பிரகாஷ் ராஜின் கவுரவம் படத்துக்கு தடை!

Court Stays Prakash Raj Gouravam

பிரகாஷ் ராஜ் நடிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் இன்று வெளியாகவிருந்த கவுரவம் படத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுமுகங்கள் சிரிஷ், யாமி கவுதம் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் இன்று வெளியாகவிருந்தது கவுரவம் திரைப்படம். தெலுங்கில் இந்தப் படம் வெளியான நிலையில், தமிழில் தடை செய்யப்பட்டுள்ளது.

கண்ணன் என்பவர் சென்னை நகர சிவில் நீதிமன்றத்தில், கௌரவம் படத்துக்கு தடை கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், அலுவலக வாடகை உள்பட 11 லட்ச ரூபாய் நடிகர் பிரகாஷ்ராஜ் வழங்கவில்லை என்றும் இதனால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், ஏப்ரல் 22ஆம் தேதி வரை கௌரவம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்ததோடு, இது தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ் பதில் அளிக்க உத்தரவிட்டார்.

 

இழந்த சொத்துக்களை மீட்க நடிகர் சங்கத்தை நாடும் அஞ்சலி!

Anjali Approach Nadigar Sangam Redeem

தான் சம்பாத்த சொத்துகள் அனைத்தையும் பறித்துக் கொண்ட சித்தி மற்றும் களஞ்சியம் ஆகியோரிடமிருந்து அவற்றை மீட்டுத் தரக் கோரி நடிகர் சங்கத்தை அணுக முடிவு செய்துள்ளார் நடிகை அஞ்சலி.

அஞ்சலி நடிக்க ஆரம்பித்ததிலிருந்து அவர் பெற்ற சம்பளம், வாங்கிய சொத்துகள் முழுவதையும் சித்தியிடம்தான் கொடுத்து வந்தாராம். இயக்குநர் களஞ்சியம் இவரை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாராம்.

இந்த இருவரையும் மீறி வெளியில் வந்த அஞ்சலி, இனி சுதந்திரமாக இருப்பேன் என அறிவித்துவிட்டார்.

இப்போது தெலுங்குப் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வரும் அஞ்சலி, வரும் 24-ம் தேதிக்குப் பிறகு சென்னை வருகிறார்.

தனது சொத்துக்களை சித்தி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களிடமிருந்து மீட்டுத் தருமாறு கேட்கப் போகிறாராம். இதுகுறித்து சங்கத் தலைவர் சரத்குமாரிடம் பேசியதாகவும், அவரும் நிச்சயம் உதவுகிறோம் என வாக்களித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அஞ்சலிக்கு இப்போது பெரும் உதவியாகவும் ஆதரவாகவும் இருப்பது தெலுங்கு பட அதிபர் ஒருவர்தானாம்.

 

தெனாலிராமனில் வடிவேலு ஜோடி பார்வதி ஓமணக் குட்டன்!

சென்னை: மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ள வடிவேலு, முதல் படமாக தெனாலிராமனைத் தொடங்குகிறார்.

இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பார்வதி ஓமணக்குட்டனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

காமெடி நடிகர் வடிவேலு கடந்த இரண்டு வருடமாக புதுப்படங்களில் நடிக்காமல் இருந்தார். அவரது தேர்தல் பிரச்சாரம், விஜயகாந்துடனான தனிப்பட்ட மோதல், வழக்குகள் காரணமாக, கிட்டத்தட்ட சினிமாவிலேயே இல்லாத நிலை.

parvathy omanakuttan is vadivelu lead lady in tenaliram
இப்போது அந்த நிலையிலிருந்து மீண்டு வந்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் தெனாலிராமன் படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார் வடிவேலு.

யுவராஜ் இயக்கும் இந்தப் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டனை ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர் பிலலா 2 படத்தில் அஜீத்துடன் நடித்தவர். இன்னொரு நாயகியும் படத்தில் உண்டாம். ஆர்தர்வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசையமைக்கிறார்.

இந்தப் படத்துடன் மேலும் இரு படங்களிலும் வடிவேலு நடிக்கப் போகிறாராம்.

 

இந்தியில் 'கப்பார்' ஆக வரும் முருகதாஸின் ரமணா!

Ramana Becomes Gabbar Bollywood

தமிழில் விஜயகாந்த் நடித்து பெரும் வெற்றி பெற்ற ஏ ஆர் முருகதாஸின் ரமணா படம் இப்போது இந்தியில் தயாராகிக் கொண்டுள்ளது.

படத்துக்கு கப்பார் என பெயர் சூட்டியுள்ளனர். இந்தப் படத்தில் அக்ஷய் குமார் நாயகனாக நடிக்கிறார்.

இந்தப் படத்தின் ரீமேக் உரிமையைப் பெற்றிருப்பவர் பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. ஆனால் படத்தை அவர் இயக்கவில்லை. ஆரம்பத்தில் முருகதாஸைத்தான் இயக்குமாறு கேட்டிருந்தார்.

ஆனால் முருகதாஸ் மறுத்துவிட்டதால், அந்தப் பொறுப்பை இயக்குநர் க்ரிஷ்-ஷிடம் ஒப்படைத்துள்ளார். தெலுங்கில் கம்யம், வேதம் படங்களை இயக்கியவர் க்ரிஷ்.

இதே அக்ஷய் குமாரை வைத்து துப்பாக்கியை இந்தியில் பிஸ்டல் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார் முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.