புற்றுநோய்க்கு சிகிச்சை பெற அமெரிக்கா கிளம்பிய மனீஷா கொய்ராலா

Cancer Treatment Manisha Leaves Us

மும்பை: பாலிவுட் நடிகை மனீஷ் கொய்ராலா புற்றுநோய்க்கு சிகிச்சை பெற அமெரிக்கா கிளம்பினார்.

பாலிவுட் நடிகை மனீஷா கொய்ராலா கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளை நடத்தப்பட்டன. பரிசோதனையின் முடிவில் அவருக்கு கருப்பை புற்றுநோய் இருப்பது தெரிய வந்துள்ளது என்று கூறப்பட்டது. அவரது தாய் சுஷ்மா அவருக்கு துணையாக மருத்துவமனையில் இருந்தார்.

பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இதையடுத்து புற்றுநோய்க்கு சிகிச்சை பெற அவர் நேற்று இரவு அமெரிக்கா கிளம்பினார். விமான நிலையத்திற்கு வந்த அவரை அங்கிருந்த புகைப்படக்காரர்கள் படம் பிடித்தனர்.

திருமணத்திற்கு பிறகு திரையுலகை விட்டு சற்று ஒதுங்கியே இருந்த மனீஷாவுக்கு குடிப் பழக்கம் இருந்தது. அண்மையில் தான் அந்த பழக்கத்தை விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விஜயக்கு மும்பை ராசியாகிவிட்டதோ?

Vijay Spend 40 Days Mumbai

சென்னை: இயக்குனர் ஏ.எல். விஜய் படத்தின் ஷூட்டிங்கிற்காக நடிகர் விஜய் 40 நாட்கள் மும்பையில் தங்கவிருக்கிறார். விஜய்க்கு மும்பை நகர் ராசியாகிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இளைய தளபதி விஜய் நடித்த துப்பாக்கி படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டது. அந்த படமும் சூப்பர் ஹிட்டாகிவிட்டது. இந்நிலையில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிக்கும் விஜய் ஷூட்டிங்கிற்காக 40 நாட்கள் மும்பையில் தங்கவிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் இந்த 40 நாட்களில் படமாக்கப்படுகிறது. இதற்காக இயக்குனர் விஜயின் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா உள்ளிட்ட வழக்கமான படக்குழுவினர் மும்பைக்கு செல்கின்றனர். மும்பை நகரில் எடுக்கப்படும் இந்த படமும் துப்பாக்கி போன்று ஹிட்டாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

துப்பாக்கியும் மும்பையில், அதை அடுத்த படமும் மும்பையில். என்ன விஜய் மும்பை உங்களுக்கு ராசியான ஊராகிவிட்டதோ?

 

பொம்மலாட்டத்தில் சண்டித்தனம் செய்யும் ப்ரீத்தி!

Preethi S Negative Role Bommalattam

பற்பல வேடங்களில் நடித்து, இடையில் திரு்மணமாகி வீட்டோடு செட்டிலாகியிருந்த ப்ரீத்தி இப்போது தனது குழந்தை ஓரளவுக்கு வளர்ந்து விட்டதைத் தொடர்ந்து மறுபடியும் நடிப்புக் களத்தில் குதித்துக் கலக்க ஆரம்பித்துள்ளார்.

மறுபடியும் வெரைட்டியாக வெளுத்து வாங்கி வரும் ப்ரீத்தி, பொம்மலாட்டம் தொடரில் வில்லத்தனத்திலும் பட்டையைக் கிளப்பி வருகிறார்.

சிஏ படித்துள்ள ப்ரீத்தி நடிக்க வந்ததே சுவாரஸ்யமான விஷயம்தான். ஆடிட்டர் வேலையா, நடிப்பா என்ற கேள்வி வந்தபோது நடிப்பையே தேர்ந்தெடுத்தார் ப்ரீத்தி. அடுத்தடுத்து பல சீரியல்களில் நடித்த அவரும், சக டிவி நடிகரான சஞ்சீவும் காதலித்துக் கல்யாணமும் செய்து கொண்டனர். உடனடியாக குழந்தையையும் பெற்றெடுத்தார் ப்ரீத்தி. இதனால் கடந்த இரண்டரை வருடங்களாக நடிப்புக்கு பிரேக் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது குட்டிப் பாப்பா வளர்ந்து விட்டதால் மறுபடியும் நடிக்க வந்துள்ளார். ப்ரீத்தி மறுபடியும் நடிக்க கணவர் சஞ்சீவும் பச்சைக் கொடி காட்டி விட்டாராம். தற்போது மனதில் உறுதி வேண்டும், பொம்மலாட்டம் தொடர்களில் நடித்து வரும் ப்ரீத்தி, பொம்மலாட்டம் தொடரில் வில்லத்தனத்திலும் கலக்கி வருகிறார்.

வீட்டுக்கு அடங்காத, யாருக்கும் பணியாத அல்ட்ரா மாடர்ன் பணக்காரப் பெண்ணாக கலக்கி வருகிறார் ப்ரீத்தி.

வீட்டுக்காரர் சஞ்சீவ் திருமதி செல்வத்தில் அதிரடி செய்து கொண்டிருக்கிறார்... ப்ரீத்தி பொம்மலாட்டத்தில் வெளுத்துக் கட்டி வருகிறார்.. செம ஜோடிதான்.

 

மௌனம் பேசியதே படத்தோடு சினிமாவை விட்டு விலக இருந்தேன்: த்ரிஷா

Trisha Decides Quit Cinema

சென்னை: சூர்யாவுடன் நடித்த மௌனம் பேசியதே படத்தோடு சினிமாவுக்கு முழுக்கு போடவிருந்தாராம் த்ரிஷா.

மாடலிங் துறையில் கால் பதித்து அதன் பிறகு நடிக்க வந்தவர் த்ரிஷா என்பது அனைவரும் அறிந்ததே. மிஸ் சென்னை பட்டம் வென்ற த்ரிஷாவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்த நேரத்தில் அவருக்கு வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் அவரது அம்மா உமாவோ சினிமா உலகம் பற்றி நமக்கு எதுவும் தெரியாது அதெல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

3 படங்களில் மட்டும் நடிக்கிறேன், ஒத்து வரவில்லை என்றால் சினிமாவில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு தான் த்ரிஷா நடிக்க வந்துள்ளார். அவரது போதாத நேரம் லேசா, லேசா மற்றும் மௌனம் பேசியதே ஆகிய 2 படங்களும் சரியாக ஓடவில்லை. சரி நமக்கெல்லாம் சினிமா ஒத்துவராது என்று விலக இருந்த நேரத்தில் சாமி பட வாய்ப்பு கிடைத்தது.

அந்த படம் ஹிட்டாகவே த்ரிஷா சினிமாவில் தங்கிவிட்டார். பிறகு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு பட உலகிலும் ஒரு கலக்கு கலக்கினார்.

 

டிரைவரின் சாவியை எடுத்து ஜாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டாரா புவனேஸ்வரி?

Actress Buvaneswari May Be Booked Under Goondas

சென்னை: கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி மீது இருப்பதால் தற்போது அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழே கைது செய்ய போலீஸார் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுக ஆட்சியும், புவனேஸ்வரிக்கும் ஏழாம் பொருத்தம்தான். கடந்த 2002ம் ஆண்டும் இப்படித்தான் அல்லோகல்லப்பட்டார் புவனேஸ்வரி. அப்போது அவரை விபச்சாரத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கோர்ட் வாசலில் வைத்து சாமியாடுவது போல பேசினார் அப்போது புவனேஸ்வரி. அப்போது இணை கமிஷனராக இருந்தவர் ஜார்ஜ். அவர்தான் தற்போது கமிஷனராக இருக்கிறார். இந்த நிலையில்தான் தியேட்டரில் வம்பு வளர்த்து சண்டைக்குப் போய் போலீஸாரையே அடித்து துவைத்தெடுத்ததாக கூறி கைதாகியுள்ளார் புவனேஸ்வரி.

புவனேஸ்ரி மீது கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஒரு பக்கா அக்மார்க் கிரிமினல் போல புவனேஸ்வரி மீது சகலவிதமான வழக்குகளும் உள்ளதால் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீ்ழ் கைது செய்து ஒரு வருடத்திற்கு உள்ளேயே தங்க வைக்க காவல்துறையினர் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் சென்னை ஈஞ்சம்பாக்கம் பிரார்த்தனா டிரைவ் இன் தியேட்டர் வளாகத்தில் புவனேஸ்வரி நடந்து கொண்டவிதம் குறித்து பரபரப்பான தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளன.

சம்பவம் நடந்த அன்று புவனேஸ்வரிதான் காரை ஓட்டி வந்தாராம். தியேட்டருக்குள் நுழையும்போதே தொடர்ந்து ஹார்ன் அடித்தபடி பேய் போல வந்தாராம் புவனேஸ்வரி.மேலும் கார்நகர முடியாமல் நீண்ட கியூ இருந்ததால் கோபமும் ஆத்திரமுமாக காணப்பட்டாராம்.

அவரது கார் முன்னால் நின்றிருந்த கால் டாக்சி மீது மோதவே அதன் டிரைவரான குமார் இறங்கி வந்தபோது ஒரு டிரைவர் உனக்கு கோபம் வருதா என்று கோபத்துடன் கேட்டாராம்.

மேலும் குமாரின் கார்சாவியை எடுத்து தனது ஜாக்கெட்டில் போட்டுக் கொண்டாராம் புவனேஸ்வரி. அதை குமார் கேட்கவே ஏதோ ஒரு மாதிரியாகப் பேசி பலமாக சிரித்தாராம் புவனேஸ்வரி.

மேலும் டிரைவர் குமாரை, புவனேஸ்வரியுடன் வந்தவர்கள் அடித்து துவைக்கவே அவர் தப்பி ஓடியுள்ளார். அதையடுத்து குமார் மறுபடியும் வர வேண்டும், வரும் வரை போக மாட்டோம் என்று கூறி புவனேஸ்வரியும், அவரது ஆட்களும் தியேட்டர் வாசலிலேயே ஸ்டூல் போட்டு உட்கார்ந்து கொண்டார்களாம்.

தகவல் அறிந்து வந்த போலீஸாரையும் புவனேஸ்வரியி்ன் ஆட்கள் அடித்துத் துவைத்து விட்டார்களாம்.

இப்படி படு மோசமாக நடந்து கொண்டதால்தான் புவனேஸ்வரி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் போட்டு படு தீவிரமாக தேடிப் பிடித்து கைது செய்ததாம் போலீஸ்.

 

நீ இல்லாமல் நான் இல்லையே..!

Kamal S Lyrics Viswaroopam   

சென்னை: கமல்ஹாசனின் விஸ்வரூபம் ஆடியோ டிசம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அப்படத்தில் கமல்ஹாசன் எழுதி, அவரும், சங்கர் மகாதேவனும் இணைந்து பாடிய ஒரு பாடல் வரிகள் வெளியாகியுள்ளன.

சங்கர் எஹஸான் லாய் இசையில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது. நடனத்தின் வடிவிலான இந்தப் பாடலை கமல் ஹாசன் எழுதியுள்ளார். அவரும், சங்கர் மகாதேவனும் இணைந்து பாடியுள்ளனர்.

பாடல் வரிகள் இதுதான் ..

உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா

க்ரிஷ்ணா

உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
நிதம் காண்டின்ற வான் கூட நிஜமில்லை
இதம் சேர்க்கும் கனாக் கூட சுகமல்ல
நீ இல்லாமல் நான் இல்லையே
உன்னைக் காணாமல்
உன்னைக் காணாமல்
கம்தநிஸ நித பம கம ரிகரிஸ

உன்னைக் காணாமல்
பெண் நெஞ்சு தடுமாறுதே
விதை இல்லாமல் வேரில்லையே
நளினி மோகண ஷியாமள ரங்கா
தீம் தீம் க்டதகதின்னா
நடன பாவ ஸ்ருதிலயகங்கா
க்டதகதின் தீம் தீன்னா
சரிவர தூங்காது வாடும்
ராதா நான் உனக்கென
ராதா தான் உனக்கொரு
ராதா தான்

 

என்னைவிட சூர்யா தான் ஹேன்ட்சம்: கார்த்தி

Surya Is The Handsome One Karthi

திருச்சி: தன்னை விட தன் அண்ணன் சூர்யா தான் அழகு என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நடந்த பள்ளி சார்ந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டார். திருச்சி சிறுகனூர் எம்.ஏ.எம். கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

அகரம் அமைப்பிற்கு இந்த கல்லூரி அமைப்பு சார்பில் உதவிகள் செய்யப்படுகிறது. இது தவிர 10,000 மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவே இங்கு வந்தேன். நான் தற்போது நடிக்கும் பிரியாணி படம் காமெடி, திரில் மற்றும் ஜாலியாக இருக்கும். அகரம் அமைப்பு பல்வேறு இடங்களில் சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் எனது ரசிகர்களும் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

அரவாணிகள் துணிச்சலுடன் முன்வந்து வியாபாரம் உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும். அவர்களின் கோரிக்கையை ஏற்று 5 அரவாணிகளுக்கு ஜூஸ் கடை வைக்க உதவியுள்ளோம் என்றார்.

அப்போது உங்களை விட உங்கள் அண்ணன் சூர்யா அழகா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,

நிச்சயமாக என்னைவிட சூர்யா தான் அழகு என்றார் தனக்கே உரிய அடக்கத்துடன்.