'கூப்பிடறதா வேணாமா...!' - குழப்பத்தில் வடிவேலு

Vadivelu Big Confusion

மதுரை: வடிவேலு மகளுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. சந்தோஷமான விஷயம்தானே என்கிறீர்களா.. நியாயமாக வடிவேலு சந்தோஷப்படும் விஷயம்தான்.

ஆனால் அவரது அரசியல் பிரவேசம் எப்படி சினிமாவுக்கு முட்டுக்கட்டையாக அமைந்ததோ... அதேபோல இப்போது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவருக்கு மன நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

வடிவேலுவின் மூத்த மகள் திருமணம் ஏப்ரல் 7-ந்தேதி மதுரையில் நடக்கவிருக்கிறது.

திருமணத்துக்கு பத்திரிகைக் கொடுப்பதில்தான் வைகைப் புயலுக்கு ஒரே குழப்பம். சினிமாக்காரர்களுக்கு மட்டும் கொடுத்துவிடலாமா... அல்லது அரசியல்வாதிகளுக்கும் கொடுக்கலாமா...

அப்படி கொடுத்தால் திமுகவுக்கு மட்டும் கொடுப்பதா... ஆளும் கட்சிக்காரர்களுக்கும் கொடுப்பதா?

திமுகவுக்கு மட்டும் என்றால்... உட்கட்சி பூசல் மிகுந்திருக்கும் இந்த நேரத்தில் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் தருவதா, கட்சிக்கு அழைத்துப் போன அழகிரிக்கு முக்கியத்துவம் தருவதா...

சினிமாவில் மறுபிரவேசத்தை ஆரம்பிக்கிற இந்த நேரத்தில் இதெல்லாம் தேவையா கைப்புள்ள என மனசாட்சி கேள்வி எழுப்ப...

ஸ்ஸப்பா... இப்பவே கண்ணக்கட்டுதே என்று டென்சனில் இருக்கிறாராம் வடிவேலு!!

 

கல்யாணம் பண்ணிக்குவேன்... ஆனாலும் நடிப்பேன்! - ராதிகா

Radhika Denies Her Plan Quit Cinema   

திருமணத்துக்குப் பிறகு நடிக்கமாட்டேன் என்று வரும் செய்திகளில் உண்மையில்லை. திருமணத்துக்குப் பிறகும் நடிக்கப் போகிறேன், என்கிறார் நடிகை ராதிகா ஆப்தே.

தோனி படத்துக்குப் பிறகு வெற்றிச் செல்வன் படத்தில் நடித்து வருகிறார் ராதிகா. அஜ்மல் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ராதிகா ஆப்தேவுக்கும் லண்டனை சேர்ந்த இசையமைப்பாளர் பெனடிக்குக்கும் விரைவில் காதல் திருமணம் நடக்கப் போவதாக செய்திகள் வந்தன. அதை அவரும் ஒப்புக் கொண்டார்.

இந்த நிலையில் சினிமாவை விட்டே ராதிகா விலகப் போவதாக வந்த செய்திகளுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராதிகா ஆப்தே கூறுகையில், "எனக்கு விரைவில் திருமணம் ஆகும்... அல்லது தள்ளியும் போகலாம். ஆனால் அது என் சொந்த விஷயம்.

ஆனால் திருமணத்துக்குப் பிறகு நான் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று வரும் செய்திகளில் உண்மையில்லை. நிறைய படங்களில் நடிக்கவேண்டும் என்பதே என் ஆசை.

குறிப்பாக தமிழில் நிறைய படங்கள் செய்ய வேண்டும். வெற்றிச் செல்வன் வந்த பிறகு அந்த ஆசை நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றார்.

 

குஷ்புவை எடுத்துக்காட்டாக கூறி கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு பெற்ற சோனா

Chennai Hc Exempts Sona From Appearing Before Court

சென்னை: ஆண்களை தரக்குறைவாக பேசியதாக நடிகை சோனா மீது தொடரப்பட்ட வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆண்களை ஒரு டிஸ்யூ பேப்பர் போல செக்ஸுக்காக பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிடுவேன் என்று கவர்ச்சி நடிகை சோனா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். சோனாவின் பேச்சு ஆண்களை இழிவுபடுத்துவது போன்று உள்ளது என்று அவர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி எழும்பூர் 13வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆண்கள் பாதுகாப்பு சங்கம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சோனாவுக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்குமாறு சோனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு நீதிபதி என். கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. சோனா தரப்பில் வழக்கறிஞர் தங்கசிவன் ஆஜாராகி வாதாடினார். அப்போது அவர் கூறுகையில், நடிகை குஷ்பு அளித்த பேட்டி தொடர்பாக பல்வேறு இடங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அந்த வழக்குகள் தொடர்பாக நீதிமன்றங்களில் ஆஜராவதில் இருந்து அவருக்கு விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி சோனாவுக்கும் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து நீதிபதி சோனாவுக்கு நீதிமன்றத்தில் ஆஜரவாதில் இருந்து விலக்கு அளித்தார்.

 

சுந்தர் சியிடம் நான் கதை கேட்கவே இல்லையே! - நயன்தாரா

Nayan Denies Reports On Sundar C Movie   

சுந்தர் சி இயக்கும் பெரிய பட்ஜெட் படம் ஒன்றில் நடிப்பதாக வந்த செய்திகளை மறுத்துள்ளார் நடிகை நயன்தாரா.

காதல் சர்ச்சைகள், அதிகரிக்கும் வயசு என பல விஷயங்களிருந்தாலும், இன்றைய இயக்குநர்கள் மத்தியில் நயன்தாராவை நடிக்க வைக்க ஏக போட்டி.

இப்போதுதான் நடிக்க வரும் இளம் ஹீரோக்கள் கூட நயன்தாரா வேண்டும் என்கிறார்களாம்.

தமிழில் இப்போதும் நம்பர் ஒன்னாகத் திகழும் நயன்தாராவை தனது அரண்மனை படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளதாக சுந்தர் சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அவர் நயன்தாராவுக்கு கதை சொல்லிவிட்டதாகவும் கூறினார்கள்.

ஆனால் இதையெல்லாமே நயன்தாரா மறுத்துவிட்டர். தான் சுந்தர் சியை சந்திக்கவே இல்லை என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "சுந்தர்.சியிடம் நான் கதை கேட்கவில்லை. அவர் படத்தில் நடிக்கப் போவதாக வெளியான செய்திகளிலும் உண்மை இல்லை.

தமிழ் - தெலுங்கில் ஏற்கெனவே நிறைய படங்களை வைத்திருப்பதால், வேறு படங்களில் நடிக்கும் திட்டம் இல்லை.

இப்போதைக்கு தமிழில் நான்கு படங்களை ஒப்புக் கொண்டிருக்கிறேன்," என்றார்.

 

கரப்பான் பூச்சி, ஈ, கொசுவைத்தான் இனி வில்லனாக்க வேண்டும் போலிருக்கு! - கேஎஸ் ரவிக்குமார்

Ks Ravikumar S Confusion Over Naming Villains

வில்லன்களுக்கு எந்தப் பெயரை வைத்தாலும் ஏதாவது ஒரு மதத்தினர் சண்டைக்கு வருகிறார்கள். கரப்பான் பூச்சி, ஈ, கொசுவைத்தான் இனி வில்லனாக்க வேண்டும் போலிருக்கிறது, என கூறியுள்ளார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.

நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வக்குமார் 'ஒன்பதுல குரு' என்ற படத்தின் மூலம் இயக்குனராகியுள்ளார். இந்த படத்தில் வினய், லட்சுமிராய், அரவிந்த் ஆகாஷ், சத்யன், பிரேம்ஜி, சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தேவி திரையரங்கில் நேற்று நடந்த இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், "அப்துல்கலாம் கனவு காணுங்கள் என்று சொல்வதுபோல பி.டி.செல்வக்குமார் கணவு கண்டு இப்போது இயக்குனராகி விட்டார். என்னுடைய பல படங்களுக்கு அவர் மக்கள் தொடர்பாளராக இருந்தார். நிறைய பத்திரிகைகளும் நடத்தி வருகிறார். தற்போது இயக்குனராக உயர்ந்துள்ளார்.

இன்றைய தினம் படங்கள் எடுப்பது கஷ்டமான விஷயமாக இருக்கிறது. கதையில் கதாநாயகன் இருந்தால் வில்லனும் இருக்க வேண்டும்.

ஆனால் வில்லன் எந்த சாதியை சார்ந்தவராகவும் இருக்ககூடாது. மதத்தை சார்ந்தவராகவும் இருக்ககூடாது. வக்கீலாக, டாக்டராக, போலீசாகவும் இருக்க கூடாது. அப்படி இருந்தால் சம்பந்தப்பட்ட அமைப்புகளும், சங்கங்களும் எதிர்த்து புகார் செய்கின்றன.

அப்படியென்றால் வில்லன்களாக யாரை வைத்துதான் படங்கள் எடுப்பது. இந்திரா நகரில் வில்லன் வசிப்பதுபோல் காட்டினாலும் அந்த தெருக்காரர்கள் எதிர்க்கிறார்கள். மிருகங்களை வில்லன்களாக காட்டினாலும் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு குறுக்கே வருகிறது. கரப்பான் பூச்சி, கொசு, ஈ போன்றவற்றைதான் வில்லன் கேரக்டர்களுக்கு தேர்வு செய்யவேண்டும்போல இருக்கிறது. இப்படிபட்ட சங்கடங்களையெல்லாம் மீறி வெற்றிபெற வேண்டிய நிலைமை இயக்குனர்களுக்கு இருக்கிறது," என்றார்.

 

ஜெயா டிவியில் உதயமாகிறார் பெப்ஸி உமா!

Pepsi Uma Back With Jaya Tv

பெப்ஸி உங்கள் சாய்ஸ் வழங்கிய உமா ஜெயா டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக மறுபிரவேசம் செய்துள்ளார்

சன் டிவியில் பிரபலமான நிகழ்ச்சி பெப்ஸி உங்கள் சாய்ஸ். 1993 சன் டிவி தொடங்கியதில் இருந்து 2008ல் கலைஞர் தொலைக்காட்சி தொடங்குவது வரைக்கும் ஒரேநிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக இருந்து சாதனை படைத்தவர் தொகுப்பாளினி உமா.

இன்றைக்கு நேரடியாக தொகுப்பாளர்களுடன் உரையாடி விரும்பிய பாடலை கேட்பது போல உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியில் உமா உடன் பேசி ( கடலை போட்டு விரும்பிய பாடலை கேட்பார்கள்)

சன் டிவியில் உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை பெப்ஸி நிறுவனம் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு ஸ்பான்சர் செய்தது. இதனாலேயே நிகழ்ச்சித் தொகுப்பாளினி உமாவின் முன் பெப்ஸி ஒட்டிக்கொண்டது.

நம்முடைய தகவல் இப்போது என்னவெனில் மாறன் சகோதரர்களுடன் ஏற்பட்ட பங்காளிச்சண்டையில் கலைஞர் டிவி உதயமானபோது சன் டிவியில் பணிபுரிந்து பல பணியாளர்கள் கலைஞர் டிவிக்கு சென்றனர். அதில் உமாவும் போனார். அங்குபோய் அதே உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியைத்தான் நடத்தினார். அப்புறம் கலைஞர் டிவிக்கு வந்தது தப்பு என்று உணர்ந்து கொஞ்சநாள் மீடியாவை விட்டே ஒதுங்கி இருந்தார்.

கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது ஜெயாடிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக களம் இறங்கியுள்ளார். நிகழ்ச்சியின் பெயர் ஆல்பம். பிரபலங்களின் வாழ்க்கையை, அவர்களின் சுவாரஸ்யப்பக்கங்களை திரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சி இது. பிரபலங்களை பேட்டி காணப்போகிறார் உமா. விரைவில் இந்த நிகழ்ச்சி ஜெயா டிவியில் ஒளிபரப்பாகப் போகிறது.

 

நடிகர் விஜய் எனக்கு இளையதம்பி... பவர் ஸ்டார் சீனிவாசன் அலம்பல்!

Actor Vijay Is My Younger Brother   

சென்னை: நடிகர் விஜய் எனக்கு இளைய தளபதி.. தம்பி என்று பவர் ஸ்டார் சீனிவாசன் கூறினார்.

லத்திகா என்ற படத்தை பணம் கொடுத்து 200 நாட்கள் ஓட்டி கோலிவுட்டுக்கு வந்தவர் பவர் ஸ்டார். தனக்குத் தானே பவர்ஸ்டார் என்ற பட்டத்தைக் கொடுத்துக் கொண்டு, கட்-அவுட், பேனர், ஹோர்டிங் என வைத்து புகழைப் பரப்பிக் கொண்டவர்.

இவரை வைத்து விழா நடத்தினால், அந்த விழா செலவு முழுவதையும் பார்த்துக் கொள்வார். அந்த அளவு இன்வெஸ்ட் பண்ணி சினிமாவுக்கு வந்தவர் இவர்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் இந்த சீனிவாசனை வேறு ரேஞ்சுக்குக் கொண்டுபோய்விட்டது.

சினிமாவில் ஒரு இடத்தைப் பிடிக்க சீனிவாசன் பிரயோகித்த தந்திரத்தையும் பயன்படுத்தலாம் என்ற நினைப்பை பலருக்கும் உண்டாக்கியிருக்கிறது.

இயக்குநர் ஷங்கராக இருந்தாலும் சரி, நடிகர் விஜய்யாக இருந்தாலும் சரி... சகட்டுமேனிக்கு எல்லோரும் என் தம்பிகள் என்று கூறிவருகிறார்.

நேற்று நடந்த ஒன்பதுல குரு பட இசை வெளியீட்டு விழாவிலும் இப்படித்தான் பேசினார்.

நடிகர் விஜய்யிடம் கிட்டத்தட்ட 20 வருடங்களாக பி.ஆர்.ஓவாக வேலை பார்த்து வரும் பி.டி.செல்வக்குமார் முதல் முறையாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் இது.

விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர், கலைப்புலி எஸ்.தாணு, ஆர்.பி.செளத்ரி, டைரக்டர்கள் கே.எஸ்.ரவிக்குமார், சமுத்திரக்கனி, சீனு ராமசாமி என கிட்டத்தட்ட 30 க்கும் மேற்பட்ட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

சீனிவாசன் காசு கொடுத்து அழைத்து வந்திருந்த பல நூறு ரசிகர்கள், அவர் கையாட்டினாலும், யாரையாவது பார்த்து தனது பெரிய பற்கள் தெரிய சிரித்தாலும் கைத்தட்டி, விசிலடித்துக் கொண்டே இருந்தனர்.

ஏகக் குஷியாக இருந்த சீனிவாசன் பேசுகையில், "ஒன்பதுல குரு படத்தில் நான் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியிருக்கிறேன். இந்த விழாவுக்கு இளையதளபதி விஜய் வந்திருக்கிறார். எனக்கு ரொம்ப சந்தோஷமாக உள்ளது. எல்லோருக்கும் அவர் இளையதளபதி. ஆனால் எனக்கு மட்டும் அவர் இளைய தம்பி.

லட்டு படத்தின் மூலம் எனக்கு சந்தானம் என்ற அருமைத் தம்பி கிடைத்தது போல இப்போது தம்பி விஜய்யும் எனக்கு அருமைத் தம்பியாக கிடைத்திருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு இதே தியேட்டரில்தான் ஒரு பிரம்மாண்டமான ஆடியோ பங்ஷன் நடந்தது. அந்தப்படம் இப்போது சூப்பர்ஹிட் படமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த ‘லட்டு' விழாவுக்கு அடுத்த படியாக இதே தியேட்டரில் இப்போது இந்த படத்தின் ஆடியோ விழா நடக்கிறது. அந்தப்படம் போலவே இந்தப்படமும் கண்டிப்பாக வெற்றி பெரும். அவ்வளவு ராசியான தியேட்டர் இது.

இந்தப்படத்தின் ஒரு பாடல்காட்சியில் நீங்கள் டான்ஸ் ஆட வேண்டும் என்று டைரக்டர் பி.டி.செல்வக்குமாரும், பி.ஆர்.ஓ நிகில்குமாரும் (?) என்னை வந்து கேட்டர்கள். நான் டான்ஸ் ஆடலாமா வேண்டாமா..? என்று யோசித்தேன், அப்போது தான் அந்த பி.ஆர்.ஓ சார் இவர் யார் தெரியுமா..? இவர்தான் விஜய்யோட பி.ஆர்.ஓ என்று சொன்னார். விஜய் என்று சொன்னதும் நான் எந்த கேள்வியும் கேட்காமல் உடனே ஒப்புக்கொண்டேன்.

முதல் நாள் பேசி அன்று இரவே எனக்கான எல்லா காஸ்ட்யூம்களையும் ரெடி செய்து மறுநாள் காலை 9 மணியிலிருந்து 11 மணிக்குள் பாடலை எடுத்து என்ன அனுப்பி வைத்து விட்டார்.

அந்த வகையில் இந்த ‘ஒன்பதுல குரு' படம் வெற்றிபெறும். எல்லாவற்றுக்கும் மேலாக என் ரசிகப் பெருமக்களுக்கும், என் வளர்ச்சியில் எப்போதுமே எனக்கு இரண்டு கண்களாக இருக்கும் எனதருமை பத்திரிகை நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார் அவர்.

 

கமல் ஹாஸனின் ஹாலிவுட் படத்துக்குப் பெயர் என்ன தெரியுமா?

Kamal Starts Work His Hollywood Movie

கமல் ஹாஸன் தனது ஹாலிவுட் படத்துக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார். லார்டு ஆப்தி ரிங்ஸ் படத்தைத் தயாரித்த பேரி ஆஸ்போன் தயாரிக்கும் இந்த பிரமாண்ட படத்துக்கு தற்காலிகமாக ஒரு தலைப்பும் வைத்துவிட்டாராம்.

விஸ்வரூபம் படத்தில் அமெரிக்காவையே காப்பாற்றும் இந்திய உளவாளியாக நடித்த கமலின் சிந்தனை பேரி ஆஸ்போனுக்கு ரொம்பப் பிடித்துவிட்டதால், தனது நிறுவனத்துக்கு ஒரு படம் இயக்கி நடித்துத் தருமாறு கமல்ஹாஸனைக் கேட்டிருந்தார்.

இதனால் விஸ்வரூபம் படத்தின் முதல் பாகத்தை உருவாக்கும்போதே, இரண்டாம் பாகத்தையும் சேர்த்து ஷூட் செய்துவிட்டார் கமல். இந்த இரண்டாம் பாகத்தை இன்னும் மூன்றே மாதங்களில் வெளியிடவிருக்கிறார். தலைப்பு மூ. விஸ்வரூபத்தின் முதல் பாகத்தை வெளியிட இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்ட
கமல், இந்த இரண்டாவது பாகத்தை ஜூன் மாதம் வெளியிடவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தனது ஹாலிவுட் பட வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் கமல். இந்தப் படத்துக்கு தலைப்பும் வைத்துவிட்டார்.

அது... 'ஆல் ஆர் கின்' (All Are Kin)...

இது கமல் ஏற்கெனவே தனது தமிழ்ப் படத்துக்கு தேர்வு செய்து வைத்த தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது!!

 

ஜீ டிவியில் காதலர் தின சிறப்பு கேம் ஷோ ‘அட்டகாசம்’

Mano Host Attakasam Game Show

காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியாக அட்டாகாசம் கேம் ஷோவில் சின்னத்திரை காதல் ஜோடிகள் பங்கேற்று விளையாட உள்ளனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய கேம் ஷோ, அட்டகாசம். பிரபல பின்னணிப் பாடகர் மனோ தொகுத்து வழங்கும் இந்த கேம்ஷோவில் சினிமா, சின்னத்திரை பிரபலங்கள் பங்கேற்று விளையாடி பரிசுகளை தட்டிச்செல்கின்றனர்.

காதலர் தினத்தை முன்னிட்டு நட்சத்திர ஜோடிகளின் காதல் அனுபவங்களுடன் மலர்கிறது. சின்னத்திரை காதல் ஜோடிகள் ராஜ்கமல்-லதாராவ், அசார்-லக்ஷா கலந்து கொண்டு தங்கள் இனிய காதல் நாட்களை நினைவு கூர்கிறார்கள். அவர்களின் அட்டாகாசமான விளையாட்டுக்களும் இதில் அடங்கும்

இந்த நிகழ்ச்சியில் பாண்டு, பயில்வான் ரங்கநாதன், வையாபுரி, வெங்கட், சந்தானபாரதி, தேவிகிருபா என கலைப்பிரபலங்களும் பங்கேற்கிறார்கள்.

நான்கு சுற்றுக்களை கொண்ட இந்த கேம்ஷோவில் வெற்றி பெரும் ஒவ்வொரு சுற்றுக்கும் அதற்கேற்ப பணமாக பரிசளிக்கிறார் பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்ட மனோ. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாடலுடன் ஆடிக்கொண்டே அவர் என்ட்ரி கொடுப்பது கூட அட்டகாசமாகத்தான் இருக்கிறது.

 

ஒரே நேரத்தில் 7 படங்கள்... ஆனாலும் சொதப்பாத ஹன்ஸிகா!

Hansika S Professional Commitment   

தமிழ் சினிமாவிலேயே மிகவும் பிஸியான நடிகை இனந்த நிமிடத்தில் ஹன்ஸிகாதான்.

கையில் ஏழுபடங்கள். ஷிப்ட் முறையில் இரவு பகல் பார்க்காமல் ஷூட்டிங். பறந்து பறந்து நடித்துக் கொண்டிருக்கிறார் ஹன்ஸி.

இந்த நிலையில் கால்ஷீட் கேட்டு மேலும் 4 பெரிய நிறுவனங்கள் ஹன்ஸிகாவைத் துரத்திக் கொண்டிருக்கிறார்களாம்.

இப்போது அவர் சுந்தர்.சி டைரக்ட் செய்து வரும் 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தின் ஹூட்டிங்கில் சித்தார்த் ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

சிம்புவுடன் வேட்டை மன்னன், வாலு, ஆர்யாவுடன் சேட்டை, கார்த்தியுடன் பிரியாணி, சூர்யாவுடன் சிங்கம் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் ஒரு படமும் போய்க் கொண்டிருக்கிறதாம்.

இத்தனைப் படங்களில் நடித்தாலும், ஹன்ஸிகாவின் ஸ்பெஷல்... இதுவரை ஒருமுறை கால்ஷீட் சொதப்பல் என புகார் கிளம்பியதே இல்லை என்பதுதானாம்.

'அதான் கமிட்மென்ட்... ப்ரொபஷனல்' என பாராட்டுகிறார்கள் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும்!