த்ரிஷாவுக்கு கார்த்திகாவை இவ்ளோ பிடிக்குமா?

த்ரிஷாவுக்கு கார்த்திகாவை இவ்ளோ பிடிக்குமா?  

சென்னை: த்ரிஷாவுக்கு கோ பட நாயகி கார்த்திகாவை இவ்வளவு பிடிக்கும் என்று பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்காது.

ராதாவின் மூத்த மகள் கார்த்திகா இன்று தனது 21வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்துள்ளன. மேலும் அவர் பாரதிராஜாவின் இயக்கத்தில் நடித்துள்ள அன்னக்கொடி படம் நாளை ரிலீஸ் ஆகிறது. அன்னக்கொடிக்கு விளம்பரமே செய்யவில்லை என்று நினைத்த நிலையில் ஒருவர் அப்படத்தை தென் மாவட்டங்களில் ரிலீஸ் செய்ய தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை நாளைக்கு தான் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஒருவர் படத்திற்கு தடை கோரியுள்ளாரே அப்படி அதில் என்ன தான் இருக்கிறது என்று ஏற்கனவே பலர் பேச ஆரம்பித்துவிட்டனர். படம் ரிலீஸாகும் நேரத்தில் ஓசியில் நல்ல விளம்பரம் தான்.

சரி, நம்ம மேட்டருக்கு வருவோம். கார்த்திகாவின் பிறந்தநாளையொட்டி பல பிரபலங்கள் அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதில் த்ரிஷாவின் ட்வீட் தான் பலரின் கவனத்தை ஈர்க்கிறது. ட்வீட்டைப் பார்ப்பவர்கள் அடடா த்ரிஷாவுக்கு கார்த்திகாவை இவ்வளவு பிடிக்குமா என்று நினைக்கும்படி உள்ளது.

த்ரிஷாவின் ட்வீட்,

@KarthikaNair9 happppy happpy bdayyy sexyyyy womannn hav a great oneee . much love n kisses

 

ஒரு அழகான ஹீரோயின் கூட நான் டூயட் பாடறது கூட பொறுக்கல பல ஹீரோக்களுக்கு! - வடிவேலு

ஒரு அழகான ஹீரோயின் கூட நான் டூயட் பாடறது கூட பொறுக்கல பல ஹீரோக்களுக்கு! - வடிவேலு

ஒரு அழகான ஹீரோயினுடன் நான் டூயட் பாடினா கூட இங்குள்ள பல ஹீரோக்களுக்கு பொறுக்கவில்லை, என்று கூறியுள்ளார் வடிவேலு.

2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு வடிவேலு மீண்டும் நடிக்கும் படம் ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன். இதில் அவர் தெனாலிராமன், மன்னர் கிருஷ்ணதேவராயர் ஆகிய இரு வேடங்களில் நடிக்கிறார்.

அவருக்கு இந்தப் படத்தில் ஏகப்பட்ட ஜோடிகள். குறிப்பாக கிருஷ்ணதேவராயராக வரும் வடிவேலுவுக்கு 36 மனைவிகளாம்!

படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்கவிருந்தவர் பில்லா 2 படத்தில் நடித்த பார்வதி ஓமணக் குட்டன்.

ஆனால் இப்போது அவர் இல்லை. மீனாட்சி தீக்ஷித் என்பவர் நடிக்கிறார். இதுகுறித்து வடிவேலு கூறுகையில், "அந்தப் புள்ளை தாங்க முதலில் ஹீரோயினா நடிக்க ஒப்பந்தமாச்சு. அப்புறம் என்னாச்சின்னே தெரியல... அது நடிக்கல. அப்புறம்தான் தெரியுது... ஒருத்தன் ரெண்டு பேருல்லண்ணே... ஒரு கூட்டமே போய் அந்த புள்ள மனசை கலைச்சிருக்காய்ங்கன்னு... 'வடிவேலுவுக்கெல்லாம் ஜோடியா நடிக்கிறீங்களே... உங்க எதிர்காலம் அவ்ளோதான்னெல்லாம்' பயமுறுத்தி இருக்காணுங்க... இருக்கட்டும்ணே... இதையெல்லாம் ஏற்கெனவே பாத்ததுதானே...", என்றார்.

 

திரும்பவும் ‘முக்கோணக் காதல்’ கதைப் படங்கள் வரப்போவுதாம்...

திரும்பவும் ‘முக்கோணக் காதல்’ கதைப் படங்கள் வரப்போவுதாம்...

சென்னை: கொஞ்ச காலம் காணாமல் போயிருந்த முக்கோணக் காதல் கதைப் படங்களை திரும்பவும் தூசி தட்டும் முயற்சியில் இறங்கிவிட்டார்களாம் இயக்குநர்கள்.

பத்தாண்டுகளுக்கு முன்பு வரை முக்கோணக் காதல் கதைப்படங்கள் நிறைய வந்து, வசூலை வாரிக் குவித்தன. இரண்டு ஹீரோ, ஒரு ஹீரோயின் அல்லது ஒரு ஹீரோ, இரண்டு ஹீரோயின் என படமே கலர் புல்லாக இருந்த காலம் திரும்புகிறதாம்.

வழக்கம் போல, இதற்கும் வடக்கே முதலில் சோதனை முயற்சியில் இறங்கியுள்ளார்களாம். கூடிய சீக்கிரம் இந்த போபியா தமிழுக்கும் வந்துவிடும் வாய்ப்புள்ளது.

ஆனால், அந்தக் காலத்தில் ஈகோ இல்லாமல் பெரும் ஹீரோ, ஹீரோயின்கள் இணைந்து நடித்தனர். அது இப்போது சாத்தியமா என்பது கொஞ்சம் சந்தேகமே.

 

எது பர்ஸ்ட்...சாப்பாடா? அழகனா?: சிக்கலில் சின்னவரின் படம்

சென்னை: ரம்ஜான் ஸ்பெஷல் சாப்பாடு படமும் பரிமாற ரெடி, கல்லையும் கண்ணாடியையும் திரும்பத் திரும்ப உடையாமல் மோதவிடும் டைரக்டரின் படமும் ரெடி.

ஆனால், படத்தின் நாயகன் சாப்பாடு படத்திற்கு முன்னதாக, அழகன் படம் வந்தால் நன்றாக இருக்கும் எனக் ஆசைப்படுகிறாராம். தனது ஆவலை சம்பந்தப்பட்டவர்களின் காதுகளில் போட, விஷயம் இப்போ காட்டுத் தீயாக கொளுந்து விட்டு எரிகிறதாம்.

காரணம், சங்கத்தில் முறையிட போவதாக மிரட்டுகிறாராம் சென்னை கிரிக்கெட் டைரக்டர். திரைக்குப் பின்னால், சமாதான முயற்சிகள் நடந்து வருகிறதாம்.

 

சினிமாவுக்கு வருவதற்கு முன்னாள் கம்பி கட்டும் வேலை செய்த காமெடி நடிகர்

சென்னை: இன்றைய தேதியில் அனைத்து படங்களிலும் காமெடி பண்ணும் நடிகர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு கம்பி கட்டும் வேலை செய்தாராம்.

கோலிவுட்டின் பிசியான காமெடி நடிகர் என்றால் அனைவரும் சொல்வது அந்த சந்தன நடிகரின் பெயரைத் தான். காமெடியில் புகுந்து விளையாடும் அவர் நடிக்க வரும் முன்பு கம்பி கட்டும் வேலை செய்தாராம்.

அதன் பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து தற்போது கை நிறைய சம்பாதிக்கிறார். எந்த பகுதியில் கம்பி கட்டும் வேலை செய்தாரோ தற்போது அதே பகுதியில் பெரிய பங்களா வாங்கிப் போட்டிருக்கிறாராம். இது தவிர நகரின் மைய பகுதியிலும் ஒரு பங்களா வாங்கியுள்ளாராம்.

காமெடியில் சம்பாதிக்கும் பணத்தை அசையா சொத்துக்களில் முதலீடு செய்து வருகிறாராம். ரியல் எஸ்டேட் விலை தான் நாளுக்கு நாளுக்கு அதிகரித்துக் கொண்டே போகிறதால் அதில் முதலீடு செய்கிறாரோ. பிழைக்கத் தெரிந்த மனிதர் தான்.

 

'மிஸ்டர் விஜயகாந்த் பாவம் தமிழர்கள்... எங்களை விட்டுடுங்க!' - பாரதிராஜாவின் அடுத்த அட்டாக்

'மிஸ்டர் விஜயகாந்த் பாவம் தமிழர்கள்... எங்களை விட்டுடுங்க!' - பாரதிராஜாவின் அடுத்த அட்டாக்

சென்னை: தொடர்ந்து பரபரப்பு கிளப்பி வருகிறார் இயக்குநர் பாரதிராஜா. இளையராஜா, சமீபத்தில் மறைந்த மணிவண்ணன் ஆகியோருக்கு அடுத்து, இப்போது அவரது அட்டாக் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது.

தமிழரல்லாத விஜயகாந்த், தமிழரை ஆளக் கூடாது என்னும் பொருள்பட, மிஸ்டர் விஜயகாந்த், பாவம் தமிழர்கள், எங்களை விட்டுவிடுங்கள் என்று காட்டமாகக் கூறியுள்ளார்.

இந்த வாரம் விகடன் மேடையில் வாசகர் கேள்வி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பதில்:

கேள்வி: விஜயகாந்த்-எங்கே... உங்க மனசுல என்ன தோணுதோ... பளிச்னு சொல்லுங்க?

பதில்: இந்தியாவில் வியாபாரம் செய்யவந்த வெள்ளைக்காரன், ஒரு கட்டத்தில் நாட்டைவிட்டே ஓடிட்டான். டெல்லிக்குப் படையெடுத்த மொகலாயனும் திரும்பிப் போய்ட்டான். ஆனா, தென்னிந்தியாவில் படையெடுத்து வந்த விஜயநகரப் பேரரசைச் சேர்ந்தவங்க என்ன ஆனாங்க? கேரளாவிலும் கர்நாடகாவிலும் அவங்களைத் துரத்தியடிச்சுட்டாங்க.

ஆனா, தமிழ்நாட்டுல? இதுதான் பல பட்டறை கண்ட பூமியாச்சே... கலைஞர் 'பராசக்தி'யில் சொன்னது மாதிரி, வந்தாரை வாழவைக்கும் தமிழகம் அவங்களையும் வாழவெச்சுட்டு இருக்கு. அவங்களும் இங்கே சுகவாசியா இருந்து பழகிட்டதால, இடத்தைக் காலி பண்ண மாட்டேங்கிறாங்க. தமிழர்களின் பூமியில் அண்டிப் பிழைக்க வந்து தஞ்சம் அடைஞ்சவங்க, இப்போ தமிழ்நாட்டின் மண்ணுக்கும் ஆட்சிக்கும் சொந்தம் கொண்டாடுறாங்க. மிஸ்டர் விஜயகாந்த்... பாவம் தமிழர்கள்... எங்களை விட்டுடுங்க!''

இதே பாரதிராஜா விஜயகாந்தை வைத்தும் ஒரு படம் எடுத்திருக்கிறார். அந்தப் படத்துக்கு தலைப்பு என்ன தெரியுமா... 'தமிழ்ச் செல்வன்'!!

 

ஏ ஆர் முருகதாஸின் சிஷ்யர்கள் 'இருவர் ஒன்றானால்'...

பொதுவாக இணை இயக்குனராக பணிபுரிந்து வருபவர்கள் டைரக்டராக ஆவது தான் வழக்கம். ஆனால் இங்கே ஒருவர் தயாரிப்பாளராகியிருக்கிறார்.. அதுவும் பிரபல இயக்குநர் ஏ ஆர் முருகதாஸிடம் பணியாற்றியவர்.. பெயர் ஏஎம் சம்பத்குமார்.

இந்தப் படத்தை இயக்குபவர் அதே ஏஆர் முருகதாசிடம் உதவியாளராக இருந்த இன்னொருவரான அன்பு ஜி. படத்தின் தலைப்பு இருவர் ஒன்றானால்!

ஏ ஆர் முருகதாஸின் சிஷ்யர்கள் 'இருவர் ஒன்றானால்'...

தான் டைரக்ட் செய்யும் படத்தைக் கூட தள்ளி வைத்து விட்டு, அன்பு.ஜி-யின் கதையை கேட்ட மாத்திரத்தில் உடனே இந்த கதையை தானே தயாரிப்பது என முடிவு செய்தாராம் சம்பத்குமார். அந்த வேகத்திலேயே படப்பிடிப்பையும் முடித்து விட்டார்.

காதலை மையப்படுத்திய கதை என்பதால் புது முகங்களை அறிமுகம் செய்கிறார்கள். பல முகங்களை தேடி இறுதியாக கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளையே தேர்வு செய்துள்ளார்கள். ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவரான பி ஆர் பிரபு நாயகனாக தேர்வானார். விஸ்காம் மாணவர் மாலினி, மாடல் தீக்ஷிதா இரு கதாநாயகிகள் அறிமுகமாகிறார்கள்.

மேலும் ஷைலேந்திரி, கார்த்திகா, ஜனனி, பிரவின், அமர் மற்றும் பல மாணவ மாணவிகள் நடித்துள்ளார்கள். இவர்களுக்கு இரண்டு மாதம் பயிற்சி கொடுத்து நடிக்க வைத்துள்ளனர்.

ஏ ஆர் முருகதாஸின் சிஷ்யர்கள் 'இருவர் ஒன்றானால்'...

"வேட்டைக்காரன்"-ல் 'என் உச்சி மண்டையில சுர்ருங்குது...' என்ற பாடலை பாடிய குரு கிருஷ்ணா இப்படத்தில் இசைஅமைப்பாளராக அறிமுகமாகிறார்.

 

'பெரிய...’ஹீரோயின் லிஸ்டைக்காட்டி டைரக்டர்களை மிரட்டும் தம்பி நடிகர்

சென்னை: மாமா சௌக்கியமா போபியாவால் பாதிக்கப்பட்டுள்ள தம்பி நடிகர், தனக்குப் பிடித்தமான நடிகைகளை ஹீரோயின்களாகப் போட்டால் தான் கால்சீட் தருவேன் என அடம் பிடிக்கிறாராம்.

இதற்காக கஷ்டப்பட்டு முன்னணி நடிகைகளின் பெயர்களை வரிசைப்படுத்தி ஒரு லிஸ்ட் தயாரித்து வைத்துள்ளாராம். கால்சீட் கேட்டு வரும் தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர்களிடம் அதைக் காட்டி, பயமுறுத்துகிறாராம்.

தொடர்ச்சியாக வந்த படங்கள் பிளாப் ஆனதை மறந்து தம்பி இப்படி அலம்பல் பண்ணுதே என்று கலாய்க்கிறார்களாம் கால்சீட் கேட்டு வருபவர்கள். அதிலும் தம்பி கொடுக்கும் லிஸ்ட்ல் உள்ள நடிகைகள் எல்லாம் ஒரு கோடி சம்பளத்தை வாங்குபவர்கள் என்பது தான் பெரிய காமெடி.

இதனால், உன் சங்காத்தமே வேணாம்பா என அலறி அடித்து ஓடுகிறார்களாம் படத் தயாரிப்பாளர்கள்.

 

'ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்' - வடிவேலு நடிக்கும் படத்தின் தலைப்பு இதுதான்!

சென்னை: வடிவேலு ஹீரோவாக நடிக்கும் படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு முதலில் கஜபுஜ புஜகஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் என்று நீண்ட தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.

இப்போது படத்தின் தலைப்பு ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் என மாற்றப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்து. வடிவேலு, படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், இயக்குநர் யுவராஜ் தயாளன், வசனகர்த்தா ஆரூர்தாஸ் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

'ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்' - வடிவேலு நடிக்கும் படத்தின் தலைப்பு இதுதான்!

இந்தப் படத்துக்காக ஏவிஎம் ஸ்டுடியோவில் பிரமாண்ட அரண்மனை வடிவமைக்கப்பட்டுள்ளது.

படத்துக்கு வசனங்களை ஆரூர்தாஸ் எழுதுகிறார். டி இமான் இசையமைக்கிறார். வாலி, புலமைப்பித்தன், நா முத்துகுமார் பாடல்களை எழுதுகிறார்கள். ராம்நாத் ஷெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். எம் பிரபாகர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

 

இந்திராகாந்தியின் வாழ்கையை படமாக்கும் நட்டிகுமார்!

முன்னாள் பிரதமர், மறைந்த இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்குகிறார் இயக்குநர் நட்டி குமார்.

கணேஷ் வெங்கட்ராம் நடித்த பனித்துளி என்ற படத்தை இயக்கியவர்தான் இந்த நட்டிகுமார். இவர் தனது நீண்ட நாள் கனவாக நினைத்திருந்தது இந்திரா காந்தியின் வாழ்கையை படமாக்க வேண்டும் என்பதுதான்.

இந்திராகாந்தியின் வாழ்கையை படமாக்கும் நட்டிகுமார்!

அரசியலுக்குப்பால் இந்தியாவின் இரும்பு பெண்மணியாக போற்றப்படும் இந்திராகாந்தியின் வாழ்கை வரலாற்றை படமாக்கும் கனவு இப்போது நினைவாகப் போவது தனக்கு மிகுந்த பெருமையாக உள்ளது என்கிறார் நட்டி குமார்.

ஆங்கிலம், தமிழ், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் படம் தயாராகிறது.

இந்தப் படத்துக்கு IRON LADY INDHIRA GANDHI என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளார் நட்டிகுமார்.

படத்தில் இந்திராகாந்தி வேடத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகை சூசன் சரண்டாவை நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளாராம் நட்டிகுமார். ஆனால் இது சாத்தியமாகுமா என்றால், "காலம் கனியும் போது எல்லாம் நன்றாக நடக்கும்," என்கிறார் நட்டி.

 

சூர்யாவின் சிங்கம் 2-க்கு க்ளீன் 'யு' சான்று... 2,400 அரங்குகளில் ரிலீஸ்!

சென்னை: சூர்யாவின் சிங்கம் 2-க்கு க்ளீன் 'யு' சான்று... 2,400 அரங்குகளில் ரிலீஸ்!  

ஹரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா - ஹன்சிகா நடித்துள்ளனர். விவேக்கும், சந்தானமும் காமெடியில் கலக்கியுள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையில் வெளியாகியுள்ள பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தப் படத்தை சென்சார் குழுவினர் சமீபத்தில் பார்த்தனர். படத்தில் எந்த வெட்டுமில்லாமல் க்ளீன் யு சான்று அளித்தனர்.

ஜூலை 5-ம் தேதி இந்தப் படம் உலகமெங்கும் வெளியாகிறது. இதுவரை சூர்யாவின் எந்தப் படமும் வெளியாகாத அளவுக்கு 2400 தியேட்டர்களில் சிங்கம் 2 வெளியாகிறது.

தமிழகத்தில் மட்டும் 600 அரங்குகளுக்குமேல் படம் வெளியாகவிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

 

நடிகை லீனா மரியா பால் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: பல கோடி மோசடி வழக்கில் நடிகை லீனா மரியா பாலுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கனரா வங்கியில் ரூ.19 கோடி மற்றும் இன்னொரு வங்கியில் ரூ 75 லட்சம் பணத்தை மோசடி செய்த வழக்கில் நடிகை லீனா மரியா பால் கைது செய்யப்பட்டார். இந்த மோசடிகளை அரங்கேற்றிய அவரது காதலன் சுகாஷ் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நடிகை லீனா மரியா பால் ஜாமீன் மனு தள்ளுபடி

லீனாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், அனைத்து மோசடிகளையும் சுகாஷ்தான் செய்தார் என்றும், தனக்கு நடிகை ஆசை காட்டி ஆசை நாயகியாக வைத்திருந்தார் என்றும் கூறிவிட்டார்.

இப்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லீனா மரியா தனக்கு ஜாமீன் கேட்டு திருவள்ளூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

புதன்கிழமை இந்த மனுவை நீதிமன்றம் விசாரித்தது. அரசு தரப்பில் வழக்குரைஞர் வி.ஆர்.ராம்குமார் ஆஜராயினார். லீனா மரியா தரப்பில் வழக்குரைஞர் ஜான் சத்யா ஆஜராயினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி முகம்மது ஜபருல்லாகான், நடிகை லீனா மரியாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

பாரதிராஜாவின் அன்னக்கொடிக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு: படம் நாளை ரிலீஸாகுமா?

சென்னை: பாரதிராஜாவின் அன்னக்கொடி படத்தை தென்மாவட்டங்களில் திரையிட தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேவர் பாசறை இயக்கம் அமைப்பின் சார்பில் அதன் தலைவர் ஏ.கே. ரகுபதி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

அன்னக்கொடி திரைப்படத்தின் கதையில், வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த கதாநாயகன், கதாநாயகி காதலித்து திருமணம் செய்து கொள்வதாக உள்ளது. இத்திரைப்படத்தில் வரும் வசனங்கள், தென் மாவட்ட மக்களிடையே சமூக அமைதியைக் குலைப்பதாக இருக்கிறது.

பாரதிராஜாவின் அன்னக்கொடிக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு: படம் நாளை ரிலீஸாகுமா?

இதேபோன்ற கதையம்சம் கொண்ட பாரதி கண்ணம்மா திரைப்படம் வெளியானபோது, தென்தமிழகத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்பட்டது. ஆகவே, அன்னக்கொடி திரைப்படத்தை தென்மாவட்டங்களில் திரையிட அனுமதிக்கக் கூடாது. இதுகுறித்து தலைமைச் செயலர், திரைப்படத் தணிக்கை வாரியம், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது. இதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்க மனு நீதிபதி என். கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் கூறுகையில், திரைப்படம் திரைக்கு வராத நிலையில், மனுதாரர் படத்தின் கதையம்சத்தை முழுமையாக அறியாத நிலையில் சமூக அமைதியை சீர்குலைக்கும் என்று எப்படி கூற முடியும் என்றார். மேலும் வழக்கின் விசாரணை வரும் 28ம் தேதி அதாவது நாளைக்கு ஒத்தி வைத்தார்.

அன்னக்கொடி படம் நாளை தான் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

6 லட்சம் பாலோயர்களைக் கடந்தது கமல்ஹாஸன் பேஸ்புக் பக்கம்!

சென்னை: நடிகர் கமல்ஹாஸனின் பேஸ்புக் பக்கத்தில் அவரைத் தொடர்பவர்கள் எண்ணிக்கை நேற்று 6 லட்சத்தைத் தாண்டியது. இதுவே தன்னுடைய அதிகாரப்பூர்வ பக்கம் என கமல் ஒப்புதலளித்துள்ளார்.

இணைய வெளியை அதிகம் பயன்படுத்தும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் கமல்ஹாஸன். தன்னைப் பற்றிய செய்திகள், படங்களை இந்தப் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.

கமல் சார்பில் இந்த வேலைகளைச் செய்வது அவரது மய்யம் குழுதான்.

6 லட்சம் பாலோயர்களைக் கடந்தது கமல்ஹாஸன் பேஸ்புக் பக்கம்!

கடந்த மாதம், கமல்ஹாஸன் ட்விட்டரிலும் தனி பக்கம் தொடங்கியதாக செய்திகள் வெளியாக, அதை உடனே மறுத்திருந்தார் கமல். தனக்கு ட்விட்டரில் கணக்கு இல்லை என்று தனது பிஆர்ஓ மூலம் அறிவித்தார்.

இந்த நிலையில் அவரது பேஸ்புக் பக்கத்தில் அவரைப் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இது கமலின் அதிகாரப்பூர்வ ஒரிஜினல் பேஸ்புக் பக்கம்தான் என்பதைக் குறிக்கும் வகையில், அந்தப் பக்கத்துக்கு நீல நிற டிக் மார்க் குறி போடப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் கமல் ஹாஸன் என்ற பெயரில் பல பக்கங்கள் உள்ளன. அவற்றில் இதுதான் தனது ஒரிஜினல் பக்கம் என கமல் சான்றளித்துள்ளதால், அந்தப் பக்கத்துக்கு இந்த நீலக்குறியீடு தரப்பட்டுள்ளது.

 

ஜிவி பிரகாஷ் - சைந்தவி திருமணம் இன்று நடந்தது: திரையுலகம் வாழ்த்து!

சென்னை: பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் - பின்னணிப் பாடகி சைந்தவி திருமணம் இன்று சென்னையில் நடந்தது.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரும் பாடகி சைந்தவியும் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இரு தரப்பு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இரு ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தனர்.

அதன்படி இருவருக்கும் நேற்று நிச்சயதார்த்தம். ஹோட்டல் ரெயின் ட்ரீயில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சைந்தவிக்கு மோதிரம் அணிவித்தார் ஜிவி பிரகாஷ்.

ஜிவி பிரகாஷ் - சைந்தவி திருமணம் இன்று நடந்தது: திரையுலகம் வாழ்த்து!  

இன்று காலை இருவருக்கும் சென்னை மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடந்தது. மணமகள் சைந்தவிக்கு ஜிவி பிரகாஷ் தாலி கட்டினார். திருமணத்துக்கு திரளான நட்சத்திரங்கள் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.

முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவருமே திருமணத்துக்கு வந்திருந்தனர்.

இயக்குநர்கள் பாலு மகேந்திரா, கே பாக்யராஜ், பாலா, மணிரத்னம், ராஜீவ் மேனன், விஜய், புஷ்கர் - காயத்ரி ஆகியோர் நேரில் வந்து வாழ்த்தினர்.

நடிகர் சூர்யா திருமணத்துக்கு வந்து, தாலி கட்டி முடிக்கும் வரை அமர்ந்திருந்து வாழ்த்திவிட்டுச் சென்றார். மேலும் பூர்ணிமா பாக்யராஜ், கிரேஸி மோகன், நடிகர் விஜய் மனைவி சங்கீதா, ஷோபா சந்திரசேகர், தனஞ்செயன், கமலா செல்வராஜ், எல் ஆர் ஈஸ்வரி, நித்யஸ்ரீ மகாதேவன், இசையமைப்பாளர் தேவா, சாந்தனு உள்பட பலரும் வந்திருந்தனர்.

இன்று மாலை இதே அரங்கில் மணமக்களுக்கு திருமண வரவேற்பு விமரிசையாக நடக்கிறது.