ஷூட்டிங்கில் விபத்து ஆதி காயம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஷூட்டிங்கில் விபத்து ஆதி காயம்

3/9/2011 10:01:19 AM

படப்பிடிப்பில் நடந்த விபத்தில் ஆதி படுகாயமடைந்தார். வசந்தபாலன் இயக்கத்தில் ஆதி நடிக்கும் படம், 'அரவான்'. இதன் ஷூட்டிங் மதுரை மேலூர் பகுதியில் நடந்து வருகிறது. இரு தினங்களுக்கு முன் ஆதி, பசுபதி, அர்ச்சனா கவி மற்றும் ஏராளமான கிராமத்தினர் நடித்த காட்சி படமாக்கப்பட்டது. அப்போது 5 அடி உயர பனை மரத்தை ஆதி தாண்டிக் குதிப்பது போன்று படமாக்கினர். டூப் போடலாம் என்றபோது, மறுத்த ஆதி, தானே தாண்டினார். அப்போது எதிர்பாராவிதமாக பனை மரத்தின் மீது விழுந்தார். பனை மட்டை கறுக்குகள், ஆதியின்  கைகளை கிழித்தது. படுகாயம் அடைந்த அவர் வலியால் துடித்தார். உடனே ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சைக்குப் பின், ஒரு வாரம் ஓய்வெடுக்க டாக்டர்கள் கூறியுள்ளனர்.


Source: Dinakaran
 

மீண்டும் பின்னணி பாடுகிறார் தனுஷ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மீண்டும் பின்னணி பாடுகிறார் தனுஷ்

3/10/2011 11:49:51 AM

ஏற்கனவே தொடங்கி பாதியில் கைவிட்ட இது மாலை நேரத்து மயக்கம் படத்தை தூசு தட்டி இரண்டாம் உலகம் என்ற பெய‌ரில் பல மாற்றங்களுடன் உருவாக்கி வருகிறார் செல்வராகவன். தனுஷ், ஆண்ட்‌ரியா நடிக்கும் இந்தப் படத்துக்கு முதலில் இசையமைப்பதாக இருந்தது ‌ஜி.வி.பிரகாஷ்குமார். ஆனால் தற்போது அவரது இடத்தை நிரப்பப் போகிறவர் யுவன் ஷங்கர் ராஜா. ‘இரண்டாம் உலகம்’ படத்தில் தனது தம்பி தனுஷை பாட வைக்க ஆசைப்பட்டாராம் செல்வா, இதற்கு யுவனும் ஒப்புக் கொண்டாராம். இதனையடுத்து விரைவில் பாடல் ஒலிப்பதிவு ஆகிறது. கடைசியாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தனுஷ் பாடிய பாடல் மெகா ஹட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.


Source: Dinakaran
 

கிசு கிசு -ஹீரோவின் காதலுக்கு நடிகர் துணை

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

ஹீரோவின் காதலுக்கு நடிகர் துணை

3/10/2011 11:58:13 AM

நல்ல காலம் பொறக்குது…
நல¢ல காலம் பொறக்குது…

படங்கள் இல்லாததால நண்பர்களோடு அரட்டை அடிக்கிறதுல பிசியா இருக்காராம் ஜீவனுள்ள நடிகரு. வர்ற வில்லன் வாய்ப்பையும் ஏத்துக்க மறுக்கிறாரு… மறுக்கிறாரு… ரியல் எஸ்டேட் பிசினஸ்ல குதிக்கலாமேன்னு நடிப்புலக நண்பர்கள் அவருக்கு சீரியஸா அட்வைஸ் பண்றாங்களாம்… பண்றாங்களாம்…

புதுமை இயக்குனரோட வித்தக பட ஷூட்டிங் அம்போன்னு நிக்குது. இதனால அப்பட நாயகியான பூரண நடிகை வருத்தமா இருக்காராம்… இருக்காராம்… படத்துல தனக்கு பெரிய ரோலுன்னு குஷியா இருந்தவரு, இப்போ சோகமா இருக்காராம். திடீர்னு புதுமைக்கு போன் பண்ணி எப்போ சார் ஷூட்டிங்கின்னு நடிகை கேட்டாராம்… கேட்டாராம்… ஏம்மா காமெடி பண்றேன்னு நொந்தவரு, போன்லேயே தயாரிப்பை பற்றி ஒரு மணி நேரம் புலம்பி தீர்த்துட்டாராம்… தீர்த்துட்டாராம்…

சோனிய நடிகைக்கும் கன்னட சுதீப்பான நடிகருக்கும் காதல் தீ பத்திக்கிட்டு எரியுது… எரியுது… இதுக்கு காரணமா இருந்தது காதல் தேசத்து நடிகராம்… நடிகராம்… கன்னட சினிமாவுக்கு நடிக்க போனவரு, அங்கே சுதீப்பையும் சோனிய நடிகையையும் நண்பராக்கி விட்டாராம். பிறகு நடிகரோட காதலுக்கும் துணையா இருந்து, நடிகைகிட்ட கிரீன் சிக்னல் வாங்கித் தந்தாராம்… தந்தாராம்…


Source: Dinakaran
 

வதந்தியால் பயமில்லை த்ரிஷா பேட்டி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வதந்தியால் பயமில்லை த்ரிஷா பேட்டி

3/9/2011 11:43:28 AM

த்ரிஷா கூறியது: என்னைப் பற்றி நிறைய வதந்தி பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறேன். திருமணம் நடந்துவிட்டது என முதலில் சொன்னார்கள். கடந்த வாரம், எனக்கு நிச்சயதார்த்தம் மட்டும் நடந்துள்ளது என்றனர். இதையொரு வேலையாக சிலர் செய்கின்றனர். அதை பெரிதுபடுத்த விரும்பவில்லை. அதற்கு பயப்படவும் இல்லை. என்னைப் பற்றி என் பெற்றோருக்கும் நண்பர்களுக்கும் தெரியும். தற்போது தெலுங்கில் 'தீன்மார்Õ, தமிழில் 'மங்காத்தாÕ ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறேன். மேலும் 2 தெலுங்கு கதைகளை கேட்டிருக்கிறேன். தமிழில் சில கதைகளை கேட்டேன் பிடிக்கவில்லை. இந்தியில் நல்ல ஸ்கிரிப்ட் வந்தால் நடிப்பேன். 'விண்ணைத்தாண்டி வருவாயாÕ, 'மன்மதன் அம்புÕ போன்ற படங்களில் ஹோம்லி வேடம் ஏற்றதால் இனி கிளாமராக நடிக்க மாட்டீர்களா? என்கிறார்கள். அப்படி எந்த முடிவும் எடுக்கவில்லை. 'தீன்மார்Õ படத்தில் கிளாமர் வேடம்தான். இன்றைய காதலர்கள் எப்படி இருக்கிறார்கள். காதலை எவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். பிடித்தால் சேர்ந்து இருப்பது, பிடிக்காவிட்டால் பிரிவது என இப்போதைய இளைஞர்கள் மத்தியில் பரவியிருக்கும் கலாசாரம் பற்றிய கதை. என்னைப் பொறுத்தவரை இப்போதைக்கு கிளாமர் வேடங்களுக்கு தடை போடமாட்டேன்.


Source: Dinakaran
 

ஐபிஎல் கிரிக்கெட் :தீபிகாவுக்கு முக்கியத்துவம் கேத்ரினா விலகல்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஐபிஎல் கிரிக்கெட் : தீபிகாவுக்கு முக்கியத்துவம் கேத்ரினா விலகல்!

3/10/2011 11:32:54 AM

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பெங்களூர் அணியின் விளம்பர தூதராக மைதானத்துக்கு வந்து வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்தார் கேத்ரினா கைப். கடந்த ஆண்டும் போட்டிகளின் ஆரம்பத்தில் வந்தார். இடையில் காணாமல் போய்விட்டார். அவருக்கு பதில், பெங்களூர் அணி ஆடிய ஆட்டங்களின்போது தீபிகா படுகோனை மைதானத்தில் பார்க்க முடிந்தது. இந்நிலையில், Ôஇந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் பங்கேற்க மாட்டேன்Õ என தெரிவித்திருக்கிறார் கேத்ரினா. Ôதொடர்ந்து பட ஷூட்டிங் இருப்பதால் நேரம் இல்லை. அதனால் பங்கேற்கவில¢லைÕ என்றும் அவர் காரணம் சொல்கிறார். ஆனால், Ôஉண்மையான காரணம் இது இல்லைÕ என்கிறது பாலிவுட் வட்டாரம். பெங்களூர் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த்துடன் நெருங்கி பழகி வருகிறார் தீபிகா படுகோன். அதனால் கடந்த ஆண்டு பெங்களூர் அணி ஆடிய ஆட்டங்களுக்கு திடீர் விசிட் அடித்தார் தீபிகா. அவரே அந்த அணியின் திடீர் விளம்பர தூதராகவும் மாறிவிட்டார். இது கேத்ரினாவுக்கு பிடிக்கவில்லையாம். இதனால் கடந்த ஆண்டே அவர் சில போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்தார். இம்முறையும் தீபிகாவுக¢கே முக்கியத்துவம் தரப்படும் என்பதால் பெங்களூர் அணியிலிருந்து விலகும் முடிவை எடுத்திருக்கிறார் கேத்ரினா.


Source: Dinakaran
 

அய்யன் தாமதம் ஏன்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

அய்யன் தாமதம் ஏன்?

3/9/2011 10:00:23 AM

சிங்கமுத்து மகன் வாசன், திவ்யா பத்மினி நடித்துள்ள படம் 'அய்யன்'. நீண்டநாள் தயாரிப்பில் இருந்த இந்தப் படம், வரும் 11-ம் தேதி வெளிவருகிறது. படம் பற்றி இயக்குனர் கேந்திரன் முனியசாமி கூறும்போது, 'வெயிலும், வறட்சி எனும் இரண்டு பின்னணியில் நடக்கும் கதை. இதற்காக மூன்று கோடை காலங்கள் தேவைப்பட்டது. அதற்காக காத்திருந்து படத்தை உருவாக்கினோம். அதுதான் தாமதத்திற்கு காரணம். ஊதாரியாக திரியும் இளைஞன், ஊர்க்காவலனாக மாறுவதுதான் கதை. இளையராஜாவின் இசையில் 6 பாடல்கள் வரவேற்பை பெற்றுள்ளது' என்றார்.


Source: Dinakaran
 

கணவரை பிரிந்தேனா?பூமிகா கொதிப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கணவரை பிரிந்தேனா? பூமிகா கொதிப்பு

3/9/2011 10:01:59 AM

சொந்தமாக தயாரித்த படம் தோல்வியடைந்ததால் கணவர் பரத் தாகூரை, பூமிகா பிரிந்துவிட்டார் என்றும் கணவர் மீது, கொடுமைப்படுத்தியாக போலீசில் புகார் கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபற்றி பூமிகாவிடம் கேட்டபோது, கூறியிருப்பதாவது: என் கணவர் இல்லாமல் தனியாக நான் வெளியூர் அல்லது வெளிநாடு சென்றால் உடனே கணவரைப் பிரிந்துவிட்டதாக அர்த்தமா? அதுமட்டுமில்லாமல் எப்போதும் அவர் என் அருகிலேயே இருக்க முடியுமா? எப்படி தவறான செய்திகள் பரவுகிறது என்பது தெரியவில்லை. இந்த மாதிரியான செய்திகள் ஆச்சர்யமாகவும் அதிசயமாகவும் இருக்கின்றன. பரத் எனது பணத்தை எடுத்துக்கொண்டதாகவும், கணவரால் கொடுமைப்படுத்தப் பட்டதாகவும் லேட்டஸ்ட் தகவல்கள் வந்துள்ளன. எனது குடும்பம் கடந்த வருடம் பெரும் கார் விபத்தை சந்தித்தது. இதில் எனது அம்மா இன்னும் உடல் நலமில்லாமல் இருக்கிறார். அவருக்கு இருதய நோய். அவரைப் பார்ப்பதற்காக மும்பையில் இருக்கிறேன். உடனே, விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், பரத் மீது போலீசில் புகார் செய்துள்ளதாகவும் செய்திகள் வருகிறது. பெற்றோரை பார்த்துக்கொள்வதற்காக வீட்டில் இருக்க கூடாதா? போலீசில் புகார் கொடுத்திருந்தால் எந்த போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்தேன் என்பதை நிரூபிக்க முடியுமா? இரண்டு பேரும் காதலித்தார்கள். ஆனால், ஆரம்பம் முதலே இருவருக்கும் ஒத்துப்போகவில்லை என்றும் சொல்கிறார்கள். ஆமாம், நான் அமைதியானவள். அவர் கொஞ்சம் படபடப்பானவர். இதில் என்ன இருக்கிறது. இரண்டு பேருமே ஒரே எண்ணத்தில் ஒன்றுப்போல் இருந்தால் இன்னொருவர் எதற்கு? ஒருத்தர் மட்டுமே வாழ்ந்துவிட்டு போகலாமே? நான் சொந்தமாக தயாரித்த தெலுங்கு படம், 'தகிட தகிட' ஓடாததுதான் பிரச்னை என்றும் இதனால் ஏற்பட்ட பல கோடி ரூபாய் நஷ்டத்தால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது என்றும் கற்பனையாக கதை சொல்கிறார்கள். இதே படம் வெளியான நாளில் மேலும் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆனது. அந்த படங்களும் ப்ளாப் ஆயின. அதை ஏன் பேசமாட்டேன் என்கிறார்கள். படம் ஓடாததற்காக, கணவரை பிரிந்தேன் என்றால், இதைவிட வேடிக்கை வேறு ஏதாவது இருக்குமா? இவ்வாறு பூமிகா கூறியுள்ளார்.


Source: Dinakaran
 

இமேஜை கெடுக்க முயற்சி :சுனேனா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இமேஜை கெடுக்க முயற்சி : சுனேனா

3/9/2011 10:07:34 AM

'திருத்தணி' படத்தில் நடித்து வரும் சுனேனா கூறியதாவது: தமிழில் ஹோம்லியான கேரக்டரில் நடித்து நல்ல பெயர் வாங்கியுள்ளேன். எந்தப் படத்திலும் கவர்ச்சியாக நடித்ததில்லை. அதற்காக கிளாமராக நடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. கிளாமரும் அழகாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. தமிழில் நடிப்பதற்கு முன்பு ஒரு தெலுங்கு படத்தில் நடித்திருந்தேன். அதிலும் ஹோம்லியான கேரக்டர்தான். அந்தப் படத்தை சென்னையில் வெளியிட்டவர்கள், நான் கவர்ச்சி வேடத்தில் நடித்திருப்பதுபோன்ற படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்டு வருந்தினேன். என் இமேஜை கெடுக்கும் முயற்சியாக இதை கருதுகிறேன். 'திருத்தணி' படத்தில் முதன் முறையாக காமெடி கேரக்டரில் நடித்திருக்கிறேன். பிறகு 'கதிர்வேல்' வெளிவர இருக்கிறது. தமிழில் எனக்கு இருக்கும் நல்ல பெயரை கடைசி வரை காப்பாற்றுவேன்.


Source: Dinakaran
 

கிசு கிசு -டான்ஸ் மாஸ்டரால் ஷூட்டிங் பாதிப்பு

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

டான்ஸ் மாஸ்டரால் ஷூட்டிங் பாதிப்பு

3/9/2011 11:44:19 AM

நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…

நயனம் சீதையா நடிக்கிற பட ஷூட்டிங்கிற்கு டான்ஸ் மாஸ்டரு திடீர்னு வந்தாராம்… வந்தாராம்… நயனத்தோடு தனியா ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தாராம். இதனால ஒரு மணி நேரம் ஷூட்டிங் பாதிச்சுதாம்… பாதிச்சுதாம்… யூனிட்காரங்க நொந்துபோனாங்களாம்… நொந்துபோனாங்களாம்…

அஜ்மல்லு நடிகருக்கு செகண்ட் ஹீரோ வாய்ப்பு அவ்வப்போ வருதாம்… வருதாம்… Ôஇப்போ ஒரு படத்துலதான் அப்படி நடிச்சிருக்கேன். இனிமே சோலோ ஹீரோதான். அதுக்கான கதை இருந்தா சொல்லுங்கÕன்னு உர்ராகி சொல்றாராம்… சொல்றாராம்… கதை சொல்ல வர்ற அறிமுக இயக்குனருங்க முகத்தை தொங்கவிட்டபடி போறாங்களாம்… போறாங்களாம்…

நேபாளக்காரர் படத்தை இயக்குனவரு அடுத்த படத்துக்கு எப்பவோ கதை ரெடி பண்ணிட்டாரு. பெரிய ஹீரோத்தான் நடிக்கணும்னு பிடிவாதமா இருந்தாராம்… இருந்தாராம்… கதை கேட்கிறேன்னு சொன்ன ஹீரோக்கள், அப்போ இப்போன்னு காலம் கடத்துனாங்களாம்… கடத்துனாங்களாம்… அதனால அந்த ஹீரோக்களை பற்றி நெருங்கியவங்ககிட்ட சொல்லி இயக்குனரு புலம்புறாராம்… புலம்புறாராம்… இப்போ வேற ஹீரோவை புக் பண்ணிட்டாராம்… பண்ணிட்டாராம்…


Source: Dinakaran
 

படம் தயாரிக்கிறார் முமைத்கான்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

படம் தயாரிக்கிறார் முமைத்கான்

3/9/2011 10:06:00 AM

கவர்ச்சி நடிகை முமைத்கான், கூறியதாவது: தென்னிந்திய மொழிகளில் நடித்துக் கொண்டும், ஆடிக்கொண்டும் இருக்கிறேன். குறிப்பாக தெலுங்கில் அதிக படங்களில் நடிக்கிறேன். இந்தியில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. 2 வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தில், சுனில் ஷெட்டியுடன் நடித்தேன். அந்தப் படம் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இப்போது வெளியிட ஏற்பாடு நடக்கிறது. சினிமா தவிர மும்பையில், 'சுகர்கேன்டி' என்ற பெயரில், கலைநிகழ்ச்சிகள் நடத்தி தரும் நிறுவனம் தொடங்கியிருக்கிறேன். அடுத்து, சொந்த படம் தயாரிக்கும் ஆசை இருக்கிறது.


Source: Dinakaran
 

ராணுவ வீரராக கமல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ராணுவ வீரராக கமல்

3/10/2011 11:38:04 AM

“ஆயிரத்தில் ஒருவன்” படத்திற்கு பிறகு செல்வராகவன் விக்ரமுடன் ஒரு படம் பண்ணப்போவதாகவும், விஜய்யை வைத்து ஒரு படம் பண்ணப்போவதாகவும் செய்திகள் வெளியாயின. ஆனால் அந்த படங்களை எல்லாம் நிறுத்தி விட்டு, தன் தம்பி தனுஷை வைத்து ‘இரண்டாம் உலகம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ‘இரண்டாம் உலகம்’ படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், உலக நாயகன் கமலஹாசனை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார். இதற்காக கமலிடம் கதை ஒன்றை கூறியுள்ளார் செல்வராகன். மேலும் செல்வராகவன் எழுதிய கதையின் ஒரு வரியை கேட்ட கமல், கால்ஷீட் கொடுக்க சம்மதித்திருக்கிறார். இதில் ராணுவ வீரராக நடிக்கிறார் கமல்ஹாசன். படத்தின் பெயர் மற்றும் ஷூட்டிங் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.


Source: Dinakaran
 

விஜய் ரோலில் வெங்கடேஷ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

விஜய் ரோலில் வெங்கடேஷ்

3/10/2011 11:56:07 AM

சமீபத்தில் விஜய் நடித்து வெளிவந்த ‘காவலன்’ திரைப்படம் மெகா ஹிட்டானது. மலையாள படத்தின் ரீமேக்கில் ஆன இந்த படம் தற்போது தெலுங்கிலும் ரீமேக் ஆகிறது. ‘காவலன்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் விஜய் ரோலில் வெங்கடேஷ் நடிக்க உள்ளார். ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் ஷட்டிங் நடைபெற உள்ளது. தமிழில் காவலன் படத்தை பார்த்த பின்பு தெலுங்கில் இந்த படத்தை எடுத்து நடிக்க வெங்கடேஷ் ஒப்புக் கொண்டாராம்.


Source: Dinakaran