கதைக்கு பஞ்சமோ பஞ்சம்... ரீமேக்கில் 9 பழைய தமிழ்ப் படங்கள்!

Kollywood The Mood Remaking Hits 80

சென்னை: தமிழ் சினிமாவில் கதைக்கு ஏற்பட்டுள்ளது உங்க வீட்டுப் பஞ்சம் எங்க வீட்டுப் பஞ்சம் இல்லை.. மெகா பஞ்சம்!

எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு பழைய தமிழ்ப் படத்தை ரீமேக் பண்ண டிஸ்கஷன் ஓடிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

குறிப்பாக எண்பதுகளில் சூப்பர் ஹிட்டடித்த படங்களை, போட்டி போட்டுக் கொண்டு உரிமையை வாங்கி வைத்திருக்கிறார்கள் பிரபல இயக்குநர்களும் முன்னணி ஹீரோக்களும்.

ஏற்கெனவே படிக்காதவன், பில்லா, மலையூர் மம்பட்டியான் போன்ற படங்கள் ரீமேக்காகி வந்தன. இவற்றில் பில்லா மட்டும் பெரும் வெற்றி பெற்றது. மம்பட்டியான் ஓரளவுக்கு ஓடியது.

இப்போது தில்லுமுல்லு, மன்மத லீலை, சட்டம் ஒரு இருட்டறை, அக்னி நட்சத்திரம், சகலகலா வல்லன், ஆண் பாவம், புதியபாதை, அமைதிப்படை, இன்று போய் நாளை வா ஆகிய 9 படங்கள் மீண்டும் ரீமேக்காகவிருக்கின்றன.

மன்மத லீலை, சகலகலா வல்லன் படங்கள் கமல் நடித்தவை. தில்லுமுல்லு ரஜினியின் படம். சட்டம் ஒரு இருட்டறை விஜயகாந்த் நடிப்பில் வந்தது. அக்னி நட்சத்திரம் பிரபு, கார்த்திக்கும், ஆண்பாவம் படத்தில் பாண்டியராஜன், பாண்டியனும் இணைந்து நடித்து இருந்தனர். புதிய பாதையில் பார்த்திபனும், அமைதிப்படையில் சத்யராஜும் நடித்து இருந்தனர்.

இன்று போய் நாளை வா படத்தில் பாக்யராஜ் நடித்து பட்டையைக் கிளப்பிய படம். இவற்றில் 5 படங்களுக்கு இசை இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படங்களை இப்போது ரீமேக் செய்யும் முயற்சியில் இருப்பவர்கள் அனைவருமே முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள்.

புதிய கதையைத் தேடிக் கொண்டிருக்காமல், ஏற்கெனவே பிரபலமாகிவிட்ட பழைய படங்களை ரீமேக் செய்வது பாதுகாப்பானது என இவர்கள் நினைப்பதே ரீமேக்குக்கு காரணம். அதுமட்டுமல்ல, கடந்த காலங்களில் தமிழில் சக்கைப் போடுபோட்ட தமிழ்ப் படங்களை இந்தி இயக்குநர்கள் சத்தமில்லாமல் சுட்டு ப்ளாக் பஸ்டராக்குவதால், அந்த வேலையை நாமே செய்துவிடலாம் என்று இந்த ரீமேக் முயற்சியில் மும்முரம் காட்டி வருகிறார்கள்.

 

ரியல் எஸ்டேட் தொழிலில் நமீதா தீவிரம்

Namitha Advises Invest Real Estate   

சென்னை: எல்லோரும் நிலத்தில் முதலீடு செய்ய முயற்சி பண்ணுங்க. அப்போதுதான் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும், என்கிறார் நமீதா.

நடிகை நமீதா ரியல் எஸ்டேட் தொழிலில் தீவிரமாக இறங்கியுள்ளார். மும்பையில் சொந்தமாக கம்பெனி துவங்கி கட்டுமான தொழிலிலும் ஈடுபட்டுள்ளார். அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்று வருகிறார்.

சென்னையிலும் கூட கட்டுமானத் தொழிலில் ஈடுபட முயன்று வருகிறார்.

அவ்வப்போது ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்கள், துவக்க விழா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

கும்மிடிப்பூண்டியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று நடத்திய நிகழ்ச்சியொன்றில் நமீதா பங்கேற்று பேசுகையில், "சம்பாதிக்கும் பணத்தை லாபம் தரும் தொழில்களில் முதலீடு செய்வது அவசியம். இன்று தங்கத்திலும் நிலத்திலும் முதலீடு செய்வது தான் பாதுகாப்பானதாக உள்ளது.

தங்கம் விலை ஏறிக் கொண்டே இருக்கிறது. அதுபோல் நிலத்தின் மதிப்பும் உயர்கிறது. எனவே பணத்தை இவ்விரண்டிலும் முதலீடு செய்யுங்கள்," என்றார்.

 

வீணாகும் மனித உழைப்பு: 100 நாள் வேலைத்திட்டத்தில் அதிர வைக்கும் ஊழல்!

Roudhram Pazhagu Program Puthiya Th

சென்னை: விவசாயிகளுக்கு நன்மை செய்யவேண்டும் என்று தொடங்கப்பட்ட நூறு நாள் வேலை உறுதித் திட்டம் இன்றைக்கு விவசாயத்தையே அழித்து வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. விவசாயத்திற்கான கூலி ஆட்கள் கிடைக்காமல் à®'ருபக்கம் திண்டாடி வரும் நிலையில் நூறு நாள் வேலை உறுதித்திட்டத்தில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளை அம்பலப்படுத்தியது புதியதலைமுறை தொலைக்காட்சியில் à®'ளிபரப்பான ‘ரௌத்திரம் பழகு’ நிகழ்ச்சி.

எந்த à®'ரு அரசாங்கத்திட்டமும் ஊழல் இன்றி செயல்படுவதில்லை. அதற்கு நூறு நாள் வேலை உறுதித் திட்டமும் தப்பவில்லை. கிராமப்புற பாமர மக்கள் எல்லாம்வேலை வாய்ப்பின்றி நகர்புறங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்த காரணத்தால் அவர்களின் வாழ்வாதாரத்திற்காக 2005-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டமாக 2008-ஆம் ஆண்டு இந்த திட்டம் அடியெடுத்து வைத்தது.

இத்திட்டத்தின் அடிப்படையில் நூறு நாட்கள் வேலை செய்ய வேண்டும். இதில் ஆண், பெண் என இருபாலரும் அடங்குவர். அவர்களது கிராமத்தின் சுற்றுசூழலை செம்மைப் படுத்துவதே இந்த நூறு நாள் வேலை திட்டத்தின் சிறப்பம்சமாகும். இதன் அடிப்படையில் காட்டு வளங்களைப் பாதுகாத்தல், குளம், குட்டை, ஏரிகளை செப்பனிடுதல், சாலை பணிகளை சீர்திருத்துதல் மற்றும் சாலை இணைப்பு வசதியினை மேம்படுத்துதல், மரம் நடுதல், பழுதுபட்டுள்ள கால்வாய்களை சீர் செய்தல், களைகளை களைதல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.

18 வயது முதல் 60 வயதினர் வரை இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றலாம். தனி நபருக்கென மட்டுமல்லாமல், மொத்த குடும்ப உறுப்பினர் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் பணியாற்றலாம். அவர்களுக்கென தனித்தனியாக “வேலை அட்டை” வழங்கப்படுகிறது. தினசரி இவர்களது பணி நேரம் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே. வாரம் à®'ருமுறை பணியாளர்கள் வேலை செய்த நாட்களின் எண்ணிக்கை அடிப்படையில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப் பட்டு வந்தது. ஆனால், இத்திட்டத்தில், பணிகள் நடக்காமலே பணிகள் நடந்ததாகவும், தொழிலாளர்களின் பெயர்களை போலியாக தயார் செய்து, திட்டத்துக்கு à®'துக்கப்பட்ட தொகையை உள்ளாட்சி பிரதிநிதிகளும், பணியாளர்களும் சுருட்டிக் கொள்ளும் செயல்கள், பல பகுதிகளில் நடந்து கொண்டிருக்கின்றன.

தற்போது à®'ரு நபருக்கு 119 ரூபாய் கூலி வழங்கப்பட வேண்டும். ஆனால் வெறும் 80 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது என்று புகார் கூறியுள்ளனர் பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளிகள். கிராம பஞ்சாயத்து தலைவர் தொடங்கி கடைக்கோடி ஊழியர் வரை இந்த ஊழல் பணத்தில் பங்கெடுத்துக் கொள்கின்றனர் என்று தனது ஆதங்கத்தை வெளியிட்டார் ஏங்கல்ஸ் ராஜா.

காங்கிரஸ் அரசு விவசாயத்தை கார்ப்பரேட் ஆக்க முயற்சிக்கிறது. அதன் à®'ருபகுதியாகத்தான் விவசாயத்தில் அளவிற்கு அதிகமாக இவ்வளவு பேர் ஈடுபடாதீர்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதி அமைச்சர் சிதம்பரமும் கூறி வருவதாக ஏங்கல்ஸ் ராஜா குற்றம் சாட்டினார். விவசாயிகளை வாழ வைக்கிறோம் என்று தொடங்கப்படும் திட்டங்கள் எல்லாம் சரியான கண்காணிப்பு இல்லாத காரணத்தினால் அவரின் வாழ்க்கையை முடிக்கும் திட்டங்களாக மாறுகின்றன. இந்த திட்டம் விவசாயத்தை முற்றிலும் à®'ழிக்கும் திட்டம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் விவசாயத்தை முன்னிலைப்படுத்தி வேலைகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் இதில் மனித உழைப்பு வீணாக்கப்படுகிறது என்ற புகார் எழுந்துள்ளது. மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் விவசாயத்தை முன்னிறுத்தி பணிகள் வழங்கப்பட வேண்டும் என்று மாற்றுத் திட்டத்தை முன்வைத்துள்ளார். அது எந்த அளவிற்கு வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் என்று தெரியவில்லை.

நூறு நாட்கள் வேலை வழங்கப்படவேண்டும் என்பது அரசின் உத்தரவு ஆனால் 2010-2011ம் ஆண்டு 44 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டிருக்கிறது. 2011-2012 பிப்ரவரி வரை 38 நாட்கள் மட்டுமே வேலை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கிறது புள்ளிவிபரம் à®'ன்று. மக்களுக்கு கொடுப்பதற்கான பணிகள் இல்லை.

அரசின் திட்டங்கள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராக மாறிவரும் நிலையில் விவசாயத்திற்கு மேலும் அச்சுறுத்தல்கள் காத்திருக்கின்றன என்று எச்சரிக்கையோடு முடிந்தது அந்த நிகழ்ச்சி.

 

வேலை வாங்கித் தருவதாக மோசடி: சென்னையில் நடிகர் கைது!

ஹைதராபாத்: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக தெலுங்கு நடிகர் பவன்குமார் கைது செய்யப்பட்டார்.

அயனாவரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் புகாரின் பேரில், சென்னை காவல் துறையினர் நடிகர் பவன்குமாரை கைது செய்துள்ளனர். நடிகர் பவன்குமார் துபாயில் வேலை வாங்கித் தருவதாக கூறி, ரூ.5 லட்சம் மோசடி செய்ததாக மணிகண்டன் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

தமிழில் மூணு ரெண்டு ஏழு என்ற படத்திலும் தெலுங்கில் ஜிங்கா படத்திலும் நடித்து வருகிறார் பவன்குமார்.

“நானும், பவன்குமாரும் நண்பர்கள். வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக என்னிடம் ரூ.5 லட்சம் பணம் பவன்குமார் வாங்கினார். இதுவரை வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டாலும் தரவில்லை. தற்போது கொலை மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று மணிகண்டன் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ராதிகா, துணை கமிஷனர் ரவிச்சந்திரன், சப்- இன்ஸ்பெக்டர் ரவிவர்மா விசாரணை நடத்தி புதுமுக நடிகர் பவன்குமாரை இன்று கைது செய்தனர்.

 

புதுமுகங்கள் நடிக்கும் த்ரில்லர் படம் 'சௌந்தர்யா'!

Soundarya Nmew Thriller Is On The Way

புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி வரும் புதிய த்ரில்லர் படம் சௌந்தர்யா, விரைவில் ரசிகர்களை மிரட் வருகிறது.

ஏ.பி‌.சி‌. ட்‌ரீ‌ம்‌ஸ்‌ எண்‌டர்‌டெ‌ய்‌னர்‌ஸ்‌ தயா‌ரி‌க்‌கும்‌ பு‌தி‌ய படம்‌ 'செ‌ளந்‌தர்‌யா'‌. இந்‌தப்‌ படத்‌தி‌ன்‌ கதை‌ எழுதி‌ டை‌ரக்‌ஷன்‌ செ‌ய்‌து‌ உள்‌ளா‌ர்‌ சந்‌தி‌ரமோ‌ஹன்‌.

பு‌துமுகங்‌கள்‌ கோ‌வி‌ந்‌த்‌, கி‌ல்‌லர்‌ கா‌சி‌ம்‌, ரி‌த்‌தூ‌ஸன்‌, சா‌ரதி‌, சந்‌தோ‌ஷ்‌, வி‌னி‌த்‌ வி‌னு, சஞ்‌சுகொ‌ட்‌டே‌ரி‌ என்‌று பலர்‌ நடி‌க்‌க, இவர்‌களுடன்‌ மா‌றுபட்‌ட வே‌டத்‌தி‌ல்‌ சி‌ரி‌ப்‌பொ‌லி‌ எப்‌எம்‌எஸ்‌ நடரா‌ஜன்‌ நடி‌த்‌துள்‌ளா‌ர்‌.

ஆயு‌ர்‌வே‌த வை‌த்‌தி‌யசா‌லை‌யி‌ல்‌ மஜா‌ஜ்‌ வே‌லை‌ செ‌ய்‌யு‌ம்‌ அழகி‌ய இளம்‌ பெ‌ண்‌ செ‌ளந்‌தர்‌யா. அவள்‌ அழகி‌ல்‌ மயங்‌கும்‌ வி‌மல்‌, அவள்‌ தன்‌னி‌டம்‌ அப்‌படி‌ பழகுவா‌ள்‌ இப்‌படி‌ நடந்‌து கொ‌ண்‌டா‌ள்‌ என்‌று இல்‌லா‌த பொ‌ல்‌லா‌த செ‌ய்‌தி‌களை‌ நண்‌பர்‌களுடன்‌ பகி‌ர்‌ந்‌து கொ‌ள்‌ள, அந்‌த பொ‌ய்‌ செ‌ய்‌தி‌யை‌ நம்‌பு‌ம்‌ நா‌ன்‌கு இளை‌ஞர்‌கள்‌, செ‌ளந்‌தர்‌யா‌வி‌டம்‌ செ‌ன்‌று தங்‌களது ஆசை‌க்‌கும்‌ இணங்குமா‌று வலி‌யு‌றுத்துகி‌ன்‌றனர்.

அதற்‌கு அவள்‌ சம்‌மதி‌க்‌க மறுக்‌கி‌றா‌ள்‌. இதனா‌ல்‌ ஆத்‌தி‌ரம்‌ அடை‌யு‌ம்‌ அந்‌த நா‌ல்‌வரும்‌ அவளை‌ பா‌லி‌யல்‌ பலா‌த்‌கா‌ரம்‌ செ‌ய்‌கி‌ன்‌றனர்.

இதில் சௌந்‌தர்‌யா உயி‌ரிழக்க, பின்னர் ஆவியாக வந்‌து அவர்‌களை‌ எப்‌படி‌ பழி ‌வா‌ங்‌குகி‌றா‌ள்‌ என்‌பதை‌ பு‌தி‌ய ஸ்‌டை‌லி‌ல்‌ படமா‌க்‌கி‌ உள்‌ளே‌ன்‌ என்‌கி‌றா‌ர்‌,‌ இயக்‌குநர்‌ சந்‌தி‌மோ‌ஹன்‌.

இந்‌தப்‌ படத்‌தி‌ற்‌கு அஜ்‌மல்‌ அஜீ‌ஸ்‌ என்‌பவர்‌ இசை‌யமை‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர். ஆனை‌மலை‌, ஆனை‌க்‌கட்‌டி‌, தளி‌க்‌குள்‌ளம்‌ பீ‌ச்‌ போ‌ன்‌ற இடங்‌களி‌ல்‌ படமா‌க்‌கி‌யுள்ளாராம் இயக்குநர்.

செப்டம்பரில் இந்தப் படம் வெளியாகிறது.

 

'நான் முதல்வரானால் இவர்களை விதான்சவுதா கேட் பக்கம் கூட சேர்க்க மாட்டேன்' - அம்பரீஷ்

Amabareesh Slammed Mlas Failing Ser

பெங்களூர்: நான் மட்டும் முதல்வரானால், பொதுமக்களுக்கு சேவை செய்யத் தவறும் எம்எல்ஏக்களை விதான் சவுதா கேட் பக்கம் கூட சேர்க்க மாட்டேன் என்று நடிகர் அம்பரீஷ் கூறினார்.

கர்நாடக மாநிலம் ஹலகூரில் காங்கிரஸ் கமிட்டிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. இதே நிகழ்ச்சியில், கர்நாடக மாநில காங்கிரஸ் துணை தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள நடிகர் அம்பரீஷுக்கு பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.

விழாவில் அம்பரீஷ் பேசுகையில், "தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட என்னை வெற்றி பெறச் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து உங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தீர்கள். இப்போதும் உங்களுக்கு சேவை செய்வது என் கடமையாகும்.

நான் பல்வேறு முதல்வர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களில் சிலர் பொதுமக்களுக்கு சேவை செய்யாமல் காலம் கடத்தி வருகிறார்கள். நான் முதல்வரானால் இதுபோன்ற சட்டமன்ற உறுப்பினர்களை விதான் சவுதாவின் படிக்கட்டு அருகே மட்டும் அல்ல...கேட் அருகே கூட சேர்த்துக் கொள்ள மாட்டேன்.

எனவே, சட்டமன்ற தேர்தலில் பொதுமக்களுக்கும், இந்த சமூகத்துக்கும் சேவை செய்பவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களை விதான் சவுதாவுக்கு அனுப்பி வையுங்கள். எனக்கு பெங்களூரில் 60-வது பிறந்தநாள் விழா நடத்தப்பட்டது.

அதை இங்கு எனது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களாகிய உங்கள் மத்தியில் மீண்டும் கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது," என்றார்.

 

'ஒருவர் மீது இருவர் சாய்ந்து...!'

இயக்குநர் பாலசேகரனை நினைவிருக்கிறதா... லவ் டுடே, துள்ளித் திரிந்த காலம் என குறிப்பிடத்தக்க படங்களைக் கொடுத்தவர். மாதவன் - பாவனா நடிக்க ஆர்யா என்ற படம் கொடுத்தவர். படம் சரியாகப் போகாவிட்டாலும், அதில் இடம்பெற்ற வடிவேலு காமெடி இன்றைக்கும் பெரிய அளவில் பேசப்படுகிறது.

அதன் பிறகு தெலுங்குப் பட உலகுக்குப் போய் இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்தார். நாகார்ஜூனா, பூமிகா என பெரிய நட்சத்திரங்களை இயக்கினார். இப்போது புதிய படம் தொடங்கியுள்ளார். தலைப்பு: ஒருவர் மீது இருவர் சாய்ந்து...!

பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் - ஸ்வாதியே இதிலும் ஜோடியாக நடிக்கிறார்கள். கே பாக்யராஜ், விசு போன்ற பெருந்தலைகளும் உண்டு. சிங்கம்புலி காமெடியை கவனிக்கிறார்.

பாலசேகரனின் முதல் படமான லவ்டுடேக்கு இசை தந்த அதே ஷிவாதான் இந்தப் படத்துக்கும் இசை. விஜயகோபால் ஒளிப்பதிவு செய்ய, விடி விஜயன் எடிட்டிங்கை கவனிக்கிறார்.

இந்தப் படம் இதுவரை வந்த படங்களிலேயே வித்தியாசமான காதல் படமாக இருக்கும் எனும் பாலசேகரன், சத்தமில்லாமல் 50 சதவீத படப்பிடிப்பையும் முடித்துவிட்டாராம்!

 

பிறந்த நாளன்று இரு குழந்தைகளைத் தத்தெடுத்த ஹன்ஸிகா!

Hansika Adopts Two Kids On Her B Da

மும்பை: தனது பிறந்த நாளை அர்த்தமுள்ளதாகக் கொண்டாடும் வகையில் குடிசைப் பகுதியிலிருந்து இரு குழந்தைகளைத் தத்தெடுத்துள்ளார் முன்னணி நடிகை ஹன்ஸிகா.

நடிகை ஹன்ஸிகாவுக்கு இன்று பிறந்த நாள். பொதுவாக பிறந்த நாளன்று பார்ட்டி, ஆட்டம் பாட்டம் என தூள் கிளப்புவார்கள் நடிகர் நடிகைகள்.

ஆனால் ஹன்ஸிகா ரொம்பவே வித்தியாசமானவர். கடந்த முறை தனது பிறந்த நாளன்று இரு ஏழைக் குழந்தைகளைத் தத்தெடுத்தார்.

இந்த பிறந்த நாளிலும் ஏதாவது நல்ல விஷயத்தைச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் குடிசைப் பகுதியைச் சேர்ந்த மேலும் இரு குழந்தைகளைத் தத்தெடுத்துள்ளார். இவர்களின் படிப்பு உள்ளிட்ட செலவுகளை ஹன்ஸிகாதான் செய்யப் போகிறாராம்.

மாலையில் தனது தத்துக் குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப் போகிறாராம்.

அழகு என்பது வெறும் புறத் தோற்றத்தில் மட்டும் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் ஹன்ஸி.

பிறந்தநாள் வாழ்த்துகள்!

 

ஆபாச படங்களில் நடித்ததை நினைத்து வெட்கப்படவில்லை: சன்னி லியோன்

Sunny Leone Is Not Ashamed Her Past   

மும்பை: தனது கடந்த காலத்தை நினைத்து வெட்கப்படவில்லை என்று ஆபாச பட நடிகையாக இருந்து பாலிவுட்டில் நுழைந்திருக்கும் சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.

ஆபாச பட நடிகையாக இருந்தவர் கனடாவில் வாழும் இந்தியரான சன்னி லியோன். ஏராளமான XXX கிரேட் புளூ பிலிம்களில் நடித்தவர்.

ஜிஸ்ம் 2 என்ற இந்தி படம் மூலம் பாலிவுட்டுக்கு வந்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்த படத்தைப் பார்த்தவர்கள் சன்னி லியோன் ஒரு உணர்ச்சியே இல்லாத மரக்கட்டை என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாலிவுட்டில் இருப்பது பற்றி சன்னி லியோன் கூறுகையில்,

இந்திய மக்கள் என் மீது காட்டும் அன்பைப் பார்த்து ஆச்சியப்படுகிறேன். அடுத்த 2 ஆண்டுகள் இங்கு தான் படத்தில் நடிக்கவிருக்கிறேன். என்னை பாலிவுட்டில் அறிமுகப்படுத்திய பூஜா பட்டிற்கு நன்றி. என்னை பலரும் ஆபாச பட நடிகை என்று சொல்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இது எனக்கு புதிய உலகம். இங்கு நான் எப்படி நடந்து கொள்கிறேன் என்பதை வைத்து தான் மக்கள் என்னைப் பற்றி கருத்து தெரிவிக்க வேண்டும். நான் எனது கடந்த காலத்தை நினைத்து வெட்கப்படவில்லை என்றார்.

அவர் அடுத்ததாக தி டர்ட்டி பிக்சரை தயாரித்த ஏக்தா கபூரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பில்லா 2... சக்ரி டோலெட்டி சொன்ன நன்றியும், கேட்ட மன்னிப்பும்!

Chakri Apologises Disappointment Billa 2

சென்னை: பில்லா 2 படம் வெளியாகி 25 நாட்கள் தாண்டிவிட்டன. பெரிய எதிர்ப்பார்ப்புக்கிடையில், இதுவரை எந்த அஜீத் படமும் வெளியாகாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான அரங்குகளில் வெளியானது இந்தப் படம்.

ஆனால் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாத ஒரு படமாக அமைந்துவிட்டது பில்லா 2.

ஆக்ஷன் படம் என்ற வகையில், ஒரு அதிரடி சண்டைப் படமாக, முழுக்க முழுக்க 'ரா'வாகக் கொடுத்திருந்தார் சக்ரி. ஆனால் காட்சிகளில் சுவாரஸ்யமும் புத்திசாலித்தனமான திருப்பங்களும் இல்லை என விமர்சனங்கள் வந்தன.

அஜீத் தன் வேலையை சரியாக செய்தார். ஆனால் இயக்குநர் கோட்டைவிட்டுவிட்டார் என்றும் சில விமர்சகர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர்.

இதைத் தொடர்ந்து படத்துக்கு கிடைத்த வரவேற்பு குறித்து தனது கருத்தை எழுதியுள்ளார் இயக்குநர் சக்ரி டோலெட்டி.

அதில், "'பில்லா 2' படத்தை விரும்பிய அனைவருக்கும் நன்றி. அதேநேரம் இந்தப் படத்தைப் பார்த்து ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் மன்னிக்கவும். அவர்களுக்கு என் வருத்தத்தைத் தெரிவித்து கொள்கிறேன். குறிப்பாக தல ரசிகர்களுக்கு," என்று குறிப்பிட்டுள்ளார்!

 

செப்டம்பர் 1 முதல் இளையராஜாவின் நீதானே என் பொன்வசந்தம் இசை!

Ilayaraaja S Neethane En Ponvasanth   

சென்னை: இசைஞானி இளையராஜாவின் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடக்கிறது.

தமிழ் சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் இசை, நீதானே என் பொன்வசந்தம் படத்தினுடையதுதான்.

இளையராஜா இந்தப் படத்துக்காக லண்டனில் ஒலிப்பதிவு செய்தார். மொத்தம் 8 பாடல்கள். ஒரு இடைவெளிக்குப் பிறகு ராஜா தனக்கே உரிய பாணியில் இந்தப் படத்துக்கு இசை தந்துள்ளார்.

படத்தின் பாடல்கள் குறித்து தொடர்ந்து வெளியான முன்னோட்ட வீடியோக்கள் எதிர்ப்பார்ப்புகளை எகிற வைத்துள்ளன. குறிப்பாக யுவன் சங்கர் ராஜா பாடிய சாய்ந்து சாய்ந்து பாடல் இப்போதே அனைவர் மனதிலும் பற்றிக் கொண்டுள்ளது.

சோனி நிறுவனம் இந்தப் படத்தின் இசை உரிமையை பெரும் விலைக்கு வாங்கியுள்ளது.

வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி, சென்னையில் மிகப் பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழா நடக்கவிருக்கிறது. படத்தின் பாடல்களை மேடையில் நேரடியாக இசைக்கப் போகிறார் இசைஞானியும் அவரது குழுவினரும்.

இந்தத் தகவலை இயக்குநர் கவுதம் மேனன் அறிவித்துள்ளார்.

இசை அபிமானிகளின் மனதைக் குளிர வைத்துள்ள செய்தி இது!

 

கவர்ச்சிப் புயலாக பாலிவுட்டில் நுழையும் தமன்னா!

Tamanna Pairs Up With Ajay Devgan   

தமிழ் சினிமாவிலிருந்து 'மர்மமான' முறையில் வெளியேறிவிட்ட தமன்னா, மீண்டும் கோடம்பாக்கம் திரும்ப மாட்டார் போலிருக்கிறது.

தெலுங்கில் மகா பிஸியாக இருந்த அவர்... இப்போது இந்திப் பட உலகில் அழுத்தமாகக் கால் பதிக்கிறார்.

சாஜித் கானின் ஹிம்மத்வாலா படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடி தமன்னாதான்.

அதுமட்டுமல்ல, இதுவரை காட்டாத அளவுக்கு கவர்ச்சி விருந்தே வைத்திருக்கிறாராரம் அந்த இந்திப் படத்தில். சமீபத்தில் வெளியான படத்தின் போஸ்டர்களில் ஸ்லிம் ப்ளஸ் கவர்ச்சியில் அம்சமாகக் காட்சியளிக்கிறார் தமன்னா.

இந்தப் போஸ்டர்கள் வெளியான அன்றே, தமன்னாவுக்கு இந்தியில் எக்கச்சக்க ரசிகர்கள் சேர்ந்துவிட்டார்களாம். அவரை நேரிலும் சந்தித்து, தங்களை தமன்னாவின் ரசிகர்கள் என்று சொல்லிக் கொண்டார்களாம்.

பாலிவுட்டில் ரசிகர் மன்றம் ஆரம்பிச்சிடுவாங்களோ!

 

நடிகை ஸ்ரீவித்யாவின் சொத்து விவகாரம்: கேரள அமைச்சர் மீது சகோதரர் புகார்

Actress Srividya S Brother Complaints To Chandy

திருவனந்தபுரம்: உயிலில் எழுதி வைத்தப்படி தங்கள் குடும்பத்துக்கு சேர வேண்டிய சொத்துகளை தர மறுக்கும் அமைச்சர் கணேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேரள முதல்வர் உம்மன் சாண்டியிடம் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் சகோதரர் சங்கரராமன் புகார் அளித்தார்.

பிரபல நடிகை ஸ்ரீவித்யா புற்றுநோய் காரணமாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2006ம் ஆண்டு இறந்தார். அவருக்கு சென்னை, திருவனந்தபுரத்தில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. அவர் இறப்பதற்கு முன்பாக உயில் எழுதியுள்ளார்.

அதில் தனது சொத்துகள் சிலவற்றை சகோதரர் சங்கர ராமன் மற்றும் குடும்பத்தினர் பெயரில் எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர தனது பெயரில் அறக்கட்டளை தொடங்கி இசையில் சிறந்து விளங்குபவர்களுக்கு பரிசு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு தனது சொத்துக்கள் மற்றும் அறக்கட்டளையை நிர்வகிக்கும் உரிமையை மலையாள நடிகரும், தற்போதைய கேரள அமைச்சருமான கணேஷ்குமாருக்கு அளி்ப்பதாகவும் உயிலில் ஸ்ரீவித்யா கூறியிருந்தார்.

இதன்படி ஸ்ரீவித்யாவின் சொத்துக்களை அமைச்சர் கணேஷ்குமார் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் உள்ள ஸ்ரீவித்யாவின் சகோதரர் சங்கரராமனும், அவருடைய குடும்பத்தினரும் கேரள முதல்வர் உம்மன் சாண்டியை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் சங்கர ராமன் கூறியிருப்பதாவது,

எனது சகோதரி ஸ்ரீவித்யா இறப்பதற்கு முன் எழுதி வைத்துள்ள உயிலின்படி எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் கிடைக்க வேண்டிய சொத்துக்களை அமைச்சர் கணேஷ்குமார் தர மறுக்கிறார். நாட்டியத்தில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்க அறக்கட்டளை ஏற்படுத்த ஸ்ரீவித்யா உயிலில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஸ்ரீவித்யா இறந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் அறக்கட்டளையை அமைக்க அமைச்சர் கணேஷ்குமார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் எனது இன்னொரு சகோதரரின் மகளுக்கு ரூ.10 லட்சம் தரும்படியும் உயிலில் கூறப்பட்டுள்ளது. இதுவரை அந்த பணத்தையும் அவர் தரவில்லை. எனவே உயிலில் குறிப்பிட்டுள்ளபடி எங்களுக்கு சேர வேண்டிய சொத்துகளை தர மறுக்கும் அமைச்சர் கணேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

அந்த மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர் உம்மன் சாண்டி இது தொடர்பாக ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

 

சினிமா வாய்ப்புகளை மறுக்கும் டிவி நடிகை ஹர்ஷா

Harsha Kadambari Serial

என் பெயர் மீனாட்சி தொடரில் அறிமுகமான ஹர்ஷா, ஜெயா டிவியில் காதம்பரி, விஜய் டிவியில் 7சி மலையாளத்தில் தொடர்கள் என பிஸியாக இருக்கிறார். சினிமாவில் நடிக்க விருப்பமில்லையாம். சின்னத்திரையிலேயே நல்ல பெயரும், புகழும் கிடைத்து வருவதால் சினிமா வாய்ப்புகளை வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம். பள்ளிப் பருவத்தில் இருந்து சீரியலில் நடித்து வரும் ஹர்ஷா தனது சின்னத்திரை பயணத்தை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்.

என் அப்பா ஹரிகிருஷ்ணன் நாயர், அம்மா ஹேமா, எனக்கு மாலினி,வினிதா என இரண்டு அக்காக்கள் இருக்கிறார்கள். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. நான் தான் வீட்டில் கடைக்குட்டி. நான் பள்ளியில் படிக்கும் பொழுதிலிருந்தே மலையாள தொடர்களில் நடித்து வருகிறேன். மலையாள தொடரில் என்னை பார்த்துவிட்டு தான் தமிழில் நடிக்க கூப்பிட்டார்கள்.

விஜய் டிவிய்ல à®'ளிபரப்பான "என்பெயர் மீனாட்சி' தொடர்தான் நான் தமிழில் நடித்த முதல் தொடர். இப்பொழுது காதம்பரி தொடரிலும் விஜய் டிவியில் à®'ளிபரப்பாகி வரும் 7சி தொடரிலும், மலையாளத்தில் ஆசியாநெட் டிவியில் à®'ளிபரப்பாகும் மிகப் பிரபலமான தொடரான தேவிமாகாத்மியம் தொடரிலும் நடித்து வருகிறேன்.

காதம்பரியில் முதலில் மிதுனா தான் நடித்துக் கொண்டிருந்தார்கள். ஏனோ அவர் பாதியில் விலகிவிட்டார். அதனால் தற்போது நான் நடித்து வருகிறேன். கதாம்பரி 100 எபிசோட்களை கடந்து அருமையாக பயணத்திக் கொண்டிருக்கிறாள். முதன்முறையாக இந்த தொடரின் முலம் காதம்பரியாகவும் சரோஜினியாகவும் இரட்டை வேடத்தில் நடிக்கிறேன். 18ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதை, இருந்தாலும் நிகழ்காலம், எதிர்காலமும் இதில் இருக்கும், சமூக சிந்தனைகள் இருக்கும், மதக் கோட்பாடு பற்றியும் இருக்கும். படப்பிடிப்பின்போது எல்லாரும் எனக்கு தமிழ் கற்றுத் தருகிறார்கள், ரொம்ப உதவியாக இருக்கிறார்கள். அடுத்த தமிழ் தொடரில் நடிக்கும் பொழுது என் கேரக்டருக்கு நானே "டப்பிங்' பேச வேண்டும் என்று ஆசைபடுகிறேன். இப்போதான் தமிழில் ரெண்டாவது தொடர் நடிக்கிறேன். திருமணத்திற்கு இன்னும் நேரம் இருக்கிறது. அதைப்பற்றி இப்போது யோசிக்கவில்லை

சினிமாவில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழிலும் பெரியத்திரையில் நிறைய வாய்ப்புகள் வருகிறது ஆனால் சின்னத்திரையே போதும் என்று நினைக்கிறேன் என்று கூறிவிட்டு சூட்டிங்கிற்கு கிளம்ப தயாரானார் ஹர்ஷா.