தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் உள்ளே வெளியே இயக்குநர்

சென்னை: இசைக்குடும்பத்தில் இருந்து வந்த அந்த இயக்குநர் சமீபத்தில் அடுத்தடுத்து 2 தோல்விப் படங்களைக் கொடுத்ததால், இயக்குனரின் அடுத்த படத்திற்கு தயாரிப்பாளராக யாரும் முன்வரவில்லையாம்.

இதனால் தானே தயாரிப்பாளர் ஆகும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் இயக்குநர், ஆரம்பத்தில் சின்ன பட்ஜெட் படங்களை எடுத்து தனது திறமையை நிரூபித்த இயக்குநர் கோட் நடிகரின் படத்திற்குப் பின் ஆளே மாறிவிட்டார்.

கோட் நடிகரை வைத்து இயக்கிய உள்ளே வெளியே படம் நன்றாக ஓடியதில் அடுத்து பருத்தி வீரனை வைத்து பிரியாணி கிண்டினார், பிரியாணி வேகாமல் போய்விட்டது.

சற்றும் மனம் தளராமல் அடுத்த படத்தில் சூர்யமான நடிகரை வைத்து பேய்படத்தை இயக்கினார், பேரை மாற்றி விளையாடியவர் திரைக்கதையில் கோட்டை விட்டதில் மாஸான அந்தப் படம் தூசியாகி விட்டது.

மாஸான படம் எதிர்பார்த்த அளவு ஓடாததில் இவரை விடவும் சூரிய நடிகருக்கு தான் பலத்த அடி, படம் வெளிவந்து நடிகரின் ஒட்டு மொத்த மார்க்கெட்டையும் கவிழ்த்து விட்டது.

சரி மீண்டும் கோட் நடிகரை வைத்து ஒரு படத்தை இயக்குவோம் என்று நடிகருக்கு கதை சொல்லியிருக்கிறார், நடிகர் ஒன்றுமே சொல்லாமல் எழுந்து போய்விட்டாராம்.

மேலும் ஒரு காலத்தில் இயக்குனருக்காக காத்திருந்த தயாரிப்பாளர்கள் தற்போது இயக்குனரின் தலையைக் கண்டாலே தெறித்து ஓடி விடுகின்றனராம்.

இதனால் வெறுத்துப் போன இயக்குநர் இறுதியாக தான் இயக்கும் அடுத்த படத்தை, சொந்தப் பணத்தில் தயாரிப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.

சொந்தப் படமும் பணமும் இயக்குனருக்கு கை கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் ஒட்டு மொத்தத் திரையுலகினரும் அது சரி.

 

சிவாஜி மணிமண்டபம்: நடிகர் திலகத்தை நினைவு கூர்ந்த தமிழக அரசிற்கு நன்றி - கமலஹாசன்

சென்னை: மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்ட வேண்டும், என்ற கோரிக்கையை சிவாஜியின் ரசிகர்கள் கடந்த சில மாதங்களாக வலியுறுத்தி வந்தனர்.

ஆங்காங்கே உண்ணாவிரதங்கள் கூட இந்த கோரிக்கையை வலியுறுத்தி அரங்கேறின, இந்நிலையில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று அறிவித்தார்.

Sivaji Manimandapam Actor Kamal Thanked Tamilnadu Government

இந்த அறிவிப்பை வெளியிட்டதற்காக முதல்வர் ஜெயலலிதாவிற்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன, சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபு, நடிகர் சங்கம் சார்பில் சரத்குமார், ராதாரவி, தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட திரையுலகமே முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கமலஹாசனும் இந்த அறிவிப்பினை வரவேற்று நன்றி தெரிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த அறிவிப்பு குறித்து ‘நடிகர் திலகத்தை மரியாதையுடன் நினைவு கோரியதில் அரசு, நடிகர் இனத்திற்கும் தனக்கும் பெருமை சேர்த்துக்கொண்டது.

கண்ணும் மனதும் நிறைய, நன்றி. அன்னாரது வாரிசு எனத் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள முற்படும் பல்லாயிரம் பேரில் நானும் ஒருவன்' என்று தனது அறிக்கையின் மூலம் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளார் கமலஹாசன்.

 

அஜீத் 56... முடிந்தது ஷூட்டிங்!

அஜீத் நடித்துவரும் 56 வது படத்தின் வசனப் பகுதிகள் முற்றாகப் படமாக்கப்பட்டுவிட்டன. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளைத் தொடங்கியுள்ளனர் படக்குழுவினர்.

அஜீத்தை வைத்து வீரம் படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் அஜீத்தி நடித்து வரும் புதிய படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி கொல்கத்தா மற்றும் இத்தாலியில் நடந்தது. இறுதிப் பகுதி சென்னையில் படமானது.

Ajith 56 talkie potion shooting over

ஸ்ருதி ஹாஸன், லட்சுமி மேனன், சூரி ஆகியோர் இந்தப் படத்தில் முதல் முறையாக அஜீத்துடன் கைகோர்த்துள்ளனர்.

படத்தின் வசனப் பகுதிகள் முழுமையாக படமாக்கப்பட்டுவிட்டன. இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இறங்கியுள்ளனர்.

இந்தப் படத்தின் தலைப்பு வரும் விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகும் எனத் தெரிகிறது. படத்தை தீபாவளிக்கு வெளியிடப் போவதாக தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் அறிவித்துள்ளார்.

 

ஸ்ரேஷா கோஷலுக்கு எதிராக என்னதான் பேசினார் சித்ரா?

பிரபல பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு மலையாளத்தில் அதிக வாய்ப்புகள் வழங்கப்படுவதை விமர்சித்தார் சித்ரா என்பதுதான் இப்போது மலையாளப் பட உலகில் பெரிய பேச்சாக உள்ளது.

அப்படி என்னதான் பேசினார் சித்ரா?

கேரள சுற்றுலாத்துறை சார்பாக திருவனந்தபுரத்தில் ஓணம் பண்டிகைக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சித்ராவிடம், மலையாளத் திரையுலகில் மற்ற மொழிப் பாடகர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

What Chitra spoke against Shreya Goshal?

இதற்குப் பதிலளித்த சித்ரா, "ஸ்ரேயா கோஷல் போன்ற திறமையான பாடகிக்கு மலையாளப் படங்களில் வாய்ப்பு கொடுத்தால் யாரும் புகார் சொல்லமாட்டார்கள். அதேசமயம், கேரளாவில் உள்ள திறமையான பாடகர்களுக்கும் சம அளவில் வாய்ப்பளிக்கவேண்டும்.

உண்மையில் கேரளாவில் மற்ற மொழிப் பாடகர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு போல, கேரளப் பாடகர்களுக்கு மற்ற மாநிலங்களில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை," என்றார்.

 

சிலை கடத்தல் வரை போய்விட்டது சினிமா தொழில்! - அருண்பாண்டியன் பேச்சு

சென்னை: தமிழ் சினிமா மிகுந்த நெருக்கடி நிலையில் உள்ளது. எடுத்த படத்தை வெளியிட முடியாத நிலை. இதனால்தான் ஒரு தயாரிப்பாளர் சிலை கடத்தல் வரை போயிருக்கிறார், என்றார் தயாரிப்பாளரும் எம்எல்ஏவுமான அருண்பாண்டியன்.

நடிகர் அருண்பாண்டியன் வழங்கும் ஏ & பி குரூப்ஸ் பட நிறுவனம் சார்பாக கவிதா பாண்டியன், எஸ்என் ராஜராஜன் தயாரிக்கும் படம் 'சவாலே சமாளி'. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.

Film producing become very tough these days, says Arunpandian

விழாவில் நடிகர் நாசர் பேசுகையில், "சென்ற ஆண்டு இதே நேரத்தில் நான் மிகவும் மோசமான நிலைமையில் இருந்தேன். எனது மகனுக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்ற போது அங்கே ஏர்போட்டில் அருண்பாண்டியன் அவர்கள் எனக்காக காத்திருந்து உங்கள் மகன் விரைவில் குணமடைவான் என்று சொல்லி பூங்கொத்து கொடுத்து வரவேற்று மருத்துவ ஏற்பாடுகளை செய்து முதல் கட்ட சிகிச்சைக்கு பணமும் செலுத்தி உதவி செய்தார்.

Film producing become very tough these days, says Arunpandian

நான், அருண்பாண்டியன், ராம்கி மூவரும் 33 வருடங்களுக்கு முன்பு சினிமா கனவுகளுடன் ஒன்றாகப் போராடினோம். இன்று மூவரும் ஜெயித்து விட்டோம். அருண்பாண்டியன் இப்பொழுது தயாரிப்பாளராகவும் களமிறங்கி இருக்கிறார் நிச்சயம் இந்த படம் அவருக்கு வெற்றி படமாக இருக்கும்.

படம் தயாரிக்க எனக்கும் ஆசைதான் ஆனால் என் மனைவி காமிலா வீட்டின் கதவை அடைத்துவிடுவார்," என்றார்.

தயாரிப்பாளர் அருண்பாண்டியன் பேசுகையில், "முன்பு எல்லாம் படம் எடுத்து அதை ரிலீஸ் செய்வது ஈசியாக இருந்தது. பைனான்சியர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள் நடிகர்கள் அனைவருக்கும் படம் தயாரிப்பில் பங்கு இருக்கும்.

ஆனால் இப்போது படத்தின் பெரும்பகுதி பணம் நடிகர், நடிகைகள், இயக்குனர் ஆகியோருக்குத்தான் போகிறது. ஆனால் படம் ரிலீஸ் செய்யும் போது அந்த தயாரிப்பளாருக்கு யாரும் உதவி செய்வதில்லை. படம் சேட்டிலைட் கூட விற்பதில்லை. அனைத்தும் தயாரிப்பாளர் தலையில்தான் முடிகிறது. இதனால் சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் தனது படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் சிலை கடத்தல் வரை சென்றுள்ளார்.

இந்த படத்தை நானே சொந்தமாக உலக முழுவதும் ரிலீஸ் செய்ய இருக்கிறேன் இதை கேள்வி பட்ட அசோக்செல்வன், பிந்துமாதவி இருவரும் தங்களது சம்பளத்தில் ஐந்து ஐந்து லட்சம் விட்டு தருவதாக கூறினார்கள். அனால் நான் அவர்களது பெருந்தன்மையை மதித்து அவர்களுக்கு முழு சம்பளத்தையும் செட்டில் செய்து விட்டேன். இன்று பல கோடி சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் அந்த படத்தின் வெளியீட்டின் போது அந்த தயாரிப்பாளரின் பிரச்னைகளுக்காக ஒரு லட்சம் ரூபாய் கூட உதவ முன்வருவதில்லை," என்று கூறினார்.

Film producing become very tough these days, says Arunpandian

விழாவில் நடிகர் ராம்கி, நிரோஷா, அசோக்செல்வன், பிந்துமாதவி, பாடலாசிரியர் சிநேகன், ஒளிப்பதிவாளர் பி.செல்வகுமார், இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன், கவிதாபாண்டியன், எஸ்.என்.ராஜராஜன், கீர்த்திபாண்டியன், படத்தின் இயக்குனர் சத்யசிவா ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

 

தமிழ் மண்ணின் நகைச்சுவை அடையாளம்! - சூரிக்கு சீமான் வாழ்த்து

பிரபல நகைச்சுவை நடிகர் சூரிக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சூரிக்கு நாளைதான் பிறந்த நாள். ஆனால் இன்றே வாழ்த்து தெரிவித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் சீமான் கூறியிருப்பதாவது:

Seeman's birthday wishes to comedian Soori

நகைச்சுவை நடிப்பில் தனி முத்திரைப் பதித்திருக்கும் தம்பி சூரி, தமிழ் மண்ணின் பெருமைமிகு கலைஞன். வட்டார வாழ்வியலையும் தமிழ் மண்ணின் வழக்கங்களையும் நகைச்சுவை ததும்ப வைக்கும் உடல் மொழியில் வெளிப்படுத்தி, தமிழ் மண்ணின் தவிர்க்க முடியாத பெருங்கலைஞனாகத் தன்னை நிரூபித்து வருகிறார் தம்பி சூரி. கிராமத்து வாழ்வியலையும் குறும்புகளையும் அட்டகாசமான மொழி நடையில் வெளிப்படுத்தி, மாபெரும் நகைச்சுவைக் கலைஞர்களாக வலம்வந்த நாகேஷ், கலைவாணர், சந்திரபாபு வரிசையில் தன்னை மெய்ப்பித்து வருகிறார் சூரி. மண்ணின் கலைஞனாகத் தன்னை நிலைநிறுத்தி இருக்கும் தம்பி சூரிக்கு நாம் தமிழர் கட்சி மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

நாடகக் காலம் தொட்டே நகைச்சுவைக் கலைஞர்களின் ஊடாகவே சுதந்திரம் தொடங்கி சுரண்டல் வரையிலான அத்தனை பிரச்னைகளும் மக்களின் கவனத்துக்குச் சென்றிருக்கின்றன. மாபெரும் சர்வாதிகாரி ஹிட்லரையே தனது நகைச்சுவை திறமையால் சதுரம் நடுங்க வைத்தார் சார்லி சாப்ளின். அந்த விதத்தில் நாட்டின் நல்லது கெட்டதுகளை மக்களின் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் ஆகப்பெரும் கடமை நகைச்சுவை கலைஞர்களுக்கு இருக்கிறது.

தம்பி சூரி தமிழ்க் கலாசாரத்தின் அடையாளமாகவும், தமிழ் வாழ்வியலின் அப்பட்டமான சாட்சியாகவும் ஒவ்வொரு படத்திலும் தன்னை நிரூபித்து வருகிறார். மூன்றாம் தமிழின் அரிய கலைஞனாக, மக்களின் சோகங்களை மறக்க வைக்கும் நகைச்சுவை மன்னனாக விளங்கும் தம்பி சூரி, தமிழ் மண்ணின் அரிய சொத்து. வளைந்து நெளியும் உடல்மொழியும் அருமையான வட்டார மொழியுமாய் ரசிகர்களைக் கவர்ந்திருக்கும் சூரி, தமிழ்த் திரையுலகில் இன்னும் வியக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்தி தமிழ் மக்களைக் குளிர்விக்க நாம் தமிழர் கட்சி வாழ்த்துகிறது.

திரைத்துறைத் திறமையிலும் தனிப்பட்ட குணத்திலும் தன்னை ஆகச்சிறந்தவராக நிரூபித்து இலட்சக்கணக்கான தமிழ் ரசிகர்களை ஈர்த்து இதயக்கூட்டில் வைத்திருக்கும் சூரி, தமிழ் மண்ணுக்கான நகைச்சுவை அடையாளமாகக் காலம் முழுக்கத் தன்னை நிரூபிக்க வேண்டும். அதற்கான பக்க பலமாக, ஒருமித்த தமிழ் மக்களின் உணர்வுமிக்க ஆதரவாக நாம் தமிழர் கட்சி எந்நாளும் விளங்கும்."

இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.

 

இந்திய ஆஸ்கர் ஜூரியாக அமோல் பாலேகர் நியமனம்!

இந்திய ஆஸ்கர் ஜூரியாக பிரபல நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் அமோல் பாலேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

திரைத்துறையில் சர்வதேச அளவில் மிகப் பெரிய அங்கீகாரமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான படங்கள் மற்றும் கலைஞர்களைப் பரிசீலிக்க மத்திய அரசு குழு அமைத்துள்ளது.

Amol Palekar appointed chairman of India’s Oscar jury

இந்தக் குழுவின் தலைவராக பிரபல நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அமோல் பாலேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு நடக்கும் 88வது ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவிலிருந்து செல்லும் படங்களை அமோல் பாலேகர் தலைமையிலான குழுதான் தேர்வு செய்யும்.

இதனை மும்பையைச் சேர்ந்த பிலிம் ஃபெடரேஷன் ஆப் இந்தியாவின் பொதுச் செயலாளர் சுப்ரான் சென் அறிவித்துள்ளார்.

2005-ஆம் ஆண்டு ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்தியப் படமான பஹேலியை இயக்கியவர் அமோல் பாலேகர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இறுதிக் கட்டத்தில் பாலாவின் "தாரை தப்பட்டை"

பாலா இயக்கத்தில் இயக்குநர் சசிகுமார் கதாநாயகனாகவும், வரலட்சுமி கதாநாயகியாகவும் நடிக்கும் படம் தாரைதப்பட்டை. இசைஞானி இளையராஜா படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவை செழியன் கவனித்துக் கொள்கிறார்.

கரகாட்டத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் தாரை தப்பட்டை திரைப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. படப்பிடிப்பின் நடுவில் படத்தின் நாயகன் சசிகுமாருக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக தாரை தப்பட்டையில் சற்று தாமதம் ஏற்பட்டது. சசிகுமாரின் உடல்நிலை சரியானவுடன் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது வேகமாக நடந்துகொண்டிருக்கிறதாம்.

Tharai Thappattai Now at Final Stage

அண்மையில் தாரை தப்பட்டை படக்குழுவினர் சில முக்கியமான காட்சிகளை அந்தமான் தீவில் சென்று சென்று படம்பிடித்து வந்தனர்.

அந்தமானில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது மட்டுமின்றி படக்குழுவினர் சென்றுவந்த கப்பலிலும் படப்பிடிப்பை நடத்தியிருக்கின்றனர், கப்பலில் இயல்பாக நடத்தப்பட்ட படப்பிடிப்பு மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறதாம்.

தாரை தப்பட்டையின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தஞ்சாவூரில் இன்று தொடங்கவிருப்பதாக கூறுகின்றனர் 15 நாட்கள் இந்தப்படப்பிடிப்பு இருக்கும் என்றும் இந்த 15 நாட்கள் படப்பிடிப்புடன் மொத்தப் படமும் நிறைவடைந்து விடும் என்றும் படக்குழுவினர் கூறியிருக்கின்றனர்.

படத்தை இயக்குவதோடு கதையின் மேலுள்ள நம்பிக்கையால் தாரை தப்பட்டையின் தயாரிப்புச் செலவையும் ஏற்றிருக்கிறார் இயக்குநர் பாலா.

தாரை தப்பட்டைகள் முழங்கட்டும்..டும்...

 

65 வயதில் காதல் திருமணம்... நாராயணா, இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலையேப்பா!

சென்னை: உச்ச நடிகரின் நண்பராக நடித்தே தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் இந்த சிவப்பு நடிகர்.

தமிழ் சினிமாவின் இரு பெரும் உச்ச நட்சத்திரங்களுக்கும் தோஸ்த் ஆக பல படங்களில் நடித்தவர் இந்த பாபு. அத்தனை படங்களுமே சூப்பர் ஹிட்டும் ஆனவை. உச்ச நடிகர்களின் நண்பர் வேடமா, கூப்பிடு பாபுவை என்று கூறும் அளவுக்கு வலம் வந்தவர் இவர்.

Old Actor to marry a young girl

ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடந்து விவாகரத்து பெற்றவர் இவர். தற்போது தெலுங்கு இளம் வயது பத்திரிகையாளர் ஒருவரை லவ் பண்ணிக் கொண்டிருக்கிறாராம். நடிகருக்கோ தற்போது 65 வயது. ஆனால், அவர் காதலிக்கும் பெண்ணிற்கோ, அவரது மகள் வயது தான் என்கிறார்கள்.

பத்திரிகையாளரை விரைவில் திருமணம் செய்யப் போகிறார் என்றும், இல்லையில்லை ஏற்கனவே திருமணம் முடிந்து இருவரும் சேர்ந்து தான் வாழ்ந்து வருகிறார்கள் என்றும் இரு வேறு தகவல்கள் நடிகரைக் குறித்து உலா வருகிறது.

எது எப்படியோ நடிகரின் 3வது மனைவி அந்த இளம் வயது தெலுங்குப் பத்திரிகையாளர் தான் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

 

லிங்கா பட நஷ்டஈடு தராவிட்டால் பாயும் புலிக்கு தடை- தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் திடீர் அறிவிப்பு!!

லிங்கா பட நஷ்ட ஈட்டை வேந்தர் மூவீஸ் தராவிட்டால், அந்த நிறுவனம் தயாரித்துள்ள பாயும்புலி படத்தை வெளியிடத் தடை விதிக்கப் போவதாக பன்னீர் செல்வம் தலைமையிலான திரையரங்க உரிமையாளர் சங்கம் திடீரென முடிவு செய்துள்ளது.

ரஜினி நடித்த லிங்கா படத்தின் நஷ்ட ஈடு விவகாரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்தப் படம் நஷ்டம் ஏற்படுத்திவிட்டதாக விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் சிலர் அறிவித்து, தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்படுத்தியதால் ரஜினியும் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷும் ரூ 12 கோடிக்கு மேல் கொடுத்தனர். ஆனால் அது இன்னும் தங்களுக்கு வந்து சேரவில்லை என சிலர் கூறிவந்தனர்.

Lingaa issue: Theater owners Assn announces ban on Paayum Puli

இந்த நிலையில் லிங்கா தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுவிட்டதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு தலைமையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது. ரஜினியும் தனது அடுத்த பட வேலைகளைத் தொடங்கினார்.

இந்த சூழலில் லிங்காவின் வெளியீட்டாளரான வேந்தர் மூவீஸுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் இப்போது விஷால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் பாயும் புலி என்ற படத்தைத் தயாரித்துள்ளது. வரும் விநாயகர் சதுர்த்தியன்று படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் லிங்கா படத்துக்கான நஷ்ட ஈட்டை தங்களுக்குத் தராவிட்டால், வேந்தர் மூவீசின் பாயும் புலி படத்தை வெளியிடத் தடை விதிப்போம் என்று ரோகினி பன்னீர் செல்வம் தலைமையில் இன்று கூடிய திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

நஷ்ட ஈடு என பெரும் தொகையைக் கொடுத்த பின்னும் இடியாப்பச் சிக்கலாய் லிங்கா பிரச்சினை தொடர்வதில், பெரும் உள்நோக்கம் இருப்பதாகவே திரையுலகினர் பார்க்கின்றனர்.

 

வட சென்னை: வெற்றிமாறனுக்கு 250 நாட்கள் கால்ஷீட் தந்த தனுஷ்!

வெற்றிமாறன் இயக்கும் வட சென்னை படத்துக்காக 250 நாட்கள் மொத்தமாகக் கால்ஷீட் கொடுத்து அதிர வைத்துள்ளார் தனுஷ்.

பொல்லாதவன், ஆடுகளம் படங்களுக்குப் பிறகு வெற்றிமாறனும் தனுஷும் மூன்றாவது முறையாக இணையும் படம் வட சென்னை.

Dhanush gives 250 days call sheet to Vetrimaaran

இந்தப் படம் இரு பாகங்களாக உருவாகவிருக்கிறது. இரண்டு பாகங்களையும் ஒரே மூச்சில் எடுத்து முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, மொத்தமாக 250 நாட்கள் கால்ஷீட்டை அள்ளித் தந்துள்ளாராம் தனுஷ்.

படத்துக்கு இசை சந்தோஷ் நாராயணன். இந்தப் படத்துக்கான வேலைகள் வரும் 2016-ம் ஆண்டு தொடங்கவிருக்கின்றன.

 

நடிகர் சங்கத் தேர்தல்: விஜயகாந்தை சந்தித்து ஆதரவு கோரிய விஷால் அணியினர்

சென்னை: நடிகர் சங்கத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது, இதனையொட்டி முன்னணி நடிகர்களை சந்தித்து தங்கள் அணிக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர் நடிகர் விஷாலும், சரத்குமாரும்.

இந்நிலையில் கேப்டன் விஜயகாந்தை சந்தித்து அவரிடம் தங்கள் அணிக்கு ஆதரவு கோரியிருக்கின்றனர் விஷால் அணியினர், நேற்று விஜயகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.

Vishal Team Meets Vijayakanth

விஷால் மற்றும் நடிகர் பொன்வண்ணன் உள்ளிட்ட சிலபேர் சந்தித்து நடிகர் சங்கத் தேர்தல் விஷயமாக விவாதித்ததாகவும், விஜயகாந்த் அவர்களிடம் நீண்ட நேரம் உரையாடியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது நடிகர் சங்கத்தின் மீதான கடனை, நட்சத்திரக் கலை நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

எனவே முன்னாள் சங்கத் தலைவர் என்ற முறையில் அவரின் ஆதரவை முக்கியமாக 2 அணியினரும் எண்ணுகின்றனர், இந்நிலையில் தற்போது நடந்த இந்த சந்திப்பு சினிமா உலகில் அதிர்ச்சி கலந்த ஆச்சரிய அலைகளை உருவாக்கியுள்ளது.

ஆனால் கேப்டனிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லவே நேரில் அவரை சந்தித்துப் பேசினோம் என்று விஷால் அணியினர் கூறியிருக்கின்றனர். (நம்பிட்டோம் பாஸ்)

கடந்த வாரம் ரஜினி, கமலை சந்தித்து ஆதரவு கோரிய விஷால் அணியினர் தற்போது கேப்டனை சந்தித்திருக்கின்றனர், அடுத்ததாக நடிகர்கள் விஜய் மற்றும் அஜீத்தை சந்திக்கவிருக்கின்றனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

பெரிய நடிகர்கள் அனைவரையும் சந்தித்த பிறகு பொதுவாக அனைத்து நடிகர்களையும் சந்தித்து விஷால் அணியினர் ஆதரவு திரட்ட இருப்பதாக, விஷாலிற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சங்கத் தேர்தல பாக்குறப்போ வின்னர் படத்தில வடிவேலு சொன்ன டயலாக் தான் ஞாபகம் வருது, "சண்டையில கிழியாத சட்டை ஏது"

 

ஸ்ரீதேவி புலி கபூர் ட்விட்டரில் பேரை மாற்றிய நடிகை ஸ்ரீதேவி

சென்னை: நடிகை ஸ்ரீதேவி, விஜய், சுருதிஹாசன், ஹன்சிகா மற்றும் பலர் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் புலி. ஏற்கனவே படத்திற்கு ஏகப்பட்ட விளம்பரங்களை படக்குழுவினர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியும் தனது பங்கிற்கு புலி திரைப்படத்திற்கு விளம்பரம் செய்து வருகின்றார், எப்படித் தெரியுமா ட்விட்டர் அக்கவுண்டில் இதுநாள் வரை ஸ்ரீதேவி போனி கபூர் என்று பெயரை வைத்திருந்தவர் சமீபத்தில் தனது பெயரை ஸ்ரீதேவி புலி கபூர் என்று மாற்றி வைத்திருக்கிறார்.

Actress Sridevi Changed Her Twitter Name

மிக நீண்ட வருடங்கள் கழித்து ஸ்ரீதேவி தமிழில் நடிக்க வந்ததால் அவர் கேட்ட சம்பளத்தைக் கொடுத்து அவரின் கண்டிஷன்கள் அனைத்திற்கும் ஒத்துக் கொண்டிருக்கின்றனர் புலி படக்குழுவினர்.

இதனால் மகிழ்ந்து போன ஸ்ரீதேவி தன்னால் இயன்ற அளவிற்கு புலியின் புகழை பாரெங்கும் பரப்பி வருகிறார், என்னமா இப்படி பண்றீங்களேம்மா...