யூடியூப்-திரையுலகத்தை காப்பாற்றுங்கள்:இயக்குநர் எஸ்


Movies Through Internet Save The Film Industry
சென்னை: இணைய உலகின் யூடியூப் பில் திரைப் படங்களைப் பார்ப்பது அதிகரித்து வருவதால் திரையுலகத்தினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் கவலை தெரிவித்துள்ளார்.
தினந்தோறும் படத்தை இயக்கிய நாகராஜ் தற்போது இயக்கியுள்ள படம் மத்தாப்பூ. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், புதிய திரைப்படங்களைக் கூட யூ டியூப்பில் டவுன்லோடு செய்து பார்ப்பது அதிகமாகிவருகிறது. இப்படியிருந்தால் எப்படி தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருவார்கள். தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் படங்கள்கூட யூ டியூப்பில் முழுமையாகப் பார்க்க முடிகிறது.
விஜய் நடித்த நண்பன் படத்தை யூ டியூப்பில் 50 லட்சம் பேர் டவுன்லோடு செய்து பார்த்திருக்கிறார்கள். அது பெரிய படம் என்பதால் பாதிக்கப்படவில்லை. தடையறத் தாக்க படத்தைகூட 20 லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர். அந்த படம் தியேட்டரில் சரியாக ஓடவில்லை. இப்படி டவுன்லோடு செய்த 20 லட்சம் ரசிகர்களும் தியேட்டருக்கு வந்து பார்த்திருந்தால் அப்படம் 40 தியேட்டர்களில் 25 நாட்கள் ஓடிய வசூல் அந்த படத்தை வாங்கியவர்களுக்கு கிடைத்திருக்கும். இந்த யூ டியூப் மட்டுமின்றி, திருட்டு விசிடி போன்ற விசயங்களாலும் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம்தான். இதைப்பற்றியெல்லாம் திரையுலகினர் யோசித்துப்பார்த்து, படங்களை ரிலீஸ் செய்வதோடு வேலை முடிந்து விட்டது என்று இருக்காமல் இதுபோன்ற தொழில்நுடப ரீதியாக இலவசமாக டவுன்லோடு செய்து பார்ப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றார்.
 

பாக்யராஜை பார்த்தா மியூசிக் போட வருமா? - இளையராஜா

Tough Compose Music Villans Ilayaraja

சென்னை: ‘வில்லன் நடிகர்களுக்கு பாடல் போடவே வராது' என இளையராஜா தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னையில் ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் இளையராஜா இசையமைக்கும் ‘சித்திரையில் நிலாச் சோறு' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் சிவகுமார், சத்யராஜ், இளையராஜா, ஆர். சுந்தர்ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் இளையராஜா பேசினார். அப்பொழுது அவர் வில்லன்கள் முகத்தைப் பார்த்தால் இசை அமைக்கவே வராது என்றார்.

இறைவனுக்கு நன்றி...

பொதுவா இந்த அரங்கத்துலயே நடந்த நான் இசையமைத்த படங்களுக்கு நான் வந்ததில்லை, இந்த படத்திற்கு வரவேண்டிய சூழ்நிலையை இறைவன் ஏற்படுத்தி விட்டான். உங்களையெல்லாம் சந்திக்கக் கூடிய பாக்கியம் கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி.

இசையை கேட்டு நீங்களே முடிவு செய்யுங்கள்...

நான் இசையமைக்கிற படத்தை பத்தி பொதுவா சொல்றதில்லை. இந்த படத்துல இதை பண்ணியிருக்கேன், அதை பண்ணியிருக்கேன்னு பேசறது தேவையில்லாதது. ஏன்னா, இசையை கேட்டால் நீங்களே முடிவு பண்ணிடப் போறீங்க.

வில்லனுக்கு பாட்டு.. ரொம்பக் கஷ்டம்

சில வில்லன் நடிகர்களுக்கு பாடல் போடறதுக்கு வரவே வராது. பல நடிகர்களை நீங்க யோசிச்சி பாருங்க. அவங்க பாட்டு பாடினால், அவங்களுக்கு கம்போஸ் பண்றப்ப என்னோட மன நிலை பாட்டுக்கு போகணும் இல்லையா.

வில்லன் ஹீரோ ஆனால்...

ஆனால், இதையெல்லாம் மீறி சத்யராஜ் வில்லனா இருக்கிறப்ப ‘என்னம்மா கண்ணு...செளக்கியமான்னு ஆரம்பமாச்சி...அப்புறம் அவர் ஹீரோவானதுக்கப்புறம் ‘தாஸ் தாஸ்...சின்னப்ப தாஸ்னு' டூயட் போடறதுக்கு வசதியா இருந்துச்சி.

ரொம்பக் கஷ்டம்...

இப்படித்தான் பாரதிராஜா ‘புதிய வார்ப்புகள்' படம் எடுக்கும் போது பாக்யராஜ்தான் ஹீரோன்னு முடிவு பண்ணாரு. என்னய்யா நாங்கள்லாம் மியூசிக்லாம் போட வேண்டாமா, முகத்தைப் பார்த்தால் மியூசிக் போடணும்னு தோணுமான்னு ஓபனா கேக்கறன்.

ரொம்ப தப்புனு புரிஞ்சது...

அதுல என்ன தவறுன்னா, பின்னாடி நான் உணர்ந்தது. இவர் அற்புதமான திரைக்கதை அமைப்பவர். இந்தியாவுலயே பேர் வாங்கினவரு. ஒரு கலைஞனை முழுமையாகப் புரிந்து கொள்ளக் கூடிய நேரத்துலதான் அந்த பாராட்டுக்கு அர்த்தம் வருது.

பாரதிராஜா செஞ்சது சரி...

புதிய வார்ப்புகள் படத்துல பாரதிராஜா, பாக்யராஜை ஹீரோவா செலக்ட் பண்ணது அந்த படத்துக்கு பெரிய வெற்றியா அமைஞ்சது. பாக்யராஜுக்கும் பெரிய எதிர்காலம் அமைஞ்சது. அது மட்டுமல்ல, பாக்யராஜ் சிறந்த திரைக்கதை ஆசிரியரா இருந்ததாலதான், அவருடைய வாழ்க்கைக்கு, வெற்றிக்கு திரையுலக பயணத்துக்கு மிகப் பெரிய விஷயமா அமைஞ்சதுன்னு உங்க எல்லாருககும் தெரியும்.

பாடம் கற்றேன்...

அந்த நேரத்துல அப்ப நான் பாக்யராஜை நம்பலை. படத்தைப் பார்த்த பிறகுதான் பாக்யராஜைப் பத்தி தெரிஞ்சுது, அடடா, பெரிய தப்பு பண்ணிட்டோமே, யார் கிட்டட என்ன திறமை இருக்குன்னு தெரியாம நாம எதுவும் சொல்லக் கூடாதுன்னு முடிவெடுத்தேன். அன்றிலிருந்து யாரைப் பற்றியும் எந்த முடிவும் எடுப்பதில்லைன்னு ஒரு பெரிய பாடத்தை பாக்யராஜிடமிருந்து கற்றுக் கொண்டேன்," என பேசினார்.

 

சைந்தவிக்கு பொம்மையை கொடுத்து காதல் வளர்த்தேன்

சென்னை: இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், பாடகி சைந்தவியை வரும் ஜூனில் மணக்க உள்ளார். இந்நிலையில், டெடிபியர் பொம்மையை கொடுத்து காதலியை கவர்ந்ததாக ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.
‘வெயில்‘, ‘குசேலன்‘, ‘ஆயிரத்தில் ஒருவன்‘ உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசை அமைத்து பிரபலமானவர் ஜி.வி.பிரகாஷ். தனது இசையில் பாட வந்த பாடகி சைந்தவியை காதலிப்பதாகத் தான் முதலில் செய்தி பரவியது. ஆனால் 12 வருடமாக இவர்கள் காதலித்து வருகிறார்களாம். இவர்கள் திருமணம் வரும் ஜூன் மாதம் 27ம் தேதி சென்னையில் நடக்க இருக்கிறது.
சைந்தவியை காதலித்த அனுபவம் பற்றி பிரகாஷ் கூறியதாவது:
அப்போ நா 10வது... சைந்தவி 8வது
நான் 10ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் சைந்தவி 8 வகுப்பு படித்து வந்தார். அப்போதே அவர் மீது எனக்கு காதல் பிறந்துவிட்டது. எனது காதலை அவரிடம் வெளிப்படுத்தினேன்.

toys develop my love g v prakash
காதல் வளர்த்தேன்...
டெடிபியர் கரடிபொம்மை இரண்டை அவருக்கு பரிசளித்தேன். அதை தொட்டால் உடனே ‘ஐ லவ் யூ‘ என்று சொல்லும். இப்படித்தான் எனது காதலை தெரிவித்தேன். அவருக்கும் என்னை பிடித்திருந்தது.
இப்போ, லைப்ல செட்டில் ஆகிட்டோம்...
அடிக்கடி எனக்கு போன் செய்வார். மனம் விட்டு பேசி காதலர்களாக ஆனோம். கடந்த 12 வருடமாக எங்கள் காதல் வளர்ந்துவந்தது. வாழ்க்கையில் நிலையான ஒரு இடத்தை பிடித்தபிறகே திருமணம் செய்ய முடிவு செய்தோம்.
வயசாகுதுல...
இப்போது எல்லோருக்கும் தெரிந்த ஒரு இசை அமைப்பாளராக நான் இருக்கிறேன். சைந்தவி பாடகியாக இருக்கிறார். திருமணத்துகான வயதும் வந்துவிட்டது. எனவே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் கூறினார்.
 

ரூ.50லட்சம் மோசடி:பவர் ஸ்டார் சீனிவாசன் கைது,புழல் சிறையில் அடைப்பு

Power Star Srinivasan Arrested

சென்னை: ரூ. 50 லட்சம் மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பி.எஸ். ரங்கநாதன்(60). ஹோட்டல் அதிபர். அவர் தனது தொழிலை மேம்படுத்த பலரிடம் கடன் கேட்டுள்ளார். அப்போது அவரை 2 ஏஜெண்டுகள் சந்தித்துள்ளனர். அதில் ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர், மற்றொருவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். அவர்கள் தங்களுக்கு தெரிந்த ஒருவரிடம் இருந்து பணம் வாங்கித் தருவதாக ரங்கநாதனிடம் கூறினர். பின்னர் ரங்கநாதனை பவர் ஸ்டார் சீனிவாசனிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.

அப்போது ரூ.20 கோடி கடன் வாங்கித் தருகிறேன் என்று உறுதியளித்த பவர் தனக்கு கமிஷனாக ரூ.50 லட்சம் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கான ஒப்பந்தத்திலும் பவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கையெழுத்து போட்டுள்ளார்.

ஆனால் பல மாதங்கள் ஆகியும் பவர் கடன் வாங்கியும் கொடுக்கவில்லை, வாங்கிய கமிஷன் பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதையடுத்து ரங்கநாதன் கடந்த அக்டோபர் மாதம் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். இது குறித்து குற்றப்பிரிவு துணை கமிஷனர் சிவகுமார், உதவி கமிஷனர் ஸ்ரீதர் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் விசாரணை நடத்தினார்.

பவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 420 (மோசடி), 406 (நம்பிக்கை மோசடி), 120 (பி) (கூட்டு சதி) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை இன்று அதிகாலை சாலிகிராமம் அருகே கைது செய்தனர். அவரை கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துவிட்டு எழும்பூரில் உள்ள மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து பவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

பவர் இதுபோன்று பலரிடம் மோசடி செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனால் பவரிடம் ஏமாந்தவர்கள் புகார் கொடுக்கலாம் என்றும், கவர்ச்சிகரமான உறுதிமொழியை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் போலீசார் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.