ஒரே நேரத்தில் கவுதம் மேனன், லிங்குசாமி படங்களில் சூர்யா

Surya Lingusamy Goutham Menon Movie

சென்னை: சிங்கம் 2 படம் முடிந்ததும், அடுத்தடுத்து கவுதம் மேனன் மற்றும் லிங்குசாமி படங்களில் நடிக்கப் போகிறார் நடிகர் சூர்யா.

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'சிங்கம்-2' படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்து இரண்டு புதுப்படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கிறார்.

இதுகுறித்து சூர்யா கூறுகையில், "கவுதம் வாசு தேவமேனன் இயக்கும் புதுப் படத்தில் அடுத்து நடிக்க உள்ளேன். இப்படத்தை போட்டோன் கதாஸ் தயாரிக்கிறது. ஜுன் மாதம் இதன் படப்பிடிப்பு துவங்கும்.

இத்துடன் லிங்குசாமி இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளேன். திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனம் இதனை தயாரிக்கிறது. ஆகஸ்டு மாதம் இதன் படப்பிடிப்பு துவங்கும். இரு படங்களிலும் ஒரே சமயத்தில் நடிக்கிறேன்," என்றார்.

கவுதம் மேனன் இயக்கும் படத்துக்கு 'துருவ நட்சத்திரம்' என்ற பெயர் வைக்க பரிசீலிக்கப்படுகிறது. இரு படங்களுக்கும் கதாநாயகிகள் உள்ளிட்ட நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.

இதற்கிடையே சிங்கம் 2 க்ளைமாக்ஸ் படப்பிடிப்புக்காக தென்னாப்பிரிக்காவுக்கு செல்கிறார் சூர்யா.

 

வெங்கடேஷ் படத்தில் ரூ.50 லட்சம்... ரவி தேஜா படத்தில் ரூ.60 லட்சம்!- அஞ்சலிக்கு அமோக வசூல்

Anjali Gets More Salary Now Telugu   

சென்னை: சித்திக் கொடுமை, களஞ்சியத்தின் மிரட்டல், காணாமல் போய் திரும்பி வந்த பரபரப்புகளின் விளைவு, அஞ்சலியின் சம்பளம் கிடுகிடுவென உயர்ந்துவிட்டது.

ஏற்கெனவே ஒப்புக் கொண்ட படங்களுக்கு பேசிய சம்பளத்தைவிட கூடுதலாகத் தர தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர்.

தமிழை விட தெலுங்கில் நடிக்கவே அஞ்சலி அதிக ஆர்வம் காட்டுகிறார்.

சமீபத்திய பரபரப்புகளுக்குப் பிறகு அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது.

எனவே தயாரிப்பாளர்களும் அதிக சம்பளம் கொடுத்தாவது அவரை ஒப்பந்தம் செய்ய நினைக்கின்றனர்.

தற்போது தெலுங்கில் வெங்கடேஷ் ஜோடியாக போல்பச்சன் பட ரீமேக்கில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிக்க அவருக்கு ரூ.50 லட்சம் சம்பளம் கொடுத்துள்ளனர். ஆரம்பத்தில் ரூ 30 லட்சம்தான் பேசப்பட்டதாம்.

ரவிதேஜா ஜோடியாக 'பலுபு' என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ரூ 60 லட்சம் சம்பளமாகப் பேசப்பட்டுள்ளது. இதற்கும் கனிசமான சம்பளம் பேசியுள்ளார். பவன் கல்யாண் ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கு ரூ.60 லட்சம் சம்பளம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் மூன்று தெலுங்குப் படங்களில் நடிக்க அவரிடம் பேசி வருகின்றனர் தயாரிப்பாளர்கள்.

 

கேன்ஸ் விழாவில் ஐஸ்வர்யா ராயும் பங்கேற்கிறார்!

Aishwarya Rai Receive Special Invitation For Cannes

மும்பை: இந்த ஆண்டு நடக்கும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராயும் பங்கேற்கிறார்.

இந்த ஆண்டு நடக்கும் கேன்ஸ் விழா இந்தியாவைப் பொறுத்தவரை மிக விசேஷமானது.

காரணம் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் இந்த விழாவில் நடக்கவிருக்கினறன. பிரெஞ்ச் அரசும் இந்த கொண்டாட்டங்களில் இணைந்துள்ளது.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க நடிகை ஐஸ்வர்யா ராயை பிரெஞ்ச் அரசு சார்பில் அழைத்துள்ளனர்.

சென்ற வருடம், அவருடைய பிறந்த நாளின்போது, பிரான்ஸ் நாட்டு அரசு அவருக்கு தங்கள் நாட்டின் சிறந்த குடிமக்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதினை அளித்து கவுரவித்தது நினைவிருக்கலாம்.

கேன்ஸ் விழாக்களில் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் பங்கேற்று வருகிறார். இதுகுறித்து பிரெஞ்ச் தூதர் பிரான்க்காய்ஸ் ரிச்சியர் கூறுகையில், "ஐஸ்வர்யா ராய், கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பதன் மூலம் எங்களுக்கு மிகவும் நெருக்கமானவர் ஆகிவிட்டார். வரும் திரைப்பட விழாவில், இந்திய சினிமா குறித்து அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளோம். இந்திய திரை உலகின் முக்கிய பிரமுகர்களை இந்த விழாவுக்கு அழைக்கப் போகிறோம். ஐஸ்வர்யா ராயும் சிறப்பு அழைப்பினைப் பெறுவார்," என்றார்.

இந்த விழாவில் கலந்து கொள்ள ஏற்கெனவே சூப்பர் ஸ்டார் ரஜினி ஒப்புக் கொண்டுள்ளார். அங்கு வைத்துதான் கோச்சடையான் ட்ரைலரை வெளியிடுகிறார்.

அடுத்து பாலிவுட் சாதனை நடிகர் அமிதாப் பச்சன் தனது முதல் ஹாலிவுட் படத்துக்காக கேன்ஸ் விழாவுக்கு செல்கிறார். எனவே இந்த ஆண்டு கேன்ஸ் விழா, இந்திய திரைப்பட திருவிழாவாக இருக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

 

சித்தார்த்துடன் கை கோர்க்கும் 'பிட்சா' கார்த்திக் சுப்புராஜ்!

Pizza Karthik Subburaj Teams With Siddarth

கடந்த ஆண்டு வெளியாகி பாராட்டுகளையும் வசூலையும் குவித்த பிட்சா படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், அடுத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.

இந்தப் படத்தை பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தயாரித்த பைவ் ஸ்டார் மூவீஸ் கதிரேசன் தயாரிக்கிறார்.

ஹீரோவாக நடிப்பவர் சித்தார்த். தெலுங்கில் அவருக்குள்ள மார்க்கெட்டை வைத்து இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு இருமொழிப் படமாகத் தயாரிக்கிறார்கள். ஹீரோயின் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

கதிரேசன் ஏற்கெனவே தனுஷ் நாயகனாக நடிக்க, ஏ சற்குணம் இயக்கும் நய்யாண்டி படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில், "தயாரிப்பாளர் கதிரேசனுடன் இணைந்து இந்தப் படத்தை உருவாக்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது த்ரில்லர் படமல்ல.. நல்ல காதல் படம். நாயகி யார் என்று இன்னும் முடிவு செய்யவில்லை. தேடிக் கொண்டிருக்கிறோம்," என்றார்.

 

நடிகரின் சேட்டை ஆரம்பம்!

ஹீரோக்களாக அறிமுகமாகிறவர்கள் வந்த புதிதில் பம்மிக் கொண்டிருப்பதும், கொஞ்சம் வளர்ந்ததும் நாட்டாமை பண்ணுவதும் தமிழ் சினிமா அன்றாடம் பார்த்து வரும் சமாச்சாரங்கள்.

அந்த வரிசையில் சீக்கிரம் சேர்ந்து விடுவார் போலிருக்கிறது நயனின் புது நாயகன்.

நடித்த படங்கள் ஒன்றும் பெரிதாகப் போகாவிட்டாலும், நடிகரின் சேட்டைக்கும் நிர்பந்தங்களுக்கும் குறைச்சலில்லை.

இனி ஒரு படத்தில் நடித்த நடிகையுடன் திரும்ப நடிப்பதில்லை என்று வேறு தனக்குத்தானே உறுதியெடுத்துக் கொண்டுள்ள நடிகர், தான் அடுத்தடுத்து நடிக்கும் படங்களுக்கு யார் யார் ஹீரோயின் என்ற லிஸ்டையும் கொடுத்துவிட்டாராம் தயாரிப்பாளர்களிடம். நயனத்துக்கு மட்டும் இந்த நிபந்தனை பொருந்தாதாம்.

அதன்படி, தன் அடுத்த படத்துக்கு ஹிம்மத்வாலா ஹீரோயினை போடும்படி கேட்டுள்ளாராம். படம் கவிழ்ந்து அம்மணியின் மார்க்கெட் மவுசு குறைந்தாலும், சம்பளம் மட்டும் ஒரு கோடிக்கு குறையாமல் தந்துவிட வேண்டும் என்று நிபந்தனையும் விதித்துள்ளாராம்.

 

'ரிவால்வர் ராணி' கங்கணாவை தடுத்து நிறுத்திய சம்பல் கொள்ளையர்கள்

 

காலத்தால் அழியாத பி.பி.ஸ்ரீனிவாஸ்.... சில நினைவுகள்...

 

நவீன சாதனங்களால் நன்மையா? தீமையா? நீயா நானாவில் விவாதம்

 

சரணடைய மேலும் அவகாசம் வேண்டும் - உச்சநீதி மன்றத்தில் சஞ்சய் தத் மனு