ஸ்ருதி நடிக்கும் ‘கார்த்திகைப் பெண்கள்’ புதிய தொடர்

Tiru Pictures New Serial Karthigai Pengal

சன் டிவியில் இரவு பத்துமணிக்கு கார்த்திகை பெண்கள் என்ற புதிய நெடுந்தொடர் ஒளிபரப்பாகிறது. இந்த தொடரை திரு பிக்சர்ஸ் திருமுருகன் தயாரித்துள்ளார். ஏற்கனவே ‘நாதஸ்வரம்' தொடரை தயாரித்து இயக்கி வரும் திருமுருகன் கிரியேட்டிவ் ஹெட் ஆக பொறுப்பேற்றுள்ளார். இந்த புதிய தொடரில் கதாநாயகியாக கல்கி திரைப்படப்புகழ் நடிகை ஸ்ருதி நடித்துள்ளார். கதாநாயகனாக பானுசந்தர் நடித்திருக்கிறார்.

கன்னட நடிகர் மகேந்திராவை திருமணம் செய்து கொண்டு செட்டிலான ஸ்ருதி சினிமாத்துறையை விட்டு விலகியிருந்தார். பின்னர் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதை அடுத்து கடந்த ஆண்டு பரஸ்பரம் விவாகரத்து பெற்றுவிட்டனர். இதனையடுத்து இப்போது சீரியல் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் ஸ்ருதி. கார்த்திகைப் பெண்கள் தொடர் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களை சந்திக்க வந்துள்ளார்.

ஜூலை 30ம்தேதி முதல் சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு இந்த புதிய தொடர் ஒளிபரப்பாகத்தொடங்கியுள்ளது.

கார்த்திகைப் பெண்கள் தொடர் நிச்சயம் அழுகைத்தொடராக இருக்காது என்று தொடர் தாயாரிப்பாளர்கள் உறுதியளித்துள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம்.

 

பிரசன்னா மனைவியாக இருக்கப் பிடிக்கவில்லை! - சினேகா

I Don T Like Be Prasanna Wife Sneha

ஏதாவது ஒன்றை நெகடிவாக சொல்லி பப்ளிசிட்டி தேடுவதை பிரசன்னாவும் - சினேகாவும் வழக்கமாகவே வைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது.

இந்த முறை, எனக்கு பிரசன்னா மனைவியாக இருக்கப் பிடிக்கவில்லை என்று கூறி, பின்னர் காதலியாக இருக்கத்தான் பிடித்திருக்கிறது என்று கூறியுள்ளார் சினேகா.

சமீபத்தில் நடந்த பேஷன் ஷோ ஒன்றில் இருவரும் நடை போட்டனர். இதே பேஷன் ஷோவில் போன ஆண்டும் பங்கேற்றனர். ஆனால் அப்போது இருவருக்கும் காதல் என்ற விஷயம் கூட வெளியில் தெரிந்திருக்கவில்லை.

பேஷன் ஷோ முடிந்ததும் நிருபர்களிடம் பேசிய சினேகா கூறுகையில், "போன வருஷம் நாங்க இந்த நிகழ்ச்சியில் நடந்து வரும் போது காதலிச்சிகிட்டு இருந்ததே யாருக்கும் தெரியாது. போன வருஷம் காதலர்கள்; இந்த வருஷம் கணவன் மனைவியா நடந்துவர்றோம்," என்று ஆரம்பித்தார்.

"பிரசன்னாவோட மனைவியா எப்படி உணர்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு, "பிரசன்னாவோட மனைவியா இருக்க எனக்கு விருப்பமில்லை. பிரசன்னாவோட மனைவியா இருக்குறதவிட, காதலியா இருக்கதான் ஆசைப்படுகிறேன்," என்றார்.

 

பெரிய ஆசைகள் எதுவும் இல்லை: சீரியல் நடிகை ரம்யா

Serial Actress Ramya Interview

விஜய் டிவியின் ‘மதுரை' தொடர் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை ரம்யா அதே டீமுடன் ‘சரவணன் மீனாட்சி' தொடரிலும் அமைதியான பெண்ணாய் நடித்து வருகிறார். சன் தொலைக்காட்சியின் ‘முத்தாரம்' தொடரில் கணவனை கொலை செய்துவிட்டு காதலுடன் போகத்துடிக்கும் பெண்ணாக வில்லத்தனம் செய்கிறார். சீரியல் மட்டுமல்லாது சினிமாவிலும் களம் இறங்கியுள்ள ரம்யா தனது சின்னத்திரை பயணத்தை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்.

பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். தேனாம்பேட்டையிலுள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் பி.ஏ. படித்து விட்டு மாடலிங் செய்து கொண்டிருந்தேன். அப்போது தற்செயலாக விஜய் டி.வி.யின் "காதல் கதை' என்ற சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலின் இயக்குநர் எ.பி. ராஜேந்திரன் மூலம் சுறுசுறுப்பான கிராமத்து பெண் கேரக்டர் கிடைத்தது. குறும்புத்தனமான அந்த நடிப்பு எல்லோராலும் பெரிய அளவில் பேசப்பட்டது. தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று அப்போது விருப்பமில்லை. "காதல் கதை' சீரியல் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் நிறைய வாய்ப்புகள் வந்தன. "நிம்மதி', "கௌரவம்' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தேன். அனைத்தும் பெரிய அளவில் பேசப்பட்டது.

"மதுரை' சீரியலில் தண்டல் தாமரை என்ற சுறுசுறுப்பான கிராமத்து பெண்ணாக நடித்தேன். என்னவோ தெரியவில்லை எனக்கு அமைகின்ற கேரக்டர்கள் எல்லாமே கிராமத்தை மையமாக வைத்தே வருகின்றன. நகரத்திலேயே பிறந்து வளர்ந்த எனக்கு கிராமத்து கேரக்டர்களில் நடிப்பது முதலில் கஷ்டமாக இருந்தது. தொடர்ந்து ஒரே மாதிரியான கேரக்டர்கள் அமையப் பெற்றதால் சுலபமாக மாறிவிட்டது.

ஆண்பாவம் தொடரில் போல்டான கேரக்டர் செய்தேன். இப்பொழுது ஒளிபரப்பாகிவரும் முத்தாரம் தொடரில் மாடர்னான கதாபாத்திரம் கிடைத்துள்ளது. அது ஓரளவிற்கு நெகடிவ் கலந்தது. சூரியன் எஃப்.எம். விளம்பரத்தில் நடித்தது மறக்க முடியாததாகும். ஷூட்டிங் இல்லாத நேரங்களில் மாடலிங்கில் ஈடுபட்டு வருகிறேன்.

சீரியலின் வளர்ச்சி நாளுக்கு நாள் ஆரோக்கியமாக இருக்கிறது. சினிமாவில் இருந்து சீரியலுக்கு வருபவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது. சீரியலில் இருந்து சினிமாவுக்கு யாருமே ஆர்வமாக போவதில்லை.

சினிமாவைப் பொறுத்த வரை புடவை மட்டுமே கட்டி நடிக்கும் குடும்பப் பாங்கான கேரக்டர்கள் அமைந்தால் மட்டுமே நடிப்பேன். ‘தடையறத்தாக்க' திரைப்படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரமாக அமைந்தது அதனால் ஈடுபாட்டுடன் நடித்தேன். மற்றபடி சினிமாவில் பெரிய அளவிலான ஆசைகள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு மகிழ்ச்சியுடன் சீரியல் சூட்டிங்கிற்கு கிளம்பினார் ரம்யா.

 

கோடிக்கணக்கான சொத்தில் டிம்பிளுக்கு பைசா கூட எழுதி வைக்காத ராஜேஷ் கன்னா!

Superstar Rajesh Khanna Didn T Leave A Penny For Wife

மும்பை: மறைந்த பாலிவுட் நடிகர் ராஜேஷ் கன்னா தனது கோடிக்கணக்கான சொத்துக்களை 2 மகள்கள் பெயரில் எழுதி வைத்துள்ளார். மனைவி டிம்பிளுக்கு பைசா கூட இல்லை.

இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் எனப்படும் பாலிவுட் நடிகர் ராஜேஷ் கன்னா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 18ம் தேதி மரணம் அடைந்தார். அவர் தான் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு தனது கோடிக்கணக்கான சொத்துகளை மகள் டுவிங்கிள் மற்றும் ரிங்கி கன்னா ஆகியோரின் பெயர்களில் எழுதி வைத்துள்ளார். அந்த உயிலில் அவரது மனைவி டிம்பிளுக்கு பைசா கூட எழுதவில்லை.

ராஜேஷ் கன்னாவும், டிம்பிளும் 1973ல் காதல் திருமணம் செய்து இரண்டு மகள்களைப் பெற்ற பிறகு 1984ம் ஆண்டு பிரிந்தனர். ஆனால் அவர்கள் விவகாரத்து வாங்கவில்லை. ராஜேஷ் கன்னா உடல் நலம் பாதித்திருந்தபோது அவருக்கு அருகில் டிம்பிள் தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை கார்ட்டர் ரோட்டில் உள்ள ராஜேஷ் கன்னாவின் பங்களாவான ஆசிர்வாதை அவரது நினைவாக அருங்காட்சியமாக மாற்ற டுவிங்கிளும், ரிங்கியும் தீர்மானி்ததுள்ளனர்.

 

ஜாக்பாட் நிகழ்ச்சியில் ஆண்களுக்கும் பரிசு!

Male Can Also Participate Simrans J

ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜாக்பாட் நிகழ்ச்சியில் பெண்கள் மட்டுமே பங்கேற்று வந்தனர். அதில் இனி ஆண்களும் பங்கேற்க நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அனுமதி அளித்துள்ளனர்.

நடிகை சிம்ரன் தொகுத்து வழங்கும் ஜாக்பாட் நிகழ்ச்சி ஞாயிறு தோறும் இரவு 8 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. வித்தியாசமான இந்த கேம்ஷோ நிகழ்ச்சியில் இதுவரை பெண்கள் மட்டுமே பங்கேற்று வந்தனர்.

வெறும் கேள்வி-பதில் என்ற அறிவுபூர்வ எல்லையைத் தாண்டி, பெண்களுக்கான இந்த `கேம்ஷோ`வில் ஆண்களும் போட்டியாளர்களாக இப்போது பங்கேற்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் பரிசுகளின் எண்ணிக்கையும், அவைகளின் மதிப்பும் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

 

இளம் நடிகருக்காக படத்தயாரிப்பிலும் இறங்கும் அம்மணி!

கொஞ்ச நாள் முன்னாடி 'செல்வாக்கான பெண்மணி - இளம் நடிகர் நட்பு' பற்றி ஒரு மேட்டரை லேசு பாசா சொல்லியிருந்தோம். அதுக்கே ஏகப்பட்ட பேர் போனிலும் நேரிலும் விசாரித்துவிட்டார்கள். விசாரணை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது!!

இப்போது அவர்கள் உறவில் இன்னும் ஒரு படி முன்னேற்றம். தன்னை நன்கு கவனித்துக் கொள்ளும் நடிகரின் சினிமா வாழ்க்கையை கொஞ்சம் கைத் தூக்கிவிடும் முயற்சியில் இருக்கிறாராம் அம்மணி.

சில ஆண்டுகளுக்கு முன் நின்றுபோன நடிகரின் படங்களை தூசு தட்டி, மிச்சத்தை முடித்து ரிலீஸ் பண்ணும் வேலையில் இறங்கியுள்ளாராம்.

இதை தானே நேரடியாக செய்யாமல், திரையுலகில் உள்ள இன்னொரு செல்வாக்கு மிக்க பெண்மணி மூலம் செய்யச் சொல்லியிருக்கிறாராம்.

நடிகருக்கு இதில் ஏக குஷி.

போகிற போக்கைப் பார்த்தால் சொந்தமாக படக் கம்பெனியே தொடங்கிவிடுவார் போலிருக்கிறது அம்மணி!

மேலும் கிசு கிசு செய்திகள்

 

கம்பி மேல் நடந்து குத்தாட்டம் போட்ட ரோஜா!

Roja Doing Item Number   

‘வேட்டையாடு' திரைப்படத்திற்காக கழைக்கூத்தாடியாக நடித்திருக்கிறாராம் ரோஜா. அதில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ள ரோஜா கம்பிமேல் நடந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

90 களில் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ரோஜா. செல்வமணியுடன் திருமணம் குழந்தைகள் என செட்டிலாகிவிட்ட அவர் ஆந்திர அரசியலில் பரபரப்பாக இருக்கிறார். சினிமாவில் இப்போது கதாநாயகிகளின் அழகான அம்மாவாக வலம் வரும் ரோஜா வேட்டையாடு படத்தில் குத்தாட்டம் போட்டுள்ளாராம்.

கழைக்கூத்தாடிகளின் வாழ்கையைச் சொல்லும் அந்தப் பாடலுக்காக நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜனுடன் கழைக்கூத்தாடி வேடமணிந்து ஆடியிருக்கிறார் ரோஜா. மேலும் கழைக்கூத்தாடிகள் செய்வது போன்று கம்பி மேல் நடந்து சாகசம் செய்திருக்கிறாராம். இந்தப் படத்திற்காக அவருக்கு பெரிய தொகையை சம்பளமாகக் கொடுத்திருக்கின்றனராம்.

இந்தப் படத்தை விஜயபாலன் இயக்குகிறார். விடியல் ராஜு தயாரிக்கிறார். ரோஜா மற்றும் பாண்டியராஜனுடன் உதயதாரா, மனோ பாலா, நெல்லை சிவா, காதல் சுகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

விஜய் நடித்த ‘நெஞ்சினிலே' படத்தில் ‘தங்க நிறத்துக்குத்தான் தமிழ்நாட்டை எழுதித்தரட்டுமா' என்ற பாடலுக்காக குத்தாட்டம் ஆடியவர் ரோஜா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடனம் ஆடியுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஜெனீபர் லோபஸின் பெயரை தொப்புளில் பச்சை குத்திய காதலர்

Lopez S Boyfriend Tattoos Her Name

லாஸ் ஏஞ்சலெஸ்: நடிகையும், பாப் பாடகியுமான ஜெனீபர் லோபஸின் காதலர் காஸ்பர் ஸ்மார்ட், தனது காதலியின் பெயரை தனது தொப்புளில் பச்சை குத்தி வைத்துள்ளாராம்.

லோபஸ் மீதான தன்னுடைய காதலை வெளிப்படுத்த இதைத் தவிர சிறந்த வழி அவருக்குத் தெரியவில்லையாம்.

இதுகுறித்து ஜெனிபர் கூறுகையில், காஸ்பர் குத்தியுள்ள பச்சை படு செக்ஸியாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும், தனக்குப் பிடித்த இடத்தில்தான் பச்சை குத்தியுள்ளார் காஸ்பர் என்றும் கூறி சிரித்தாராம். அந்த பச்சையையும், அதைக் குத்திய காஸ்பரையும் ரொம்பவே நேசிப்பதாகவும் சிலாகித்துக் கூறினாராம்.

ஜெனீபருக்கு 42 வயதாகிறது. ஆனால் அவருடைய காதலருக்கு அவரை விட 18 வயசு கம்மி என்பது குறிப்பிடத்தக்கது.

காஸ்பர், உங்களுடையது ஸ்மார்ட் மூவ்தான்...

 

40 லட்சம் வாங்கித்தந்த இயக்குநர்!

Mysskin S Struggle Narain 40

அஞ்சாத ஹீரோ நடிகர் முகமூடி படத்திற்காக வில்லனாக மாறியவர். அவருக்கு பேசிய சம்பளத்தை தராமல் தயாரிப்பு தரப்பினர் இழுத்தடித்துள்ளனர்.

இதனால் கடுப்பான இயக்குநர் மிஸ்கின் என்னுடைய நட்பினால் வில்லனாக மாறியவர் அவர் எனவே பேசிய பணம் 40 லட்சத்தை கொடுக்கவேண்டும் என்று தயாரிப்பாளரிடம் சண்டை போட்டுள்ளார். தமிழில் மார்க்கெட் இல்லாத நடிகருக்கு 4 லட்சம் கொடுத்தால் போதும் என்று கூறியுள்ளனர் தயாரிப்பு தரப்பினர்.

ஹீரோவாக இருந்த அவனை வில்லனாக்கியவன் நான் எனவே பேசிய பணத்தை எண்ணி வையுங்கள் என்று முழு பணத்தையும் வாங்கிக்கொடுத்தாராம் மிஸ்கின்

மிஸ்கினைப் பற்றி மீடியாக்களில் செய்தி வந்தாலே அது அவரைப் பற்றி குறை கூறுவதாகத் தான் இருக்கும். ஆனால் முதல் முறையாக நட்பு நடிகருக்காக சண்டை போட்டு சம்பளம் வாங்கிக்கொடுத்தது திரையுலகில் ஆச்சரியமாக பேசப்படுகிறது.

 

சுதீப் படங்களுக்கு மவுசு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'நான் ஈ' திரைப்படத்தில் வில்லனாக நடித்த சுதீப்பின் கன்னட படங்களுக்கு மவுசு மேலும் கூடியிருக்கிறதாம். காரணம் நான் ஈ படத்தில் அவருடைய மிரட்டல் நடிப்பு தான். ஏற்கனவே அவருடைய கன்னட படங்கள் சூப்பர் ஹிட்டாகும். இப்போது இந்த படத்ததுக்கு பிறகு அவரது படங்களுக்க மவுசு இன்னும் அதிகமாகி விட்டதாகும். அதுமட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி என எல்லா பட வாய்ப்புகள்ளும் வருகிறதாம்.


 

ஜோடி போட்டு நடிக்கும் சினேகா டிரெண்ட்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
திருமணத்துக்கு பின் நடிப்புக்கு முழுக்கு போடும் நடிகைகளுக்கு மத்தியில் கணவர் பிரசன்னாவுடன் ஜோடி போட்டு நடித்து டிரெண்ட் மாற்றுகிறார் சினேகா. அஜீத், ஷாலினி, சூர்யா, ஜோதிகா ஜோடிகளில் திருமணத்துக்கு பிறகு ஷாலினியும், ஜோதிகாவும் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டனர். இந்நிலையில் சமீபத்தில் காதல் திருமணம் செய்த பிரசன்னா,சினேகா ஜோடி புதிய டிரெண்ட் உருவாக்கி வருகிறது. விளம்பரங்களில் தொடங்கி, திரைப்படம் வரை இந்த ஜோடிகள் இணைந்து நடித்து வருகின்றனர். கார்த்தி நடிக்க வெங்கட் பிரபு இயக்கும் பிரியாணி படத்தில் சினேகா, பிரசன்னா இணைந்து முக்கிய காட்சியில் நடிக்க உள்ளனர். இதுதவிர பொது மேடைகளிலும் சினேகா, பிரசன்னா ஜோடியாக பங்கேற்கின்றனர். சென்னையில் நடந்த ஆடை அலங்கார நிகழ்ச்சியில் விதவிதமான ஆடைகள் அணிந்து மேடையில் அணிவகுத்து வந்தனர். இதன் மூலம் திருமணத்துக்கு பிறகு சினேகா நடிப்புக்கு முழுக்கு போடுவார் என்ற பேச்சை பொய்யாக்கி இருக்கிறார். தற்போது ஹரிதாஸ் என்ற படத்தில் சினேகா நடித்து வருகிறார். தொடர்ந்து படங்களில் நடிக்க அவர் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.


 

சைப்-க்கு ஹாலிவுட் நடிகை நோட்டீஸ்

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
இந்தி நடிகர் சைப் அலிகானுக்கு ஹாலிவுட் நடிகை நடாலி போர்ட்மேன் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் பரவியதால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது. தங்கள் பட ரிலீசுக்கு முன்பாக இந்தி நடிகர், நடிகைகள் பரபரப்புக்காக ஏதேனும் தகவல் கூறுவார்கள். இதனால் தங்கள் படத்துக்கும் விளம்பரம் கிடைக்கும் என எதிர்பார்ப்பார்கள். சமீபத்தில் சைப் அலிகான் நடிப்பில் காக்டெய்ல் படம் ரிலீசானது. இப்படம் ரிலீசான 3 நாட்கள¢ கழித்து ஹாலிவுட் நடிகை நடாலி போர்ட்மேனுடன் சேர்ந்து நடிப்பதாக சைப் அலிகான் கூறினார். இதை மீடியா பெரிதுபடுத்தி செய்தி வெளியிட்டது. உடனே தான் ஜோக் அடித்ததாக கூறி அதை மறுத்தார் சைப். இந்நிலையில் தன்னுடன் நடிப்பதாக புரளி கிளப்பியதற்காக சைப் அலிகானுக்கு நடாலி போர்ட்மேன் நோட்டீஸ் அனுப்பிவிட்டதாக பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இதை சைப் தரப்பு மறுத்துள்ளது. சைப் அலிகானுக்கு யாரும் நோட்டீஸ் அனுப்பவில்லை. அவர் காமெடியாக சொன்ன ஒரு விஷயத்தை பெரிதுபடுத்தியும் பிறகு அவருக்கு இப்போது பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறியும் மீடியாதான் சர்ச்சையை கிளப்பி வருகிறது' என சைப் அலிகானுக்கு நெருங்கியவர்கள் கூறினர். ஒவ்வொரு முறை பத்திரிகையாளர்களை சைப் சந்திக்கும்போதும் அவரது திருமணம் பற்றியே கேள்வி கேட்கிறார்கள். அதை பற்றியே செய்தி வெளியிடுகிறார்கள். அதிலிருந்து பத்திரிகையாளர்களை திசை திருப்பவே அவர் நடாலியுடன் நடிப்பதாக ஜோக் அடித்தார்' என சைப் அலிகானின் நண்பர் ஒருவர் கூறினார்.


 

கிளாமருக்கு டாட்டா காட்டிய லட்சுமிராய்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
யுடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள 'தாண்டவம்' படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது. தாண்டவம் படத்தில் விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்சன், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். 'தெய்வதிருமகள்' படத்திற்கு பிறகு இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்க. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் மற்றொரு ஹீரோயினாக நடித்துள்ள லட்சுமிராய் வித்தியாசமாக நடித்துள்ளாராம், அப்படி என்ன வித்தியாசம் கிளாமர் உடை அணிந்து கவர்ச்சியாகவே தோன்றி வந்த லட்சுமிராய் இந்த  படத்தில் கிளாமருக்கு டாட்டா காட்டி இருக்கிறாராம்.


 

வித்யாவை காப்பி அடிக்க இல்லை

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
வித்யாபாலன் நடிப்பை பார்த்து காப்பி அடிக்க வேண்டிய அவசியமில்லை என்றார் கரீனா கபூர். கரீனா கபூர் நடித்து வெளியாக உள்ள படம் 'ஹீரோயின்'. இதில் சினிமா நடிகையாகவே அவர் நடித்திருக்கிறார். படத்தில் போதைக்கு அடிமையானவராக அவர் நடித்துள்ளார். முன்னதாக சில்க் ஸ்மிதா வாழ்க்கை படமான 'தி டர்ட்டி பிக்சர்' படத்திலும் அதே போன்ற வேடத்தில் வித்யா பாலன் நடித்திருந்தார். கிளாமர் வேடத்தை ஏற்று அவர் நடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 'ஹீரோயின்' படத்தில் கரீனாவின் வேடம் பற்றி தகவல் பரவியதால், 'வித்யாபாலன் பாணியை நீங்கள் பின்பற்றுகிறீர்களா? என்று கேட்டபோது கோபத்தில் சீறினார் கரீனா. அவர் கூறும்போது, 'நான் யாரைப் பார்த்தும் காப்பி அடிக்க வேண்டிய அவசியம் இல்லை. நானே பெரிய ஹீரோயின்தான். என்னைப் பார்த்து மற்றவர்கள் காப்பி அடிக்கும் அளவுக்கு திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறேன். தற்போது பெரிய பேனர் படங்களில் நடித்து வருகிறேன். இந்நிலையில் வேறு எதிலும் கவனம் செலுத்தவில்லை. திருமணத்தை பொறுத்தவரை இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.


 

பில்லா 2 ஐத் தூக்கிவிட்டு நான் ஈ - பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை!

Naan Ee Continues With Packed Houses   

சென்னை புறநகரில் உள்ளது காசி திரையரங்கம் (இது கோடம்பாக்க பாக்ஸ் ஆபீஸ் வரையறை). ஒரு படம் குறித்த மக்களின் நாடித் துடிப்பைத் தெரிந்து கொள்ள சரியான இடம் இதுதான்.

இந்தத் திரையரங்கில் ஜூலை 6-ம் தேதி வெளியானது நான் ஈ. செமத்தியான கூட்டம். தொடர்ந்து நான்கு காட்சிகளும் ஹவுஸ் புல்லாகவே ஓடிக் கொண்டிருந்த படத்தை, அடுத்த ஆறு நாட்களில் தூக்கிவிட்டார்கள்... காரணம், அஜீத்தின் பில்லா 2.

இந்தப் படத்தா ஜூலை 13-ம் தேதி திரையிட்டார்கள். ஆனால் 12-ம் தேதி இரவுக் காட்சிகூட நான் ஈ ஹவுஸ்புல்லாக ஓடியது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு கூட்டம் குவிந்தும் நான் ஈயைத் தூக்க வேண்டியிருக்கிறதே என்ற வருத்தத்தோடுதான் பில்லாவைத் திரையிட்டார்களாம்.

பில்லா 2-ன் வசூல் நிலவரம் என்ன என்பது கோடம்பாக்கத்துக்கே தெரிந்த கதைதானே.

இப்போது காசி தியேட்டர் பக்கம் போனவர்களுக்கு ஒரு சின்ன சர்ப்ரைஸ்! பில்லாவைத் தூக்கிவிட்டு மீண்டும் நான் ஈயைத் திரையிட்டுள்ளனர். மறு திரையிடலுக்கும் ஈ-க்கு பெரிய பேனர் வைத்து அமர்க்களப்படுத்தியுள்ளனர். வெளியிட்ட நாளிலிருந்தே நல்ல கூட்டம்!

காசி தியேட்டர் என்றல்ல... தமிழகத்தின் பல ஊர்களிலும் பில்லாவுக்கு பதில் நான் ஈ மீண்டும் திரையிடப்பட்டிருப்பதுதான் விசேஷம்!

 

இயக்குநரானார் நடிகை கங்கனா ரணவத்!

 

கேட் வின்ஸ்லட்டுக்கு 'ஷேவ்' செய்து ஷூட்டிங் நடத்திய கேமரூன்!

Winslet Shaved Arms Titanic

டைட்டானிக் படத்தின் ஷூட்டிங்கின்போது நாயகி கேட் வின்ஸ்லெட்டின் கைகளில் முடி இருந்ததால், அதை ஷேவ் செய்து பின்னரே படப்பிடிப்பை நடத்தினாராம் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். இதை கேட்டே சொல்லியுள்ளார்.

1997ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் டைட்டானிக். நிஜ டைட்டானிக் கப்பலைப் பற்றிய ஒரு கற்பனைக் கதைதான் டைட்டானிக். இப்படத்தில் நாயகியாக நடித்தவர் பிரிட்டிஷ் நடிகை கேட் வின்ஸ்லட். படப்பிடிப்பின்போது நடந்த சில சுவாரஸ்ய சம்பவங்களை அசை போட்டுள்ளார் கேட்.

இதுகுறித்து அவர் கூறியதாவது...

படத்தில் இரவு நேர காட்சிகளைப் படமாக்கியபோது ஜேம்ஸ் கேமரூனுக்கு ஒரு சிக்கல் தெரிந்தது. அதாவது எனது கை மற்றும் அக்குள் பகுதியில் லேசாக முடிகள் இருந்ததால் அவர் தயங்கினார். காட்சியை அவை பாழ்படுத்துவதாக உணர்ந்தார்.

இதையடுத்து என்னிடம் வந்த அவர் உனக்கு நாங்கள் ஷேவ் செய்யப் போகிறோம் என்றார். எனக்கோ சிரிப்பாக வந்தது. ஆனால் அவர் சீரியஸாக இருக்கிறார் என்பது பின்னர்தான் தெரிந்தது. மேக்கப்மேன் கையில் பிளேடு மற்றும் ஷேவிங் கிரீமுடன் வந்து நின்றார். பிறகு எனக்கு ஷேவ் செய்தார். படு நகைச்சுவையாக இருந்தது அது. நீட்டாக ஷேவ் செய்த பின்னர்தான் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தினார் கேமரூன்.

அப்போது கடும் குளிர் நிலவியது. என்னால் அதைத் தாங்க முடியவில்லை. என்னை விட நாயகன் லியோனார்டோ டிகாப்ரியோதான் குளிரைத் தாங்க முடியாமல் நடுங்கினார். 21 வயதான அவரைப் பார்த்தபோது எனக்கு ஒரு குழந்தை போலத்தான் தெரிந்தார் என்றார் சிரித்தபடி.

டைட்டானிக் படத்தில் கேட் நடித்தபோது அவருக்கு வயது 20தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வசூலை வாரிக் குவிக்கும் பேட்மேன் - தி டார்க் நைட் ரைசஸ்!

The Dark Knight Rises Top Box Office Charts   

கிறிஸ்டோபர் நோலனின் கடைசி பேட்மேன் படமான தி டார்க் நைட் ரைசஸ், உலகமெங்கும் வசூலை வாரிக் குவித்து வருகிறது.

படம் வெளியாகி இரண்டு வாரங்கள் முடிந்த நிலையில், இந்தப் படம் 64 மில்லியன் டாலர்களை இந்த வார இறுதியில் குவித்துள்ளது.

இதுவரை மொத்தம் 537.3 மில்லியன் டாலர்களை இந்தப் படம் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிவிட்டதால், வசூல் பாதிக்குமோ என முதலில் அச்சப்பட்டதாம், இந்தப் படத்தின் வெளியீட்டாளர் வார்னர் நிறுவனம். ஆனால் ஒலிம்பிக் போட்டி தொடங்கிய அன்றும்கூட, நல்ல வசூல் தொடர்ந்துள்ளது.

சர்வதேச பாக்ஸ் ஆபீஸில், பேட்மேனுக்கு அடுத்த இடத்தில் ஐஸ் ஏஜ் 4-ம், மூன்றாவது இடத்தில் தி வாட்ச் படமும் உள்ளன.

நான்காவது இடத்தில் ஸ்டெப் அப் ரெவால்யூஷனும், ஐந்தாவது இடத்தில் டெட் படமும் உள்ளன.

 

ரஜினி ok சொன்னால்.. நான் ரெடி..

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் ராஜமவுலி, 'ரஜினி ok சொன்னால் .. அவரை இயக்க நான்' ரெடி என்று கூறியுள்ளார். சமீபத்தில் 'நான் ஈ' படத்தை பார்த்த ரஜினி, மனம் விட்டு ராஜமவுலியை பாராட்டினாராம். இதனையடுத்து, ரஜினி பாராட்டியதை பெரிய விருதுக்கு சமமாகக் கருதுகிறார் ராஜமவுலி. தமிழ் சினிமாவில் இருக்கும் அற்புதமான மனிதர்களில் ரஜினியும் ஒரவர் எனக் கூறிய ராஜமவுலி, அவரைப் போன்ற உண்மையான ரசிகரைப் பார்க்க முடியாது. என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடிச்சவர் யார்? யாரை இயக்க வேண்டும் என்பது உங்கள் கனவு? என்று கேட்டதற்கு ராஜமவுலி சொன்ன ஒரே பதில் சூப்பர் ஸ்டார் ரஜினி. ரஜினி உத்தரவிட்டால் அவரை வைத்து படம் இயகக் நான் ரெடி என்று வெளிப்படையாக ரஜினியிடம் சான்ஸ் கேட்டு இருக்கிறார் ராஜமவுலி.


 

சொத்துக்களை மகள்களுக்கு எழுதிய ராஜேஷ் கன்னா

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
மறைந்த நடிகர் ராஜேஷ் கன்னா தனது அனைத்து சொத்துக்களையும் 2 மகள்கள் பெயரில் உயில் எழுதி வைத்துள்ளார். உயிலில் மனைவி டிம்பிள் கபாடியா பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்திய திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் என்று புகழப்பட்ட நடிகர் ராஜேஷ் கன்னா கடந்த 18ம் தேதியன்று பாந்த்ராவில் உள்ள தனது ஆசீர்வாத் பங்களாவில் காலமானார். ராஜேஷ் கன்னா வுடன் ஆசீர்வாத் பங்களாவில் சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்பட்டும் அனிதா அத்வானி என்ற பெண் ஆசீர்வாத் பங்களாவுக்கு உரிமை கோரி ராஜேஷ் கன்னா குடும்பத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதனால் சர்ச்சை ஏற்பட்டது. இதற்கிடையே, ராஜேஷ் கன்னா பல ஆண்டுகளுக்கு முன்பே சொத்துக்கள் குறித்து தனது நம்பிக்கையான வழக்கறிஞர் மூலம் உயில் எழுதி வைத்திருந்தார். இந்த உயிலில், தனது அனைத்து சொத்துக்களையும் மகள்கள் டுவிங்கிள்(அக்ஷய் குமாரின் மனைவி), ரிங்கி ஆகியோர் பெயருக்கு எழுதி வைத்திருந்தார். இந்த உயிலில் மனைவி டிம்பிள் குறித்து  குறிப்பிடவில்லை. ராஜேஷ் கன்னாடிம்பிள் தம்பதியர் திருமணமாகி 11 ஆண்டுகள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்தனர். அதன்பிறகு பிரிந்து வாழ்ந்தாலும் கடைசிவரை விவாகரத்து கோரவில்லை.  ராஜேஷ் கன்னாவின் கடைசி காலங்களில் டிம்பிள் அவரை அருகில் இருந்து கவனித்து கொண்டார்.


 

அமிதாப் ரோலில் தல

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'பா' புகழ் இயக்குனர் பால்கி இயக்கும் English Vinglish படத்தில் அஜீத் குமார் கௌரவ தோற்றத்தில் நடிக்கயிருக்கிறார். தமிழ் மற்றும் இந்தியில் உருவாகும் இந்த படத்தில் ஸ்ரீதேவி நடிக்கிறார். இந்த படத்தின் இந்த பதிப்பில் அமிதாப் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இதனையடுத்து தமிழில் யாரை நடிக்க வைக்கலாம் என பால்கி யோசித்து கொண்டு இருந்தாராம். இந்நிலையில் அஜீத்தை சந்தித்த பால்கி கதை சொன்னதும், அமிதாப் நடித்த கெஸ்ட் ரோலில் தான் நடிப்பதாக ஒப்புக் கொண்டாராம் அஜீத்.


 

50 தொடர்களை தயாரித்துவிட்ட ஏ.வி.எம்

Television news, small screen news, chinnathirai news, television serials, chinnathirai serials, online chinnathirai serial
சினிமா தயாரிப்பு நிறுவனம் சின்னத்திரையில் சாதனை படைப்பது சாதாரண விசயமில்லை. ஆனால் 175 திரைப்படங்களை இயக்கிய ஏ.வி.எம் நிறுவனம் தென்னிந்திய தொலைக்காட்சிகளில் 50க்கும் மேற்பட்ட தொடர்களை இயக்கி சாதனை படைத்துள்ளது. 1986 ம் ஆண்டு தூர்தர்சனில் ஒளிபரப்பான 'ஒரு மனிதனின் கதை' தொலைக்காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ரகுவரன், தேவிலலிதா நடித்த அந்த தொடரின் கதை சிவசங்கரியுடையது. ஏ.வி.எம் நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். இதனை தொடர்ந்து நேற்றைய மனிதர்கள், நாணயம், முத்துக்கள், எனக்காகவா ஆகிய குறுந்தொடர்கள் தூர்தர்சனில் ஒளிபரப்பானது. சேட்டிலைட் சேனல்களின் வருகைக்குப் பின்னர் சன் தொலைக்காட்சியில் நிம்மதி உங்கள் சாய்ஸ் என தொடங்கிய ஏ.வி.எம், ஆச்சி இண்டர்நேசனல், சொந்தம், கலாட்டா குடும்பம், வாழ்க்கை, என தொடர்ந்தது. பின்னர் சூர்யா, ஜெமினி, பத்துக்கும் மேற்பட்ட தொடர்களை தயாரித்து வெளியிட்டது. கலைஞர் டிவி தொடங்கப்பட்ட பின்னர் வைரநெஞ்சம், வைராக்கியம் என தொடர்கிறது. மா டிவி, ராஜ் டிவியிலும் எ.வி.எம் தொடர்களை தயாரித்து வெளியிட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் ஏவிஎம் நிறுவனம் 50க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களை தயாரித்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் 7500 எபிசோடுகள்வரை ஒளிபரப்பாகியுள்ளன என்று அந்த நிறுவனம் பெருமை பொங்க புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 

சன் டிவியில் இந்த வாரம் இளையராஜா-விஜய் இணைந்து கலக்கிய காதலுக்கு மரியாதை, பிரண்ட்ஸ்!

Vijay Week Sun Tv

சன் டிவியில் தற்போது விஜய் வாரம் தொடங்கியுள்ளது. அமர்க்களமான ஐந்து சூப்பர் ஹிட் விஜய் படங்களை இந்த வாரத்தில் சன் டிவியில் காட்டுகின்றனர். அதில் இசைஞானி இளையராஜாவின் இசைமழையில் உருவான காதலுக்கு மரியாதை மற்றும் பிரண்ட்ஸ் ஆகிய இரு படங்களும் ரசிகர்களை குதூகலிக்கக் காத்துள்ளன.

நேற்று தொடங்கிய விஜய் வாரத்தில் இன்று பாடல்களுக்குப் பெயர் போன துள்ளாத மனமும் துள்ளும் இரவு 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

புதன்கிழமையான நாளை காதலுக்கு மரியாதை ஒளிபரப்பாகிறது. விஜய்க்கு புதிய முகம் கொடுத்த படம் இது. கதைக்காகவும், நடிப்புக்காகவும் ஓடிய படம் என்றாலும், இசைஞானி இளையராஜாவின் இன்னிசையை ரசிகர்கள் இன்று வரை மறக்கவில்லை. ஒவ்வொரு பாடலும் ஒரு லட்டு என்ற கணக்கில், படம் முழுக்க ராஜாவும் சேர்ந்து நடை போட்டதை ரசிகர்கள் விழுந்து விழுந்து ரசித்தனர் என்பது நினைவிருக்கலாம்.

வியாழக்கிழமை விஜய், தேவயானி, ரம்பா நடித்த நினைத்தேன் வந்தாய் ஒளிபரப்பாகிறது.

வெள்ளிக்கிழமைதான் ஹைலைட் படம். விஜய்யின் அட்டகாச நடிப்பு, வடிவேலுவின் அதிரிபுதிரி காமெடி, முத்தாய்ப்பாய், இளையராஜாவின் இசை என படம் முழுக்க திருவிழாக் கோலம்.

எந்தப் படத்தைப் பார்க்க மறந்தாலும் மறக்காமல் பிரண்ட்ஸை பார்த்து விடுங்கள், சிரிச்சு சிரிச்சு கவலை மறந்து ராத்திரி நன்றாக தூங்கலாம்...