பெங்களூர்: தமிழ் திரைப்பட இயக்குனர் ஆர்.பார்த்திபன், 'தாதா' என்ற கன்னட திரைப்படத்தில் நடிப்பதன் மூலமாக சாண்டல்வுட்டில் கால்பதிக்கிறார்.
பார்த்திபன் இயக்கத்தில் வெளியான 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' என்ற பெயர் கொண்ட தமிழ் திரைப்படம் நல்ல வசூலை ஈட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து பார்த்திபன் ரசிகர்களுக்கு மற்றொரு நற்செய்தியும் உள்ளது.
அதாவது கன்னட திரைப்பட உலகிலும் பார்த்திபன் கால் வைக்கப்போகிறார் என்பதுதான் அந்த செய்தி. இயக்குநர் சந்தோஷின், 'தாதா' என்ற படத்தில் பார்த்திபன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.
சாண்டல்வுட் என்று அழைக்கப்படும் கன்னட திரையுலகிலும் பார்த்திபன் காலடி எடுத்து வைப்பது அவர் ரசிகர்களுக்கு கட்டாயம் மகிழ்ச்சியான விஷயமாகவே இருக்கும்.
பார்த்திபன் நடிக்கும் அல்லது இயக்கும் தமிழ் படங்களை பார்க்க கன்னட மக்களை ஈர்க்கவே கன்னட படத்தில் நடிக்கும் முடிவுக்கு அவர் வந்துள்ளதாக காந்திநகர் (நம்மூரில் கோடம்பாக்கம் மாதிரி) வட்டாரங்கள் தெரிவித்தன.