விரைவில் தமிழ் படங்களில் மீண்டும் நடிப்பேன்: ஸ்ருதி ஹாஸன்

மும்பை: ஸ்ருதி ஹாஸன் தான் விரைவில் மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

ஏழாம் அறிவு படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் கமல் ஹாஸனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாஸன். இதையடுத்து தனுஷுடன் சேர்ந்து 3 படத்தில் நடித்தார். அதன் பிறகு மூட்டையைக் கட்டிக் கொண்டு மும்பைக்கு சென்றுவிட்டார்.

தற்போது இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அந்த 2 மொழிப் படங்களிலும் பிசியாக இருப்பதால் அப்பா கமலுடன் நடிக்க வந்த வாய்ப்பையும் ஏற்க மறுத்தார்.

விரைவில் தமிழ் படங்களில் மீண்டும் நடிப்பேன்: ஸ்ருதி ஹாஸன்

மும்பைக்கு சென்ற ஸ்ருதி மீண்டும் தமிழ் படங்களில் எப்பொழுது நடிப்பார் என்று அவ்வப்போது கேட்கப்படுகிறது. இந்நிலையில் தான் விரைவில் தமிழ் படத்தில் நடிக்கவிருப்பதாக ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

 

ரிடையர் ஆகுங்க ஸ்ரேயா... காஜல் 'ஆர்டர்'!

சென்னை: நடிகை ஸ்ரேயா ஓய்வு பெற வேண்டும் என்று காஜல் அகர்வால் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ், தெலுங்கு படங்களில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தவர் ஸ்ரேயா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்தார்.

அடடா ஸ்ரேயா ரஜினிக்கு ஜோடியாக நடித்துவிட்டாரே என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். இதையடுத்து அவருக்கு மவுசும் கூடியது. ஆனால் அப்படியே மவுசு குறைந்து தமிழ் படங்களில் காணாமல் போய்விட்டார்.

ரிடையர் ஆகுங்க ஸ்ரேயா... காஜல் 'ஆர்டர்'!

அவர் அண்மையில் நடித்த கன்னட படமான சந்திரா தமிழிலும் வெளியானது. ஆனால் அவர் நினைத்தது போன்று படம் ஓடவில்லை. இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஒருவர் தற்போது ஓய்வு பெற வேண்டும் என்றால் யாரின் பெயரை கூறுவீர்கள் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் காஜல் அகர்வாலிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவரோ சட்டென்று ஸ்ரேயா பெயரை கூறிவிட்டார். காஜலின் இந்த பதில் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விஜய் சேதுபதிக்கு ரொம்ப பெரிய மனசுங்க!

சென்னை: விஜய் சேதுபதி தனக்கு வரும் பட வாய்ப்புகளை தனது நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறார்.

பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் என்று தொடர்ந்து கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து ஹீரோவான அவர் தற்போது பிசியோ பிசி.

கையில் 8 படங்களை வைத்துக் கொண்டு ஓடி ஓடி நடிக்கிறார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவரது கால்ஷீட் ஃபுல்லாக உள்ளது. இருப்பினும் அவரைத் தேடி பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

விஜய் சேதுபதிக்கு ரொம்ப பெரிய மனசுங்க!

அப்படி தன்னை தேடி வருபவர்களிடம் தனது நண்பேன்டா நடிகர்கள் மற்றும் வளர்ந்து வரும் ஹீரோக்களை நடிக்க வைக்குமாறு பரிந்துரை செய்கிறாராம். எனக்காக காத்திருக்காதீர்கள், இவர்களில் யாரையாவது நடிக்க வையுங்கள் என்கிறாராம்.

விஜய் சேதுபதிக்கு தான் எவ்வளவு பெரிய மனசு என்று அவர் பரிந்துரைக்கும் நடிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

 

பூனம் பாண்டேவின் கன்னட பட ஹீரோ ராஜேஷ் மாடியில் இருந்து விழுந்து மரணம்

மைசூர்: கன்னட நடிகர் ராஜேஷ் மைசூரில் உள்ள தனது வீட்டு மாடியில் இருந்து கீழே விழுந்ததில் மரணம் அடைந்தார்.

கன்னட நடிகர் ராஜேஷ்(28) பூனம் பாண்டே நடிக்கும் லவ் இஸ் பாய்சன் படத்தின் ஹீரோவாக நடித்து வந்தார். படப்பிடிப்பு பாதி முடிந்துவிட்டது. இந்நிலையில் அவர் நேற்று மைசூரில் உள்ள தனது வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்ததில் மரணம் அடைந்தார்.

பூனம் பாண்டேவின் கன்னட பட ஹீரோ ராஜேஷ் மாடியில் இருந்து விழுந்து மரணம்

முன்னதாக அவர் மனநல பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரது திடீர் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து ராஜேஷின் தாய் லக்ஷ்மி போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது,

எனது மகன் செல்போனில் அழைப்பு வந்துவுடன் பேசுவதற்காக மாடிக்கு சென்றான். அவனுக்கு அடிக்கடி மயக்கம் வரும் என்பதால் அவன் மதியம் 12.40 மணி அளவில் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டான் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று காலை ராஜேஷும், அவரது தாயும் சாமுன்டி ஹில்ஸுக்கு வாடகை காரில் சென்றுள்ளனர். வரும் வழியில் ராஜேஷ் தான் மலையில் இருந்து குதிக்க வேண்டும் காரை நிறுத்து என்று டிரைவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் பயந்துபோன டிரைவர் காரை வேறு வழியாக ஓட்டி வந்து அவர்களை வீட்டில் இறக்கி விட்டுள்ளார். அப்போது தாயும், மகனும் வீட்டு வாசலிலேயே சண்டை போட்டுள்ளனர்.

 

தமன்னா வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் தெறித்து ஓடும் தெலுங்கு ஹீரோக்கள்

ஹைதராபாத்: தமன்னாவுடன் டான்ஸ் ஆட வேண்டும் என்பதை நினைத்தாலே தெலுங்கு ஹீரோக்கள் தெறித்து ஓடுகிறார்களாம்.

தமன்னா தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். அவர் டான்ஸ் ஆடுவதில் வல்லவர். எவ்வளவு கஷ்டமான ஸ்டெப்பாக இருந்தாலும் ஒரே டேக்கில் ஓகே செய்துவிடுவார். அவர் சோலோவாக ஆடும்போது பிரச்சனை இல்லை. ஆனால் டூயட் பாடல்களுக்கு ஆடுகையில் தெலுங்கு ஹீரோக்கள் அதிலும் சீனியர்களுக்கு மூச்சு முட்டுகிறதாம்.

தமன்னா வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் தெறித்து ஓடும் தெலுங்கு ஹீரோக்கள்

தமன்னா வேகத்திற்கு ஈடுகொடுத்து ஆட முடியாமல் ஹீரோக்கள் அல்லாடுகிறார்களாம். அனதால் டான்ஸ் மாஸ்டரை அழைத்து ஸ்டெப்ஸ் போடும்போது எங்களை மனதில் வைத்து சொல்லிக் கொடுங்கள். தமன்னாவை நினைத்து ஸ்டெப்ஸ் வேண்டாம், எங்களால் முடியவில்லை என்கிறார்களாம்.

ஹீரோக்கள் தனக்கு ஈடாக ஆட முடியாததால் தன்னால் தனது நடனத் திறமை முழுவதையும் வெளிப்படுத்த முடியவில்லை என்ற கவலை தமன்னாவுக்கு.

 

கடன் பத்திரம் தான் இருக்கு: ரெய்டுக்கு வந்தவர்களிடம் தெரிவித்த தயாரிப்பாளர்

சென்னை: தல நடிகரின் துவக்கம் பட தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் கடன் பத்திரங்கள் தான் சிக்கியதாம்.

கடந்த வியாழக்கிழமை தல நடிகரின் துவக்கம் படம் ரிலீஸ் ஆனது. அன்றைய தினமே அந்த படத்தின் தயாரிப்பாளர், தளபதி நடிகரின் மாவட்டம் பட தயாரிப்பாளர், சிங்கம்-சிறுத்தையின் ஆஸ்தான தயாரிப்பாளர் மற்றும் முன்னணி காமெடி நடிகர் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அதில் துவக்கம் பட தயாரிப்பாளர் வீட்டில் சோதனை நடத்தியபோது பெரிதாக ஒன்றும் சிக்கவில்லையாம். நான் காசு இல்லாமல் இருக்கிறேன், என்னிடம் இந்த கடன் பத்திரங்கள் தான் இருக்கின்றன என்று கூறிய தயாரிப்பாளர் அவற்றை அதிகாரிகளிடம் அளித்தாராம். சோதனை நடத்திய அதிகாரிகளும் தயாரிப்பாளரிடம் கடன் தான் இருக்கிறது வேறொன்றும் இல்லை என்ற முடிவுக்கு வந்தார்களாம்.

இந்த தயாரிப்பாளரின் கஷ்டத்தை போக்க தல நடிகர் அவருக்கு மீண்டும் ஒரு படம் நடித்துக் கொடுக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஸ்வேதா மேனனை உரசியதாக புகாருக்குள்ளான 73 வயது எம்.பி மீது வழக்கு

திருவனந்தபுரம்: மலையாள நடிகை ஸ்வேதா மேனனை தேவையில்லாமல் உரசியும், நெருக்கமாக நின்று தொட்டும் சில்மிஷமாக நடந்து கொண்டதாக புகாருக்குள்ளான கேரளாவைச் சேர்ந்த 73 வயது காங்கிரஸ் எம்.பி. பீதாம்பர குருப்பு மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழில் அரவான் மற்றும் ஏராளமான மலையாள படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளவர் நடிகை ஸ்வேதா மேனன். சமீபத்தில் இவர் தனது பிரசவத்தை மலையாள படம் ஒன்றுக்காக நேரடியாக படமாக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர்.

இந்த நிலையில் பீதாம்பர குருப்பு மீது ஸ்வேதா பரபரப்புப் புகாரைக் கூறியிருந்தார். அதாவது, கொல்லத்தில் நடந்த ஒரு படகு விழாவின் போது தன்னிடம் அத்துமீறி செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார் கூறினார்.

ஸ்வேதா மேனனை உரசியதாக புகாருக்குள்ளான 73 வயது எம்.பி மீது வழக்கு

இதுகுறித்து அவர் கூறுகையில், விழாவில் கலந்து கொண்ட என்னிடம் காங்கிரஸ் மூத்த அரசியல்வாதி அத்துமீறி நடந்து கொண்டார். என்னை தொட்டு தொட்டு பேசினார். அதை நான் தவிர்க்க முயன்றபோதும் தொடர்ந்து என்னை துன்புறுத்தி என் நிம்மதியை கெடுத்து விட்டார் என்றார்.

மேலும் தனக்கு செக்ஸ் சில்மிஷம் செய்த அரசியல்வாதி பற்றி தான் கொல்லம் கலெக்டரிடம் புகார் தெரிவித்ததாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காதது தனக்கு வேதனை அளிப்பதாகவும் ஸ்வேதா மேனன் கூறினார்.

இதையடுத்து கொல்லம் எம்.பி. பீதாம்பர குருப்பு மீது கொல்லம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் ஸ்வேதாவிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

 

ஆரம்பம் சூப்பர்ப், ஆர்யா கூல்: சொல்கிறார் லிங்குசாமி

ஆரம்பம் சூப்பர்ப், ஆர்யா கூல்: சொல்கிறார் லிங்குசாமி

சென்னை: அஜீத்தின் ஆரம்பம் படம் அருமையாக உள்ளது என்று இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

அஜீத் குமார், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி ஆகியோர் நடித்த ஆரம்பம் படம் கடந்த 31ம் தேதி ரிலீஸ் ஆனது. முதல் நாள் அன்று மட்டும் படம் ரூ.9 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆரம்பம் படத்தை இயக்குனர் லிங்குசாமி பார்த்துவிட்டு ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஆரம்பம் படம் சூப்பர்ப்..! அஜித்துக்கும் ரசிகர்களுக்கும் உள்ள உறவை நன்கு புரிந்து காட்சிகளை அமைத்திருக்கிறார் விஷ்ணுவர்தன். ஆர்யா கூல்! என்று தெரிவித்துள்ளார்.