ஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்!

Viswaroopam Gets Maximum Rating Imdb   

சர்வதேச அளவில் சினிமா விவரங்கள் தரும் இணையதளமான ஐஎம்டிபியில் கமலின் விஸ்வரூபம் படம் அதிக ரேட்டிங் பெற்று சாதனை புரிந்துள்ளது.

கமல் படங்களில் அதிக பரபரப்புக்கும் விமர்சனத்துக்கும் உள்ளான படம் விஸ்வரூபம்தான். இந்தியில் இந்தப் படம் பெரிதாகப் போகாவிட்டாலும், தமிழகத்தில் பெரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்திலும் இந்தப் படம் புதிய சாதனை செய்துள்ளது.

இதுவரை எந்த தமிழ்ப் படத்துக்கும் கிடைக்காத அளவுக்கு 10க்கு 9.5 புள்ளிகளைப் பெற்றுள்ளது விஸ்வரூபம்.

இந்தப் படத்துக்கு இதுவரை 12800க்கும் அதிகமான வாசகர்கள் வாக்களித்துள்ளனர். இதுவும் ஒரு புதிய சாதனைதான்.

ஒருவேளை இந்த எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டினால், உலக அளவில் புகழ்பெற்ற 250 படங்களின் பட்டியலில் கமல்ஹாஸனின் விஸ்வரூபமும் இடம்பெற வாய்ப்புள்ளது.

 

கடல் பட நஷ்டம்... மணிரத்னம் வீட்டை முற்றுகையிடும் விநியோகஸ்தர்கள்!

Kadal Loss Distributors Seige Manirathnam House

சென்னை: கடல் படத்தால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. எனவே பணத்தை திருப்பித் தர வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதற்காக அவர்கள் மணிரத்னம் அலுலகத்தை இன்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மணிரத்னம் தயாரித்து இயக்கிய கடல் படம் கடந்த வாரம் வெளியானது. இந்தப் படம் முதல் நாளே பெரும் தோல்விப் படமாக அறிவிக்கப்பட்டது.

இந்தப் படம் குறித்து மணிரத்னம் ஏகத்துக்கும் பில்ட் அப் கொடுத்திருந்ததால், பெரும் விலை கொடுத்து படத்தை வாங்கினர் விநியோகஸ்தர்கள்.

ஆனால் படம் தோல்வியைத் தழுவியதால் நஷ்டத்துக்குள்ளாகியுள்ளனர். கடல் படம் பல அரங்குகளில் ஒரே வாரத்தில் தூக்கப்பட்டுவிட்டது.

தங்களின் நஷ்டத்தை ஈடுகட்ட பணத்தை மணிரத்னம் திருப்பித் தர வேண்டும் என்று கோரி, அவரது வீட்டை முற்றுகையிடப் போவதாக விநியோகஸ்தர்கள் அறிவித்தனர். இதனால் அவர் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த நிலையில், கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் விநியோகஸ்தர்கள். அலுவலகத்தில் நுழைந்து நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோஷம் போட்டனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் போலீசார் வந்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களை அப்புறப்படுத்தினர்.

 

விஸ்வரூபத்திற்கு தொடர்ந்து கூட்டம்... இங்கிலாந்தில் தியேட்டர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

England Viswaroopam More Cinemas

லண்டன்: இங்கிலாந்தில் தொடர்ந்து 3வது வாரமாக அரங்கு நிறைந்த காட்சிகளாக விஸ்வரூபம் ஓடி வருகிறது. மேலும் ரசிகர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து மேலும் 15 இடங்களில் விஸ்வரூபம் திரையிடப்பட்டுள்ளதாக அதன் வெளியீட்டாளரான ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி15ம் தேதிக்குப் பி்ன்னர் மேலும் பல தியேட்டர்களில் விஸ்வரூபம் திரையிடப்படவுள்ளதாகவும் ஐங்கரன் தெரிவித்துள்ளது.

விஸ்வரூபம் படம் இங்கிலாந்தில் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதாக கூறியுள்ள ஐங்கரன் நிறுவனம், படத்திற்கு திரும்பத் திரும்ப ரசிகர்கள் வருவதாகவும் தெரிவித்துள்ளது.

 

ராஜமவுலி படத்தில் பிரசாந்த் ஹீரோ!!

Rajamouli Direct Prashant

சென்னை: ஈ படத்தின் மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த ராஜமவுலி, நடிகர் பிரசாந்தை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.

ஈ படத்துக்குப் பிறது இப்போது பாஹுபாலி என்ற தெலுங்குப் படத்தை ராஜமவுலி இயக்கி வருகிறார். பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் படம் இது. மகேஷ் பாபு நாயகனாக நடிக்கிறார். டகுபதி ராணா பவர்புல் வில்லனாக நடிக்கிறார்.

இந்தப் படத்துக்குப் பிறகு, தமிழ் - தெலுங்கில் ஒரு பிரமாண்ட படத்தை இயக்குகிறார் ராஜமவுலி.

இந்தப் படத்தில் நாயகனாக பிரசாந்த் நடிக்கிறார். பொன்னர் சங்கர் படத்துக்குப் பிறகு பிரசாந்த் நடிக்கும் படம் இது.

இந்தப் புதிய படத்தில் பிரசாந்த் ஜோடியாக சோனம் கபூர் நடிக்கிறார்.

என்னடா... ரொம்ப நாளா பிரசாந்த்தை திரையில் பார்க்க முடியவில்லையே என கேட்டுக் கொண்டிருந்த அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் இது நல்ல செய்திதான்!

 

கதை திரைக்கதை வசனம் இயக்கம் பார்த்திபன்!

Parthiban S New Movie Title

வித்தியாசமான பரிசுகள், புதுமையான கதைகளுக்கு மட்டுமல்ல... ஆச்சரியப்படுத்தும் தலைப்புகளுக்கும் சொந்தக்காரர் இயக்குநர் - நடிகர் ஆர் பார்த்திபன்.

தனது அடுத்த படத்துக்கு இவர் வைத்துள்ள தலைப்பு - 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்!'

வித்தகன் படத்துக்குப் பிறகு, புதிய பாதை 2-ஐ இயக்கும் பணிகளில் மும்முரமாக உள்ளதாக பார்த்திபன் அறிவித்திருந்தார்.

இதற்கிடையில் அவர் ஜன்னல் ஓரம் என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

அத்துடன் இந்தப் புதிய படத்தின் வேலைகளையும் தொடங்கியுள்ளார். இதுகுறித்து ஆர் பார்த்திபனின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டோம்.

"இப்படி ஒரு தலைப்பில் படம் பண்ணப் போவது உண்மைதான்.

புதிய பாதை 2 - படமும் பார்த்திபன் இயக்கத்தில் வெளிவரவிருக்கிறது," என்றார் பார்த்திபனின் உதவியாளர்.

 

சும்மா கிடந்த சீனிவாசனை பவர் ஸ்டாராக்கியதன் விளைவு...!

Power Star Srinivasan S Salary Is Now Rs 1 Cr

ஏதோ ஆசைக்கு ஒரு படம் நடிக்க வந்தார் பைனான்சியல் புரோக்கராக இருந்த சீனிவாசன்.

வெறும் நடிகர் மட்டும் என்றால் நல்லாருக்காதே என்ற எண்ணத்தில், ஒரு உதவி இயக்குநரைப் பிடித்து, கதை திரைக்கதை வசனம் இயக்கம் என அனைத்துப் பொறுப்புகளையும் அவர் தலையில் சுமத்தி, தன் பெயரைப் போட்டுக் கொண்டார். இதைக் கேட்ட போது, ஆமா காசு கொடுத்தேன்... அந்தப் பையன் ஓகேன்னான்.. நான் இயக்குநராகிட்டேன். இதிலென்ன தப்பு என்று திருப்பிக்கேட்டார் சீனிவாசன்.

சீரியஸான காமெடி பீஸாக வலம் சீனிவாசனுக்கு மீடியாக்கள் தந்த முக்கியத்துவம் காரணமாக, பிரபல இயக்குநர்களின் படங்களில் காமெடியனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார் சீனிவாசன்.

அதில் கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் குருட்டாம் போக்கில் ஓடிவிட, இப்போது அவருக்கு புதிய மவுசு. ஏகப்பட்ட புதிய படங்களில் ஒரு பாடலுக்கு அல்லது காமெடியனாக அவரை ஒப்பந்தம் செய்து வருகின்றனர்.

இந்த ஒரே படத்தில் தனது சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்திவிட்டார் சீனிவாசன்.

காரணம் கேட்டால், "ஆமாங்க... இந்த நிலைமைக்கு வர நான் நிறைய இன்வெஸ்ட் பண்ணிட்டேன். அதையெல்லாம் இனிமேதானே திரும்ப எடுக்கணும். அதான் சம்பளத்தை 1 கோடியாக உயர்த்திவிட்டேன்.

என் குரு சூப்பர் ஸ்டார் ரஜினிதான். அவரே என் படத்தைப் பார்த்து பவர் பட்டையைக் கிளப்பிட்டீங்க என்றார். இது எனக்குக் கிடைச்ச மிகப் பெரிய விருது," என்றார்.

 

தான் ஒரு காமெடி பீஸ்னு பவர்ஸ்டாருக்கு தெரியுமா, தெரியாதா?

Does Power Star Know Who He Is

சென்னை: பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுக்கு தான் ஒரு காமெடி பீஸ் என்று தெரியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் ரிலீனாதும் போதும் பவர்ஸ்டாரை கொண்டாடத் தான் செய்கிறார்கள். படத்தில் அவர் ஒரு டயலாக் பேசியிருப்பார், சிலரை பார்த்த உடனே பிடிக்கும், சிலரை பார்க்கப் பார்க்கப் பிடிக்கும், தன்னை பார்க்காமலேயே பிடிக்கும் என்பார். இதை அவரை நக்கலடிக்க வைத்த வசனமாகத் தெரிகிறது. ஆனால் அவரோ அதை மிகவும் பெருமையாகக் கூறியிருப்பார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையாவில் சந்தானம் ஒரு காட்சியில், நானாவது காமெடியன்னு தெரிந்து சுற்றுகிறேன், இந்த பவர் ஒரு காமெடி பீஸுன்னு தெரியாமலே சுத்துறான் என்று கூறியிருப்பார். அவர் படத்தில் வசனம் பேசியிருந்தாலும் அது தான் உண்மை.

முன்னதாக பவர் ஸ்டார் ஒரு பேட்டியில், சூப்பர் ஸ்டாருக்கு போட்டின்னா அது இந்த பவர் ஸ்டார் தான் என்று கூறியிருந்தார். இதைக் கேட்ட சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொந்தளித்துவிட்டனர். அதன் பிறகு இந்த ஆளு ஒரு காமெடி பீஸு போனா போகட்டும் என்று கூறி விட்டுவிட்டனர்.

தான் ஒரு காமெடி பீஸ் என்பது பவர்ஸ்டாருக்கு தெரியுமா, தெரியாதா?

 

'பிராணிகளுக்கு பதிலாக பாலியல் குற்றவாளிகளை பரிசோதனைக்கு பயன்படுத்தலாம்!” – திரிஷா

Trisha Says Why Do Tests On Animal   

சென்னை: பரிசோதனைக் கூடங்களில் முயல், எலி போன்ற அப்பாவி விலங்குகளை பயன்படுத்துவதை விட பாலியல் குற்றவாளிகளை பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என்று திரிஷா சிபாரிசு செய்துள்ளார்.

நாடு முழுவதும் புதிய மருந்து கண்டுபிடிப்புக்கான லேப்களில் நிறைய முயல், எலி போன்றவைகளை அடைத்து வைத்து அவற்றுக்கு மருந்தை செலுத்தி பரிசோதனை நடத்துகிறார்கள். இந்த முறையை தடை செய்ய வேண்டும் என்று திரிஷா கண்டித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் ,"நான் பிராணிகள் பாதுகாப்பு அமைப்பில் இருக்கிறேன். பரிசோதனை கூடங்களில் பிராணிகள் பயன்படுத்துவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இதற்கு தடை விதிக்கப்பட வேண்டும்.

ஜெயிலில் நிறைய குற்றவாளிகள் உள்ளனர். குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்களும் சிறையில் இருக்கிறார்கள். பரிசோதனைக் கூடங்களில் அப்பாவி விலங்குகளுக்கு பதிலாக இந்த குற்றவாளிகளை பரிசோதனைக்கு பயன்படுத்தி தண்டிக்கலாம். "இவ்வாறு திரிஷா கூறினார்.

நடிகை திரிஷா பிராணிகள் பாதுகாப்பு அமைப்புக்கு உதவியாக இருக்கிறார். தெரிவில் திரியும் நாய்களை பிடித்து வளர்த்து தத்து கொடுக்கவும் செய்கிறார். தற்போது பரிசோதனைக் கூடங்களில் எலி, முயலை பயன்படுத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.