தமிழுக்கு வரும் த்ரிஷாவின் 'பெஸ்ட் பிரெண்ட்' ராணா: ஜோடி நயன்!

Rana Comes Kollywood With Nayanthar

தெலுங்கு நடிகர் ராணா டக்குபாதி நடித்துக் கொண்டிருக்கும் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் என்ற படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகிறது. இந்த பம் மூலம் ராணா கோலிவுட்டில் அடியெடுத்து வைக்கிறார்.

தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரும், த்ரிஷாவின் பெஸ்ட் பிரெண்டுமான ராணா டக்குபாதி, நயன்தாரா நடிக்கும் படம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும். கிருஷ் இயக்க, மணிசர்மா இசையமைக்கும் இந்த படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகிறது. இந்த படத்தின் மூலம் ராணா தமிழுக்கு வருகிறார். ஜகத்குரும் படப்பிடிப்பு ஹைதராபாத், பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி உள்பட பல்வேறு இடங்களில் நடைபெற்றது. தற்போது சென்னையில் சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து ராணா டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

ஆம், இந்த செய்தி உண்மை தான். கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகிறது. என்னுடைய படங்களிலே இது தான் ஒரே நேரத்தில் 2 மொழிகளில் வெளியாகிறது. முதல் தடவையாக சென்னையில் படப்பிடிப்பு, முதன் முறையாக தமிழில் டயலாக். சந்தோஷமாகவும், பெருமையாகவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

ராணா ஜோடியாக நயன்தாரா. த்ரிஷா என்ன மனநிலையில் இருக்கிறாரோ தெரியவில்லையே.

 

ரஜினியின் சிவாஜி - தி பாஸ்... விரைவில் 3டி தொழில்நுட்பத்தில்!

Sivaji The Boss Be Released 3d   

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அதிரடி வசூல் படம் 'சிவாஜி - தி பாஸ்' இப்போது 3 டியில் வெளியாகவிருக்கிறது.

தமிழ் சினிமாவில் வசூல் சாதனை படைத்த படம் சிவாஜி. சர்வதேச அளவில் இந்தியப் படங்களுக்கு பெரிய மார்க்கெட்டையும் இந்தப் படம் உருவாக்கிக் கொடுத்தது.

2007-ல் வெளியாகி வெள்ளிவிழாவையும் தாண்டி ஓடி சாதனை படைத்த சிவாஜியை 3டிக்கு இப்போது மாற்றுகிறார்கள்.

இந்தப் படத்தில் ரஜினி, பலவித கெட்டப்புகளில் தோன்றினார். ஸ்ரேயா ஜோடியாக நடித்தார். ஷங்கர் இயக்கினார். ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்தது.

பணக்காரர்கள் பதுக்கி வைத்த பல ஆயிரம் கோடி கறுப்பு பணத்தை மீட்பதுதான் இப்படத்தின் கதை.

கோச்சடையான் படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என தெரிகிறது. அதற்கு முன்பு 3டி சிவாஜி வெளியாகிவிடும் என்கிறார்கள், ஸ்டுடியோ வட்டாரங்களில்.

 

இளையராஜாவின் ஆசை நூறு வகை பாடலை அப்படியே 'காப்பியடிக்க' தடை!!

Hc Orders Not Use Ilayaraaja S Tune For Department

ஒரு முறை இளையராஜாவிடம், "உங்கள் பாடல்கள் பலவற்றை தொடர்ந்து இந்தி, தெலுங்கு, ஏன் தமிழில் கூட காப்பியடிக்கிறார்கள். நீங்கள் அமைதியாகவே இருக்கிறீர்களே?" என்று கேட்டனர் நிருபர்கள்.

அதற்கு அவர் ஒரு சிரிப்பை மட்டும் பதிலாகத் தந்துவிட்டு, அடுத்த கேள்வி என்றார்.

மீண்டும் அதே கேள்வியைக் கேட்ட போது, திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால்... என்ற பட்டுக்கோட்டை வரிகளைா மட்டும் சொல்லிவிட்டு, அடுத்து வேற ஏதாவது கேளுங்கய்யா என்றார் செல்ல கோபத்துடன்.

ஆனால் எப்போதும் இதே மனநிலையில் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க முடியுமா என்ன.... இசைத் தென்றல் இந்த முறை புயலாகிவிட்டது!

இந்தியில் ராம் கோபால் வர்மா உருவாக்கியுள்ள டிபார்ட்மென்ட் படத்தில் இளையராஜாவின் அதிரடி ஹிட் பாடலான ஆசை நூறு வகையை அப்படியே சுட்டுப் போட்டிருந்தார்கள். இதுகுறித்த சர்ச்சை வெளியானபோது, ராஜாவிடம் அனுமதி கேட்டுத்தான் பயன்படுத்தியதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் தனது வக்கீல் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுவிட்டார் இளையராஜா.

தனது மனுவில், "நான் இசை அமைத்த, ‘ஆசை நூறு வகை.. வாழ்வில் நூறு சுவை‘ என்ற பாடலின் டியூனை இந்தியில் தயாரான ‘டிபார் ட்மென்ட்' என்ற படத்தில் வரும் பாடலுக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி கேட்டனர். அதன்படி, பாடலில் 30 நொடிகள் மட்டும் அந்த டியூனை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கொடுத்தேன்.

ஆனால், பாடல் முழுவதும் இந்த டியூன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து நான் ஆட்சேபனை தெரிவித்தேன். அவர்கள் தரப்பில் எந்த பதிலும் இல்லை. எனவே, இந்தி படத்தில் வரும் முழு பாடலிலும் எனது டியூனை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்," என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இளையராஜாவின் டியூனை இந்தி படத்தில் பயன்படுத்த ஒரு வாரம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

 

பில்லா 2 விநியோகஸ்தருக்கு ஹார்ட் அட்டாக்? - திரையுலகில் பரபரப்பு... ரசிகர்கள் ஆத்திரம்!!

Billa 2 Kerala Distributor Suffers Heart Attack   

பில்லா 2 படத்தின் வசூல் எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லாததால், அந்தப் படத்தை வெளியிட்ட கேரள விநியோகஸ்தருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்லதால் பரபரப்பு கிளம்பியுள்ளது.

பில்லா 2 படம் கேரளாவில் பெரிய அளவில் வெளியிடப்பட்டது. அஜீத்துக்கு கேரளாவில் பெரிய அளவு ரசிகர்கள் வட்டம் கூட கிடையாது. ஆனாலும், பில்லா 2 படத்துக்கு கொடுக்கப்பட்ட பெரும் விளம்பரங்களைப் பார்த்து பெரும் விலைக்கு வாங்கி வெளியிட்டிருந்தார் அந்த விநியோகஸ்தர்.

ரூ 1.50 கோடிக்கு இந்தப் படத்தை அவர் வாங்கியிருந்ததாகத் தெரிகிறது.

முதல் இரு தினங்கள் மட்டும் ஓரளவு கூட்டம் வந்ததாகவும், அடுத்த தினத்திலிருந்து வசூல் படுபாதாளத்துக்கு போய்விட்டதாகவும் அவருக்கு தகவல்கள் வர ஆரம்பித்தனவாம்.

இதனால் மனமுடைந்துபோயிருந்த அவருக்கு, நேற்று முன்தினம் பில்லா 2-ன் வசூல் விபரம் அறிக்கையாக கொடுக்கப்பட்டதாம். இதைப் படித்துக் கொண்டிருந்தபோதே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டதாம். இதைத் தொடர்ந்து அவர் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

பில்லா 2 ஏ சான்றிதழ் பெற்ற படம். எனவே வரிவிலக்கு கிடையாது. 30 சதவீத கேளிக்கை வரி போக, விநியோகஸ்தருக்கு 50 சதவீத நஷ்டத்தை கேரளத்தில் இந்தப் படம் ஏற்படுத்தக்கூடும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ரசிகர்கள் ஆத்திரம் - மறுப்பு

இந்த செய்தி வெளியானதும் அஜீத்தின் ரசிகர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். இது பொய்ச் செய்தி என்று மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் இது பொய்ச் செய்தி என கூறி வருகின்றனர்.

"ஒரு ஆங்கில நாளிதழ்தான் இந்த செய்தியை வெளியிட்டது. ஆனால் அதற்கு ஆதாரம் எதுவும் இல்லை," என்று தெரிவித்துள்ளனர். ஆனால் பெரும்பாலான ஆங்கில ஊடகங்கள் இந்த செய்தியை தொடர்ந்து வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ரூ 17 கோடி?

கேரள நிலவரம் இப்படி என்றாலும், தமிழகத்தில் இந்தப் படம் முதல் வாரத்தில் ரூ 17 கோடியை சம்பாதித்துள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ராஜேஷ் கன்னாவின் 'ஆசிர்வாத்' எனக்கே.. உடன் வசித்த பெண் நோட்டீஸ்!

Rajesh Khanna S Live In Partner Sen

மும்பை: மறைந்த சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா, மும்பையில் வசித்து வந்த ஆசிர்வாத் வீடு தனக்கே சொந்தம் என்று கடைசிக்காலத்தி்ல் அவருடன் வசித்து வந்த பெண்மணியான அனிதா அத்வானி உரிமை கோரியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டிம்பிள் கபாடியாதான் ராஜேஷ் கன்னாவின் மனைவி. இருப்பினும் இவர்களது பந்தம் 1984ம் ஆண்டுடன் முடிந்து போய் விட்டது. அதிகாரப்பூர்வமாக இருவரும் விவாகரத்து செய்து கொள்ளவில்லை. அப்படியே பிரிந்து போய் விட்டனர். அதன் பின்னர் ராஜேஷ் கன்னாவுடன் கடைசிக்காலத்தில் அவருடைய வீட்டில் அனிதா அத்வானி சேர்ந்து வாழ ஆரம்பித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் பார்ட்னர்களாக வசித்து வந்தனர்.

ராஜேஷ் கன்னா வசித்து வந்த வீடுதான் ஆசிர்வாத். இது மறைந்த நடிகர் ராஜேந்திர குமாருடையதாகும். அவரிடமிருந்து இந்த வீட்டை வாங்கினார் ராஜேஷ் கன்னா. முதலில் இந்த வீட்டின் பெயர் டிம்பிள் என்பது சுவாரஸ்யமான ஆச்சரியமாகும். பிறகு வீட்டின் பெயரை ஆசிர்வாத் என்று மாற்றினார் ராஜேஷ் கன்னா. இந்த வீட்டிலிருந்துதான் திரையுலகில் பெரும் சாதனைகளை அவர் படைத்தார். தொடர்ந்து 15 சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து அசைக்க முடியாத இடத்திற்குச் சென்றார்.

இந்த வீட்டைத்தான் தற்போது உரிமை கொண்டாடியுள்ளார் அனிதா. இதுதொடர்பாக ராஜேஷ் கன்னாவின் குடும்பத்தினருக்கு அவர் வக்கீல் நோட்டீஸும் அனுப்பியுள்ளார். யாரும் தனது அனுமதியி்லலாமல் வீட்டுக்குள் செல்லக் கூடாது என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். ராஜேஷ் கன்னா மறைந்த தினத்தன்று இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு மாதமாகவே இந்த வீட்டிலிருந்து அனிதாவை வெளியேற்ற ராஜேஷ் கன்னாவின் குடும்பத்தினர் தீவிரமாக முயன்ஏறு வருகின்றனராம். ஆனால் கடந்த எட்டு வருடங்களாக ராஜேஷ் கன்னாவுடன் வசித்து வந்த அனிதா அதை எதிர்த்து வருகிறார். இது தொடர்பாகவே அவர் தற்போது வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்கிறார்கள்.

ராஜேஷ் கன்னாவின் இறுதிச் சடங்கு தொடங்கியபோதும் கூட பிரச்சினை வெடித்ததாம். ராஜேஷ் கன்னாவின் உடல் வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் ஏற அனிதா முயன்றாராம். அதைப் பார்த்து விட்ட ராஜேஷ் கன்னாவின் மருமகனும், நடிகருமான அக்ஷய் குமார், அனிதாவை வண்டியிலிருந்து இறங்குமாறு சத்தம் போட்டாராம்.

மேலும் ராஜேஷ் கன்னாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் இருந்தபோதும் கூட அனிதாவை அண்ட விடாமல் எட்டியே வைத்திருந்தனராம். டிம்பிள் கபாடியா, அக்ஷய் குமார், மகள்கள் டிவிங்கிள் கன்னா, ரிங்கி ஆகியோர்தான் ராஜேஷ் கன்னாவைச் சுற்றிலும் இருந்தனராம்.

இந்த நிலையில் வீடு விவகாரம் குறித்து அனிதா கூறுகையில், நான் ஆசிர்வாத் வீட்டில் கடந்த 10 வருடமாக ராஜேஷ் கன்னாவுடன் வசித்து வந்தேன். தனக்கு உடல் நலம் குன்றி, ஞாபக சக்தி குறைந்த போதுதான் என்னை ராஜேஷ் கன்னாவால் அடையாளம் காண முடியாமல் போனது.

ஒரு நேரத்தில் தனது குடும்பத்தினருடன் பேசக் கூட விரும்பவில்லை ராஜேஷ் கன்னா. ஆனால் அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போனதைப் பயன்படுத்தி என்னை அவரிடமிருந்து விலக்கி விட்டனர். தனிமைப்படுத்தி விட்டனர். இதனால்தான் இப்போது நான் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்.

அவரும் இப்போது இல்லை, நான் எங்கு போவது என்றும் தெரியவில்லை. எல்லாமே போய் விட்டதாக உணர்கிறேன். எனவேதான் அவர் வாழ்ந்த இந்த வீட்டையாவது தக்க வைத்துக் கொள்ள முயல்கிறேன் என்றார் அனிதா.

 

பிழைத்துப் போகட்டுமே... கல்யாணம் செய்யாதது குறித்து கோவை சரளா!

Comedy Actress Kovai Sarala Interview

நகைச்சுவை நடிகையாக 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கோவை சரளா தற்போது சின்னத்திரையில் பாசப்பறவைகள் நிகழ்ச்சியை நாகரீக உடையில் தொகுத்து வழங்குகிறார். விஜய் டிவி வழங்கிய விருதில் ரசிகர்களினால் சிறந்த நகைச்சுவை நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அந்த மகிழ்ச்சியோடு இருந்த கோவை சரளா தனது பயணம் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

‘முந்தானை முடிச்சு' படத்தில் அறிமுகமாகி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என, 500 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். சின்னத்திரையில் சீரியல், ரியாலிட்டி ஷோ என புதிய பொறுப்புகள் கிடைக்கிறது. இரண்டுமே பேலன்ஸ் ஆக போய்க்கொண்டிருக்கிறது. தமிழகத்தைப் போல் ஆந்திராவிலும் எனக்கு ரசிகர்கள் அதிகம். குறிப்பாக, பெண்கள். நான் எந்தப் படத்தில் என்ன கேரக்டரில் நடிக்கிறேனோ, அந்தப் பெயரில் செல்லமாக அழைக்கிறார்கள். தெலுங்குப் படங்களில் எனக்கான முக்கியத்துவமும், மரியாதையும் கிடைக்கிறது.

என்னைப் பொறுத்தவரை, காமெடி செய்வதே ஹீரோயினுக்கு நிகரானதுதான். ஒவ்வொரு படத்திலும் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆகவே ஹீரோயினாக நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. மனோரமா ஆச்சி, நான் தவிர இப்பொழுது நிறைய பேர் காமெடி செய்கிறார்கள். இருவருக்குப் பிறகு யார் என்று இன்னும் தெரியவில்லை.

தமிழில் புதுப்புது காமெடி நடிகைகள் வர வேண்டும். அப்போதுதான் நடிப்பில் போட்டி இருக்கும். ரசிகர்களுக்கும் வித்தியாசமான காமெடி கிடைக்கும். இப்பொழுது சின்னத்திரையில் சீரியல் வாய்ப்புகளும் வருகின்றன. கேம்ஷோ ஒன்றை தொகுத்து வழங்குகிறேன். ரசிகர்களிடையே அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

திருமண பந்தத்தின் மீது எனக்கு வெறுப்பு இல்லை. அதேபோல் அக்கறையும் இல்லை. யாரோ ஒருவர், என்னிடம் இருந்து தப்பித்து, பிழைத்துப் போகட்டும் என்ற நல்ல எண்ணம்தான் காரணம். உறவினர்களின் வாரிசுகள் எனக்கும் வாரிசுகள்தான். அவர்களுக்காக என்னை நான் அர்ப்பணித்து வாழ்வதில் தனி சுகம் காண்கிறேன். அவர்களை வளர்த்து ஆளாக்கி வருகிறேன்.

நான் சாமியாராகப்போவதாக பத்திரிக்கையில் எழுதிவிட்டார்கள். சாமியாராகித்தான் நல்லது செய்ய வேண்டும் என்பதில்லை. யார் வாழ்க்கையையும் கெடுக்காமல், என்னால் முடிந்தவரை உதவுகிறேன். யாரைப்பற்றியும் அவதூறு பேசுவதில்லை, ஏமாற்றுவதில்லை. என் மனசாட்சிக்குப் பயந்து நடக்கிறேன்.

 

ராஜேஸ்கண்ணாவை விட சில வாரங்கள் நான் மூத்தவள்: ஷர்மிளா தாகூர்

Sharmila Rajesh Khanna Changed After Aradhana Sucess

மறைந்த நடிகர் ராஜேஸ்கண்ணாவும், நடிகை ஷர்மிளா தாகூரும் சம வயதை உடையவர்களாம். இருவர் பிறந்ததும் டிசம்பர் மாதம்தானாம். ஆனால் ராஜேஸ்கண்ணாவை விட ஷர்மிளா தாகூர் சில வாரங்கள் மூத்தவராம் இதனை அவரே நினைவி கூர்ந்துள்ளார்.

காகா என்று அன்போடு அழைக்கப்படும் இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் ராஜேஸ்கண்ணா புதன்கிழமையன்று மரணமடைந்துவிட்டார். அவரது இழப்பிற்காக இந்தியத்திரையுலகமும், ரசிகர்களும் துக்கம் அனுஷ்டித்துக்கொண்டிருக்கின்றனர்.

அவருடன் நடித்த நடிகர், நடிகையர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பல பிரபலங்கள் டுவிட்டரில் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். ஆராதனா படத்தில் ராஜேஸ்கண்ணா உடன் ஜோடியாக நடித்த ஷர்மிளா தாகூர் தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் கொல்கத்தாவில் நடைபெற்ற விழா ஒன்றில் காகாவை ( ராஜேஸ் கண்ணா) சந்திக்க நேரிட்டது. அதிகம் எடை போட்டிருந்தார். ஆனாலும் அவருக்கு உடல் நலம் சரியில்லை என்பதை அவருடைய முகத்தில் நிழலிட்டிருந்த சோகமே காட்டிக்கொடுத்துவிட்டது. இருப்பினும் என்னுடன் மென்மையாய் பேசினார். ஆராதனா திரைப்படத்தில் அவருடன் முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடித்தேன். எங்களை எங்கேயோ கொண்டு சென்றுவிட்டது அந்த படம். என்னுடைய மேக் அறைக்கே வந்து சில ஐடியாக்களை பகிர்ந்து கொண்டார். இது யாருக்குமே கிடைக்காத பாக்கியம்.

நானும் காகாவும் திரையுலகில் வெற்றிகரமான ஜோடிகள். ஆராதனா, அமர் பிரேம் ஆகிய திரைப்படங்களே இதற்கு சாட்சியாக இருந்திருக்கின்றன. அந்த திரைப்படத்தை மீண்டும் மும்பையில் பார்க்க நேரிட்டபோது இதை நான் உணர்ந்தேன்.

காகா வும் நானும் ஒரே வருடத்தில் அதுவும் டிசம்பர் மாதத்தில் பிறந்திருக்கிறோம். அவரைவிட சிலவாரங்கள் நான் மூத்தவள் என்று கூறி ராஜேஸ் கண்ணாவுடனான தன் நினைவுகளை கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டார் ஷர்மிளா தாகூர்.

 

நட்புக்காக நடிப்பு... வில்லங்கமான சம்பளம்!

Guest Role Become Villain A Film Budget

தமிழ் சினிமாவில் இப்போது ரொம்ப சகஜமாக நடக்கும் சமாச்சாரம் நட்புக்காக நடிப்பது. முன்பும் கூட இந்த 'நட்புக்காக' சமாச்சாரம் இருந்தது. ஆனால் அது மிக அரிதாகவே நடக்கும். இப்போது அடிக்கடி!

சரி, நட்புக்காகத்தானே... சம்பளமே வாங்கமாட்டாங்களோ என்றுதானே கேட்கிறீர்கள்?

அதான் இல்லை.. நட்புக்காக நடிக்கவே பல லட்சங்களை கொட்டிக் கொடுக்கிறார்கள். சிலருக்கு கோடிகளில் கூட கொடுப்பதுண்டு!

முன்பு வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஒரு குத்தாட்டம் போட மட்டும் ஸ்ரேயாவுக்கு ரூ 60 லட்சத்தை கொட்டிக் கொடுத்தது நினைவிருக்கலாம் (ஆனால் அந்த ஒரு பாட்டுதான் அவருக்கு வில்லனாக மாறியது தனிக்கதை!).

ஆல்தோட்ட பூபதி பாட்டுக்கு சிம்ரனும், சிவகாசி படப் பாட்டுக்கு நயன்தாராவும் போட்ட குத்தாட்டத்துக்கு, அவர்கள் அன்றைக்கு ஒரு படத்துக்கு வாங்கிய மொத்த சம்பளத்தை கிஃப்டாக தர வேண்டியிருந்ததாம்!

சகுனி படத்திலும், ஒரு கல் ஒரு கண்ணாடியிலும் ஜஸ்ட் தலையைக் காட்டிய ஆன்ட்ரியாவுக்கு ஒரு மில்லியன் ரூபாய் சம்பளம் தரப்பட்டுள்ளது.

அட, சத்யராஜை ஒரு விழிப்புணர்வு -கம் - தமிழுணர்வுப் படத்தில் நடிக்க அழைத்தார்கள், நட்புக்காக. அவரது நட்புக்கு கொடுக்கப்பட்ட விலை ரூ 18 லட்சமாம்! (அவர் கேரக்டரையே புரிஞ்சிக்காம நட்பு பாராட்டினா இப்படித்தான்!)

ராஜபாட்டையில் ஒரு பாடல் காட்சியில் ரீமா சென்னும் ஸ்ரேயாவும் விக்ரமுடன் ஆட ஆன செலவு முக்கால்கோடி. இதில் முக்கால்வாசி இந்த நடிகைகளுக்கு சம்பளம். மீதி அவர்களை இத்தாலிக்கு கூட்டிப் போய் பராமரித்த செலவு!

கெஸ்ட் ரோல் என்று கூறி நடிகைகளுக்கு சில கோடிகளை இறைத்தவர் என்ற வகையில் இப்போதும் முதலிடம் சிம்புவுக்குதானாம். தன் ஆசைக்காக மந்த்ரா பேடி, யானா குப்தா என்ற கைக்கடங்காத ஐட்டம்களை மன்மதன் படத்துக்காக மும்பையிலிருந்து கோடம்பாக்கத்துக்கு வரவழைத்த இவர், அவர்களுக்கு ஐந்து நட்சத்திர ஓட்டலில் ரூம் போட்டு, ஏகத்துக்கும் லட்சங்களைக் கொட்டிக் கொடுத்துள்ளார். குறிப்பாக யானா குப்தா அன்றைக்கு டாப் லெவலில் இருந்ததால், கிட்டத்தட்ட கோடியில் செலவானதாம் அம்மணிக்கு.

ஆனால் முன்பெல்லாம் ரஜினி, கமல் போன்றவர்கள் ஜஸ்ட் ஒரு காட்சியில் வந்து போவார்கள். அவர்கள் உண்மையிலேயே நட்புக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் ஒரு பைசா கூட வாங்காமல் அந்தக் காட்சிகளில் தோன்றியிருப்பார்கள்.

கமலின் தாயில்லாமல் நானில்லை படத்தில் ரஜினி ஒரு ஸ்டன்ட் காட்சியில் வந்து போவார். அதேபோல தில்லுமுல்லு க்ளைமாக்ஸில் கமல் வருவார். இதற்காக ஒரு நயா பைசா அவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை.

அவ்வளவு ஏன், நாலு பேருக்கு நன்றி என்ற படத்திலும், கோடை மழையிலும் ரஜினி ரஜினியாகவே வந்து சின்ன அட்வைஸ் பண்ணிவிட்டுப் போவார். ஆனால் அதற்கும் கூட ஒரு பைசா சம்பளமாகப் பெற்றதில்லையாம்.

கே பாலச்சந்தரின் மனதில் உறுதி வேண்டும் பாடலுக்கு மூன்று ஹீரோக்கள் ஆட வேண்டும். விஜயகாந்தும், சத்யராஜும் ஓரளவு மார்க்கெட் உள்ள நடிகர்களாக இருந்ததால் அவர்களிடம் கேட்டாராம் கேபி. இருவரும் ஒப்புக் கொண்டாலும் சம்பளம் பேசியிருக்கிறார்கள். ஆனால் அன்று ஆண்டுக்கு மூன்று படங்கள் என மகா பரபரப்பாக இருந்த சூப்பர் ஸ்டார் சம்பளம் மட்டுமல்ல, தயாரிப்பாளர் செலவில் சாப்பாடு கூட சாப்பிடாமல் ஜஸ்ட் அரை நாளில் பாட்டை முடித்துக் கொடுத்துவிட்டுப் போனாராம். அந்தப் பாட்டுதான் 'வங்காளக் கடலே...'!

'அதற்காக எல்லோரும் ரஜினியாக கமலாக இருந்துவிட முடியுமா... எங்களை எதற்காக கெஸ்ட் ரோலுக்கு அழைக்கிறார்கள்? எங்களுக்கு மார்க்கெட் இருப்பதால்தானே... இதைக் காட்டித்தானே வியாபாரம் பண்ணுகிறார்கள்? கொடுத்தா என்ன தப்பு?' என்பது, நட்புக்கான ரோலுக்கு எக்கச்சக்க சம்பளம் பேசும் நடிகர்களின் வாதம்...

காற்றுள்ள போதே தூற்றிக்கணும் என்பதுதானே சினிமா!

 

சிரிப்பதும், சிரிக்கவைப்பதும் ரொம்ப சிரமம்: நடிகை சோனியா போஸ்

Comedy Role Is Tough Actress Sonia Bose

செல்லமே தொடரின் தொடக்கத்தில் சிரித்துக்கொண்டே வரும் கலைவாணி ( செல்லமாய் களவாணி) பின்னர் சீரியஸ் ஆகிவிட்டார். சின்னவயதில் இருந்தே நடிப்பதால் என்னவோ சோனியா போஸ்க்கு எந்த கதாபாத்திரம் என்றாலும் ஜஸ்ட் லைக் தட் தன்னுடைய சினிமா, சின்னத்திரை பயணம் குறித்தும் பெர்சனல் பக்கங்களையும் நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் படியுங்களேன்.

சினிமாவிலோ, சின்னத்திரையிலோ எவ்வளவு கஷ்டமான கதாபாத்திரமாக இருந்தாலும் செய்துவிடலாம்.​ ஆனால்,​​ எல்லாரையும் சிரிக்க வைப்பதுதான் சிரமம்.​ ‘செல்லமே' சீரியலில் சிரிப்பு பாத்திரத்திற்காகவே வீட்டிற்குப் போய் கண்ணாடி முன்னால நின்று ஒரு மணிநேரம் சிரித்துப் பழகுவேன்.​ என் கணவர் பார்த்துவிட்டு உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா என்று கேட்பார்.​ கொஞ்ச நாள் அந்த மாதிரியேதான் திரிந்தேன்.​ வெளியில் போகிறபோது சின்னச்சின்ன குழந்தைகள்கூட என்னைப் பார்த்ததும் சிரிக்கத் தொடங்கிவிடுவார்கள். இப்போது கதைக்கேற்ப சீரியஸ் ஆக நடித்து வருகிறேன்.

சினிமா என்றாலே ஒரு தப்பான துறை என்கிற மாதிரியான கருத்துகள் இருந்தன.​ இப்போது அது மாறிப்​ போய்விட்டது. சினிமாதுறையும் டிவி துறையும் நன்றாக வளர்ந்திருக்கின்றன.​ ஆரோக்கியமாகவும் இருக்கிறது.​ நான் குழந்தை நட்சத்திரமாக நடித்தபோது பேபி அஞ்சு,​​ மீனா,​​ சாலினி என்று மூன்று நான்கு பேர் தான் இருப்போம்.​ இப்போது ஏகப்பட்ட படங்கள் வருகின்றன.​ ஏகப்பட்ட பேர் நடிக்கிறார்கள்.​ இது வளர்ந்திருப்பதைத்தானே காட்டுகிறது.​ இடையில் ​கொஞ்ச நாள்களுக்கு முன் கிளாமருக்குத்தான் வாய்ப்பு அதிகமாக இருந்தது.​ ஆனால் இப்போது அந்த நிலைமையும் மாறிவிட்டது.​ புதுமுகங்களும் திறமை காட்டுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது.​ டிவி துறையிலும் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

என் கணவர் கடந்த மூன்று வருடங்களாக தொடர்களில் நடிப்பதில்லை.​ இது வரை மூன்று தொடர்களில்தான் நடித்திருக்கிறார்.​ பெரியதிரை வாய்ப்பு வந்ததால் அங்கு சென்று விட்டார்.​ நான் நடிக்கும் தொடரைப் பார்ப்பதற்கு என் கணவருக்கு நேரம் இருக்காது.​ நான் சிறுவயதில் இருந்து நடிப்பதால் என்னிடம் ஆலோசனை கேட்பார்.​ விமர்சனங்கள் எதுவும் சொல்ல மாட்டார்.​ ஆனால் என் திறமைக்கேற்ற பாத்திரம் கிடைக்கவில்லை என்கிற வருத்தம் அவருக்கு உண்டு.

என் மகன் தேஜஸ்வின்னுக்கு ஐந்து வயதாகிறது.​ என் மகள் பவதாரணிக்கு ஒரு வயது தான் ஆகிறது.​ என் அப்பா,​​ அம்மாவும் என் சித்தியும்தான் பார்த்துக் கொள்கிறார்கள்.​ பெரியவனாவது என்னோடு கொஞ்சம் நாள் இருந்தான்.​ ஆனால் மகள் தான் எட்டு மாதத்தில் இருந்தே அம்மாவிடம் வளர்ந்து வருகிறாள். நடிப்புக்கு கொஞ்சம் இடைவெளி கிடைக்கும் நேரங்களில் குழந்தைகளை கவனித்துக்கொள்வேன் என்று பொறுப்பான அம்மாவாக கூறினார் சோனியா போஸ்.

 

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தத் தயாராகும் இசைஞானி!

Ilayaraaja Perform Live Concert Us

முதல் முறையாக அமெரிக்காவில் இசைக் கச்சேரி நடத்தப் போகிறார் இசைஞானி இளையராஜா.

கலிபோர்னிய நகரங்கள் மற்றும் நியூயார்க்கில் இந்த இசை நிகழ்ச்சிகள் நடக்கவிருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளையராஜா வெளிநாடுகளில் இரண்டு நிகழ்ச்சிகள்தான் நடத்தியிருக்கிறார். ஒன்று இத்தாலியில், மற்றொன்று துபாயில்.

ஆனால் உலகின் பல நாடுகளிலிருந்தும் இசை ஆர்வலர்கள் அவரை கச்சே செய்து தரச் சொல்லி கேட்டு வருகிறார்கள். அவரோ அரிதாகவே அத்தகைய நிகழ்ச்சிகளை ஒப்புக் கொள்கிறார்.

இந்த நிலையில், அமெரிக்காவில் முதல் முறையாக இசை நிகழ்ச்சி நடத்த ஒப்புக் கொண்டுள்ளார் ராஜா.

இந்த கச்சேரியில் ராஜாவின் மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, மகள் பவதாரிணி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். முன்னணி பாடகர்கள், பாடகிகளுடன் இளையராஜாவின் குழு அமெரிக்கா புறப்படுகிறது, நவம்பர் இறுதியில்!

டிசம்பர் முதல் வாரத்தில் இந்த நிகழ்ச்சிகள் நடக்கும் எனத் தெரிகிறது.

 

10 நிமிடக் கதைகளில் முதல்பரிசை வென்ற நேருக்கு நேர்

makkal tv short film completion 10 kimida kadaigal
Close
 
மக்கள் தொலைக்காட்சி நடத்திய குறும்படப் போட்டிகளில் நேருக்கு நேர்' என்ற குறும்படம் முதல்பரிசினை பெற்றுள்ளது. இரண்டாவது பரிசினை`கண்டுபிடி' என்ற குறும்படமும், மூன்றாவது பரிசினை`அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்' என்ற குறும்படமும் தட்டிச் சென்றன.

இளம் படைப்பாளிகளை உலகிற்கு அறிமுகம் செய்யும் வகையில் 10 நிமிடக் கதைகள் என்ற குறும்பட போட்டித் தொடரினை மக்கள் தொலைக்காட்சி நடத்தியது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு, `இந்த குறும்படங்கள் ஒளிபரப்பாகி வருகிறது

கடந்த சில மாதங்களாக நடந்த இப்போட்டித் தொடரில் மொத்தம் இரண்டு சுற்றுகள் இடம் பெற்றன.

முதல் சுற்றில் இடம் பெற்ற குறும்படங்கள் அனைத்தையும் நடுவரின் பார்வைக்கு கொண்டு சென்று அவர்கள் அளித்த மதிப்பீடுகளின் அடிப்படையில் இரண்டாவது சுற்றுக்கு 15 குறும்படங்களை தேர்வு செய்தனர். தேர்வு செய்த குறும்பட குழுவினருக்கு புதிய தலைப்புகள் வழங்கி அதற்கேற்றாற்போல் குறும்படங்களை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அதன்படி பல்வேறு கதைக்களம் கொண்ட குறும்படங்கள் ஒளிபரப்பானதில் இருந்து சிறந்த மூன்று குறும்படங்கள் தேர்வாயின.

முதல் இடத்தை `நேருக்கு நேர்' என்ற குறும்படம் தட்டிச் சென்றது. இரண்டாவது இடத்தை `கண்டுபிடி' என்ற குறும்படமும், மூன்றாவது இடத்தை `அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்' என்ற குறும்படமும் தட்டிச் சென்றன. பரிசளிப்பு நிகழ்ச்சியில் மக்கள் தொலைக்காட்சியின் ஆலோசகரான சவுமியா அன்புமணி தலைமை தாங்கி, வெற்றி பெற்ற குறும்பட குழுவினருக்கு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர்கள் வியட்நாம் வீடு சுந்தரம், ஞானராஜசேகரன், எஸ்.ஏ.சி.ராம்கி, விஜயபத்மா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று வெற்றி பெற்ற குறும்பட இயக்குநர்களை பாராட்டி பேசினர்.

Posted by: Mayura Akilan
 

மதுவிருந்தில் நடிகர் மகத்தை தாக்கிய வழக்கில் மஞ்சு மனோஜுக்கு முன்ஜாமீன்!

Anticipatory Bail Manchui Manoj

சென்னை: மதுவிருந்தில் நடிகை டாப்சிக்காக நடந்த மோதலில் நடிகர் மகத்தைத் தாக்கிய வழக்கில் மஞ்சு மனோஜூக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது.

சென்னையில் நடிகர் ஒருவர் கடந்த 7-ந் தேதி மது விருந்து நிகழ்ச்சி நடத்தினார். அப்போது நடிகர்கள் மஞ்சு மனோஜ் மற்றும் மகத் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நடிகை டாப்சிக்காக நடந்ததாகக் கூறப்படும் இந்த மோதலில் இரண்டு நடிகர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகத் தெரிகிறது.

இந்த சம்பவம் பற்றி ராயப்பேட்டை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் மனோஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தன்னை போலீசார் கைது செய்யக்கூடாது என்று முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனோஜ் மனுதாக்கல் செய்தார்.

அவர் தரப்பில் மூத்த வக்கீல் ஏ.நடராஜன் ஆஜரானார். அவர்களுக்குள் வாய்த் தகராறுதான் நடந்தது என்றும், மோதல் ஏற்படவில்லை என்றும் அவர் வாதிட்டார்.

இந்த மனுவை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விசாரித்தார். நடிகர் மனோஜ்க்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

 

'அப்படி போடு அருவாள... யப்பா... இது ஒலக மகா நடிப்புடா சாமி!!'

Mahat Who Is That Guy Tapsi

மகத்தா... அது யாருன்னே தெரியாதுங்க. மனோஜ் மட்டும்தான் என் பிரண்ட். அவர் குடும்பத்துல நானும் ஒருத்தி. நான் மோகன்பாபு மகள் மாதிரி என்று மீண்டும் சத்தியம் அடிக்காத குறையாக சொல்ல ஆரம்பித்துள்ளார் டாப்சி.

மகத் - மனோஜ் இருவரும் டாப்சிக்காக போட்ட ஃபைட், சினிமா ஸ்ட்ன்டை விட பெரிதாகி, கோலிவுட் - டோலிவுட் என எங்கும் சிரிப்பாய் சிரித்துவிட்டது. இந்த சண்டைக்கு பின்னணி டாப்சி யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சைதான் என்பதும் தெரிந்த விஷயமே.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட டாப்சி, இதுவரை மகத் பற்றி எதுவும் சொல்லாமல் இருந்தார்.

இப்போது, அந்தக் குறை எதற்கு என்ற நினைப்பில் இன்னொரு விளக்கம் அளித்துள்ளார்.

"மகத் யாருன்னே எனக்குத் தெரியாது. சம்பந்தமே இல்லாம இப்படி என்னை ரெண்டு பேரோட சேர்த்துப் பேசுறது ரொம்ப வருத்தமா இருக்கு.

மகத் என்னை லவ் பண்ணதா சொன்னதுல உண்மை இல்ல. அவரை நான் ஒரு முறை கூட சந்திச்சதே இல்லை. யாருன்னே தெரியாத ஒருத்தர் எப்படி எனக்காக சண்டை போட்டார்னு சொல்றீங்க? இன்னொன்னு அந்த சண்டை நடந்ததா சொல்ற நாள்ல நான் கர்னூல்ல இருந்தேன்," என்கிறார் டாப்சி.

அப்படின்னா.. மகத்தும் டாப்சியும் வாரத்துக்கு இரு முறை ஏர்போர்ட்டில் சந்தித்தது, காரில் ஒன்றாக சுற்றிய படம் வெளியானதெல்லாம் கிராபிக்ஸா இருக்குமோ!

 

ராஜேஷ் கன்னாவைப் போல வாழ்ந்தவர் யாருமில்லை.. கமல் புகழாரம்

Rajesh Khanna Was World S Star Hai

ராஜேஷ் கன்னாவைப் போல புகழுடன் வாழ்ந்து மறைந்தவர்கள் யாருமில்லை. அவருக்குக் கிடைத்ததைப் போன்ற திரை வாழ்க்கை சில நடிகர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று நடிகர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.

கமல்ஹாசனுக்கும், ராஜேஷ் கன்னாவுக்கும் இடையிலான உறவு திரையுலகில் மிகப் பிரபலமானது. கமல்ஹாசன் நடித்துப் பிரபலமான படங்கள் சிலவற்றின் ரீமேக்கில் ராஜேஷ் கன்னா நடித்துள்ளார். அதை விட முக்கியமானது கமல்ஹாசனின் முதல் இந்தித் திரைப்படத்தில் ராஜேஷ் கன்னா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் அரங்கேற்றம். கமல்ஹாசன் விடலைப் பையன் நிலையிலிருந்து உருமாறி நின்றபோது நடித்த முதல் பெரிய படம் இதுதான். இந்தப் படம் பின்னர் ஆய்னா என்ற பெயரில் இந்திக்குப் போனது. அதிலும் கமல்ஹாசன் நடித்திருந்தார். அதில் ராஜேஷ் கன்னா - மும்தாஜ் இணைந்து நடித்திருந்தனர். ஆய்னா படத்தில் கமல்ஹாசன் நடன வடிவமைப்பாளராகவும் பணியாற்றியிருந்தார்.

அந்த அனுபவத்தை கமல் கூறும்போது, ஆய்னாவில் நான் நடித்தபோது வளரும் நடிகன் என்ற நிலையில் இருந்தவன் நான். ஆனால் அப்போதே பெரிய சூப்பர் ஸ்டாராக விளங்கியவர் ராஜேஷ் கன்னா. அவர் அப்போது இந்திய அளவில் மிகப் பெரிய நடிகராக, ஏன் உலக நடிகராக விளங்கினார்.

ஆய்னாவில் நான் நடித்தபோது எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்தார். தட்டிக் கொடுத்தார். ஊக்கப்படுத்திப் பேசினார். நட்புடன் பழகினார். என்னிடம் உள்ள திறமை, அது மிகச் சிறிதாக இருந்தாலும் அதை புகழ்ந்து பேசினார். எனது படங்கள் சிலவற்றில் பின்னர் இந்தி ரீமேக்கில் அவர் நடித்தபோது எனக்குப் பெருமையாக இருந்தது என்றார் கமல்.

கமல் மேலும் கூறுகையில், ராஜேஷ் கன்னாவைப் போல புகழும், பெருமையும், செல்வாக்கும் மிக்க நடிகர்கள் வெகு சிலர்தான் உள்ளனர். இப்போதும் சரி, எப்போதும் சரி ராஜேஷ் கன்னாவைப் போன்ற வாழ்க்கை வெகு சிலருக்குத்தான் கிடைக்கும் என்றார் கமல்.

கமல்ஹாசனின் அரங்கேற்றம் தவிர சிகப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட படங்களின் ரீமேக்கிலும் ராஜேஷ் கன்னா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரௌத்திரம் படத்தால் நஷ்டம் - ஜீவாவிடம் ரூ 65 லட்சம் கேட்கும் தியேட்டர்காரர்கள்!

Exhibitors Threat Jeeva Compensatio   

கொஞ்ச நாட்களாக கேட்காமலிருந்து நஷ்ட ஈடு சர்ச்சை மீண்டும் கேட்க ஆரம்பித்துள்ளது கோடம்பாக்கத்தில்.

இந்த முறை ஜீவா பட நஷ்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஜீவா-ஸ்ரேயா ஜோடியாக நடித்த ரௌத்திரம் படம் கடந்த வருடம் ரிலீசானது. தெலுங்கிலும் படத்தை வெளியிட்டனர். ஆர்.பி. சவுத்ரி இப்படத்தை தயாரித்திருந்தார். இரு மொழிகளிலுமே படம் தோல்வியடைந்தது.

இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் நடிகர் ஜீவா நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். ரூ.65 லட்சம் நஷ்டஈடு கேட்கிறார்கள்.

இதுகுறித்து அவர்கள் கூறும் போது, "ரௌத்திரம் படத்துக்கு நஷ்ட ஈடு தர சம்மதித்தனர். ஆனால் இதுவரை பணம் கொடுக்கவில்லை. எனவே ஜீவா படங்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்," என்றனர்.

ஜீவா தற்போது 'முகமூடி', நீதானே என் பொன் வசந்தம் படங்களில் நடிக்கிறார். இதுகுறித்து தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க செயலாளர் பன்னீர் செல்வம் கூறும் போது தியேட்டர் உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி ரூ.65 லட்சம் நஷ்டஈடு தர ஒப்புக் கொண்டது உண்மைதான். இந்த பிரச்சினையில் விரைவில் அடுத்த கட்ட முடிவை எடுப்போம் என்றார்.

ஆனால் யாருக்கும் நஷ்டஈடு தரும் எண்ணமில்லை என்று ஆர் பி சவுத்ரி அறிவித்துள்ளார்.

 

விஜய் படத்துக்கு தொடரும் சிக்கல் - 'துப்பாக்கி' தலைப்புக்கு தடை நீட்டிப்பு

Trouble Continues Vijay S Thuppakki   

சென்னை: ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' படத்துக்கு சிக்கல் தொடர்கிறது. இந்தத் தலைப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை 2-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் நார்த் ஈஸ்ட் பிலிம் ஒர்க் நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், `கள்ளத்துப்பாக்கி என்ற பெயரில் தமிழில் சினிமா படம் தயாரித்து வருகிறோம். படத்தின் தலைப்பை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்தோம்.

இந்த நிலையில், 'துப்பாக்கி' என்ற தலைப்பில் கலைப்புலி தாணு தயாரிக்கும் படத்தில் நடிகர் விஜய் நடிக்கிறார். கலைப்புலி தாணு விதிமுறைகளை மீறி, நான் பதிவு செய்த 'கள்ளத்துப்பாக்கி' என்ற தலைப்பின் பின் பகுதியான `துப்பாக்கி' என்ற பெயரில் படத்தை தயாரித்து வருகிறார். இந்த தலைப்புக்கு தடை விதிக்க வேண்டும்' என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி திருமகள், `துப்பாக்கி' என்ற தலைப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்த தடையை நீக்ககோரி, சிட்டி சிவில் கோர்ட்டில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், 'தலைப்பின் பின்பகுதி அல்லது முன்பகுதியை பிறர் பயன்படுத்தக்கூடாது என்று மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது. சிங்கம், ஈ, சிறுத்தை ஆகிய படங்கள் வெளியானது. அதே பெயருடன், சிங்கம்புலி, சிங்கமுகம், சிங்கமகன், நான் ஈ, நெருப்பு ஈ, சிறுத்தைபுலி என்ற படங்கள் வெளியாகியுள்ளது. மனுதாரர் விளம்பரத்துக்காக வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே 'துப்பாக்கி' என்ற தலைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

தடை நீட்டிப்பு

இந்த வழக்க நீதிபதி திருமகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களான தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை, தென்னிந்திய திரைப்படம் மற்றும் டி.வி., தயாரிப்பாளர் கில்டு ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டனர்.

இதையடுத்து நீதிபதி திருமகள் பிறப்பித்த உத்தரவில், 'எதிர்மனுதாரர்கள் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி, வழக்கை வருகிற 25-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். 'துப்பாக்கி' என்ற தலைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை வருகிற 25-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிடுகிறேன்' என்று கூறியுள்ளார்.