ஐஸ்வர்யா ஒரு ஜீனியஸ்: தனுஷ் பெருமிதம்


என் மனைவி ஐஸ்வர்யா ஒரு ஜீனியஸ் என்று நடிகர் தனுஷ் பெருமைப்படுகிறார்.

நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனது கணவரை வைத்து '3' படம் எடுத்து வருகிறார். இதில் தனது கணவருக்கு ஜோடியாக தனது தோழி ஸ்ருதி ஹாசனை நடிக்க வைத்துள்ளார். மயக்கம் என்ன படத்தில் நடித்த தனுஷ் அந்த படவேலைகள் முடிந்ததை அடுத்து தற்போது 3 படத்தில் மும்முரம் காட்டுகிறார்.

ஐஸ்வர்யா 3 படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மனைவியின் இயக்கத்தில் நடிப்பது குறித்து தனுஷ் கூறியுள்ளதாவது,

என் மனைவி ஐஸ்வர்யா ஒரு ஜீனியஸ். அவர் அருமையாக படவேலைகளை செய்கிறார். அவர் இயக்கத்தில் நடிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.

தனுஷ் தனது கை நிறைய படங்கள் வைத்துள்ளார். 3 படத்தை முடித்தும் சிம்புத் தேவனின் மாரீசன் என்ற படத்தில் நடிக்கிறார். அதையடுத்து ஆஸ்கார் ரவிச்சந்திரன் படம் உள்பட 2 படங்களில் நடிக்கிறார்.

அண்ணன் இயக்கத்தில் நடித்த தனுஷ் தற்போது மனைவி இயக்கத்தில் நடிக்கிறார்.
 

கூடுதல் விலைக்கு சினிமா டிக்கெட் விற்றதை தட்டி கேட்ட வாலிபர் கொலை


கோவை: திரையரங்கில் சினிமா டிக்கெட் அதிக விலைக்கு விற்றதை தட்டிக் கேட்ட வாலிபரை ஒரு கும்பல் அடித்து உதைத்தது. இதில் அந்த வாலிபர் படுகாயமடைந்து பலியானார்.

கோவை வேலாண்டிபாளையம் அடுத்த இடையார்பாளையத்தில் உள்ள கிருத்திகா திரையரங்கில், தீபாவளிக்கு வெளியான 'ஏழாம் அறிவு' படம் திரையிடப்பட்டது. புது படத்தை பார்க்க வேலாண்டிபாளையத்தில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவன ஊழியரான ரமேஷ்(24) தனது நண்பர்கள் பவுல்ராஜ், லோகேஷ், சரவணன், கார்த்திக் ஆகியோருடன் சென்றிருந்தார்.

அப்போது அதிக விலையில் டிக்கெட் விற்கப்பட்டதாக தெரிகிறது. இதில் அதிருப்தியடைந்த ரமேஷ் நண்பர்களுடன் சேர்ந்து டிக்கெட்டை கிழித்தெறித்து திரையரங்கை விட்டு வெளியேறினார்.

வழியில் ரமேஷ் மற்றும் அவரது நண்பர்களை வழிமறித்த ஒரு கும்பல் ஆயுதங்களால் தாக்கினர். இதில் ரமேஷ் மற்றும் அவரது நண்பர்கள் படுகாயமடைந்தனர். தலையில் பலத்த காயமடைந்த ரமேஷ், கோவை அரசு மருத்துவமனையி்ல் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணமான ரமேஷ்-க்கு ஒரு பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

பவுல்ராஜ், லோகேஷ், சரவணன் ஆகியோர் தனியார் மருத்துவமனையி்ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, திரையரங்கு உரிமையாளரின் உறவினர் பரணிக்குமார்(27), கிஷோர்(26), ரமேஷ்(26), சுரேஷ்(27), டொமினிக்(26) ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
 

என்ன, 7 ஆம் அறிவுக்கு இலங்கையில் தடையா?


நடிகர் சூர்யா, இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் கூட்டணியில் வெளியாகியுள்ள 7 ஆம் அறிவு படத்திற்கு இலங்கையில் தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, ஸ்ருதி நடித்துள்ள 7 ஆம் அறிவு தீபாவளி அன்று ரிலீஸ் ஆனது. அந்த படத்தில் சூர்யா புத்த துறவியாக நடித்துள்ளார். ஒரு நாட்டை 9 நாடுகள் சேர்ந்து அடிப்பது வீரமல்ல, துரோகம் என்று சூர்யா பேசியிருக்கிறார்.

அந்த வசனத்தையும், தமிழரான போதிதர்மரை புத்தருக்கு இணையாக பேசப்படும் காட்சிகளையும் பார்த்து சிங்களவர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனராம். தமிழரான போதிதர்மருக்கு சீனாவில் கோவில் கட்டி கும்பிடுவது எல்லாம் இந்த படத்தைப் பார்த்த பிறகு தான் பலருக்கு தெரிய வந்துள்ளது.

இதனால் அந்தக் இந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று சிங்கள அமைப்புகள் குரல் எழுப்பி வருவதால் அந்தப் படத்திற்கு இலங்கையில் தடை விதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வருகின்றன. அவர்களுக்குப் பிடிக்காத காட்சிகளை நீக்கிய பின் திரையிட அனுமதிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் 7 ஆம் அறிவு யாழ்ப்பாணத்தில் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.
 

7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம்


-எஸ்.ஷங்கர்

நடிப்பு: சூர்யா, ஸ்ருதி ஹாஸன், ஜானி ட்ரை நூயென்
ஒளிப்பதிவு: ரவி கே சந்திரன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
எழுத்து - இயக்கம்: ஏ ஆர் முருகதாஸ்
தயாரிப்பு: உதயநிதி ஸ்டாலின்
பிஆர்ஓ: ஜான்சன்

இந்தியாவையே கலக்கிய சூப்பர் ஹிட் படமான கஜினி டீம் உருவாக்கிய படைப்பு என்பதால் '7 ஆம் அறிவு'க்கு ஏக எதிர்ப்பார்ப்பு. இப்படியொரு எதிர்ப்பார்ப்பு கொண்ட படம் அதை நிறைவேற்றத் தவறினால் என்ன நிகழுமோ அது 7-ஆம் அறிவுக்கும் நேர்ந்திருக்கிறது!

5-ம் நூற்றாண்டு...

தற்காப்புக் கலை, மருத்துவம், கலைகள் என அனைத்திலும் நிபுணத்துவம் மிக்கவனான பல்லவ மன்னர் குல இளவரசன் போதி தர்மனை அவனது ராஜமாதா சீனாவுக்குப் போகும்படி கட்டளையிடுகிறார். மூன்றாண்டு தரைவழிப் பயணமாக இமயத்தைக் கடந்து சீன கிராமம் ஒன்றில் கால் பதிக்கும் போதி தர்மனை, சீனர்கள் ஒரு ஆபத்தின் அடையாளமாகப் பார்க்கிறார்கள்.

ஆனால் ஆபத்து கொள்ளை நோய் உருவில் அந்த கிராமத்தைத் தாக்க, நோய் பாதிக்கப்பட்ட முதல் குழந்தையை உயிரோடு துணியில் சுருட்டி காட்டில் தூக்கிப் போட, அந்த குழந்தையை போதி தர்மன் தன் மருத்துவத் திறமையாமல் மீண்டும் உயிர்ப்பித்துத் தருகிறார். அப்போதுதான் போதி தர்மனின் மகத்துவம் அவர்களுக்குப் புரிகிறது. அந்தக் கிராமம் முழுவதுமே அப்போது நோயில் வீழ, போதி தர்மன் அந்த மக்களை நோயிலிருந்து மீட்கிறார். சீனாவின் பிற பகுதி மக்களுக்கும் அந்த நோய் சிகிச்சை முறைகளை கற்பிக்கிறார். கொள்ளை நோயே இல்லாமல் போகிறது.

அடுத்த சில நாட்களில் ஒரு கொள்ளைக் கூட்டம் அந்த கிராமத்தைத் தாக்க, அதிலிருந்து அந்த மக்களை தனது அரிய தற்காப்புக் கலை மூலம் காப்பாற்றுகிறார் போதி தர்மன். அந்த கலையை தங்களுக்கும் கற்பித்துத் தரச் சொல்லி சீனர்கள் கேட்க, அவர்கள் அனைவருக்கும் களறிப் பயட்டு, நோக்கு வர்மம் போன்ற தற்காப்புக் கலைகளை கற்றுத் தருகிறார்.

சீனர்களுக்கு செய்த சேவையில் திருப்தியுற்ற போதி தர்மன் மீண்டும் காஞ்சிபுரம் திரும்ப முடிவு செய்கிறார். ஆனால் அந்த சீனர்களோ, போதி இறந்து அவரது உடல் சீனாவில் புதைக்கப்பட்டால் நாடு செழிப்பாகவும் அச்சமின்றியும் இருக்கும் என நம்புகிறார்கள். எனவே போதிக்கு விஷம் கலந்த உணவைக் கொடுக்க, அது விஷ உணவு எனத் தெரிந்தும், அவர்களுக்காக உண்டு இறந்து சீனாவுக்கு உரமாகிறார் போதி தர்மன்.

இருங்க... இருங்க... இது முதல் 20 நிமிடக் கதைதான். மீதி? 21-ம் நூற்றாண்டில் ஆரம்பமாகிறது.

சென்னையில் மரபணு ஆராய்ச்சி மூலம் மீண்டும் போதி தர்மனை உருவாக்கும் முயற்சியில் சுபா (ஸ்ருதி) என்ற பெண் இறங்க, அது சீனாவுக்கு தெரிந்து விடுகிறது. இந்தியா மீது 'பயோ வார்' எனும் விஷக் கிருமி பரப்பும் போரை சீனா தொடங்கத் திட்டமிடுகிறது. போதி தர்மனால் விரட்டியடிக்கப்பட்ட கொள்ளை நோய்க் கிருமியை இதற்காக மீண்டும் உருவாக்குகிறது சீனா. அந்த பயோ வாரின் முடிவில் இந்தியாவே நோய் கிடங்காக மாறிவிடும். அதற்கான மருந்து சீனாவில் மட்டுமே (போதி தர்மன் கண்டுபிடித்த மருந்து) கிடைக்கும். எனவே சீனாவிடம் பொருளாதார ரீதியாக இந்தியா மண்டியிட வேண்டும்.

இந்தத் திட்டத்துக்கு சுபாவின் ஆராய்ச்சி தடையாக இருக்கும் என்பதால் அவளைக் கொல்ல டாங் லீ என்ற ஜெகஜ்ஜால வில்லனை இந்தியாவுக்கு அனுப்புகிறது சீனா. இவன் போதி தர்மன் கற்பித்த தற்காப்புக் கலையில் நிபுணத்துவம் மிக்கவன். பார்வையாலே ஒருவரைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்கவன்.

இங்கே, போதி தர்மனின் சந்ததியைத் தேடும் சுபா, அவர்களில் ஒருவனான சர்க்கஸ் கலைஞன் அரவிந்தை (சூர்யா) கண்டுபிடிக்கிறார். அவனைக் காதலிப்பது போல நடித்து தனது ஆராய்ச்சிக்கு பயன்படுத்துகிறார். போதி தர்மனின் மரபணுவில் 80 சதவீதம் அரவிந்துக்குப் பொருந்துவதை அறிகிறார்.

ஒரு கட்டத்தில் சுபா தன்னைக் காதலிக்கவில்லை, 'பரிசோதனைக் கூட குரங்காகத்தான்' பயன்படுத்துகிறார் என்பது தெரிந்து உடைந்து போகும் அரவிந்துக்கு, போதி தர்மனின் மகத்துவம், இந்தியாவுக்கு வரும் ஆபத்து பற்றி சொல்லி புரிய வைக்கிறார். அதற்குள் சுபாவை தேடி சென்னைக்கு வரும் வில்லன் டாங் லீ, அவளைக் கொல்ல துரத்துகிறார். உடனடியாக போதிதர்மனாக மாற சம்மதிக்கிறான் அரவிந்த்.

டாங் லீ முயற்சி வென்றதா? சுபாவின் ஆராய்ச்சி ஜெயித்ததா? அரவிந்த் போதி தர்மனாக மாறினானா? என்பது க்ளைமேக்ஸ்.

-கேட்பதற்கு கதை நன்றாக இருக்கிறதல்லவா... உண்மைதான். ஆனால் முதலில் நாம் குறிப்பிட்டுள்ள 5-ம் நூற்றாண்டு போதி தர்மன் கதையை மட்டும் அழகாக எடுத்த இயக்குநர் முருகதாஸ், தன்னைக் கொண்டாடிய ரசிகர்களுக்கு மீதி இரண்டரை மணி நேரமும் பெரும் சோதனையைத் தந்துவிட்டார் என்பதுதான் உண்மை.

முதல் 20 நிமிடக் காட்சிகளுக்கு மட்டும் தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம். அந்த அளவு உழைப்பைக் கொட்டியிருக்கிறார்கள் முருகதாஸ், சூர்யா உள்ளிட்டோர். குறிப்பாக ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன்!

பல்லவ காஞ்சியைச் சித்தரித்துள்ள விதம், சீனப் பயணத்தில் சூர்யா கடந்து போகும் இமயமலைப் பகுதிகள், இரவிலும் ஸ்படிகமாய் மின்னும் ஆறுகள், அந்த சீனக் கிராமம்... என அப்படியே நம்மை இழுத்துக் கொள்கிறது படம். நோய் பாதித்த குழந்தையை காப்பாற்றி தன் போர்வைக்குள் மறைத்து வைத்து, அந்தக் குழந்தையின் தாய் கண்ணெதிரே போதி தர்மன் காட்டும்போது, அந்த சீனப் பெண் உணர்ச்சிக் குவியலாய் கதறியபடி தரையில் விழுந்து வணங்குமிடம்... நெஞ்சைத் தொட்டுவிடுகிறது.

ஆனால் அதன் பிறகு ஒரு காட்சி கூட அந்த அளவு உணர்ச்சிமிக்கதாக, துடிப்பானதாக இல்லை என்பதே உண்மை. போதி தர்மன் கதையை மட்டும் 2.30 மணி நேரம் வர்ணித்திருந்தால் கூட ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்திருக்கும், தமிழ் ரசிகர்களுக்கு.

ஒரு சர்க்கஸ் கலைஞனான சூர்யா - மரபணு ஆராய்ச்சி மாணவி ஸ்ருதி காதலில் எந்த ஈர்ப்பும் இல்லை. அப்படி ஈர்ப்பே இல்லாத காதலில் வரும் டூயட்டுகள் மட்டும் எப்படி ரசிக்கும்படி இருக்கும்?.

ஸ்ருதி ஹாஸன் சில காட்சிகளில் பரவாயில்லை. பல காட்சிகளில் ஐயகோ. அதுவும் அவரது உடைந்த தமிழ் கொடுமை. டிஎன்ஏ ஆராய்ச்சி பற்றிய செமினாரில் தமிழ் பற்றி எழும் சர்ச்சை பொருத்தமற்ற காட்சியாக, பார்ப்பவர் உணர்வைத் தூண்டும் மலிவான உத்தியாக அமைந்துள்ளது. இன்னும்கூட அதை நம்பகத் தன்மையுடன், அழுத்தமாக பொருத்தமான காரணங்களுடன் அமைத்திருக்கலாம்.

சர்வ பலம் பொருந்திய வில்லன் டாங் லீ (Johnny Tri Nguyen) நோக்கு வர்மம் என்ற பெயரில் சும்மா சும்மா 'நோக்கிக் கொண்டே' இருப்பதில் ஒரு கட்டத்தில் அலுப்புத் தட்டுகிறது.

படத்தின் பின் பகுதியில் வரும் நிறைய காட்சிகளை தமிழ் ரசிகர்கள் ஏற்கெனவே பல ஆங்கிலப் படங்களில் பார்த்துவிட்டதால், 'யு டூ முருகதாஸ்' என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

படத்தின் நாயகன் சூர்யா, அந்த ஆரம்ப காட்சிகளுக்காகவும், க்ளைமாக்ஸ் காட்சிக்காகவும் அபாரமாக உழைத்திருப்பது தெரிகிறது. இடையில் வரும் காட்சிகளில் அவரது கெட்டப்பை இன்னும் கூட நன்றாகக் காட்டியிருக்கலாம். அதேபோல நாயகி ஸ்ருதியுடன் ஒட்டுதலின்றியே அவர் நிற்பது போலிருப்பதால், அந்த காதல் சோகப்பாட்டு பெரிய ஸ்பீட் பிரேக்கர் மாதிரியாகிவிடுகிறது.

படத்தின் இன்னொரு பெரிய மைனஸ் ஹாரிஸ் ஜெயராஜ் இசை. 'முன் அந்தி...' உள்ளிட்ட பாடல்களில் குறையில்லை.. ஆனால், பேக்கிரவுண்ட் மியூசிக்கில் சறுக்குகிறார். பின்னணி இசையில் டாங் லீ வரும் போது சீன சப்தம் ஒன்றை அலற விட்டு கடுப்பேற்றுகிறார்.

பீட்டர் ஹெயின் இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் இன்னொரு பரிமாணம் காட்டியிருக்கிறார்.

தமிழன் பெருமை என்னவென்று உலகுக்கு உரத்துச் சொல்ல வேண்டும் என்ற முருகதாஸின் ஆவலைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தப் படம் மூலம் போதி தர்மனைத் தெரியாத தமிழனே இருக்க முடியாது என்ற நிலை இப்போது உருவாக்கியிருப்பதும் மகிழ்ச்சிதான். ஆனால் நிறைய இடங்களில் தமிழர் பெருமை பற்றி உணர்த்த அவர் வசனங்களை மட்டுமே நம்பிவிட்டதுதான், பிரச்சார நெடியைக் கிளப்பிவிட்டது. அதற்கு தோதான அழுத்தமான காட்சிகளை வைத்திருந்தால் முருகதாஸ் நோக்கம் நிறைவேறியிருக்கும்.

படத்தில் நிறைய குறைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் அது நமது நோக்கமல்ல. நல்ல படம் தர வேண்டும் என்பதற்காக அபார முயற்சியொன்றில் இறங்கிய ஏ ஆர் முருகதாஸ், அதில் பாதிக் கிணறு தாண்டி விழுந்ததில் நஷ்டம் அவருக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும்தான்!.

ஒரு தமிழ்ப் படைப்பாளி என்ற முறையில் அவரை கடுமையாக விமர்சிக்கவும் முடியாத, அதே நேரம் திறமையுள்ள இந்த இளைஞரை விட்டுக் கொடுக்கவும் மனமில்லாத தர்மசங்கடத்தை முதல்முறையாக ஏ ஆர் முருகதாஸ் ஏற்படுத்திவிட்டார் என்பதே உண்மை!.

விழுவது மீண்டும் எழுவதற்கே என்ற தமிழ் மந்திரம், மீண்டும் ரமணாக்கள், கஜினிகள் படைக்கும் உத்வேகத்தை முருகதாஸுக்கு தரட்டும்!
 

கார் விபத்து வழக்கு: இப்படி போய் இப்படி வந்த டிவி நடிகர்


இந்தி சீரியல்களில் நடித்து வரும் நடிகர் ரோனித் ராய் தாறுமாறாக கார் ஓட்டி இன்னொரு காரை இடித்தது தள்ளிவிட்டு தப்பியோடிவிட்ட வழக்கில் வெறும் ரூ. 12,000 பிணயத் தொகை செலுத்துமாறு கூறி அவருக்கு பந்த்ரா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்தி சீரியல்களில் நடிப்பவர் ரோனித் ராய். கியூன்கி சாஸ் பி கபி பஹு தி, பந்தினி மற்றும் அதாலத் போன்ற இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். அவர் இன்று அதிகாலை 5.30 மணிக்கு மும்பையின் அம்போலி பகுதியில் தனது மெர்சிடீஸ் காரில் வேகமாக சென்று இன்னொரு காரை இடித்து தள்ளிவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் 56 வயது பெண் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அந்தேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து போலீசார் ரோனித் ராயை கைது செய்தனர். அவரை மும்பையில் உள்ள பந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பந்த்ரா நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது அதுவும் வெறும் ரூ. 12,000 பிணயத் தொகை கட்டுமாறு உத்தரவிட்டுள்ளது.

அதிகாலையில் விபத்து ஏற்படுத்தி காலையில் கைதாகி சிறிது நேரத்தில் இப்படி போய் இப்படி வெளியே வந்துவிட்டார்.
 

மார்க்கெட் இருந்தா ஒரு கோடி... இல்லேன்னா கடைகோடி! - இலியானா தத்துவம்


பிரபல நடிகைகளுக்கு ஒரு படம் நன்றாக ஓடினால் போதும், சம்பளம் கோடிகளில் உயர்த்தப்பட்டுவிடும்.

பல நேரங்களில் தயாரிப்பாளரே விரும்பி தலையில் துண்டு போட்டுக் கொள்ளும் சமாச்சாரம் இது.

சில நேரங்களில் நடிகைகள் எப்படா நேரம் வரும் என்று காத்திருந்து உயர்த்திவிடுவார்கள்.

நடிகை இலியானா இந்த இரண்டு வகையிலுமே சேர்த்திதான்!

தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாக உள்ள அவர், இப்போது தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு சம்பளத்தை ரூ.1 கோடியாக உயர்த்தி விட்டதாக கூறப்பட்டது.

ஆனால் சமீபத்தில் பெரிய ஹிட் எதுவும் கொடுக்காத இலியானாவுக்கு இவ்வளவு சம்பளமா என்றும் பேசப்பட்டது.

இதுகுறித்து இலியானாவிடம் கேட்டபோது, "தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடிக்கிறேன். நான் ரூ.1 கோடி சம்பளம் கேட்பதாகக் கூறுகிறார்கள். நானாகப் போய் எனக்கு சம்பளம் உயர்த்த வேண்டும் என்று யாரையும் நிர்ப்பந்திக்கவில்லை.

எனது மார்க்கெட் நிலவரம் பார்த்து சம்பளத்தை அவர்கள் முடிவு செய்கிறார்கள். என் படங்கள் நன்றாக ஓடும்போது அதற்கேற்றவாறு சம்பளம் வாங்குவதில் தவறு இல்லை.

தெலுங்கில் படங்கள் நன்றாக ஓடினால் நிறைய சம்பளம் கேட்கிறேன் என்கிறார்கள். சம்பளத்தை குறைத்தால், படங்கள் தோற்றதால் குறைத்து விட்டார் என்கிறார்கள்.

சினிமாவில் யாரும் சம்பளத்தை சும்மா தருவதில்லை. மார்க்கெட் இருந்தால் இங்கே சம்பளம் கோடிகளில் இருக்கும். ஓடாவிட்டால் கடைகோடியில் நிறுத்துவார்கள் என்பது எனக்குத் தெரியும்!", என்றார்.
 

முதல் நாளில் மிஸ் ஆனாலும் 2ம் நாளில் ரூ.25 கோடியை அள்ளிய ரா ஒன்!


ஷாரூக் கானின் ரா ஒன் திரைப்படம் முதல் நாளில் ரூ 18.25 கோடியை உலகம் முழுவதும் வசூலித்துள்ளது. இது சல்மான் கானின் பாடி கார்ட் படம் வசூலித்த ரூ 21 கோடியை விட குறைவுதான்.

இந்தியா முழுவதும் 3,200 தியேட்டர்களில் வெளியாகியுள்ள ரா ஒன் முதல் நாளிலேயே ரூ. 22 கோடியை வசூலித்து ரெக்கார்ட் பிரேக் செய்துவிட்டதாக தகவல் வந்தது. ஆனால், முதல் நாளில் ரூ 18.25 கோடியை மட்டுமே அந்ப் படம் ஈட்டியது தெரியவந்துள்ளது.

ஆனால், இரண்டாம் நாளில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து ரூ.25 கோடியை குவித்துள்ளது ரா ஒன். இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனை என்று இதனை பாலிவுட் பாக்ஸ் ஆபீஸில் குறிப்பிட்டுள்ளனர்.

மொத்தம் ரூ.140 கோடியில் தயாரான சயின்ஸ் பிக்ஷன் படம் ரா ஒன். ஷாரூக்கான், கரீனா கபூர், அர்ஜூன் ராம்பால் ஆகியோர் நடித்த இந்தப் படத்தை அனுபவ் சின்ஹா இயக்கியிருந்தார்.

ரஜினிகாந்த் ஒரு காட்சியில் சிறப்புத் தோற்றத்தில் வந்து கைத்தட்டல்களை அள்ளினார்.

இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் இந்தியால் ரூ.15 கோடியாகவும், வெளிநாடுகளில் ரூ.3.25 கோடியாகவும் இருந்தது. முதல் நாளில் ரூ.22 கோடி வசூலித்து, பாடிகார்ட் படத்தின் ரூ.21 கோடி சாதனையை முறியடிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு நடக்காமல் போனது.

ஆனால் இரண்டாவது நாள் இந்தப் படம் வட்டியும் முதலுமாக சேர்த்து ரூ.25 கோடியை வசூலித்து ஷாரூக் கானுக்கு நிம்மதியைத் தந்துள்ளது.

'ரா ஒன்னை தீபாவளி அன்றே வெளியிட்டது தவறாகப் போய்விட்டது. காரணம், மக்கள் அனைவரும் தீபாவளியன்று திரையரங்கில் இருக்க விரும்ப மாட்டார்கள். அந்த நல்ல நாளில் வீட்டில் இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். அதனால்தான் வசூல் குறைந்தது. இல்லாவிட்டால் முதல் நாளில் ரூ.25 கோடியை எட்டியிருக்கும்,' என்கிறார் பாக்ஸ் ஆபீஸ் நிபுணரான கோமல் நஹாதா.

எந்த இந்திப் படத்துக்கும் இல்லாத அளவு பெரிய ஓபனிங் தமிழகத்தில் கிடைத்துள்ளது ரா ஒன்னுக்கு. முதல் நாளிலேயே ரூ. 2 கோடிக்கும் மேல் ஈட்டியுள்ளது சென்னை உள்ளிட்ட நகரங்களில் இந்தப் படம். காரணம்... சொல்லித் தெரிய வேண்டியதில்லை... ஒன் அன்ட் ஒன்லி ரஜினி தான்!

பல நகரங்களில் ரஜினி ரசிகர்கள் பெரிய பெரிய கட் அவுட் வைத்து, முதல் நாள் முதல் காட்சியை மேள தாளத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.

ஷாரூக்கானின் பிஸினஸ் உத்திக்கு கிடைத்த அபார வெற்றி இது!
 

ஏழாம் அறிவில் நன்றாக நடித்திருக்கிறார்! - மகள் ஸ்ருதிக்கு அப்பா கமல் பாராட்டு!!


ஏழாம் அறிவு படத்தில் சிறப்பாக நடித்ததாக மகள் ஸ்ருதியை கமல் ஹாஸனும், கவுதமியும் பாராட்டியுள்ளனர்.

லக் என்ற இந்தி படத்தில் நாயகியாக அறிமுகமானார் ஸ்ருதி ஹாஸன். பின்னர் தெலுங்குப் படங்களிலும் நடித்தார். இப்போது அவர் தமிழில் சூர்யா ஜோடியாக 7 ஆம் அறிவு படத்தில் அறிமுகமாகியுள்ளார்.

தீபாவளிக்கு ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. ஸ்ருதி நடித்த முதல் தமிழ் படம் என்பதால் தந்தை கமல் ஆர்வமாக ஃபோர் பிரேம்ஸ் தியேட்டரில் போய் அப்படத்தைப் பார்த்தார். ஸ்ருதி நடித்த ஒவ்வொரு காட்சியையும் ரசித்தார். ஸ்ருதி நடிப்பு அவருக்கு ரொம்பப் பிடித்துப் போனது.

படம் பார்த்து முடிந்ததும் ஸ்ருதியிடம் சிறப்பாக நடித்து இருப்பதாக வெகுவாக பாராட்டித் தள்ளினாராம் கமல். நடிகை கவுதமியும் இந்தப் படத்தைப் பார்த்த பின், ஸ்ருதியை பாராட்டினார்.
 

ஏழாம் அறிவு படம் எப்டி இருக்கு!


தீபாவளிக்கு வெளியான ஏ.ஆர்.முருகதாஸ்-சூர்யா கூட்டணி படமான ஏழாம் அறிவு படத்துக்கு அடுத்த ஒரு வாரத்துக்கு சென்னையில் டிக்கெட் இல்லை. இந்தப் படத்துக்கான புக்கிங் ஓபன் ஆனவுடனேயே அடுத்த ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.

இதனால் சூர்யாவின் ரசிகர்களுக்கு ஒரு பக்கம் ஏமாற்றமே என்றாலும், இன்னொரு பக்கம் தங்களது 'தலைவரின்' படத்துக்கான டிக்கெட்டுகள் இவ்வளவு வேகத்தில் விற்றுவிட்டதில் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் வெளியாகியுள்ள இந்தப் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளியே வந்து கொண்டுள்ளன. ஒரு சிலர் ஆகா.. ஓஹோ என்கின்றனர். மற்றவர்கள், ரொம்ப எதிர்பார்த்துப் போனேன்.. அந்த அளவுக்கு ஒன்னுமில்லை என்கின்றனர்.

சீக்கிரமா திரும்பி வந்து விமர்சனத்தை எழுதுப்பா (தீபாவளி லீவுன போன) ஷங்கர்!.

நமது விமர்சனம் வெளியாகும் வரை.. படம் குறித்த உங்கள் கருத்துக்களை எழுதுங்களேன்...
 

ரஜினியுடன் '6லிருந்து 60 வரை' படத்தில் நடித்த எல்ஐசி நரசிம்மன் மரணம்!


சென்னை: பிரபல நடிகர் எல்ஐசி நரசிம்மன் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 71.

200- படங்களுக்கும் அதிகமாக நடித்தவர் நரசிம்மன். ரஜினியின் 6 லிருந்து 60 வரை படத்தில், அவருக்குத் தம்பியாக நடித்ததன் மூலம் கவனிக்கத் தக்க நடிகரானார்.

பின்னர் நகைச்சுவை வேடங்களிலும் நடித்துப் புகழ்பெற்றார். கவுண்டமணி, செந்திலுடன் இணைந்து எல்.ஐ.சி. நரசிம்மன் நடித்த காமெடி காட்சிகள் ரொம்பப் பிரபலம். குறிப்பாக வித்வான் கவுண்டமணியிடம் கசாப்பு கடைக்காரரான எல்.ஐ.சி. நரசிம்மன் பாட்டு கற்று கொள்ளும் காட்சி. 'நின்னுக்கோரி வரணும...' என்ற பாடலை வேறு மெட்டில் பாட கவுண்டமணி சொல்லிக் கொடுப்பார்.

இதில் நரசிம்மன் ஆடுவெட்டும் கத்தியை வைத்துக்கொண்டு கறியை வெட்டிக்கொண்டே பாடி கவுண்டமணியை பயமுறுத்த அவர் ஓடி விடுவார். இந்த காமெடி ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

எல்.ஐ.சி. நரசிம்மன் கடந்த சில மாதங்களாக புற்று நோயால் அவதிப்பட்டார். நேற்று உடல்நிலை மோசமானது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மரணம் அடைந்தார்.

எல்.ஐ.சி. நரசிம்மனுக்கு சுரேஷ் என்ற மகனும் ஜெயந்தி என்ற மகளும் உள்ளனர். சின்மயா நகர் நெற்குன்றம் ரோட்டில் உள்ள வீட்டில் நரசிம்மன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. நாளை காலை 11 மணிக்கு வளசரவாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
 

வைரமுத்துவுக்கு உள்ளான் கறி விருந்து வைத்த கமல்!


கமலும் வைரமுத்துவும் இணைவது புதிதல்ல... முதல் முறையும் அல்ல. ஆனால் இருவரும் சந்தித்துக் கொள்ளும்போதெல்லாம் கமல் அவருக்கு தரும் ட்ரீட்தான் சம்திங் ஸ்பெஷல்.

பிரேஸிலிலிருந்து தருவிக்கப்பட்ட ஸ்பெஷல் காபி, ஆந்திரா ஸ்பெஷல் சிக்கன், ஐரோப்பாவிலிருந்து கொண்டுவரப்படும் பழங்கள்... இப்படி ஒவ்வொரு சந்திப்பும் வைரமுத்துவுக்கு ருசி மிக்கதாக அமைந்து விடுமாம். இதை வைரமுத்துவே பல சந்திப்புகளில் கூறியுள்ளார்.

இந்த முறை தீபாவளிக்கு அடுத்த நாள் சந்தித்தார்கள், விஸ்வரூபம் படத்துக்காக.

இந்த சந்திப்பின்போது, கமல் வைரமுத்துவுக்கு வைத்த விருந்து என்ன தெரியுமா... உள்ளான் கறி!

பூந்தமல்லியில் உள்ள ஒரு தொழிற்சாலையில்தான் இந்தப் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. பூந்தமல்லி சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளான் பறவைகள் அதிகம் கிடைக்கும். இவற்றை வாங்கி விருந்து சமைத்திருக்கிறார்கள் நேற்று.

வைரமுத்துவை படப்பிடிப்புத் தளத்துக்கே வரவழைத்த கமல், அவருக்கு உள்ளான் கறி விருந்தளிக்க, வைரமுத்து தனது கள்ளிக்காட்டு நினைவுகளில் மூழ்கிப் போய் ரசித்து ருசித்து சாப்பிட்டாராம்!

அதன் பின்னர் இருவரும் பல மணி நேரங்கள் மேல் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது விஸ்வரூபத்துக்காக தான் இதுவரை படமாக்கிய காட்சிகளை, வைரமுத்துவுக்கு திரையிட்டு காண்பித்தார், கமல்ஹாசன்.

40 நிமிடம் ஓடிய காட்சிகளைப் பார்த்து, வித்தியாசமான கதைக்களத்தையும், கமல்ஹாசனின் அபாரமான நடிப்பையும், புத்திசாலித்தனமான தொழில்நுட்பத்தையும் பாராட்டினார், வைரமுத்து.

படத்தில், 6 பாடல்கள் இடம்பெறுகின்றன. ஒரு பாடலை கமல்ஹாசனே எழுதியிருக்கிறார். வைரமுத்து 5 பாடல்களை எழுதுகிறார். சங்கர் மகாதேவன் இசையமைக்கிறார்.

உங்களுக்கில்லாத உரிமையா கவிஞரே?

"சலித்துப்போன கதைகளில் இருந்தும், புளித்துப்போன பாடல்களில் இருந்தும் தமிழ் சினிமா விடுபடவேண்டிய காலம் வந்துவிட்டது. இந்த படத்தில், பாடல்களின் தரத்தை இன்னொரு உயரத்துக்கு ஏற்ற விரும்புகிறேன். எனக்கு அந்த உரிமையை கொடுக்க வேண்டும்'' என்று வைரமுத்து கேட்டுக்கொண்டார்.

"உங்களுக்கு இல்லாத உரிமையா கவிஞரே? எடுத்துக்கொள்ளுங்கள்'' என்றார், கமல்ஹாசன்!
 

தனது மெழுகுச் சிலையை தானே திறந்து வைத்த அழகுச் சிலை கரீனா!


பாலிவுட் நடிகை கரீனா கபூர் தனது மெழுகுச் சிலையை இங்கலாந்தின் பிளாக்பூலில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் திறந்து வைத்தார்.

மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பாலிவுட் நடிகை கரீனா கபூரின் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதை கரீனா தன் கையாலே திறந்து வைத்து, அந்த சிலையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இது குறித்து கரீனா கூறியதாவது,

மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் எனது மெழுகுச் சிலை உள்ளது எனக்கு பெருமையாக உள்ளது. இந்த சிலை அப்படியே என்னைப் போன்று உள்ளது. அவர்கள் மிகவும் அழகாக செய்துள்ளனர். நான் எது, சிலை எது என்று சட்டென்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது என்று கூறியுள்ளார்.

ரூ.1,1, 896, 956 செலவு செய்து கரீனாவின் மெழுகுச் சிலையை உருவாக்கியுள்ளனர். அந்த சிலையை செய்து முடிக்க 4 மாதங்கள் ஆகியுள்ளது.

அங்கு ஏற்கனவே ஷாருக் கான், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ரித்திக் ரோஷன் ஆகியோரின் மெழுகுச் சிலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கரீனா உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களின் மெழுகுச் சிலைகள் உலகில் உள்ள 6 முக்கிய நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மக்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது.

அழகுச் சிலை தனது மெழுகுச் சிலையை திறந்து வைத்துள்ளது...
 

ரா.ஒன் முதல் நாள் வசூல் ரூ. 22 கோடி..ரெக்கார்ட் பிரேக்!


இந்தியா முழுவதும் 3,200 தியேட்டர்களில் வெளியாகியுள்ள ஷாருக் கானின் ரா.ஒன் முதல் நாளிலேயே ரூ. 22 கோடியை வசூலித்து ரெக்கார்ட் பிரேக் செய்துள்ளது.

படத்தின் இந்திப் பதிப்பு ரூ. 20 கோடியை ஈட்ட, தமிழ் மற்றும் தெலுங்கு டப்பிங் பதிப்புகள் தலா ரூ. 1 கோடியை ஈட்டியுள்ளன.

ரூ. 145 கோடியில் ஷாருக் தயாரித்துள்ள இந்தப் படம் நாட்டின் பெரும்பான்மையான மல்டி பிளக்ஸ்களில் 20 சதவீதம் அதிகமான டிக்கெட் விலையுடன் திரையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சல்மான் கானின் பாடிகார்ட் நாடு முழுவதும் 2,700 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு ஒரே நாளில் ரூ. 21 கோடியை வசூலித்தது. இது தான் இதுவரை இந்திப் படத்தின் ரெக்கார்ட் பிரேக்காக இருந்தது. இதை முறியடித்துள்ளது ரா.ஒன் என்கிறார்கள்.

பாடிகார்ட் ரிலீசான முதல் 5 நாட்களில் ரூ. 80 கோடியை ஈட்டியது. ரா.ஒன் ரூ. 100 கோடி வசூலைத் தாண்டும் என்கிறார்கள்.
 

அனுஷ்காவை அடுத்து சமந்தாவுக்கு அடிபோடும் கோலிவுட்


நடிகை சமந்தா நடித்துள்ள தெலுங்குப் படமான தூக்குடு ஹிட்டானதையடுத்து அவருக்கு கோலிவுட்டில் இருந்து வாய்ப்புகள் குவிகிறதாம்.

இயக்குனர் கௌதம் மேனன் அறிமுகப்படுத்திய நடிகை சமந்தா. தமிழில் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் குட்டி ரோலில் நடித்தாலும் யார் இந்த பொண்ணு என்று கேட்க வைத்தவர். அடுத்ததாக அவர் முரளி மகன் அதர்வாவுடன் பாணா காத்தாடி என்ற படத்தில் நடித்தார். தற்போது கௌதம் மேனனின் நீதானே என் பொன் வசந்தம் படத்தில் நடித்து வருகிறார்.

தமிழில் வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த சமந்தாவுக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வாய்ப்புகள் வரவில்லை. இதையடு்தது அவர் தெலுங்கு பக்கம் போய் பார்க்கலாம் என்று ஹைதராபாத் கிளம்பினார். அவர் அங்கு போன நேரம் அவர் நடித்த படங்கள் ஹிட்டானது. அதிலும் மகேஷ்பாபுவுடன் ஜோடி சேர்ந்த தூக்குடு சமந்தாவை தூக்கிவி்ட்டுள்ளது. இந்த படம் ஹிட்டானதால் தனது சம்பளத்தை கோடியாக உயர்த்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சமந்தாவை கண்டும், காணாததுமாய் இருந்த கோலிவுட் தற்போது தூக்குடு ஹிட்டானவுடன் அவருக்கு குறிவைத்துள்ளது. இதுவரை சமந்தாவை சீண்டாத பெரிய ஹீரோக்கள் எல்லாம் அவருடன் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்களாம்.

நம்ம உயர்ந்த நடிகை அனுஷ்காவும் இப்படித்தான் ரெண்டு படத்தில் அறிமுகமானார். வாய்ப்பு கிடைக்காததால் டோலிவுட் போய் பெரிய நடிகை ஆனார். தற்போது அவருடன் நடிக்க கோலிவுட் ஹீரோக்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
 

குளியலைறையில் வழுக்கி விழுந்து தலையில் அடி: மருத்துவமனையில் மனோரமா


நடிகை மனோரமா குளியலறையில் வழுக்கி விழுந்ததில் அவரது தலையில் பலத்த அடிபட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மனோரமா முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருகிறார். கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை செய்து கொண்ட பிறகும் வலி குறையாததால் அவருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை தரப்பட்டது.

இதையடுத்து அவர் படங்களில் இருந்து ஒதுங்கி ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் குளியலறையில் வழுக்கி விழுந்ததில் அவரது தலையில் பலத்த அடிபட்டது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 

வேலாயுதம்.. படம் பார்த்த நீங்களும் சொல்லலாமே!


சூர்யாவின் ஏழாம் அறிவு விமர்சனத்தை வெளியிட்டு விட்டோம். அடுத்ததாக இளைய தளபதி விஜய்யின் வேலாயுதம் பட விமர்சனம் வெளிவரவிருக்கிறது.

இந்தப் படமும் 'வழக்கமான விஜய் படம்' தான் என்ற விமர்சனங்கள் வந்து கொண்டுள்ளன. அதே நேரத்தில், ஒரு சாதாரண கதையை, தன் பாணியில் மசாலா சேர்த்து சுவாரஸ்யப்படுத்திவிட்டார் ரீமேக் ஸ்பெஷல் இயக்குநர் ராஜா என்றும், கலகலப்பான விஜய்யின் மாஸ் என்டர்டெயினர் என்றும் ஒரு பேச்சிருக்கிறது.

வேலாயுதம் வசூலில் புதிய சாதனை படைக்குமா... விஜய்யை பழைய 'வசூல் ராஜாவாக' பாக்ஸ் ஆபீஸில் நிலைநிறுத்துமா? என்ற கேள்வி கோடம்பாக்கம் பண்டிதர்கள் மத்தில் பலமாக ஒலிக்க ஆரம்பித்துள்ளது.

இந்தக் கேள்விகளுக்கான பதிலை படம் பார்த்த நீங்களும் சொல்லலாமே... நீங்க சொல்றதை விஜய்யும் படிப்பார்!
 

வைரமுத்துவுக்கு உள்ளான் கறி விருந்து வைத்த கமல்!


கமலும் வைரமுத்துவும் இணைவது புதிதல்ல... முதல் முறையும் அல்ல. ஆனால் இருவரும் சந்தித்துக் கொள்ளும்போதெல்லாம் கமல் அவருக்கு தரும் ட்ரீட்தான் சம்திங் ஸ்பெஷல்.

பிரேஸிலிலிருந்து தருவிக்கப்பட்ட ஸ்பெஷல் காபி, ஆந்திரா ஸ்பெஷல் சிக்கன், ஐரோப்பாவிலிருந்து கொண்டுவரப்படும் பழங்கள்... இப்படி ஒவ்வொரு சந்திப்பும் வைரமுத்துவுக்கு ருசி மிக்கதாக அமைந்து விடுமாம். இதை வைரமுத்துவே பல சந்திப்புகளில் கூறியுள்ளார்.

இந்த முறை தீபாவளிக்கு அடுத்த நாள் சந்தித்தார்கள், விஸ்வரூபம் படத்துக்காக.

இந்த சந்திப்பின்போது, கமல் வைரமுத்துவுக்கு வைத்த விருந்து என்ன தெரியுமா... உள்ளான் கறி!

பூந்தமல்லியில் உள்ள ஒரு தொழிற்சாலையில்தான் இந்தப் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. பூந்தமல்லி சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளான் பறவைகள் அதிகம் கிடைக்கும். இவற்றை வாங்கி விருந்து சமைத்திருக்கிறார்கள் நேற்று.

வைரமுத்துவை படப்பிடிப்புத் தளத்துக்கே வரவழைத்த கமல், அவருக்கு உள்ளான் கறி விருந்தளிக்க, வைரமுத்து தனது கள்ளிக்காட்டு நினைவுகளில் மூழ்கிப் போய் ரசித்து ருசித்து சாப்பிட்டாராம்!

அதன் பின்னர் இருவரும் பல மணி நேரங்கள் மேல் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது விஸ்வரூபத்துக்காக தான் இதுவரை படமாக்கிய காட்சிகளை, வைரமுத்துவுக்கு திரையிட்டு காண்பித்தார், கமல்ஹாசன்.

40 நிமிடம் ஓடிய காட்சிகளைப் பார்த்து, வித்தியாசமான கதைக்களத்தையும், கமல்ஹாசனின் அபாரமான நடிப்பையும், புத்திசாலித்தனமான தொழில்நுட்பத்தையும் பாராட்டினார், வைரமுத்து.

படத்தில், 6 பாடல்கள் இடம்பெறுகின்றன. ஒரு பாடலை கமல்ஹாசனே எழுதியிருக்கிறார். வைரமுத்து 5 பாடல்களை எழுதுகிறார். சங்கர் மகாதேவன் இசையமைக்கிறார்.

உங்களுக்கில்லாத உரிமையா கவிஞரே?

"சலித்துப்போன கதைகளில் இருந்தும், புளித்துப்போன பாடல்களில் இருந்தும் தமிழ் சினிமா விடுபடவேண்டிய காலம் வந்துவிட்டது. இந்த படத்தில், பாடல்களின் தரத்தை இன்னொரு உயரத்துக்கு ஏற்ற விரும்புகிறேன். எனக்கு அந்த உரிமையை கொடுக்க வேண்டும்'' என்று வைரமுத்து கேட்டுக்கொண்டார்.

"உங்களுக்கு இல்லாத உரிமையா கவிஞரே? எடுத்துக்கொள்ளுங்கள்'' என்றார், கமல்ஹாசன்!
 

குளியலைறையில் வழுக்கி விழுந்து தலையில் அடி: மருத்துவமனையில் மனோரமா


நடிகை மனோரமா குளியலறையில் வழுக்கி விழுந்ததில் அவரது தலையில் பலத்த அடிபட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மனோரமா முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருகிறார். கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை செய்து கொண்ட பிறகும் வலி குறையாததால் அவருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை தரப்பட்டது.

இதையடுத்து அவர் படங்களில் இருந்து ஒதுங்கி ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் குளியலறையில் வழுக்கி விழுந்ததில் அவரது தலையில் பலத்த அடிபட்டது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 

என்ன, 7 ஆம் அறிவுக்கு இலங்கையில் தடையா?


நடிகர் சூர்யா, இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் கூட்டணியில் வெளியாகியுள்ள 7 ஆம் அறிவு படத்திற்கு இலங்கையில் தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, ஸ்ருதி நடித்துள்ள 7 ஆம் அறிவு தீபாவளி அன்று ரிலீஸ் ஆனது. அந்த படத்தில் சூர்யா புத்த துறவியாக நடித்துள்ளார். ஒரு நாட்டை 9 நாடுகள் சேர்ந்து அடிப்பது வீரமல்ல, துரோகம் என்று சூர்யா பேசியிருக்கிறார்.

அந்த வசனத்தையும், தமிழரான போதிதர்மரை புத்தருக்கு இணையாக பேசப்படும் காட்சிகளையும் பார்த்து சிங்களவர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனராம். தமிழரான போதிதர்மருக்கு சீனாவில் கோவில் கட்டி கும்பிடுவது எல்லாம் இந்த படத்தைப் பார்த்த பிறகு தான் பலருக்கு தெரிய வந்துள்ளது.

இதனால் அந்தக் இந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று சிங்கள அமைப்புகள் குரல் எழுப்பி வருவதால் அந்தப் படத்திற்கு இலங்கையில் தடை விதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வருகின்றன. அவர்களுக்குப் பிடிக்காத காட்சிகளை நீக்கிய பின் திரையிட அனுமதிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் 7 ஆம் அறிவு யாழ்ப்பாணத்தில் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.
 

7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம்


-எஸ்.ஷங்கர்

நடிப்பு: சூர்யா, ஸ்ருதி ஹாஸன், ஜானி ட்ரை நூயென்
ஒளிப்பதிவு: ரவி கே சந்திரன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
எழுத்து - இயக்கம்: ஏ ஆர் முருகதாஸ்
தயாரிப்பு: உதயநிதி ஸ்டாலின்
பிஆர்ஓ: ஜான்சன்

இந்தியாவையே கலக்கிய சூப்பர் ஹிட் படமான கஜினி டீம் உருவாக்கிய படைப்பு என்பதால் '7 ஆம் அறிவு'க்கு ஏக எதிர்ப்பார்ப்பு. இப்படியொரு எதிர்ப்பார்ப்பு கொண்ட படம் அதை நிறைவேற்றத் தவறினால் என்ன நிகழுமோ அது 7-ஆம் அறிவுக்கும் நேர்ந்திருக்கிறது!

5-ம் நூற்றாண்டு...

தற்காப்புக் கலை, மருத்துவம், கலைகள் என அனைத்திலும் நிபுணத்துவம் மிக்கவனான பல்லவ மன்னர் குல இளவரசன் போதி தர்மனை அவனது ராஜமாதா சீனாவுக்குப் போகும்படி கட்டளையிடுகிறார். மூன்றாண்டு தரைவழிப் பயணமாக இமயத்தைக் கடந்து சீன கிராமம் ஒன்றில் கால் பதிக்கும் போதி தர்மனை, சீனர்கள் ஒரு ஆபத்தின் அடையாளமாகப் பார்க்கிறார்கள்.

ஆனால் ஆபத்து கொள்ளை நோய் உருவில் அந்த கிராமத்தைத் தாக்க, நோய் பாதிக்கப்பட்ட முதல் குழந்தையை உயிரோடு துணியில் சுருட்டி காட்டில் தூக்கிப் போட, அந்த குழந்தையை போதி தர்மன் தன் மருத்துவத் திறமையாமல் மீண்டும் உயிர்ப்பித்துத் தருகிறார். அப்போதுதான் போதி தர்மனின் மகத்துவம் அவர்களுக்குப் புரிகிறது. அந்தக் கிராமம் முழுவதுமே அப்போது நோயில் வீழ, போதி தர்மன் அந்த மக்களை நோயிலிருந்து மீட்கிறார். சீனாவின் பிற பகுதி மக்களுக்கும் அந்த நோய் சிகிச்சை முறைகளை கற்பிக்கிறார். கொள்ளை நோயே இல்லாமல் போகிறது.

அடுத்த சில நாட்களில் ஒரு கொள்ளைக் கூட்டம் அந்த கிராமத்தைத் தாக்க, அதிலிருந்து அந்த மக்களை தனது அரிய தற்காப்புக் கலை மூலம் காப்பாற்றுகிறார் போதி தர்மன். அந்த கலையை தங்களுக்கும் கற்பித்துத் தரச் சொல்லி சீனர்கள் கேட்க, அவர்கள் அனைவருக்கும் களறிப் பயட்டு, நோக்கு வர்மம் போன்ற தற்காப்புக் கலைகளை கற்றுத் தருகிறார்.

சீனர்களுக்கு செய்த சேவையில் திருப்தியுற்ற போதி தர்மன் மீண்டும் காஞ்சிபுரம் திரும்ப முடிவு செய்கிறார். ஆனால் அந்த சீனர்களோ, போதி இறந்து அவரது உடல் சீனாவில் புதைக்கப்பட்டால் நாடு செழிப்பாகவும் அச்சமின்றியும் இருக்கும் என நம்புகிறார்கள். எனவே போதிக்கு விஷம் கலந்த உணவைக் கொடுக்க, அது விஷ உணவு எனத் தெரிந்தும், அவர்களுக்காக உண்டு இறந்து சீனாவுக்கு உரமாகிறார் போதி தர்மன்.

இருங்க... இருங்க... இது முதல் 20 நிமிடக் கதைதான். மீதி? 21-ம் நூற்றாண்டில் ஆரம்பமாகிறது.

சென்னையில் மரபணு ஆராய்ச்சி மூலம் மீண்டும் போதி தர்மனை உருவாக்கும் முயற்சியில் சுபா (ஸ்ருதி) என்ற பெண் இறங்க, அது சீனாவுக்கு தெரிந்து விடுகிறது. இந்தியா மீது 'பயோ வார்' எனும் விஷக் கிருமி பரப்பும் போரை சீனா தொடங்கத் திட்டமிடுகிறது. போதி தர்மனால் விரட்டியடிக்கப்பட்ட கொள்ளை நோய்க் கிருமியை இதற்காக மீண்டும் உருவாக்குகிறது சீனா. அந்த பயோ வாரின் முடிவில் இந்தியாவே நோய் கிடங்காக மாறிவிடும். அதற்கான மருந்து சீனாவில் மட்டுமே (போதி தர்மன் கண்டுபிடித்த மருந்து) கிடைக்கும். எனவே சீனாவிடம் பொருளாதார ரீதியாக இந்தியா மண்டியிட வேண்டும்.

இந்தத் திட்டத்துக்கு சுபாவின் ஆராய்ச்சி தடையாக இருக்கும் என்பதால் அவளைக் கொல்ல டாங் லீ என்ற ஜெகஜ்ஜால வில்லனை இந்தியாவுக்கு அனுப்புகிறது சீனா. இவன் போதி தர்மன் கற்பித்த தற்காப்புக் கலையில் நிபுணத்துவம் மிக்கவன். பார்வையாலே ஒருவரைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்கவன்.

இங்கே, போதி தர்மனின் சந்ததியைத் தேடும் சுபா, அவர்களில் ஒருவனான சர்க்கஸ் கலைஞன் அரவிந்தை (சூர்யா) கண்டுபிடிக்கிறார். அவனைக் காதலிப்பது போல நடித்து தனது ஆராய்ச்சிக்கு பயன்படுத்துகிறார். போதி தர்மனின் மரபணுவில் 80 சதவீதம் அரவிந்துக்குப் பொருந்துவதை அறிகிறார்.

ஒரு கட்டத்தில் சுபா தன்னைக் காதலிக்கவில்லை, 'பரிசோதனைக் கூட குரங்காகத்தான்' பயன்படுத்துகிறார் என்பது தெரிந்து உடைந்து போகும் அரவிந்துக்கு, போதி தர்மனின் மகத்துவம், இந்தியாவுக்கு வரும் ஆபத்து பற்றி சொல்லி புரிய வைக்கிறார். அதற்குள் சுபாவை தேடி சென்னைக்கு வரும் வில்லன் டாங் லீ, அவளைக் கொல்ல துரத்துகிறார். உடனடியாக போதிதர்மனாக மாற சம்மதிக்கிறான் அரவிந்த்.

டாங் லீ முயற்சி வென்றதா? சுபாவின் ஆராய்ச்சி ஜெயித்ததா? அரவிந்த் போதி தர்மனாக மாறினானா? என்பது க்ளைமேக்ஸ்.

-கேட்பதற்கு கதை நன்றாக இருக்கிறதல்லவா... உண்மைதான். ஆனால் முதலில் நாம் குறிப்பிட்டுள்ள 5-ம் நூற்றாண்டு போதி தர்மன் கதையை மட்டும் அழகாக எடுத்த இயக்குநர் முருகதாஸ், தன்னைக் கொண்டாடிய ரசிகர்களுக்கு மீதி இரண்டரை மணி நேரமும் பெரும் சோதனையைத் தந்துவிட்டார் என்பதுதான் உண்மை.

முதல் 20 நிமிடக் காட்சிகளுக்கு மட்டும் தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம். அந்த அளவு உழைப்பைக் கொட்டியிருக்கிறார்கள் முருகதாஸ், சூர்யா உள்ளிட்டோர். குறிப்பாக ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன்!

பல்லவ காஞ்சியைச் சித்தரித்துள்ள விதம், சீனப் பயணத்தில் சூர்யா கடந்து போகும் இமயமலைப் பகுதிகள், இரவிலும் ஸ்படிகமாய் மின்னும் ஆறுகள், அந்த சீனக் கிராமம்... என அப்படியே நம்மை இழுத்துக் கொள்கிறது படம். நோய் பாதித்த குழந்தையை காப்பாற்றி தன் போர்வைக்குள் மறைத்து வைத்து, அந்தக் குழந்தையின் தாய் கண்ணெதிரே போதி தர்மன் காட்டும்போது, அந்த சீனப் பெண் உணர்ச்சிக் குவியலாய் கதறியபடி தரையில் விழுந்து வணங்குமிடம்... நெஞ்சைத் தொட்டுவிடுகிறது.

ஆனால் அதன் பிறகு ஒரு காட்சி கூட அந்த அளவு உணர்ச்சிமிக்கதாக, துடிப்பானதாக இல்லை என்பதே உண்மை. போதி தர்மன் கதையை மட்டும் 2.30 மணி நேரம் வர்ணித்திருந்தால் கூட ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்திருக்கும், தமிழ் ரசிகர்களுக்கு.

ஒரு சர்க்கஸ் கலைஞனான சூர்யா - மரபணு ஆராய்ச்சி மாணவி ஸ்ருதி காதலில் எந்த ஈர்ப்பும் இல்லை. அப்படி ஈர்ப்பே இல்லாத காதலில் வரும் டூயட்டுகள் மட்டும் எப்படி ரசிக்கும்படி இருக்கும்?.

ஸ்ருதி ஹாஸன் சில காட்சிகளில் பரவாயில்லை. பல காட்சிகளில் ஐயகோ. அதுவும் அவரது உடைந்த தமிழ் கொடுமை. டிஎன்ஏ ஆராய்ச்சி பற்றிய செமினாரில் தமிழ் பற்றி எழும் சர்ச்சை பொருத்தமற்ற காட்சியாக, பார்ப்பவர் உணர்வைத் தூண்டும் மலிவான உத்தியாக அமைந்துள்ளது. இன்னும்கூட அதை நம்பகத் தன்மையுடன், அழுத்தமாக பொருத்தமான காரணங்களுடன் அமைத்திருக்கலாம்.

சர்வ பலம் பொருந்திய வில்லன் டாங் லீ (Johnny Tri Nguyen) நோக்கு வர்மம் என்ற பெயரில் சும்மா சும்மா 'நோக்கிக் கொண்டே' இருப்பதில் ஒரு கட்டத்தில் அலுப்புத் தட்டுகிறது.

படத்தின் பின் பகுதியில் வரும் நிறைய காட்சிகளை தமிழ் ரசிகர்கள் ஏற்கெனவே பல ஆங்கிலப் படங்களில் பார்த்துவிட்டதால், 'யு டூ முருகதாஸ்' என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

படத்தின் நாயகன் சூர்யா, அந்த ஆரம்ப காட்சிகளுக்காகவும், க்ளைமாக்ஸ் காட்சிக்காகவும் அபாரமாக உழைத்திருப்பது தெரிகிறது. இடையில் வரும் காட்சிகளில் அவரது கெட்டப்பை இன்னும் கூட நன்றாகக் காட்டியிருக்கலாம். அதேபோல நாயகி ஸ்ருதியுடன் ஒட்டுதலின்றியே அவர் நிற்பது போலிருப்பதால், அந்த காதல் சோகப்பாட்டு பெரிய ஸ்பீட் பிரேக்கர் மாதிரியாகிவிடுகிறது.

படத்தின் இன்னொரு பெரிய மைனஸ் ஹாரிஸ் ஜெயராஜ் இசை. 'முன் அந்தி...' உள்ளிட்ட பாடல்களில் குறையில்லை.. ஆனால், பேக்கிரவுண்ட் மியூசிக்கில் சறுக்குகிறார். பின்னணி இசையில் டாங் லீ வரும் போது சீன சப்தம் ஒன்றை அலற விட்டு கடுப்பேற்றுகிறார்.

பீட்டர் ஹெயின் இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் இன்னொரு பரிமாணம் காட்டியிருக்கிறார்.

தமிழன் பெருமை என்னவென்று உலகுக்கு உரத்துச் சொல்ல வேண்டும் என்ற முருகதாஸின் ஆவலைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தப் படம் மூலம் போதி தர்மனைத் தெரியாத தமிழனே இருக்க முடியாது என்ற நிலை இப்போது உருவாக்கியிருப்பதும் மகிழ்ச்சிதான். ஆனால் நிறைய இடங்களில் தமிழர் பெருமை பற்றி உணர்த்த அவர் வசனங்களை மட்டுமே நம்பிவிட்டதுதான், பிரச்சார நெடியைக் கிளப்பிவிட்டது. அதற்கு தோதான அழுத்தமான காட்சிகளை வைத்திருந்தால் முருகதாஸ் நோக்கம் நிறைவேறியிருக்கும்.

படத்தில் நிறைய குறைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் அது நமது நோக்கமல்ல. நல்ல படம் தர வேண்டும் என்பதற்காக அபார முயற்சியொன்றில் இறங்கிய ஏ ஆர் முருகதாஸ், அதில் பாதிக் கிணறு தாண்டி விழுந்ததில் நஷ்டம் அவருக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும்தான்!.

ஒரு தமிழ்ப் படைப்பாளி என்ற முறையில் அவரை கடுமையாக விமர்சிக்கவும் முடியாத, அதே நேரம் திறமையுள்ள இந்த இளைஞரை விட்டுக் கொடுக்கவும் மனமில்லாத தர்மசங்கடத்தை முதல்முறையாக ஏ ஆர் முருகதாஸ் ஏற்படுத்திவிட்டார் என்பதே உண்மை!.

விழுவது மீண்டும் எழுவதற்கே என்ற தமிழ் மந்திரம், மீண்டும் ரமணாக்கள், கஜினிகள் படைக்கும் உத்வேகத்தை முருகதாஸுக்கு தரட்டும்!
 

முதல் நாளில் மிஸ் ஆனாலும் 2ம் நாளில் ரூ.25 கோடியை அள்ளிய ரா ஒன்!


ஷாரூக் கானின் ரா ஒன் திரைப்படம் முதல் நாளில் ரூ 18.25 கோடியை உலகம் முழுவதும் வசூலித்துள்ளது. இது சல்மான் கானின் பாடி கார்ட் படம் வசூலித்த ரூ 21 கோடியை விட குறைவுதான்.

இந்தியா முழுவதும் 3,200 தியேட்டர்களில் வெளியாகியுள்ள ரா ஒன் முதல் நாளிலேயே ரூ. 22 கோடியை வசூலித்து ரெக்கார்ட் பிரேக் செய்துவிட்டதாக தகவல் வந்தது. ஆனால், முதல் நாளில் ரூ 18.25 கோடியை மட்டுமே அந்ப் படம் ஈட்டியது தெரியவந்துள்ளது.

ஆனால், இரண்டாம் நாளில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து ரூ.25 கோடியை குவித்துள்ளது ரா ஒன். இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனை என்று இதனை பாலிவுட் பாக்ஸ் ஆபீஸில் குறிப்பிட்டுள்ளனர்.

மொத்தம் ரூ.140 கோடியில் தயாரான சயின்ஸ் பிக்ஷன் படம் ரா ஒன். ஷாரூக்கான், கரீனா கபூர், அர்ஜூன் ராம்பால் ஆகியோர் நடித்த இந்தப் படத்தை அனுபவ் சின்ஹா இயக்கியிருந்தார்.

ரஜினிகாந்த் ஒரு காட்சியில் சிறப்புத் தோற்றத்தில் வந்து கைத்தட்டல்களை அள்ளினார்.

இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் இந்தியால் ரூ.15 கோடியாகவும், வெளிநாடுகளில் ரூ.3.25 கோடியாகவும் இருந்தது. முதல் நாளில் ரூ.22 கோடி வசூலித்து, பாடிகார்ட் படத்தின் ரூ.21 கோடி சாதனையை முறியடிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு நடக்காமல் போனது.

ஆனால் இரண்டாவது நாள் இந்தப் படம் வட்டியும் முதலுமாக சேர்த்து ரூ.25 கோடியை வசூலித்து ஷாரூக் கானுக்கு நிம்மதியைத் தந்துள்ளது.

'ரா ஒன்னை தீபாவளி அன்றே வெளியிட்டது தவறாகப் போய்விட்டது. காரணம், மக்கள் அனைவரும் தீபாவளியன்று திரையரங்கில் இருக்க விரும்ப மாட்டார்கள். அந்த நல்ல நாளில் வீட்டில் இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். அதனால்தான் வசூல் குறைந்தது. இல்லாவிட்டால் முதல் நாளில் ரூ.25 கோடியை எட்டியிருக்கும்,' என்கிறார் பாக்ஸ் ஆபீஸ் நிபுணரான கோமல் நஹாதா.

எந்த இந்திப் படத்துக்கும் இல்லாத அளவு பெரிய ஓபனிங் தமிழகத்தில் கிடைத்துள்ளது ரா ஒன்னுக்கு. முதல் நாளிலேயே ரூ. 2 கோடிக்கும் மேல் ஈட்டியுள்ளது சென்னை உள்ளிட்ட நகரங்களில் இந்தப் படம். காரணம்... சொல்லித் தெரிய வேண்டியதில்லை... ஒன் அன்ட் ஒன்லி ரஜினி தான்!

பல நகரங்களில் ரஜினி ரசிகர்கள் பெரிய பெரிய கட் அவுட் வைத்து, முதல் நாள் முதல் காட்சியை மேள தாளத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.

ஷாரூக்கானின் பிஸினஸ் உத்திக்கு கிடைத்த அபார வெற்றி இது!
 

விஜய்யின் வேலாயுதம் படம் எப்படி..?


சூர்யாவின் ஏழாம் அறிவு விமர்சனத்தை வெளியிட்டு விட்டோம். அடுத்ததாக இளைய தளபதி விஜய்யின் வேலாயுதம் பட விமர்சனம் வெளிவரவிருக்கிறது.

இந்தப் படமும் 'வழக்கமான விஜய் படம்' தான் என்ற விமர்சனங்கள் வந்து கொண்டுள்ளன. அதே நேரத்தில், ஒரு சாதாரண கதையை, தன் பாணியில் மசாலா சேர்த்து சுவாரஸ்யப்படுத்திவிட்டார் ரீமேக் ஸ்பெஷல் இயக்குநர் ராஜா என்றும், கலகலப்பான விஜய்யின் மாஸ் என்டர்டெயினர் என்றும் ஒரு பேச்சிருக்கிறது.

வேலாயுதம் வசூலில் புதிய சாதனை படைக்குமா... விஜய்யை பழைய 'வசூல் ராஜாவாக' பாக்ஸ் ஆபீஸில் நிலைநிறுத்துமா? என்ற கேள்வி கோடம்பாக்கம் பண்டிதர்கள் மத்தில் பலமாக ஒலிக்க ஆரம்பித்துள்ளது.

இந்தக் கேள்விகளுக்கான பதிலை படம் பார்த்த நீங்களும் சொல்லலாமே... நீங்க சொல்றதை விஜய்யும் படிப்பார்!