இணையத்தில் வேகமாகப் பரவும் ஸ்ரீதிவ்யாவின் "ஆபாச" புகைப்படம்

சென்னை: ராதிகா ஆப்தே, நயன்தாரா மற்றும் சோனியா அகர்வால் வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறார் நடிகை ஸ்ரீதிவ்யா, ஸ்ரீதிவ்யாவின் ஆபாசப் படம் ஒன்று வெகுவேகமாக இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

இரு தினங்களுக்கு முன்பு நயன்தாராவின் ஆபாசப்படம் ஒன்று வேகமாக இணையத்தில் பகிரப்பட்டு வந்தது, அந்த விவகாரம் சற்று ஓய்ந்தவுடன் மற்றொரு விவகாரம் பூதாகரமாக உருவெடுத்து ஸ்ரீதிவ்யாவின் வாழ்க்கையில் சோகத்தைக் கொண்டு வந்துள்ளது.

Internet: Leaked Sridivya Photos

நெட்டில் யாரோ ஒருவரின் ஆபாசப்படத்தை எடுத்து அதில் ஸ்ரீதிவ்யாவின் முகத்தை வைத்து மார்பிங் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள், தற்போது சுனாமியை விடவும் வேகமாக இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது இந்தப் புகைப்படம்.

நடிகைகளின் புகைப்படங்களை இந்த மாதிரி உருமாற்றி தான் பரப்புகின்றனர் என்று தெரிந்தும் கூட அதனை அதிக அளவில் மற்றவர்களிடம் பகிர்கின்றனர் மக்கள். மக்களின் இந்த மனநிலையைத் தெரிந்து கொண்டு தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் சம்பந்தப்பட்டவர்கள்.

இந்தப் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவிவருவதைக் கேள்விப்பட்ட,நடிகை ஸ்ரீதிவ்யா தற்போது மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறாராம்.

காவல்துறை கண்டுகொள்ளாமல் இருப்பதால் தான் இந்த மாதிரி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே இதற்கான சட்டங்களும், தண்டனைகளும் கடுமையாக மாற்றப்படவேண்டும் என்ற கோரிக்கை தற்போது நடிகைகளின் மத்தியில் அதிகரித்து உள்ளது.

 

ரஜினிக்கு அடுத்து பெரிய சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்த விஜய்!

சென்னை: தமிழில் தற்போது ரஜினிகாந்துக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் நடிகர் விஜய், எந்த விஷயத்தில் என்று கேட்கிறீர்களா எல்லாம் சம்பள விஷயத்தில் தான். அட்லீயின் புதிய படத்திற்காக நடிகர் விஜய் சம்பளம் சுமார் 30 கோடிகளாம்.

புலி படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கும் புதிய படத்திற்காக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு இந்தத் தொகையை விஜய்க்கு வாரி வழங்கி இருக்கிறார். அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுப்பது, கத்தி படம் 100 கோடி வசூலித்தது எல்லாம் சேர்ந்து விஜயின் சம்பளத்தை உயர்த்தி இருக்கிறது.

Vijay: Second Highest Paid actor in Tamil?

தற்போது தமிழில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் நடிகர் ரஜினிகாந்த் முதலிடத்தில் இருக்கிறார் (எந்திரன் படத்தில் 40 கோடிகளுக்கும் அதிகமாக வாங்கினார் என்று கேள்வி) , சம்பள விஷயத்தில் அவருக்கு அடுத்த இடத்தை விஜய் கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் 59 படம் குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகி வருகிறது, இதில் விஜயின் ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் என 2 நாயகிகள் நடித்து வருகின்றனர்.

தற்போது விஜய் நடித்து வெளிவர இருக்கும் புலி திரைப்படம் விஜய் படங்களிலேயே அதிகப் பொருட்செலவில் உருவான படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஷங்கர் கையில் சிக்கி அறிமுகமாகிறார் விக்ரம் மகன்!

சென்னை: கோடம்பாக்கத்திற்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடியாகி விட்டார், ஆமாம் விக்ரம் தனது மகன் துருவ்வை நாயகனாக அறிமுகப் படுத்தப் போகிறார். யார் இயக்கத்தில் தெரியுமா இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்று அனைவராலும் புகழப்படுகிற ஷங்கரின் இயக்கத்தில்.

ஷங்கரின் இயக்கத்தில் துருவ்வின் அறிமுகம் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என்று தகவல்கள் கசிந்துள்ளன, விக்ரமை வைத்து ஏற்கனவே அந்நியன் மற்றும் ஐ என 2 மெகாஹிட் படங்களைக் கொடுத்து இருக்கிறார் ஷங்கர்.

Director Shankar to Launch Vikram's Son Dhruv

தற்போது மூன்றாவது முறையாக ஷங்கரின் இயக்கத்தில் எந்திரன் 2வில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார் விக்ரம், ரஜினிக்கு வில்லனாக அமீர்கானை மனதில் வைத்துத்தான் இந்தக் கதையை எழுதினாராம் ஷங்கர்.

அமீர்கான் நடிக்க மறுத்ததால் தற்போது விக்ரமுக்கு ஏற்றவாறு கதையை மாற்றி அமைக்க இருக்கும் ஷங்கர், 2016 ம் ஆண்டு ஷூட்டிங் செல்லத் தயாராக மற்ற வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறார்.

எந்திரன் 2 முடிந்தவுடன் அநேகமாக துருவ்வை வைத்து அவர் இயக்கலாம் என்கிறார்கள், ஏனெனில் ஷங்கரின் இயக்கத்தில் துருவ் நடித்தால் அவன் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறார் விக்ரம்.

அதற்காகத் தான் எந்திரன் படத்தில் வில்லனாக நடிக்க ஒத்துக் கொண்டிருக்கிறார் விக்ரம், ஷங்கரும் துருவ்வை வைத்து இயக்க மறைமுகமாக சரி என்று சொல்லியிருக்கிறார் விரைவில் முறையான அறிவிப்புகள் வெளியாகலாம்.

 

தமிழில் மகதீராவாக வெளியாகும் தெலுங்கு எவடு!

ராம் சரண் - அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான தெலுங்குப் படமான எவடு தமிழில் மகதீரா என்ற தலைப்பில் வெளியாகிறது.

இந்தப் படத்தில் கதாநாயகிகளாக காஜல் அகர்வால், எமி ஜாக்சன், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மற்றும் சாய்குமார், கிருஷ்ணமோகன், ஜெயசுதா ஆகியோர் நடித்துள்ளனர்.

Evadu Tamil dubbed version titled as Magadheera

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க, வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார்.

யாரிப்பு - பத்ரகாளி பிரசாத். இவர் வம்பு, பத்ரா, காயத்ரி ஐ.பி.எஸ் உட்பட பல படங்களைத் தயாரித்தவர். வசனம் எழுதி தமிழாக்கம் செய்பவர் ஏகேஆர் ராஜராஜா. இவர் 200 க்கும் மேற்பட்ட படங்களை தமிழாக்கம் செய்திருக்கிறார்.

அவரிடம் மகதீரா படம் பற்றி கேட்டோம்...

படு ஆக்ஷன் படம் இது. அல்லு அர்ஜுன் - காஜல் அகர்வால் இருவரும் காதலர்கள். காஜல் மீது தூத்துக்குடியில் உள்ள மிகப்பெரிய தாதாவுக்கும் காதல். வில்லனிடமிருந்து நினைக்கும் இருவரும் தப்பியோடுகிறார்கள். வில்லன் அவர்களை மடக்கி பிடித்து காஜலைக் கொன்று விடுகிறார்கள். அல்லு அர்ஜுனை தீவைத்து கொளுத்தி விடுகிறார்கள்.அதிலிருந்து தப்பிக்கும் அல்லு அர்ஜுனின் முகம் முழுவதும் எரிந்து போய் விடுகிறது.டாக்டர்களின் முயற்சியால் ராம்சரணின் முகம் அல்லு அர்ஜுனுக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப் படுகிறது.

Evadu Tamil dubbed version titled as Magadheera

தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய வில்லன் கூட்டத்தை எப்படி பழி தீர்க்கிறார் என்பது கதை" என்றார்.

ராம்சரண் நடித்த முதல் தெலுங்குப் படத்தின் பெயர் மகதீரா. இந்தப் படம் தமிழில் மாவீரன் என்ற பெயரில் வந்தது. அவரது அடுத்த படமான எவடுக்கு, தமிழில் மகதீரா எனப் பெயர் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

திருமணமே வேண்டாம் – சுருதிஹாசன் அதிரடி

சென்னை: தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளிலும் கொடிகட்டிப் பறக்கும் நடிகை சுருதிஹாசன், தனது வாழ்க்கையில் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

Shruti Answered About Her Marriage

நடிகர் கமலஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான சுருதிஹாசன் தற்போது தமிழில் அஜீத்துடன் தல 56, விஜயுடன் புலி, தெலுங்கில் மகேஷ்பாபு வுடன் ஸ்ரீமந்துடு, இந்தியில் அணில் கபூருடன் வெல்கம் பேக், யாரா, ராக்கி ஹேண்ட்சம் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Shruti Answered About Her Marriage

மூன்று மொழிகளிலும் இவர் நடித்த படங்கள் ஹிட்டடிக்க தற்போது சுருதியின் காட்டில் தான் அடைமழை பொழிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், வாழ்க்கையில் திருமணம்செய்து கொள்ளும் எண்ணமே இல்லை அதிரடியாக மனந்திறந்து கூறியிருக்கிறார்.

Shruti Answered About Her Marriage

சுருதியின் பதிலில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை, ஏனெனில் அவரின் பெற்றோர்கள் பிரிவை சிறுவயதில் பார்த்ததால் தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார். பணம், புகழ் எல்லாம் இருந்தும் கூட பெற்றோர்கள் பிரிந்ததுதான் சுருதி திருமண வாழ்வில் இந்த முடிவை எடுக்கத் தூண்டியிருக்கிறது போலும்.

 

ஒருவாரத்திற்கு 90% டிக்கெட்டுகள் முன்பதிவு... புதிய சாதனை படைத்தது பாகுபலி

ஹைதராபாத்: நாளை வெளியாகப் போகும் பாகுபலி படத்தை எதிர்பார்த்து, உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர், எங்கு திரும்பினாலும் பாகுபலி பற்றிய பேச்சாகவே இருக்கிறது.

S.S.Rajamouli’s 'Baahubali' Registers 90+% Advance Booking for First Weekend

சுமார் 4000 திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் நாளை உலகமெங்கும் வெளியாக இருக்கும் பாகுபலி படம் தற்போது ஒரு புதிய சாதனையைப் படைத்தது இருக்கிறது.

S.S.Rajamouli’s 'Baahubali' Registers 90+% Advance Booking for First Weekend

பாகுபலி வெளியாகும் எல்லாத் திரையரங்குகளிலும் கிட்டத்தட்ட ஒருவாரத்திற்கான டிக்கெட்டுகள் 90% முன்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இது மற்ற எந்தப் படங்களும் இதுவரை செய்திடாத சாதனையாகும்.

எல்லா மொழிகளிலும் படத்தைப் பார்க்க நீண்ட வரிசையில் நின்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர் ரசிகர்கள், காலை 5 மணியில் இருந்து கூட வரிசையில் நிற்கத் தயாராகி விட்டனர் ரசிகர்கள்.

பாகுபலி படத்திற்கு ரசிகர்களிடம் இருக்கும் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட தியேட்டர் அதிபர்கள் சத்தமில்லாமல் டிக்கெட்டுகளின் விலையை ஏற்றி விட்டனர், ஒவ்வொரு டிக்கெட்டும் நார்மல் விலையை விட 30% அதிகமான விலைக்கு விற்கப்படுகிறதாம்.

சமூக வலைதளங்கள் மற்றும் மீடியாக்கள் முழுவதும் டிக்கெட் எடுக்க ரசிகர்கள் காத்திருக்கும் புகைப்படங்களால் நிரம்பி வழிகின்றது, இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது படம் கண்டிப்பாக பிளாக்பஸ்டர் தான் அதில் சந்தேகமே இல்லை.

இரண்டரை வருடங்களுக்கும் மேலான உழைப்புக்கு ரசிகர்களிடம் கிடைத்த இந்த வரவேற்பால், சந்தோஷத்தில் திணறிப் போயிருக்கின்றனர் பாகுபலி படக்குழுவினர்.

 

நடிகர் சங்கத் தேர்தல்: அறிவுரை கேட்டால் சொல்லத் தயார்- கமலஹாசன்

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் ஊரே பற்றி எரிந்து கொண்டிருக்க, இதுபற்றி ரஜினி, கமல், அஜீத் மற்றும் விஜய் போன்ற பிரபலமான நடிகர்கள் எந்தக் கருத்தும் கூறாமல் இதுவரை அமைதி காத்து வந்தனர்.

இந்நிலையில் முதல்முறையாக நடிகர் சங்கத் தேர்தல் பற்றிய பிரச்சினையில், மௌனத்தைக் கலைத்து வாய் திறந்து பேசியிருக்கிறார் நடிகர் கமலஹாசன்.

Nadikar Sangam Election Issue: No One Approached Me for suggestion – Kamal

நேற்று நடந்த பாபநாசம் திரைப்பட விழாவில் பத்திரிக்கையாளர்கள் நடிகர் சங்கப் பிரச்சினையில் இதுவரை பிரபல நடிகர்கள் யாரும் வாய்திறக்கவில்லையே என்று கேள்வி கேட்டனர்.

ஆனால் மேடையில் கமலின் அருகில் இருந்தவர்கள் இது பாபநாசம் வெற்றிவிழா இங்கு இதைப் பற்றிக் கேட்க வேண்டாம், இந்தக் கேள்விக்கு கமல் வேறொரு சமயத்தில் பதிலளிப்பார் என்று கூறினர்.

கமலும் சற்றுத் தயங்கினார், ஆனால் ஒரு நிமிட அமைதியின் பின்பு மீண்டும் அதே கேள்வியை பத்திரிக்கையாளர்கள் கமலிடம் கேட்டனர்.

இந்த முறை சற்றும் தயங்காமல் பதிலளித்த கமல், "நடிகர் சங்கப் பிரச்சினை குறித்து இதுவரை யாரும் என்னை அணுகவில்லை அறிவுரை கேட்டால் கண்டிப்பாக சொல்லத் தயாராக இருக்கிறேன்" என்று கூறினார்.

சம்பந்தப்பட்டவர்கள் உலகநாயகனை அணுகுவார்களா, பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

கேட்கிற சம்பளத்தை கொடுங்க, இல்லாட்டி நடையை கட்டுங்க: நம்பர் நடிகை பொளேர்

சென்னை: நம்பர் நடிகை அண்மை காலமாக ஹிட் கொடுக்காதபோதிலும் சம்பளத்தை மட்டும் குறைக்க மாட்டேன் என்கிறாராம்.

நம்பர் நடிகை பிக்கப் டிராப் நடிகருடன் சேர்ந்து நடித்த படத்தை அடுத்து அவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் ஹிட்டாகவில்லை. இருப்பினும் நம்பர் நடிகைக்கு மார்க்கெட்டில் மவுசு மட்டும் குறையவில்லை.

Number actress not ready to reduce remuneration

ஹீரோக்களோ, நம்பர் நடிகையை ஜோடியாக்குங்கள் என்று இயக்குனர்களிடம் தெரிவித்து வருகிறார்கள். தனக்கு இன்னும் அதிக மவுசு இருப்பதை தெரிந்து கொண்ட நம்பர் நடிகை ஹிட் கொடுக்காவிட்டாலும் சம்பளத்தை மட்டும் குறைக்க தயாராக இல்லையாம்.

ஹிட்டே கொடுக்காமல் உள்ளாரே இவருக்கு இப்படி கொட்டிக் கொடுத்து நடிக்க வைக்க வேண்டுமா என்று தயாரிப்பாளர்கள் சற்று தயங்குகிறார்களாம். ஆனால் அம்மணியோ இந்தா பாருங்க உங்கள் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்றால் நான் கேட்கும் சம்பளத்தை கொடுங்கள், இல்லை என்றால் நடையை கட்டுங்கள் என்று தில்லாக கூறுகிறாராம்.

அவர் பேசும் தோரணையைப் பார்த்து தயாரிப்பாளர்களே அசந்து நிற்கிறார்களாம்.

 

உலகநாயகன் என்ற பட்டத்தை விட நடிகன் என்ற அடைமொழியே போதும்! - கமல் ஹாஸன்

உலகநாயகன் என்ற பட்டத்தை விட, நடிகன் கமல் என்ற அடைமொழியே எனக்குப் போதும் என்று கமல் ஹாஸன் கூறினார்.

ஜீது ஜோசப் இயக்கத்தில் கமல் - கவுதமி நடித்த பாபநாசம் படம் சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டுள்ளது. இந்தப் படம் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் ஒரு செய்தியாளர் சந்திப்பு நேற்று நடந்தது.

I'm not Ulaganayagan, just an actor - Kamal Hassan

இதில் பாபநாசம் படத்தில் நடித்த அத்தனைப் பேரும் கலந்து கொண்டு மீடியாவுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி கூறினர்.

அப்போடு கமலிடம், "பாபநாசம்' படத்தில் போலீஸிடம் அடி வாங்குவது போல் நடிக்க எப்படிச் சம்மதித்தீர்கள்?" என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த கமல், "எனக்கு தனியாக முகவரி கிடையாது. நான் ஒரு நடிகன். நீங்கள் தான் 'உலக நாயகன்' என்று பட்டத்தை கொடுத்து தள்ளிவைத்து இருக்கிறீர்கள். என்னை கமல்ஹாசன் என்று அழைப்பதைவிட நடிகன் என்று கூப்பிட்டால் பெருமைப்படுவேன்," என்றார்.

ஒரு மலையாள ரீ-மேக்கில் நடித்தது பற்றி கேட்டதற்கு, "சினிமாவுக்கு மொழி கிடையாது. அப்படி பார்த்தால் நமக்கு எம்.ஜி.ஆர். கிடைத்திருக்க மாட்டார். நான் இங்கே தமிழ் மீடியாக்கள் மத்தியில் நின்று சொல்கிறேன். நான் பாதி மலையாளி. இதை அப்படியே கேரளாவில் சொன்னால் 'கமல் முழு மலையாளி' என்று உரிமையாக சண்டைக்கு வருவார்கள்," என்றார்.

 

வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க... டீசர் ரெடி, ரிலீஸுக்கும் தயார்!

சென்னை: ஆர்யா - சந்தானம் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க, படத்தின் டீசர் மற்றும் பட வெளியீட்டுத் தேதிகளை முறைப்படி படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.

இயக்குநர் ராஜேஷின் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம் மற்றும் தமன்னா நடித்து இருக்கும் படம் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க. சமீபத்தில் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை நாளை (ஜூலை 10) வெளியிட இருக்கின்றனர், மேலும் வருகின்ற ஜூலை 18 படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலையும் படப்பிடிப்புக் குழுவினர் வெளியிடுகின்றனர்.

பாஸ் என்கின்ற பாஸ்கரன் படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆர்யா- ராஜேஷ்- சந்தானம் இம்மூவரும் இணைந்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகமாக உள்ளது.

ஆர்யாவின் 25 வது படமாக உருவாகி இருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதியன்று உலகமெங்கும் வெளியாகின்றது, ரசிகர்களின் எதிர்பார்ப்பை டீசர் பூர்த்தி செய்யுமா? என்று பார்க்கலாம்....

 

32 நாள் 'கத்துக்குட்டி' கூடத்தான்.... கால்ஷீட்டை வாரிவழங்கிய “பரோட்டா சூரி”

சென்னை: தமிழ் காமெடி நடிகர்களில் நம்பர் ஒன்னாக விளங்குகிறார் பரோட்டா சூரி, வெண்ணிலா கபடி குழுவில் அறிமுகமான சூரி இன்று எட்ட முடியாத அளவுக்கு உச்சத்தில் இருக்கிறார்.

வடிவேலு மற்றும் சந்தானம் போன்றவர்கள் கதாநாயகனாக மாற, சூரியின் காட்டில் தற்போது அடைமழை தான், இரவுபகலாக 24மணி நேரமும் நடித்தால் கூட பல படங்களுக்கு கால்ஷீட் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பிஸியாக இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

Kathukutti Movie

சமீபத்தில் புலி படத்தில் சூரியை நடிக்கக் கூப்பிட்ட போது கால்ஷீட் இல்லாத காரணத்தால் அதில் நடிக்கவில்லை சூரி, ஆனால் புதுமுக இயக்குநர் ஒருவருக்கு கால்ஷீட்டை வாரி வழங்கி இருக்கிறார்.

நடிகர் நரேனை வைத்து கத்துக்குட்டி என்ற காமெடிப் படத்தை இயக்கி வருகிறார் அறிமுக இயக்குநர் சரவணன், இதற்காக சூரியிடம் கால்ஷீட் கேட்டபோது சுளையாக ஒரு மாதத்தை ஒதுக்கிக் கொடுத்திருக்கிறாராம்.

மொத்தம் 32 நாட்கள் இந்தப் படத்திற்காக கால்ஷீட் ஒதுக்கியிருக்கும் சூரி, டப்பிங் பேசுவதற்கு தனியாக தேதிகளை அளிக்கவும் தயாராக இருக்கிறார்.

சூரியின் இந்த செயல் பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது, சூரியிடம் இதற்கான காரணம் கேட்டபோது சின்னபடம் பெரிய படம் என்ற பாகுபாடு எதுவும் நான் பார்ப்பதில்லை கதைதான் முக்கியம். எனக்கு கதை பிடித்திருந்தால் உடனடியாக தேதிகளை வழங்கி விடுவேன், நான் இந்தப் படத்திற்காக இவ்வளவு நாட்களை ஒதுக்கியது ஏன் என்று படம் வந்த பிறகு உங்களுக்கும் தெரியவரும்.

இதுமட்டுமின்றி படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் நான் கண்டிப்பாக கலந்து கொள்வேன் என்று கூறி, அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார் சூரி.

நல்லது நடந்தா சரிதான்...

 

“ஊதா ரிப்பனுக்கு பச்சை கலர்ல ஒரு அக்கா இருக்கு”... பேட்டி எடுக்க நச்சரிக்கும் தாய்க்குலம்!

சென்னை: ஒரே படத்தில் ஓஹோ என உயர்ந்தவர் இந்த ரிப்பன் நடிகை. அடுத்தடுத்து சொல்லிக் கொள்ளும் படி வெற்றிப் படங்கள் தராவிட்டாலும், முதல் பட வெற்றி இன்னமும் நடிகையோடு ஒட்டிக் கொண்டு தான் இருக்கிறது.

இதனால் கை நிறையப் படங்களோடு நடிகை உலா வருகிறார். எனவே, நடிகையைப் பேட்டி எடுக்க நினைத்து யாராவது போன் செய்தால், தாய்க்குலம் தான் பேசுகிறார்.

One more actress in ribbon actress house

பேட்டி தானே தந்து விடலாம் எனப் பேசும் தாய்க்குலம், பின்னர் மெதுவாக, ‘அப்படியே நம்ம வீட்ல இன்னொரு நடிகை இருக்காங்க, அவங்களையும் பேட்டி எடுக்குறீங்களா?' என தூண்டில் போடுகிறாராம்.

ஆம், நடிகையின் அக்காவும் ஒரு நடிகை தான். ஆனால், தங்கை அளவிற்கு பிரபலம் இல்லை.

எனவே, தங்கையைப் போலவே அக்காவையும் தமிழில் முன்னணி நாயகிகளுள் ஒருத்தராக ஆக்கியே தீருவது என தாய்க்குலம் சபதம் எடுத்து செயல்பட்டு வருகிறாராம்.

கண்ணா ரெண்டாவது லட்டு தின்ன ஆசையா!

 

கே பாலச்சந்தருக்கு சிலை... இயக்குநர்கள் சங்கம் கோரிக்கை!

சென்னை: இயக்குநர் சிகரம் என அழைக்கப்பட்ட மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தருக்கு மயிலாப்பூரில் சிலை வைக்க வேண்டும் என இயக்குநர் சங்கத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு சமீபத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

Tamil cinema directors request statue for K Balachander

ஏற்கெனவே தலைவராக இருந்த விக்ரமன், செயலாளராக இருந்த ஆர்.கே.செல்வமணி, பொருளாளராக இருந்த வி.சேகர், துணைத் தலைவர்களாக இருந்த பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் ஆகியோரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், இவர்கள் அனைவரும் மீண்டும் அந்த பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இதேபோல் இணைச் செயலாளர்களாக சுந்தர் சி, பேரரசு, லிங்குசாமி, ஏகாம்பவாணன், ஆ.ஜெகதீசன் ஆகியோரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

செயற்குழுவுக்கு 17 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து 2015-2017-ம் ஆண்டுக்கான இயக்குநர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் விக்ரமன் தலைமை தாங்கினார். பொருளாளர் வி.சேகர் முன்னிலை வகித்தார்.

கூட்டம் முடிந்தபின், விக்ரமன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இயக்குநர்கள் சங்க வரலாற்றில் முதல்முறையாக அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த அணியினர் செய்த சேவைகளுக்கு கிடைத்த அங்கீகாரம் இது.

வருகிற ஆண்டுகளில், முடங்கிக் கிடக்கும் படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் இணைந்து முயற்சி மேற்கொள்வோம்.

சமையல் கேஸ் மானியத்தை நான் திருப்பிக் கொடுத்து விட்டேன். எங்கள் சங்க உறுப்பினர்களாக இருக்கும் மேலும் 200 பேர் கியாஸ் மானியத்தை திருப்பிக் கொடுக்க முன்வந்துள்ளனர்.

சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனைக்கு நான் உடல் தானம் செய்து இருக்கிறேன். இதுபோல் சங்க உறுப்பினர்கள் 200 பேர்களும் உடல் தானம் செய்ய முன்வருவார்கள்.

மறைந்த இயக்குநர் கே.பாலசந்தருக்கு சென்னை மயிலாப்பூரில் சிலை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்,'' என்றார்.