நடிகை ஷாலு மேனனுக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு!

திருவனந்தபுரம்: சோலார் பேனல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஷாலு மேனனுக்கு மீண்டும் ஜாமீன் மறுத்துள்ளது திருவனந்தபுரம் நீதிமன்றம்.

சோலார் பேனல் மோசடி வழக்கு தொடர்பாக நிறுவன உரிமையாளர் பிஜு ராதாகிருஷ் ணன், அவரது 2-வது மனைவி சரிதா நாயர், கேரள முதல்வர் உம்மன்சாண் டியின் உதவியாளர் டென்னி ஜோப்பன் மற்றும் பிரபல நடிகை ஷாலு மேனன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள் ளனர்.

நடிகை ஷாலு மேனனுக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு!

இவர்களை கேரள குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். காவல் முடிந்ததை தொடர்ந்து மீண்டும் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

நடிகை ஷாலுமேனன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை திருவனந்தபுரம் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது. எனவே அவர், மீண்டும் ஜாமீன் கேட்டு நேற்று புதிய மனு தாக்கல் செய்தார்.

அதில், கேரளாவில் பல்வேறு நாட்டிய பள்ளிகளை நடத்தி வருவதோடு, சினிமாவிலும் நடித்து வருகிறேன். சோலார் பேனல் மோசடி வழக்கில் விசாரணை அதிகாரி எப்போது அழைத்தாலும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கத் தயாராக உள்ளஏன். எனவே ஜாமீன் வழங்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு வக்கீல் கடும் சாட்சிகளை கலைத்து விடுவார். எனவே அவருக்கு ஜாமீன் அனுமதிக்கக்கூடாது என்று வாதிட்டார்.

மாஜிஸ்திரேட்டு இதனை ஏற்றுக்கொண்டு நடிகை ஷாலுமேனனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

 

ரஜினியை இயக்கிய எம் பாஸ்கர் மாரடைப்பால் மரணம்

பிரபல சினிமா இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆஸ்கர் மூவீஸ் எம்.பாஸ்கர் (78) சென்னையில் வெள்ளிக்கிழமை மாரடைப்பால் காலமானார்.

விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த இவர் இயக்குநர் ஸ்ரீதரின் உதவியாளராக திரையுலகில் நுழைந்தார். "பைரவி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். நடிகர் ரஜினிகாந்த் இந்தப் படத்தில்தான் முதல்முறையாக கதாநாயகனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியை இயக்கிய எம் பாஸ்கர் மாரடைப்பால் மரணம்

இதைத் தொடர்ந்து "தீர்ப்புகள் திருத்தப்படலாம்', "தண்டிக்கப்பட்ட நியாயங்கள்', "பௌர்ணமி அலைகள்', "பன்னீர் நதிகள்', "சட்டத்தின் திறப்பு விழா', "சக்கரவர்த்தி' உள்ளிட்ட படங்களை இயக்கினார். ஆஸ்கர் மூவீஸ் என்ற தன் சொந்தப் பட நிறுவனம் மூலம் இப்படங்களைத் தயாரித்தார். மேலும், விஜய் நடித்த "விஷ்ணு', "காதல் ரோஜாவே', "தோட்டா' ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார்.

மறைந்த பாஸ்கருக்கு மீனா ராணி என்ற மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இன்று காலை அவரது இறுதிச் சடங்கு சென்னையில் நடந்தது.

M Baskar, director and producer of many hit movies was died in Chennai.

 

தலைவன் படத் தயாரிப்பாளர் சித்திரைச் செல்வன் மீண்டும் கைது!

சென்னை: தலைவன் படத் தயாரிப்பாளர் சித்திரைச் செல்வன் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

ரூ 11.30 லட்சம் பண மோசடி செய்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சசிகலாவின் அக்கா மகன் பாஸ்கரன் ஹீரோவாக நடித்த 'தலைவன்' சினிமாப்பட தயாரிப்பாளர் சித்திரை செல்வன் மன்னார் குடியை சேர்ந்தவர். இவர் படங்களுக்கு துணை நடிகர்களை ஏற்பாடு செய்தவருக்கு பணம் கொடுக்காமல் அலைக்கழித்து வந்தார்.

இதுபற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்திரை செல்வனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

தற்போது சித்திரை செல்வன் மீது மேலும் ஒரு மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதன் பேரில் கைது செய்யப்பட்டுள்ளளார்.

கரூர் உப்பிட்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நாச்சி முத்து (வயது 47). இவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ள புகாரில், "2007-ல் சித்திரைச் செல்வன் எனக்கு அறிமுகம் ஆனார். ஆக்ரா என்ற படத்தைத் தயாரிப்பதாக கூறி ரூ. 5.30 லட்சமும், ‘தலைவன்' பட தயாரிப்புக்காக ரூ. 6 லட்சம் என மொத்தம் ரூ. 11.30 லட்சம் வாங்கி இருந்தார். இந்தப் பணத்தை உரிய காலத்தில் திருப்பித்தரவில்லை.

பணம் கேட்டதற்கு மிரட்ட ஆரம்பித்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் எனது பணத்தை வாங்கித்தர முயற்சி எடுக்க வேண்டும், என்று புகார் கூறி இருந்தார்.

இதுபற்றிய மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து சித்திரை செல்வனை மீண்டும் கைது செய்தனர்.

 

சுந்தரபாண்டியன் இயக்குநர் எஸ்ஆர் பிரபாகரனுக்கு மதுரையில் திருமணம்!

சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் படத்தை இயக்கியவரும், இப்போது உதயநிதியை வைத்து இது கதிர்வேலன் காதலி படம் இயக்கிக் கொண்டிருப்பவருமான எஸ்ஆர் பிரபாகரனுக்கு நாளை மதுரையில் திருமணம் நடக்கிறது.

மணப் பெண் பெயர் திவ்யா. மதுரையைச் சேர்ந்த இவர் எம்பிஏ படித்துள்ளார்.

சுந்தரபாண்டியன் இயக்குநர் எஸ்ஆர் பிரபாகரனுக்கு மதுரையில் திருமணம்!

மதுரையில் உள்ள ஏ.கிராண்ட் திருமண அரங்கில் காலை 10 மணிக்கு திருமணம் நடக்கிறது.

திருமணத்தில் சசிகுமார், உதயநிதி ஸ்டாலின், அமீர், இயக்குனர் சமுத்திரக்கனி, எஸ்டி சபா, செண்பகமூர்த்தி, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் பாலசுப்பரமணியம் மற்றும் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகின்றனர்.

சுந்தரபாண்டியன் இயக்குநர் எஸ்ஆர் பிரபாகரனுக்கு மதுரையில் திருமணம்!
 

வசூல் ராஜா, நண்பன் படத் தயாரிப்பாளர் ரவிசங்கர் பிரசாத் பிணமாகக் கண்டெடுப்பு

வசூல் ராஜா, நண்பன் படத் தயாரிப்பாளர் ரவிசங்கர் பிரசாத் பிணமாகக் கண்டெடுப்பு

ஏனாம்: வசூல் ராஜா எம்பிபிஎஸ், நண்பன், மயக்கம் என்ன போன்ற படங்களைத் தயாரித்த ஜெமினி பிலிம் சர்க்யூட் ரவி சங்கர் பிரசாத் உடல், ஆந்திராவில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மறைந்த எல்வி பிரசாத்தின் பேரனும், ஜெமினி பிலிம் சர்க்யூட் பட நிறுவன அதிபருமான ரவிசங்கர் பிரசாத் கடந்த நான்கு தினங்களாக மாயமாகிவிட்டதால், அவரைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

ஆந்திர மாநிலத்தையொட்டி உள்ள புதுச்சேரி மாநில பகுதியான ஏனாமில் உள்ள தனது ஓட்டலை பார்வையிடச் சென்ற அவர் அங்கு அதிகாலை 3 மணிக்கு வாக்கிங் போயிருக்கிறார். பிறகு அவர் ஓட்டலுக்கு திரும்பவில்லை.

இதுகுறித்து ஏனாம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ரவிசங்கர் பிரசாத் கடத்தப்பட்டாரா? அல்லது அருகில் உள்ள ஆற்றில் தவறி விழுந்தாரா என்று விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அவரது உடலை கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கண்டெடுத்துள்ளனர் போலீசார். அவர் கொல்லப்பட்டாரா அல்லது இறந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

நடிகர் நந்தாவுக்கு நாளை கோவையில் திருமணம்

நடிகர் நந்தாவுக்கும் திருச்செங்கோட்டைச் சேர்ந்த வித்யரூபாவுக்கும் நாளை கோவையில் திருமணம் நடக்கிறது.

மவுனம் பேசியதே, புன்னகைப் பூவே, கோடம்பாக்கம், உற்சாகம், வேலூர் மாவட்டம் உள்பட பல படங்களில் நடித்தவர் நந்தா.

நடிகர் நந்தாவுக்கு நாளை கோவையில் திருமணம்

ஈழப் போர் பின்னணியில் இவர் நடித்த ஆணிவேர் பெரும் பாராட்டுகளைப் பெற்றது.

இப்போது புதிய திருப்பங்கள் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

முன்னாள் மத்திய அமைச்சர் கண்ணப்பனின் பேரன் இவர். நந்தாவுக்கும் திருச்செங்கோட்டைச் சேர்ந்த சதாசிவம் - சுசிலா தம்பதிகளின் மகள் வித்யரூபாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நாளை கோவையில் இருவருக்கும் திருமணம் நடக்கிறது.

அரசியல் மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

ஜூலை 17-ம் தேதி கோவை கொடிசா அரங்கில் நந்தா - வித்யரூபா திருமண வரவேற்பு நடக்கிறது.

நடிகர் நந்தாவுக்கு நாளை கோவையில் திருமணம்
 

பிரபல இந்தி நடிகர் பிரான் மரணம்!

மும்பை: பிரபல இந்தி நடிகர் பிரான் நேற்று இரவு மும்பையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 93.

மிலன், மதுமதி, பாபி, காஷ்மீர் கி காலி, ஜன்ஜீர், டான், அமர் அக்பர் அந்தோனி, உப்கார் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட இந்திப் படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்த பிரானின் இயற்பெயர் பிரான் கிஷன் சிகந்த். பாலிவுட்டின் பயங்கர வில்லன் என்ற இமேஜ் அவருக்கு இருந்தது.

பிரபல இந்தி நடிகர் பிரான் மரணம்!

உடல் நலக் குறைவால் மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் வெள்ளிக்கிழமை இரவு மரணம் அடைந்தார்.

பிரான் இறந்த செய்தியை அறிந்ததும் இந்தி திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என ஏராளமான பிரபலங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

புதுடெல்லியில் கடந்த மே மாதம் 3ம் தேதி நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பிரான் பங்கேற்கவில்லை. மரபு காரணமாக அவர் சார்பில் யாரிடமும் இந்த விருது ஒப்படைக்கப்படவில்லை.

கடந்த 10ம் தேதி மும்பையில் உள்ள நடிகர் பிரானின் வீட்டிற்கே சென்ற மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் மணிஷ் திவாரி, தாதா சாகிப் பால்கே விருதுக்கான தங்கத் தாமரை, பாராட்டுப் பத்திரம், சால்வை, ரொக்கப்பணம் ரூ.10 லட்சம் ஆகியவற்றை வழங்கினார்.

பிரபல இந்தி நடிகர் பிரான் மரணம்!

ஒரு மத்திய அமைச்சரே நடிகரின் வீடு தேடிப் போய் தாதா சாகிப் பால்கே விருதினை வழங்கியது இதுதான் முதல்முறை.

மத்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன் விருதினை 2001-ம் ஆண்டு பெற்றவர் பிரான்.

பிரானின் உடல் சிவாஜி பூங்கா மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

 

எனக்குப் பிடிச்சது இந்த கர்ப்பிணி வேஷம்தான்! - நயன்தாரா

எனக்குப் பிடிச்சது இந்த கர்ப்பிணி வேஷம்தான்! - நயன்தாரா

எத்தனையோ வேடங்களில் இதுவரை நான் நடித்திருந்தாலும், இப்போது ஒரு படத்துக்காக நான் ஏற்றிருக்கும் கர்ப்பிணி வேடம்தான் மிகப் பிடித்திருக்கிறது, என்கிறார் நயன்தாரா.

கஹானி என்ற இந்திப் படத்தை தமிழ் - தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார்கள். இந்தப் படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். ஹீரோயினுக்கு மட்டுமே முக்கியத்துவம் உள்ள படம் இது.

அனாமிகா என்ற தலைப்பில் உருவாகும் இந்தப் படத்தில் வெளி நாட்டில் இருந்து இந்தியா வந்து கணவனைத் தேடும் கர்ப்பிணிப் பெண்ணாக நடிக்கிறார் நயன்தாரா.

இந்தப் பட வாய்ப்பு குறித்து நயன்தாரா கூறுகையில், "முழுக்க முழுக்க பெண்ணை மையப்படுத்திய கதை. என் கேரக்டருக்கு முக்கியத்துவம் அதிகம். இந்த வலுவான கேரக்டரில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது சந்தோஷமாக இருக்கிறது.

நான் எவ்வளவோ படங்களில் நடித்திருந்தாலும், இந்த அனாமிகா வேடம் ரொம்பப் பிடித்திருக்கிறது. ரசிகர்கள் இந்த படத்தையும் எனது கேரக்டரையும் நிச்சயம் பாராட்டுவார்கள்," என்றார்.

 

ஹீரோவாகிறார் ஸ்பாட் பிக்சிங் புகழ் ஸ்ரீசாந்த் - படத்தின் தலைப்பு 'பிக் பிக்சர்'!

திருவனந்தபுரம்: ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் மோசடியில் சிக்கி, கைது செய்யப்பட்டு இப்போது ஜாமீனில் வந்துள்ள பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் புதிய மலையாளப் படம் ஒன்றில் நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு பிக் பிக்சர் என்று தலைப்பிட்டுள்ளனர். படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது.

ஹீரோவாகிறார் ஸ்பாட் பிக்சிங் புகழ் ஸ்ரீசாந்த் - படத்தின் தலைப்பு 'பிக் பிக்சர்'!

படத்தில் நடிப்பது குறித்து ஸ்ரீசாந்த் கூறுகையில், "கிரிக்கெட் மாதிரியில்லை சினிமா. நடிப்பது ரொம்ப சவாலான வேலை. ஆனால் அந்த சவாலை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்," என்றார்.

இந்தப் படத்தை பாலச்சந்திர குமார் என்பவர் இயக்குகிறார்.

ஸ்ரீசாந்த் சினிமாவில் நடிப்பது இது முதல் முறையல்ல. அவர் ஏற்கெனவே மழவில்லினாட்டம் வரே என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். ஆனால் ஸ்பாட் பிக்ஸிங் ஊழலில் அவர் கைதானதும் அந்தப் படத்திலிருந்து அவரது காட்சிகளை வெட்டி எறிந்துவிட்டார் படத்தின் இயக்குநர்.

 

என்ன ஆனார் நண்பன் படத் தயாரிப்பாளர் ரவிசங்கர் பிரசாத்? - 4 நாட்களாக தீவிர தேடுதல்!

ஜெமினி பிலிம் சர்க்யூட் பட நிறுவனம் சார்பில் பல படங்களைத் தயாரித்தவரும் தொழிலதிபருமான ரவிசங்கர் பிரசாத் கடந்த நான்கு தினங்களாக மாயமாகிவிட்டதால், அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ரவிசங்கர் பிரசாத் தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமான தயாரிப்பாளர். சென்னையில் குடும்பத்துடன் வசித்தார். இவர் மறைந்த திரையுலக ஜாம்பவான் எல்.வி.பிரசாத்தின் பேரன்.

ஜெமினி பேனரில் கமல் நடித்த வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்., விஜய் நடித்த நண்பன், தனுஷ் நடித்த மயக்கம் என்ன படங்களை ரவி சங்கர் பிரசாத் தயாரித்துள்ளார். தற்போது விஷால் நடிக்கும் மதகஜராஜா படத்தை தயாரித்து வந்தார். மணி ரத்னம் இயக்கிய கடல் படத்தையும் வாங்கி வெளியிட்டவரும் இவர்தான்.

ஆனந்த ரீஜென்ஸி என்ற பெயரில் ஓட்டல்களும் நடத்தி வருகிறார். ஆந்திர மாநிலத்தையொட்டி உள்ள புதுச்சேரி மாநில பகுதியான ஏனாமில் உள்ள தனது ஓட்டலை பார்வையிடச் சென்ற அவர் அங்கு அதிகாலை 3 மணிக்கு வாக்கிங் போயிருக்கிறார். பிறகு அவர் ஓட்டலுக்கு திரும்பவில்லை.

இதுகுறித்து ஏனாம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ரவிசங்கர் பிரசாத் கடத்தப்பட்டாரா? அல்லது அருகில் உள்ள ஆற்றில் தவறி விழுந்தாரா என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிகாலை 3 மணிக்கு யாரும் வாங்கிங் செல்லமாட்டார்கள். அந்த நேரத்தில் அவர் ஏன் சென்றார் என்பது மர்மமாக உள்ளது என்று ஏனாம் போலீஸ் சந்தேகிக்கிறது.

சமீப காலமாக அவர் வாங்கி வெளியிட்ட படங்கள் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதால் அவர் மாயமானரா? அல்லது யாரேனும் கடத்தினார்களா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.