தயாரிப்பாளரை ரகிசயமாக திருமணம் செய்தாரா அஞ்சலி?

சென்னை: நடிகை அஞ்சலி
தயாரிப்பாளர் ஒருவரை
ரகசியமாக திருமணம்
செய்து கொண்டதாக
தெலுங்கு பட உலகில்
பேசப்படுகிறது என்று
இயக்குனர் களஞ்சியம்
தெரிவித்துள்ளார்.

*இது குறித்து இயக்குனர்
களஞ்சியம்
செய்தியாளர்களிடம்
கூறுகையில்,*

ஊர் சுற்றி புராணம்
படத்தில் அஞ்சலி 15 நாட்கள்
மட்டுமே நடித்துக்
கொடுத்தார். அதன் பிறகு
அவர் மாயமானார். இதனால் என்
படம் பாதியில் நிற்கிறது.
அஞ்சலி தற்போது புனேவில்
தெலுங்கு படத்தில்
நடிக்கிறார் என்று
கூறுகிறார்கள். அவருடன்
அவரின் தாயார் பாரதி தேவி,
அண்ணன்கள் ரவிசங்கர், பாபு,
அக்கா யாமினி தேவி ஆகியோர்
இருப்பதாக
கேள்விப்பட்டேன்.

அஞ்சலி தினமும்
ஷூட்டிங்கிற்கு 2
கார்களில் செல்கிறாராம்.
ஒரு காரில் அவரும், மற்றொரு
காரில் அடியாட்களும்
செல்கிறார்களாம். அஞ்சலி
பட அதிபர் ஒருவரை ரகிசயமாக
திருமணம் செய்து கொண்டதாக
தெலுங்கு திரையுலகில்
தகவல் பரவியுள்ளது. இந்த
தகவல் எந்த அளவுக்கு உண்மை
என்று தெரியவில்லை.

ரகிசய திருமண தகவலால்
தெலுங்கு திரையுலகினர்
அஞ்சலியை புதிய படங்களில்
எடுக்கத் தயங்குவதாக
கேள்விப்படுகிறேன்
என்றார்.
 

கத்தியைத் தீட்டாதே,பனிவிழும் மலர்வனம் ஆடியோ-ட்ரைலர் வெளியீடு

கத்தியைத் தீட்டாதே
புத்தியைத் தீட்டு,
பனிவிழும் மலர்வனம்,
படங்களில் இசை, ட்ரைலர்
வெளியீட்டு விழா வரும்
ஞாயிறன்று சென்னையில்
நடைபெற உள்ளது.

டி.எஸ்.கே பட நிறுவனம்
தயாரித்துள்ள படம்
கத்தியைத் தீட்டாதே
புத்தியைத் தீட்டு. இதில்
கதாநாயகனாக ஆதவாராம்
அறிமுகமாகிறார்.

கதை, திரைக்கதை, வசனம்
எழுதி இயக்கியுள்ளார்
ஸ்ரீ கிருஷ்ணா.
இப்படத்திற்கு இசை பிரேம்.
ஒளிப்பதிவு முரேஷ்.
கோவிலம்பாக்கம் டி.
சிங்காரம்
தயாரித்துள்ளார்.

*கத்தியைத் தீட்டாதே
புத்தியைத் தீட்டு*

இந்தப் படத்தின் இசை
வெளியீட்டு விழா சென்னை
வடபழனியில் உள்ள ஏ.வி.எம்
ஸ்டுடியோவில் காலையில்
நடைபெற உள்ளது. தமிழ்
தொலைக்காட்சிகள் சங்கத்
தலைவர் டி. தேவநாதன்
தலைமையில் நடைபெறும் இந்த
விழாவில் திரைப்பட
இயக்குநர்கள் அரவிந்த
ராஜ், சீனு ராமசாமி,நடிகர்
விஜய் வசந்த், கார்த்திக்
தங்கபாலு உள்ளிட்ட பலரும்
பங்கேற்கின்றனர்.

*பனிவிழும் மலர் வனம்*

பனிவிழும் மலர்வனம்
படத்தின் பாடல்
வெளியீட்டு விழா ஞாயிறு
மாலை பிரசாத் லேப்பில்
நடைபெற உள்ளது. இந்த
படத்தினை சி.டி.என்
புரடெக்சன் நிறுவனம்
தயாரிக்கிறது. கதாநாயகனாக
அபிலாஷ், கதாநாயகிகளாக
சாய்னா மற்றும் வர்ஷா
ஆகியோர் நடித்துள்ளனர்.
இயக்கம் ஜேம்ஸ் டேவிட், இசை
ராஜீவ்.
 

ஹோட்டல், ரயில்கள் மாதிரி தியேட்டர்களிலும் 'சாதா, ஸ்பெஷல்' வேண்டும் - டி.ராஜேந்தர்

சென்னை: ஹோட்டல், ரயிலில்
இருப்பது போல் சாதா,
ஸ்பெஷல் என இரண்டு வகை
தியேட்டர்களை உருவாக்கி
குறைந்த முதலீட்டு
படங்களை காப்பாற்ற
வேண்டும் என டி.ஆர்
கருத்து
தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்பட
தயாரிப்பாளர்கள் சங்க
தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன்
தலைமையில், ஏ. வெங்கடேஷ்
டைரக்ட் செய்யும்
‘சும்மா நச்சுன்னு
இருக்கு' படத்தின்
பாடல்கள் வெளியீட்டு விழா
சென்னையில் நடந்தது.
படப்பாடல்களை
இசையமைப்பாளர்
ஜி.வி.பிரகாஷ் வெளியிட
தமன், தரண்குமார் ஆகிய
இருவரும் பெற்றுக்
கொண்டார்கள்.

விழாவில் கலந்து கொண்ட
தமிழ்நாடு திரையரங்க
உரிமையாளர்கள் சம்மேளன
தலைவர் ‘அபிராமி'
ராமநாதன்
பேசும்போது,‘‘இப்போதெல்லாம்
வாரந்தோறும்
குறைந்தபட்சம் 6 படங்கள்
திரைக்கு வருகின்றன.
படத்தின் பெயர் என்ன, கதை
என்ன, அதை டைரக்ட் செய்தவர்
யார், நடித்தவர்கள் யார்?
யார்? என்று தெரிந்து
கொள்வதற்குள் படம்
தியேட்டரை விட்டு
போய்விடுகிறது. இப்படி
வாரத்தில் 6, 7 படங்கள்
திரைக்கு வருவதால் ஒரு
படத்திற்கு ஒரு
காட்சிதான் எங்களால்
கொடுக்க முடிகிறது. இதற்கு
ஒரு தீர்வு காண வேண்டும்.

திரையுலகைச் சேர்ந்த
அனைத்து பிரிவினரும்
ஒன்று சேர்ந்து
கட்டுப்பாடு கொண்டு வர
வேண்டும். அப்படி
செய்தால்தான் குறைந்த
முதலீட்டில் தயாராகும்
சின்ன படங்களை காப்பாற்ற
முடியும்'' என பேசினார்.

அவரைத் தொடர்ந்து
டைரக்டர் டி.ராஜேந்தர்
பேசியனார்.
அதில்,‘‘குறைந்த
முதலீட்டில் தயாராகும்
சின்ன படங்களை வாழவைக்க
முதலில் தியேட்டர்
கட்டணத்தை குறைக்க
வேண்டும். அதன்பிறகு
இரண்டு விதமான
தியேட்டர்களை உருவாக்க
வேண்டும்.

ரயிலில் ஏர் கண்டிசன் கோச்,
சாதாரண கோச் என்று
இருப்பதுபோல்,
ஓட்டல்களில் நட்சத்திர
ஒட்டல், சாதாரண ஓட்டல்
என்று இருப்பதுபோல்
தியேட்டர்களிலும் பெரிய
தியேட்டர்கள், சின்ன
தியேட்டர்கள் என்று
இருக்க வேண்டும்.

அதிகபட்சம் 200 பேர்
அமர்ந்து படம்
பார்ப்பதுபோல் ‘மினி'
தியேட்டர்களை உருவாக்க
வேண்டும். இதற்கு அரசு
அனுமதி கொடுக்க வேண்டும்.
இதுபோன்ற ‘மினி'
தியேட்டர்களில்
‘பார்க்கிங் கட்டணம்'
வசூலிக்கக்கூடாது.
இதற்காக திரையுலகைச்
சேர்ந்த தயாரிப்பாளர்கள்,
வினியோகஸ்தர்கள்,
டைரக்டர்கள்,
நடிகர்-நடிகைகள் ஆகிய
அனைத்து பிரிவனரும்
சேர்ந்து முதல்-அமைச்சரை
சந்தித்து
சிறுபடங்களுக்கு தனி
தியேட்டர்களை உருவாக்கி
தரவேண்டும் என்று மனு
கொடுக்க வேண்டும்''என
டி.ராஜேந்தர் பேசினார்.

விழாவில் படத்தின்
கதாநாயகன் தமன், கதாநாயகி
விபா, அட்சனா, தம்பி ராமையா,
பவர் ஸ்டார் சீனிவாசன்,
ஈரோடு மகேஷ்,
இசையமைப்பாளர் அச்சு,
டைரக்டர் ஏ.வெங்கடேஷ்,
ஒளிப்பதிவாளர்
ராஜ்குமார், நடிகர்கள்
ஹரிகுமார், நகுல், டைரக்டர்
சினோ பிரிட்டோ, பட அதிபர்
விமலா பிரிட்டோ ஆகியோரும்
கலந்து கொண்டு விழாவில்
பேசினார்கள்.