காஞ்சனா 2 - விமர்சனம்

Rating:
3.0/5

எஸ் ஷங்கர்

நடிப்பு: ராகவா லாரன்ஸ், டாப்சி, கோவை சரளா, நித்யா மேனன், ஜெய்ப்ரகாஷ், ஸ்ரீமன், மனோபாலா

இசை: எஸ்எஸ் தமன், லியோன் ஜேம்ஸ், சி சத்யா, அஸ்வமித்ரா

ஒளிப்பதிவு: ராஜவேல் ஒளிவீரன்

தயாரிப்பு: ஸ்ரீராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் - சன் பிக்சர்ஸ்

எழுத்து, இயக்கம்: ராகவா லாரன்ஸ்

பில்லி, சூனியம், பேய்க் கதைகள் மீது தமிழர்களுக்கு நம்பிக்கையையும், நம்பிக்கையில்லாதவர்களுக்கு உள்ள ஈர்ப்பையும் மூலதனமாக்குவதில் ராகவா லாரன்ஸுக்கு இணையில்லை.

ஒரே மாதிரி கதைகள், திரைக்கதையமைப்பு, கிட்டத்தட்ட காட்சிகளும் அப்படியேதான்.. ஆனால் கடைசி காட்சி வரை சீட்டில் உட்காரவைத்து விடுகிறார் லாரன்ஸ். அதுதான் அவரது வெற்றி.

பேயென்றாலே வழக்கம்போல பயந்து நடுங்கும் ராகவாவுக்கு, ஒரு சேனலில் வேலைப் பார்க்கும் டாப்சி மீது ஒருதலையாய் காதல்.

காஞ்சனா 2 - விமர்சனம்  

அந்த டிவி சேனலின் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்த, பேய் இருக்கா இல்லையா என்ற ரியாலிட்டி ஷோவைப் படமாக்க மாமல்லபுரம் கடற்கரைச் சாலை பங்களாவுக்குப் போகிறது டாப்சி, ராகவா குழு.

பேயாக ஒருவரை செட்டப் செய்யும்போது, நிஜப் பேயே வந்துவிடுகிறது. அந்தப் பேய் டாப்ஸியின் உடம்பில் முழுமையாக இறங்கிவிடுகிறது. அப்படியே அவரைக் காதலிக்கும் ராகவா உடம்பில் இன்னொரு பேய்.

இவர்களிடம் மாட்டிக் கொண்டு படாத பாடுபடும் கோவை சரளா, இருவரையும் ஒரு சர்ச்சுக்கு அழைத்துப் போய் பேய் ஓட்ட ஏற்பாடு செய்கிறார். சர்ச் பாதிரியார்கள் பேயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்போது, அந்தப் பேய்களின் ப்ளாஷ்பேக் விரிகிறது. அதில் ஒன்றல்ல, 5 பேர் அநியாயமாகக் கொல்லப்பட்ட கதை தெரிகிறது. அவர்களைக் கொடூரமாகக் கொன்றவர்களை பழிவாங்கவே இப்போது ராகவா, டாப்ஸி் உடம்புக்குள் பேய்கள் வந்திருப்பதாகவும், அதற்கு பாதிரியார் அனுமதிக்க வேண்டும் என்றும் பேய்கள் கெஞ்ச, கருணையோடு பழிவாங்க அனுமதிக்கிறார் பாதிரியார். மீதியை உங்களால் யூகிக்க முடிகிறதல்லவா...

காஞ்சனா 2 - விமர்சனம்

காஞ்சனாவோடு ஒப்பிடுகையில், அதன் அடுத்த பாகமான இந்தப் படத்தில் விறுவிறுப்பு, திடுக்கிடல்கள் கொஞ்சம் குறைவுதான். காரணம் எல்லாமே கொஞ்சம் ஓவர் டோஸ். பேய்க் காட்சிகளும்தான்.

முதல் பாதியில் தன் தாயாரை வாடி போடி என்றழைப்பதெல்லாம் ரொம்பவே நெளிய வைக்கிறது. பாத் ரூமுக்கு வாட்ச்மேன் வைத்த வரை ஓகே.. ஆனால் ராகவா, மயில்சாமி, மனோபாலா, சாம்ஸ் காட்சி.. பேமிலி ஆடியன்ஸை மட்டுமே குறிவைக்கும் ராகவாவிடம் இதை எதிர்ப்பார்க்கவில்லை!

இடைவேளை வரை காட்சிக்குக் காட்சி, திகிலும் பகீர் சிரிப்பும் கலந்துகட்டி அடிக்கின்றன.

காஞ்சனா 2 - விமர்சனம்

ராகவா லாரன்ஸ் தன் மொத்த வித்தையையும் ஒரு நடிகராக இந்தப் படத்தில் காட்டியிருக்கிறார்.

போட்ட அத்தனை கெட்டப்புகளுக்கும் கச்சிதமாகப் பொருந்துகிறார் மனிதர். அந்த பாட்டி வேடம் செம்ம. இடைவேளைக்குப் பிறகு வரும் மொட்டை சிவா கலக்கல் என்றால், ஒரே காட்சியாக இருந்தாலும் அந்த திருநங்கையாக வரும் லாரன்ஸ்.. கறுப்பழகு!

டாப்சிக்கு இந்தப் படத்தில்தான் நடிக்க ஸ்கோப். சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். பின்பாதியில் மாற்றுத் திறனாளியாக வந்து மனதை அள்ளுகிறார் நித்யா மேனன்.

கோவை சரளா வெளுத்து வாங்கியுள்ளார் இந்தப் படத்திலும். அதேநேரம் காமெடி என்ற பெயரில் இவரை அந்த அடி அடிப்பதைத்தான் ஏற்க முடியவில்லை.

காஞ்சனா 2 - விமர்சனம்

காஞ்சனாவில் இருந்த பலரும் இந்தப் படத்திலும் வேறு வேறு வேடங்களில் தொடர்கிறார்கள். அந்தப் படத்தில் காமெடியில் கலக்கிய தேவதர்ஷினி மட்டும் ஏனோ இடம்பெறவில்லை.

ராஜவேல் ஒளிவீரனின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரும் பலம். அந்த கடற்கரை சாலைக் காட்சிகள் மிரட்டல்.

நான்கு இசையமைப்பாளர்கள். ஆனால் பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை. ஆனால் எஸ்எஸ் தமனின் பின்னணி இசை கச்சிதமாக பொருந்தியிருக்கிறது படத்துக்கு.

காஞ்சனா 2 - விமர்சனம்

ராகவாவுக்கு மக்கள் ரசனை புரிந்திருக்கிறது. அதற்காக மூன்று பாகங்களிலும் ஒரே மாதிரி கதைகளையா காட்டிக் கொண்டிருப்பது..? காஞ்சனாவில் வைத்திருந்த ப்ளாஷ்பேக் மாதிரி இந்தப் படத்தில் அழுத்தமான பின்னணி இல்லாததுதான், இரண்டாம் பாதியை கொஞ்சம் டல்லடிக்க வைக்கிறது. மற்றபடி கோடையில் குடும்பத்தோடு ரசிக்கக் கூடிய படம்தான் இது.

அடுத்து முனி 4 என தொடரும் போட்டிருக்கிறார். அதில் முற்றிலும் வித்தியாசமான காஞ்சனாவுக்காக காத்திருக்கிறோம் ராகவா!

 

தனியார் டிவி நிறுவனங்களுக்கு மிரட்டல் விடுத்ததாக புகார்: நளினி, ராதிகாவுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

சென்னை: தனியார் டிவி நிறுவனங்களுக்கு மிரட்டல் விடுத்ததாக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு நடிகைகள் ராதிகா, நளினி, இயக்குநர் விக்கிரமன் ஆகியோர் ஒரு வாரத்தில் பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.கார்மேகம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:

தனியார் டிவி நிறுவனங்களுக்கு மிரட்டல் விடுத்ததாக புகார்: நளினி, ராதிகாவுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

மொழி மாற்று சின்னத்திரை தொடர்களுக்கு எதிராக சென்னையில் கடந்த 15-ஆம் தேதி சின்னத்திரை நடிகர், நடிகைகள் போராட் டம் நடத்தினர். அப்போது பேசிய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராதிகா, சின்னத்திரை நடிகர்கள் சங்கத் தலைவர் நளினி, தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் ஆகியோர் மீது தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மிரட்டல் விடுத்துப் பேசினர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார் வாதிட்டார். அரசு வழக்கறிஞர் பிரபா வாதிடும்போது, இந்த மனு தொடர்பாக தமிழக காவல் துறை இயக்குநரிடம் விவரம் பெற்று தெரிவிக்க அவகாசம் வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து நடிகைகள் ராதிகா, நளினி, இயக்குநர் விக்கிரமன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

 

பாடகர் எஸ்பிபிக்கு கேரள அரசின் அரிவராசனம் விருது

திருவனந்தபுரம்: பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்துக்கு அரிவராசனம் விருது வழங்கியுள்ளது கேரள அரசாங்கம்.

கேரள அரசு சார்பில் ஆண்டு தோறும் சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் விழாவில், இந்த அரிவராசனம் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டின் விருது குறித்து கேரள தேவசம் போர்டு துறை மந்திரி வி.எஸ். சிவகுமார் கூறியிருப்பதாவது:-

பாடகர் எஸ்பிபிக்கு கேரள அரசின் அரிவராசனம் விருது

நீண்ட காலம் இசை உலகில் சிறந்த பணியாற்றி வரும் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அதிக அளவில் அய்யப்பன் பாடல்களை பாடி, மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளார்.

அய்யனின் புகழ் பாடி உலகெங்கும் பரவச் செய்த அவருக்கு இந்த ஆண்டின் அரிவராசனம் விருது வழங்க தீர்மானித்துள்ளது.

சபரிமலை சிறப்பு அதிகாரி கே. ஜெயக்குமார் தலைமையிலான தேர்வுக்குழு இந்த ஆண்டுக்கான விருது பெறுவோரை பரிசீலனை செய்து பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை தேர்ந்தெடுத்தது.

இது தொடர்பாக வருகிற ஜூன் மாதம் சபரிமலை சாஸ்தா கலையரங்கில் நடைபெறும் விழாவில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு அரிவராசனம் விருதும் ரூ.1 லட்சம் மற்றும் நற்சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட உள்ளது," என்றார்.

இதற்கு முன் பாடகர் கே.ஜே.ஏசுதாஸ் உள்பட பலருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

 

அட்வான்ஸே தரவில்லை.. தயாரிப்பு நிறுவனம் மீது ஸ்ருதி ஹாஸன் வழக்கு‍

ஹைதராபாத்: படத்தில் நடிக்க தனக்கு அட்வான்சும் தரவில்லை, தனக்கு தெரியாமலேயே தமன்னாவை நாயகியாகவும் ஒப்பந்தம் செய்து ஏமாற்றிவிட்டார்கள், என்று பிவிபி நிறுவனம் மீது நடிகை ஸ்ருதிஹாஸன் பதில் வழக்குப் போட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கில் தயாராகும் படமொன்றில் கார்த்தி, நாகார்ஜூனா நாயகர்களாக நடிக்கின்றனர். இப்படத்தில் நாயகியாக நடிக்க ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

அட்வான்ஸே தரவில்லை.. தயாரிப்பு நிறுவனம் மீது ஸ்ருதி ஹாஸன் வழக்கு‍

படப்பிடிப்பு துவங்கும் போது திடீரென அப்படத்தில் நடிக்க மறுத்து விட்டதாகக் கூறி, படத்தைத் தயாரித்த பிவிபி சினிமா நிறுவனம் சுருதி மீது ஹைதராபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புது படங்களில் ஸ்ருதி ஹாசன், நடிக்க தடை விதித்து உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து ஸ்ருதிஹாசன் ஹைதராபாத் சிட்டி சிவில் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "பிக்சர் ஹவுஸ் மீடியா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க என்னை ஒப்பந்தம் செய்தது உண்மைதான். ஆனால் அதற்காக நான் முன் பணம் எதுவும் வாங்கவில்லை. கால்ஷீட் விவரங்களை ஒரு மாதத்துக்கு முன்பே தெரிவிக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஏப்ரல் 2-ந்தேதி படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும் என்று மார்ச் 17-ந்தேதிதான் எனக்கு தெரிவித்தனர். அந்த நேரத்தில் நான் புலி படத்தில் நடித்து கொண்டிருந்தேன்.

எனவேதான் அந்த தேதிகளில் வர இயலாது என்று கூறினேன். அதன் பிறகு பட நிறுவனத்தினர் புலி படத்தின் தயாரிப்பாளர்களிடமும் பேசினார்கள். ஆனாலும் தேதிகள் ஒதுக்க முடியவில்லை. எனவேதான் அந்த படத்தில் இருந்து விலகுவதாக தகவல் தெரிவித்தேன். கோர்ட்டில் எனக்கு எதிராக பட நிறுவனத்தினர் வழக்கு போடுவதற்கு முன்பே தமன்னாவிடம் பேசி படத்துக்கு நாயகியாக ஒப்பந்தம் செய்து விட்டனர்.

இந்த விஷயத்தை நீதிமன்றத்தின் கவனத்தக்குக் கொண்டு வராமல் மறைத்து விட்டார்கள். புது படங்களில் நான் நடிப்பதற்கு தடை உத்தரவும் பெற்று விட்டனர். அட்வான்ஸ் தராமலும் தமன்னாவை தேர்வு செய்தும் ஒப்பந்தத்தை மீறியது அவர்கள்தான். எனவே புது படங்களில் நான் நடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையை நீதிபதி நாளை மறுநாள் 20 -ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

 

ரஜினி, கமல் படங்களைத் தயாரித்த ஜாக்பாட் சீனிவாசனம் மரணம்

ரஜினி, கமல் படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஜாக்பாட் சீனிவாசன் இன்று சென்னையில் மரணமடைந்தார்.

எழுபதுகளின் பிற்பகுதியில் ரஜினி சில பிரச்சினைகளில் சிக்கியிருந்த நேரம். அவரை வைத்துப் படமெடுக்க தயங்கிக் கொண்டிருந்த நேரத்தில், தர்மயுத்தம் படத்தை எடுத்தவர் ஜாக்பாட் சீனிவாசன். அந்தப் படம் ரஜினிக்கு மிகவும் உதவியாக அமைந்தது.

ரஜினி, கமல் படங்களைத் தயாரித்த ஜாக்பாட் சீனிவாசனம் மரணம்

கமலை வைத்து மீண்டும் கோகிலா போன்ற படங்களையும் இவர் தயாரித்துள்ளார். சாருசித்ரா என்பது இவரது பட நிறுவனமாகும்.

ஜாக்பாட் சீனிவாசன் சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

வடபழனியில் உள்ள வீட்டில் ஜாக்பாட் சீனிவாசன் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

 

மீண்டும் கமலுக்கு ஜோடியாகும் த்ரிஷா

த்ரிஷாவுக்கு திருமணம் என்றதுமே, அவரது படவாய்ப்புகள் குறைந்துவிடும் என்றுதான் பலரும் எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் அவரே எதிர்ப்பாராத வகையில் ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிகின்றன த்ரிஷாவுக்கு.

தற்போது ஜெயம் ரவியுடன் இணைந்து ‘அப்பாடக்கர்' படத்திலும் தெலுங்கில் இரண்டு படங்களிலும் நடித்து வரும் த்ரிஷாவுக்கு, கமலுடன் நடிக்கவும் வாய்ப்பு வந்திருக்கிறது.

மீண்டும் கமலுக்கு ஜோடியாகும் த்ரிஷா

ஏற்கனவே கமலுடன் இணைந்து ‘மன்மத அம்பு' படத்தில் நடித்திருக்கிறார் த்ரிஷா. ஆனால் அந்தப் படம் இருவருக்குமே மகிழ்ச்சியைத் தரும்படி அமையவில்லை.

இந்நிலையில் புதிய படம் ஒன்றில் கமல் நடிக்கவுள்ளார். இது முழுக்க முழுக்க ஆக்ஷன் படம். இதில் கமலுக்கு த்ரிஷாவை ஜோடியாக்கப் போகிறார்களாம்.

இந்தப் புதிய படத்தை இயக்கும் வாய்ப்பை தன் உதவியாளர்களில் ஒருவருக்கே வழங்க கமல் முடிவெடுத்துள்ளாராம்.

படப்பிடிப்பு மே மாதம் கடைசி வாரத்தில் தொடங்கவிருப்பதாகச் சொல்கிறார்கள்.

 

கவுதமியிடம் ரசம், முருங்கைகாய் சாம்பார் வைக்கக் கற்றுக் கொண்டேன்!- கமல் ஹாஸன்

சென்னை: தனது தினசரி நடவடிக்கைகளை ஒரு தினசரியில் பட்டியலிட்டுள்ளார் கமல் ஹாஸன்.

அவரது தினப் பட்டியல் என்ன? இதோ...

எனக்கு சாட் கல்ட்ஜென்னின் (Chad Kultgen) மனதை டிஸ்டர்ப் பண்ணும் எழுத்து பிடிக்கும். நேர்மையாக தீவிரமாக இருக்கும்.

கவுதமியிடம் ரசம், முருங்கைகாய் சாம்பார் வைக்கக் கற்றுக் கொண்டேன்!- கமல் ஹாஸன்

சமையல் கற்றுக்கொள்கிறேன். எனக்கு கவுதமி உதவுகிறார். ரசம் மற்றும் முருங்கைக் காய் சாம்பார் தயார் செய்ய கற்றுக்கொண்டேன்.

அவ்வப்போது பியானோ கற்றுக்கொள்கிறேன். இதற்கு முன்பு கார்த்திக் ராஜாவிடம் கற்றுக்கொண்டேன். அவர் மிகவும் நொந்துகொண்டார். எதையும் புரிந்துகொள்ளாத மாதிரி பாவனை செய்வதாக கூறினார்.

ஒரு மாதத்துக்கு 100 மணி நேரம் நகரும் படங்களைப் பார்க்கிறேன். குறைந்தபட்சம் 30 படங்கள்.

நான் எல்லா அமெரிக்க, ஐரோப்பிய டிவி சிரியல்களையும் பார்ப்பேன். போர்ஜியா, மார்கோ போலோ, பீகி பிளைண்டர்ஸ், பிரேகிங் பேட், கில்லிங் போன்றவை பிடிக்கும்.

முக்கியமாக நான் ஆவணப் படங்களை அதிகம் பார்ப்பேன். படங்களை விடவும் இவைதான் நல்ல யோசனைகளை வழங்குகின்றன.

நான் பிலிம் பெஸ்டிவல்களுக்குச் செல்வதில்லை. அது அரசியலாக்கப்பட்டுவிட்டது. தோளில் ஒரு பையை மாட்டிக்கொண்டு பெஸ்டிவலுக்குச் சென்று, படத்தைப் பற்றிய குறிப்புகள் எடுத்து, டீக்கடையில் உட்கார்ந்து படத்தைக் கிழிகிழி என கிழித்து திரும்பிவிட விரும்புகிறேன்.

இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

 

வள்ளுவன், கம்பன், பாரதி... ஜெயகாந்தனைப் பெற்றது நம் தமிழ்நாடு!

- இளையராஜா

''தமிழ் இலக்கிய உலகத்தையும் தமிழ்ச் சமூகத்தையும், தன் பேச்சாலும் எழுத்தாலும் ஈர்த்து அதிரவைத்த மிகப் பெரிய கலைஞன் ஜெயகாந்தன்.

வள்ளுவன், கம்பன், பாரதி... ஜெயகாந்தனைப் பெற்றது நம் தமிழ்நாடு!

அப்போது எனக்கு வயது 16. எங்களுக்குக் கல்வி என்பது ஜீவா, மாயாண்டி பாரதி, ஜெயகாந்தன் போன்றோரின் கருத்துக்களைக் கேட்பதுதான். எங்கள் அண்ணன் பாவலர் வரதராஜன், எங்களை ரயில் பெட்டிகள்போல ஒவ்வோர் ஊராக இழுத்துச்சென்று சுற்றிக்கொண்டிருந்த காலம் அது. மாட்டுவண்டி போகாத ஊர்களில்கூட எங்கள் பாட்டு வண்டி நுழைந்தது. கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில், அரசியல் பாட்டுக் கச்சேரி நடத்திக்கொண்டிருந்தோம். அந்த மேடைகளில் புரட்சிகரமான கருத்துக்களை, அதிரவைக்கும் குரலில் எவருக்கும் அஞ்சாமல் முழங்கிக்கொண்டிருந்த ஜெயகாந்தனை, ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டிருப்பேன். அவரது பேச்சையும் எழுத்தையும், ஒரு சிங்கத்தின் கர்ஜனை என்றுதான் சொல்லவேண்டும். சிங்கம் போன்ற கம்பீரம் அவருடைய கருத்தில் இருக்கும். அவருடைய மேடைப் பேச்சில் உதிரும் சொற்கள், நெருப்பும் மலரும் கொட்டுவதுபோல மாறி மாறி மிரளவைக்கும்; பிரமிக்கவைக்கும்; சிலிர்ப்பூட்டும்; துள்ளவைக்கும். தங்குதடை இல்லாமல் சுதந்திரச் சிந்தனையோடு பேசுவார். தீமைகள், அதிகாரத்துக்கு எதிராக ஆவேசம் பொங்கும்.

அப்போதெல்லாம் பேச்சாளர்களும் கச்சேரிக் கலைஞர்களும் ஒரே வீட்டில் தங்கும் எளிமையான வழக்கம் இருந்தது. இரவில் பாட்டுக் கச்சேரி முடிந்ததும், அந்த வீட்டில் தனிக் கச்சேரி ஆரம்பமாகும். ஜெயகாந்தன் தன் அனுபவங்களைச் சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். பழகிப்பார்த்தால் அவருடைய எளிமையும் அன்பும் பரிவும் புரியும்.

கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக, காங்கிரஸ் கட்சி சின்னத்தைக் கிண்டல்செய்து பிரசாரம் செய்தார் அண்ணன் பாவலர். கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றதும் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், அண்ணனை மேடைக்கு அழைத்துக் கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியைப் பற்றி அறிந்துகொண்ட ஜெயகாந்தன், மாயாண்டி பாரதியிடம் 'இவ்வளவு கேலியும் கிண்டலுமான பாடல்களைப் பாடியவர் யார்?' எனக் கேட்க, அப்போதுதான் அண்ணனை ஜெயகாந்தனுக்கு அறிமுகப்படுத்திவைத்தார் மாயாண்டிபாரதி. அதன்பிறகுதான் எங்கள் நட்பு தொடர்ந்தது. எங்கள் கிராமமான பண்ணைப்புரத்துக்கும் ஜெயகாந்தன் வந்திருக்கிறார்.

சென்னைக்கு வந்துசேர்ந்த பிறகு, நானும் அண்ணன் பாஸ்கரும் பாரதிராஜாவோடு அலைந்துகொண்டிருந்த காலத்தில், 'ஜெயகாந்தனைப் பார்த்துவிட்டு வரலாமே!' என, அவரது வீட்டுக்குச் சென்றோம். அப்போது அவர் சினிமாவில் காலூன்றி இருந்த சமயம். எங்களை எல்லாம் அரை டவுசர் போட்ட காலத்தில் இருந்து பார்த்தவராச்சே! வீட்டுக்குச் சென்றதும் காபி கொடுத்து வரவேற்றவர், 'என்ன?' என்பதுபோல பார்த்தார். உடனே நாங்கள், 'உங்களை நம்பித்தான் சென்னைக்கு வந்தோம் தோழரே!' என ஒரு பேச்சுக்காகச் சொன்னோம். திடீரெனக் குரலை உயர்த்தி, 'என் அனுமதி இல்லாமல் என்னை நம்பி எப்படி நீங்கள் வரலாம்? உங்களை நம்பித்தானே வந்திருக்க வேண்டும்?' என அதிரப் பேசிவிட்டு அமைதியாகிவிட்டார். சப்த நாடியும் ஒடுங்கி வெளியில் வந்துவிட்டோம்.

'என்ன மனுஷன் இவர். ஏதாவது வேலை இருக்குதுனு சொன்னா பரவாயில்லை. அதை விட்டுட்டு இப்படி நம்மளை வறுத்தெடுத்து அனுப்புறாரே...' என ஒரு பக்கம் சிரிப்பு. இன்னொரு பக்கம் ஜெயகாந்தன் சொன்ன, 'உங்களை நம்புங்க, சுயமா முன்னேறுங்க' என்ற வார்த்தைகள்தான், எதிர்காலத்தில் சினிமாவில் சாதிக்க வேண்டும் என எங்களைத் துரத்திக்கொண்டே இருந்தது.

ஒருமுறை ஜெயகாந்தன் என்னிடம், 'உங்களை இசைத் துறையில் பெரிய ஆளாக்கியவர்கள் எனச் சொல்வதற்கு எவனுக்கும் யோக்கியதை கிடையாது. நேர்மையாகக் காலத்தைப் பிழிந்து உழைத்தீர்கள். மக்கள்தான், உங்களைக் கண்டுகொண்டார்கள்; உங்களைச் சொந்தம் கொண்டாடுகிறார்கள்' எனச் சொன்னார்.

ஜெயகாந்தனை திருவண்ணாமலை கோயிலுக்கு ஒருமுறை அழைத்துச் சென்றேன். அவரைப் பற்றி ஓர் ஆவணப் படம் தயாரித்தேன். 'ஜெயகாந்தன் வாழ்ந்த காலத்தில், அவருடன் பேச முடியாமல் போய்விட்டதே' என எதிர்காலத்தில் ஏக்கம்கொள்பவர்களுக்குத்தான் அந்த ஆவணப்படம். அந்தச் சமயத்தில் அவரைச் சந்தித்து உடல்நிலை பற்றியும் தற்போதைய வாழ்க்கைப் பற்றியும் விசாரித்தேன். உடனே அவர், கை விரல்களை விரித்துக்காட்டி, 'ஏன்... நல்லாத்தானே இருக்கேன். டாக்டர் கேட்டுக்கிட்டதால சில பழக்கங்களை விட்டுட்டேன். இப்போ நான் எதுவும் எழுதுறது இல்லை. ஓர் எழுத்தாளனுக்கு வாழ்க்கை எவ்வளவு நீளமானது என்பது கணக்கு அல்ல. அது எவ்வளவு கூர்மையாக இலக்கை நோக்கிப் போய், மக்களைச் சந்தோஷப்படுத்துகிறது என்பதுதான் கணக்கு. நான் நல்லவனா... கெட்டவனா? 'கெட்டவன்'னு சொன்னா... அது இந்தச் சமூகம் எனக்குக் கொடுத்த சலுகை. 'நல்லவன்'னு சொன்னா, அதுக்கும் இந்தச் சமூகம்தான் காரணம். இந்தச் சமூகம் நமக்கு என்ன அனுபவத்தைக் கொடுக்குதோ அதைத்தான் நாமும் இந்தச் சமூகத்துக்குக் கொடுக்க முடியும்' எனச் சொல்லிச் சிரித்தார். நானும் அதை ஆமோதித்துச் சிரித்தேன்.

ஒருமுறை, 'எழுத்தாளர் என்றால் எழுதினால்தானா?' என்றார் ஜெயகாந்தன். எதிரில் இருந்த எல்லோரும் அமைதியானோம். திடீரென, 'கோவலன், மாதவியுடன் சரசமாடிக்கொண்டிருக்கும்போது, கண்ணகி அங்கே வந்துவிடுகிறாள்' என்றார். மீண்டும் அமைதி. 'கதையை இப்படி ஆரம்பிக்கக் கூடாதா?' எனக் கேட்டார். யாரும் பதில் சொல்லவில்லை. ஆனால், நாங்கள் வெளியே வந்தபோது அனைவருக்குள்ளும் வெவ்வேறு கோணங்களில் கண்ணகி கதை ஓடிக்கொண்டிருந்தது.

'சமூகமாகட்டும் அரசியலாகட்டும் மேடைகளாகட்டும் இலக்கியமாகட்டும்... இவர்கள் அத்தனை பேரோடும் அவர்கள் சொல்வதற்கு எல்லாம் எதிராகப் பேசிப் பேசி, எழுதி எழுதி வந்தவன். கடைசியில், என்னையும் இவர்கள் சகித்துக்கொண்டார்களே...' என்ற அவரது வரிகள், என்னைக் கலங்கடித்துவிட்டன. தன்னைப் பற்றிய அலசல் எவ்வளவு உண்மையாக இருந்தால், இந்த மாதிரியான ஒரு வார்த்தை வெளிவரும்? வாதத்துக்காகவோ சிந்தனைக்காகவோ, எல்லோருக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு அவருடைய எழுத்துக்கள் பதிலாகவும் தர்க்கரீதியிலான பக்கபலமாகவும் இருக்கின்றன என்பதை யாரும் மறுக்க இயலாது.

அவன்... எழுத்தாளர்களின் கர்வம். ஒட்டுமொத்தத் தமிழர்களின் தலைநிமிர்வு. 'வள்ளுவன், கம்பன், பாரதியைக் கண்ட தமிழ்' எனச் சொல்வதைப்போல, 'ஜெயகாந்தனைப் பெற்றது நம் தமிழ்நாடு' எனப் பெருமைப்படலாம்!''

-நன்றி: விகடன்

 

மேகதாதுவுக்காக கொந்தளிக்கும் கன்னட திரையுலகம்..கண்டுகொள்ளாமல் நழுவும் தமிழ் ஸ்டார்கள்!

சென்னை: மேகதாது அணைக்கட்டு விவகாரத்தில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது கன்னட திரையுலகம். ஆனால், 20 தமிழனை துள்ள, துடிக்க ஆந்திரா என்கவுண்டர் நடத்திய இடத்தில் தமிழ் பட சூட்டிங் நடந்துள்ளது. இவ்வளவுதான், நம்மூர் நடிகர்களுக்கும், கன்னட நடிகர்களுக்கும், உள்ள வித்தியாசம்.

காவிரிக்கு குறுக்கே புதிதாக அணை கட்ட தீர்மானித்த கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அனைத்துக் கட்சியினரும் போராட்டம் நடத்தினர். விவசாய சங்கங்களும் களமிறங்கின. தமிழகம் முழுக்க பந்த் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

மேகதாதுவுக்காக கொந்தளிக்கும் கன்னட திரையுலகம்..கண்டுகொள்ளாமல் நழுவும் தமிழ் ஸ்டார்கள்!

மீத்தேன் வாயு திட்டத்தால் டெல்டா மாவட்டங்கள் மலடாகும் என்பதற்காக பல கட்சிகளும் எதிர்த்தன. வைகோ களமிறங்கி வேட்டியை மடித்து கட்டி போராடினார், மீத்தேன் வாயு திட்ட அலுவலகம் காலியாகியுள்ளது. மத்திய அரசிடமிருந்தும், பாசிட்டிவ் பதில் வெளியாகியது.

ஆந்திராவில் தமிழக கூலித் தொழிலாளிகள் குருவி சுடுவதை போல சுட்டு கொலை செய்யப்பட்டனர். அதுவும், ஒன்றல்ல, இரண்டல்ல, இருபது பேர். அதற்கு நியாயம் கிடைக்க, தமிழ் உணர்வாளர்கள் ஒன்றுபட்டு குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், இவை எதிலுமே ஒரு தரப்பு மட்டும் தம்மடக்கிக் கொண்டுள்ளதை பார்த்தீர்களா. அது வேறு எந்த துறையும் இல்லை, நாம் நட்சத்திரங்களாக வைத்து கொண்டாடும் சினிமா பிரபலங்களை உள்ளடக்கிய சினித்துறைதான்.

ஆனால், கர்நாடகாவில் இன்று நடந்த ஒரு நிகழ்வு, தமிழர்களை கண்டிப்பாக யோசிக்க வைத்திருக்கும். மேகதாது அணையை கட்ட விடக்கூடாது என்பதற்காக, கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். ஊர்வலம் சென்றனர். ஆனால், யாருமே கூப்பிடாமல், பேரணியில் கொளுத்தும் வெயிலில் சென்று கலந்து கொண்டார் புனித்ராஜ்குமார். இவர் வேறு யாருமல்ல, கர்நாடக மக்களே தெய்வமாக கொண்டாடும் ராஜ்குமாரின் கடைக்குட்டி. பவர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படும் முன்னணி இளம் ஹீரோ. நம்மூர், விஜய், அஜித் ரேஞ்ச்சில் இருப்பவர்.

இவரை பார்க்கவே ஒரு கூட்டம் கூட, அதுவே மிகப்பெரிய போராட்டமாக நாட்டுக்கே காண்பிக்க பெரும் உதவியாக இருந்தது. தனது ஸ்டார் பவரை இப்படி நல்லதற்கு பயன்படுத்தியுள்ளார் அந்த நடிகர். அடுத்ததாக சில மணி நேரங்களில் மைசூரிலிருந்து ஒரு குரல் மாநிலமெங்கும் உள்ளிட்ட டிவிகள் வழியாக எதிரொலிக்கிறது..நாங்களும் இருக்கிறோம் என்று..அது யார் குரல் தெரியுமா.. சாட்சாத், ஹாட்ரிக் ஸ்டார், சிவராஜ்குமாரின் குரல்தான் அது. கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைத்திருக்கும் நடிகர். நம்மூர் ரஜினி, கமல் ரேஞ்சில் இருப்பவர்.

கன்னட திரையுலகம் விரைவில் மேகதாதுவுக்காக போராடும், போராட்ட வடிவம் குறித்து யோசித்து வருகிறோம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார் சிவராஜ்குமார். திரையுலகத்தினர் எதைக் கூறினாலும்தான், அதற்கு மெருகு வந்துவிடுமே., இப்போது, கர்நாடக மக்கள் நாடி நரம்பெல்லாம், மேகதாது அணையை கட்டியே தீருவது என்ற எண்ணம்தான் ஓடிக் கொண்டுள்ளது.

ஆனால், தமிழ் நாட்டிலோ, மீத்தேனுக்கும், மேகதாதுவுக்கும் கூட வேண்டாம், ஆந்திர என்கவுண்டருக்கு கூட ஒரு நடிகரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. போராட்டம் நடத்தவில்லை. ஆந்திர, கர்நாடக நடிகர்களோடு சேர்ந்து நகைக்கடையைத்தான் திறந்து வைத்தனர். கேட்டால், கலைக்கு மொழியில்லை என்பார்கள். ஆமாம்..மொழிதான் இல்லையே, அப்புறம், டப்பிங் சீரியலை எந்த மொழியில் இருந்து மொழி பெயர்த்து போட்டால் மட்டும் ஏன் தாய்மொழி பாசம் பீறிட்டு அடிக்கிறது. அதற்கு ஏன் மொழிச்சாயம் பூசி, ஒற்றுமையாக வேலை நிறுத்தம் அறிவிக்கிறீர்கள். பிழைப்புவாதம் என்பதும், சந்தர்ப்பவாதம் என்பதும் இதுவன்றி வேறு என்ன?

இந்த நேரத்தில் அனைவருக்கும் ஒரு விஷயம் பிளாஷ் போட்டது போல ஞாபகம் வருமே. ஆம்..அந்த விஷயம்தான். 20 தமிழர் நாதியற்று சுடப்பட்ட இடத்திற்கு அருகேதான், எனக்கென்ன வந்தது என்று தமிழ் முன்னணி நடிகர் நடித்த படம் சூட்டிங் செய்யப்பட்டதாம். சம்பவம்

நடந்த அடுத்த நாளிலேயே. இப்போது தெரிகிறதா நம்மை ஏன் போற இடமெல்லாம் அடிக்கிறார்கள் என்று?

 

'ஏ டண்டணக்கா...' ரூ 1 கோடி நஷ்டஈடு கேட்டு இமான், அனிருத் மீது டி ராஜேந்தர் வழக்கு!

‘ரோமியோ ஜூலியட்' படத்தில் ‘டண் டணக்கா... ணக்கா... ணக்கா' என்று துவங்கும் பாடல் சம்பந்தமாக அதன் இசையமைப்பாளர் டி.இமான், பாடகர் அனிருத் (பிரபல இசையமைப்பாளர்), பாடலாசிரியர் ரோகேஷ் (அனேகனில் ‘டங்கா மாரி ஊதாரி...' பாடலை எழுதியவர்), தயாரிப்பாளர் நந்தகோபால் ஆகிய நான்கு பேருக்கும் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு பிரபல டைரக்டரும், நடிகருமான டி. ராஜேந்தர், வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

'ஏ டண்டணக்கா...' ரூ 1 கோடி நஷ்டஈடு கேட்டு இமான், அனிருத் மீது டி ராஜேந்தர் வழக்கு!

‘‘டண்டணக்கா...ணக்கா... ணக்கா'
எங்க தல டீயாரு
சென்டிமென்ட்ல தாருமாறு
மைதிலி என்னைக் காதலின்னாரு
அவரு உண்மையா
லவ் பண்ணச் சொன்னாரு
மச்சான்' - அங்க தான்டா
எங்க தல நின்னாரு...''
- என்று துவங்கும் பாடலை ரோகேஷ் எழுதி இருக்கிறார். அனிருத் பாடியிருக்கிறார்.

இந்தப் பாடல், அதைப் படமாக்கியுள்ள விதம் தன்னைப் புண்பட்டுத்துவதாகக் கூறி டி ராஜேந்தர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் தரப்பிலிருந்து வெளியாகியுள்ள செய்திக் குறிப்பு:

‘தமிழ் சினிமாவில் சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபலமான நடிகர்-டைரக்டர் டி. ராஜேந்தர் தனக்கென்று வித்யாசமான பாணியில் வசனங்களை உச்சரித்து, நடிப்பிலும் தனி ஸ்டைலை உருவாக்கி இருப்பவர். மாநில அரசு, மத்திய அரசின் பல்வேறு விருதுகைளப் பெற்றிருப்பவர். இதேபோல கலைக்கு இவர் ஆற்றி வந்திருக்கும் அரிய சேவைக்காக பல்வேறு அமைப்புகளிடமிருந்து எண்ணற்ற வசதிகளைக் குவித்திருப்பவர்.

சென்னையைச் சேர்ந்த நந்தகோபால் என்பவர் தயாரிக்கும் படம்-ரோமியோ ஜூலியட். படத்தின் இயக்குனர் லட்சுமணன். இசையமைப்பாளர் டி. இமான். இந்தப் படத்தில் இடம் பெறும் ஒரு பாடல்-‘டண் டணக்கா... ணக்கா... ணக்கா' என்று ஆரம்பமாகிறது. இந்தப் பாடலில் டி.ராஜேந்தரின் ஒரிஜினல் குரலை காப்பியடித்து, ‘இமிடேட்' செய்து பாடியிருக்கிறார்.

பாடலின் பின்னணியில் டி.ராஜேந்தர் பேசும் வசனம்-அவர் குரலிலேயே ஒலிக்கிறது. இதன் மூலம் என் கட்சிக்காரரின் பெயரை துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்கள். கட்சிக்காரரிடமிருந்து முறையான அனுமதி இல்லாமலும் அவர் பேசும் வசனத்தை, பின்னணியில் ஒலிக்கச் செய்திருக்கிறார்கள்.

இது, பல ஆண்டுகளாக- பல்வேறு படங்களில் நடித்து தனக்கென்று ஒரு தனி நடை-ஸ்டைலை வைத்திருக்கும் என் கட்சிக்காரரின் தனி நபர் உரிமையையும், ‘காபிரைட்' உரிமையையும் இதன் மூலம் மீறியிருக்கிறீர்கள் என்று டி.ராஜேந்தர் சார்பில் வாரான் அண்ட் சாய்ராம்ஸ் நிறுவனம் (வழக்கறிஞர்கள் தியாகேஸ்வரன், ராமகிருஷ்ணன்) வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

இதே பாட்டும், பதிவு செய்யப்படும் காட்சிகளும் ‘யூ ட்யூப்' தளத்திலும், சன் மியூசிக் சாட்டிலைட் சானலிலும் வெளியிடப்பட்டுள்ளது (ஆடியோ_வீடியோ வடிவில்). படம் திரையிடப்படுவதற்கு முன்னால் இப்படி ஒரு வெளியீடு-‘பெருமைக்குரிய' என் கட்சிக்காரரின் பெயரை துஷ்பிரயோகம் செய்யும் நோக்கத்தோடே அமைந்திருப்பதாகத் தெரிகிறது.

இந்நிலையில், இந்தச் செயலுக்காக_ சட்டத்துக்குப் புறம்பாக என் கட்சிக்காரரின் முறையான அனுமதியில்லாமல் அவர் பெயரையும், இமேஜையும், அவரது தனிப்பாணி உச்சரிப்பு வசனத்தையும் பயன்படுத்தியிருப்பதற்காக ரூ.1 கோடி நஷ்டஈடு தரவேண்டும்.

மேலும் யூ ட்யூப், சன் மியூசிக் சாட்டிலைட் சானல் உள்பட எந்த ஒரு ஊடகத்திலும், எந்த ஒரு தளத்திலும் வெளியிடுவதை உடனே நிறுத்த வேண்டும். அதோடு வழக்கு செலவினங்களுக்காக ரூ.1000 தர வேண்டும்," என்று அவர்கள் கூறியுள்ளனர்.

 

சினிமாக்காரன் சாலை 21: ஓ காதல் கண்மணி... முற்றிய மரமாகிவிட்டாரா மணிரத்னம்?

-முத்துராமலிங்கன்

Muthuramalingan

மணிரத்னத்திடமிருந்து பொறுப்பான நல்ல படங்களை நான் எப்போதுமே எதிர்பார்ப்பதில்லை. அப்படியே பொறுப்பான படங்கள் என்று கொண்டாடப்பட்ட படங்களும், 'அந்த அரபிக்கடலோரம் ஏ ஹம்மா ஹம்மா' போன்ற குத்துப் பாடல்கள் அடங்கிய அக்கதைக்கு சற்றும் ஒவ்வாத மசாலா சமாச்சாரங்களை அதிகம் கொண்டவை. சினிமா என்பது வியாபாரம். அதில் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதில்தான் வெற்றியே அடங்கியிருக்கிறது என்று உறுதியாக நம்புபவர் ‘மணி'ரத்னம். கலை நேர்மை மணியைப் பொறுத்தவரை ‘கிலோ என்ன விலை?'.

‘அலைபாயுதே'வுக்கு அப்புறம் ‘ என் பணி சினிமா எடுப்பது. வெற்றி தோல்விகளைப் பற்றி நான் கவலை கொள்வதில்லை' என்று சொல்லாமல் மவுனமாக அதை தன் படங்களில் உணர்த்தி வந்த மணிரத்னத்துக்கு ஒரு வணிகரீதியான வெற்றி தேவை என்று தோன்றியிருக்கும் என்பதை இப்படத்துக்கு அவர் எடுத்துக்கொண்டிருக்கும் கதையே காட்டிக் கொடுக்கிறது.

ஓ காதல் கண்மணி... முற்றிய மரமாகிவிட்டாரா மணிரத்னம்?

தாலி கட்டிக்கொண்டு வெளியே சொல்லாமல் கூத்தடித்தால் அது ‘அலை பாயுதே'. தாலியே கட்டிக் கொள்ளமாட்டோம். ஆனால் கூத்தடிப்போம் என்றால் அது ‘ஓ காதல் கண்மணி'. ரெண்டு வரிகளில் சொல்வதானால் கதை இதுதான்.

ஆனால் ரெண்டேகால் மணி நேரத்துக்கு இருந்தால்தான் படம் என்பதுபோல் கொஞ்சம் வளவளவென்று எழுதினால்தான் கதை என்று திருப்தி அடைகிறோம்.

'வேஸ்ட் மாம்பலம்' பிராமின் பையன் துல்கர் சல்மான். வீடியோ கேம் டெவலப்பர். இவருக்கு பெரிய தொழில் அதிபர் ஆகி அமெரிக்காவில் செட்டில் ஆகவேண்டுமென்ற ஆசை. கோவை மில் அதிபர் மகள் நித்யா மேனன். இவருக்கு கட்டிட கலையில் ஆர்வம். பாரிஸில் செட்டில் ஆகவிரும்புகிறார்.

இருவரும் தங்கள் தொழில் நிமித்தமாக மும்பையில் இருக்கிறார்கள். தோழியின் திருமணத்தில் சந்தித்து,ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளாமல் சைகையிலேயே செல்போன் எண் வாங்கி இரண்டாவது சந்திப்பிலேயே காதலாகி, மூன்றாவது சந்திப்பிலேயே காமமாகி கட்டிட கலையை மறந்து முழுநேரமும் முத்தமழை பொழிந்து, கட்டில் கலையிலேயே மூழ்கித் திளைக்கிறார்கள்.

ஓ காதல் கண்மணி... முற்றிய மரமாகிவிட்டாரா மணிரத்னம்?

படம் முழுக்க பரஸ்பரம் எத்தனை முத்தங்கள் கொடுத்துக்கொண்டார்கள் என்று எண்ணிச் சொல்பவர்களுக்கு ஒரு மவுஸ் இலவசம்.

நித்யா அம்மாவுக்கு திருமணத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் திருமண வாழ்க்கை பற்றி அபிப்ராயம் இல்லை. மாம்பலம் அம்பிக்கும் அதே ஷேம் எண்ணம்தான்.

இருவரும் வெளிநாடு செல்லும் வரை நன்றாக 'அனுபவித்துவிட்டு' பிரிந்து சென்று விடுவதாக உத்தேசம்.

இவர்களின் முதல் செக்ஸ் காட்சியே நித்யாவின் லேடீஸ் ஹாஸ்டலில்தான் அரங்கேறுகிறது. அங்கேயே தொடர்ந்தால் ரசிகர்கள் லாஜிக் கேட்பார்களே என்று துல்கர் தான் தங்கியிருக்கும் பிரகாஷ்ராஜின் இல்லத்திற்கே அதிகாரபூர்வமாக அழைத்து வருகிறார்.

'சமூகக்கேடான செயல் இது' என்று முதலில் எதிர்க்கும் பிரகாஷ்ராஜ், நித்யா மேனனின் பாடல் ஒன்றில் மயங்கி, அவர்கள் தாலி கட்டிக்கொள்ளாமல், தனது வீட்டில் கூடிக் களிக்க இடம் தருகிறார்.

பிரகாஷ்ராஜின் மனைவி லீலா சாம்சனுக்கு அல்ஸீமர் என்னும் மறதி நோய். தெருவில் எங்காவது போய்க்கொண்டிருக்கும்போது வீடு போகத் தெரியாமல் எங்காவது அமர்ந்து விடுவார்.

அந்த அல்ஸீமரை கிளைமாக்ஸில் கையில் எடுத்துக்கொண்டு வயசான காலத்துல ஒருத்தொருக்கொருத்தர் ஒத்தாசையா இருக்க கல்யாணம் தேவை என்ற உரத்த சிந்தனை ஒன்றை உதிர்க்கிறார். சுபம்.

நல்லதோ கெட்டதோ இடைவேளை வரை படம் ஒரு டீன் ஏஜர்களின் காதல் போல ஜிவ்வென்று செல்கிறது. துல்கரும் நித்யாவும் இளமை ததும்பி வழிய கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார்கள்.

அப்புறம் மணிரத்னமும் அல்ஸீமர் நோய்க்கு ஆட்பட்டது போல், அடுத்து கதை செல்லவேண்டிய இடம் தெரியாமல் தேங்கி தெருவில் அமர்ந்து விடுகிறார்.

ஓ காதல் கண்மணி... முற்றிய மரமாகிவிட்டாரா மணிரத்னம்?

‘லிவிங் டுகெதர்' பற்றிய கதை போன்ற இப்படத்தில் ‘கல்யாணத்துக்கு முன்பே இஷ்டத்துக்கு செக்ஸ் வைத்துக்கொண்டார்கள்' என்பது தாண்டி, அவ்வாழ்க்கை குறித்த உருப்படியான ஒரு பதிவு கூட இல்லை. காதல், காமக் கூத்து தாண்டி என்னிடம் இப்படத்தில் வேறு எதையும் எதிர்பார்க்காதீர்கள் என்பதில் மணி இவ்வளவு கறாராக இருந்திருக்க வேண்டியதில்லை என்பதே என் தாழ்மையான அபிப்ராயம்.

படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் என்று பார்த்தால் மேற்படி சொல்லப்பட்ட நான்கே பாத்திரங்கள். யாரும் நடிப்பில் குறை வைக்கவில்லை.

ஓ காதல் கண்மணி... முற்றிய மரமாகிவிட்டாரா மணிரத்னம்?

அதிலும் நித்யா மேனன், தனது அந்நியோன்மான நடிப்பால் படம் பார்ப்பவர்களை காதல் கொள்ள வைக்கிறார். இடவேளை வரை துல்கரை திரையிலிருந்து அகற்றிவிட்டு, நித்யாவின் காதலனாக நான் இருந்தே படம் பார்த்தேன்.

நித்யாவுக்கு கிடைக்கும் இந்த பாராட்டில் பாதிக்கும் மேற்பட்ட பங்குக்குச் சொந்தக்காரர் கண்டிப்பாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்தான். எத்தனையோ படங்களில் மொக்கை ஃபிகராகக் காணப்பட்ட நித்யாவை தேவதை போல் காட்ட அவரால் மட்டுமே முடியும்.

ஓ காதல் கண்மணி... முற்றிய மரமாகிவிட்டாரா மணிரத்னம்?

மணி ஏமாற்றியது போல், ரஹ்மான் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கண்டிப்பாக ஏமாற்றவில்லை. ‘மன மன மெண்டல் மனதில்' மட்டும் எரிச்சலூட்டும் ரகம்.

படத்தில் பி.சி.யின் ஒளிப்பதிவைத் தாண்டி என்னைக் கவர்ந்த இன்னொரு முக்கிய அம்சம் வசனங்கள். அவை மணியின் வழக்கமான ஒற்றை வரி நான்சென்ஸ்களிலிருந்து சற்றே வேறுபட்டிருந்தன. அவற்றை எழுதியவரை ஏனோ இருட்டடிப்பு செய்திருக்கிறார்கள்.

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் ஒரு நேர்காணலில் 'படைப்பாளிகள் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் தொடர்ந்து சோபிக்கமுடியாமல் தேங்கி விடுகிறார்களே?' என்ற கேள்விக்கு, ‘அவர்கள் முற்றிய மரங்கள் போல் ஆகிவிடுகிறார்கள். ஒரு அளவுக்கு மேல் முற்றிய மரங்களிடம் கனிகளை எதிர்ப்பார்க்கக்கூடாது' என்பது போல ஒரு பதில் அளித்திருந்தார்.

இந்த ‘ஓ காதல் கண்மணி' பார்த்தபோது மணிரத்னமும் அப்படி ஒரு முற்றிய மரமாகிவிட்டாரோ என்ற கவலையும், அப்படி ஆகிவிடக் கூடாது என்ற அக்கறையும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

(தொடர்வேன்...)

 

மகனை வைத்து ஆண்பாவம் படத்தை ரீமேக் செய்யும் பாண்டியராஜன்!

தமிழ் சினிமாவின் எவர்கிரீன் காமெடிப் படங்களில் ஒன்று பாண்டியராஜனின் ஆண்பாவம்.

விகே ராமசாமி, ரேவதி, சீதா, பாண்டியன், பாண்டியராஜன் நடிப்பில், இளையராஜா இசையில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற இந்தப் படம், கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

மகனை வைத்து ஆண்பாவம் படத்தை ரீமேக் செய்யும் பாண்டியராஜன்!

இப்போது தொலைக்காட்சியில் ஒலிபரப்பினாலும் மக்கள் ஒரு காட்சியைக் கூட அலுப்பு சலிப்பில்லாமல் பார்க்கிறார்கள்.

இந்தப் படத்தை மீண்டும் ரீமேக் செய்ய வேண்டும் என பலரும் ஆர்வம் காட்டி வந்தனர். சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் கூட தனக்கு அப்படி ஒரு ஆசை இருப்பதாகக் கூறியிருந்தார்.

ஆனால் அப்படியெல்லாம் யாரையும் ரீமேக் பண்ண அனுமதிக்கும் எண்ணமில்லை, படத்தை உருவாக்கிய பாண்டியராஜனுக்கு.

தன் மகன் ப்ருத்வியை வைத்தே இந்தப் படத்தை ரீமேக் பண்ணப் போகிறார். இதற்கான அறிவிப்பையும் இன்று வெளியிட்டுள்ளார். படத்தின் தலைப்பு ஆண்பாவம் 99%.

மகனை வைத்து ஆண்பாவம் படத்தை ரீமேக் செய்யும் பாண்டியராஜன்!

ஆண்பாவம் படத்தை இன்றைய ட்ரென்டுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து இயக்கப் போகிறாராம். இதில் பாண்டியராஜன் பாத்திரத்தில் பிரிதிவிராஜன் நடிக்கிறார்.

வஜ்ரம் படத்தைத் தயாரித்த ஸ்ரீசாய்ராம் பிலிம் பேக்டரி சார்பில் இப்படத்தை ஆர்.சங்கர் தயாரிக்கிறார். மற்ற பாத்திரங்களுக்கு தேர்வு நடக்கிறது.

கேரளாவிலுள்ள ஒத்தப்பாலத்தில் விரைவில் ஆண்பாவம் 99 படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

 

உத்தம வில்லன் மக்களைப் பற்றிய படம்.. மதங்களைப் பற்றியதல்ல! - கமல்

உத்தம வில்லன் படம் எந்த மதத்தை அல்லது ஆத்திக நாத்திகர்களைப் பற்றிய படமல்ல, அது மக்களைப் பற்றிய படம், என்கிறார் கமல் ஹாஸன்.

கமலின் அடுத்த படமான ‘உத்தம வில்லன்' திரைப்படத்தை தடைசெய்ய வேண்டும், கமலை கைது செய்ய வேண்டும் என்றெல்லாம் சிலர் பரபரப்பு கிளப்பி வருகின்றனர்.

உத்தம வில்லன் மக்களைப் பற்றிய படம்.. மதங்களைப் பற்றியதல்ல! - கமல்

இது குறித்து கமல் அளித்துள்ள பதில்:

"இந்த எதிர்ப்பு உருவாக ‘எனது நாத்திக கொள்கைகள்தான் காரணமாக உள்ளது. அவரவர்களுக்கு ஒரு வாழ்க்கை முறை இருப்பதுபோல் எனது வாழ்க்கை முறை நாத்திகமாக உள்ளது. அவ்வளவுதான். இதைப் புரிந்து கொண்டால் பிரச்சினை இல்ல.

எனது பெற்றோர் இந்துக்களாகவும், வைணவர்களாகவும் அறியப்பட்டவர்கள். நான் எப்படி இந்த மக்களை வெறுக்க முடியும்? எனது ரசிகர்களை நான் இழக்க விரும்புவதாக பிறர் நினைப்பது, அவர்களின் அறியாமை என்றுதான் கருத வேண்டும்.

'உத்தம வில்லன்' படம் இந்துக்களான ஆத்திகர்களைப் பற்றியதோ, நாத்திகர்களைப் பற்றியதோ அல்ல; மக்களைப் பற்றியப் படம். எனவே, அனைத்து தரப்பு மக்களும் எனது படத்தை பார்க்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்."