இரண்டாம் உலகம்... செல்வராகவனை வெறுப்பேற்றும் விமர்சனங்கள்!

பொதுவாக, தமிழ் சினிமா விமர்சனங்களை ரொம்பவே வெறுப்பவர் செல்வராகவன், அதாவது அவர் படங்களுக்கு எதிராக வரும் விமர்சனங்களை!

துள்ளுவதோ இளமை படத்துக்கு பிரபல பத்திரிகை எழுதிய விமர்சனத்தில், 'பணம் சம்பாதிக்க எவ்வளவோ வழிகள் உள்ளன. அதற்காக உன்னதமான சினிமாவை இவ்வளவு கேவலப்படுத்த வேண்டுமா?' என்று எழுதியிருந்தது.

இரண்டாம் உலகம்... செல்வராகவனை வெறுப்பேற்றும் விமர்சனங்கள்!

அன்றைக்கு ஆரம்ப நிலையில் இருந்த இணையதளங்களும் படத்தை விட்டு வைக்கவில்லை. அன்று முதல் ஆரம்பித்து அவரது விமர்சன வெறுப்பு.

அவரது அடுத்த படமான காதல் கொண்டேனை கொண்டாடின அதே பத்திரிகைகளும் மீடியாவும். அப்போதும் வேண்டா வெறுப்பாகவே நடந்துகொண்டார்.

அடுத்து வந்த 7ஜி படத்தையும் பாராட்டின. படமும் பெரிய வெற்றி பெற்றது. புதுப்பேட்டை படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தாலும் படம் ஓடவில்லை.

செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு கலவையான விமர்சனங்கள். அந்தப் படத்தில் அடிப்படைத் தவறுகள் இருப்பதை ஒப்புக் கொண்ட செல்வராகவன், அதை ஏன் அவ்வளவு பெரிசு படுத்த வேண்டும். தமிழ் இயக்குநர் ஒருவர் இந்த அளவு முயற்சி எடுப்பதை ஏன் பாராட்ட மறுக்கிறார்கள் என்றார்.

மயக்கம் என்ன படத்துக்கும் கிட்டத்தட்ட இதே மாதிரி கமெண்டுகள், விமர்சனங்கள்தான்.

இப்போது இரண்டாம் உலகம். இந்தப் படம் வெளியாகும் முன்பே மீடியா விமர்சனங்கள் குறித்த தனது குமுறல்களை வெளியிட்டிருந்தார்.

'ஹாலிவுட்டிலிருந்து எந்த மாதிரி படங்களை வெளியிட்டாலும் கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழில் எவ்வளவு உயர்ந்த முயற்சியாக இருந்தாலும் கேலி செய்து நம்மை காலி பண்ணுகிறார்கள்... எனக்கு படம் எடுக்கவே பிடிக்கவில்லை. இரண்டாம் உலகமே கூட எனது கடைசி படமாக இருக்கும்' என்றெல்லாம் புலம்பித் தள்ளியிருந்தார்.

இதோ.. இன்று பல்வேறு தடைகள் தாண்டி இரண்டாம் உலகம் வெளியாகி, அதுகுறித்து சமூக வலைத் தளங்களில் உடனுக்குடன் விமர்சனங்களும் வெளியாகியுள்ளன.

பெரும்பாலானவர்கள் படம் குறித்து எதிர்மறை கருத்துக்கள், விமர்சனங்களையே வெளியிட்டு வருகின்றனர். இதுகுறித்து செல்வராகவன் எப்படியெல்லாம் குமுறப் போகிறாரோ தெரியவில்லை!

நீங்கள் இரண்டாம் உலகம் படம் பார்த்துவிட்டீர்களா... உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்... ஒன்இந்தியாவின் சிறப்பு விமர்சனம்... நாளை!

 

பாண்டிய நாடு என் கதை.. திருடிட்டார் சுசீந்திரன் - உதவி இயக்குநர் குற்றச்சாட்டு

சென்னை: பாண்டிய நாடு என் சொந்தக் கதை. அதை திருடி படமெடுத்து என்னை ஏமாற்றிவிட்டார் இயக்குநர் சுசீந்திரன் என்று குற்றம் சாட்டியுள்ளார் உதவி இயக்குநர் புவனராஜன்.

கதைத் திருட்டு குற்றச்சாட்டில் இதுவரை சிக்காமலிருந்த சுசீந்திரன் முதல் முறையாக இப்போது சிக்கியுள்ளார். அதுவும் அவரிடம் உதவியாளராக இருந்தவரே இந்தக் குற்றச்சாட்டை பகிரங்கமாக எழுப்பியுள்ளார்.

அழகர்சாமியின் குதிரை படத்தில் சுசீந்திரன் உதவியாளராக வேலை பார்த்தவர் இந்த புவனராஜன்.

பாண்டிய நாடு என் கதை.. திருடிட்டார் சுசீந்திரன் - உதவி இயக்குநர் குற்றச்சாட்டு

அந்தப் படத்துக்குப் பிறகு விலகி தனியாகப் படம் பண்ணும் முயற்சியில் இருந்தாராம்.

இந்த நிலையில் தன்னைத் தேடி வந்த இயக்குநர் சுசீந்திரன், அடுத்த படத்துக்காக கதை கேட்டதாகவும், ஆறேழு கதைகளைக் கேட்ட பிறகு, எதுவும் பிடிக்கவில்லை என்று கூறித் திரும்பிய சுசீந்திரன், பின்னர் தான் சொன்ன கதை ஒன்றையே, சற்று மாற்றி பாண்டிய நாடு என படமாக எடுத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தக் கதையைத்தான் படமாக எடுத்தேன் என்ற உண்மையைக் கூறாமல், தன் வங்கிக் கணக்கில் ரூ 25 ஆயிரம் பணத்தையும் சுசீந்திரன் போட்டுள்ளார் என்றும் புவனராஜ் கூறினார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து இயக்குநர் சுசீந்திரனைத் தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால் அவர் எந்த அழைப்பையும் ஏற்கவில்லை என்ற பதிலே வந்தது.

தயாரிப்பாளரான விஷாலைத் தொடர்பு கொண்டபோது, தனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார்.

 

மம்தா மோகன்தாஸுக்கு மீண்டும் உடல்நலக் குறைவு

திருவனந்தபுரம்: கணவரிடமிருந்து சமீபத்தில் விவாகரத்து பெற்ற மம்தா மோகன்தாஸ் மீண்டும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

சிவப்பதிகாரம், குரு என் ஆளு, தடையறத் தாக்க போன் தமிழ்ப் படங்களிலும், ஏராளமான தெலுங்கு, மலையாளப் படங்கதளிலும் நடித்தவர் மம்தா மோகன்தாஸ்.

மம்தா மோகன்தாசுக்கு சில வருடங்களுக்கு முன்பு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சைப் பெற்று, பின் உடல் நிலை தேறி வந்து நடித்தார். புற்று நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துவிட்டதாக அவர் கூறியிருந்தார்.

மம்தா மோகன்தாஸுக்கு மீண்டும் உடல்நலக் குறைவு

2011-ல் தொழில் அதிபர் பிரஜித் பத்மநாபனுக்கும் மம்தா மோகன்தாசுக்கும் திருமணம் நடந்தது. ஒரு வருடத்தில் குடும்ப வாழ்க்கை கசந்து இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு மலையாள படங்களில் மம்தா தொடர்ந்து நடித்து வந்தார்.

இந்த நிலையில் தான் அவருக்கு மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சேர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து மம்தா கூறுகையில், வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளே, நம்மை மேலும் வலுவாக்குகின்றன. மனதளவில் நான் இப்போதும் உறுதியாக இருக்கிறேன். நோயில் இருந்து மீண்டு வருவேன்," என்றார்.

 

'ஓவரா ஆட்டம் போட்ட.. மவனே காணாம போயிருவ!' - விஜய்சேதுபதிக்கு ஆளும்கட்சி இயக்குநர் எச்சரிக்கை

சென்னை: விஜய் சேதுபதி இப்போது போலவே எளிமையாக இருந்தால்தான் நல்லது. மவனே மீறி ஓவரா ஆட்டம் போட்ட, காணாம போயிருவ, என்று எச்சரித்தார் அதிமுக இயக்குநர் என்று அழைக்கப்படும் ஆர் வி உதயகுமார்.

விஜய் சேதுபதி - ஐஸ்வர்யா, நீலிமா, ஜெயப்பிரகாஷ் நடித்துள்ள படம் பண்ணையாரும் பத்மினியும். சிநேகா கவுரவத் தோற்றத்தில் வருகிறார். அருண்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

'ஓவரா ஆட்டம் போட்ட.. மவனே காணாம போயிருவ!' - விஜய்சேதுபதிக்கு ஆளும்கட்சி இயக்குநர் எச்சரிக்கை

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது.

விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், இயக்குநர்கள் கரு பழனியப்பன், சீனு ராமசாமி உள்பட பலரும் பங்கேற்றனர்.

இயக்குநர் ஆர்வி உதயகுமார் பேசுகையில், "இன்றைக்கு தினத்தந்தி பேப்பரைத் திறந்தால் நான்கு பக்கங்களுக்கு சினிமா விளம்பரங்கள். சந்தோஷமாக இருந்தது. அந்த அளவுக்கு சினிமாவை சுதந்திரமாக இயங்க அனுமதித்திருக்கிறது இந்த அரசு.

ஒரு ஹீரோவுக்கான இலக்கணத்தை உடைத்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஒரு ஹீரோ இப்படித்தான் நடக்கணும், இருக்கணும் என்பதையெல்லாம் மாற்றியிருக்கிறார். அவரது எளிமை எனக்கு ரொம்பப் பிடிக்கும். இதை அவர் தொடரவேண்டும். மீறி ஆட்டம் போட்டா.. மவனே காணாம போயிருவ...

இன்றைக்கு உள்ள ஹீரோக்கள், இயக்குநர்கள், ரெண்டு படம் ஓடினதுமே ஏதோ இவர்கள்தான் சினிமாவையே கண்டுபிடித்தவர்கள் மாதிரி பேசுவதைப் பார்க்கிறேன். ஆனால் இந்தப் படத்தின் இயக்குநர் அப்படி இல்லை. நிச்சயம் பெரிய ஆளா வருவார்.

படத்தின் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் காத்தடித்தால் பறந்துவிடுவது மாதிரிதான் இருக்கிறார். ஆனால் திறமைக்காரர். இசைஞானி இளையராஜாவுக்கப்புறம் முதல்முறை கேட்கும்போதே பிடிக்கிற மாதிரி பாடல்களைப் போட்டிருக்கிறார்," என்றார்.

 

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பங்களா 'மன்னத்'தில் தீ விபத்து

மும்பை: மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பங்களாவான மன்னத்தில் நேற்று இரவு 11 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. நல்ல வேளையாக இதில் யாரும் காயம் அடையவில்லை.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பங்களாவான மன்னத் மும்பை பந்த்ரா பகுதியில் உள்ளது. அங்கு அவர் தனது மனைவி கௌரி கான், மகள் சுஹானா, இளைய மகன் ஆப்ராம் ஆகியோருடன் வசித்து வருகிறார். மூத்த மகன் ஆர்யன் லண்டனில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பங்களா 'மன்னத்'தில் தீ விபத்து

இந்நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு மன்னத்தில் தீ விபத்து ஏற்பட்டது. ஏழாவது மாடியில் உள்ள பாத்ரூமில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. உடனே வீட்டில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர்.

மேலும் தீயணைப்பு துறைக்கும், ரிலையன்ஸ் டெக்னீஷியன்களுக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்த உடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் வீட்டில் இருந்தவர்களே தீயை அணைத்துவிடட்னர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

களஞ்சியம் தொடர்ந்த வழக்கில் நேரில் ஆஜராகவதிலிருந்து அஞ்சலிக்கு விலக்கு!

சென்னை: இயக்குநர் களஞ்சியம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து நடிகை அஞ்சலிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் அஞ்சலி. தன் சித்தி பாரதிதேவியுடன் ஏற்பட்ட பிரச்சினையால், தமிழ்நாட்டை விட்டு வெளியேறி சொந்த மாநிலமான ஆந்திராவுக்கு சில மாதங்களுக்கு முன் சென்றுவிட்டார். இன்று வரை சென்னை திரும்பவே இல்லை.

களஞ்சியம் தொடர்ந்த வழக்கில் நேரில் ஆஜராகவதிலிருந்து அஞ்சலிக்கு விலக்கு!

தான் வெளியேறியது ஏன் என்று பத்திரிகைகளுக்கு பேட்டியளித்த நடிகை அஞ்சலி, தன் சித்தி பாரதிதேவி, இயக்குனர் களஞ்சியம் ஆகியோர் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களைக் கூறி பரபரக்க வைத்தார்.

இதையடுத்து, அஞ்சலி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை சைதாப்பேட்டை 18-வது குற்றவியல் கோர்ட்டில் இயக்குனர் களஞ்சியம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு நடிகை அஞ்சலி நேரில் ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, களஞ்சியம் தொடர்ந்த வழக்கையும், அந்த வழக்கில் தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடிவாரண்டையும் ரத்து செய்யவேண்டும். இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகை அஞ்சலி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி பி.தேவதாஸ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ‘சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 22-ந்தேதி (இன்று வெள்ளிக்கிழமை) வழக்கு விசாரணைக்கு வரும்போது, அன்று மட்டும் அஞ்சலி நேரில் ஆஜராக விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த மனுவுக்கு, எதிர் மனுதாரர் களஞ்சியம் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்' என்று உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை நீதிபதி அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார்.

 

களஞ்சியம் தொடர்ந்த வழக்கில் நேரில் ஆஜராகவதிலிருந்து அஞ்சலிக்கு விலக்கு!

சென்னை: இயக்குநர் களஞ்சியம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து நடிகை அஞ்சலிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் அஞ்சலி. தன் சித்தி பாரதிதேவியுடன் ஏற்பட்ட பிரச்சினையால், தமிழ்நாட்டை விட்டு வெளியேறி சொந்த மாநிலமான ஆந்திராவுக்கு சில மாதங்களுக்கு முன் சென்றுவிட்டார். இன்று வரை சென்னை திரும்பவே இல்லை.

களஞ்சியம் தொடர்ந்த வழக்கில் நேரில் ஆஜராகவதிலிருந்து அஞ்சலிக்கு விலக்கு!

தான் வெளியேறியது ஏன் என்று பத்திரிகைகளுக்கு பேட்டியளித்த நடிகை அஞ்சலி, தன் சித்தி பாரதிதேவி, இயக்குனர் களஞ்சியம் ஆகியோர் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களைக் கூறி பரபரக்க வைத்தார்.

இதையடுத்து, அஞ்சலி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை சைதாப்பேட்டை 18-வது குற்றவியல் கோர்ட்டில் இயக்குனர் களஞ்சியம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு நடிகை அஞ்சலி நேரில் ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, களஞ்சியம் தொடர்ந்த வழக்கையும், அந்த வழக்கில் தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடிவாரண்டையும் ரத்து செய்யவேண்டும். இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகை அஞ்சலி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி பி.தேவதாஸ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ‘சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 22-ந்தேதி (இன்று வெள்ளிக்கிழமை) வழக்கு விசாரணைக்கு வரும்போது, அன்று மட்டும் அஞ்சலி நேரில் ஆஜராக விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த மனுவுக்கு, எதிர் மனுதாரர் களஞ்சியம் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்' என்று உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை நீதிபதி அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார்.

 

ஸ்ருதி ஹாஸனின் வீடு, படப்பிடிப்புக்கு பலத்த பாதுகாப்பு!

மும்பை: நடிகை ஸ்ருதி ஹாஸனின் மும்பை வீடு மற்றும் அவர் பங்கேற்கும் படப்பிடிப்புத் தளங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நடிகை ஸ்ருதிஹாஸனை அவரது பாந்த்ரா அடுக்குமாடிக் குடியிருப்பில் புகுந்து அடையாளம் தெரியாத ஒரு நபர் தாக்கினார்.

இந்த தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதுகுறித்து ஸ்ருதி நேற்று போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து, விசாரணை தொடங்கியுள்ளது.

ஸ்ருதி ஹாஸனின் வீடு, படப்பிடிப்புக்கு பலத்த பாதுகாப்பு!

இதற்கிடையில் ஸ்ருதியின் பாந்த்ரா அடுக்கு மாடிக் குடியிருப்பில் போலீஸ் காவலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தனியார் காவலாளிகள் இருவரையும் நியமித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.

மேலும் அவர் பங்கேற்கும் படப்பிடிப்புத் தளங்களில் செக்யூரிட்டிகள் உடன் இருக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்திய நபரைக் கைது செய்யும் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று ஸ்ருதி தரப்பில் மனு தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஸ்ருதி ஹாஸனின் வீடு, படப்பிடிப்புக்கு பலத்த பாதுகாப்பு!

மும்பை: நடிகை ஸ்ருதி ஹாஸனின் மும்பை வீடு மற்றும் அவர் பங்கேற்கும் படப்பிடிப்புத் தளங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நடிகை ஸ்ருதிஹாஸனை அவரது பாந்த்ரா அடுக்குமாடிக் குடியிருப்பில் புகுந்து அடையாளம் தெரியாத ஒரு நபர் தாக்கினார்.

இந்த தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதுகுறித்து ஸ்ருதி நேற்று போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து, விசாரணை தொடங்கியுள்ளது.

ஸ்ருதி ஹாஸனின் வீடு, படப்பிடிப்புக்கு பலத்த பாதுகாப்பு!

இதற்கிடையில் ஸ்ருதியின் பாந்த்ரா அடுக்கு மாடிக் குடியிருப்பில் போலீஸ் காவலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தனியார் காவலாளிகள் இருவரையும் நியமித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.

மேலும் அவர் பங்கேற்கும் படப்பிடிப்புத் தளங்களில் செக்யூரிட்டிகள் உடன் இருக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்திய நபரைக் கைது செய்யும் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று ஸ்ருதி தரப்பில் மனு தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

'இருக்கு ஆனா இல்ல' இசை வெளியீடு... குவைத்தில் நடக்கிறது!

இப்போதெல்லாம் தமிழ்ப் படங்களின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் வெளிநாடுகளில் அதிகம் நடக்க ஆரம்பித்துள்ளன.

அந்த வகையில் இருக்கு ஆனா இல்ல படத்தின் இசை வெளியீடு குவைத்தில் நடக்கிறது. இதில் வேந்தர் மூவீஸ் பாரிவேந்தர் கலந்து கொள்கிறார்.

இருக்கு ஆனா இல்ல படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ளனர். ஈடன், விவாந்த், மனிஷா ஸ்ரீ இப்படி படத்தின் பெரும்பாலான நடிகர்கள் புதுமுகங்களே.

ஒய்.ஜி.மகேந்திரன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை கே.எம்.சரவணன் இயக்குகிறார். ஷமீர் இசையமைத்திருக்கும் இப்படத்தை வரம் கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.

'இருக்கு ஆனா இல்ல' இசை வெளியீடு... குவைத்தில் நடக்கிறது!

இப் படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடக்கிறது. அதே வேளையில் படத்தின் ஆடியோவை வெளிநாட்டில் வெளியிடவிருக்கின்றனர். இன்று மாலை வெள்ளிக்கிழமை குவைத்தில் உள்ள கேம்பிரிட்ஜ் ஆடிட்டோரியத்தில் இந்த படத்தின் ஆடியோ வெளியிடப்படவிருக்கிறது.

இந்த விழாவிற்கு வேந்தர் மூவீஸ் நிறுவன அதிபர் பாரிவேந்தர் தலைமை தாங்குகிறார். இப்படத்தின் விநியோக உரிமையை வேந்தர் மூவிஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சென்சாரில் கத்தரிபடாமல் பத்திரமாக வந்த 'இவன் வேற மாதிரி'

சென்னை: விக்ரம் பிரபு நடித்துள்ள இவன் வேற மாதிரி படத்திற்கு 'யு' சான்றிதழ் கிடைத்துள்ளது.

கும்கி படத்தை அடுத்து விக்ரம் பிரபு நடித்துள்ள படம் இவன் வேற மாதிரி. அவருக்கு ஜோடியாக புதுமுகம் சுரபி நடித்துள்ளார். படத்தை எங்கேயும் எப்போதும் பட இயக்குனர் எம். சரவணன் இயக்கியுள்ளார்.

சென்சாரில் கத்தரிபடாமல் பத்திரமாக வந்த 'இவன் வேற மாதிரி'

படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார். வரும் டிசம்பர் மாதம் 13ம் தேதி படம் ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படம் சென்சார் போர்டுக்கு போட்டுக் காண்பிக்கப்பட்டது.

சென்சாரில் கத்தரிபடாமல் பத்திரமாக வந்த 'இவன் வேற மாதிரி'

படத்தை பார்த்த சென்சார் போர்டு எங்கும் கத்தரி போடாமல் 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ், யுடிவி மோஷன் பிக்சர்ஸுடன் சேர்ந்து தயாரித்துள்ள இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பப்படுகிறது.

வாழ்த்துக்கள் விக்ரம்.