிகள் ஆலோசனை நடத்தி அதன் பின்பே ஒப்புதல் அளித்திருக்கின்றனர்.

பொதுவாக இந்தியா முழுவதும் ரெயில்களில் நாள் வாடகைக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது, எனவே மெட்ரோ ரெயில்களில் ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு என்று கட்டணம் நிர்ணயிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதற்கான கட்டணம் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது, மெட்ரோ ரெயிலில் சினிமா படப்பிடிப்புக்கு ரூ.4 லட்சம் என்று வாடகை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் நெரிசல் மிகுந்த நேரங்களில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. காலை நேரத்திலும், நெரிசல் இல்லாத நேரங்களில் மட்டுமே மெட்ரோ ரெயிலில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அதிக நேரத்திற்கு மெட்ரோ ரெயிலை சினிமா படப்பிடிப்புக்காக வாடகைக்கு கேட்கும்போது, தனி ரெயிலையே ஒதுக்கிக்கொடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மணிரத்னம் சார் நோட் பண்ணிக்குங்க...

 

மனதை தேத்திக்கிட்டு அனுஷ்காவின் இந்த வீடியோவை பாருங்கள்!

மும்பை: பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஆஸ்கர் விருது வென்ற பாடகி அடீல் பாடிய ரோலிங் இன் தி டீப் பாடலை பாடி அதை வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியான பாம்பே வெல்வெட் படத்தில் அவர் ஜாஸ் பாடகியாக நடித்திருந்தார். இந்நிலையில் நிஜவாழ்க்கையிலும் அவர் பாடகியாக மாறியுள்ளார். படத்தில் பாடியுள்ளாரா என்று நினைக்க வேண்டாம்.

ஆஸ்கர் விருது வென்ற பாடகி அடீல் பாடிய ரோலிங் இன் தி டீப் பாடலை பாடி அதை வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் அனுஷ்கா.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

தங்கத்தை கண்டுபிடித்துவிட்டேன்! கொஞ்சமும் பயம் இன்றி சுற்றியுள்ளவர்களை பற்றி நினைக்காமல் மோசமாக பாடுவதை கட்டவிழ்த்துவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

 

சாந்தனு பாக்யராஜ் – கீர்த்தி திருமணம்: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

சென்னை: நடிகர் சாந்தனு- கீர்த்தி திருமணம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேரளா ஹவுசில் கோலாகலமாக நடைபெற்றது. நடிகர் விஜய், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Actor Shanthanu bhagyaraj – Keerthi marriage held today

திரைப்பட இயக்குனர்- நடிகர் பாக்கியராஜ்- பூர்ணிமா தம்பதியின் மகன் சாந்தனு. இவர் சக்கரைகட்டி, அம்மாவின் கைபேசி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் டி.வி. தொகுப்பாளினி கீர்த்திக்கும் 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நடன இயக்குனர் ஜெயந்தியின் மகள்தான் கீர்த்தி. இவர் கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Actor Shanthanu bhagyaraj – Keerthi marriage held today

திருமணத்தை முன்னிட்டு இரு வீட்டாரின் சங்கித் விழா சில தினங்களுக்கு முன்பு நடைப்பெற்றது.அதில் நடிகரும் சாந்தனுவுன் நண்பர்களுமான ஆர்யா,விஷ்ணு, விஷால்,ஷாம் மற்றும் நடிகை ஜனனி ஐயர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். டிவி தொகுப்பாளினி டிடியும் பங்கேற்றார்.

சாந்தனு- கீர்த்தி திருமணம் இன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேரளா ஹவுசில் நடைபெற்றது இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள், திரையுலக நண்பர்கள் பங்கேற்றனர்.

நடிகர் விஜய், இவ்விழாவிற்கு காலையிலேயே வருகை தந்து, தாலி கட்டும் வரை கூடவே இருந்து மணமக்களை ஆசீர்வதித்துவிட்டு சென்றார். மேலும், சரத்குமார், ராதிகா சரத்குமார், பிரபு, ராதாரவி, மணிரத்னம், சுஹாசினி, குஷ்பூ, விஷால், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், இயக்குனர்கள் தரணி, ஹரி, காமெடி நடிகர் சூரி, கார்த்தி, ஜோதிகா, ரேவதி, சுகன்யா, நகுல், சங்கர் கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், விக்ராந்த் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை ஆசீர்வதித்தனர்.

திருமணத்திற்கு வந்திருந்த அனைவரையும் இயக்குனர் பாக்யராஜின் சிஷ்யர்களான இயக்குனர்கள் பார்த்திபன்-பாண்டியராஜன் இருவரும் வாசலில் நின்று வரவேற்றனர்.

திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி நாளை (சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு திரையுலகத்தினர் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

லிங்குசாமிக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்!- 'ஜிகினா' ரவி நந்தா பெரியசாமி

இயக்குநர் லிங்குசாமிக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன் என்று படத்தின் இயக்குநர் ரவி நந்தா பெரியசாமி கூறினார்.

Vanna Jigina (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

தமிழகம் முழுவதும் 'ஜிகினா' படம் இன்று வெளியாகிறது. பெரிதும் எதிர்ப்பார்க்கப் பட்டு வரும் இந்தப் படத்தின் இயக்குநர் ரவி நந்தா பெரியசாமி படம் குறித்துக் கூறுகையில், "இந்தக் கதையைக் கேட்ட மாத்திரத்திலே படம் எடுக்கலாம் என உத்திரவாதம் அளித்ததோட , உடனடியாக படத்தை தொடங்கவும் செய்த என் நண்பரும் தயாரிப்பாளரும் ஆன திரைக்கடல் அவர்களுக்கு என் மனமார்ந்த்த நன்றி.

Jigina director thanked Lingusamy

கதையை விவாதிக்க ஆரம்பித்த உடனே கதாநாயகனாக எங்கள் மனதில் தோன்றிய முதல் பெயர் விஜய் வசந்த்தான். படம் பார்த்தவர்கள் எல்லோரும் விஜய் வசந்த்தை மிகவும் பாராட்டுவார்கள். புதுமுகம் சானியா தாரா மிகவும் துடிப்பானவர். அவருக்கு மிக சிறந்த எதிர் காலம் இருக்கிறது.

(ஜிகினா படங்கள்)

இந்தப் படத்தின் மிக முக்கிய அம்சம் என நான் கருதுவது 'கும்கி' அஷ்வின், சிங்கம் புலி, மற்றும் ரவி மரியா ஆகியோரின் காமெடி.

என் தொழில் நுட்ப சகாக்கள் ஒளிப்பதிவாளர் பாலாஜி ரங்கா, இசை அமைப்பாளர் ஜான் பீட்டர்ஸ், படத் தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா ஆகியோர் இந்தப்படத்தின் முதுகு எலும்பு போன்றவர்கள்.

(ஜிகினா டிரைலர்)

'ஜிகினா' படத்தை வெளியிட முன்வந்த எனது நண்பரும் இயக்குநருமான லிங்குசாமிக்கும், அவரது சகோதரரும் என் நண்பருமான போஸுக்கும் என் மனமார்ந்த நன்றி. ஒரு இயக்குனருக்கு வர்த்தக ரீதியான வெற்றி எவ்வளவு அவசியமோ அதே அளவுக்கு சமுதாயத்தின் மேல் உள்ள அக்கறையும் அவசியம். இந்த படத்தினை முதலில் பார்த்து கை தட்டிய லிங்குசாமி அவர்களே இந்த படத்தின் முதல் ரசிகர். அந்த வகையில் 'ஜிகினா' எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பது நிச்சயம்," என்றார் நம்பிக்கையுடன்.

 

ராதிகா 'ஆத்தே'... புள்ளபூச்சியெல்லாம் கருத்து சொல்லுதே!

சினிமா நடிகர்களில் இரண்டு வகை. ஒரு பிரிவினர் பெரிதாக பேச மாட்டார்கள். அவர்கள் படங்களில் கமர்ஷியலாக சொல்லியடிக்கும். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து விமர்சனங்களுக்கு ஆளாகிக் கொண்டே இருப்பார்கள்.

இன்னொரு பிரிவினர் ஓயாமல் பேசிக் கொண்டும், கருத்து சொல்லிக் கொண்டும் புரட்சி பேசிக் கொண்டும் திரிவார்கள். யாருக்கும் நயா பைசா பிரயோசனப்படமாட்டார்கள். ஒரு ஹிட் படம் கூடக் கொடுத்திருக்க மாட்டார்கள்.

Big mouth Radhika Apte irritates

ராதிகா ஆப்தே இந்த இரண்டாவது பிரிவில் வெகு விரைவில் சேரக் கூடிய வாயப்பு பிரகாசமாகத் தெரிகிறது.

தமிழில் இவர் நடித்தது மூன்றே மூன்று படங்கள். தோனி, அழகுராஜா, வெற்றிச்செல்வன்....மூன்றும் பெட்டிக்குள் சுருண்டு கொண்டன. அதன் பிறகு தெலுகு சினிமாக்காரர்கள் பற்றி இவர் ஏடாகூடமாக ஏதோ பேசி வைக்க, ஹைதராபாத் பக்கம் வந்தா தொலைச்சிப்புடுவோம் என தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் விடுதத மிரட்டலால் மும்பைக்குப் போனார். ஏடா கூடமான காட்சிகளில் நடித்தார். ட்ராமா ஒன்றிலும் கூட நடித்தார். எதுவும் பைசா பேராத சமாச்சாரங்கள்.

இந்த நிலையில் இவர் நடித்த குறும்படம் ஒன்றைப் பார்த்துவிட்டு ரஜினி படத்தின் நாயகியாக்கியிருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.

கபாலி நாயகியானதிலிருந்து நாளுக்கு நாள் கருத்து சொல்லவும் ஆரம்பித்துள்ளார்.

Big mouth Radhika Apte irritates

இப்போது அவர் கூறியுள்ள கருத்து:

"நான் 10 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். பெரிய நடிகர்கள் படங்கள், சிறு பட்ஜெட் படங்களில் எல்லாம் நடித்துவிட்டேன். நிறைய அனுபவங்கள் கிடைத்து இருக்கிறது. நடிகர்- நடிகைகளுக்கு வியாபார மதிப்பீடு முக்கியம். இவர்கள் நடித்தால் படங்கள் நன்றாக ஓடும்என்று பெயர் எடுக்கவேண்டும். அதற்கேற்ப கதை, மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்யவேண்டும். பல கோடி பணத்தை முதலீடு செய்து படங்களை எடுக்கிறார்கள். வியாபார ரீதியாக அவர்கள் லாபம் அடையவேண்டும்!"

-ஒருவேளை தனக்குத் தானே சொல்லிக் கொண்டாரோ!

 

நஸ்ரியாவுக்குக் கல்யாணமாகி அதுக்குள்ள ஒரு வருஷமாச்சு.. கேக் வெட்டி கணவருடன் கொண்டாட்டம்!

திருவனந்தபுரம்: நட்சத்திரத் தம்பதிகளான நஸ்ரியா - பஹத் பாசில் இன்று தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுகின்றனர்.

நேரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மலையாள நடிகை நஸ்ரியா தொடர்ந்து ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடிப் பேசவும், திருமணம் என்னும் நிக்காஹ் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களைக் கவர்ந்தார்.

Nazriya Nazim - Fahadh Faasil Star Couple Celebrating 1st Anniversary

பெங்களூர் டேஸ் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த மலையாள நடிகர் பஹத் பாசிலை கடந்த 2014 ஆகஸ்ட் 21ம் தேதியில் நஸ்ரியா திருமணம் செய்து கொண்டார்.

இருவருக்கும் திருமணம் முடிந்து சரியாக இன்றுடன் 1 வருடங்கள் ஆகின்றது, தங்களது முதலாவது திருமண நாளை நஸ்ரியா - பஹத் இருவரும் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.

மேலும் நஸ்ரியா தங்களது திருமண நாள் கொண்டாட்டங்களை தனது அதிகாரப்பூர்வமான பேஸ்புக் பக்கத்தில் சற்று நேரத்திற்கு முன்பாக பதிவிட்டு இருக்கிறார்.

இவர்களின் முதல் திருமண தினத்திற்கு ஏராளமான ரசிகர்கள் மற்றும் நட்சத்திரங்கள் தங்கள் வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

நஸ்ரியா நடித்தது குறைவான படங்களே என்றாலும் கூட மலையாள மற்றும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நஸ்ரியாவிற்கு நல்ல வரவேற்பு இருந்தது, எனவே திருமணத்திற்குப் பின் நஸ்ரியா நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொண்டனர்.

ரசிகர்களின் வேண்டுதல் விரைவில் பலிக்கப் போகிறது திருமணம் முடிந்த பின் சரியாக 1 வருடம் கழித்து மீண்டும் நஸ்ரியா நடிக்க வருகிறார், கணவர் பஹத் பாசிலுடன் இணைந்து மலையாளப் படமொன்றில் நஸ்ரியா நடிக்கவிருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்படியே தமிழுக்கும் கொஞ்சம் வந்துட்டுப் போங்க நஸ்ரியா...

 

சூர்யாவின் 24... படத்தில் வில்லனும் ஹீரோவும் ஒருவரே.. அப்படியென்றால்?

சென்னை: மாஸ் படத்திற்குப் பின் இயக்குநர் விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் 24, இந்தப் படத்தில் சூர்யாவின் ஜோடியாக சமந்தா மற்றும் நித்யா மேனன் இருவரும் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

விக்ரம்குமார் ஏற்கெனவே தெலுங்கில் எடுத்த மனம் படத்தில் நாகார்ஜூனா, அவரது தந்தை நாகேஸ்வரராவ் மற்றும் அவருடைய மகன் ஆகிய மூவரும் நடித்திருந்தார்கள்.

Surya's Upcoming Movie 24

அந்தப்படம் போலவே இந்தப்படத்தில் தாத்தா, தந்தை, மகன் ஆகிய மூன்றுவேடங்களில் சூர்யா நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. படத்தில் அவர் மூன்றுவேடங்களில் நடிப்பது உண்மை ஆனால் தாத்தா,அப்பா, மகன் என்ற வரிசையில் இல்லை.

மாறாக அண்ணன் தம்பி என இரண்டுவேடங்களிலும், அண்ணனின் மகனாகவும் ஆக மொத்தம் மூன்றுவேடங்களில் சூர்யா நடிக்கிறாராம்.

இம்மூவரில் ஒருவர் வில்லனாக நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. அப்படியானால் படத்தில் நாயகனும் அவர்தான் வில்லனும் அவர்தான் என்று சொல்கிறார்கள்.

அண்ணன் தம்பியாக வரும் சூர்யாவில் அண்ணன் சூர்யாவிற்கு நித்யா மேனனும், மகன் சூர்யாவிற்கு சமந்தாவும் நாயகியாக நடிக்கின்றனரா என்பது தெரியவில்லை.

வெளிவருவதற்குள் ஆந்திர தேசத்தில் சுமார் 20 கோடிக்கு படம் விலை போயிருப்பதால், ரசிகர்கள் மத்தியில் 24 படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் நிலவுகிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.