'லட்சம் பிரச்சினையோட போராடிகிட்டிருக்கேன், நீ வந்துட்ட கத்தி சுத்தின்னு...'- நிருபரிடம் சீறிய சீமான்

கத்தி படம் குறித்துப் பேசினாலே சீறிப் பாய்கிறார் சீமான், கேள்வி எழுப்புவர்கள் மீது.

விஜய்யும் முருகதாஸும் என் தம்பிங்க... கத்தி படத்தை எதிர்க்க முடியாது... என்னய்யா செய்வ.. என்று கடுங் கோபத்துடன் கேட்கிறார் தன் முன்னால் நின்று கேள்வி எழுப்பும் நிருபர்களிடம்.

லைகா மொபைல் ராஜபக்சே கூட்டாளியாச்சே என்று கேட்டால், 'லைகா மொபைல் இங்கயா இருக்கு? லண்டனிலும் ஐரோப்பாவிலும்தான் இருக்கு. ஒருவேளை ராஜபக்சே மருமகன்கூட அந்த நிறுவனத்துக்கு தொடர்பு இருந்தா, அங்குள்ள தமிழர்கள் அந்த சேவையைப் பயன்படுத்தறாங்களே... அவங்களைப் போராடச் சொல்லுங்க.. எதுக்காக என்னை சீண்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறீர்கள்? லைகாவுக்கு இந்தியாவில் அலுவலகமே இல்லையே' என்கிறார்.

'லட்சம் பிரச்சினையோட போராடிகிட்டிருக்கேன், நீ வந்துட்ட கத்தி சுத்தின்னு...'- நிருபரிடம் சீறிய சீமான்

உண்மையில் இந்தியாவில் தமிழகத்தில் லைகா நிறுவனத்துக்கு அதிகாரப்பூர்வமாக அலுவலகம் உள்ளது. சென்னை அசோக் நகரில், 9வது அவென்யூவில் அமைந்துள்ளது அந்த அலுவகம் (லைக்காவின் இந்தியப் பிரிவுக்கான இணைய தளம் லைகாடெலிகாம்.இன்). இதை எடுத்துச் சொன்னபோது, 'இப்போதானே சொல்றீங்க.. சுபாஸ்கரன் கிட்ட விளக்கம் கேட்டிருக்கோம். அவர் சொன்னபிறகு முடிவு செய்வோம்' என்கிறார்.

லைகா நிறுவனத்துக்காக சீமான் கூட படம் பண்ணப் போகிறார் என்ற தகவலை அறிவித்தவர் யாரோ ஒருவர் அல்ல. சீமான் அங்கத்தினராக உள்ள இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் விக்ரமனும், நிர்வாகி ஆர்கே செல்வமணியும்தான். அதுவும் சாதாரணமாக சொல்லவில்லை.. நூறு மீடியாக்காரர்களைக் கூட்டி வைத்து அறிவித்தார்கள். அதனை அப்போது மறுக்கவில்லை சீமான். இப்போது மறுக்க ஆரம்பித்துள்ளார். என் படம் பற்றி அவர்கள் எப்படி அறிவிக்கலாம் என்று இப்போதுதான் கேட்கிறார், விமர்சனங்கள் படு காட்டமாக வரத் தொடங்கியபிறகு.

'லட்சம் பிரச்சினையோட போராடிகிட்டிருக்கேன், நீ வந்துட்ட கத்தி சுத்தின்னு...'- நிருபரிடம் சீறிய சீமான்

'எல்லாத்துக்கும் இந்த சீமான்தான் போராடணுமா... எனக்காக ஏன் காத்திருக்கணும்... இறங்கிப் போராடுங்க.. ஆனா கத்தி படத்துக்காக நான் போராட மாட்டேன்.. லட்சம் பிரச்சினையை வச்சிக்கிட்டு போராடிக்கிட்டிருக்கேன், வந்துட்டாங்க கத்தி சுத்தின்னு..', என்று அடித்துச் சொல்கிறார் சீமான்.

சரி, அப்ப அடுத்த படத்தை நீங்க லைகாவுக்கு பண்ணலையா? என்றால்...

நான் ஏன் அந்த நிறுவனத்துக்கு பண்ணப் போறேன். கலைப்புலி தாணு அண்ணன் இரண்டு ஆண்டுகளாக தன் நிறுவனத்துக்கு படம் பண்ணக் கோரி வருகிறார். சொந்த நிறுவனம் இருக்கும்போது நான் எதற்கு இன்னொரு நிறுவனத்துக்கு படம் பண்ணப் போறேன்?, என்று திருப்பிக் கேட்கிறார்.

இந்த இடத்தில் ஒரு சின்ன விளக்கம்: தாணு தயாரிக்கும் எல்லாப் படங்களும் அவர் சொந்தப் படங்கள் அல்ல. உதாரணத்துக்கு துப்பாக்கி. இந்தப் படத்தின் உண்மையான தயாரிப்பாளர் ஜெமினி நிறுவனமும் எஸ்ஏ சந்திரசேகரனும்தான். அவர்களுக்காக தன் பேனரில் படத்தைத் தயாரித்துக் கொடுத்தவர்தான் தாணு!

அப்படி எதுவும் நடக்காமல், தாணுவே நேரடியாகத் தயாரித்தால் சீமானின் தம்பிகள், சொந்தங்கள் அனைவருமே சந்தோஷப்படுவார்கள்!

 

ஆகறது ஆகட்டும்... நானும் ஆக 15க்கே வர்றேன்!- இது பார்த்திபன் துணிச்சல்

தன்னுடைய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை ஆகஸ்ட் 15-ம் தேதியன்றே வெளியிட முடிவு செய்து பரபரப்பாக அதற்கான வேலைகளிலும் இறங்கிவிட்டார் இயக்குநர் பார்த்திபன்.

கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில் பார்த்தின் நடிக்கவில்லை. படத்தின் தலைப்பில் உள்ள வேலைகளை மட்டுமே செய்துள்ளார். இன்னொன்று நீண்ட நாளாக ஒரு பெரிய வெற்றிக்காக காத்திருப்பவர், அதற்கேற்ப படத்தை உருவாக்கியிருப்பதாக பேச்சு நிலவுகிறது.

ஆகறது ஆகட்டும்... நானும் ஆக 15க்கே வர்றேன்!- இது பார்த்திபன் துணிச்சல்

அவருக்காகவே ஆர்யா, விஷால், விஜய் சேதுபதி, அமலாபால், டாப்சி, சினேகா என பலரும் உதவி செய்துள்ளனர் இந்தப் படத்துக்கு, தங்கள் சிறப்புத் தோற்றம் மூலம்.

முதலில் இந்தப் படம் ஆகஸ்ட் 1-ம் தேதியன்று வெளியிடத் திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த தேதியில் வேறு படங்கள் அணிவகுத்ததால், தாமாகவே போட்டியிலிருந்து விலகி ஆகஸ்ட் 29ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

ஆனால், இப்படி தள்ளிப் போய்க் கொண்டிருந்தால் படத்தின் மீதான ஈர்ப்பு குறைந்துவிடும் என்பதைப் புரிந்து, என்ன ஆனாலும் சரி என ஆகஸ்ட் 15-ம் தேதியே வெளியிடுகிறார் (அன்றுதான் அஞ்சான் வெளியாகிறது). தியேட்டர்கள் பட்டியலையும் அறிவித்துவிட்டார்.

வெளிநாடுகளிலும் கிடைத்த விநியோகஸ்தர்களைக் கொண்டு படத்தை வெளியிடுகிறார்.

"கதை திரைக்கதை வசனம் இயக்கம்' கண்டிப்பாக இளைஞர்களை கவரும் வகையில் இருக்கும். இது ஒரிஜினல் கதை.. எந்த மொழி டிவிடியிலிருந்தும் சுடப்பட்டதல்ல. அப்படிப்பட்ட ஒரிஜினல் படத்தை தியேட்டர்களில் பார்த்து வெற்றிப் பெற வையுங்கள்," என்று தன் பாணியில் அறிவிப்பும் வெளியிட்டுள்ளார்.

 

அஞ்சான்.. பிரிண்டே கிடையாது.. 100 சதவீதம் டிஜிட்டல் ரிலீஸ்!

திருட்டு டிவிடியைத் தடுக்கும் முயற்சியாக, 100 சதவீதம் டிஜிட்டலிலேயே வெளியாகிறது சூர்யாவின் அஞ்சான்.

ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் இந்தப் படம் ஆயிரத்துக்கும் அதிகமான அரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது.

ஆனால் எல்லா பகுதிகளிலுமே இந்தப் படம் டிஜிட்டல் முறையில் மட்டுமே திரையிடப்படுகிறது. தமிழகம் உள்பட எந்த அரங்கிலும் பிலிம் பிரிண்ட் மூலம் திரையிடப்பட மாட்டாது.

அஞ்சான்..  பிரிண்டே கிடையாது.. 100 சதவீதம் டிஜிட்டல் ரிலீஸ்!

திருட்டு வீடியோவைத் தடுக்கவே இந்த முயற்சியாகும். ஒருவேளை யாராவது இந்தப் படத்தை திருட்டு வீடியோவாக பதிவு செய்தாலும் எளிதில் பிடிபட்டு விடக்கூடிய வகையில் ரகசிய குறி எண் பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.

இதுபோல டிஜிட்டலில் வெளியாகும் முதல் பெரிய படம் அஞ்சான்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் மிகப்பெரிய துவக்க வசூலைக் குவிக்கும் என தயாரிப்பாளர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

 

எஸ் ஏ சந்திரசேகரன் படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா!

சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு எஸ்ஏ சந்திரசேகரன் படத்துக்கு இசையமைக்கிறார் இசைஞானி இளையராஜா.

எஸ் ஏ சந்திரசேகரன் - ஷோபா நாடகக் குழு வைத்து இயங்கிய நாட்களில் அவர்களின் நாடகங்களுக்கு இசையமைத்திருக்கிறார் இளையராஜா.

பின்னர் எஸ் ஏ சந்திரசேகரன் இயக்கிய நீதியின் மறுபக்கம், நான் சிகப்பு மனிதன், எனக்கு நானே நீதிபதி உள்ளிட்ட படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

எஸ் ஏ சந்திரசேகரன் படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா!

ஷோபா இயக்கிய இன்னிசை மழை படத்துக்கும் இசையமைத்தார் இளையராஜா.

இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு எஸ்ஏ சந்திரசேகரன் இயக்கும் புதிய படத்துக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ளார் இசைஞானி.

இந்தப் படம் எப்படி இருக்கும் என்பதை ஒரு வீடியோவாகவே எடுத்து சமீபத்தில் இளையராஜாவுக்கு போட்டுக் காட்டினாராம் எஸ்ஏசி. அதைப் பார்த்து திருப்தியடைந்து இளையராஜா, படத்துக்கு இசையமைக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்தப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

 

33 வயசாச்சு.. மாப்பிள்ளை சிக்கலையே!.. காளகஸ்தி பூஜைக்குத் தயாராகும் நடிகை!!

பிக்கப் டிராப் நடிகரைப் போலவே அவருடன் செகண்ட் வேர்ல்ட் படத்தில் நடித்த குதிரை நடிகைக்கும் இன்னும் திருமணம் கை கூடவில்லையாம்.

33 வயதில் அவர் நின்றிருப்பதால், வயது முதிர்ச்ச முகத்தில் தெரிய ஆரம்பித்து விட்டது. இதையடுத்து வீட்டில் வேகமாக வரன் தேடும் படலத்தைத் தொடங்கினர். ஆனால், வீட்டிற்குப் பிடித்த மாப்பிள்ளையை நடிகைக்குப் பிடிக்கவில்லை, நடிகைக்கு பிடிக்கும் மாப்பிள்ளையை வீட்டில் உள்ளவர்களுக்குப் பிடிக்கவில்லை.

கிட்டத்தட்ட கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கதையாகிப் போனது.

இப்படியாக ஒவ்வொரு வரனாக தள்ளிப் போவதால் கலக்கமடைந்த நடிகையின் குடும்பத்தார், இது தொடர்பாக ஜோசியம் பார்த்துள்ளனர். அப்போது நடிகைக்கு ஏதோ தோஷம் இருப்பதாகவும், அதனால் தான் வரன்கள் தள்ளிப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து காளகஸ்தி கோவிலில் பூஜை ஒன்றை செய்யும் படியும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்களாம். எனவே, விரைவில் நடிகையை அவரது குடும்பத்தாருடன் காளகஸ்தியில் எதிர்பார்க்கலாம்.

சில மாதங்களுக்கு முன்பு கூட புத்த நடிகரும், அவரது தோழி நடிகையும் கூட இப்படித்தான் காளஹஸ்திக்கு வந்து பூஜை செய்து விட்டுப் போனார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்ததுதான்.. குதிரையாருக்கும் அங்கு போனதும் நல்லது நடந்தால் சரிதான்.

 

பெண் போலீஸை “அலேக்காய்” தூக்கி நடனம் ஆடிய ஷாருக்கான்!

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷாருக்கான் அங்கு ஒரு பெண் போலீஸ் அதிகாரியை தூக்கி நடனம் ஆடி புதிய சர்ச்சயைக் கிளப்பி உள்ளார்.

மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற போலீஸ் துறை சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மேற்கு வங்காள மாநிலத்தின் விளம்பர தூதராக இருக்கும் இந்தி நடிகர் ஷாருக் கான் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

பெண் போலீஸை “அலேக்காய்” தூக்கி நடனம் ஆடிய ஷாருக்கான்!

விழா மேடையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றபோது சில இந்தி பாடல்களுக்கு நடனம் ஆடிய ஷாருக் கான் மேடையில் பந்தோபஸ்த்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பெண் போலீஸை அலேக்காக தூக்கி வைத்துக் கொண்டு நடனம் ஆடத் தொடங்கினார்.

இந்த சம்பவம் மேற்கு வங்காள மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் போலீஸ் சீருடையை அவமதிக்கும் விதமாக உள்ளது. அந்த பெண் காவலர் மீது நடவடிக்கை எடுத்து போலீஸ் சீருடையின் கண்ணியத்தை காப்பாற்ற வேண்டும் என்று ஒரு தரப்பினரும், அது ஒரு பொது நிகழ்ச்சி இந்த பிரச்சனையை பெரிது படுத்தக் கூடாது என்று இன்னொரு தரப்பினரும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

 

கத்திக்கு எதிர்ப்பு.. போராட்ட அறிவிப்பு.. விஜய் வீட்டுக்குப் பாதுகாப்பு

சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள கத்தி படத்தை திரையிடக் கூடாது என்று கூறி பல்வேறு தமிழர் அமைப்புகள் கண்டனக் குரலும், போராட்ட அறிவிப்பையும் வெளியிட்டுள்ளதால் நடிகர் விஜய்யின் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விஜய் நடித்து வெளியாக உள்ள கத்தி திரைப்படத்தை இலங்கையைச் சேர்ந்த லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர், இலங்கைத் தமிழர் ஆவார். அதேசமயம், இவர் இலங்கை அதிபருக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

கத்திக்கு எதிர்ப்பு.. போராட்ட அறிவிப்பு.. விஜய் வீட்டுக்குப் பாதுகாப்பு

இதனால் இப்படிப்பட்டவரின் படத்தில் விஜய் நடிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த சிலர் விஜய் வீட்டை முற்றுகையிடப் போவதாகத் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டுக்கு முன்பாக 50-க்கும் மேற்பட்ட போலீஸார் நேற்று குவிக்கப்பட்டனர்.

ஆனால் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை எந்த அமைப்பினரும் அப்பகுதியில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. இருப்பினும் சர்ச்சை இன்னும் ஒயாததால், விஜய் வீடு முன்பாக போலீஸார் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

ஃபெப்சி புதிய தலைவராக ஜி சிவா தேர்வு!

சென்னை: ஃபெப்சி அமைப்பின் புதிய தலைவராக ஜி சிவா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திரைப்பட தொழிலாளர் சங்கமான பெப்சிக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தேர்தல் வடபழனியில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது.

திரைப்பட தொழிலாளர் சங்கங்களின் பல்வேறு பிரிவினைச் சேர்ந்த நிர்வாகிகள் நேரில் வந்து வாக்களித்தனர். மொத்தம் 63 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். இவர்களில் 62 பேர் நேரில் வந்து வாக்களித்தனர்.

ஃபெப்சி புதிய தலைவராக ஜி சிவா தேர்வு!

அதில் சங்கத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் ஜி.சிவா வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்டன்ட் சிவாவை விட 36 வாக்குகள் அதிகம் பெற்றார் ஜி சிவா.

செயலாளர் பதவிக்கு கே.ஆர்.செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 44 வாக்குகளும், எதிர்த்துப் போட்டியிட்ட உமாசங்கர் பாபுவுக்கு 18 வாக்குகளும் கிடைத்தன.

பொருளாளராக சந்திரன் போட்டியின்றி ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஃபெப்சி தலைவராக இதற்கு முன் இயக்குநர் அமீர் பதவி வகித்தார். அவர் இந்த முறை போட்டியிடவில்லை.

 

அதெப்படி அந்த பெண் போலீஸ் ஷாருக்கானுடன் மேடையில் ஆடலாம்?: எதிர்க்கட்சிகள் கண்டனம்

கொல்கத்தா: கொல்கத்தாவில் நடந்த ரக்ஷா பந்தன் கொண்டாடத்தின்போது நடிகர் ஷாருக்கான் பெண் போலீஸ் ஒருவரை தூக்கி நடனம் ஆடியதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாட்டம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கலந்து கொண்டு நடிகர் ஷாருக்கான் கையில் ராக்கி கட்டினார்.

அதெப்படி அந்த பெண் போலீஸ் ஷாருக்கானுடன் மேடையில் ஆடலாம்?: எதிர்க்கட்சிகள் கண்டனம்

விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது நடனம் ஆடிய ஷாருக்கான் பெண் போலீ்ஸ் ஒருவரை தூக்கினார். இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவர் ரித்தேஷ் திவாரி கூறுகையில்,

சீருடையில் இருக்கும் பெண் போலீஸ் மேடையில் நடனம் ஆட எவ்வாறு அனுமதி அளிக்கலாம்? என்றார். சீருடையில் இருக்கும் போலீசார் நடனம் ஆட விதிகள் அனுமதிப்பது இல்லை என்று மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இந்த விழாவில் நடிகை பிபாஷா பாசுவும் கலந்து கொண்டார்.

 

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும் புத்திசாலி நடிகை...

தேசிய விருது வாங்கிய வெற்றிமாலை சூட்டிய படத்தில் அறிமுகமான இனிமையான நடிகை அவர். குடும்பப் பாங்கான நடிகையாக சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்ற எதிர்பார்ப்பை தனது முதல் படத்திலேயே உண்டாக்கினார்.

வாட்டசாட்டமான உடல்வாகு இருந்தும் ஏனோ நடிகைக்கு அடுத்தடுத்து சொல்லிக் கொள்ளுமளவிற்கு நல்ல படங்கள் அமையவில்லை. ஆனாலும், நடிகை அதற்கெல்லாம் சோர்ந்து விடவில்லை.

கிடைத்த கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் சமீபத்தில் கலர்மேன் படத்தில் அதிரடியான அழகிய வில்லியாக களமிறங்கினார். அதனைத் தொடர்ந்து தற்போது புதிய படமொன்றில் ஐயிட்டம் பாடலில் நடிக்கவும் ஓகே சொல்லி விட்டார். இடையிடையே விளம்பரங்களிலும் தோன்றுகிறார்.

புத்திசாலிப் பெண் என நடிகையை திரைவட்டாரத்தில் உள்ளவர்கள் பாராட்டுகிறார்கள். நடித்தால் நாயகியாக மட்டும் தான் என அடம் பிடிக்காமல், காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன் படுத்திக் கொள்கிறார் என்கிறார்கள்.