சென்னையில் டிஷ்யூம், டிஷ்யூம் போட்ட அஜீத் குமார்

Ajith Action Mood

சென்னை: அஜீத் குமார் நடித்து வரும் விஷ்ணுவர்த்தன் படத்தின் சண்டைக் காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது.

அஜீத் குமார் விஷ்ணுவர்தனின் பெயர் வைக்கப்படாத படத்தில் நடித்து வருகிறார். அதில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டுள்ளது. சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டபோது ஏற்பட்ட விபத்தில் அஜீத் குமாரின் காலில் பலமாக அடிபட்டது. இதையடுத்து அவருக்கு முதுகுத் தண்டில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தினர். ஆனால் அவரோ தான் ஒப்பந்தமாகியுள்ள படங்களை முடித்த பிறகு அறுவை சிகிச்சை செய்யலாம் என்று கூறிவிட்டார்.

இந்நிலையில் அப்படத்திற்கான சண்டை காட்சிகள் சென்னையில் நேற்றும், இன்றும் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு தல என்று பெயர் வைக்கலாமா என்று கேட்டதற்கு அஜீத் குமார் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

 

யு பெற்றது கண்ணா லட்டு தின்ன ஆசையா

Klta Gets Clean U

ராம நாராயணன் இணைந்து சந்தானம் தயாரித்து நடித்துள்ள கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துக்கு சென்சார் குழு யு சான்று அளித்துள்ளது.

இந்தப் படத்தில் டாக்டர் சீனிவாசன் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார்.

மணிகண்டன் இயக்கும் இந்தப் படத்தில் விசாகா நாயகியாக நடித்துள்ளார்.

வரும் டிசம்பர் 21-ம் தேதி வெளியாகவிருந்த இந்தப் படம் இப்போது ஜனவரி 25-க்கு தள்ளிப் போய்விட்டது.

இந்த நிலையில் படத்தை இன்று தணிக்கைக் குழுவினர் பார்வையிட்டனர். எந்தக் கட்டும் இல்லாமல் யு சான்றளித்தனர்.

கண்ணா லட்டு தின்ன ஆசையாவுக்கு தமன் இசையமைத்துள்ளார். ராம நாராயணனின் ஸ்ரீதேனான்டாள் பிலிம்ஸ் படத்தை வெளியிடுகிறது.

 

ஷாருக்கானுக்கு சவால் விட்ட கத்ரீனா கைப்

Katrina Kaif Challenges Shahrukh   

மும்பை: பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் ஷாருக்கானுக்கு சவால் விட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் சேர்ந்து கத்ரீனா கைப் நடித்த ஜப் தக் ஹை ஜான் படம் வெற்றி பெற்றது. இந்நிலையில் பிக் ஸ்டார் என்டர்டெயின்மென்ட் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த ஜோடிக்கான விருது ஷாருக், கத்ரீனாவுக்கு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் ஷாருக் கத்ரீனாவிடம் இந்த விருது கிடைத்ததற்கு தனது டான்ஸ் திறமை தான் காரணம் என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்ட கத்ரீனா அப்படியா சொல்லவே இல்லை, வேண்டும் என்றால் நாம் இருவரும் டான்ஸ் ஆடுவோம். அப்போது யார் நன்றாக ஆடுகிறார் என்பதைப் பார்க்கலாம் என்று விளையாட்டாக தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட ஷாருக் சிரிக்க பதிலுக்கு கத்ரீனா சிரிக்க சவால் காமெடியாகிவிட்டது.

வரும் ஜனவரி மாதம் துபாயில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் இவர்கள் இருவரும் ஜோடியாக டான்ஸ் ஆடவிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிகழ்ச்சியில் ஜப் தக் ஹை ஜான் படத்தில் வரும் இஷ்க் ஷாவா என்ற பாட்டுக்கும் ஆடவிருக்கிறார்கள்.

சல்மானின் முன்னாள் காதலியான கத்ரீனா தற்போது ஷாருக்கின் நெருங்கிய தோழியாகிவிட்டார்.

 

நதிகள் நனைவதில்லை நாயகியானார் பார்வதி ஓமனக் குட்டன்!

Parvathy Gets Her Second Movie After Billa 2 Disaster

பில்லா 2-ல் அஜீத்தின் அக்கா மகளாக கொஞ்சமே கொஞ்ச நேரம் தலைகாட்டி, பின்ன பரிதாபமாக செத்துப் போகும் பார்வதி ஓமனக்குட்டனுக்கு இப்போது மறுஜென்மம் கிடைத்துள்ளது.

பில்லாவுக்குப் பிறகு அம்மணியின் சாப்டர் க்ளோஸ் என்றுதான் பலரும் நினைத்திருந்தனர். ஆனால் இப்போது நதிகள் நனைவதில்லை என்ற படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

காமராசு, அய்யா வழி போன்ற படங்களை இயக்கிய நாஞ்சில் பிசி அன்பழகன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இதில் நாயகனாக பிரணவ் மற்றும் கஞ்சா கருப்பு, ‘சொல்லுங்கண்ணே சொல்லுங்க இமான்", மதுரை முத்து, டி.பி. கஜேந்திரன், பானுப்பிரியா, பாலா சிங் போன்றோரும் நடிக்கின்றனர். சௌந்தர்யன் இசையமைக்கிறார்.

கதை பிடித்ததால் இப்படத்தில் நடிக்க சம்மதித்ததாக பார்வதி ஓமனகுட்டன் தெரிவித்தார். படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது.

 

சூப்பர் ஸ்டாருக்குப் போட்டியாக பவர் ஸ்டார்?!!

Super Star Vs Power Star

சென்னை: காமெடியில் கலக்கும் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் தனக்கு தானே வைத்துக் கொண்ட பெயருக்கும் ஒரு பவர் இருக்கத் தான் செய்கிறது.

கோலிவுட்டில் உள்ள எத்தனையோ ஹீரோக்கள், காமெடியன்களுக்கு ரசிகர்கள் பல்வேறு பட்டங்களை அளித்துள்ளனர். இருப்பினும் அவரவர் பெயரைச் சொல்லி தான் அழைக்கின்றனர். என்ன தான் நாம் கமலை உலக நாயகன் என்றும், அஜீத்தை தல என்றும், விஜயை இளைய தளபதி என்றும் கூறினாலும் பேச்சு வாக்கிலும் சரி எழுத்திலும் சரி அவர்களின் பெயரைத் தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்.

ஆனால் ரஜினிகாந்தை மட்டும் பெரும்பாலும் சூப்பர் ஸ்டார் என்றே அழைக்கிறோம். இப்பொழுது ரஜினிக்கு போட்டியாக ஒருவர் வந்துள்ளார். பயந்துடாதீங்க முழுதாகப் படியுங்கள். ஸ்ரீனிவாசன் என்ற அந்த நடிகரின் பெயரைக் கூறினால் யாருங்க அவர் என்று கேட்கும் மக்கள் பவர் ஸ்டார் என்று கூறினால் அப்படி தெளிவாகச் சொன்னால் தானே தெரியும் என்கின்றனர்.

தனக்குத் தானே பவர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்துக் கொண்டார் அவர். இந்நிலையில் ரசிகர்கள் அவரது நிஜப்பெயரை பயன்படுத்துவதே இல்லை. மாறாக பவர் ஸ்டார் என்றே அழைக்கின்றனர். ஏன் பலருக்கு அவரது நிஜப்பெயரே தெரியவில்லை. இந்த ஒரு விஷயத்தில் தான் அவர் ரஜினிக்கு போட்டியாக வந்துள்ளார் என்றோம்.

 

செக்ஸ் டார்ச்சர் கொடுத்த இயக்குநரை பளார் விட்ட சார்மி!

Sex Torture Charmi Slapped Director   

புதுப் படத்தில் வாய்ப்பு வேண்டுமானால் ஆசைக்கு இணங்குமாறு டார்ச்சர் கொடுத்த இயக்குநரின் கன்னத்தில் பளார் விட்டு, ஆந்திர திரையுலகை அதிர வைத்துள்ளார் நடிகை சார்மி.

தமிழில் சிம்பு ஜோடியாக அறிமுகமாகி, படவாய்ப்புகள் இல்லாததால் தெலுங்குக்குப் போன சார்மி, அங்கே முன்னணி நாயகியானார்.

நாகார்ஜூனா, பாலகிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர், சித்தார்த் ரவி தேஜா போன்ற பெரிய நடிகர்களுடன் ஏராளமான வெற்றிப் படங்களையும் தந்தார். தமிழில் அவ்வப்போது ‘ஆஹா எத்தனை அழகு', ‘லாடம்' என சில படங்களில் நடித்தார்.

கவர்ச்சியின் எல்லை வரைப் போய்விட்டவர் சார்மி. இனி அவரிடம் காட்ட ஒன்றுமில்லை என்று தெலுங்குப் பட இயக்குநர்கள் நினைத்துவிட்டார்களோ என்னவோ... வாய்ப்பு தராமல் விட்டுவிட்டார்கள்.

செம கடுப்பான சார்மி, தனக்கு தெரிந்த இயக்குநர்களுக்கு போன் போட்டு வாய்ப்பு கேட்க ஆரம்பித்தார்.

அப்படித்தான் பிரபல தெலுங்கு இயக்குனர் ஹரீஷ் சங்கர் தனது படத்தில் வாய்ப்பு தருவதாகக் கூறவே, அவரது அலுவலகத்துக்கு கதை கேட்கச் சென்றுள்ளார் சார்மி்.

அங்கு தனி அறையில் மெல்ல கதை சொல்ல ஆரம்பித்த இயக்குநர், பின்னர் ஏடாகூட செயலில் இறங்கினாராம். சார்மி எதிர்ப்பு காட்டவே, படுக்கையைப் பகிர்ந்து கொள்ள சம்மதித்தால் வாய்ப்பு தருவேன் என்று கூறினாராம்.

இதனால் அதிர்ந்து போன சார்மி, இயக்குநர் ஹரீஷ் சங்கர் கன்னத்தில் ஒரு அறைவிட்டுவிட்டு கோபமாக வெளியேறினார்.

இந்த சமாச்சாரத்தை சார்மியே தனக்கு வேண்டிய நிருபர்களை போனில் அழைத்து சொல்ல, விஷயம் காட்டுத் தீ போல பரவிவிட்டது ஆந்திர திரையுலகில்.

 

இசைக் கச்சேரிக்கு இனி மயிலாப்பூர் செல்ல வேண்டியதில்லை... உங்கள் ஊருக்கே கலைஞர்கள் வருகிறார்கள்!

Chennai Sangeetha Yathirai

சென்னை: இது மார்கழி மாதம். சென்னையின் சபாக்கள் செம பிஸியாக சங்கீத நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. அவற்றை ரசிக்கும் பாக்கியம் சென்னைக்குள் வசிப்பவர்களுக்கு மட்டுமே பெரும்பாலும் சாத்தியமாகிறது.

சென்னைக்கு வெளியே உள்ளவர்களுக்கு? ரொம்ப கஷ்டம். அந்த மாலை நேர நெரிசலில் வாகன வெள்ளத்தில் நீந்தி வருவது அத்தனை கஷ்டம்.

இந்தக் குறையைப் போக்கும் வகையில், இசை ரசிகர்களுக்கு விருப்பமான இசைக் கலைஞர்களை அழைத்து புறநகர்ப் பகுதிகளில் கச்சேரிகளை நடத்துகிறது ஐபால் ஈவன்ட்ஸ் நிறுவனம்.

சென்னை சங்கீத யாத்திரை என்ற தலைப்பில் நடக்கும் இந்த நிகழ்ச்சிகளில் சாருலதா மணி, ராஜேஷ்க்ஷ் வைத்யா, நித்யா மகாதேவன், கத்ரி கோபால்நாத், கடம் கார்த்திக், சைந்தவி, சுசித்ரா சுப்பிரமணியன் போன்ற பிரபல இசைக்கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

எந்தெந்தப் பகுதிகளில்..?

தாம்பரம், நங்கநல்லூர், வளசரவாக்கம் மற்றும் அம்பத்தூர் ஆகிய நான்கு வெவ்வேறு இடங்களில் டிசம்பர் 19, 2012 முதல் டிசம்பர் 23, 2012 வரை சங்கீத யாத்திரை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. குளிர்சாதன அரங்குகளில் நடைபெற உள்ள இந்த புகழ்பெற்ற கலைஞர்களின் இசைக் கச்சேரிகளை இசை ஆர்வலர்கள் கண்டும் கேட்டும் மகிழலாம்.

தாம்பரத்தில் நேஷனல் தியேட்டர் எதிரில் அமைந்துள்ள டிஜிபி கல்யாண மண்டபத்தில் இந்த இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. வளசரவாக்கத்தில் கல்யாணி மண்டபத்திலும், அம்பத்தூரில் மகாலட்சுமி கல்யாண மண்டபத்திலும், நங்கநல்லூரில் ஹரிஹரன் ஹாலிலும் இந்த இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

இந்த சங்கீத யாத்திரை குறித்து கருத்து தெரிவித்த ஐபால் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சக்திவேல், "சென்னை நகரம் வேகமாக வளர்ந்து வருவதுடன் சமீபத்தில் தனது எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டுள்ளது. ஏராளமான தொழில், சமூக மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளுடன் பெருகி வரும் மக்கள் தொகை காரணமாகவும் இனி சென்னை என்பது மயிலாப்பூர், மாம்பலம், ஆழ்வார்பேட்டை போன்ற பகுதிகளுடன் அடங்கிப் போய்விடாது.

மால்கள், திரையரங்குகள், உணவகங்கள், சிங்கிள் பிராண்ட் ஷோரூம்கள், சூப்பர் மற்றும் ஹைபர் மார்க்கெட்கள் என நவீன வளர்ச்சிகளை அப்பகுதி மக்களும் அனுபவித்து வருகின்றனர்.

ஆனால் புறநகர் பகுதிகளுக்கு குடியேறிவிட்ட இவர்கள் சங்கீத சீசனில் காணப்படும் சுற்றுச் சூழலை தவறவிடுவதாக உணர்கின்றனர். இப்போது 4 புறநகர்ப் பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெறும் 13 இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளை 12 ஆயிரம் ரசிகர்கள் அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சென்னை சங்கீத யாத்திரை வரும் ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான இடங்களுக்கும் சென்று ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வாக அமையும்," என்றார்.

நிகழ்ச்சிகள் மற்றும் டிக்கெட் குறித்து விசாரிக்க- 95000 03196, 87545 96152

 

ஐஸ்வர்யா ராய் வேனை சைக்கிளில் சுற்றி சுற்றி வந்த சல்மான்

Salman Khan Cycles Around Aishwarya Rai

மும்பை: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் வேனிட்டி வேனை சல்மான் கான் தனது சைக்கிளில் சுற்றி சுற்றி வந்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கானும், ஐஸ்வர்யா ராயும் ஒரு காலத்தில் பிரபலமான காதல் ஜோடியாக இருந்தவர்கள். அதன் பிறகு ஆளுக்கொரு பக்கமாக சென்றுவிட்டனர். சல்மான் இன்னும் கட்டை பிரம்மச்சாரியாக இருக்கிறார். ஐஸ்வர்யா அமிதாப் மருமகளாகிவிட்டார். காதல் முறிவுக்குப் பிறகு ஐஸ் சல்மானை சந்திப்பதை தவிர்த்து வருகிறார்.

இந்நிலையில் மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள மஹபூப் ஸ்டுடியோஸில் தபாங் 2 ஷூட்டிங்கில் இருந்தார் சல்மான். விளம்பர பட ஷூட்டிங்கிற்காக ஐஸ்வர்யாவும் அதே ஸ்டுடியோவுக்கு வந்தார். அப்போது ஐஸின் வேனிட்டி வேனை சல்மான் கான் சைக்கிளில் சுற்றி சுற்றி வந்துள்ளார். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சல்லு சைக்கிள் ஓட்டுகிறார் என்பது பாலிவுட் அறிந்த செய்தி.

இருவரும் ஒரே இடத்தில் இருந்தபோதும் ஐஸும், சல்லுவும் ஒருவரையொருவர் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழகத்தில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 'பில்லா', 'நண்பன்', 'துப்பாக்கி'

Billa Nanban Top Searched Keywords

சென்னை: இந்த ஆண்டு தமிழகத்தில் கூகுள் இணையதளத்தில் அதிகமாக தேடப்பட்ட வார்த்தைகளில் துப்பாக்கி, பில்லா 2 மற்றும் நண்பன் ஆகிய படப்பெயர்களும் அடக்கம்.

2012ம் ஆண்டில் கூகுள் இணையதளத்தில் அதிகமாகத் தேடப்பட்ட வார்த்தைகள் குறித்த தகவலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு தமிழகத்தில் கூகுளில் அதிகமாகத் தேடப்பட்ட வார்த்தைகளில் துப்பாக்கி, பில்லா 2 மற்றும் நண்பன் ஆகிய படப்பெயர்களும் அடக்கம்.

இந்தியாவில் உள்ள சிறிய மாநிலங்களில் ஏராளமானோர் சினிமா என்ற வார்த்தையை கூகுள் தேடலில் அதிகம் பயன்படுத்தியுள்ளனர். அதிலும் குறிப்பாக தென்னிந்திய நகரங்களான கோவை, சென்னை மற்றும் விஜயவாடாவில் தான் அதிகமானோர் சினிமா குறித்து கூகுளில் தேடியுள்ளனர்.

பிற மாநிலங்களில் உள்ளவர்கள் பல்வேறு பொருட்கள் குறித்து கூகுளில் தேடியுள்ளனர். ஆனால் தமிழகத்தில் மகக்ள் படங்கள் குறித்து தான் கூகுளில் அதிகம் தேடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி, நண்பன் ஆகிய படங்கள் விஜய் நடித்தது. பில்லா 2 அஜீத் குமார் நடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.