விஜய், சூர்யா, சிம்ஹா – வித்தியாச கூட்டணியில் தயாரகும் “இறைவி”!

சென்னை: தமிழ் சினிமாவில் முதல்முறையாக ஒரு வித்தியாசமான கூட்டணியில் வர இருக்கின்ற திரைப்படம்தான் கார்த்திக் சுப்புராஜின் "இறைவி".

ஜிகர்தண்டா படத்தை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். அந்தப் படம் அவருக்கு நல்ல வரவேற்பினைப் பெற்றுத் தந்தது. இந்நிலையில் அவரது அடுத்த படம் என்ன வாக இருக்கும் என எதிர்பார்ப்புகள் சினிமா வட்டாரத்தில் சுற்றி வந்தது. அது குறித்த தகவல்கள் இன்று வெளி வந்துள்ளன. அவரது புதிய படத்தின் பெயர் இறைவி.

விஜய், சூர்யா, சிம்ஹா – வித்தியாச கூட்டணியில் தயாரகும் “இறைவி”!

தமிழ் சினிமாவின் "தாடி" வைத்துக் கொண்டு கோடி, கோடியாய் நடிப்பில் குவிக்கும் இரண்டு முக்கியமான நடிகர்கள் விஜய் சேதுபதியும், பாபி சிம்ஹாவும்.

அதற்கு அடுத்தபடியாக தன்னுடைய கதைகளுக்காவே ரசிக்கப்பட்டு பின்னர் இயக்குனரில் இருந்து நடிகராய் மாறியவர் எஸ்.ஜே.சூர்யா. பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் தற்போதுதான் அவரது நடிப்பில் "இசை" என்ற படம் வெளியானது.

இவர்கள் மூவரின் வித்தியாசமான கூட்டணியில்தான் "இறைவி" படம் வெளிவர உள்ளது என்ற தகவலால் அப்படம் குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகியுள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைக்கிறார்.

 

இருக்கு... ஆனா வேற மாதிரி இருக்கு... கண்ணடித்து காமத்தனமாக சிரிக்கும் Hunterrr!

மும்பை: இதோ இன்னும் ஒரு செக்ஸ் பரப்புரைப் படம் வந்து விட்டது. ஆனால் இதில் விழிப்புணர்வு மட்டும் தராமல், இந்தியாவில் நிலவி வரும் போலித்தனமான கலாச்சாரத்தையும் சேர்த்து சாடியுள்ளனராம்.

இந்த இந்திப் படத்தின் பெயர் Hunterrr. ஹர்ஷவர்த்தன் குல்கர்னி இயக்கியுள்ளார். படம் முழுக்க செக்ஸ் குறித்த விஷயம்தான். ஆனால் எல்லாமே லிமிட்டில்தான் இருக்கும் என்று கூறுகிறார் குல்கர்னி.

இருக்கு... ஆனா வேற மாதிரி இருக்கு... கண்ணடித்து காமத்தனமாக சிரிக்கும் Hunterrr!

படத்தின் நாயகனாக வருபவர் குல்ஷன் தேவய்யா. படத்தில் நமக்குத் தெரிந்த முகமாக இருப்பவர் ராதிகா ஆப்தேதான். முதலில் இந்தப் படத்தின் கதையைக் கேட்டதும் டென்ஷனாகி விட்டாராம் ராதிகா. மேலோட்டமாக பார்த்தீங்கனா அப்படித்தான் இருக்கும் என்று அமைதிப்படுத்தி குல்கர்னி முழுக் கதையையும் சொல்லி அவரை இம்ப்ரஸ் செய்து விட்டாராம். இப்போது குல்கர்னி, ஆப்தேவின் மனம் கவர்ந்த இயக்குநர்களில் ஒருவராகி விட்டார்.

படத்தின் கதை சற்று கில்மாவானதுதான். கண்ணில் படும் பெண்களையெல்லாம் அனுபவிக்கத் துடிக்கும் இளைஞனின் கதைதான் இது. அது அழகியாக இருந்தாலும் சரி, ஆண்ட்டியாக இருந்தாலும் சரி, பார்த்துப் பிடித்து விட்டால் உடனே அருகில் போய் விட வேண்டும் என்ற துடிப்புடன் இருப்பவனாம் ஹீரோ.

அது மட்டுமல்லாமல் பெண்களை வீழ்த்துவது எப்படி என்று தன்னுடைய நண்பர்களுக்கும் கூட தாராளமாக டிப்ஸ் கொடுத்து உதவவும் செய்கிறான்.

இருக்கு... ஆனா வேற மாதிரி இருக்கு... கண்ணடித்து காமத்தனமாக சிரிக்கும் Hunterrr!

இந்த ஏடாகூடமான ஹீரோவாக நடித்திருப்பவர் குல்ஷன். பெங்களூரைச் சேர்ந்தவர். மாடல் அழகன். உங்களது ஹீரோ ரொம்ப மோசமானவனா இருக்கானே என்று குல்கர்னியிடம் கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. சின்ன வயதில் ஆபாசப் பட போஸ்டரைப் பார்த்து நீங்களும், நானும் நிச்சயம் ஜொள்ளு விட்டிருப்போம். நமக்கு எதிரில் வரும் நம்மை விட வயதான பெண் அழகாக, உடல் கட்டோடு இருந்தால் நிச்சயம் பார்த்து சைட் அடித்திருப்போம். அவர்களின் உடல் அழகைப் பருகாமல் இருக்க மாட்டோம். இது இயல்பு. இதை மறைக்கத் தேவையில்லை.

அதேபோலத்தான் எனது ஹீரோவும். அவனும் சிறு வயதிலிருந்து தனக்குள் வரித்துக் கொண்ட செக்ஸ் ஆசைகளுடன் வளர்கிறான். வளர்ந்ததும் அவன் செய்யும் செயல்களும் செக்ஸ் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் சமூகத்தில் நிறையவே உள்ளனர்.

இதை ஆபாசமாக இல்லாமல் காமெடியும் கலந்து கொடுத்துள்ளேன். படத்தின் கதையைக் கேட்டதும் ராதிகா ஆப்தே இம்ப்ரஸ் ஆகி விட்டார். நான் நடித்ததில் சிறந்த படம் இதுதான் என்றும் அவர் கூறியுள்ளார் என்றார் குல்கர்னி.

படத்தின் டீசரை காதலர் தினத்தன்று ரிலீஸ் செய்துள்ளனர், மார்ச் 20ம் தேதி படம் திரைக்கு வருகிறதாம்....!

 

நடிகரை அடுத்து இயக்குனரை லவ்வும் நம்பர் நடிகை

சென்னை: 4 முறை காதலில் தோல்வி அடைந்த நடிகை கோலிவுட் இயக்குனர் ஒருவரை காதலிக்கிறாராம்.

கேரளாவில் இருந்து கோலிவுட் வந்த அந்த நடிகை எடுத்த எடுப்பில் பெரிய ஹீரோக்களுடன் நடித்தார். இந்நிலையில் தான் அவருக்கும் இளம் ஹீரோ ஒருவருக்கும் காதலாகி அது வம்பாகி முடிந்தது. நடிகையின் இரண்டாம் காதல் டான்ஸாட, மூன்றாவது காதல் பாஸ் ஆக முடியாமல் போக நான்காவது முறையாக ஒரு மார்க்கெட் இல்லா நடிகரை காதலித்தார்.

அந்த நடிகரோ வேறு ஒருவரை திருமணம் செய்ய உள்ளார். இந்நிலையில் நடிகைக்கு மறுபடியும் காதல் ஏற்பட்டுள்ளதாம். இம்முறை அவர் காதலிப்பது ஒரு இயக்குனரை. வைகைப் புயலின் பிரபலமான வசனத்தை தலைப்பாக வைத்து படம் எடுத்து வரும் அந்த இயக்குனரை தான் நடிகை தீவிரமாக காதலிக்கிறாராம்.

நடிகை அந்த இயக்குனரை கேரளாவுக்கு அழைத்துச் சென்று தனது பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். மேலும் இயக்குனரை திருமணம் செய்ய பெற்றோரிடம் சம்மதமும் வாங்கிவிட்டாராம்.

நடிகையின் காதல் விவகாரம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

 

அடுத்தடுத்து சொத்துக்களை விற்கும் மோகன்லால்... ஏன்?

திருவனந்தபுரம்: மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லால் தனது சொத்துக்களை அடுத்தடுத்து விற்று வருவதால் மலையாளத் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மலையாள நடிகர் மோகன்லாலக்கு திருவனந்தபுரத்தில் ஏராளமான சொத்துகள் உள்ளன. இந்த சொத்துக்களில் பலவற்றை அவர் அடுத்தடுத்து விற்பனை செய்து வருகிறார். திருவனந்தபுரம் அருகே உள்ள கழக கூட்டத்தில் மோகன்லாலுக்கு அதி நவீன வசதிகள் கொண்ட விஸ்வமயா டப்பிங் ஸ்டியோ இருந்தது. இதை சமீபத்தில் ஏரிஸ் என்ற நிறுவனத்துக்கு மோகன்லால் விற்பனை செய்தார்.

அடுத்தடுத்து சொத்துக்களை விற்கும் மோகன்லால்... ஏன்?

அடுத்து, திருவனந்தபுரம் நகரின் மையப்பகுதியில் தலைமை செயலகத்துக்கு நேர் எதிரே இருந்த 50 சென்ட் நில்த்தை சில மாதஙகளுக்கு முன் ஒரு அரசியல் கட்சிக்கு விற்பனை செய்தார்.

சமீபத்தில் திருவனந்தபுரத்தில் வெள்ளயாணி என்ற இடத்தில் இருந்த 1.32 ஏக்கர் நிலத்தை சிறையின் கீழ் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு மோகன்லால் விற்பனை செய்துள்ளார்.

கடந்த 27 வருடங்களுக்கு முன் கிரிடம் என்ற படம் சூப்பர் ஹீட்டானதை தொடர்ந்து இந்த நிலத்தை மோகன்லால் வாங்கினார். இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக மோகன்லாலுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்த இடத்தில்தான் அப்படத்தின் ஷூட்டிங்கும் நடந்தது. எனவேதான் அந்த இடத்தை மோகன்லால் அபபோது வாங்கினார். சென்டிமென்டாக கருதி வாங்கிய இடத்தை மோகன்லால் விற்பனை செய்துள்ளது அவரது நெருங்கிய வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் மோகன்லால் எதற்காக அடிக்கடி சொத்துகளை விற்பனை செய்கிறார் என்று தெரியாமல் மலையாளத் திரையுலகினர் குழப்பமாகியுள்ளனராம்.