உலகமே கொண்டாடும் தமிழனை உள்ளூரில் யாருக்கும் தெரியவில்லையே! - ஏ ஆர் முருகதாஸ் வேதனை


உலகமே கொண்டாடும் தமிழ் சாதனையாளர் போதி தர்மனைப் பற்றி உள்ளூர் தமிழர்கள் ஒருவருக்கும் தெரியவில்லையே, என வேதனைப்பட்டார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்.

சூர்யா-சுருதிஹாசன் ஜோடியாக நடித்து, ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்துள்ள படம் 7-ஆம் அறிவு. பெரும் பொருட்செலவில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார். படம், தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது.

இதையொட்டி சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

இயக்குநர் முருகதாஸ் பேசுகையில், "1,600 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் வாழ்ந்த போதி தர்மன் என்ற பல்லவ மன்னர் பரம்பரை இளவரசன், பின்னாளில் உலகம் முழுக்க பயணித்தான். அவனே பின் சீனாவுக்குப் போய் தற்காப்புக் கலையை அங்கே நிறுவினான்.

அங்கே எங்கே பார்த்தாலும் போதிதர்மனுக்கு சிலைகள் உள்ளன. சீனாவின் புகழ்பெற்ற ஷோலின் கோயிலில் தமிழரான போதி தர்மனின் சிலையைப் பார்த்து சிலிர்த்துவிட்டேன்.

சீன மாணவர்கள் போதியை பாடமாகவே படிக்கிறார்கள். புத்த சமயத்தின் குருவாக அவரை மதிக்கிறார்கள். அவர் படைத்த சாதனைகள் கொஞ்சமல்ல. இவ்வளவு பெருமையும் புகழும் கொண்ட ஒரு தமிழனைப் பற்றி அவன் பிறந்த காஞ்சிபுரத்தில் மட்டுமல்ல, தமிழ் சமூகத்துக்கே தெரியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் எனக்கு உள்ளது.

இனி வரும் தலைமுறையினர் போதி தர்மன் பெயரை தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்ட வேண்டும். இவ்வளவு பெரிய சாதனையாளனுக்கு சிலை எழுப்பி அவன் புகழைப் பரப்ப வேண்டும்.

சூர்யா இந்த படத்துக்காக நிறைய நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருந்தார். நிறைய பேருக்கு அந்த பரந்த மனசு வராது. சுருதிஹாசன், சுபா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். சுபாவையும், சுருதியையும் என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை," என்றார்.

சூர்யா

படத்தின் நாயகன் சூர்யா பேசுகையில், "போதி தர்மனை, பாதி உலகம் கடவுளாக கொண்டாடி கொண்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் போதி தர்மனை பற்றிய தடயங்களே அழிக்கப்பட்டு விட்டன. அவருடைய புகழ் மறக்கடிக்கப்பட்டு விட்டதால், யாரும் இதுபற்றி படம் எடுக்கவில்லை.

அவரை பற்றிய புத்தகங்களை படித்துவிட்டு, டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் தூக்கமின்றி தவித்தார். இந்த படத்தில் நடிப்பதற்காக, சில தற்காப்பு கலை பற்றிய பயிற்சி பெறுவதற்காக வியட்நாம் சென்றேன். அங்கே 80 வயது பாட்டி, சிலம்பம் சுற்றிக்கொண்டிருந்தார். மிரண்டு போனேன்.

அங்கே சர்க்கரை நோய் மருந்து விற்பதில்லை என்று கேள்விப்பட்டேன். அந்த மருந்து அங்கே தேவைப்படவில்லை.

படத்தில் எனக்கு ஸ்ருதிஹாசன்தான் ஜோடி என்றதும் வெடவெடத்துப் போனேன். அவர், கமல்ஹாசனின் மகள் என்பதால், பதற்றமாக இருந்தது. எனக்கு இணையான கதாபாத்திரம் அவருக்கு.

ஸ்ருதிஹாசனுக்கு தமிழ்ப்பட உலகில் ஒரு முக்கிய இடம் த்துக்கொண்டிருக்கிறது,'' என்றார்.

பேட்டியின்போது, பட அதிபர் உதயநிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

7-ஆம் அறிவு படத்தின் பெரும்பகுதி சீனாவில் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

பெயரை மாற்றிய கௌதம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பெயரை மாற்றிய கௌதம்!

9/27/2011 10:49:07 AM

பொதுவாக தன்னுடைய படங்களுக்கு கவிதை நடையில் தலைப்பு வைக்கும் கௌதம், இந்தியில் தன்னுடைய இயக்கத்தில் உருவாகும் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் பெயரை மாற்றியுள்ளார். முதலில் ப்ரேம் கதா என்று பெயர் வைத்திருந்த கௌதம் அது கவிதை நடையில் இல்லை என்று கூறி படத்தின் பெயரை ‘ஏக் தீவானா தா’ என்று மாற்றியுள்ளார். இது ‌ரிஷி கபூ‌ரின் பழைய படமொன்றின் பாப்புலர் பாடலின் வ‌ரி. கௌதம் இப்போ ஹேப்பி. முன்னதாக தன்னுடைய தமிழ் படங்களுக்கும் தமிழ் பாடல் வரிகளே பெயர்களாக வைத்து வருகிறார். உதாரணமாக விண்ணைத்தாண்டி வருவாயா, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், நீதானே என் பொன்வசந்தம்… எல்லாமே பாடல்களின் முதல் வ‌ரி. ஆனால் இளைய தளபதி விஜய் நடிக்கும் படத்திற்கு மட்டும் ‘யோஹன் : அத்தியாயம் ஒன்று’ என பெயர் வைத்துள்ளார்.

 

ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாளப் படம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாளப் படம்!

9/27/2011 10:39:44 AM

ஒவ்வொரு வருடமும் இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருதுக்கு படங்கள் அனுப்பி வைக்கப்படும். சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பி‌ரிவுக்காகதான் இந்த‌ப் படங்கள் அனுப்பி வைக்கப்படும். இந்த ஆண்டு மலையாளப் படமான ஆதாமின்டெ மகன் அபு சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பி‌ரிவுக்கான ஆஸ்கார் விருது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த படம் தான் சலீம் குமாருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றுத் தந்தது.

 

கோடிக்கு உயர்ந்த ஜீவா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கோடிக்கு உயர்ந்த ஜீவா!

9/27/2011 11:31:06 AM

இது ‌‌ஜீவா வருடம். சிங்கம் புலி, கோ என அடுத்தடுத்த ஹிட்கள். இதுமட்டுமின்றி ஜீவா நடித்த ரௌத்திரம், வந்தான் வென்றான் படங்களும் ஓரளவிற்கு ஓடின, இதுமட்டுமின்றி நண்பன், நீதானே என் பொன்வசந்தம் என வரப் போகிற படங்களும் எதிர்பார்ப்புக்கு‌ரியவை. ஜீவாவின் மார்க்கெட் 'கோ' படத்தின் மூலம் பட்டையை கிளிப்பியுள்ளது. மேலும் 'கோ' படம் வசூலிலும் பட்டையை கிளிப்பியுள்ளது. இதனையடுத்து கோலிவுட் தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் ஜீவா கால்ஷீட் வாங்குவதற்குக்காக ஜீவா வீட்டிற்கு படை எடுத்து வருகின்றனர். கோலிவுட் ஹீரோ ரேஸில் ஜீவா படு வேகமாக சென்று கொண்டிருக்கிறார். இதனால் ஜீவா, அவரது சம்பளத்தை கோடிக்கு உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பது ஜீவா தான் சொல்ல வேண்டும்.




 

‘காதலில் சொதப்புவது எப்படி?’

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'காதலில் சொதப்புவது எப்படி?'

9/27/2011 3:32:31 PM

'காதலில் சொதப்புவது எப்படி?' - இப்படி ஒரு படத்திற்கு தலைப்பு வைத்தால் எப்படி இருக்கும்? பாலாஜி என்ற புதியவர்தான் 'காதலில் சொதப்புவது எப்படி?' படத்தை இயக்கப் போகிறார். இவர் இந்தக் கதையை ஒரு குறும்படமாக எடுத்திருந்தாராம். ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவின் பார் வைக்கு இந்த படம் போயிருக் கிறது. பார்த்தவர் மிகவும் வியந்து போயிருக்கிறார். யதார்த்தமாக தனது நண்ப ரான சித்தார்த்திடம் இந்தப் படம் குறித்து நீரவ்ஷா சொல்லப்போக, அவரும், "உடனே நீங்க சொல் லும் அப்படத்தைப் பார்க்கணும்" என்று விருப்பம் தெரிவித்தாராம். நீரவ்ஷா போலவே சித்தார்த் மனதையும் கொள்ளை கொண்டு விட்டது பாலாஜியின் குறும்படம். "இதில் நானே நடிக்கிறேன். ஆக வேண்டியதை பாருங்கள்" என்று பாலாஜியை அழைத்து சொல்லிவிட்டார் சித்தார்த். கையோடு பாலாஜி கேட்டுக் கொண்டபடியே இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த மார்ச் மாதம் வரை அறுபது நாட் கள் கால்ஷீட்டையும் ஒதுக்கித் தந்திருக்கிறாராம். காதலுக்காக இன்றைய இளம் தலைமுறையினர் எப்படியெல்லாம் மெனக்கெடுகிறார்கள், இதனால் அவர்களுடைய எதிர்காலம் எப் படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை நகைச்சுவையாக சொல் லப் போகிறதாம் இப்படம்.




 

தீபாவளிக்கு முன்னதாக வரும் வேலாயுதம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தீபாவளிக்கு முன்னதாக வரும் வேலாயுதம்!

9/27/2011 12:09:43 PM

இளைய தளபதி விஜய் ஜெயம் ராஜா இயக்கத்தில் நடித்த படம் வேலாயுதம் தீபாவளிக்கு திரைக்கு வரதாக இருந்தது. ஆனால் படத்தை தீபாவளிக்கு முன்பே திரைக்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயா‌ரித்திருக்கும் இந்தப் படத்தை ஜெயம் ராஜா இயக்கியுள்ளார். ஜெனிலியா, ஹன்சிகா என விஜய்க்கு இரு ஜோடிகள். பழைய தெலுங்குப் படமொன்றின் ‌ரீமேக் என்று கூறப்படுகிறது. விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இந்தப் படம் அக்டோபர் 26 தீபாவளி அன்று வெளியாகும் என்று சொல்லப்பட்டது. தற்போது ஒருநாள் முன்னதாக அதாவது அக்டோபர் 25ஆம் தேதியே திரைக்கு வருகிறது.

 

சரவணன் இயக்கத்தில் ஆர்யா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சரவணன் இயக்கத்தில் ஆர்யா!

9/27/2011 2:30:15 PM

ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் சரவணன் இயக்கத்தில் வெளியான 'எங்கேயும் எப்போதும்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, நல்ல வசூலையும் பெற்று தந்துள்ளது. இதனையடுத்து இயக்குனர் லிங்குசாமி 'எங்கேயும் எப்போதும்' படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் தன்னுடைய தயாரிப்பில், ஒரு படம் செய்து தருமாறு சரவணிடம் லிங்குசாமி கேட்டதாக தெரிகிறது. தற்போது லிங்குசாமி ஆர்யா மற்றும் மாதவன் நடிக்கும் 'வேட்டை' படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் சரவணன் ஆர்யாவிடம் கதை ஒன்றை சொல்லியிருக்கிறார். ஆர்யாவுக்கும் கதை பிடித்துப் போனதால் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். அதே சமயம் வேட்டை முடிந்த பிறகு வசந்த பாலன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கிறாராம். ஆனால் வசந்த பாலனின் அரவான் படம் ஷூட்டிங் இன்னும் முடியாததால், சரவணன் இயக்கத்தில் ஆர்யா நடிக்க கூடும் என தெரிகிறது.




 

அ‌‌ஜீத் படத்துக்கு வந்த திடீர் குழப்பம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அ‌‌ஜீத் படத்துக்கு வந்த திடீர் குழப்பம்!

9/27/2011 12:10:29 PM

மாங்காத்தா வெற்றி பிறகு தல அஜீத் தற்போது பில்லா 2-வில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு ஸ்ரீ சூர்யா மூவிஸ் ஏ,எம்.ரத்னம் தயாரிக்கும் படத்தில் அஜீத் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து படத்தை இயக்க போவது ஜெயம் ராஜா என்றும், தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த தூக்குடு படத்தை ரீமேக் செய்யப் போகிறார்கள் என்றும் ஒரு தரப்பு தெரிவித்தது. அதே சமயம், நண்பன் படத்தை முடித்த கையோடு, ஏற்கெனவே ஏஎம் ரத்னத்துக்கு ஒரு படம் செய்து தருவதாகக் ஷங்கர் கூறியிருந்தாகவும் அப்படி நிறைவேறினால் ஷங்கர் இயக்கத்தில் அஜீத் நடிப்பது கிட்டதட்ட உறுதியாகிவிடும் என இன்னொரு தரப்பு தெரிவித்து வருகிறது. இந்த குழப்பமான நிலை நிலவி வந்த நிலையில், ஜெயம் ரவி தன்னுடைய அண்ணன்(ஜெயம் ராஜா) இயக்கத்தில் அஜீத் நடிக்கிறார் என்ற செய்தி பொய்யானது என்று தனது ட்விட்ட‌ரில் தெ‌ரிவித்துள்ளார். இயக்குனர் யார் என்பதை அ‌‌ஜீத்தோ, ரத்னமோ இன்னும் முடிவு செய்யவில்லை, இதுவே உண்மை என்கிறார்கள்.




 

ஏர்டெல் சூப்பர் சிங்கர்-3 இறுதிபோட்டியில் சாய்சரண் வெற்றி

Television news, small screen news, chinnathirai news, television serials, chinnathirai serials, online chinnathirai serial
ஏர்டெல் சூப்பர் சிங்கர்-3 இறுதிபோட்டியில் சாய்சரண் வெற்றி

9/27/2011 12:40:30 PM

விஜய் டி.வி.யில் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருந்த ஏர்டெல் சூப்பர் சிங்கர்-3-யின் மாபெரும் இறுதிபோட்டியில், வெற்றியாளராக சாய் சரண் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான அபார்ட்மென்ட வீடு ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. இரண்டு வாரங்களாக நடந்த இறுதிச் சுற்றில் அதிக வாக்குகளின் அடிப்படையில் நான்கு போட்டியாளர்கள் சத்யபிரகாஷ், பூஜா, சாய்சரண், சந்தோஷ் ஆகியோர் பிரம்மாண்ட மேடையில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் முன்னிலையில் பாடும் அரிய வாய்ப்பை பெற்றனர்.  இந்த நான்கு போட்டியாளர்கள் தங்களது திறமையை நேயர்கள் முன் நிரூபித்து வாக்குகளை பெற்றனர். இந்த இறுதிப்போட்டி விஜய் டிவியால் நேயர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டு அதனை நேரடியாகவும் ஒளிபரப்பும் செய்தது. வர்களின் வெற்றி, பார்வையாளர்களின் வாக்குகளின் மூலம் நிர்ணயிக்கப்பட்டது. சென்னை டிரேடு செண்டர், நந்தம்பக்கத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் முன்னிலையில் இந்த போட்டியாளர்கள் பாட, விறுவிறுப்பாக நடந்த வாக்களிப்பில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் 3-ன் வெற்றியாளராக சாய்சரண் அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான அபார்ட்மென்ட் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.  2வது வெற்றியாளராக சந்தோஷ்க்கு டாடா விஸ்டா காரும், 3வது வெற்றியாளரான சத்யபிரகாஷ்க்கு ரூ.3 லட்சமும், 4வது வெற்றியாளரான பூஜாவுக்கு ரூ.1 லட்சமும் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் தனுஷ், இசை மேதை எம்.எஸ். விஸ்வனாதன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், இயக்குனர் செல்வராகவன், பாடகர்கள் நித்யஸ்ரீ மகாதேவன், மனோ, ஸ்ரீனிவாஸ், சுஜாதா, உன்னிகிருஷ்ணன், உன்னிமேனன், மால்குடி சுபா மற்றும் ஏராளமான பிரபல பாடகர்கள் கலந்துகொண்டனர்.




 

ஷங்கர் போல் விறுவிறுப்பாக இயக்குகிறார் சுசீந்திரன் : விக்ரம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஷங்கர் போல் விறுவிறுப்பாக இயக்குகிறார் சுசீந்திரன் : விக்ரம்!

9/27/2011 3:18:08 PM

ராஜபாட்டை படம் பற்றி விக்ரம் கூறியது: இதில் ஜிம் பாயாக வரும் நான் சினிமாவில் வில்லன் ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருப்பேன். ஆக்ஷன், கூத்து, லூட்டி என எல்லாம் கலந்த கதை. 'தெய்வத் திருமகள்' படத்துக்கு பிறகு 'தூள்', 'சாமி' பாணியிலான ஆக்ஷன் படத்தில் நடிக்க ஆசையாக இருந்தது. அதற்கு ஏற்ற ஸ்கிரிப்ட்டாக 'ராஜபாட்டை' அமைந்திருக்கிறது. என்னை பல்வேறு கெட்டப் பில் இதில் காட்டி இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். 'வெண்ணிலா கபடி குழு', 'அழகர்சாமியின் குதிரைÕ என யதார்த்தமான படங்களை தந்தவர், இப்படியொரு ஆக்ஷன் ஸ்கிரிப்ட் சொல்லி அசத்தினார். தரணி, ஷங்கர் போல் இப்படத்தை விறுவிறுப்பாக இயக்கி இருக்கிறார். எனக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் கமர்சியல் படம். மேம்போக்காக சொல்லாமல் நல்ல மெசேஜும் இதில் இருக்கிறது. இதே டீமுனுடன் மற்றொரு படம் செய்ய உள்ளேன். விஜய் இயக்கத்தில் நடிக்கவுள்ள படம் முடிந்தபிறகு அப்படத்தில் நடிப்பேன்.




 

கிசு கிசு - காஸ்டியூம் பிசினசில் நடிகை பிசி!

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
காஸ்டியூம் பிசினசில் நடிகை பிசி!

9/27/2011 3:24:29 PM

நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

இலி ஹீரோயின் காஸ்டியூம் பிசினஸ்ல ஆர்வம் காட்டுறாராம்... காட்டுறாராம்... சொந்த ஊர்ல டிரஸ் டிசைன் கம்பெனி தொடங்கினவரு, தன் சம்பாத்தியத்தை பெரிய அளவுல இன்வெஸ்ட் பண்றாராம்... பண்றாராம்... ஊர் பக்கம் ஷூட்டிங் இருந்தா, அது முடிஞ்ச கையோடு கம்பெனிக்கு போய் வரவு செலவு கணக்கை  உன்னிப்பா கவனிக்கிறாராம். பிசினஸை கவனிக்க ஆட்களை நியமிச்சிருந்தாலும் அவங்களை கண்காணிக்க தன்னோட அம்மாவை ஹெட்டா போட்டிருக்காராம்... போட்டிருக்காராம்...

சென்டிமென்ட் படங்களை இயக்குன சேர இயக்கம், குடும்ப கதையை யாரும் விரும்ப மாட்டேங்க¤றாங்கன்னு சொல்றாராம். Ôஜாலியா படத்த பாக்கணும்னு விரும்புறதால என்னோட பாலிசியை மாத்திக்கிட்டேன். இனிமே இயக்குறதா இருந்தாலும் நடிக்க¤றதா இருந்தாலும் அது சென்டிமென்ட்டை புழியற படமா இருக்காது. கமர்சியலான கதையாத்தான் இருக்கும்Õனு பாக்குற வினியோகஸ்தருங்ககிட்ட சொல்றாராம்... சொல்றாராம்...

இந்தியில தயாராகுற சில்க் கதை படத்துல சவுத் இண்டஸ்ட்ரியை கிண்டல் அடிச்சிருக்காங்களாம்... அடிச்சிருக்காங்களாம்... இது பற்றி பட யூனிட்லேருந்து தகவல் கசிய ஆரம்பிச்சிருக்காம். இதனால சம்பந்தப்பட்டவங்க கோபத்துல இருக்காங்களாம்... இருக்காங்களாம்... பட ரிலீஸ் நேரத்துல பார்த்துக்கலாம்னு முடிவு பண்ணியிருக்காங்களாம்... பண்ணியிருக்காங்களாம்...




 

18 வயதுக்கு பிறகுதான் மகள் என்ட்ரி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
18 வயதுக்கு பிறகுதான் மகள் என்ட்ரி

9/27/2011 3:22:14 PM

'படத்துக்கு படம் நடிகர், நடிகைகளின் வாரிசுகள் அறிமுகமாகிக்கொண்டிருக்கின்றனர். விரைவில் பிரபு மகன் விக்ரம் 'கும்கி' படத்தில் அறிமுகமாகிறார். மணிரத்னம் இயக்கும் படத்தில் கார்த்திக் மகன் கவுதம் நடிக்க பேச்சு நடக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தியில் கலக்கியவர் ஸ்ரீதேவி. அவரது மகள் ஜானவி தெலுங்கு படத்தில் ராம் சரண் தேஜா ஜோடியாக நடிப்பார் என்று தகவல் பரவியது. இதைக்கேட்டு கோபம் அடைந்த ஸ்ரீதேவி, எந்த துறையில் ஈடுபடுவது என்பது பற்றி இன்னும் ஜானவி முடிவு செய்யவில்லை. இப்போது படித்துக்கொண்டிருக்கிறாள். இன்னும் சொல்லப்போனால் 18 வயதுக்கு பிறகுதான் அவளிடம் நடிக்க ஆர்வம் இருக்கிறதா என்றே கேட்பேன்ÕÕ என்றார். மீடியாதான் என் மகள் நடிக்கிறாள் என்று கிளப்பிவிட்டிருக்கின்றன. நடிப்பாரா? இல்லையா? என்பதை சொல்வதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. அப்படி நடிப்பதென்றால் அவரை பாலிவுட்டிலேயே என்னால் அறிமுகப்படுத்த முடியும். அதைவிட்டு ஏன் தெலுங்கு படத்தில் அறிமுகம¢ செய்ய வேண்டும் என்றார் ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர்.




 

அடுத்த மாதம் சதுரங்கம் ரிலீஸ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அடுத்த மாதம் சதுரங்கம் ரிலீஸ்

9/26/2011 10:45:48 AM

கரு.பழனியப்பன் இயக்கிய படம், 'சதுரங்கம்'. ஸ்ரீகாந்த், சோனியா அகர்வால் நடித்துள்ளனர். பல வருடங்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்டு பல்வேறு பிரச்னைகள் காரணமாக வெளிவராமல் இருந்தது. தற்போது வெளியிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜிடம் கேட்டபோது, ''நல்ல கதையம்சம் கொண்ட இந்தப் படம் அரசாலும் திரையுலக பிரமுகர்களாலும் பாராட்டப்பட்டது. பைனான்ஸ் பிரச்னை காரணமாக வெளியிடமுடியாமல் இருந்தது. தற்போது பிரச்னை தீர்க்கப்பட்டு படம் வெளிவர ஏற்பாடு செய்து வருகிறேன். அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிட ஏற்பாடுகள் நடக்கிறது'' என்றார்.




 

பக்கா அரசியல் விளையாட்டாகும் சோனா - எஸ்பிபி மகன் விவகாரம்!


நடிகை சோனா கொடுத்த பாலியல் பலாத்கார புகார் விவகாரம் முழுக்க முழுக்க அரசியல் ஆகும் நிலை உருவாகியுள்ளது.

மங்காத்தா பார்ட்டியில் பங்கேற்றதிலிருந்து இன்றுவரை நடந்த அனைத்தையும் பார்த்தவர்களில் ஒருவரான, பெயர் சொல்ல விரும்பாத, ஒரு நடிகர் நம்மிடம் இப்படிச் சொன்னார்:

"எஸ்பிபி சரண் மீது புகார் பதிவு செய்யப்பட்டவுடன் அவரை கைது செய்யவில்லை போலீசார். குறைந்தபட்சம், கூப்பிட்டு விசாரிக்கவும் இல்லை. மாறாக அவர் முன்ஜாமீன் பெற்றுக்கொள்ள போதிய அவகாசம் அளித்தனர்.

திமுகவினர் படாதபாடு பட்டாலும் கிடைக்காத முன்ஜாமீன், எஸ்பிபி மகன் கேட்டவுடன் கிடைத்துவிட்டது. அதுவும் பாலியல் பலாத்கார வழக்கில். போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காக எஸ்பி பாலசுப்ரமணியன் வீட்டு முன் போராட்டம் நடத்தப் போவதாக சோனாவும் சில மகளிர் அமைப்புகளும் அறிவித்தன.

ஆனால் இந்தப் போராட்டத்துக்கு அனுமதி தராத போலீசார், எஸ்பிபி வீட்டுக்கு எக்கச்சக்க போலீஸ் பாதுகாப்பு போட்டனர். சோனாவை நேரடியாக அழைத்து, போராட்டம் நடத்தினால் உள்ளே தூக்கி போடுவோம் என மிரட்டியும் அனுப்பியுள்ளனர். இது என்ன வகை நியாயம்... இதுதான் போலீஸார் சட்டத்தைக் காப்பாற்றும் லட்சணமா...

புகார் கொடுத்தவர் எப்படிப்பட்டவராக இருந்தால் என்ன? அவர் கொடுத்த புகாரில் முகாந்திரம் உள்ளதா என்றுதானே பார்க்க வேண்டும்?" என்று ஆதங்கப்பட்டார்.

இந்த நிலையில், சோனா வழக்கை அரசியல் காமெடியாக மாற்ற வெளிப்படையாகவே முயற்சி நடப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் அருள்துமிலன் என்ற வழக்கறிஞர், ஆண்கள் மீது பொய்யான புகார்கள் தரும் நடிகைகள் வீட்டு முன் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.

போராட்டம் நடத்தக்கூடாது என சோனாவை எச்சரித்த போலீஸ், இந்த நபரை மட்டும் எப்படி அனுமதிக்கப் போகிறார்கள்? எந்த தைரியத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இதில் எஸ்பிபி சரணின் விளையாட்டு இருக்கலாம் என சோனா தரப்பில் சந்தேகிக்கிறார்கள்.

"பாதிக்கப்பட்ட சோனா பணம் பறிக்கவோ, வேறு வகையில் பேரம் பேசவோ முயற்சிக்கவில்லை. தன் விருப்பத்துக்கு மாறாக பலாத்காரம் செய்த சரணுக்கு தண்டனை தரவேண்டும் என விரும்பினார். குறைந்தபட்சம் அவர் தனது செயலுக்காக மன்னிப்பாவது கேட்க வேண்டும் என்றுதானே போராடி வருகிறார். ஆனால் எஸ்பிபி மகன் தனது தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி, சோனாவை கேவலப்படுத்துவதில் குறியாக உள்ளார். அதன் எதிரொலிதான் இதுபோன்ற காமெடி அறிவிப்புகள்," என்றார் அந்த நடிகர்.

திருந்துங்கப்பா!
 

இளைஞர் காங். தலைவர் தேர்தல்: கோஷ்டி பூசலால் 'குத்து' ரம்யா திடீர் விலகல்


பெங்களூர்: கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் இருந்து நடிகை ரம்யா திடீர் என்று விலகியுள்ளார். காங்கிரஸின் பிறவிக் குணமான கோஷ்டிப் பூசல் காரணமாக ரம்யா விலகிவிட்டார் என்று கூறப்படுகிறது.

நடிகை குத்து ரம்யா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மீதுள்ள பற்றால் கடந்த ஏப்ரல் மாதம் இளைஞர் காங்கிரஸில் சேர்ந்தார். க்ர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து கர்நாடக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.

கட்சியில் சேர்ந்து 6 மாத காலத்திற்குள் ஒரு நடிகை மூத்த தலைவரைப் போல் செயல்படுவதாக மேலிடத்திற்கு புகார்கள் சென்றன. தலைவர் பதவிக்கு ஒரு கவர்ச்சி நடிகை போட்டியிடக்கூடாது என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

கட்சியில் ரம்யாவுக்கு ஆதரவாக ஒரு கோஷ்டியும் உள்ளது. இருப்பினும் அவருக்கு எதிராக குரல்கள் ஒலி்த்தன. இந்நிலையில் ரம்யா தலைவர் பதவிக்கான தேர்தலில் இருந்து விலகியுள்ளார்.

வரும் அக்டோபர் மாதம் 12-ம் தேதி கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் வரை அவர் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் ரம்யா ஆதரவாளர்கள் வருத்தமடைந்துள்ளனர்.
 

இயக்குநர் விஜய்யுடன் அமலா பால் காதலா?


நடிகை அமலா பாலும், இயக்குனர் ஏ. எல். விஜய்யும் காதலிப்பதாகக் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் இதை அமலா பால் மறுத்துள்ளார்.

தெய்வத் திருமகள் படம் தொடங்கியதிலிருந்தே நடிகை அமலா பாலுக்கும் விஜய்க்கும் இடையே காதல் என்று பேசப்படுகிறது. எங்கே சென்றாலும் இருவரும் இணைந்தே சென்றுவந்தனர். விழாக்களில் ஜோடியாக ஒரே காரில் வந்தனர்.

ஷூட்டிங்கிலிருந்து ஒன்றாக வருகிறோம் என்று அப்போது விளக்கம் கூறினர். ஆனால் படம் வெளியாகிய பின்னும் இந்த நெருக்கம் தொடர்வதாகக் கூறப்படுகிறது. ஹோட்டல்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு இப்போதும் ஜோடியாகத்தான் செல்கிறார்களாம்.

இது வெறும் நட்பாக மட்டும் இருக்க வாய்ப்பு குறைவு என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

இதில் இருவீட்டு பெரியவர்களுக்கும் கூட சம்மதம் என்கிறார்கள். அதற்கு வலு சேர்க்கும் விதத்தில், சில தினங்களுக்கு முன் விஜய்யின் குடும்ப விழாவில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தார் அமலா பால்.

கடந்த சனிக்கிழமை விஜய்யின் தந்தையும் தயாரிப்பாளருமான ஏ எல் அழகப்பன் மணிவிழா நடந்தது. அதில் அமலா பால் கலந்து கொண்டு இயக்குநர் விஜய்யின் பெற்றோரிடம் ஆசி பெற்றார். உடன் விஜய்யும் நின்று கொண்டிருந்தார், முகம் முழுக்க மகிழ்ச்சியுடன்!

இந்த விழாவுக்கு அமலா பாலின் பெற்றோரும் வந்திருந்தார்கள். விழாவின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அனைவரும் உடனிருந்ததற்கு புதிய அர்த்தம் கற்பிக்கிறார்கள் திரையுலகில்.

இது நட்புதான் - அமலா

இதுகுறித்து அமலா பாலிடம் கேட்டபோது, "நானும் விஜய்யும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் நட்பை தவிர வேறு எதுவும் இல்லை. காதல் திருமணம் பற்றியெல்லாம் சிந்திக்க உகந்த நேரம் இது வல்ல. நடிப்புக்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறேன். திருமணத்துக்கு முன் 100 படங்களிலாவது நடிக்க வேண்டும் என்று திட்டம் வைத்துள்ளேன்," என்றார்.

நம்பிட்டோம்!
 

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: எஸ்ஏசி - கேயார் மோதுகிறார்கள்!


சென்னை: தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் இயக்குநர்கள் கேயார் மற்றும் எஸ் ஏ சந்திரசேகரன் மோதுகிறார்கள்.

தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து ராமநாராயணன் விலகியதை அடுத்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், 2 செயலாளர்கள், 1 பொருளாளர், 21 செயற்குழு உறுப்பினர்கள் இந்த தேர்தலில் தேர்வு செய்யப்பட உள்ளனர். 770 தயாரிப்பாளர்கள் ஓட்டு போட்டு இவர்களை தேர்வு செய்கிறார்கள்.

தேர்தலில் தலைவர் பதவிக்கு எஸ்.ஏ. சந்திரசேகரன், கே.ஆர். ஆகியோர் போட்டியிடுகிறார்கள். எஸ்.ஏ. சந்திரசேகரன் தற்போது சங்கத்தில் பொறுப்புத் தலைவராக இருக்கிறார். அவர் இன்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.

இந்த முறை எஸ்.ஏ. சந்திரசேகரன், கே.ஆர். தலைமையில் இரண்டு அணிகள் மோதுகின்றன.

எஸ்.ஏ. சந்திரசேகரன் அணியில் துணைத் தலைவர் பதவிக்கு புஷ்பா கந்தசாமி, ராதாகிருஷ்ணன் ஆகியோரும், செயலாளர் பதவிக்கு கே.ஆர்.ஜி., தேனப்பன் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு தாணுவும், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு ராதாரவி, கோவைத்தம்பி, சங்கிலி முருகன், மாதேஷ், ஆர்.கே. செல்வமணி, சந்திரபிரகாஷ் ஜெயின், எடிட்டர் மோகன், அமுதா துரைராஜ், மைக்கேல் ராயப்பன், ரிஷிராஜ், பவித்ரன் உள்பட 21 பேரும் போட்டியிடுகின்றனர்.
 

புதிய படம் தொடங்குகிறார் பாலா... ஹீரோ அதர்வா!


புதிய படத்துக்கான வேலைகளில் தீவிரமாகிவிட்டார் இயக்குநர் பாலா. இந்தப் படத்தில் மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா நாயகனாக நடிப்பார் என்று தெரிகிறது.

இயக்குநர் பாலா எப்போது படம் தொடங்குவார், அவர் படத்தில் ஹீரோவாகும் அதிர்ஷ்டம் யாருக்கு கிடைக்கும் போன்றவை தமிழ் சினிமாவில் பெரிதாகப் பேசப்படும் சமாச்சாரம்.

அவன் இவன் படத்துக்குப் பிறகு, சில மாதங்கள் அமைதியாக இருந்த பாலா, அடுத்த படத்துக்கான வேலைகளில் பிஸியாகிவிட்டார்.

எப்போதுமே தன் கைக்கு அடக்கமாக, சொன்ன பேச்சைக் கேட்கிற நடிகர்களைத்தான் தன் படங்களில் ஹீரோவாக்குவார் பாலா. அந்த வகையில், பாணா காத்தாடி மூலம் அறிமுகமான அதர்வாவுக்கு அடித்துள்ளது அதிர்ஷ்டம்.

சமீபத்தில் ஒருநாள் அதர்வாவை தன் அலுவலகத்துக்கு வரச் சொன்ன பாலா, புதிய படங்கள் எதையும் இனி ஒப்புக் கொள்ள வேண்டாம். நாம் படம் பண்ணுகிறோம் என்று கூறினாராம்.

இந்த திடீர் சந்தோஷ அறிவிப்பார் திக்குமுக்காடிப்போன அதர்வா, பாலாவின் காலில் விழுந்து ஆசி பெற்றுத் திரும்பியுள்ளார்.

நாயகி, தயாரிப்பாளர், இசையமைப்பாளர் பற்றி விரைவிலேயே பாலா விவரமாக அறிவிப்பார் என்கிறார்கள்.
 

உள்ளே தூக்கி போட்ருவோம்! - சோனாவை எச்சரித்த போலீஸ்


சென்னை: எஸ்பிபி சரண் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். ஆனால் அதற்கு முன் தேவையில்லாமல் ஆர்ப்பாட்டம் செய்தால் உள்ளே தூக்கி போட்டுடுவோம், என நடிகை சோனாவை எச்சரித்துள்ளது சென்னை போலீஸ்.

பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.பி.சரண் மீது, நடிகை சோனா பாலியல் பலாத்கார புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக பாண்டிபஜார் போலீசார் எஸ்.பி.பி.சரண் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க, எஸ்.பி.பி.சரண் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால முன் ஜாமீன் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் நடிகை சோனா போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து, தனது புகார் தொடர்பாக வீடியோ பட ஆதாரம் அடங்கிய சிடி ஒன்றை கொடுத்தார்.

இந்த நிலையில் மகளிர் அமைப்போடு சேர்ந்து நடிகை சோனா, எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார். இதற்கிடையில் நேற்று மாலையில் மீண்டும் நடிகை சோனா போலீஸ் கமிஷனர் திரிபாதியையும், தியாகராயநகர் உதவி கமிஷனர் தமிழ்செல்வனையும் சந்தித்துப் பேசினார்.

அப்போது, சோனாவிடம், 'நிச்சயமாக எஸ்பிபி சரண் மீது நடவடிக்கை எடுப்போம். அதற்கு முன் தேவையில்லாமல் நீங்கள் மகளிர் அமைப்போடு சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கினால், உங்களையே உள்ளே வைக்க வேண்டி வரும்," என்று எச்சரித்தார்களாம் போலீசார்.

இதனால் ஆர்ப்பாட்ட திட்டத்தை சோனா ஒத்திப் போட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆனால் போலீசாரின் இந்த செயல் பாதிக்கப்பட்டவருக்கு எதிராகவும், குற்றவாளிக்கு ஆதரவாகவும் உள்ளதாகக் கூறி, போராட்டத்தில் ஈடுபடத் தயாராகி வருகிறது சோனாவுக்கு ஆதரவான மகளிர் அமைப்பு.
 

மும்பையில் யாசகம் கேட்ட பெண்ணுக்கு ரூ. 5,000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்


மும்பை: வியாபார விஷயமாக இந்தியா வந்துள்ள சோஷியலைட் பாரிஸ் ஹில்டன் கைக்குழந்தையுடன் வந்து யாசகம் கேட்ட பெண்ணுக்கு ரூ. 4,943 கொடுத்தார்.

நடிகை, சோஷியலைட், கோடீஸ்வரி, தொழிலதிபர், மாடல் அழகி என பல அவதாரங்களைக் கொண்டவர் பாரிஸ் ஹில்டன். தனது கைப்பைகள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களை அறிமுகப்படுத்த 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். கைப்பைகள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களை அறிமுகப்படுத்திய அவருக்கு பாலிவுட்டில் நடிக்கும் ஆசையும் வந்துள்ளது.

இந்தியாவும், இந்தியப் பெண்களும் அழகு என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.

நேற்று மும்பையின் அந்தேரி பகுதியில் சிக்னலில் பாரிஸ் ஹில்டன் கார் நின்று கொண்டிருந்தது. அப்போது கைக்குழந்தையுடன் வந்த பெண் கார் கண்ணாடியைத் தட்டி பிச்சை கேட்டுள்ளார். உடனே பாரிஸ் 100 டாலர் (ரூ. 4,943) நோட்டை எடுத்து அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார்.

தனக்கு எவ்வளவு ரூபாய் கிடைத்துள்ளது என்பதை அறியாத அந்த பெண் அங்கு நின்று கொண்டிருந்த புகைப்படக்காரரிடம் போய் நோட்டை நீட்டி சில்லறை கேட்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள வறுமைக் கொடுமையைப் பற்றி பாரிஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்தியா மிகவும் அழகான நாடு. ஆனால் சில பகுதிகள் வறுமைக் கொடுமை உள்ளது. தெருவில் படுத்துத் தூங்கும் குழந்தைகளைப் பார்த்து என் இதயம் உடைந்துவிட்டது என்று அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.