'மாமா'கிட்ட கேட்டுத் தான் பேட்டி கொடுப்பேன்: நடிகை அடம்

சென்னை: தனுஷின் பெயரில் இரண்டு எழுத்தை மாற்றி கா சேர்த்தால் அந்த நடிகையின் பெயர் வரும். அவர்
தன் மாமாவிடம் கேட்காமல் பேட்டி கொடுக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

தஞ்சையைச் சேர்ந்த தமிழ் பொண்ணு தான் அந்த 4 எழுத்து நடிகை. அவர் நடித்து வரும் இரண்டு
எழுத்து படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. நிகழ்ச்சிக்கு வந்த நடிகையைப்
பார்த்ததும் நிருபர்கள் அவரை பேட்டி காண சென்றனர்.

அதற்கு நடிகையோ, பேட்டி எல்லாம் கொடுக்க மாட்டேன். மாமாவிடம் கேட்டு தான் பேட்டி
கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார். நடிகை தனது உதவியாளரிடம் மாமாவை அழைத்து
வரும்படி கூறியுள்ளார். அது யாரு அந்த மாமா என்று நிருபர்கள் ஆவலுடன் காத்திருந்தபோது
சிம்ரன், விந்தியா உள்ளிட்ட நடிகைகளுக்கு மேனேஜராக இருந்த அருண் வந்தார்.

அடடா இவர் தான் மாமாவா என்று நிருபர்கள் நினைத்துக் கொண்டனர். தன்ஷிகா அருகே வந்து
அமர்ந்த அருண், நீங்கள் தன்ஷிகாவை பற்றி நிறைய அவதூறு செய்திகளை எழுதுகிறீர்கள், அதனால்
உங்களுக்கு எல்லாம் பேட்டி கொடுக்க முடியாது என்று கத்தியுள்ளார்.

 

இயக்குநர் ஷக்தி சிதம்பரத்தின் தந்தை மரணம்

இயக்குநர் ஷக்தி சிதம்பரத்தின் தந்தை சிதம்பரம் மரணமடைந்தார்.

அவருக்கு வயது 71. நேற்று நள்ளிரவில் திடீர் மரணமடைந்தார். அவருக்கு இரண்டு மகன்கள். அதில் ஒருவர்தான் ஷக்திசிதம்பரம்.

சிதம்பரத்தின் உடல் அவரது சொந்த ஊரான சாத்தூரில் வைக்கப்பட்டுள்ளது அவரது உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஷக்தி சிதம்பரத்தின் மச்சான் படத்தை பார்க்க ஆவலோடு இருந்த அவர் பார்க்காமலே சென்றுவிட்டார் என்று வேதனையுடன் தெரிவித்தார் ஷக்தி சிதம்பரம்.

சிதம்பரத்தின் உடலுக்கு இன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.


 

தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கும் நடிகர்

தளபதி என்ற பட்டத்தை பெயரில் வைத்திருப்பதாலோ என்னவோ அரசியல் பிரச்சினையில் படத்தை வெளியிட முடியாமல் சிக்கிக் கொண்ட நடிகர் தற்போது மிகவும் உஷாராக இருக்கிறாராம்.

லீடர் படத்தை எடுத்த இயக்குநர் மீண்டும் நடிகரைத் தொடர்பு கொள்ள முயன்றாராம். ஐயோ, சாமி போடும்டா பட்ட சூடு என தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாகக் கூறி இயக்குநரை சந்திக்க மறுத்து விட்டாராம் நடிகர்.

பொதுவாகவே படத்தைத் தவிர வெளியில் ,மிகவும் அமைதியான ஆள் என்ற பெயர் எடுத்த நடிகர், இப்போது இன்னும் மௌன குரு ஆகிவிட்டாராம். அடுத்து நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் ஸ்கிரிப்டை மீண்டும் மீண்டும் வாங்கிப் படித்துக் கொள்கிறாராம். தன்னையும் அறியாமல் அப்படத்திலும் ஏதேனும் உள் குத்து அமைந்து விடக் கூடாது என்பதில் மிகவும் உஷாராக இருக்கிறாராம் நடிகர்.