4 கோடி வச்சிருந்தா வாங்க, நடிக்கிறேன்.. சொல்கிறார் சசிக்குமார்

Sasikumar Booked Rs 4 Crore A Movie

சென்னை: நடிகர் சசிகுமார் தனது சம்பளத்தை ரூ.4 கோடியாக உயர்த்தி விட்டாராம். இதனால் தமிழ்த் திரையுலகமே ஆச்சரியமாகியுள்ளது.

சசிக்குமாரின் முகவெட்டும், பேஷும் பாஷையும், நடிப்பும் அவருக்கென குடும்பப் பாங்கான ரசிகர்களை சேர்த்து விட்டுள்ளது.

இவர் நடித்து இயக்கிய முதல் படம் ‘சுப்ரமணியபுரம்'. அது ஹிட்டானதால் ‘நாடோடிகள்' படத்தில் நாயகனாக நடித்தார். அப்படமும் வெற்றிகரமாக ஓடிவசூல் குவித்தது.

தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கிய ‘பசங்க' படத்தை தயாரித்தார். அதுவும் ஹிட்டானது. விருதுகளும் கிடைத்தது.

பின்னர் ‘போராளி', ‘சுந்தரபாண்டியன்' படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். இதில் ‘சுந்தரபாண்டியன்' மெகா ஹிட்டானது. இப்பொழுது குட்டிப்புலி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இடையில் போராளி போன்ற சுமார் படங்கள் வந்தாலும் கூட, அடுத்தடுத்து தொடர்ந்து வெற்றிப்படங்களை தந்து வருவதால் சசிகுமார் மார்க்கெட் எகிறியவண்ணம்தான் உள்ளது. எனவே, இப்பொழுது புதுப்படங்களில் நடிக்க அவர் ரூ.4 கோடி கேட்கிறாராம்.

இதைக் கேள்விப்புட்டு கோலிவுட்டில் வாய் பிளந்து நிற்கின்றனராம். ஆனாலும் சசி கேட்பதைக் கொடுப்பார்கள் போலத்தான் தெரிகிறது.

 

கத்திச்சண்டை போடும் கண்ணழகி பிரியாமணி.. சாண்டிக்காக!

Priyamani S New Avathar   

ஹைதராபாத்: விஜயசாந்தி ஸ்டைலில் ஆக்ஷன் படமான சாண்டியில் பிரியாமணி கத்திச்சண்டை போட்டு நடித்துள்ளாராம். இது தெலுங்குப் படமாகும்.

'கண்களால் கைது செய்' படம் மூலம் தமிழில் அறிமுகமான பிரியாமணி, பருத்தி வீரன் படத்தில் நடித்து தேசிய விருது வாங்கியதன் மூலம் முன்னணி நடிகையானார்.

பிரியாமணி தற்போது அதிரடி சண்டை படத்தில் நடிக்கிறார். சாண்டி என்ற பெயரில் தெலுங்கில் தயாராகும் இப்படத்தை தமிழிலும் வெளியிடுகின்றனர். ஆக்ஷன் படமாக இதை எடுக்கின்றனர். இப்படத்தில் பிரியாமணி ரவுடிகளுடன் சண்டை போட்டு நடிக்கிறார். இதற்காக கடும் உடற்பயிற்சிகள் செய்து உடம்பில் வலு ஏற்றி உள்ளாராம்.

சமீபத்தில் வில்லன்களுடன் பிரியாமணி கத்திச்சண்டை போடும் காட்சியை படமாக்கினர். விஜயசாந்தி பழைய படங்களில் ஆக்ஷனில் நடித்து ரசிகர்களை கவர்ந்ததுபோல் தனக்கும் இப்படத்தில் பாராட்டு கிடைக்கும் என்றார் பிரியாமணி.

இதை வி.சமுத்ரா இயக்குகிறார். பிரியாமணிக்கு இது ஒரு மைல்கல் படமாக இருக்கும் என்கின்றனர்.

 

4 கோடி வச்சிருந்தா வாங்க, நடிக்கிறேன்.. சொல்கிறார் சசிக்குமார்

Sasikumar Booked Rs 4 Crore A Movie

சென்னை: நடிகர் சசிகுமார் தனது சம்பளத்தை ரூ.4 கோடியாக உயர்த்தி விட்டாராம். இதனால் தமிழ்த் திரையுலகமே ஆச்சரியமாகியுள்ளது.

சசிக்குமாரின் முகவெட்டும், பேஷும் பாஷையும், நடிப்பும் அவருக்கென குடும்பப் பாங்கான ரசிகர்களை சேர்த்து விட்டுள்ளது.

இவர் நடித்து இயக்கிய முதல் படம் ‘சுப்ரமணியபுரம்'. அது ஹிட்டானதால் ‘நாடோடிகள்' படத்தில் நாயகனாக நடித்தார். அப்படமும் வெற்றிகரமாக ஓடிவசூல் குவித்தது.

தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கிய ‘பசங்க' படத்தை தயாரித்தார். அதுவும் ஹிட்டானது. விருதுகளும் கிடைத்தது.

பின்னர் ‘போராளி', ‘சுந்தரபாண்டியன்' படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். இதில் ‘சுந்தரபாண்டியன்' மெகா ஹிட்டானது. இப்பொழுது குட்டிப்புலி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இடையில் போராளி போன்ற சுமார் படங்கள் வந்தாலும் கூட, அடுத்தடுத்து தொடர்ந்து வெற்றிப்படங்களை தந்து வருவதால் சசிகுமார் மார்க்கெட் எகிறியவண்ணம்தான் உள்ளது. எனவே, இப்பொழுது புதுப்படங்களில் நடிக்க அவர் ரூ.4 கோடி கேட்கிறாராம்.

இதைக் கேள்விப்புட்டு கோலிவுட்டில் வாய் பிளந்து நிற்கின்றனராம். ஆனாலும் சசி கேட்பதைக் கொடுப்பார்கள் போலத்தான் தெரிகிறது.

 

கத்திச்சண்டை போடும் கண்ணழகி பிரியாமணி.. சாண்டிக்காக!

Priyamani S New Avathar   

ஹைதராபாத்: விஜயசாந்தி ஸ்டைலில் ஆக்ஷன் படமான சாண்டியில் பிரியாமணி கத்திச்சண்டை போட்டு நடித்துள்ளாராம். இது தெலுங்குப் படமாகும்.

'கண்களால் கைது செய்' படம் மூலம் தமிழில் அறிமுகமான பிரியாமணி, பருத்தி வீரன் படத்தில் நடித்து தேசிய விருது வாங்கியதன் மூலம் முன்னணி நடிகையானார்.

பிரியாமணி தற்போது அதிரடி சண்டை படத்தில் நடிக்கிறார். சாண்டி என்ற பெயரில் தெலுங்கில் தயாராகும் இப்படத்தை தமிழிலும் வெளியிடுகின்றனர். ஆக்ஷன் படமாக இதை எடுக்கின்றனர். இப்படத்தில் பிரியாமணி ரவுடிகளுடன் சண்டை போட்டு நடிக்கிறார். இதற்காக கடும் உடற்பயிற்சிகள் செய்து உடம்பில் வலு ஏற்றி உள்ளாராம்.

சமீபத்தில் வில்லன்களுடன் பிரியாமணி கத்திச்சண்டை போடும் காட்சியை படமாக்கினர். விஜயசாந்தி பழைய படங்களில் ஆக்ஷனில் நடித்து ரசிகர்களை கவர்ந்ததுபோல் தனக்கும் இப்படத்தில் பாராட்டு கிடைக்கும் என்றார் பிரியாமணி.

இதை வி.சமுத்ரா இயக்குகிறார். பிரியாமணிக்கு இது ஒரு மைல்கல் படமாக இருக்கும் என்கின்றனர்.

 

ஈழத் தமிழ் ஆர்ப்பாட்டம்.. உண்ணாவிரதம்: நடிகர் நடிகைகளும் களமிறங்குகின்றனர்!

Sri Lankan Tamil Issue Nadigar Sangam

சென்னை: தமிழ் ஈழம் அமைவதற்கான பொதுவாக்கெடுப்பு கோரி தமிழ் சினிமா நடிகர் நடிகைகளும் களமிறங்குகின்றனர். தங்களின் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் மற்றும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தை இன்றைய செயற்குழுக் கூட்டத்துக்குப் பிறகு அறிவிக்க உள்ளனர்.

இலங்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்துள்ளது. அங்கு நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை திருத்தங்களுடன் இந்தியா ஆதரிக்க வேண்டும், தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வற்புறுத்தி இப்போராட்டங்கள் நடக்கின்றன.

திரையுலகினரும் இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர். தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தினர் சென்னையில் நேற்று உண்ணாவிரதம் இருந்தார்கள். பெப்சி தொழிற்சங்கத்தினரும் இதில் பங்கேற்றார்கள்.

இந்நிலையில், நடிகர் சங்கமும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. இச்சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம் இன்று மாலை தியாகராயநகரில் நடக்கிறது. நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் ராதாரவி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

இலங்கை பிரச்சினை குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது. இலங்கைக்கு எதிராக எத்தகையை போராட்டத்தில் ஈடுபடுவது என்று ஆலோசித்து முடிவு எடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர். உண்ணாவிரதம் அல்லது ஆர்ப்பாட்டம் நடத்தப்படலாம் என தெரிகிறது. ஒருநாள் படப்பிடிப்பை ரத்து செய்வது பற்றியும் ஆலோசித்து வருகின்றனர்.

நடிகர், நடிகைகள் பலர் வெளிநாடுகளில் படப்பிடிப்புகளில் உள்ளனர். அவர்கள் அனைவரும் கலந்து கொள்வதற்கு வசதியாக போராட்ட தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது. இப்போராட்டத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், இருவரும் பங்கேற்க உறுதியளித்துள்ளதாகத் தெரிகிறது.

இலங்கை அரசை கண்டித்தும் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

 

மோகன் பாபு மகள் தயாரித்த மறந்தேன் மன்னித்தேன் படம் பார்த்து பாராட்டிய ரஜினி!

Rajinikanth Watches Maranthen Mannithen

சென்னை: மோகன் பாபு மகள் லட்சுமி மஞ்சு தயாரித்த மறந்தேன் மன்னித்தேன் படத்தைப் பார்த்து ரசித்துப் பாராட்டினார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

லட்சுமி மஞ்சு தெலுங்கில் தயாரித்த படம் குண்டெல்லோ கோடாரி. குமார் நாகேந்திரா இயக்கிய இந்தப் படத்தில் ஆதி, டாப்சி, சந்தீப் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார்.

தெலுங்கில் ஏற்கெனவே பாடல்கள் சூப்பர் ஹிட்டாகிவிட்டன.

இந்தப் படம் தமிழில் மறந்தேன் மன்னித்தேன் என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை ரஜினிக்காக அவரது வீட்டில் உள்ள திரையரங்கில் போட்டுக் காட்டினார் லட்சுமி மஞ்சு.

படம் பார்த்த சூப்பர் ஸ்டார், புதுமையான கதை, சிறப்பான இசை, ரசித்துப் பார்த்தேன் என பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து லட்சுமி மஞ்சு கூறுகையில், "ரஜினி அங்கிளுக்காக படத்தை போட்டுக் காட்டினேன். எனது நடிப்பைப் பாராட்டிய ரஜினி அங்கிள், படம் புதுமையாக இருந்ததாகவும், யாரும் தொடாத கதையை தேர்வு செய்திருப்பதாகவும் கூறினார். இதைவிட ஒரு பெரிய ஆசீர்வாதம் வேறெதும் இல்லை. என் தந்தை மோகன் பாபுவுக்கும் போன் செய்து படம் குறித்துப் பாராட்டிப் பேசினார் ரஜினி அங்கிள். தெலுங்கில் இந்தப் படம் பெரிய ஹிட்... தமிழில் ரஜினி ஆசி கிடைத்துவிட்டது. இது என் படத்துக்கு கிடைத்த விருது மாதிரி," என்றார்.

 

'பரதேசி' திருட்டு விசிடி… போலீஸ் கமிஷனரிடம் பாலா புகார்

Director Bala Complains Police Paradesi Vcd Sales

சென்னை: சென்னையில் ஆங்காங்கே பரதேசி படத்தில் திருட்டு விசிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அவற்றை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குனர் பாலா இன்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

பிரபல இயக்குநர் பாலா இயக்கிய பரதேசி படம், கடந்த 15ம் தேதி வெளியானது. இது தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆனால், படம் வெளியான சில நாள்களிலேயே, அதன் திருட்டி விசிடிக்கள் கடைகளுக்கு வந்துவிட்டன. இதனால், பரதேசி படம் வியாபார ரீதியில் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறிய பாலா, இந்த விவகாரத்தில் போலீஸார் கடும் நடவடிக்கை எடுத்து பரதேசி திரைப்படத்தை காப்பாற்ற வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

 

வயது குறைப்பு பாலியல் வன் கொடுமைக்கு தீர்வா?: தந்தி டிவியில் காரசார விவாதம்

Thanthi Tv Discuss About Consensual Age

மனமொத்த பாலியல் உறவு 18ல் இருந்து 16 ஆக குறைப்பு... இது பற்றிதான் இன்றைக்கு ஊடகங்களிலும், பொது இடங்களிலும் விவாதப் பொருளாக இருக்கிறது.

மனம் ஒத்துப்போய் உறவு வைத்துக்கொள்வதற்கான வயதை குறைப்பது எந்த அளவிற்கு சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது யாருக்கும் தெரியாது.

திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது ஆணுக்கு 21 என்றும், பெண்ணுக்கு 18 என்றும் உள்ளது. அதே சமயம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டத்தில் 16 வயதில் இருந்து 18 ஆக கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதனையடுத்து பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பாலியல வன்கொடுமைகளுக்கு தண்டனைகளைக் கடுமையாக்கும் அதேவேளையில், இந்த மசோதாவில் உள்ள ஒரு முக்கிய அம்சம் நாடு தழுவிய அளவில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பி இருக்கிறது.

ஆண் - பெண் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் நடைபெறும் பாலியல் உறவுக்கான வயது வரம்பை 18-ல் இருந்து 16 ஆக குறைக்கும் அம்சம்தான் அது. இந்த அம்சம் மூலம், பொய்யான பாலியல் பலாத்காரப் புகார்களை தடுக்க முடியும் என்பதே வாதமாக முன்வைக்கப்பட்டது. வயதை காரணமாக்கி தண்டனையில் இருந்து தப்புவதை தடுக்க இந்த மசோதா வகை செய்யும் என்றும் கூறப்பட்டது.ஆனால், இந்த அம்சத்தால் ஏற்படும் பின்விளைவுகள் பெரும் ஆபத்துக்கு உரியது என்று சமூக ஆர்வலர்கள் பலரும் எச்சரிக்கின்றனர்.

மசோதாவில் கற்பழிப்பு என்ற வார்த்தையை நீக்கவேண்டும். பாலியல் பலாத்காரம் என்ற வார்த்தையை பயன்படுத்தவேண்டும் என்று கூறப்படுகிறது.

மனமொத்து உறவு கொள்ளும் வயதை குறைப்பது எந்த அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தும். இது மட்டுமே குற்றங்களை தடுக்க தீர்வாகுமா? என்று கூறப்பட்டது. இந்த வயது குறைப்பு அம்சம் பற்றி தந்தி டிவியின் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது.

இதில் கள்இயக்ககத் தலைவரும், சமூக ஆர்வலருமான நல்லச்சாமி, பெண்ணியவாதி ராதிகா கணேஷ், உளவியல் நிபுணர் அபிலாஷா ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய நல்லச்சாமி, 16 வயது என்பது உறவு கொள்வதற்கு சரியான வயதுதான் என்றார். இப்போது நம் நாட்டில் பாலியல் வன் கொடுமைக்கு எதிரான சட்டங்கள் கடுமையாகத்தான் இருக்கின்றன. ஆனால் அதை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

இப்போது மக்களை அமைதிப்படுத்த இந்த வயது குறைப்பு சேர்க்கப்படுகிறது. ஆனால் காம உணர்வு என்பது அனைவருக்கும் பொதுவானது. அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் இருக்கிறது.

பாலியல் கல்வியை நாம் புகுத்த வேண்டும். அப்பொழுதுதான் இதை கட்டுப்படுத்த முடியும் என்றார் பெண்ணியவாதி ராதிகா கணேஷ். உளவியல் நிபுணர் அபிலாஷா

பருவம் வந்த பின்னர் 16 சரியான வயது என்று கூறிய அவர் ஏற்றுக் கொண்டாலும் இல்லாவிட்டாலும் இது நடைமுறையில் வந்து விட்டது. இன்றைக்கு பள்ளி பருவத்திலேயே அறியாமல், யாருக்கும் தெரியாமல் உறவு கொள்வது அதிகரித்து வருகிறது என்றும் கூறினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த உளவியல் நிபுணர் அபிலாஷா, கள்ளத்தனமாக நடைபெறுவது அப்புறம் வெளிப்படையாக மாறிவிடும் இது அவர்களை ஊக்குவிக்கும் என்றார்.

அதுவரை 16 வயதுக்கு ஆதரவாக பேசிய நல்லச்சாமி,குடும்ப உறவுகள் சிதைந்து விடும், கலாச்சாரம் சிதைந்து விடும். மீண்டும் நாம் கற்காலத்திற்கு போய்விடுவோம்.

16 மட்டுமல்ல 13 வயதுடையவர்களுக்கும் கூட தேவை ஏற்படுகிறது. 15 வயது குழந்தைகள் கூட குழந்தைகள் பெற்றுக்கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இது மாதிரி செய்வது தவறு குற்றம் என்ற பயம் குழந்தைகளிடையே இருக்கிறது. இந்த வயது குறைப்பின் மூலம் குழந்தைகள் பயமற்று போய்விடுவார்கள் என்றார் அபிலாஷா

இதனால் பெற்றோர்களுக்கு பிரச்சினை. தவறானவர்களிடம் இருந்து பெண் குழந்தைகள் காப்பாற்ற முடியாது என்றும் அவர் கூறினார். குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்கள். இந்த வயது மாற்றம் சீரழிவுக்கு வழி வகுக்கும் என்றார் உளவியல் நிபுணர் அபிலாஷா.

இதைக் கேட்ட நல்லச்சாமி, 16 வயது என்பது குழந்தை யல்ல. தேவை ஏற்பட்டால் இளம் வயதில் திருமணம் செய்வது அவசியம். காமம் என்பது மிகப்பெரிய போதை. இதை கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.

இந்த விவாதத்தைக் கேட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறிவிட்டு முடித்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஒன்றை கவனிக்கவேண்டும். சிறப்பு அழைப்பாளர்கள் பேசுவதை முழுவதுமாக முடிக்க விடமாட்டேன் என்கிறார். அவர்கள் கருத்து சொல்லி முடிக்கும் முன்பாகவே வேறு கேள்விக்கு தாவி தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறார். வரும் நிகழ்ச்சிகளில் இதை தவிர்ப்பது நல்லது.

 

சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான் அமெரிக்க உரிமை விற்பனை!

Kochadaiyaan Us Telugu Rights Sold

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தின் அமெரிக்க உரிமை பெரும் விலைக்கு விற்பனையாகியுள்ளது.

இதன் தெலுங்கு உரிமையை லட்சுமி கணபதி பிலிம்ஸ் பெற்றுள்ளது. தெலுங்கில் விக்ரம சிம்ஹா என்ற பெயரில் வெளியாகிறது இந்தப் படம்.

இந்தியாவின் முதல் 3 டி, மோஷன் கேப்சரிங் தொழில் நுட்பத்தில் வெளியாகும் கோச்சடையானை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்குகிறார். சூப்பர் ஸ்டாருடன் தீபிகா படுகோன், சரத்குமார், ஷோபனா ஆகியோர் நடித்துள்ளனர்.

கேஎஸ் ரவிக்குமார் கதை திரைக்கதை வசனம் எழுதி, இயக்க மேற்பார்வை செய்துள்ளார். ஏஆர் ரஹ்மான் இசை அமைக்கிறார்.

பாடல்களை வரும் மே மாதம் சோனி நிறுவனம் வெளியிடுகிறது. படம் வரும் ஜூலையில் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் மற்றும் ஜப்பான் ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது.

 

விரைவில் நேரடி தமிழ் திரைபடத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன்

Allu Arjun S First Straight Tamil Film Coming Soon

சென்னை: ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ், எஸ்.எம்.எஸ் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய ராஜேஷின் இயக்கத்தில், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்க உள்ளார்.

ஸ்டுடியோ கிரின் நிறுவனம் தயாரிக்க உள்ள இத்திரைப்படத்தின் மூலம் அல்லு அர்ஜூன் தமிழில் நேரடியாக நடிக்க உள்ளார். ஸ்டுடியோ கிரின் தயாரிப்பில் கார்த்தி மற்றும் காஜல் அகர்வால் இணைந்து நடிக்கும் ஆல் இன் ஆல் அழகு ராஜா என்ற திரைப்படத்தை ராஜேஷ் தற்போது இயக்கி கொண்டிருக்கிறார்.

இத்திரைப்படம் முடிந்த பின்னர் அல்லு அர்ஜூன் நடிக்க உள்ள திரைபடத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய படம் பற்றிய செய்தி, தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அஜீத், விஜய் என் இரு கண்கள்... அவர்களுடன் மீண்டும் இணைய ஆசை! - இயக்குநர் எழில்

Waiting Direct Ajith Vijay

அஜீத்தும் விஜய்யும் என் இரு கண்கள் மாதிரி. அவர்களுடன் இணைந்து மீண்டும் படம் பண்ண ஆசை என்கிறார் இயக்குநர் எழில்.

தமிழ் சினிமாவின் யதார்த்தமான இயக்குனர்களில் ஒருவர் எழில். இவரது இயக்கத்தில் முதன்முதலாக வெளிவந்த விஜய் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்' என்ற படம் வெள்ளி விழா கொண்டாடியது.

இதையடுத்து, ‘பெண்ணின் மனதைத் தொட்டு', ‘பூவெல்லாம் உன் வாசம்', ‘தீபாவளி', 'மனம் கொத்திப் பறவை' உள்ளிட்ட ஏராளமான கமர்ஷியல் வெற்றிப்படங்களை கொடுத்தவர்.

இவர் தற்போது விமல் நடிப்பில் ‘தேசிங்குராஜா' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, "விஜய், அஜீத் இருவரையுமே இயக்கியதை பெருமையாக உணர்கிறேன். அவர்கள் இருவரும் என் கண்கள் மாதிரிதான். அவர்களுடன் மீண்டும் இணைவதற்கான நேரத்திற்காக காத்திருக்கிறேன்.

நல்ல கமர்ஷியல் கதைகள் உள்ளன. பெரிய நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுவேன்.

‘தேசிங்கு ராஜா'வில் விமலுக்கென்று இருக்கிற டிரேட் மார்க் காமெடி இருக்கும். சூரி, பிந்து மாதவி என்று கமர்ஷியல் பார்முலாவைக் கலந்து, இமான் இசை மூலம் இப்படத்தை மெருகேற்றிக் கொண்டிருக்கிறேன். கட்டாயம் இப்படம் கமர்ஷியல் வெற்றியாகும்," என்றார்.

 

2013 எனக்கு ரொம்ப ஸ்பெஷல் : சுருதி ஹாசன்

2013 Has Been Special Sruthi

சென்னை: 2013ம் ஆண்டு தனக்கு சிறந்த வருடமாக அமைந்துள்ளதாகவும், செய்யும் தொழில் தெய்வம் என்றும் சுருதிஹாசன் தெரிவித்துள்ளார். நட்சத்திர தம்பதிகளான கமல், சரிகாவின் மகளான ஸ்ருதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிப்படங்களில் நடித்து வருகிறார். ரசிகர்களின் கனவுக்கன்னியாக உள்ள இவர் இசையிலும் வல்லவர்.

தமிழில் ஸ்ருதி..

7ம் அறிவில் அறிமுகமான, இந்த அழகி ' 3' ல் மூக்கில் விரல் வைக்க வைத்தார் தன் திறமையால்.

தெலுக்கில் ‘3'

கைவசம் தற்போது 3 தெலுங்கு படங்கள். இது தவிர்த்து தற்போது புதிதாக பெயரிடப்படாத தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.

ஜோடி அல்லு அர்ஜுன்

இது குறித்து டுவிட்டர் வலைதளத்தில் , ‘ மற்றொரு தெலுங்கு படத்தில் நடிப்பதற்கு தற்போது ஒப்பந்தம் ஆகி உள்ளேன். இதில், அல்லு அர்ஜுனும் நடிக்கிறார். சுரேந்தர் ரெட்டி இதனை இயக்குகிறார். இந்த படத்தில் நடிப்பற்காக நான் மிகுந்த ஆவலில் உள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்.

இந்திப்படம்

சமீபத்தில் தான் அவர் இந்தி படங்களான ராமையா வஸ்தா வையா மற்றும் டி-டே ஆகிய படங்களிலும் நடித்து முடித்துள்ளார்.

தெலுங்கில் பிசி

ரவி தேஜாவுடன் பலுப்பு , ராம் சரண் தேஜாவுடன் எவ்வடு மற்றும் ஜுனியர் என்.டி.ஆர். உடன் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் அவர் நடித்து வருகிறார்.

2013... சோ லக்கி...
'
2013ம் ஆண்டு எனக்கு சிறந்த வருடமாக அமைந்துள்ளது. செய்யும் தொழில் தெய்வம்' என்று கூறியுள்ளார் ஸ்ருதி.

 

கோடிகளை விழுங்கிய சிங்கத்தின் சின்ன கவனக்குறைவு!

Singam 2 Title Costs Few Crores

சூர்யா நடித்து முன்பு வசூலைக் குவித்த சிங்கம் படத்தை சன் டிவி வாங்கி வெளியிட்டது நினைவிருக்கலாம்.

சிங்கம் படத்தின் டிவி உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் சன்னுக்கு விற்றிருந்தனர்.

இப்போது சிங்கம் 2 படத்தை உருவாக்கி வருகின்றனர். இந்தப் படத்தையும் சன்டிவிக்குதான் விற்றுள்ளனர் என்பது ஒரு பக்கம்...

இன்னொரு பக்கம், இந்தப் படத்தின் தலைப்பு சட்டப்படி சன் டிவிக்குதான் சொந்தம் என்று உரிமை கொண்டாடியதால், அந்தத் தலைப்பை பெறுவதற்காக மட்டும் ரூ 3 கோடிக்கு மேல் தரவேண்டியதாகிவிட்டதாம்.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது உறுதி என்பதை படத்தின் க்ளைமாக்ஸிலேயே சொல்லிவிட்டிருந்தார் இயக்குநர். எனவே படத்தை சன்னுக்கு விற்றபோதே தலைப்புக்கான உரிமையை எழுதி வாங்காமல் விட்டதன் விளைவு, கிட்டத்தட்ட படத்தின் பட்ஜெட்டில் நான்கில் ஒரு பங்கு தலைப்புக்கே போய்விட்டதே என ஆதங்கத்தில் உள்ளார்களாம் தயாரிப்புத் தரப்பில்!

 

சமந்தா - சித்தார்த்தின் 'டும் டும் பீ பீ'-க்கு தடை!

Dum Dum Pee Pee Banned Bu Delhi Court

சமந்தா - சித்தார்த் நடித்த 'டும் டும் பீ பீ' படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சித்தார்த்- சமந்தா ஜோடியாக நடித்த தெலுங்கு படம் ‘ஜாபர்தஸ்த்'. கடந்த மாதம் ஆந்திராவில் இப்படம் ரிலீசானது. தற்போது தமிழில் இதை ‘டும் டும் பீ பீ' என்ற பெயரில் டப்பிங் செய்கின்றனர். இதனை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வெளியிடவிருந்தது.

இதற்கிடையில் ‘ஜாபர்தஸ்த்' படத்தை எதிர்த்து பாலிவுட்டின் முன்னணி நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அதில், "பேண்ட் பாஜாபரத்' என்ற படத்தை இந்தியில் எடுத்து வெளியிட்டோம். அதை இயக்குனர் நந்தினி ரெட்டி தெலுங்கில் ‘ஜாபர்தஸ்த்' என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்தை தமிழிலும் ‘டும் டும் பீ பீ' என்ற பெயரில் டப்பிங் செய்கின்றனர். எங்களிடம் அனுமதி பெறாமல் ரீமேக் செய்துள்ளனர். எனவே இப் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தெலுங்கு ‘ஜாபர்தஸ்த்' படத்துக்கு தடை விதித்தார். டி.வி.டி., சி.டி.யிலும் டி.வி.யிலும் அப்படத்தை வெளியிடகூடாது என்றும் உத்தரவிட்டார். இதனால் தமிழிலிலும் இப்படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

சமந்தாவும், சித்தார்த்தும் தீவிரமாகக் காதலித்து வருகின்றனர். அந்த காதலுக்கு அஸ்திவாரம் போட்டதே இந்த ஜபர்தஸ்த் படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: மீண்டும் சிறைக்கு செல்கிறார் சஞ்சய் தத்- தண்டனையை கேட்டு அழுகை!

1993 Mumbai Blasts Sanjay Dutt Get Five Years In Jail

டெல்லி: 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் தண்டனையை 6 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக குறைத்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதனால் அவர் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளார்.

1993ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி மும்பையில் 12 இடங்களில் குண்டு வெடித்ததில் 257 பேர் பலியாகினர், 713 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் தாதா தாவூத் இப்ராஹிம், டைகர் மேமன், அவனது தம்பி அயூப் மேமன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உட்பட 100 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதில் 12 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தடா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அவர்கள் தங்கள் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இதற்கிடையே தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரில் ஒருவரும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 20 பேரில் 2 பேரும் இறந்தனர். அந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பி. சதாசிவம் மற்றும் பி.எஸ். சவ்கான் ஆகியோர் இன்று தீர்ப்பளித்தனர். அதில், மரண தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரில் யாகூப் மேமனைத் தவிர மற்றவர்களின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்துள்ளனர். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு தடா நீதிமன்றம் விதித்த 6 ஆண்டுகள் சிறை தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்துள்ளனர்.

முன்னதாக சஞ்சய் தத் சட்டவிரோதமாக 9 எம்எம் பிஸ்டல் மற்றும் ஒரு ஏகே-56 ரக துப்பாக்கி வைத்திருந்ததாகவும், மேலும் பல கிரிமினல் குற்றச்சாட்டுகளும் அவர் மீது கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தடா நீதிமன்றம் அவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. சஞ்சய் 18 மாதங்கள் சிறையில் இருந்துவிட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் அவரது தண்டனையை உறுதி செய்துள்ளது. அவர் இன்னும் 4 வாரங்களுக்குள் சரணடைய வேண்டும். அவர்கள் ஏற்கனவே 18 மாதங்கள் சிறையில் இருந்ததால் தற்போது 3 ஆண்டுகள் 5 மாதம் சிறையில் இருக்க வேண்டும். அவர் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம்.

இந்த தீர்ப்பை நீதிபதிகள் கூறியபோது சஞ்சய் தத்தின் கண்கள் கலங்கின. தற்போது அவர் மீண்டும் சிறை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

  Read in English: Bombay Blasts: 5-yr Jail for Sanjay Dutt
 

முதல் படத்திலேயே விருது கிடைத்தது அளவில்லா மகிழ்ச்சி!- 'பரதேசி' பூர்ணிமா

Poornima Elated With Her First Natinal Award

சென்னை: பணியாற்றிய முதல் படத்திலேயே தேசிய விருது கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்கிறார் பரதேசி படத்தின் உடை வடிவமைப்புக்காக தேசிய விருது பெற்ற பூர்ணிமா ராமசாமி.

32 வயதாகும் பூர்ணிமாவுக்கு சொந்த ஊர் சென்னைதான். இவர் பணியாற்றிய முதல் படம் பாலாவின் பரதேசிதான்.

இந்தப் படத்தில் நடித்த பெரும்பாலானோருக்கு உடை என்பதே கோணிப்பைதைன். ஒரு சில பெண்களுக்கு மட்டும் அந்தக் காலத்து சீட்டி சீலை என வித்தியாசமான ஆடை வடிவமைப்பு.

வெள்ளைக்காரர்கள், கங்காணி மற்றும் அந்த டாக்டர் கேரக்டர்களுக்கு மட்டும் அந்தக் கால கோட்டு சூட்டு.

விருது பெற்றது குறித்து பூர்ணிமா கூறுகையில், "`பரதேசி' எனக்கு முதல் படம். எடுத்த எடுப்பிலேயே சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருது எனக்கு கிடைத்தது இன்ப அதிர்ச்சி அளிக்கிறது.

அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் நான் மீளவில்லை. தேசிய விருதை நான் எதிர்பார்க்க வில்லை. பெரிய கவுரவமாகக் கருதுகிறேன்.

தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அந்த காலத்தில் எப்படி இருந்து இருப்பார்கள் என்பது குறித்து ஆராய்ச்சி செய்துதான் இந்த ஆடையை வடிவமைத்தோம். இதற்காக நிறைய நாட்கள் நூலகத்திலேயே இருந்தேன். நிறைய புத்தகங்கள் படித்து குறிப்பு எடுத்தேன்," என்றார்.

 

சின்னத்திரையில் சிம்ரனுக்கு 'காட் மதரான' ராதிகா!

Radhika Becomes Godmother Simran

சின்னத்திரையில் ஜாக்பாட் தொகுத்து வழங்கும் சிம்ரனுக்கு அலுத்துப் போய்விட்டதாம். இனி சீரியல், நிகழ்ச்சிகளை தயாரிக்கலாமா என்று யோசிக்கத் தொடங்கியுள்ளாராம்.

சினிமா படம் எடுக்கலாம் என்று யோசித்து வந்த சிம்ரன் அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்று கணவர் கூறியதன் விளைவாக சின்னத்திரையிலேயே கால் ஊன்றலாம் என்று முடிவெடுத்து அதற்கான வேலைகளை தொடங்கியுள்ளாராம்.

சினிமாவில் மார்க்கெட் போன நடிகைகளுக்கு சின்னத்திரைதான் சேஃப்டி. சீரியலோ, நிகழ்ச்சித் தொகுப்போ கை மேல் காசு பார்க்கலாம். குடும்பத்தையும் பாதிப்பில்லாமல் கவனிக்கலாம்.

குட்டி பத்மினி தொடங்கி ரம்யா கிருஷ்ணன் வரை சினிமாவில் இருந்து சீரியல் தயாரிப்பில் கொடி கட்டிப் பறக்கின்றனர். இப்போது அந்த வரிசையில் களம் இறங்கியுள்ளார் சிம்ரன்.

சிம்ரனுக்கு இதில் காட்மதராக இருப்பவர் வேறு யாருமல்ல ராடான் டிவி புகழ் ராதிகாவேதான். அவரைப் போல சின்னத்திரையில் ஜெயிக்கவேண்டும் என்பது சிம்ரனின் ஆசையாம்.

 

கமல் அட்வைஸ்.. இனி ஆண்ட்ரியா அழகுத் தமிழில் பேசுவார்!

ஆண்ட்ரியாவின் அழகைப் போல அவரின் குரலும் அழகுதான். அதனால்தான் நடிப்போடு பின்னணிப் பாடல் பாடுவதையும் கைவசம் வைத்துள்ளார்.

பிரபல நடிகைகளுக்கு பின்னணி பேசுவதும் ஆண்டிரியாதான். ஆனால் பொது இடங்களிலோ, மேடைகளிலோ அம்மணி பேசுவது ஆங்கிலத்தில் தானாம்.

விஸ்வரூபம் படத்தில் கமலுக்கு ஜோடியாக ஆடிய ஆண்ட்ரியா, படத்தின் வெற்றிவிழா மேடையில் ஆங்கிலத்திலேயே பேசினார். இதைப் பார்த்த கமல், தமிழில் பேசுமாறு அட்வைஸ் செய்தாராம்.

தமிழ் பேசத் தெரியாத பூஜா குமாரே தமிழில் நாலு வார்த்தை பேசுகிறார். தமிழ் நன்றாக பேசத் தெரிந்தும் ஏன் தயங்கவேண்டும் என்று கமல் கேட்கவே, மனம் மாறிய ஆண்ட்ரியா இனி தமிழில் மட்டுமே பேசுவது என்று முடிவெடுத்திருக்கிறாராம்.