வேட்பாளர் யார் என்பதற்கு பதிலாக வாக்காளர் யார் என உளறுகிறார் ஒரு கட்சி தலைவர்: நடிகர் சரவணன்

காரைக்குடி: ஒரு கட்சி தலைவர் உங்கள் வேட்பாளர் யார் என கேட்பதற்கு பதிலாக வாக்காளர் யார் என்று கேட்கிறார் என நடிகர் சரவணன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து காரைக்குடியில் நடிகர் சரவணன் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

வேட்பாளர் யார் என்பதற்கு பதிலாக வாக்காளர் யார் என உளறுகிறார் ஒரு கட்சி தலைவர்: நடிகர் சரவணன்

மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, சாலை இல்லை என்று கூறுவதற்கு இது நேரம் இல்லை. தமிழகத்திற்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க எம்.பி.க்களை தேர்வு செய்ய வேண்டிய தேர்தல் இது. ஊடகங்களின் தெளிவால் மக்கள் தெளிவாக உள்ளார்கள். ஆனால் எதிர்க்கட்சியினர் தான் குழப்புகிறார்கள்.

போதிய உறுப்பினர்கள் இல்லாதபோதே முதல்வர் ஜெயலலிதா காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டார். வரும் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றால் மேலும் பல உரிமைகளை நமக்கு வாங்கிக் கொடுப்பார்.

எதிர்கட்சி வேட்பாளர்களை மக்களே எதிர்ப்பார்கள். நான் தனியாக எதிர்த்து பேச வேண்டியது இல்லை. ஒரு கட்சி தலைவர் என்னவென்றால் உங்கள் வேட்பாளர் யார் என கேட்பதற்கு பதில் வாக்காளர் யார் என்று கேட்கிறார். அவர் தேர்வு செய்யும் ஆட்களும் நிற்க முடியாமல் தான் இருப்பார்கள். தமிழகத்தில் காங்கிரஸ் டெபாசிட் இழக்கும். வாக்கு வங்கி என்று கூறும் சிறிய கட்சிகள் காணாமல் போய்விடும் என்றார்.

 

ஒற்றுமையாக இருக்கும் தமிழர்களிடையே மொழி சண்டையை இழுத்து விடாதீர்கள்: வடிவேல்

சென்னை: ஒற்றுமையாக இருக்கும் தமிழ்நாட்டு மக்களிடம் மொழிச் சண்டையை இழுத்து விடாதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் வடிவேல்.

நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு காமெடி நடிகர் வடிவேல் கதாநாயகனாக நடித்து, விரைவில் திரைக்கு வர இருக்கும் படம், ‘தெனாலிராமன். யுவராஜ் தயாளன் டைரக்ட் செய்துள்ள இப்படத்தில் தெனாலிராமன் மற்றும் அரசனாக இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறார் வடிவேல். படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி தீக்‌ஷித் நடித்துள்ளார்.

இதற்கிடையே ‘தெனாலிராமன்' படத்தில் கிருஷ்ணதேவராயரை இழிவுபடுத்தியிருப்பதாக போராட்டம் நடத்தி வரும் தெலுங்கு அமைப்பை சேர்ந்த சிலர் படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த பிரச்சினையில், வடிவேலுவுக்கு ஆதரவாக ‘நாம் தமிழர்' கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை விடுத்தார். அவரை கண்டித்தும் தெலுங்கு அமைப்பை சேர்ந்தவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள்.

இந்நிலையில், ‘தெனாலிராமன்' பட பிரச்சினை தொடர்பாக நடிகர் வடிவேல் தமிழ் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு சிறப்புப் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

 

சந்தானமும், தேவி தியேட்டரும்...

சென்னை: சந்தானம் தான் சோலோ ஹீரோவாக நடிக்கும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் இசை வெளியீட்டு விழாவை தனக்கு ராசியான தேவி தியேட்டரில் வைத்துள்ளார்.

சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சோலோ ஹீரோவாக நடித்துள்ளார். படத்தின் வேலைகள் மளமளவென நடக்கின்றது. ஸ்ரீநாத் இயக்கும் இப்படத்தில் அஷ்னா சாவேரி ஹீரோயினாக நடிக்கிறார்.

சந்தானமும், தேவி தியேட்டரும்...

படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (14ம் தேதி) அதாவது தமிழ்ப் புத்தாண்டு அன்று சென்னையில் உள்ள தேவி தியேட்டரில் நடைபெறுகிறது. இதே தேவி தியேட்டரில் தான் சந்தானம் தயாரித்து நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அந்த படம் ஹிட்டானதை அடுத்து சென்டிமென்ட்டாக மீண்டும் தேவி தியேட்டரில் இசை வெளியீட்டு விழாவை வைத்துள்ளாராம்.

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த ஹிட் தெலுங்கு படமான மரியாத ராமண்ணாவின் ரீமேக் தான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இந்த படத்தை பிரகாஷ் பொட்லூரியுடன் சேர்ந்து சந்தானம் தயாரித்துள்ளார்.

 

நம்பர் நடிகைக்கு ஷாக் கொடுத்த இளம் நாயகி

சென்னை: பையா நாயகியைப் பார்த்து நயன நடிகை ஆடிப் போயுள்ளாராம்.

தல நடிகருடன் சேர்ந்து நயன நடிகை நடித்தார். அந்த படத்தை முடித்த கையோடு தல நடிகரின் அடுத்த படத்திலும் நடிக்க முயற்சி செய்தார். ஆனால் அந்த படத்தின் நாயகி வாய்ப்பை பெரு முயற்சி செய்து பையா நாயகி பெற்றுவிட்டார்.

இதையடுத்து பிக்கப் டிராப் நடிகருடன் நயன நடிகை நடித்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் பையா நாயகியே ஒப்பந்தம் ஆகிவிட்டார். இப்படி அடுத்தடுத்து வாய்ப்புகளை அவர் பெற்று வருவதால் நயன நடிகை சற்று ஆடிப்போயுள்ளாராம்.

அதனால் இனியாவது பையா நாயகியிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நயன நடிகை முடிவு செய்து அதன்படி நடந்து வருகிறாராம். நயன நடிகைக்கு வாய்ப்புகளுக்கு ஒன்றும் குறைவில்லை. ஆனால் அவர் கேட்கும் சம்பளம் தான் சில இயக்குனர்களை யோசிக்க வைக்கிறதாம்.