மஞ்சுளாவுக்கு திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி- நாளை இறுதிச் சடங்கு!

சென்னை: மறைந்த நடிகை மஞ்சுளாவுக்கு திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

59 வயது மஞ்சுளா தனது ஆலப்பாக்கம் பங்களாவில் கட்டிலில் விழுந்து படுகாயமடைந்ததால், இன்று காலை மருத்துவமனையில் மரணமடைந்தார்.

கலைமாமணி விருது பெற்ற மஞ்சுளா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.

மஞ்சுளாவுக்கு திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி- நாளை இறுதிச் சடங்கு!

அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகமே திரண்டு அஞ்சலி செலுத்தியது. தெலுங்கு மற்றும் கன்னட படவுலகினரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மஞ்சுளாவின் மகள்கள் வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி மற்றும் அவர்களின் கணவர்கள், மஞ்சுளாவின் மகன் முறையாகும் நடிகர் அருண்குமார், அவரது சகோதரி கீதா, பேரக்குழந்தைகள் உள்ளிட்டோர் கண்ணீர்விட்டு கதறினர்.

இயக்குநரும் மஞ்சுளாவின் மருமகனுமான ஹரி அஞ்சலி செலுத்தினார்.

நேற்று மருத்துவமனைக்கே நேரில் போய் பார்த்து நலம் விசாரித்துள்ளார் லதா ரஜினி. இன்று ஐஸ்வர்யா தனுஷ் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகைகள் குஷ்பு, ராதிகா, இயக்குநர் பி வாசு, நடிகர்கள் செந்தில் மற்றும் நடிகைகள் பலரும் வந்து மஞ்சுளாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மஞ்சுளாவின் இறுதிச் சடங்கு நாளை காலை ஆலப்பாக்கத்தில் நடக்கிறது. வீட்டிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு, போரூர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

 

சிம்புவுடன் காதல்... முன்பு சொன்னதை மறந்துடுங்க ப்ளீஸ்!- ஹன்சிகா

சிம்புவுடன் காதல்... முன்பு சொன்னதை மறந்துடுங்க ப்ளீஸ்!- ஹன்சிகா

பெற்றோர் சம்மதத்துடன் அடுத்த ஆண்டே ஹகன்சிகாவுடன் திருமணம் என்று சிம்பு கூறிவரும் நிலையில், நிறைய சாதித்துவிட்டு நிதானமாக சிம்புவை திருமணம் செய்யப் போவதாக ஹன்சிகா கூறியுள்ளார்.

சிலம்பரசனுடனான காதல், அதுகுறித்து சிலம்பரசன் அளித்துள்ள பேட்டி குறித்து ஹன்சிகாவிடம் கேட்டபோது, "நானும், சிலம்பரசனும் காதலிப்பது உண்மைதான். நாங்கள் இருவரும் நன்கு புரிந்து கொண்டுதான் காதலிக்கிறோம்.

நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்திருப்பதும் உண்மைதான். ஆனால், எங்கள் திருமணம் இப்போதைக்கு இல்லை.

சினிமாவில் நான் சாதிக்க வேண்டியது இன்னும் இருக்கிறது. அதையெல்லாம் சாதித்து முடித்து விட்டு, சிலம்பரசனை திருமணம் செய்து கொள்வேன்.ய

சில மாதங்களாகவே நாங்கள் காதலித்து வந்தாலும் சில நிர்ப்பந்தங்கள் காரணமாகவே காதலை மறைத்து வந்தேன். இந்த விஷயத்தில் நான் முன்பு சொன்னதையெல்லாம் மறந்துவிடுங்கள். ப்ளீஸ்,'' என்றார்.

ஹைதராபாத் ஏர்போர்ட்டில் இந்த காதல் விவகாரம் குறித்து நான்கு தினங்களுக்கு முன் கேட்டபோது, "சிம்புவுடன் காதலும் இல்லை, கல்யாணமும் இல்லை. இதெல்லாம் பத்திரிகைகளின் வேண்டாத வேலை. அவர் எனக்கு நண்பர்தான். ஏன்தான் இப்படியெல்லாம் எழுதி என்னையும் என்னை வைத்து படமெடுப்போரையும் சங்கடத்துக்குள்ளாக்குகிறீர்களோ," என்று கோபத்துடன் கேட்டார்.

அடுத்த நாளே காதலை உறுதிப்படுத்தினார், அதுவும் எழுத்துப்பூர்வமாக.

அம்மணி, கொஞ்ச நாள் கழித்து இதே வார்த்தைகளை பிரிவுக்கும் பயன்படுத்தாமல் இருப்பீராக!!

 

பழம்பெரும் நடிகர் ‘எம்எல்ஏ’ தங்கராஜ் மாரடைப்பால் மரணம்

பழம்பெரும் நடிகர் ‘எம்எல்ஏ’ தங்கராஜ் மாரடைப்பால் மரணம்

சென்னை: பழம்பெரும் நடிகர் எம்.எல்.ஏ. தங்கராஜ் நேற்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 80.

சினிமாக்களில் எம்.எல்.ஏ வேடமா? கூப்பிடு தங்கராஜை என்று கூறும் அளவிற்கு பிரபலமானவர் தங்கராஜ். அதேபோல் சீரியல்களிலும் எம்.எல்.ஏ வேடம்தான் அவருக்கு மிகபொருத்தமாக அமைந்து வந்தது. இதற்கு காரணம் அவர் எம்.ஜி. ஆருடன் அவர் நடித்த ‘பல்லாண்டு வாழ்க' படத்தில், எம்.எல்.ஏ வேடம் ஏற்றிருந்தார். இதனால் அவரை எம்.எல்.ஏ. தங்கராஜ் என்று பாசமாக கூப்பிட்டனர்.

கும்பகோணத்தில் பிறந்த தங்கராஜ், முதலில் மேடை நாடகங்களில் நடித்தார். பிறகு ‘மாங்கல்யம்' என்ற படத்தில் அறிமுகமானார்.

தொடர்ந்து ‘ராஜராஜசோழன்', ‘திசை மாறிய பறவைகள்', ‘கருடா சவுக்கியமா?', ‘சுப்ரபாதம்' உட்பட 300க்கு மேற்பட்ட படங்களில் நடித்தார். அஜீத் நடிப்பில் ரிலீசான ‘ராஜா', தங்கராஜ் நடித்த கடைசி படமாகும்.

மேலும், ஏராளமான டி.வி தொடர்களிலும் அவர் நடித்துள்ளார். அவருக்கு சாந்தா என்ற மனைவியும், சுமதி என்ற மகளும் உள்ளனர். சுமதி சினிமாவிலும், டி.வி தொடரிலும் நடிக்கிறார்.

சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த தங்கராஜ், நேற்று மதியம் 1 மணியளவில் கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக சிரமப்பட்டார். இதையடுத்து மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். நந்தனம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. தங்கராஜின் உடல் இன்று மதியம் கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.

 

புரந்தரதாஸர் ரூபத்தில் வந்த ரஜினி..!

பெங்களூர்: கர்நாடக இசையின் பிதா மகனாகக் கருதப்படுபவர் புரந்தரதாஸர். கன்னடத்திலும் சமஸ்கிருதத்திலும் கடவுள் விஷ்ணுவைப் போற்றி இவர் இயற்றிய பாடல்கள் காலத்தால் அழியாத காப்பியங்கள்.

இவரது பெயரில் புரந்தரா சர்வதேச அறக்கட்டளை பெங்களூரில் இயங்கி வருகிறது. இதன் சார்பில் நடிகர் ரஜினிக்கு பாராட்டு விழா சமீபத்தில் நடந்தது.

புரந்தரதாஸர் ரூபத்தில் வந்த ரஜினி..!

அதில் ரஜினி பங்கேற்க முடியாததால் அவரது நெருங்கிய நண்பரான ராஜ் பகதூர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் புரந்தரதாஸர் வடிவிலான ரஜினியின் ஓவியம் பரிசாக வழங்கப்பட்டது.

அதில் பேசிய ராஜ் பகதூர், ஒரு விஷயம், நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ தெரியாது. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.

இந்த அறக்கட்டளையின் செயலாளர் ஸ்வர்ணா மோகன் மிகத் தீவிரமான புரந்தரதாஸர் பக்தர். அவரது கனவில் புரந்தரதாஸர் பலமுறை தோன்றியுள்ளார். அதிலும் ஒருமுறை ரஜினிகாந்த் ரூபத்தில் புரந்தரதாஸர் தோன்றியுள்ளார்.

ரஜினி கனவில் வந்தது கூட பெரிதல்ல. அவர் சர்ட்-பேண்ட் போட்டு தோன்றியிருக்கலாமே.. ஏன் புரந்தரதாஸர் ரூபத்தில் வர வேண்டும்?

புரந்தரதாஸர் ரூபத்தில் வந்த ரஜினி..!

ரஜினிக்கும் புரந்தரதாஸருக்கும் என்ன சம்பந்தம்..?. இருக்கிறது, இருவருக்கும் சம்பந்தம் இருக்கிறது. ரஜினிகாந்த் ராகவேந்திரரின் பக்தர், புரந்தரதாஸரின் பக்தர். உண்மையான பக்தர். ரஜினி ஒரு சாதாரண மனிதன் அல்ல, நடிகன் மட்டுமல்ல. மகா மனிதன்.

புரந்தரதாஸர் ரூபத்தில் ரஜினி வந்ததைக் கண்டு ஆச்சரியமும் பரவசமும் அடைந்த ஸ்வர்ணா மோகன் என்னைத் தொடர்பு கொண்டு இதை விளக்கியதோடு, ரஜினியை ஏதாவது ஒரு படத்தில், ஒரு காட்சியாலாவது புரந்தரதாஸர் வேடத்தில் நடிக்கச் சொல்லுங்கள் என்றார்.

புரந்தரதாஸர் ரூபத்தில் வந்த ரஜினி..!

நானும் இதை ரஜினியிடம் கூறினேன். இதுவரை அது போன்ற வேடத்தில் தோன்றுவதற்கான வாய்ப்பு வரவில்லை. அந்த வாய்ப்பு நிச்சயம் வரும். அதற்கான ஆசிர்வாதத்தை புரந்தரதாஸர் நிச்சயம் ரஜினிக்கு வழங்குவார் என்றார் ராஜ் பகதூர்.

தனக்கு வந்த கனவின் காரணமாக ரஜினியின் உருவத்தை ஒத்த புரந்தரதாஸர் ஓவியத்தை வரைந்து அதை ரஜினிக்கே பரிசளிக்க முடிவு செய்து இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார் ஸ்வர்ணா மோகன்.

இந்த ஓவியம் ராஜ் பகதூரிடம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஒன் இந்தியா சார்பில் மனித வள மேம்பாட்டு அதிகாரி கே.மகேஷ் பங்கேற்றார்.

 

கட்டிலில் இருந்து கீழே விழுந்து படுகாயம்: நடிகை மஞ்சுளா மருத்துவமனையில் அனுமதி

கட்டிலில் இருந்து கீழே விழுந்து படுகாயம்: நடிகை மஞ்சுளா மருத்துவமனையில் அனுமதி

சென்னை: நடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா கட்டிலில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகை மஞ்சுளா தனது கணவரும், நடிகருமான விஜயகுமாருடன் சென்னையை அடுத்து உள்ள ஆலப்பாக்கத்தில் வசித்து வருகிறார். அவர் படுக்கை அறையில் இருந்த கட்டிலில் இருந்து திடீர் என்று கீழே விழுந்தார். கீழே விழுகையில் கட்டில் கால் அவறுடைய வயிற்றில் குத்தியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து விஜயகுமாரின் மகனும், நடிகருமான அருண் விஜய் கூறுகையில்,

மஞ்சுளா சித்திக்கு வயிற்றில் கட்டில் கால் குத்தியதில் ரத்தம் உறைந்திருக்கிறது. அதை அகற்ற சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவரது மற்ற உறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் என்றார்.