மணிரத்னம் படத்தின் ஒற்றைப் பாடல் ரிலீஸ்... நவ 3-ம் தேதி எம்டிவியில்!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் கடல் படத்தின் ஒற்றைப் பாடல் வரும் நவம்பர் 3-ம் தேதி எம்டிவியில் ஒளிபரப்பப்படுகிறது.

single song from kadal will be released nov 03
Close
 
மணிரத்னம் இயக்கும் ‘கடல்' படம் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. இப்படத்தில் பழைய நடிகர் கார்த்திக்-ன் மகன் கவுதம், பழைய நடிகை ராதாவின் இரண்டாவது மகள் துளசி ஆகியோர் ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்துக்கு ஆஸ்கார் புகழ் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

படத்துக்கான எதிர்ப்பார்ப்பை விட, ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குத்தான் உலகெங்கும் ரசிகர்கள் அதிகம் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ‘நெஞ்சுக்குள்ளே..' என்ற ஒரு பாடலை மட்டும் வரும் 3-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்களுக்கு இந்த பாடலை ஒரே நேரத்தில் கொண்டு சேர்ப்பதற்காக எம்.டி.வி மூலம் வெளியிடவிருக்கிறார்கள்.

இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நேரடியாகவே இசையமைக்க போகிறார். இந்த நிகழ்ச்சி வரும் 3-ம் தேதி இரவு 8 மணிக்கு எம்.டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

A Single song from A R Rahman's much awaited musical album, Maniratnam's Kadal will be released through MTV on Nov 3.

 

இளையராஜா கச்சேரி வேறு தேதிக்கு தள்ளி வைப்பு!

Ilayaraaja S Concert Postponed December

சென்னை: சாண்டி புயல் பாதிப்பு காரணமாக இளையராஜாவின் இசை நிகழ்ச்சி வேறொரு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனை இளையராஜாவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி வரும் நவம்பர் 3-ம் தேதி கனடாவிலும், தொடர்ந்து அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவிலும் நடக்கவிருந்தது.

இதில் கனடா நிகழ்ச்சிக்கு தமிழ் அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்தன. மாவீரர் தினம் கொண்டாடப்படும் நவம்பர் மாதத்தை துக்கமாதம் என்றும், அதில் எந்த கொண்டாட்ட நிகழ்ச்சியும் கூடாதென்றும் அவை கேட்டுக் கொண்டன. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், இந்த நிகழ்ச்சியை வேறு தேதிக்கு மாற்றிக் கொள்ளுமாறு கேட்டிருந்தார்.

ஆனால் நிகழ்ச்சி நடத்துவதில் உறுதியாக இருந்தனர். ஒரேயொரு ரசிகர் இருந்தாலும் கச்சேரி நடத்துவேன் என்றார் இளையராஜா.

இந்த நிலையில், அமெரிக்காவின் சாண்டி புயல் தீவிரமடைந்து, அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுவிட்டதால் இளையராஜாவின் கனடா பயணம் ரத்து செய்யப்பட்டது. இசைக் கலைஞர்களும் போகவில்லை.

இதைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டு, வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து இளையராஜா கூறுகையில், "சான்டி புயல் பாதிப்பு காரணமாக, எனது பயணம் ரத்து செய்யப்பட்டது. நிகழ்ச்சியை வேறு தேதியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நாளை உங்களைப் போலவே நானும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறேன். அந்த நிகழ்ச்சிக்கு அனைவரும் தவறாமல் வந்து எப்போதும் போல ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.

இசை நிகழ்ச்சி நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

 

ஆண்கள் பத்திரிகைக்காக படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த பாண்ட் 'கேர்ள்'!

Bond Girl Berenice Has Licence Thrill

லண்டன்: லேட்டஸ்ட் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடித்துள்ள பெர்னிஸ் மார்லோஹ், எப்எச்எம் பத்திரிக்கைக்காக படு கவர்ச்சிகரமான போஸ் கொடுத்துள்ளார்.

உடலை ஒட்டிய பிரா மற்றும் டிராயருடன் படு கலக்கலாக காட்சி தருகிறார் பெர்னிஸ்.

பெர்னிஸ்தான் ஸ்கைபால் படத்தில் ஜேம்ஸ் பாண்டை மயக்கும் மாய மோகினி பாத்திரத்தில் நடித்துள்ளார். பாண்டை அசரடிக்கும் பாத்திரத்தில் வரும் இவர் கொடுத்துள்ள போஸைப் பார்த்தால் பாண்ட் எப்படியெல்லாம் திணறிப் போயிருப்பாரோ என்ற ஏக்கம்தான் நிச்சயம் ரசிகர்களுக்கு வரும்.

பிரான்ஸைச் சேர்ந்தவர் பெர்னிஸ். ஸ்கைபால் படம் குறித்து பெர்னிஸ் கூறுகையில், இது ரொம்பவும் மர்மான கேரக்டர். அட்வென்ச்சரஸான ரோலில் நான் நடித்துள்ளேன். இந்த வேடத்திற்காக நான் நிறைய தியாகம் செய்துள்ளேன். மிகவும் செக்ஸியாகவும் நடித்துள்ளேன் என்றார்.

சரி உங்களுக்குப் பிடித்த பாண்ட் கேர்ள் யார் என்ற கேள்விக்கு ஜெனியா ஓடனாப்தான் மிகவும் பிடித்த பாண்ட் கேர்ள் என்று கூறியுள்ளார் பெர்னிஸ். பேம்கே கோல்டன்ஐ படத்தில் நடித்தவர்.

பெர்னிஸைப் பார்த்தால் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது...?

 

ரஜினியுடன் நடித்த அனுபவம்... புல்லரிக்கும் தீபிகா படுகோன்

Deepika Padukone Admires Rajinikanth

ரஜினியுடன் நடித்த அனுபவத்தை புல்லரித்து சொல்லிக் கொண்டிருக்கிறார் கோச்சடையான் நாயகி தீபிகா படுகோன்.

மேலும் இந்தியாவிலிருந்து வெளியாகும் முதல் சர்வதேசப்படம் என்ற பெருமை ரஜினியின் கோச்சடையானுக்கு கிடைக்கும் என்கிறார் அம்மணி.

ரஜினி, தீபிகா படுகோனே ஜோடியாக நடித்த ‘கோச்சடையான்' படம் விரைவில் ரிலீசாக உள்ளது. டப்பிங், ரீரிக்கார்டிங் போன்ற இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

படத்தின் நாயகி தீபிகா சமீபத்தில் அளித்த பேட்டியில், ரஜினியுடன் நடித்தது குறித்து குறிப்பிட்டிருந்தார். 'ரஜினியுடன் நடித்தது மறக்க முடியாத இனிய அனுபவம்' என்றார் அவர்.

மேலும் அவர் கூறுகையில், "ரஜினி படப்பிடிப்பு அரங்குக்குள் நுழையும்போதே தெம்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார். தொழில் மீது அவருக்கு இருக்கும் அர்ப்பணிப்பை அவரது கண்களிலேயே காண முடியும். உடல் நிலை பாதிக்கப்படுவதற்கு முன்பு எந்த அளவு ஈடுபாட்டுடன் இருந்தாரோ அதே அளவு ஈடுபாட்டுடன் இப்போதும் இருக்கிறார். அதில் கொஞ்சம்கூட குறையவில்லை," என்றார்.

 

புதிய தலைமுறை டிவியில் இருந்து மேலும் இரு சேனல்கள் உதயம்!

Two More Channels From Pt Group

புதிய தலைமுறை டிவியில் இருந்து 24 மணிநேர ஆங்கில செய்திச் சேனலும், ‘யுவா' என்ற பொழுதுபோக்குச் சேனலும் உதயமாக உள்ளது எஸ்ஆர்எம் குழுமத்தில் இருந்து வேந்தர் டிவி ஒளிபரப்பாக உள்ளது அனைவரும் அறிந்ததே. இது முழுக்க முழுக்க இந்திய ஜனநாயக கட்சிக்கு ஆதரவான செய்திகளை ஒளிபரப்பும். இதற்கும், புதிய தலைமுறை டிவிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறப்படுகிறது.

அதேசமயம் புதிய தலைமுறை டிவியில் இருந்து மேலும் இரண்டு டிவி சேனல்கள் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 24 மணிநேர ஆங்கில செய்திச்சேனல் ஒன்றும், முற்றிலும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ‘யுவா' சேனலும் ஜனவரி முதல் ஒளிபரப்பாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே புதிய தலைமுறை செய்திச்சேனல் சன் நியூஸ்க்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. அதேபோல் ‘யுவா' சேனல் சன்டிவி, கேடிவிக்கு போட்டியாக உருவாகும் என்று கூறப்படுகிறது.

மொத்தத்தில் எஸ்ஆர்எம் குழுமத்தில் இருந்து புதிதாக 3 சேனல்கள் தனது ஒளிபரப்பை விரைவில் துவங்கும் என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

 

ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் புதுவையில் உருவாக்கிய ஹாலிவுட் படம்!

Aang Lee S Life Pi Trailer Launched

சென்னை: ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் ஆங் லீ, தனது புதிய படமான லைஃப் ஆஃப் பை எனும் படத்தை புதுவையில் படமாக்கினார்.

‘ப்ரோக் பேக் மவுன்டன்,' ‘குரோச்சிங் டைகர் ஹிடென் டிராகன்' உள்பட பிரமாண்டமான ஹாலிவுட் படங்களை இயக்கி, ‘ஆஸ்கார்' விருது பெற்றவர், ஆங்லீ.

‘3டி'யில் உருவான இந்த படத்தின் டிரைலர் மற்றும் முன்னோட்ட காட்சிகளை, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று நிருபர்களுக்கு திரையிட்டு காட்டினார் ஆங்லீ.

படம் குறித்து அவர் கூறுகையில், "யேன் மார்ட்டல் என்ற கனடா எழுத்தாளரின் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. கதை முழுக்க புதுச்சேரியில் நடப்பது போல் அமைந்துள்ளது. அதனால் படத்தின் பெரும்பகுதி காட்சிகளை புதுச்சேரியிலேயே படமாக்கினேன். சில காட்சிகள் மூணாறில் படமாக்கப்பட்டன.

கடந்த மூன்றரை வருடங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி வந்தேன். 3 ஆயிரம் பேர் வேலை செய்தார்கள். புதுச்சேரியில் தங்கியிருந்தபோது தமிழ் பண்பாடு மற்றும் கலாசாரத்தை பார்த்து வியந்தேன். தமிழர்கள், வெளிநாட்டவர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுக்கிறார்கள்.

இந்த படத்துக்காக, தைவான் நாட்டில் பயன்படுத்தப்படாத ஒரு விமான நிலையத்தை வாடகைக்கு எடுத்து, அதில் பசிபிக் கடல் போன்ற அரங்கை அமைத்தேன். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்சில் ஒரு புலி உருவாக்கப்பட்டது. அது, கம்ப்யூட்டர் புலி என்றால் நம்ப முடியாத அளவுக்கு படத்தில் வருகிறது.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் ஒரு சிறுவனுக்காக 3 ஆயிரம் பேர்களை பார்த்து, சூரஜ் சர்மா என்ற இந்திய சிறுவனை தேர்வு செய்தேன். இவனுக்கு தாயாக தபு நடித்து இருக்கிறார். கதாநாயகனாக இர்ஃபான்கான் நடித்து இருக்கிறார்.

‘லைப் ஆப் பை' படம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளில் தயாராகியிருக்கிறது,'' என்றார்.

ச்சே... என்ன இயக்குநரப்பா இவரு... நம்ம தமிழ் சினிமா டைரக்டர்கள் மாதிரி, இது என் சொந்தக் கதை... வேற எதப்பத்தியும் கேக்காதீங்க... மத்ததெல்லாம் படத்துல பாருங்க.. பிரமிச்சுப் போய் நிப்பீங்க.. என்றெல்லாம் அடித்து விடாமல், அப்புராணியா எல்லாத்தையும் சொல்லிப்புட்டாரே!

 

நந்தனம் படத்துக்கு உதடு ஒட்டாத பாடல்

Untouch lip song in a film Nandanam சென்னை: 'நந்தனம்Õ படத்துக்கு உதடுகள் ஒட்டாத பாடல் பதிவானது. சிவாஜி தேவ், மித்ரா நடிக்கும் படம் 'நந்தனம்Õ. இப்படத்தை என்.சி.ஷியாமளன் இயக்குகிறார். அவர் கூறியதாவது: படங்களில் ஏதோ ஒரு புதுமையை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். 'மண்ணில் இந்த காதலின்றிÕ என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடல் சில நிமிடங்களுக்கு மூச்சுவிடாமல் பாடி ஹிட்டானது. அப்படியொரு முயற்சியாக விவேகா எழுதியுள்ள 'ஏதோ ஏதோ உயிரிலேÕ என்ற பாடல்  முழுவதும் உதடுகள் ஒட்டாத வார்த்தைகள் பயன்படுத்தி எழுதப்பட்டது. உதடுகளில் ஒட்டாத பாடலாக இருந்தபோதும் எல்லோர் மனதிலும் ஒட்டும். நீயே என் சினேகத் தீயே என்ற பாடல் வானவில்லின் ஏழு வண்ணங்களையும் மையப்படுத்தி எழுதப்பட்டது. 'இது என்ன வலியோÕ என்ற பாடல் பாடும்போது பாடகி சின்மயி உண்மையிலேயே அழுதுவிட்டார். கோபி சங்கர் இசை. எல்.மோகன் ஒளிப்பதிவு.
 

தெலுங்கு படத்தில் நடிக்கிறார் பிரியங்கா சோப்ரா

Priyanka Chopra will act in a Telugu film சென்னை: தெலுங்கு படத்தில் நடிக்கிறார் பிரியங்கா சோப்ரா. இந்தி, தெலுங்கு இருமொழி யில் உருவாகும் படம் 'ஸன்ஜீர். இதில் ஹீரோயினாக நடிக்கிறார் பிரியங்கா சோப்ரா. இது பற்றி அவர் கூறியதாவது: தென்னிந்திய படங்களுக்கும் எனக்கும் தொடர்பு இருக்கிறது. எனது 18 வயதில் தமிழில் விஜய் நடித்த 'தமிழன்Õ படத்தில் ஹீரோயினாக நடித்தேன். அந்த படத்தில் சொந்த குரலில் ஒரு பாடல்கூட பாடி இருக்கிறேன். இந்தி படங்களில் என்னைப் பாடச் சொல்லி கேட்கிறார்கள். தற்போது இசை ஆல்பம் உருவாக்கி வருகிறேன்.

அது ரிலீஸ் ஆன பிறகு இந்தியில் பாடுவேன். என்னைப் பொறுத்தவரை மொழி ஒரு தடை அல்ல. எந்த மொழியில் பாடச் சொன்னாலும் பாட முடியும். கன்னடத்தில் பாடக் கேட்டாலும் ஓகேதான். தற்போது நடித்து வரும் 'ஸன்ஜீர் இந்தி, தெலுங்கு இருமொழிகளில் உருவாகிறது. ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறேன். இந்தியில் முன்பு போல் பிசியாக நடிக்கவில்லையே என கேட்கிறார்கள். நிறைய வாய்ப்புகள் வருகிறது. அதில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். 10 படங்களில் நடித்து 8 ஃபிளாப் தருவதில் உடன்பாடில்லை. 3 படத்தில் நடித்தாலும் மூன்றுமே ஹிட்டாக வேண்டும்.
 

தமிழ் பட கதைகள் பிடிக்கவில்லை : மதுஷாலினி தடாலடி

Tamil film stories are not nice: madhushalini சென்னை: தமிழ் படங்களுக்கு முழுக்குபோட்டுவிட்டு பாலிவுட் படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் மது ஷாலினி. 'அவன் இவன் படத்தில் நடித்தவர் மதுஷாலினி. இப்படத்துக்கு பிறகு ராம் கோபால் வர்மா இயக்கத்தில் டிபார்ட்மென்ட் இந்தி படத்தில் நடித்தார். தொடர்ந்து அவரது இயக்கத்தில் 'பூத் ரிட்டர்ன்ஸ்Õ படத்தில் நடித்தார். படம் வெளியாகி வெற்றிபெற்றதையடுத்து தொடர்ந்து திகில் படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறதாம். இதுபற்றி மது ஷாலினி கூறியதாவது: பூத் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்தபிறகு தொடர்ந்து திகில் படங்களில் நடிக்கவே வாய்ப்பு வருகிறது. பாலிவுட்டில் புதிய பட குழுவினர் தொடங்கும் மற்றொரு திகில் படத்தில் நடிக்கிறேன்.

அதேபோல் தெலுங்கு படமொன்றிலும் நடிக்கிறேன். அதுவும் திகில் படம்தான். 'பூத் ரிட்டர்ன்ஸ் பட ஷூட்டிங்கில்  திகில் காட்சிகளில் நடித்தபோது எனக்கு எந்த பயமும் ஏற்படவில்லை. இயக்குனர், பட குழுவினர் என்னை சுற்றியே இருந்ததால் பயம் தெரியவில்லை. இதே படத்தை தியேட்டரில் பார்த்தபோது நடுங்கிவிட்டேன். திகில் காட்சிகளில் எப்படி நடித்தேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. தமிழில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் எந்த கதையும் மனதை கவரவில்லை. இதையடுத்து மும்பையில் குடியேற முடிவு செய்திருக்கிறேன். அங்கேயே தங்கியிருந்து இந்தி படங்களில் கவனம் செலுத்த உள்ளேன். மும்பை எனக்கு நல்ல வரவேற்பு தந்திருக்கிறது. அதை அனுபவிக்கிறேன். இவ்வாறு மது ஷாலினி கூறினார்.
 

கிசு கிசு - ஹீரோயின் அடைக்கலம்

Kodambakkam Kodangi நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...

மில்க் இயக்கம் படத்துல நடிச்சும் ஜனன ஹீரோயினுக்கு பெரிசா படங்க வரலையாம்... வரலையாம்... கோடம்பாக்கத்தையே எதிர்பாத்திட்டிருக்காம மத்த லாங்குவேஜ்லயும் நடிக்க ட்ரை பண்ணாதான் ஒர்க்அவுட் ஆகும்னு நெருக்கமான இண்டஸ்ட்ரிகாரங்க அட்வைஸ் பண்ணாங்களாம்... பண்ணாங்களாம்... அது இப்போ பலிச்சிருக்காம். கோலிவுட் நாயகிகளுக்கு உடனே அடைக்கலம் தரும் மல்லுவுட் இண்டஸ்ட்ரில ஜனன ஹீரோயின் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்காராம்... இருக்காராம்...

பஞ்ச் நடிகரு படத்துல ஒர்க் பண்ணினாரு சந்தோஷ ஒளிப்பதிவாளரு. அவார்டு படங்கள்ல ஒர்க் பண்ணிட்டிருந்தவருக்கு இந்த படம் தந்த அனுபவம் என்னான்னு சிலரு கேட்டாங்களாம்... கேட்டாங்களாம்... சந்தோஷம் இந்த கேள்விக்கு சிரிப்பை மட்டும் பதிலா தந்தாராம்... தந்தாராம்... இதுக்கு என்ன அர்த்தம்னு இண்டஸ்ட்ரில சிலரு விசாரிக்க தொடங்கிட்டாங்களாம்... தொடங்கிட்டாங¢களாம்...

பிரகாச ஹீரோவின் டாடி பத்தி யாரோ ரூமர் கௌப்பிவிட்டுட்டாங்களாம்... விட்டுட்டாங்களாம்... இந்த ரூமர் ரெண்டு நாளைக்கு முன்ன நடந்த பங்ஷன்ல பரவுச்சாம். உடனே கூட்டத்துல ஒரே சலசலப்பாயிடுச்சாம். உடனே செவன்த் சென்ஸ் ஹீரோ வீட்டுக்கு போன் பண்ணி நெறய பேர் விசாரிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம். கோபமான ஹீரோ, வ¤சாரிச்ச ரசிகருங்க மேல எறிஞ்சி விழுந்தாராம்... விழுந்தாராம்...
 

லேகா வாஷிங்டன் குறும்படத்தில் சிம்பு?

Simbu Work With Lekha S Short Film

டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த லேகா வாஷிங்டன் ஜெயம் கொண்டான், வா குவாட்டர் கட்டிங் போன்ற படங்களில் தலை காட்டினார் இப்போது சுத்தமாக சினிமா வாய்ப்புகள் இல்லை. இருந்தாலும் விளம்பர வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

இப்போது குறும்படங்கள் இயக்க முயற்சி செய்து வருகிறாராம். சில ஸ்கிரிப்ட்களை எழுதி அதை நடிகர் சிம்புவிடம் காண்பித்தாராம். நன்றாக இருப்பதாக கூறிய சிம்பு தானே நடிப்பதாக லேகாவிடம் சொல்ல இன்ப அதிர்ச்சியில் மூழ்கியிருக்கிறார் லேகா வாஷிங்டன்.

கெட்டவன் படத்தில் லேகா வாஷிங்டனுக்கு வாய்ப்பு கொடுத்தார் சிம்பு. ஆனால் இதில் லேகாவிற்கு நடிக்கத் தெரியவில்லை என்று இரண்டாவது நாளிலேயே படத்தில் இருந்து தூக்கினார் சிம்பு. எனினும் இது குறித்து இறுதிவரை வாய் திறக்க மறுத்து விட்டார் சிம்பு.

இப்போது லேகா இயக்கும் குறும்படத்தில் சிம்பு நடிப்பது எப்படி என்பதுதான் கோலிவுட் உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. விளம்பரமோ, சின்னத்திரையோ எங்கே போனாலும் சிம்புக்கு வம்பு வந்து சேரும். குறும்படத்தில் ஏதாவது குறும்புத்தனம் செய்வாரா என்பது போகப் போகத்தான் தெரியும்.

 

மோகன்பாபு தயாரித்த படத்துக்கு எதிராக அவதூறு வழக்கு!

Defamation Case On Mohan Babu

ஹைதராபாத்: நடிகர் மோகன்பாபு தயாரித்த ‘தேனிகைனா ரெடி' என்ற படத்தில் குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக உள்ளதாகக் கூறி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மோகன் பாபு மகன் மஞ்சு விஷ்ணு, ஹன்சிகா நடித்து, நாகேஷ்வர ரெட்டி இயக்கிய படம் இது.

ரூ. 5 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் கடந்த மாதம் வெளியாகி இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் பிராமணர்களை நையாண்டி செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அந்தச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் இந்தப் படத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள நடிகர் மோகன்பாபு வீட்டின் முன்பாக அவர்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். ஆனால் சர்ச்சைக்குரிய காட்சி எதுவும் படத்தில் இல்லை என்று மோகன்பாபு மறுத்துள்ளார்.

இருப்பினும் அந்த சமூகத்தினர் இது குறித்து நீதிமன்றத்தில் முறையிட்டனர். அதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில், நடிகர் மோகன்பாபு, நடிகர் மஞ்சு விஷ்ணு, காமெடியன் பிரமானந்தம், இயக்குநர் நாகேஷ்வர ரெட்டி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

விஜய் டிவி சூப்பர் சிங்கரில் பாடிய பிரகதிக்கு ஜி.வி.பிரகாஷ் வாய்ப்பு

Super Singer Junior Pragathi Paradesi

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டிவரை சென்று இரண்டாவது இடம் பிடித்த பிரகதிக்கு பாலாவின் பரதேசி படத்தில் பாட்டுப் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதர்வா, தன்ஷிகா, வேதிகா நடிக்கும் பரதேசி படத்திற்காக ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். இப்படத்தில் வரும் கடைசி பாடலை வித்தியாசமாகவும் புதிய குரலிலும் இசையமைக்க வேண்டும் என்று விரும்பிய ஜி.வி.பிரகாஷ், சூப்பர் சிங்கர் ஜூனியரில் வித்தியாசமான குரலில் பாடி அனைவரையும் கவர்ந்த பிரகதியை தேர்ந்தெடுத்திருக்கிறார். விரைவில் இப்படத்தின் இசை வெளியிடப்பட உள்ளது.

சூப்பர் சிங்கர் ஜூனியரில் இறுதிப்போட்டியில் பாடுவதற்காக நடுவர்கள் மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட்டவர் பிரகதி. அமெரிக்காவில் வசித்துவரும் பிரகதி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே சென்னைக்கு வந்து தங்கியிருந்தார். இப்போது இவருக்கு ஜி.வி.பிரகாஷ் இசையில் பாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.