மதம் மாறச் சொல்லும் கணவரை விவாகரத்து செய்யப் போகிறேன்: நடிகை ஷர்மிளா

சென்னை: மதம் மாறும்படி தன்னை வற்புறுத்தும் கணவரை விவாகரத்து செய்யப் போவதாக நடிகை ஷர்மிளா தெரிவித்துள்ளார்.

ஒயிலாட்டம் மூலம் கோலிவுட் வந்த ஷர்மிளா கிழக்கே வரும் பாட்டு, முஸ்தபா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். அவர் ராஜேஷ் என்ற என்ஜினியரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். அவர்களுக்கு ஆடனிஸ் ஜூட் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஷர்மிளா தனது கணவரை பிரிந்து வாழ்கிறார்.

மதம் மாறச் சொல்லும் கணவரை விவாகரத்து செய்யப் போகிறேன்: நடிகை ஷர்மிளா

மேலும் தன்னிடம் இருந்து மகனை கடத்திய கணவர் மீது அவர் கடந்த வாரம் போலீசில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில்,

நான் ஒரு கிறிஸ்தவ பெண். அது தெரிந்து திருமணம் செய்து கொண்ட என் கணவர் என்னை இந்து மதத்திற்கு மாறுமாறு வற்புறுத்துகிறார். என் மேல் சந்தேகப்படும் அவர் நான் வெளியாட்களுடன் பேச அனுமதிப்பதில்லை. தற்போது இரவு நேரத்தில் செல்போனில் மிரட்டுகிறார். இனியும் அவருடன் வாழ முடியாது என்பதால் அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளேன்.

முதலில் இருவரும் மனமொத்து பிரிய திட்டமிட்டிருந்தோம். ஆனால் தற்போது அவரை விவாகரத்து செய்வது என்று தீர்மானித்துள்ளேன். அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். என் மாமியார் வேறு தொல்லை கொடுக்கிறார். என் மகனையும் கடத்திச் சென்றுவிட்டனர் என்றார்.

 

கோலிசோடா: லிங்குசாமியை பாராட்டிய ரஜினி

கோலிசோடா திரைப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமியை அழைத்து பாராட்டியுள்ளார்.

சமீபத்தில் திரைக்கு வந்த திரைப்படங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கோலி சோடா'. ‘பசங்க' படத்தில் நடித்த கிஷோர், பாண்டி, ஸ்ரீராம், முருகேஷ் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. விஜய் மில்டன் இயக்கியிருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் இப்படத்தை பார்த்துள்ளார்.

கோலிசோடா: லிங்குசாமியை பாராட்டிய ரஜினி

ரஜினி வாழ்த்து

லிங்குசாமியை நேரில் அழைத்த ரஜினி அவரிடம், நல்லப்படத்தை தயாரித்ததற்காக வாழ்த்துகிறேன். மேலும் இப்படத்தை கோயம்பேட்டில் எப்படி படமாக்கினார்கள் என்பது என்னை ஆச்சர்யப்படுத்தியது.

சிறுவர்களின் நடிப்பு

சிறுவர்கள் நடிப்பு அருமையாக இருந்தது. இவர்களை வைத்து சிறப்பாக இயக்கிய விஜய் மில்டனுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த படத்தையும் அவர் சிறப்பாக எடுக்க எனது வாழ்த்துக்கள் என்று கூறினார். இவர்களுடைய சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நீடித்தது.

லிங்குசாமி பெருமை

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ஏற்கெனவே தயாரித்த ‘வழக்கு எண் 18/9', ‘கும்கி' ஆகிய படங்கள் வெளியானபோதும் ரஜினிகாந்த் படத்தை பார்த்துவிட்டு லிங்குசாமிக்கு வாழ்த்து கூறினார்.

கோலிசோடா

அந்த வரிசையில் ‘கோலி சோடா' படமும் இணைந்துள்ளது. சூப்பர் ஸ்டார் வாழ்த்து தெரிவித்தது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது என்று லிங்குசாமி கூறியுள்ளார்.

 

சூர்யா படப்பிடிப்பில் ரகளை செய்த மும்பை நடனக்கலைஞர்கள்

மும்பை: சூர்யா - சமந்தா இணைந்து நடித்து வரும் அஞ்சான் படப்பிடிப்பில் மும்பை நடனக்கலைஞர்கள் வந்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அஞ்சான்' படத்தில் சூர்யா-சமந்தா இருவரும் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். லிங்குசாமி இப்படத்தை இயக்குகிறார். இதன் படிப்பிடிப்பு மும்பை பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

சில தினங்களுக்கு முன்னர், சூர்யா, சமந்தா நடித்த பாடல் காட்சியொன்றை படமாக்கினர். நடனஇயக்குநர் ராஜுசுந்தரம் இதற்கான நடனத்தை அமைத்து கொடுத்தார்.

சூர்யா படப்பிடிப்பில் ரகளை செய்த மும்பை நடனக்கலைஞர்கள்

சென்னையில் இருந்து சென்ற நடன கலைஞர்களுடன் சூர்யா, சமந்தா ஆட இக்காட்சி படமாகிக் கொண்டு இருந்தது. அப்போது மும்பையைச் சேர்ந்த இந்தி நடன கலைஞர்கள் கும்பலாக அங்கு வந்தனர். நடன கலைஞர்கள் முப்பது சதவீதம் பேரை மும்பை நடன கலைஞர்கள் சங்கத்தில் இருந்துதான் பணியாற்ற தேர்வு செய்ய வேண்டும். வெளியாட்களை வைத்து படப்பிடிப்பை நடத்தக்கூடாது என்று கோஷம் போட்டார்கள்.

அதோடு நிற்காமல் படப்பிடிப்பை நிறுத்தும்படி ஆவேசமாக கத்தியபடி கலாட்டாவில் ஈடுபட்டனர். படப்பிடிப்பு சாதனங்களை உடைக்கவும் பாய்ந்தனர். இதனால் படப்பிடிப்பில் இடையூறு ஏற்பட்டது.

இதையடுத்து ‘அஞ்சான்' படக்குழுவினர் ரூ.60 ஆயிரம் அபராத கட்டணம் செலுத்தினார்கள். அதன்பிறகே படப்பிடிப்பை தொடர அவர்கள் அனுமதி அளித்தனர்.

அஞ்சான் படப்பிடிப்பில் திடீர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

'அம்மா'விடம் அடைக்கலம் தேடும் காமெடி நடிகர்

சென்னை: தேர்தல் நேரத்தில் ஒரு கட்சியை ஆதரித்து கண்டமேனிக்கு பிரச்சாரம் செய்து தனது கெரியர் ஆட்டம் கண்ட நகைச்சுவை நடிகர் அம்மா கட்சி பக்கம் சாய விரும்புகிறாராம்.

காமெடியில் கலக்கி வந்த அவர் ஒரு முன்னணி கட்சிக்கு ஆதரவாக கடந்த தேர்தலில் தீயா பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தின்போது சக நடிகரும், அரசியல் கட்சி ஒன்றின் தலைவருமான அந்த சிவப்பு கண் கொண்ட மனிதரை சகட்டு மேனிக்கு தாக்கிப் பேசினார்.

நடிகரின் கெட்ட நேரம் அவர் தாக்கிப் பேசியவர் எதிர்கட்சி தலைவர் ஆனார். நடிகரின் கெரியர் ஆட்டம் கண்டது. இதையடுத்து மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு சொந்த ஊருக்கு சென்றவர் சில ஆண்டுகள் கழித்து தற்போது தான் நடிக்க வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் அம்மா கட்சி பக்கம் சாய விரும்புகிறாராம். இதயைடுத்து அவர் உங்கள் கட்சியில் அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று தோட்டத்திற்கு தூதுவிட்டுக் கொண்டிருக்கிறாராம்.

தோட்டத்தில் இருந்து தனக்கு சாதகமாக ஒரு பதில் வராதா என்ற ஏக்கத்தில் அந்த திசையை நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறாராம் நடிகர்.