ரஜினி ஜோடி அசின்?


கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அசினுடன் பேச்சு நடப்பதாகக் கூறப்படுகிறது.

ரஜினி மகள் சௌந்தர்யா இயக்கும் கோச்சடையான், மோஷன் கேப்சரிங் முறையில் படமாக்கப்படும் 3 டி சினிமாவாகும். ரஜினி இதில் கோச்சடையான் என்ற பாண்டிய மன்னனாக வருகிறார்.

இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேசி வந்தனர். அவர் 2012 வரை படுபிஸி என்பதால், கால்ஷீட் ஒதுக்க முடியாமல் திணறினார்.

இந்த நிலையில், இப்போது அசினுடன் பேச்சு நடப்பதாகத் தெரிகிறது. அசினுக்கு கைவசம் பெரிதாக படங்கள் ஏதுமில்லை. இந்தியல் ஒரு படம் ஒப்பந்தமாகியுள்ளார்.

எனவே அவர் ரஜினியுடன் நடிக்க தாராளமாக கால்ஷீட் தருவார் என்கிறார்கள்.

இந்தப் படத்தில் ரஜினி தங்கையாக நடிக்க சினேகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். பீட்டர் ஹெயின் சண்டைக்காட்சிகளை அமைக்கிறார்.

மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.
 

இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்


ஒய் திஸ் கொலவெறிடி என்ற 'கச்சா முச்சா' பாட்டு ஹிட்டான அளவுக்கு திட்டும் வாங்கிக் கொண்டிருக்கிறது.

தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கும் 3 படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் இது. தனுஷ் எழுதிப் பாடியுள்ளார். யுட்யூப் விருது வேறு கொடுத்துவிட்டது. இதனால் இந்தியத் தமிழனுக்கு கிடைத்த இணையில்லா புகழாரம் இது என்றெல்லாம் தனுஷ் பெருமையாக பேசி வருகிறார்.

ஏற்கெனவே பிரபல பாடல் ஆசிரியர்கள் ஜாவேத் அக்தர், யுகபாரதி போன்றவர்கள் இந்த பாடலைத் திட்டித் தீர்த்த நிலையில், அடுத்து கன்னட சினிமாவின் பிரபல நடிகர் ஸ்ரீநாத்தும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இந்தப் பாடல் குறித்து அவர் கூறுகையில், "பாடல்களை இசைதான் தீர்மானிக்கும். இசைக்கும் பாட்டுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. ஆனால் ஒய்திஸ் கொலை வெறிடி பாடலில் இசைக்கும் பாடலுக்கும் சம்பந்தமே இல்லை. நிறைவு பெறாத அர்த்தம் இல்லாத அபத்தமான பாடலாக உள்ளது. மக்கள் கொலை வெறிடி பாடலை விரும்புவதாக சொல்கின்றனர்.

ஆனால் அதை விரும்பாதவர்களும் இருக்கிறார்கள். விரும்பாதவர்கள் பட்டியலில் நானும் இருக்கிறேன் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கொலை வெறிடி பாடலை ரசிக்க முடியவில்லை. அபத்தமாக உள்ளது. நான் கற்கால மனிதன் அல்ல. வளர்ச்சி அடைந்த நவீன காலத்தில் வாழ்கிறேன். அதனால் இதுபோன்ற பாடல்களை சகித்துக் கொள்ள முடியவில்லை," என்றார்.
 

'கவர்ச்சி நல்லது!' - வித்யா பாலன்


தி டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்த பிறகு எனக்கு ஏகப்பட்ட கவர்ச்சி வேடங்கள் குவிகின்றன. என்னைப் பொறுத்தவரை 'கவர்ச்சி நல்லது', என்று கண் சிமிட்டுகிறார் வித்யா பாலன்.

சில்க் ஸ்மிதா வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தி தர்டி பிக்சர் படத்தில் கவர்ச்சி நடிகை சில்க்காக நடித்து கலக்கி இருந்தார் வித்யா பாலன். படம் படு சூப்பராக ஓடிக் கொண்டுள்ளது.

இந்தப் படம் காரணமாக வித்யா பாலனுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் இந்தியில் வர ஆரம்பித்துள்ளதாம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "இதுவரை குடும்ப பாங்கான வேடங்களில் மட்டும் நடித்தேன். இதனால் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று நினைத்துக் கொண்டார்கள். ஆனால் தி டர்டி பிக்சர்ஸ் படம் என் இமேஜை மாற்றிவிட்டது.

படம் வெளியாகும் முன்னே எனது போஸ்டர்களை பார்த்து ஆபாசமாக நடித்து இருப்பதாக பலரும் பேசினர். ஆனால் படம் வெளியான பிறகு என் கவர்ச்சிக்கு அர்த்தம் கிடைத்துவிட்டது.

கேரக்டரோடு ஒன்றியிருந்தால் கவர்ச்சி நன்றாகவே இருக்கும். இந்தப் படத்துக்கு கிளுகிளுப்பான காட்சிகள் அவசியம். அதனால் ஒப்புக் கொண்டு நடித்தேன். இதேபோன்ற வேடங்களில் நடிக்க நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் எல்லாவற்றையும் ஒப்புக் கொள்ளவில்லை. கதையில் கவர்ச்சிக்கான அவசியம் இருந்தால் நடிப்பேன்," என்றார்.
 

மலையாள நடிகர் நடிகைகளுக்கு எதிர்ப்பு... தமிழில் தடைவிதிக்கக் கோரிக்கை!


சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் வேண்டுமென்றே தமிழகத்துக்கு எதிரான நிலையை எடுத்துள்ள கேரள அரசைக் கண்டிக்கும் வகையில் மலையாள நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இங்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுக்க ஆரம்பித்துள்ளன.

அரசியல் கட்சிகள், முல்லைப் பெரியாறு அணை காக்க களமிறங்கியுள்ள உணர்வாளர்கள் பலரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

தமிழர், மலையாளி என்ற பேதமின்றி இதுநாள் வரை வாழ்ந்து வந்தவர்கள் இன்று பிரிந்து நின்று அடித்துக் கொள்ளும் நிலையை கேரள அரசு உருவாக்கியுள்ளது.

முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்தில்லை என்று மத்திய நீரியல் நிபுணர் குழு சொன்ன பிறகும், பிடிவாதமாக பொய்யான காரணங்களை கற்பித்து அணைக்கு ஆபத்து என்று கூறி உடைக்க முயற்சிக்கிறது.

இந்த அணை உடைக்கப்பட்டால் தமிழகத்தின் 5 மாவட்ட மக்கள் வாழ்வாதாரம் பறிபோகும் சூழ்நிலை உள்ளது.

இந்த நிலையைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அரசியல் கடந்து ஒருமித்த மனதோடு தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உணவுக்கு, பிழைப்புக்கு, வர்த்தகத்துக்கு என பல வழிகளிலும் சரி பாதி தமிழகத்தை மட்டுமே நம்பியுள்ள கேரளா, தமிழகத்தின் உரிமையை பறிக்கும் வகையில், முல்லைப் பெரியாறு அணையில் 120 அடிமட்டுமே தண்ணீர் தேக்க வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இப்படி அனைத்து வகையில் அடாவடித்தனம் செய்யும் கேரளாவுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் தமிழக மக்களும் மலையாளிகளுக்கு தங்கள் எதிர்ப்பைக் காட்ட ஆரம்பித்துள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் கோடி கோடியாக சம்பளம் வாங்கும் மலையாள சினிமா நடிகர் நடிகைகளுக்கு இனி வாய்ப்பளிக்கக் கூடாது என்று கோஷத்தை எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

"மலையாள நடிகர், நடிகைகளை தமிழ் திரையுலகம்தான் வாழ வைக்கிறது. இங்குள்ள படங்களில் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கின்றனர். நயன்தாரா, அசின், மீரா ஜாஸ்மின், நவ்யா நாயர், காவ்யா மாதவன், ஜோதிர்மயி, கோபிகா மற்றும் தற்போது முன்னணி நடிகையாகி உள்ள அமலாபால் மேலும் பல புதுமுக நடிகைகள் கேரளாவில் இருந்து வந்து தமிழ் படங்கள் மூலம் பிரபலமானவர்கள்.

கேரள நடிகர்களும் தமிழ் படங்களில் நடிக்கின்றனர். தமிழ் நடிகர், நடிகைகள் முல்லை பெரியாறு பிரச்சினையில் கருத்து தெரிவிக்காமல் உள்ளனர். ஆனால் மலையாள நடிகர்கள் சுரேஷ் கோபி, திலீப், முகேஷ் உள்ளிட்ட பலர் எதிராக போராட்டம் நடத்தி உள்ளனர். இவர்கள் தமிழ் படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.

கேரள வணிக நிறுவனங்கள் அவற்றின் விளம்பர படங்களிலும் தமிழ் நடிகர், நடிகைகளை நடிக்க வைத்து விற்பனையை பெருக்கி வருகின்றன. அந்த படங்களில் தமிழ் நடிகர்கள் நடிக்காமல் புறக்கணிக்க வேண்டும்," எனறு வலியுறுத்தியுள்ளது இந்து மக்கள் கட்சி.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு கோரிக்கை

மேலும், முல்லைப் பெரியாறு அணையைக் காக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கேரளாவைச் சேர்ந்த எந்த நடிகர் நடிகைக்கும் தமிழ்ப் படங்களில் வாய்ப்பு அளிக்கக் கூடாது என முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு போராட்டக்குழு தயாரிப்பாளர் சங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

மற்ற விஷயங்களில் போராட, கருத்து தெரிவிக்க முதலில் ஓடி வரும் தமிழ் சினிமாக்காரர்கள், முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில கேரளாவைக் கண்டிக்க முன்வராததற்கு இந்தக் குழு கண்டனமும் தெரிவித்துள்ளது.
 

தேவ் ஆனந்த் உடல் லண்டனில் தகனம் - அஸ்தி மும்பை வருகிறது!


லண்டன்: பிரபல நடிகர் தேவ் ஆனந்தின் உடல் லண்டனிலேயே இன்று தகனம் செய்யப்பட்டது. அவரது அஸ்தியுடன் உறவினர்கள் திங்கள்கிழமை சென்னை திரும்புகிறார்கள்.

பிரபல இந்தி நடிகர் தேவ் ஆனந்த் லண்டனில் கடந்த சனிக்கிழமை மரணம் அடைந்தார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் சென்றபோது அங்கு மாரடைப்பு ஏற்பட்டது.

தேவ் ஆனந்த் உடலுக்கு லண்டனிலேயே இறுதி சடங்கு நடத்த உறவினர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து குடும்பத்தினர், உறவினர்கள் லண்டன் புறப்பட்டுச் சென்றனர். அங்கு இன்று உடல் தகனம் நடந்தது. முன்னதாக தேவ் ஆனந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

லண்டனில் வசிக்கும் இந்தியர்களும் இதில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடல் தகனம் நடந்தது.

அஸ்தி கலசத்துடன் அவரது மகன் மற்றும் குடும்பத்தினர் திங்கட்கிழமை இந்தியா திரும்புகிறார்கள்.
 

அடுத்த படத்துக்கு தயாராகும் சீமான்... ஹீரோ விஷாலா கார்த்தியா?


நாம் தமிழர் கட்சிப் பணிகள், அரசியல் பணிகள் என நிற்க நேரமின்றி ஓடிக் கொண்டிருந்தாலும், ஒருஅதிரடியான படம் தர வேண்டும் என்ற எண்ணம் மட்டும் சதா ஓடிக் கொண்டே இருக்கிறது சீமானுக்குள்.

விஜய்யை வைத்து இயக்குவதாக இருந்த ஐடியாவை அவர் கிட்டத்தட்ட தூக்கி எறிந்துவிட்டார் என்றே தெரிகிறது.

உடனடியாக அவர் வேறு படத்தை இயக்கும் யோசனையில் உள்ளார். இதற்கு ஏற்கெனவே பக்காவாக ஸ்க்ரிப்டெல்லாம் தயார் செய்துவைத்துவிட்டார்.

படத்துக்குப் பெயர் கோபம். தம்பியைப் போல பல மடங்கு வேகமும் அழுத்தமான காட்சிகளும் கொண்ட ஸ்கிரிப்ட் இது. உண்மையில் இந்தப் படத்தைதான் சீமான் இயக்குவதாக இருந்தார். ஆனால் இடையில் விஜய்யின் அழைப்பு வந்ததால், இத்தனை தாமதம்.

இந்தப் படத்தில் நாயகனாக விஷால் அல்லது கார்த்தியை வைத்து இயக்க திட்டமிட்டுள்ளார் சீமான்.

இந்தக் கதை குறித்து முன்பு ஒருமுறை சீமான் கூறுகையில், "இந்தப் படத்தில் பிரச்சினைகளை மட்டும் சொல்லவில்லை. அதற்கு இன்றைய சூழலில் தீர்வு என்ன என்பதையும் சொல்லப் போகிறேன்," என்று கூறியிருந்தார்.

'அடடா வாய்ப்பை மிஸ் பண்ணிட்டோமே...' என்று விஜய் வருந்துமளவுக்கு படம் சிறப்பாக வரட்டும் சீமான்!
 

ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோகநாத் மரணம் - கேபி, கமல் அஞ்சலி


சென்னை: பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோகநாத் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74.

அபூர்வ ராகங்கள், அவள் ஒரு தொடர்கதை, மரோசரித்ரா (தெலுங்கு), ஏக் துஜே கேலியே (இந்தி), நினைத்தாலே இனிக்கும் உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர், பி.எஸ்.லோகநாத். கே.பாலசந்தர் இயக்கிய செய்த 55 படங்களுக்கு, இவர் ஒளிப்பதிவு செய்தவர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதல் ஷாட் வைத்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

பி.எஸ்.லோகநாத், சென்னை கே.கே.நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல், நேற்று காலை 5.30 மணிக்கு அவர் மரணம் அடைந்தார்.

அவருடைய உடலுக்கு நடிகர்கள் கமல்ஹாசன், சிவகுமார், பார்த்திபன், டைரக்டர் கே.பாலசந்தர் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் மாலை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பிறகு அவருடைய உடல் மாலை 5.30 மணிக்கு கண்ணம்மாப்பேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

மறைந்த பி.எஸ்.லோகநாத்துக்கு ராதா என்ற மனைவியும், 2 மகன்கள், 2 மகள்களும் உள்ளனர்.
 

100 நாட்களை கடந்தது மங்காத்தா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அல்டிமேட் ஸ்டார் அஜீத் நடித்த சன் பிக்ச்ர்ஸ் கலாநிதி மாறன் பெருமையுடன் வழங்கும் 'மங்காத்தா' படம் நேற்றுடன் 100 நாட்களை கடந்தது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இந்த படம் வசூலில் சாதனை புரிந்தது. இதுவரை தல அஜீத் நடித்த படங்களில் அதிக வசூலை தேடிக் கொடுத்த படமும் மங்காத்தா தான். சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இப்படம் நல்ல வசூலைப் பெற்றது. இதனையடுத்து மங்காத்தா படம் 100 நாட்களை கடந்ததை அடுத்து தல ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


 

டிச.15 சினிமா காட்சிகள் ரத்து?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
முல்லைப் பெ‌ரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை‌க் கண்டித்தும், அணையை‌ப் பாதுகாக்கக் கோ‌ரியும் தமிழ்நாடு திரையரங்கு உ‌ரிமையாளர்கள் சார்பில் சென்னையில் உண்ணாவிரதம் நடக்கிறது.
வரும் 15ஆம் தேதி நடக்கும் இந்த உண்ணாவிரதத்தை முன்னிட்டு அன்று மட்டும் தமிழகத்தில் உள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் காட்சிகள் ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு திரையரங்கு உ‌ரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் தெ‌ரிவித்தார். இந்த உண்ணாவிரதத்தில் திரையர‌ங்கின் பிற பி‌ரிவினரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

தயாரிப்பாளர் ஆனார் சித்தார்த்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'காதலில் சொதப்புவது எப்படி?' என்ற படம் மூலம் தயாரிப்பாளர் ஆகிறார் சித்தார்த். 'பாய்ஸ்' படம் மூலம் அறிமுகமான சித்தார்த், இப்போது தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு '180' படத்தில் தமிழில் நடித்தார். இதையடுத்து 'காதலில் சொதப்புவது எப்படி?' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அமலா பால் ஹீரோயின். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். பாலாஜி இயக்குகிறார். இந்தப் படம் தெலுங்கில் 'லவ் ஃபெயிலியர்' என்ற பெயரில் உருவாகிறது. இதை இடாகி என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் மூலம் சித்தார்த் தயாரிக்கிறார். ஒய் நாட் மூவிஸ் நிறுவனம் இணை தயாரிப்பு செய்கிறது.


 

பாலிவுட் செல்லும் கோலிவுட் இயக்குனர்கள்!

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
பாலிவுட்டுக்கு செல்லும் கோலிவுட் இயக்குனர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. கௌதம் மேனன், சுசிகணேசன் என செல்லும் அந்த பட்டியலில், தற்போது கே.வி.ஆனந்த்தும் சேர்ந்துள்ளார். 'கோ' படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு சூர்யா வைத்து 'மாற்றான்' படத்தை இயக்கி வருகிறார் கே.வி.ஆனந்த். இந்த படம் முடிந்த பிறகு, ரன்பீர் கபூரை வைத்து படம் ஒன்றை இயக்கப் போகிறார் கே.வி.ஆனந்த். அதே போல் 7ஆம் அறிவு ரீமேக்கிலும் நடிக்க இந்தி நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நம்ம தனுஷூம் இந்தியில் அடுத்து ஆண்டு அபிஷேக் மற்றும் அமிதாப்பை வைத்து படம் இயக்கலாம் எனவும் பேசப்பட்டு வருகிறது. இதனால் பாலிவுட்டின் பார்வை முழுவதும் கோலிவுட் பக்கம் திரும்பியுள்ளது.


 

பாலிவுட் செல்லும் கோலிவுட் இயக்குனர்கள்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பாலிவுட்டுக்கு செல்லும் கோலிவுட் இயக்குனர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. கௌதம் மேனன், சுசிகணேசன் என செல்லும் அந்த பட்டியலில், தற்போது கே.வி.ஆனந்த்தும் சேர்ந்துள்ளார். 'கோ' படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு சூர்யா வைத்து 'மாற்றான்' படத்தை இயக்கி வருகிறார் கே.வி.ஆனந்த். இந்த படம் முடிந்த பிறகு, ரன்பீர் கபூரை வைத்து படம் ஒன்றை இயக்கப் போகிறார் கே.வி.ஆனந்த். அதே போல் 7ஆம் அறிவு ரீமேக்கிலும் நடிக்க இந்தி நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நம்ம தனுஷூம் இந்தியில் அடுத்து ஆண்டு அபிஷேக் மற்றும் அமிதாப்பை வைத்து படம் இயக்கலாம் எனவும் பேசப்பட்டு வருகிறது. இதனால் பாலிவுட்டின் பார்வை முழுவதும் கோலிவுட் பக்கம் திரும்பியுள்ளது.


 

ஹீரோயின்தான் முதல் சாய்ஸ்: அபிநயா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'நாடோடிகள்', 'ஈசன்' படங்களில் நடித்தவர் அபிநயா. அவர் கூறியதாவது: 'ஈசன்' படத்தை பெரிதும் எதிர்பார்த்தேன். அதில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. தமிழில் சில படங்களில் கதை கேட்டுள்ளேன். நல்ல படம் அமைந்தால், சென்னையில் குடியேறுவேன். அப்பா ஆனந்த் வர்மாவும் சில படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் 'ரிப்போர்ட்டர்' படத்தில் ஹீரோயினாக நடிக்கிறேன். வேறு படம் ஏற்கவில்லை. தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் தங்கையாக, 'தம்மு', நாகார்ஜூனா தங்கையாக, 'தமரகம்' படங்களில் நடிக்கிறேன். தொடர்ந்து தங்கையாக நடிப்பேனா என்று சொல்ல முடியாது. ஹீரோயின்தான் என் முதல் சாய்ஸ்.


 

பாலிவுட் செல்லும் கோலிவுட் இயக்குனர்கள்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பாலிவுட்டுக்கு செல்லும் கோலிவுட் இயக்குனர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. கௌதம் மேனன், சுசிகணேசன் என செல்லும் அந்த பட்டியலில், தற்போது கே.வி.ஆனந்த்தும் சேர்ந்துள்ளார். 'கோ' படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு சூர்யா வைத்து 'மாற்றான்' படத்தை இயக்கி வருகிறார் கே.வி.ஆனந்த். இந்த படம் முடிந்த பிறகு, ரன்பீர் கபூரை வைத்து படம் ஒன்றை இயக்கப் போகிறார் கே.வி.ஆனந்த். அதே போல் 7ஆம் அறிவு ரீமேக்கிலும் நடிக்க இந்தி நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நம்ம தனுஷூம் இந்தியில் அடுத்து ஆண்டு அபிஷேக் மற்றும் அமிதாப்பை வைத்து படம் இயக்கலாம் எனவும் பேசப்பட்டு வருகிறது. இதனால் பாலிவுட்டின் பார்வை முழுவதும் கோலிவுட் பக்கம் திரும்பியுள்ளது.


 

தயாரிப்பாளர் ஆனார் சித்தார்த்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'காதலில் சொதப்புவது எப்படி?' என்ற படம் மூலம் தயாரிப்பாளர் ஆகிறார் சித்தார்த். 'பாய்ஸ்' படம் மூலம் அறிமுகமான சித்தார்த், இப்போது தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு '180' படத்தில் தமிழில் நடித்தார். இதையடுத்து 'காதலில் சொதப்புவது எப்படி?' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அமலா பால் ஹீரோயின். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். பாலாஜி இயக்குகிறார். இந்தப் படம் தெலுங்கில் 'லவ் ஃபெயிலியர்' என்ற பெயரில் உருவாகிறது. இதை இடாகி என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் மூலம் சித்தார்த் தயாரிக்கிறார். ஒய் நாட் மூவிஸ் நிறுவனம் இணை தயாரிப்பு செய்கிறது.


 

200 துணை நடிகர்களை மொட்டை அடித்த பாலா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் அடுத்த படம் 'எரியும் தனல்'. மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசத்தை விரும்பும் பாலா, இந்த படத்தில் 200 துணை நடிகர்களை நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். பாலா படத்தில் நடிக்க ஆசையாக இருந்த துணை நடிகர்கள், பாலா ஒரு அதிர்ச்சி கொடுத்தாராம். அது என்ன தெரியுமா... அத்தனை பேருக்கும் மொட்டை போட்டு நடிக்க வைத்துள்ளாராம். படத்தின் கதைக்கு தேவைப்படுவதால் 200 துணை நடிகர்களும் சந்தோஷமாக ஒப்புக் கொண்டனர். அதுமட்டுமின்றி பட ஷூட்டிங் முடியும் வரை மொட்டையில் இருக்குமாறு துணை நடிகர்களை பாலா கேட்டுக் கொண்டாராம்.


 

200 துணை நடிகர்களை மொட்டை அடித்த பாலா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் அடுத்த படம் 'எரியும் தனல்'. மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசத்தை விரும்பும் பாலா, இந்த படத்தில் 200 துணை நடிகர்களை நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். பாலா படத்தில் நடிக்க ஆசையாக இருந்த துணை நடிகர்கள், பாலா ஒரு அதிர்ச்சி கொடுத்தாராம். அது என்ன தெரியுமா... அத்தனை பேருக்கும் மொட்டை போட்டு நடிக்க வைத்துள்ளாராம். படத்தின் கதைக்கு தேவைப்படுவதால் 200 துணை நடிகர்களும் சந்தோஷமாக ஒப்புக் கொண்டனர். அதுமட்டுமின்றி பட ஷூட்டிங் முடியும் வரை மொட்டையில் இருக்குமாறு துணை நடிகர்களை பாலா கேட்டுக் கொண்டாராம்.


 

வைகைப் புயலின் 2வது இன்னிங்ஸ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஆட்சி மாறிய பிறகு எந்தப் புதிய படத்திலும் வடிவேலு ஒப்பந்தமாகவில்லை. அவர் நடித்த ஒரு படமும் வெளியாகவுமில்லை. இந்நிலையில் முதல் முறையாக அவர் நடித்தப் படமொன்று வெளியாகிறது. அது மம்பட்டியான். வடிவேலின் மார்க்கெட் ஆடாமல் அசையாமல் இருக்கிறதா என்பதை அறிய இந்தப் படம் உதவும்.




 

தோட்டா தரணியின் டைம் லைன் கண்காட்சி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி, தான் வரைந்த ஓவியங்களை, ஒவ்வொரு வருடமும் கண்காட்சியாக நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு அவர் நடத்தும் கண்காட்சிக்கு, 'டைம் லைன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நிருபர்களிடம் தோட்டா தரணி கூறியதாவது: கடந்த 45 ஆண்டுகளாக நான் வரைந்த ஓவியங்களை, பாதுகாத்து வருகிறேன். இதற்குமுன் நான் நடத்திய கண்காட்சிகளில், வெவ்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட ஓவியங்கள் இடம்பெற்றன. இதற்கு வரவேற்பு கிடைத்தது. இதுவரை வரைந்த ஓவியங்களில் சிறப்பானது என்று கருதுபவற்றை, லலித்கலா அகாடமி, போகஸ் ஆர்ட் கேலரி, ஆர்ட் அன்ட் சோல் ஆகிய இடங்களில் கண்காட்சியாக நடத்துகிறேன். 16 முதல் 23ம் தேதி வரை இக்கண்காட்சி நடக்கிறது. 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஆர்ட் டைரக்டராகப் பணியாற்றி இருந்தாலும், தினமும் ஓவியம் வரையாமல் தூங்கியதில்லை. கம்ப்யூட்டர் யுகத்தில் எவ்வளவோ வசதிகள் வந்தாலும் பென்சிலில் வரைவதில் இருக்கும் ஈடுபாடு குறைய இல்லை. இவ்வாறு தோட்டதரணி கூறினார். முன்னதாக அவர் பற்றிய டாகுமென்டரி திரையிடப்பட்டது.


 

மேக்கப் இல்லாத பிந்து மாதவி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'கழுகு' படத்தில் நடித்துள்ள பிந்து மாதவி கூறியதாவது: தமிழில் 'வெப்பம்' படத்தில் அறிமுகமானேன். இதையடுத்து கிருஷ்ணா ஜோடியாக 'கழுகு' படத்தில் நடித்துள்ளேன். கனமான வேடம். மேக்கப் போடாமல் நடித்திருக்கிறேன். என் நடிப்பை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு அமைந்தது. இது ரிலீசான பின், தமிழ் ரசிகர்கள் என்னை கவனிப்பார்கள். இப்போது தெலுங்கில் 'போகா' படத்தில் நடிக்கிறேன். தமிழில் நல்ல வேடம் அமையும் என்று காத்திருக்கிறேன்.


 

தமிழில் அனுஷ்கா 5

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழில் தொடர்ந்து ஐந்து படங்களில் நடித்து வருகிறார் அனுஷ்கா. ஆரம்பத்தில் தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அனுஷ்கா, 'ரெண்டு'படம் மூலம் தமிழுக்கு வந்தார். பிறகு தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அவர் தமிழில் நடிக்க கேட்டும் கால்ஷீட் இல்லை என்று மறுத்து வந்தார். இந்நிலையில் 'வேட்டைக்காரன்' மூலம் மீண்டும் தமிழில் என்ட்ரியான அனுஷ்காவுக்கு இங்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 'சிங்கம்', 'தெய்வத்திருமகள்' படங்களில் தொடர்ந்து நடித்த அவர், மீண்டும் தெலுங்குக்கு சென்றார். இப்போது அங்கிருந்து தமிழில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.
விக்ரம் நடிக்கும், 'தாண்டவம்', கார்த்தி நடிக்கும் பெயரிடப்படாதப் படம், செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படம் மற்றும் சூர்யா, அஜீத் நடிக்கும் படங்கள் என மொத்தம் 5 படங்களில் நடிக்கிறார். இதுதவிர மேலும் சில படங்களில் நடிக்கப் பேச்சுவார்த்தை நடக்கிறது. 'திடீரென்று அனுஷ்கா தமிழில் கவனம் செலுத்துவதற்கு தெலுங்கு பட உலகில் ஏற்பட்ட பிரச்னைதான் காரணம். அங்கு அவருடைய வீட்டில் அடிக்கடி வருமான வரி ரெய்டு நடந்ததும் இதற்கு பின்னால் சிலர் இருப்பதாகவும் அவர் நினைக்கிறார். இதனால் வெறுத்துப் போன அவர், தமிழில் கவனம் செலுத்தி வருகிறார்' என்று தெலுங்கு சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.


 

ஹீரோயின்தான் முதல் சாய்ஸ்: அபிநயா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'நாடோடிகள்', 'ஈசன்' படங்களில் நடித்தவர் அபிநயா. அவர் கூறியதாவது: 'ஈசன்' படத்தை பெரிதும் எதிர்பார்த்தேன். அதில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. தமிழில் சில படங்களில் கதை கேட்டுள்ளேன். நல்ல படம் அமைந்தால், சென்னையில் குடியேறுவேன். அப்பா ஆனந்த் வர்மாவும் சில படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் 'ரிப்போர்ட்டர்' படத்தில் ஹீரோயினாக நடிக்கிறேன். வேறு படம் ஏற்கவில்லை. தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் தங்கையாக, 'தம்மு', நாகார்ஜூனா தங்கையாக, 'தமரகம்' படங்களில் நடிக்கிறேன். தொடர்ந்து தங்கையாக நடிப்பேனா என்று சொல்ல முடியாது. ஹீரோயின்தான் என் முதல் சாய்ஸ்.


 

முல்லை பெரியாறு பிரச்னை : 15ல் தியேட்டர்கள் செயல்படும்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வரும் 15ம் தேதி தியேட்டர்கள் வழக்கம்போல் செயல்படும் என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன் கூறினார். முல்லைப் பெரியாறு பிரச்னை தொடர்பாக, வரும் 15ம் தேதி தியேட்டர்களில் படம் ஓடாது என்று செய்தி வெளியானது. இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன சிறப்பு கூட்டம் சென்னையில் நேற்றுமுன்தினம் நடந்தது. கூட்ட முடிவில் அதன் தலைவர் அபிராமி ராமநாதன், நிருபர்களிடம் கூறும்போது, ''முல்லை பெரியாறு பிரச்னை மட்டுமின்றி வேறு எந்த பிரச்னையாக இருந்தா லும் தமிழக அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது என்றும், முதல்வர் எடுக்கும் அனைத்து நடிவடிக்கைகளுக்கும் ஆதரவாக இருப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது'' என்றார். 15ம் தேதி தியேட்டர்கள் மூடப்படுவது பற்றி கேட்டபோது, "நாங்கள் தியேட்டர்களை மூடுவதாகவோ, உண்ணாவிரதம் இருப்பதாக எந்த அறிவிப்பும் செய்யவில்லை. தியேட்டர்கள் வழக்கம்போல செயல் படும்'' என்றார். பேட்டியின்போது பொதுச் செயலாளர் 'கணபதிராம்' ஜெயகுமார், துணை தலைவர் 'சாந்தி' வேணுகோபால், செயலா ளர் சத்யசீலன் உடன் இருந்தனர்.


 

படம் இயக்குகிறார் ராம்ஜி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஒளிப்பதிவாளர் ராம்ஜி, நிருபர்களிடம் கூறியதாவது: 'வள்ளல்' படத்தில் அறிமுகமாகி 7 இந்தி படங்கள் உட்பட 16 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். அமீருடன், 'மவுனம் பேசியதே', 'ராம்', 'பருத்தி வீரன்' படங்களிலும், செல்வராகவனுடன் 'ஆயிரத்தில் ஒருவன்', 'மயக்கம் என்ன' படங்களிலும் பணியாற்றி இருக்கிறேன். 'பருத்தி வீரன்' படத்துக்கு தேசிய விருது கிடைக்கும் என்றார்கள். பிறகு 'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்கு கிடைக்கும் என்றார்கள். பிறகு ஒரு ஓட்டில் தவறிவிட்டது என்றார்கள். பொதுவாக விருதுகளை எதிர்பார்த்து பணியாற்றுவதில்லை. அடுத்து 'இரண்டாம் உலகம்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறேன். ஒளிப்பதிவாளனுக்கு சவாலான கதைக் களம். 'பருத்தி வீரனு'க்குப் பிறகு அதே மாதிரி கிராமத்து கதைகள் வந்தது. தவிர்த்தேன். ஒளிப்பதிவாளன் இமேஜ் வட்டத்துக்குள் சிக்குவது வளர்ச்சிக்கு நல்லதல்ல. விரைவில் படம் இயக்க இருக்கிறேன்.


 

படம் இயக்குகிறார் ராம்ஜி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஒளிப்பதிவாளர் ராம்ஜி, நிருபர்களிடம் கூறியதாவது: 'வள்ளல்' படத்தில் அறிமுகமாகி 7 இந்தி படங்கள் உட்பட 16 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். அமீருடன், 'மவுனம் பேசியதே', 'ராம்', 'பருத்தி வீரன்' படங்களிலும், செல்வராகவனுடன் 'ஆயிரத்தில் ஒருவன்', 'மயக்கம் என்ன' படங்களிலும் பணியாற்றி இருக்கிறேன். 'பருத்தி வீரன்' படத்துக்கு தேசிய விருது கிடைக்கும் என்றார்கள். பிறகு 'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்கு கிடைக்கும் என்றார்கள். பிறகு ஒரு ஓட்டில் தவறிவிட்டது என்றார்கள். பொதுவாக விருதுகளை எதிர்பார்த்து பணியாற்றுவதில்லை. அடுத்து 'இரண்டாம் உலகம்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறேன். ஒளிப்பதிவாளனுக்கு சவாலான கதைக் களம். 'பருத்தி வீரனு'க்குப் பிறகு அதே மாதிரி கிராமத்து கதைகள் வந்தது. தவிர்த்தேன். ஒளிப்பதிவாளன் இமேஜ் வட்டத்துக்குள் சிக்குவது வளர்ச்சிக்கு நல்லதல்ல. விரைவில் படம் இயக்க இருக்கிறேன்.


 

வன்முறைக்கு எதிரான படம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளர் அசோகன், க்யூ சினிமாஸ் சார்பில் தயாரித்து இயக்கும் படம் 'கம்பன் கழகம்'. அன்பு டென்னிஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஷாம், பிரசன், பிரவீன் என்ற மூவர் இசை அமைக்கிறார்கள். புதுமுகங்கள் பிரபு, ராய்சென், நவீன், ஜெயப்பிரகாஷ், கஞ்சா கருப்பு உட்பட பலர் நடிக்கிறார்கள். பாண்டிச்சேரி பின்னணியில் எடுக்கப்படும் இப்படம் பற்றி அசோகன் கூறியதாவது:
இந்தியாவுக்கு அகிம்சை நாடு என்ற பெயர் இருக்கிறது. ஆனால் இன்று அந்த அகிம்சையை விட்டுவிட்டு வன்முறையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். நமது கலாசாரம், பண்பாடு எல்லாவற்றையும் விட்டுவிட்டு இப்படி போவதற்கு என்ன காரணம்? எதற்கும் வன்முறை தீர்வாகாது என்ற கருத்தை மையப்படுத்தி படம் உருவாகிறது. படத்துக்கு கவித்துவமான தலைப்பு தேவைப்பட்டதால்,'கம்பன் கழகம்' என்ற தலைப்பை வைத்தோம். கதைக்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளது. படம் முடிந்துவிட்டது. ஒரு பாடலை மலேசியாவில் படம் பிடித்துள்ளோம். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணி நடந்து வருகிறது. இம்மாத இறுதி அல்லது ஜனவரியில்  ரிலீஸ் ஆகும். இவ்வாறு அசோகன் கூறினார்.


 

வில்லன் ஆனது ஏன்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வில்லன் வேடத்தில் நடிக்கும் விவேக் கூறியதாவது: தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகும் 'வழிப்போக்கன்' படத்தில் வில்லனாக நடிக்கிறேன். இதை நடிகர் மிதுன் தேஜஸ்வி தயாரிக்கிறார். படத்தின் ஹீரோவும் அவர்தான். திடீரென்று வில்லனாக நடிப்பது ஏன் என்கிறார்கள். என் கேரக்டர் வித்தியாசமாகவும், இதுவரை நான் நடிக்காத கோணத்திலும் அமைந்திருந்ததால் ஏற்றேன். பெங்களூரில் அடுத்த வாரம் ஷூட்டிங் தொடங்குகிறது. கன்னடத்தில் வசனம் பேச வேண்டியிருப்பதால், அதற்கான பயிற்சி பெறுகிறேன்.


 

அமலாவை இமிடேட் செய்யவில்லை:பாமா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழில் ஹிட்டான 'மைனா', கன்னடத்தில் 'ஷைலு' வாக ரீமேக் ஆகியுள்ளது. நேற்று ரிலீசாகியுள்ள இந்தப் படம் பற்றி பாமா கூறியதாவது: அமலா பால் ஏற்ற வேடத்தில் நடித்துள்ளேன். தமிழில் 'மைனா'வை பார்த்ததும் அமலாவின் கேரக்டர் மீது ஈடுபாடு ஏற்பட்டது. கன்னடத்தில் அந்த வாய்ப்பு வந்ததும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். இதில் அமலாவின் நடிப்பை இமிடேட் செய்யவில்லை. எனது ஸ்டைலில் நடித்துள்ளேன். ஹீரோவாக நடித்த கணேஷும் சிறப்பாக நடித்துள்ளார். காடுகளில் படப்பிடிப்பு நடந்தபோது மிகவும் கஷ்டப்பட்டோம். படமாகப் பார்க்கும்போது அந்த கஷ்டம் தெரியவில்லை. எனது உடல்வாகிற்கு கிளாமர் ஒத்துவராது என்பதால் அப்படி நான் நடிக்க மாட்டேன்.


 

`டேம்-999' படத்திற்கு தமிழகத்தில் மேலும் 2 வாரம் தடை


முல்லைப் பெரியாறு அணையை மையமாக வைத்து கேரளத்துக்கு ஆதரவாத டேம் 999 என்ற பெயரில் கேரளாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரியான சோஹன் ராய் என்பவர் எடுத்த படத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து படத்தைத் திரையிட மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்தனர். மேலும் தமிழக அரசும் படத்துக்கு தடை விதித்தது.

இந் நிலையில் படத்தின் தலைப்பு முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை பற்றி மறைமுகமாக எடுத்துக் கூறி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி, தமிழக- கேரள மக்களிடையே வேற்றுமையை உருவாக்கவும், தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாகவும் இந்தப் படம் அமைந்துள்ளதால் 25-11-2011 முதல் இந்தப் படத்தைத் திரையிட தடை விதிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து சோஹன் ராய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந் நிலையில் தமிழக அரசு விதித்த தடை கடந்த 7ம் தேதியுடன் காலாவதியானதால், தடையை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தத் தடை 8ம் தேதி முதல் 2 வாரங்களுக்கு அமலில் இருக்கும்.