என்கிட்ட இல்லாதது... ஒவியாகிட்ட என்ன இருக்கு? - தீபா ஷா காட்டம்

Deepa Sha Alleges Oviya

சில்லுன்னு ஒரு சந்திப்பு படத்தில் முதல் நாயகி நான்தான். ஆனால் என்னை விட ஓவியாவுக்கு அதிக முக்கியத்துவம் தராங்க... என்னைவிட அப்படி என்ன இருக்கு அவரிடம்?, என்று காட்டமாகக் கேட்டுள்ளார் நடிகை தீபா ஷா.

விமல், ஓவியா, தீபாஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் சில்லுன்னு ஒரு சந்திப்பு. படம் பெரிதாக எடுபடவில்லை.

ஆனால் படம் தொடர்பான ஹீரோயின்கள் இருவரும் மோதிக் கொண்டிருப்பதுதான் பளிச்சென்று தெரிந்துள்ளது.

இந்தப் படப்பிடிப்பின்போதே ஓவியாவுக்கும் தீபா ஷாவுக்கும் மோதல் மூண்டது. இருவருக்கும் ஒரே கேரவன் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒருநாள் தீபா ஷா உள்ளே இருந்தபோது, ஓவியா நுழைந்துவிட்டாராம். உடனே அவரை வெளியே போ என்று கூறியிருக்கிறார் தீபா ஷா. இதனால் கோபமடைந்த ஓவியா, ஸ்பாட்டிலேயே அவரை வெளுத்து வாங்க, இயக்குநர் வந்து சமாதானப்படுத்தினாராம்.

படம் வெளியான பிறகு, விளம்பரங்களில் தன்னைப் புறக்கணிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார் தீபா ஷா.

அவர் கூறுகையில், "சில்லுன்னு ஒரு சந்திப்பு' படத்தின் புரமோஷனுக்கு வர ஆசைப்பட்டேன். ஆனால் என்னை கூப்பிடவே இல்லை. ஓவியாவுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்தனர்.

போஸ்டர்கள், விளம்பரங்களில் கூட என்னைப் புறக்கணித்துவிட்டார்கள். என்னிடம் இல்லாதது அப்படியென்ன ஓவியாவிடம் உள்ளது... என்னைப் புறக்கணிப்பதன் காரணத்தை நான் புரிந்து கொண்டேன்," என்றார்.

 

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் ஹீரோவானார் ஸ்ரீ!

Shri Plays Lead Role Mysskin Movie

மிஷ்கின் இயக்க, இளையராஜா இசையில் உருவாகும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் நாயகனாக நடிக்கிறார் வழக்கு எண் 18/9-ல் நடித்த ஸ்ரீ.

மிஷ்கினின் லோன் வுல்ப் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில், மிஷ்கின் அலுவலகத்தில் நடந்தது.

விழாவில் எழுத்தாளர் பிரபஞ்சன், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, தயாரிப்பாளர் கமீலா நாசர், நடிகர் செல்வா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிரபஞ்சன் கூறுகையில், "இப்படத்தின் விளம்பரத்தை போலவே தலைப்பும் மிகவும் வித்தியாசமானது. படத்தின் மேல் உள்ள ஆர்வத்தை கூட்டுவதோடு, ரசிகர்கள் மத்தியில் ஒரே நாளில் இந்தப் படம் பிரபலமாகிவிட்டது மிஷ்கின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பைக் காட்டுகிறது," என்றார்.

வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஸ்ரீ, அடுத்து நடிக்கும் படம் இதுதான்.

இந்த வாய்ப்பு குறித்து அவர் கூறுகையில், "நான் கொடுத்து வைத்தவன்... முதல் படம் பாலாஜி சக்திவேல், இரண்டாவது படம் மிஷ்கின் என தலை சிறந்த இயக்குனர்களிடம் பணிபுரிவது என் பாக்கியமே. என் முதல் இரண்டு படங்களுமே கதை அமைப்பில் மட்டுமின்றி தலைப்பிலும் மிகவும் வித்தியாசமானவையாக அமைந்துள்ளது. இயக்குநர் மிஷ்கினிடம் நிறையவே கற்று வருகிறேன்," என்றார்.

 

எம்.எஸ். சுப்புலக்ஷ்மியாக நடிக்க மறுத்த ஐஸ்வர்யா

Aishwarya S Loss Vidya Balan S Gain

மும்பை: கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலக்ஷ்மியாக நடிக்க ஐஸ்வர்யா மறுத்துவிட்டாராம். அதன் பிறகு தான் அந்த வாய்ப்பு வித்யா பாலனுக்கு சென்றுள்ளது.

ஐஸ்வர்யா கர்ப்பமானதில் இருந்து படத்தில் நடிக்கவில்லை. தற்போது குழந்தைக்கு ஒரு வயதாகியும் இன்னும் அவர் ஒரு படத்தில் கூட ஒப்பந்தம் ஆகவில்லை. ஐஸ் கதை கேட்கிறார் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்ற செய்தி மட்டும் அடிக்கடி வருகிறது. ஆனால் அவர் எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.

இந்நிலையில் ராஜீவ் மேனன் தான் கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கும் படத்தில் எம்.எஸ்ஸாக நடிக்க முதலில் ஐஸ்வர்யாவிடம் தான் கேட்டாராம். ஆனால் ஐஸ் ராஜீவ் மேனனுக்கு பதிலே அளிக்கவில்லை. இதையடுத்து தான் அந்த வாய்ப்பு வித்யா பாலனுக்கு சென்றுள்ளது.

தி டர்ட்டி பிக்சரில் சில்க்காக படுகவர்ச்சியாக நடித்த வித்யாவா பாரத ரத்னா எம்.எஸ்ஸாக நடிப்பது என்று பல கண்டன குரல்கள் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

பாரதிராஜா பேச்சு பைத்தியக்காரனின் பேச்சு...! - கொதிக்கும் இளையராஜா

Ilayaraaja Blasts Bharathiraja

இளையராஜா - பாரதிராஜா உரசல், அரசல் புரசலாக இருந்தது போய்... வெளிப்படையாகவே வெடித்துவிட்டது.

அன்னக்கொடியும் கொடிவீரனும் இசை வெளியீட்டு விழாவுக்கு தன்னை வலுக்கட்டாயமாகக் கூப்பிட்டு மேடையில் அவமதித்துவிட்டார் பாரதிராஜா என இளையராஜா குமுறியுள்ளார்.

குமுதம் இதழில் வாசகர் ஒருவர் "மதுரையில் உங்கள் நண்பர் பாரதிராஜாவின் பட விழாவில் அவர் இப்போதும் இளைஞர் போல் படு சுறுசுறுப்பாகவும் நடிகைகளுடன் ஜாலியாகவும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் உங்களைப் பற்றி பேச வரும்போது மட்டும் குறை கூறியும், புத்திமதி சொல்வதுமாக இருந்தாரே, அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?", என்று கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த இளையராஜா, தன் மனக்குமுறலை பகிரங்கமாகக் கொட்டியுள்ளார்.

தனது பதிலில், "மேடையில் என்னைப் பற்றி பாரதிராஜா பேசிய விஷயங்கள் எல்லாமே என்னிடம் தனியாகப் பேசியிருக்க வேண்டியவை.

ஆனால் ஏன் அப்படி பொதுமேடையில் பேசினார் என்றால் தனியாக என்னிடம் பேசும்போது அவருக்கு நான் கொடுக்கும் பதிலில், பேச முடியாவமல் வாயடைத்துப் போவாரே - அதுதான் காரணம்.

கிடைத்தற்கரிய மானிட ஜென்மத்தில் கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கடைத்தேறுவதை விட்டுவிட்டு தன் புகழைத் தானே பாடுவதிலும், அடுத்தவனை குறை கூறுவதிலுமா இந்த ஜென்மம் கழிய வேண்டும்?

அவருக்கு என் மீதுள்ள குறையெல்லாம் நன் அவரைப் போல இல்லையே என்பதுதான். அதாவது குடித்துக் கொண்டும், கூத்தடித்துக் கொண்டும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ என்னவோ? இல்லை, இப்படி ஏதோ ஒரு விஷயத்தை நான் இழந்து கொண்டிருப்பதாக நினைக்கிறாரோ?

அப்படி நான் மாறுவதென்பது நடக்கிற காரியமா? அவர் நினைக்கிறபடிதான் நான் இருக்க வேண்டுமா? இல்லை என்றால் ஏன் இந்தப் புத்திமதி, என்னை மேடையில் அவமதிப்பது? அவர் பேச்சை வெறும் பைத்தியக்காரன் பேச்சு என்று விட்டு விட வேண்டியதுதான்.

எப்படியோ இந்த ஜென்மம் வீணாகி விட்டது. கடந்தது கடந்ததுதான். பூங்காற்று திரும்புமா? என்ன இப்படி எழுதிவிட்டேனே என்று உங்களுக்குத் தோன்றலாம்.

அவ்வளவு பெரிய விழாவில் என்னை வற்புறுத்தி அழைத்துச் சென்று என்னை அவமதித்துப் பேசியது மட்டும் ஏற்புடைய செயல்தானா? அப்படிப் பேசினால் அது இணையதளத்திலும், காணொளிகளிலும் பதிவாக ஆகிவிடும் என்பது பாரதிராஜாவுக்குத் தெரிய வேண்டாமா?," என்று கூறியுள்ளார்.

 

கங்னம் ஸ்டைலை விட கொலவெறி தான் பிடிக்கும், இரண்டுமே குப்பை: சோனம்

Sonam Loves Kolaveri Because Its Rubbish

மும்பை: தனக்கு கங்னம் ஸ்டைலை விட கொலவெறி பாடல் தான் பிடிக்கும் என்று பாலிவுட் நடிகை சோனம் கபூர் தெரிவித்துள்ளார்.

தனுஷ் சோனம் கபூருடன் சேர்ந்து ராஜ்னாஹா என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷ் வாரனாசியைச் சேர்ந்த பிராமணராக நடிக்கிறார். தனுஷின் நாயகி சோனம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில்,

ஒய் திஸ் கொலவெறி பாட்டை தனுஷ் தான் எழுதியுள்ளார். அது அற்புதமாக உள்ளது. அண்மையில் கலக்கிய கங்னம் ஸ்டைலை விட எனக்கு கொலவெறி தான் பிடிக்கும். இந்த மாதிரி குப்பை பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.

பாலிவுட்டில் புதுமுகமான தனுஷுடன் நடிப்பது பற்றி கேட்டதற்கு, இந்த ஆண்டு நான் பல புதிய முயற்சிகளில் இறங்கியுள்ளேன். இந்த படம் மிகப் பெரிய ஹிட்டாகும் என்று நம்புகிறேன் என்றார்.

ராஜ்னாஹாவுக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மீண்டும் ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம்ரவி!

Jayam Brother Together Again Ags

தில்லாலங்கிடி படத்துக்குப் பிறகு மீண்டும் ஜெயம் ராஜா - ஜெயம் ரவி இணைகின்றனர். இந்தப் புதிய படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரிக்கிறது.

தரமான படங்களைத் தரும் ஏஜிஎஸ் நிறுவனம் தனது 12-வது படைப்புக்காக மீண்டும் ஜெயம் ராஜா - ரவி கூட்டணியைப் பிடித்திருக்கிறது.

ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக ஜெயம் ராஜா படம் இயக்குவது இது மூன்றாவது முறை. ஜெயம் ரவி நடிப்பது இரண்டாவது முறை.

ஏற்கெனவே ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக சந்தோஷ் சுப்ரமணியன், வேலாயுதம் படங்களை ஜெயம் ராஜா இயக்கியுள்ளார்.

இந்தப் புதிய படத்துக்காக கடந்த ஆறு மாதங்களாக திரைக்கதை அமைத்து வந்தார் ஜெயம்ராஜா!

'ஜெயம்', ‘எம்.குமரன். சன் ஆஃப் மகாலட்சுமி', 'உனக்கும் எனக்கும்', ‘சந்தோஷ் சுப்ரமணியம்', ‘தில்லாலங்கடி' என இதுவரை ஜெயம் ராஜா இயக்கிய ஐந்து படங்களுமே அதிரடி வெற்றிகளாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் குறித்து ஜெயம் ராஜா கூறுகையில், "சர்வ நிச்சயமாக இதுஒரு ஆக்‌ஷன் படம். ஆனால் குடும்ப உறவுகளை மையப்படுத்தியே கதை நகரும். தமிழ் சினிமாவின் ஆக்ஷன் படங்களில் மிக முக்கிய படமாக இது அமையும்", என்றார்.