‘மானாட மயிலாட’ குஷ்புவைக் காணோமே?

Where Were U Kusboo

கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக அமர்ந்து மார்க் போட்ட குஷ்புவை இந்த வாரம் பார்க்க முடியவில்லை. நிகழ்ச்சியின் இயக்குநர் கலா, மற்றொரு நடுவர் பிரசாந்ந் உடன் இணைந்து நடனக்கலைஞர்களுக்கு மார்க் போட்டனர்.

கலைஞர் தொலைக்காட்சி தொடங்கியதில் இருந்தே அதில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி ஷோ மானாட மயிலாட. இதுவரை 7 சீசன்களை கடந்து 8 வது சீசன்வரை வந்துள்ளது.

கலா மாஸ்டர் இயக்கியுள்ள இந்த நடனநிகழ்ச்சியில் சின்னத்திரைக் கலைஞர்களின் நடனம்தான் முக்கிய அம்சம். இதனை திரை உலகைச் சேர்ந்த பிரபலங்கள் நடுவர்களாக அமர்ந்து மதிப்பெண் போடுவார்கள். வெற்றி பெரும் நடன ஜோடிக்கு பட்டமும், பல லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலா, பிருந்தா, ரம்பா, சிம்ரன், குஷ்பு, நமீதா என பலரும் நடுவர்களாக வந்துள்ளனர். 8 வது சீசனில் நடுவராக முதன் முறையாக பிரசாந்த் வந்தார். குஷ்பு, கலா, பிரசாந்த் ஆகியோர் அமர்ந்து மதிப்பெண் போட்டு வந்த நிலையில் இந்த வாரம் குஷ்பு இடம் பெறவில்லை.

கலா மாஸ்டரும், பிரசாந்தும் மட்டுமே நடுவர்களாக இருந்தனர். அதுவும் சிறைச்சாலை செட் நடனம் என்பதால் கலா மாஸ்டர் வழக்கறிஞர் போலவும், பிரசாந்த் சிறை அதிகாரி போலவும் உடை அணிந்திருந்தனர். நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் கீர்த்தி, ரியாஸ்கான் ஆகியோர் சிறை அதிகாரி போல உடை அணிந்திருந்தனர்.

சினிமாக்களிலும் சீரியல்களிலும்தான் மது அருந்துவது, புகைப்பது போல காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இப்பொழுது ரியாலிட்டி ஷோக்களிலும் மது அருந்தும் காட்சிகள் இடம் பெற ஆரம்பித்துவிட்டன. நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கொஞ்சம் கவனிக்கலாமே?

 

ஈழத் தமிழர்களுக்கு விடியல் பிறக்க வேண்டும்- இது நடிகர் விஜய்யின் 'பிரார்த்தனைக்' கடிதம்

Vijay Prays The Betterment Sri Lankan Tamils

சென்னை: படப்பிடிப்புக்காக ஆஸ்திரேலியாவில் இருப்பதால் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் ஈழத் தமிழர்களுக்கு விடியல் பிறக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன், என நடிகர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் - நடிகைகள் நேற்று சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.

நடிகர் அஜீத், சூர்யா, கார்த்தி ஆகியோர் காலையில் தொடங்கி மாலை வரை உண்ணாவிரதம் இருந்தனர்.

உடல்நிலை காரணமாக, சூப்பர்ஸ்டார் ரஜினி சில மணி நேரம் மட்டுமே உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார். மாலையில் வந்த கமல் சில நிமிடங்கள் மட்டுமே இருந்தார்.

நடிகர் விஜய் ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பில் இருப்பதால் உண்ணாவிர போரட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் போராட்டம் குறித்து சங்கத்தலைவர் சரத்குமாருக்கு அவர் கடிதம் அனுப்பியிருந்தார்.

அக்கடிதத்தில் அவர், ‘'தமிழ் உணர்வுள்ள ஒவ்வொரு மனிதனும் ஈழத்தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை எண்ணி கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த உணர்வுகளை பயிர் செய்யும் விதத்தில் கலைஞர்கள் ஒன்று திரண்டு உங்கள் (சரத்குமார்) தலைமையில் உண்ணாவிரதம் நடத்துவதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த போராட்டத்தில் நானும் கலந்து கொள்ள வேண்டு என்ற உணர்வு இருந்தாலும், ஆஸ்திரேலியாவின் படப்பிடிப்பில் இருப்பதால் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள இயலாதது குறித்து வருத்தமடைகிறேன். ஈழத் தமிழர்களுக்கு விடியல் பிறக்க வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

 

பிரபல படதயாரிப்பாளர் மனைவி் மாயம்!

ஹைதராபாத்: பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் நந்தகிஷோர் மனைவி இரு குழந்தைகளுடன் மாயமானார். அவரைக் கண்டுபிடித்துத் தருமாறு போலீசில் புகார் செய்துள்ளனர்.

தெலுங்கில் பல படங்களை தயாரித்தவர் நந்தகிஷோர். இவரது மனைவி பெயர் நீரஜா (26). இவர்களுக்கு பிரேம்சத்ய யாதவ், புனித்யாதவ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் ஹைதராபாத் போர்பந்தா பகுதியில் உள்ள வி.ஆர்.ஆர். நகரில் வசித்து வருகிறார்கள்.

நந்தகிஷோரின் சொந்த ஊர் திருப்பதி. எஸ்.எஸ்.பிலிம் பேக்ட் என்ற பெயரில் இங்கிருந்துதான் அவர் படங்களை தயாரித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 23-ந்தேதி நீரஜா தனது 2 மகன்களுடன் வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

நந்தகிஷோர் உறவினர் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களை மனைவி-குழந்தைகளைத் தேடிப் பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர் எஸ்.ஆர்.நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து நீரஜாவையும், மகன்களையும் தேடி வருகின்றனர்.

 

கேன்ஸ் விழாவில் கோச்சடையான் - முதல் முறையாக ரஜினியும் கலந்து கொள்கிறார்!

Rajini Launch Kochadaiyaan Trailer At Cannes

சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜியின் பிரமாண்ட படமான கோச்சடையான் கேன்ஸ் விழாவில் கலந்து கொள்கிறது. அங்கு வைத்துதான் படத்தின் ட்ரைலரே வெளியிடப்பட உள்ளது. அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினியே வெளியிடப் போகிறார் என செய்திகள் பரபரக்கின்றன.

உலகின் முக்கிய திரைப்படத் திருவிழா கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா. 1946-ம் ஆண்டிலிருந்து நடந்து வரும் விழா இது.

இந்த ஆண்டு மே 15 முதல்26-ம் தேதி வரை இந்த விழா நடக்கிறது. சர்வதேச அளவில் ஏராளமான படங்கள் இங்கே திரையிடப்படுகின்றன. புதிய படங்கள், செய்திப் படங்கள், குறும்படங்கள், முன்னோட்ட காட்சிகளை இங்கே வெளியிடவும் கேன்ஸ் விழா வாய்ப்பளிக்கிறது.

ஈராஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க, சௌந்தர்யா ரஜினி இயக்க, வரும ஜுலையில் வெளியாகப் போகும் கோச்சடையானின் முதல் முன்னோட்டக் காட்சியை கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட முடிவு செய்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் முறையாக இந்த விழாவில் பங்கேற்று, கோச்சடையானின் சர்வதேச முன்னோட்டக் காட்சியை வெளியிடுகிறார். படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான டாக்டர் முரளி மனோகர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழ் திரைப்படம் ஒன்றின் முன்னோட்டக் காட்சி கேன்ஸில் வெளியாவது இதுவே முதல் முறை!

 

பாலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு தாவப் பார்க்கும் அசினுக்கு கஜினி 2 வாய்ப்பு கிடைக்குமா?

Will Asin Return Kollywood With Kajini 2   

சென்னை: கஜினி 2 படம் வரவிருக்கிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. கஜினியில் நாயகியாக நடித்த அசினே இதிலும் நடிப்பாரா என்று தெரியவில்லை.

கஜினி படம் சூர்யா, அசினுக்கு பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த படம். இன்னும் சொல்லப் போனால் அசினின் திரையுலகில் புதிய சகாப்தத்தை துவங்கி வைத்த படம். கஜினி இந்தி ரீமேக் மூலம் தான் அசின் பாலிவுட் போனார். ஆனால் அவர் அப்படியே அங்கேயே செட்டிலாகிவிட்டார்.

பாலிவுட்டில் புதிதாக படங்களில் ஒப்பந்தமாகாத அவர் கோலிவுட் திரும்பும் எண்ணத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கஜினி 2 எடுக்கப் போகிறார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது. கஜினி 2விலும் அசின் தான் நாயகியா என்று தெரியவில்லை. அப்படி ஒரு வேளை அவரை நாயகியாக்கினால் இந்த படம் மூலம் அவர் கோலிவுட்டில் செட்டிலாகிவிடுவாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

அசினுக்கு இந்த வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

உண்ணாவிரதத்துக்கு வரவே இல்லை விஜய்... ஆஸ்திரேலியாவில் ஷூட்டிங்கில் பிஸியாம்!

Vijay Is The Notable Absent Nadigar Sangam Fast

சென்னை: சென்னையில் நடிகர் சங்கம் ஈழத் தமிழருக்காக நடத்திய உண்ணாவிரதத்தில் ஆப்சென்டான மிக முக்கியமான ஒருவர் நடிகர் விஜய்.

ஆனானப்பட்ட சூப்பர் ஸ்டாரே தன் உடல்நிலையைப் பொருட்படுத்தாமல், கொளுத்தும் வெயிலில் சில மணி நேரங்கள் வந்து அமர்ந்துவிட்டு, தன் ஆதரவைத் தெரிவித்துச் சென்றார்.

அஜீத், சூர்யா, கார்த்தி உள்பட பெரும்பாலான நடிகர்கள் தங்கள் ஆதரவை நேரில் தெரிவித்து உண்ணாவிரதம் இருந்தனர். ஆனால் விஜய் மட்டும் வரவில்லை. இதுகுறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரிடம் கேட்டபோது, "தலைவா பட ஷூட்டிங்குக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார் விஜய். அதனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை," என கடிதம் அனுப்பியுள்ளார் என்றார்.

இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள வசதியாகத்தான் உள்ளூர், வெளியூர்களில் நடக்கும் அனைத்து படப்பிடிப்புகளையும் ரத்து செய்வதாக நடிகர் சங்கம் அறிவித்தது. மேலும் இது வெளிநாடுகளில் நடக்கும் படப்பிடிப்புகளுக்கும் பொருந்தும் என்றனர்.

இதனால் தன் சீனப் பயணத்தை ஒத்தி வைத்துவிட்டு படப்பிடிப்பில் பங்கேற்றார் விக்ரம். சூர்யாவும் அஜீத்தும் தன் படப்பிடிப்புகளை தள்ளி வைத்துவிட்டு இடையில் இந்த உண்ணாவிரதத்துக்காக கிளம்பி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவே ரஜினி இந்த உண்ணாவிரதத்துக்கு வராமல் காரணம் கூறியிருந்தால், காற்றில் கத்தி சுழற்றும் இந்த காகித போராளிகள் என்னமா பொங்கியிருப்பார்கள் என்பது உண்ணாவிரதத்தைப் பார்க்க வந்தவர்களின் முணுமுணுப்பாக இருந்தது!

 

12 போட்டியாளர்களுடன் '60 நொடி ஆர் யூ ரெடி'

Vijay Tv 60 Nodi R U Ready

‘60 நொடி ஆர் யூ ரெடி' விஜய் டிவியில் புத்தம் புதிய கேம் ஷோ தொடங்கியுள்ளது. உடல், மன ரீதியான பலத்தை சோதிக்கும் விளையாட்டு நிகழ்ச்சி இது.

ஹோம் ஸ்வீட் ஹோம் என்ற நிகழ்ச்சி முதலில் விஜய் டிவியில் வாரந்தோறும் ஒளிபரப்பானது. அதில் இரண்டு குழுக்கள் பங்கேற்று விளையாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் 12 நட்சத்திரங்கள் பங்கேற்று விளையாடுகின்றனர்.

எடை தூக்குதல், அதற்கு எதிரான சிறிய பந்து ஒன்றை தட்டில் வைத்து விழாமல் ஒரு நொடிக்கு வைத்திருத்தல் என ஆரம்பமே அமர்களமாக தொடங்கியுள்ளது.

ரிந்தியா, பாலாஜி, ஷிவானி, படவா கோபி, போஸ் வெங்கட், ரோபோ சங்கர், ஜார்ஜ், காவ்யா, தேவ், சூசன், ரஜிதா, சமந்தா ஆகிய 12 போட்டியாளர்கள் இதில் பங்கேற்று தங்களின் திறமையை வெளிப்படுத்துகின்றனர்.

சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியை ஈரோடு மகேஷ், பாவனா தொகுத்து வழங்குகின்றனர்.

இந்த வாரம் ஆண்கள் மட்டுமல்ல பெண் நட்சத்திரங்களும் எடை தாங்குதல் போட்டியை சிறப்பாக எதிர் கொண்டனர். உடல் ரீதியாகவும் சரி, மனரீதியாகவும் சரி ஆண்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என்பதை வெளிப்படுத்தினர்.

ஆனால் தொகுப்பாளர் பாவனாவிடம் ரோபோ ஷங்கர் செய்த ரொமான்ஸ் கொஞ்சம் ஓவராகத்தான் இருந்தது. சூப்பர் சிங்கரில் மாபாக ஆனந்துடன் ஜோடி சேர்ந்துள்ள பாவனா இதில் விஜய் டிவிக்கு புதியமுகமான ஈரோடு மகேஷ் உடன் ஜோடி சேர்ந்து நிகழ்ச்சியை உற்சாகமாக தொகுத்து வழங்குகிறார்.

 

இது உண்ணாவிரதமல்ல, பேசாவிரதம்: ஒருத்தரும் வாய் திறக்கவில்லை!

Nadigar Sangam Restricted Actors Not To Speak In The Fa   

சென்னை: நடிகர் சங்கம் உண்ணாவிரதம் நடத்தினாலும், வழக்கம் போல் அங்கே யாரும் பேசவில்லை. வந்தார்கள், அமைதியாக உட்கார்ந்தார்கள், பலர் அங்கேயே இருந்தனர்.. சிலர் சில மணி நேரங்களுக்குப் பிறகு எழுந்து சென்றனர்.

இந்த உண்ணாவிரத அறிவிப்பு வந்த உடனே முடிவு செய்யப்பட்ட விஷயம், யாரும் எந்தவித கருத்தையும் உண்ணாவிரதப் பந்தலில் பேசக் கூடாது. அதற்கு பதில் ஒருமனதாக உண்ணாவிரத முடிவில் தீர்மானங்களை நிறைவேற்றிவிடலாம் என்று முடிவு செய்து, அதை அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் தெரிவித்திருந்தனர்.

வழக்கம்போல நடிகர்கள் உணர்ச்சி வசப்பட்டு இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு, தனித் தமிழ்நாடு என்றெல்லாம் பேசி சிக்கலை உண்டாக்கிவிடப் போகிறார்கள் என்ற பயம்தான் இதற்கு முக்கியக் காரணம்.

மத்திய அரசுக்கு எதிராக, அல்லது காங்கிரசுக்கு எதிராக காரசாரமாகப் பேசி, வம்பை விலைக்கு வாங்காமல் இருக்க வேண்டுமே என்பதற்காகவே இந்த சுயகட்டுப்பாடு என்று கூறப்படுகிறது.

ஆனால் உண்ணாவிரதப் பந்தலுக்கு வெளியே தன் சொந்தக் கருத்து என்று சிலர் ரொம் எச்சரிக்கையாகப் பேட்டி கொடுத்ததைப் பார்க்க முடிந்தது.

ரஜினி, கமல், அஜீத், சூர்யா, விக்ரம், தனுஷ் என உண்ணாவிரதத்துக்கு வந்த அனைவரும் வெறுமனே பந்தலில் அமர்ந்து அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். வெயில் வேறு மிகக் கடுமையாக இருந்ததால், நீண்ட நேரம் அவர்களால் பந்தலில் அமர் முடியவில்லை.