சென்னை: நடிகர் பிரபுதேவா மற்றும் அவரது மனைவி ரமலத் ஆகியோர் பரஸ்பரம் விவாகரத்து கோரி தாக்கல் செய்துள்ள வழக்கில் ஜூலை 7ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமாவில் டான்ஸ் ஆடும் பெண்ணாக இருந்து வந்தவர் ரமலத் என்கிற லதா. இவரை தனது குடும்பத்தினரின் கடும் எதிர்ப்புகளை மீறி கடந்த 1995ம் ஆண்டு ரகசியமாக காதல் திருமணம் செய்து கொண்டார் பிரபுதேவா. இந்தத் திருமணத்தை அவர் வெகு காலம் வரை பகிரங்கப்படுத்தவே இல்லை. ரகசிய மனைவியாகவே ரமலத்தை வைத்திருந்தார்.
இந்தத் தம்பதிக்கு மொத்தம் 3 குழந்தைகள். அதில் ஒரு பிள்ளை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டது. இந்த சோகத்தில் இருந்தபோதுதான் பிரபுதேவா- ரமலத் வாழ்க்கையில் நயனதாரா ரூபத்தில் சூறாவளி புகுந்தது.
நயனதாரா உள்ளே வந்ததும், ரமலத்திடமிருந்து விலக ஆரம்பித்தார் பிரபுதேவா. பிரபுதேவா, நயனதாரா நட்பு கள்ளக் காதலாக மாறியது. இருவரும் ஜோடியாக சுற்றி வர ஆரம்பித்தனர். கல்யாணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர்.
இதை அறிந்த ரமலத் பொங்கினார். தனது கணவரும், நடிகை நயனதாராவும், நடிகர்கள் என்ற போர்வையில் தம்பதிகள் போல வாழ்ந்து வருகின்றனர். பொது இடங்களில் சுற்றுகின்றனர். இதை தடுக்க வேண்டும். தனது கணவரை நயனதாராவிடமிருந்து மீட்டு தன்னிடம் சேர்க்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து ரஜினி தொடங்கி பல தரப்பினரும் பஞ்சாயத்துப் பேசிப் பார்த்தனர். பிரபுதேவா தனது நிலையிலிருந்து இறங்கவில்லை. நயனதாராவும் விலகிச் செல்வதாகத் தெரியவில்லை.
இந்த நிலையில் பெருமளவிலான சொத்துக்களை தனது மனைவி மற்றும் பிள்ளைகள் பெயரில் மாற்றித் தர பிரபுதேவா முன்வந்தார். இதற்கு ரமலத் சம்மதித்தார். இதையடுத்து 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ந் தேதி பரஸ்பரம் பிரிந்து செல்வதற்கான மனுவை சென்னை முதன்மை குடும்பநல கோர்ட்டில் இருவரும் தாக்கல் செய்தனர்.
அவர்களுக்கு சட்டப்படி 6 மாத கால அவகாசம் தரப்பட்டது. ஜூன் 30ம் தேதிக்கு வழக்கு தள்ளி வைக்கப்பட்டது. அன்று இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
ஆனால் 30ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது ரமலத்தும், பிரபுதேவாவும் வரவில்லை. பிரபுதேவா எழுதி வைப்பதாக சொன்ன சொத்துக்களை சரிவர எழுதித் தராமல் இருந்ததால்தான் ரமலத் வரவில்லை என்று கூறப்பட்டது.
இதையடுத்து ஜூலை 10ம் தேதிக்கு நீதிபதி ராஜா சொக்கலிங்கம் வழக்கை தள்ளி வைத்தார்.
இந்த நிலையில் நேற்று திடீரென குடும்ப கோர்ட்டுக்கு வந்து மனு தாக்கல் செய்தார் பிரபுதேவா. அதில் வெளிநாட்டில் படப்பிடிப்புக்குப் போக வேண்டியிருப்பதால் உடனடியாக வழக்கை விசாரணைக்கு எடுக்குமாறு அதில் கோரியிருந்தார். ஆனால் நீதிபதி ராஜா சொக்கலிங்கம் விடுமுறையில் இருந்ததால் நீதிபதி பாண்டியன் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது.
பிரபுதேவா வந்த சிறிது நேரத்தில் ரமலத்தும் கோர்ட்டுக்கு வந்தார். இருவரும் நீதிபதி பாண்டியன் முன்பு ஆஜரானார்கள்.
விவாகரத்து மனுவில் கூறப்பட்ட விவரங்களையும், பிரபுதேவா தனது குழந்தைகளின் பராமரிப்பு செலவுக்கு உதவும் வகையில் மனைவியிடம் ஒப்படைப்பதாக உறுதி அளித்திருந்த 3 வீடுகள் மற்றும் ரூ.10 லட்சம் டெபாசிட் தொடர்பான ஆவணங்களை நீதிபதி பாண்டியன் சரிபார்த்தார்.
பின்னர் பிரபுதேவாவும், ரமலத்தும் வாக்குமூலம் அளித்தனர். இருவரும் ஒப்புதல் கையெழுத்திட்டனர். அதன் பின்னர் ஜூலை 7 தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து ரமலத்தும், பிரபுதேவாவும் தனித் தனியாக வெளியே வந்து கார்களில் ஏறிக் கிளம்பிச் சென்றனர்.
முன்னதாக கோர்ட்டுக்குள் பிரபுதேவாவும், ரமலத்தும் நிரந்தரமாக பிரியரப் போகிறோமே என்ற வருத்தமோ, கவலையோ கொஞ்சம் கூட இல்லாமல் படு கேஷுவலாக பேசிக் கொண்டிருந்தனராம். இருவரும் சிரித்துப் பேசியபடி இருந்ததைப் பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டனராம். கோர்ட்டிலிருந்து கிளம்ப லேட் ஆகிறதே என்ற கவலை மட்டுமே அவர்களிடம் இருந்ததே தவிர வாழ்க்கையில் நிரந்தரமாக பிரியப் போகிறோமே என்ற கவலை சற்றும் இல்லை என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
சினிமாவில் டான்ஸ் ஆடும் பெண்ணாக இருந்து வந்தவர் ரமலத் என்கிற லதா. இவரை தனது குடும்பத்தினரின் கடும் எதிர்ப்புகளை மீறி கடந்த 1995ம் ஆண்டு ரகசியமாக காதல் திருமணம் செய்து கொண்டார் பிரபுதேவா. இந்தத் திருமணத்தை அவர் வெகு காலம் வரை பகிரங்கப்படுத்தவே இல்லை. ரகசிய மனைவியாகவே ரமலத்தை வைத்திருந்தார்.
இந்தத் தம்பதிக்கு மொத்தம் 3 குழந்தைகள். அதில் ஒரு பிள்ளை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டது. இந்த சோகத்தில் இருந்தபோதுதான் பிரபுதேவா- ரமலத் வாழ்க்கையில் நயனதாரா ரூபத்தில் சூறாவளி புகுந்தது.
நயனதாரா உள்ளே வந்ததும், ரமலத்திடமிருந்து விலக ஆரம்பித்தார் பிரபுதேவா. பிரபுதேவா, நயனதாரா நட்பு கள்ளக் காதலாக மாறியது. இருவரும் ஜோடியாக சுற்றி வர ஆரம்பித்தனர். கல்யாணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர்.
இதை அறிந்த ரமலத் பொங்கினார். தனது கணவரும், நடிகை நயனதாராவும், நடிகர்கள் என்ற போர்வையில் தம்பதிகள் போல வாழ்ந்து வருகின்றனர். பொது இடங்களில் சுற்றுகின்றனர். இதை தடுக்க வேண்டும். தனது கணவரை நயனதாராவிடமிருந்து மீட்டு தன்னிடம் சேர்க்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து ரஜினி தொடங்கி பல தரப்பினரும் பஞ்சாயத்துப் பேசிப் பார்த்தனர். பிரபுதேவா தனது நிலையிலிருந்து இறங்கவில்லை. நயனதாராவும் விலகிச் செல்வதாகத் தெரியவில்லை.
இந்த நிலையில் பெருமளவிலான சொத்துக்களை தனது மனைவி மற்றும் பிள்ளைகள் பெயரில் மாற்றித் தர பிரபுதேவா முன்வந்தார். இதற்கு ரமலத் சம்மதித்தார். இதையடுத்து 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ந் தேதி பரஸ்பரம் பிரிந்து செல்வதற்கான மனுவை சென்னை முதன்மை குடும்பநல கோர்ட்டில் இருவரும் தாக்கல் செய்தனர்.
அவர்களுக்கு சட்டப்படி 6 மாத கால அவகாசம் தரப்பட்டது. ஜூன் 30ம் தேதிக்கு வழக்கு தள்ளி வைக்கப்பட்டது. அன்று இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
ஆனால் 30ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது ரமலத்தும், பிரபுதேவாவும் வரவில்லை. பிரபுதேவா எழுதி வைப்பதாக சொன்ன சொத்துக்களை சரிவர எழுதித் தராமல் இருந்ததால்தான் ரமலத் வரவில்லை என்று கூறப்பட்டது.
இதையடுத்து ஜூலை 10ம் தேதிக்கு நீதிபதி ராஜா சொக்கலிங்கம் வழக்கை தள்ளி வைத்தார்.
இந்த நிலையில் நேற்று திடீரென குடும்ப கோர்ட்டுக்கு வந்து மனு தாக்கல் செய்தார் பிரபுதேவா. அதில் வெளிநாட்டில் படப்பிடிப்புக்குப் போக வேண்டியிருப்பதால் உடனடியாக வழக்கை விசாரணைக்கு எடுக்குமாறு அதில் கோரியிருந்தார். ஆனால் நீதிபதி ராஜா சொக்கலிங்கம் விடுமுறையில் இருந்ததால் நீதிபதி பாண்டியன் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது.
பிரபுதேவா வந்த சிறிது நேரத்தில் ரமலத்தும் கோர்ட்டுக்கு வந்தார். இருவரும் நீதிபதி பாண்டியன் முன்பு ஆஜரானார்கள்.
விவாகரத்து மனுவில் கூறப்பட்ட விவரங்களையும், பிரபுதேவா தனது குழந்தைகளின் பராமரிப்பு செலவுக்கு உதவும் வகையில் மனைவியிடம் ஒப்படைப்பதாக உறுதி அளித்திருந்த 3 வீடுகள் மற்றும் ரூ.10 லட்சம் டெபாசிட் தொடர்பான ஆவணங்களை நீதிபதி பாண்டியன் சரிபார்த்தார்.
பின்னர் பிரபுதேவாவும், ரமலத்தும் வாக்குமூலம் அளித்தனர். இருவரும் ஒப்புதல் கையெழுத்திட்டனர். அதன் பின்னர் ஜூலை 7 தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து ரமலத்தும், பிரபுதேவாவும் தனித் தனியாக வெளியே வந்து கார்களில் ஏறிக் கிளம்பிச் சென்றனர்.
முன்னதாக கோர்ட்டுக்குள் பிரபுதேவாவும், ரமலத்தும் நிரந்தரமாக பிரியரப் போகிறோமே என்ற வருத்தமோ, கவலையோ கொஞ்சம் கூட இல்லாமல் படு கேஷுவலாக பேசிக் கொண்டிருந்தனராம். இருவரும் சிரித்துப் பேசியபடி இருந்ததைப் பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டனராம். கோர்ட்டிலிருந்து கிளம்ப லேட் ஆகிறதே என்ற கவலை மட்டுமே அவர்களிடம் இருந்ததே தவிர வாழ்க்கையில் நிரந்தரமாக பிரியப் போகிறோமே என்ற கவலை சற்றும் இல்லை என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.