என்னை அழவைத்த தெய்வ திருமகள்!- இயக்குநர் பாலா உருக்கம்


விஜய் இயக்கியுள்ள தெய்வ திருமகள் படம் என்னை அழ வைத்து விட்டது, என்று உருக்கமாகக் கூறினார் இயக்குநர் பாலா.

சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் 'தெய்வத்திருமகள்' படத்தில், மனநிலை பாதிக்கப்பட்டவராக விக்ரம் நடித்து இருக்கிறார். படத்தின் வெற்றியை பகிர்ந்துகொள்ளும் வகையில் நன்றி அறிவிப்பு கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ரெயின் ட்ரீ ஓட்டலில் நடந்தது.

நடிகர்கள் விக்ரம், எம்.எஸ்.பாஸ்கர், நடிகைகள் அனுஷ்கா, அமலாபால், இயக்குநர்கள் பாலா, விஜய், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார், யு.டி.வி. தனஞ்செயன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.

இயக்குநர் பாலா பேசுகையில், "இந்தப் படத்தைப் பார்க்கப் போகும்போதே அழாமல் இருக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டே சென்றேன். ஆனால் படம் பார்த்த போது என்னை கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டேன். படம் முடியும் வரை அழுதபடி இருந்தேன். விஜய் என்னை ஜெயித்துவிட்டான்," என்றார் உருக்கத்துடன்.

விக்ரம் பேச்சு

"ஒரு படம் வெற்றி பெற்று அதற்கு விழா நடத்தும்போது, அதில் கலந்துகொள்வது சந்தோஷமான தருணம். அந்த மனநிலையில் நான் இருக்கிறேன். படம் வெற்றி பெற்றால், கதாநாயகனைத்தான் முதலில் பாராட்டுவார்கள். ஆனால், 'தெய்வத்திருமகள்' அப்படி இல்லை. அதில் நடித்த எல்லா நடிகர்-நடிகைகளையும் பாராட்டி பேச முடியும்.

அனுஷ்காவும், அமலாபாலும் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரங்களாக பிரகாசித்தார்கள். படத்தின் முதல் பாதியில் நான் கதாநாயகன் என்றால், இரண்டாம் பாதியில் அனுஷ்காதான் கதாநாயகன்.

இயக்குநர்தான் ஹீரோ

இந்த படத்தின் உண்மையான கதாநாயகன், இயக்குநர் விஜய்தான். அவர்தான் என்னை ஐந்து வயது சிறுவனின் மனநிலைக்கு கொண்டு வந்தார். இந்த படத்தை நான் ஒப்புக்கொண்டபோது, என்னை பலபேர் திட்டினார்கள். இப்படிப்பட்ட கதைகளில் நீ ஏன் நடிக்கிறாய்? சாமி மாதிரி சண்டை படத்தில் நடித்துவிட்டு போக வேண்டியதுதானே? என்றார்கள்.

ஆனால் இயக்குநர் விஜய் தன் முடிவில் பிடிவாதமாக இருந்து, படத்தை வெற்றிபெற வைத்து விட்டார்.

மாற்று திறனாளிகள்

மாற்று திறனாளிகளை சமுதாயம் ஒதுக்கக்கூடாது. அவர்களையும் நம்மில் ஒருவராக பார்க்க வேண்டும். அப்படி இருப்பது அவர்கள் தவறல்ல. இந்த கருத்தைத்தான் `தெய்வத்திருமகள்' படத்தில் சொல்லியிருக்கிறோம்,'' என்றார்.
 

நாள்முழுக்க நின்றால் 1 லட்சம் மதிப்புள்ள டெலிவிஷன்! - சினேகா தொடங்கி வைத்த திட்டம்


ஒரு நாள் முழுக்க அதாவது 24 மணிநேரம் நிற்க வேண்டும்... காலைக் கூட மாற்றாமல் நின்ற இடத்தில் அப்படியே இருக்க வேண்டும். இப்படி நிற்பவர்களுக்கு பரிசாக ரூ 1 லட்சம் மதிப்புள்ள டிஜிட்டல் டிவி இலவசம்...!

-இப்படியொரு பரிசுத் திட்டத்தை ரிலையன்ஸ் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை சென்னையில் இன்று தொடங்கி வைத்தார் நடிகை சினேகா.

ரிலையன்ஸ் நிறுவனம் புதிதாக எலக்ட்ரானிக் பொருள் விற்பனை நிலையங்களை நாடு முழுக்க திறந்து வருகிறது. சென்னையிலும் இந்த கிளையைத் திறந்துள்ளது. அனைத்து முன்னணி நிறுவனங்களின் டிவி, ப்ரிட்ஜ், ஏசி உள்ளிட்ட அத்தனை எலெக்ட்ரானிக் தயாரிப்புகளும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும் வகையில் இந்த கடையை அமைத்துள்ளது ரிலையன்ஸ்.

முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது இந்த நிறுவனம்.

சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள இந்த ரிலையன்ஸ் டிஜிட்டல் ஷோரூமை முன்னணி நடிகை சினேகா தொடங்கி வைத்தார்.

இந்தக் கடையை பிரபலப்படுத்தும் நோக்கில் ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு பரிசுத் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டப்படி, ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவன அலுவலக வாயிலில் 1 நாள் முழுக்க 24 மணி நேரமும் நின்றுகொண்டே இருப்பவருக்கு ரூ 1 லட்சம் மதிப்புள்ள நவீன டிஜிட்டல் டிவி பரிசாக வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தை நடிகை சினேகா முறைப்படி அறிவித்தார்.

இப்போதே பலரும், "1 நாள்தானே, நின்றுவிட்டுப் போகலாம்" என்று ரிலையன்ஸ் முன்னாள் திரள ஆரம்பித்துள்ளார்களாம்!
 

நடிகைகள் சமந்தா, நித்யா மேனனுக்கு நந்தி விருது!


நடிகைகள் நித்யாமேனன், சமந்தாவுக்கு ஆந்திர அரசின் நந்தி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருவரும் தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகைகளாக உள்ளனர்.

நித்யாமேனன் 180 படத்தில் சித்தார்த்துடன் நடித்து இருந்தார். இப்படம் சமீபத்தில் தமிழகமெங்கும் ரிலீசானது. தெலுங்கிலும் வெளியானது இந்தப் படம்.

சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் வெப்பம் படத்திலும் நாயகியாக நடித்துள்ளார்.

விண்ணை தாண்டி வருவாயா படத்தின் தமிழ்ப் பதிப்பில் கவுரவ வேடத்திலும், அதன் தெலுங்குப் பதிப்பில் நாயகியாகவும் நடித்தவர் சமந்தா. பாணா காத்தாடி படத்திலும் நாயகியாக நடித்தார்.

சிம்ஹா படத்தில் நடித்த பாலகிருஷ்ணாவுக்கு சிறந்த நடிகருக்கான நந்தி விருது கிடைத்துள்ளது. சிறந்த படமாக வேதம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இப்படம் தமிழிலில் சிம்பு, பரத் நடிக்க வானம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

சிறந்த இயக்குநருக்கான நந்தி விருது சுனில்குமார் ரெட்டிக்கு கிடைத்துள்ளது. சிறந்த இசையமைப்பாளருக்கான விருது சக்ரிக்கும் பிரபல பின்னணி பாடகி சின்மயி சிறந்த டப்பிங் கலைருக்கான விருதையும் பெற்றார்.
 

சபரிமலையில் தனுஷ்... ரஜினிக்காக பிரார்த்தனையா?


சபரிமலை: சபரிமலைக்கு திடீர் விஜயம் நடத்திய நடிகர் தனுஷ், மாமாவும் சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த் உடல்நலம் தேறியதற்காக, தனது வேண்டுதலை முடித்ததாக தெரிகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலை கடந்த மாதம் திடீரென மோசமாகி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை முடித்து நாடு திரும்பினார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இயக்குனரும், சகோதரருமான செல்வராகவன் படத்தில் நடிப்பது குறித்த பணிகளில் ஈடுபட்ட தனுஷ், திடீரென சபரிமலைக்கு சென்று தரிசனம் செய்தார்.

சென்னையில் இருந்து காரில் புறப்பட்ட நடிகர் தனுஷ், கேரள மாநிலம், கோட்டத்திற்கு சென்றார். சங்கனாச்சேரியில் உள்ள பாடகர் யேசுதாஸின் நண்பர் ஒருவர் வீட்டில் தங்கினார். பின் அங்கிருந்து, பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் ஏசுதாசுடன் கொச்சினுக்கு புறப்பட்டு சென்றார்.

பின்னர் இருமுடி கட்டுக் கட்டிய இருவரும், சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர். இரவு 10 மணிக்கு சன்னிதானத்தை அடைந்த தனுஷ், சுவாமி ஐயப்பனை தரிசித்தார். அதன்பின், கார் மூலம் சென்னை திரும்பினார்.

நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் தேறியதற்காகவும், தேசிய விருது தனக்கு கிடைத்ததற்காகவும், இந்த திடீர் ஐயப்ப தரிசனம் செய்ததாகத் தெரிகிறது. ஆனால், தான் சபரிமலைக்கு சென்றது குறித்து கேட்டதற்கு, காரணத்தை கூற நடிகர் தனுஷ் மறுத்துவிட்டார்.
 

ஐஸ்வர்யா ரஜினி புகார் எதிரொலி: பேஸ்புக்கில் அவர் பெயரிலிருந்து போலிக் கணக்கு நீக்கம்


சென்னை: பேஸ்புக்கில் தன் பெயரில் வேறு யாரோ தகவல்களை அப்டேட் செய்வதாக ரஜினியின் மகள் ஐஸ்வர்யா புகார் தெரிவித்ததால், உடனடியாக அந்தப்பக்கத்தையே அகற்றிவிட்டனர்.

ரஜினி மகளும் தனுஷ் மனைவியுமான ஐஸ்வர்யா இன்டர்நெட்டில் தனது பெயரில் மோசடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் இன்டர்நெட்டில் பேஸ்புக்கில் இல்லை. ஆனால் யாரோ எனது பெயரை போலியாக பேஸ்புக்கில் உருவாக்கியுள்ளார் என் சம்பந்தப்பட்ட செய்திகளையும் அதில் போட்டு வைத்துள்ளார். நான் இயக்கும் படம் பற்றிய தகவல்கள் எனது தந்தை ரஜினி, கணவர் தனுஷ் பற்றிய விவரங்களையும் அதில் சேர்த்துள்ளார்.

இது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த பேஸ்புக்கை உண்மை என நம்பி எனது நண்பர்கள் உறவினர்கள் அதில் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். ரஜினி, மற்றும் தனுசுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவர்களும் போலி பேஸ் புக்கில் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். இது பெரிய மோசடித்தனம் ஆகும்," என்று கூறியிருந்தார்.

சைபர் கிரைம் போலீசில் இது பற்றி புகார் அளிக்கவும் ஐஸ்வர்யா முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், ஐஸ்வர்யா குறிப்பிட்டிருந்த பெயரில் பேஸ்புக்கிலிருந்த கணக்கு அழிக்கப்பட்டுள்ளது. இப்போது ஐஸ்வர்யா தனுஷ் எனும் பெயரில் ரசிகர்கள் சிலர் பேஸ்புக்கில் உள்ளனர்.
 

ரஜினி குணம் அடைந்ததற்காக சபரிமலையில் தனுஷ் தரிசனம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ரஜினி குணம் அடைந்ததற்காக சபரிமலையில் தனுஷ் தரிசனம்

8/6/2011 11:40:45 AM

சபரி மலை யில் நடி கர் தனுஷ் தரிசனம் செய்தார். பிரபல நடிகர் தனுஷ் முதன்முதலாக சபரிமலை சென்றார். இதற்காக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து காரில் புறப்பட்ட இவர், கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரியில் பாடகர் ஏசுதாசின் நெருங்கிய நண்பரான பாலச்சந்திர தாசின் வீட்டிற்கு சென்றார். அவருடன் பிரபல பின்னணி பாடகர் விஜய் ஏசுதாசும் சென்றார். அங்கு இருமுடி கட்டுக்கட்டி இருவரும் நேற்று முன்தினம் இரவே காரில் சபரிமலை புறப்பட்டனர். இரவு 10 மணியளவில் சன்னிதானம்  சென்ற அவர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் சென்னை திரும்பினார். மாமனார் ரஜினிகாந்த் உடல் நலம் தேறியதற்காகவும், தனக்கு தேசிய விருது கிடைத்ததற்காகவும் சபரிமலைக்கு தனுஷ் சென்றதாக கூறப்படுகிறது.

 

எங்கேயும் எப்போதும் பாடல் வெளியீடு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

எங்கேயும் எப்போதும் பாடல் வெளியீடு

8/6/2011 11:30:49 AM

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், ஏ.ஆர். முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம், 'எங்கேயும் எப்போதும்'. ஜெய், சர்வானந்த், அஞ்சலி, அனன்யா நடிக்கின்றனர். எம்.சரவணன் இயக்குகிறார். ஒளிப்பதிவு, ஆர்.வேல்ராஜ். இசை, சி.சத்யா. பாடல்கள்: நா.முத்துக்குமார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட, சூர்யா பெற்றார். விழாவில் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தலைமை செயல் அதிகாரி விஜய்சிங், ஏ.ஆர்.முருகதாஸ்,  விவேக், இயக்குனர்கள் வெற்றிமாறன், பிரபு சாலமன், விஜய், சி.சத்யா, ஸ்டண்ட் இயக்குனர் கே.கணேஷ், எடிட்டர்கள் ஆண்டனி, கிஷோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

விஜய் ஆண்டனி பாடலுக்கு தேவிஸ்ரீ பிரசாத் டான்ஸ்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

விஜய் ஆண்டனி பாடலுக்கு தேவிஸ்ரீ பிரசாத் டான்ஸ்!

8/6/2011 11:33:56 AM

விஜய் ஆண்டனி இசை அமைத்த பாடலுக்கு, இசைஅமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் நடனம் ஆடியுள்ளார். பிரபுதேவா இயக்கத்தில் விஷால், சமீரா ரெட்டி நடிக்கும் படம் 'வெடி'. இந்தப் படத்துக்கு விஜய் ஆண்டனி இசை அமைக்கிறார். படம் பெரும்பாலும் முடிந்துவிட்ட சூழலில், சமீரா ரெட்டியின் அறிமுக பாடலை கொல்கத்தாவில் படமாக்கினார் பிரபுதேவா. வழக்கமாக ஒரு பாடலுக்கு நடிகைகளைதான் ஆட அழைப்பார்கள். இந்த படத்துக்கு வித்தியாசமாக, இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தை ஆட கேட்டனர். நடனம் ஆடுவதில் விருப்பம் கொண்ட தேவிஸ்ரீ பிரசாத், பிரபு தேவா கேட்டதும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து சமீரா ரெட்டி, தேவிஸ்ரீ பிரசாத் பங்கேற்ற பாடல் காட்சி கொல்கத்தாவில் படமாக்கப்பட்டது. 'பிசியான சாலைகள் மற்றும் புராதன கட்டிடங்களின் முன் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது. பிருந்தா நடனம் அமைத்தார். தேவிஸ்ரீ பிரசாத்தின் நடனம் பேசப்படுவதாக இருக்கும்' என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

 

சினிமாவில் வேலை இல்லாமல் இருப்பது வேதனையானது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சினிமாவில் வேலை இல்லாமல் இருப்பது வேதனையானது

8/6/2011 11:33:14 AM

ஜமால் மூவி கிரியேஷன்ஸ் சார்பில் ஜமால் சையது இப்ராஹிம், ஜே.ராஜா முகமது தயாரிக்கும் படம் 'காசேதான் கடவுளடா'. ஷரண் ஹீரோ. காம்னா, திவ்யா பத்மினி, பாண்டியராஜன், கருணாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, சேவிலோ ராஜா. இசை, கருணாஸ். பாடல்கள், விவேகா. திருமலை இயக்குகிறார். இதன் பாடல் வெளியீட்டில் இயக்குனர் சங்க பொருளாளர் எஸ்.பி.ஜனநாதன் பேசியதாவது:

இயக்குனர் சங்க பொருளாளராக பதவியேற்ற பின், பல பிரச்னைகள் குறித்து நடக்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேன். சினிமா துறை மோசமான நிலையில் இருக்கிறது. அதை காப்பாற்றவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சினிமாவிலுள்ள 24 சங்கங்களை சேர்ந்த பெப்சி அமைப்புக்கு முன்னோடியாக இருந்தது, எம்.பி.சீனிவாஸ் தொடங்கி வைத்த இசைக்கலைஞர்கள் சங்கம். 1,500க் கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால், 40 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது என்கிறார்கள். வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களால், பலருக்கு வேலை கிடைக்கவில்லை. இது வேதனையான விஷயம். இதற்கெல்லாம் தீர்வு காண, சினிமாவையே நேசித்து வாழ்ந்து வரும் நாம் அனைவரும் முன்வர வேண்டும். அதற்கு தனியாக ஒரு ஆய்வுக்குழு அமைக்க வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசும் உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். இவ்வாறு ஜனநாதன் பேசினார். இயக்குனர்கள் சங்க வளர்ச்சி நிதிக்காக, 10 ஆயிரம் ரூபாயை திருமலை வழங்கினார். சேரன், பிரசன்னா, கருணாஸ், விவேகா, ஜி.கிச்சா, பி.எல்.தேனப்பன், ரவீந்திரன், கு.க.செல்வம், வி.என்.சிதம்பரம், ஹீரோ ஷரண் உட்பட பலர் கலந்து கொண்டனர். பாத்திமா பாபு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

 

விரைவில் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

விரைவில் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி!

8/6/2011 11:31:48 AM

ரசிகர்களை விரைவில் ரஜினிகாந்த் சந்திப்பார் என்று தனுஷ் கூறினார். ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்துக்கு '3' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் தனுஷ் கூறும்போது, ''என் மனைவி ஐஸ்வர்யா இயக்குகிறார் என்பதற்காக, இதில் நடிக்கவில்லை. கதை பிடித்திருந்ததால் நடிக்கிறேன். மற்ற இயக்குனர்களிடம் நடிக்கும்போது எப்படி இருந்தேனோ, அப்படியே இப்போதும் இருக்கிறேன். என்னை இயக்கி நல்ல இயக்குனராக, தன்னை நிரூபித்த பின் ரஜினியை அவர் இயக்கலாம். ரஜினி இப்போது பூரண ஆரோக்கியத்துடன் இருக்கிறார். விரைவில் ரசிகர்களையும், பத்திரிகையாளர்களையும் சந்திப்பார்'' என்றார்.  ஐஸ்வர்யா கூறும்போது, ''இது தனுஷை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட கதை. '3' என்ற தலைப்பிலேயே கதையின் மையக்கருவும் அமைந்திருப்பதால் அதுபற்றி விளக்கமாக கூற முடியாது. இதுவரை பார்க்காத இன்னொரு தனுஷை இதில் பார்க்கலாம். ஏ.ஆர்.ரகுமானிடம் பணியாற்றிய அனிருத் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்'' என்றார். பேட்டியின்போது ஹீரோயின் அமலா பால், தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜா உடன் இருந்தனர்.

 

சகாக்கள் நண்பர்கள் கதையா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சகாக்கள் நண்பர்கள் கதையா?

8/6/2011 11:34:44 AM

வி.வி.வி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படம், 'சகாக்கள்'. சஞ்சீவ், அத்வைதா, வெ.ஆ.மூர்த்தி, ஜெயப்பிரகாஷ் நடிக்கின்றனர். வசனம், பாஸ்கர் சக்தி. படத்தை இயக்கும் எல்.முத்துக்குமார சுவாமி நிருபர்களிடம் கூறியதாவது: பழநி கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும்போது, எதிர்பாராதவிதமாக ஹீரோ, ஹீரோயின் சந்திக்கின்றனர். ஒருகட்டத்தில் இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர். இது, ஹீரோயின் தந்தைக்கு தெரிய வருகிறது. முடிவு என்ன என்பது, யூகிக்க முடியாத கிளைமாக்சாக இருக்கும். நண்பர்கள் கதை என்றால், நாலு பேர் வெட்டித்தனமாக உட்கார்ந்து கொண்டு அரட்டை அடிப்பார்கள். இப்படத்தில் அதுபோன்ற காட்சிகள் இருக்காது. நட்பை வித்தியாசமாகவும், மகள் மீது தந்தை வைத்திருக்கும் பாசத்தை மாறுபட்ட கோணத்திலும் சொல்லியிருக்கிறேன். 12ம் தேதி படம் ரிலீசாகிறது.

 

தெய்வத்திருமகள் டப்பிங் கலைஞர்களுக்கு மரியாதை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தெய்வத்திருமகள் டப்பிங் கலைஞர்களுக்கு மரியாதை

8/6/2011 11:29:38 AM

'தெய்வத் திருமகள்' படத்தில் பணியாற்றிய கலைஞர்களின் சந்திப்பு, சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் குழந்தை நட்சத்திரம் சாராவுக்காக டப்பிங் பேசிய சிருங்கா (டப்பிங் ஆர்டிஸ்ட் சவீதாவின் மகள்), அனுஷ்காவுக்கு டப்பிங் பேசிய தீபா வெங்கட், அமலா பாலுக்கு பேசிய சவீதா ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். அனுஷ்கா டப்பிங் பேச விரும்பியதாகவும் ஆனால் அவர் வேறு படங்களில் பிசியாக இருந்ததால் முடியவில்லை என்றும் இயக்குனர் விஜய் சொன்னார். டப்பிங் கலைஞர்கள் தவிர படத்தில் பணியாற்றிய மற்ற கலைஞர்களுக்கு இயக்குனர் பாலா, பரிசு வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய விக்ரம், 'இந்த படத்தின் நிஜ ஹீரோ இயக்குனர் விஜய்தான். அடுத்தும் இருவரும் சேர்ந்து படம் பண்ணுகிறோம். மாற்று திறனாளிகள் ஒரு வகையில் நம்மை விட சிறந்தவர்கள், அவர்கள் மதிக்கப்பட வேண்டும் என்ற மெசேஜை இந்தப் படம் மூலம் கொடுத்திருக்கிறோம்' என்றார். 'இது நெகிழ்ச்சியான படம் என்பதால், ஒரு தியேட்டரின் பால்கனி டிக்கெட் முழுவதையும் வாங்கி தனியாக உட்கார்ந்து பார்த்தேன். படம் துவங்கியதிலிருந்து முடியும் வரை அழுது கொண்டே இருந்தேன்' என்றார் பாலா. நிகழ்ச்சியில், அனுஷ்கா, அமலா பால், இசை அமைப்பளார் ஜி.வி.பிரகாஷ், யுடிவி தனஞ்செயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




 

காஞ்சனா ஜெயித்ததால் லாரன்ஸுடன் நெருக்கம் காட்டும் லட்சுமி ராய்‍!


காஞ்சனா படத்தில் ஜோடியாக நடித்த லாரன்சுக்கும் லட்சுமிராய்க்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசு கிசுக்கள் பரவியுள்ளன.

காஞ்சனா படம் எதிர்பாராத வெற்றியைப் பெற்றுள்ளது தமிழ் மற்றும் தெலுங்கில்.

இதனால் படத்தில் ஜோடியாக நடித்த ராகவா லாரன்ஸ் - லட்சுமி ராய் இடையே காதல் என கிசுகிசு கிளம்பியுள்ளது.

இதுபற்றி லட்சுமிராய் கூறுகையில், "லாரன்சுக்கும் எனக்கும் காதல் என்பதை கேட்கும் போதே சிரிப்புதான் வருகிறது. ஒரு ஜோக்காக இதை எடுத்துக் கொள்கிறேன்.

எல்லாரும் சொல்வதைத்தான் நானும் சொல்கிறேன். லாரன்ஸ் எனக்கு நல்ல நண்பர். உண்மையிலேயே நண்பர். நல்ல பக்குவமான மனிதர். கடவுளுக்கு பயந்தவர். கடினமான உழைப்பாளி.

எங்கள் ஜோடி பொருத்தம் காஞ்சனா படத்தில் சிறப்பாக அமைந்ததால் இதுபோன்ற காதல் வதந்திகள் பரவுவதாக நினைக்கிறேன்.

ஏற்கனவே 'இரும்புக் கோட்டை முரட்டுச்சிங்கம்' படத்தில் லாரன்சுடன் நடித்தேன். அப்போதுதான் இந்த கதை பற்றி என்னிடம் சொன்னார்.

உண்மையில் அனுஷ்காவைதான் நாயகியாக தேர்வு செய்து வைத்திருந்தார். கடைசியில் அந்த வாய்ப்பு எனக்கு வந்தது. தற்போது அஜீத்துடன் மங்காத்தா படத்தில் நடித்து வருகிறேன். மலையாளத்தில் மூன்று படங்களில் நடிக்கிறேன். தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் நடித்த படம் விரைவில் வரவிருக்கிறது.

இன்னும் நிறைய சாதிக்க வேண்டியுள்ளது. எனவே காதல், கல்யாணம் என்ற கமிட்மெண்டுகளில் சிக்கிக் கொள்ள மாட்டேன்," என்றார்.
 

ரஜினி - தனுஷ் இணைந்து நடிப்பார்களா? - ஐஸ்வர்யா பதில்


கணவர் தனுஷை வைத்து தான் இயக்கும் முதல் படத்துக்கு 3 என்று வித்தியாசமாக பெயர் சூட்டியுள்ளார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா.

இந்தப் படம் குறித்து அறிமுகம் செய்வதற்காக வெள்ளிக்கிழமை பிற்பகல் செய்தியாளர்களைச் சந்தித்தனர் ஐஸ்வர்யாவும் தனுஷும். நாயகி அமலா பாலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

இந்த சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு ஐஸ்வர்யா மற்றும் தனுஷும் அளித்த பதில்களும்:

கேள்வி: எந்த நம்பிக்கையில்ஒரு இயக்குநராக களமிறங்குகிறீர்கள்?

ஐஸ்வர்யா: என் கதையைக் கேட்ட அப்பா, அந்தப் படத்தை தானே தயாரிக்க விரும்புவதாகக் கூறினார். அந்த அளவு அவருக்கு நம்பிக்கை தந்த ஸ்கிரிப்ட் இது. இப்போது என் மாமனார் தயாரிக்கிறார்.

கேள்வி: உங்கள் மனைவி ஐஸ்வர்யா ஒரு இயக்குநராக உங்களை விரட்டி வேலை வாங்குகிறாரா, அன்பாக வேலை வாங்குகிறாரா?

தனுஷ்: விரட்டியும் வேலை வாங்குகிறார். அன்பாகவும் வேலை வாங்குகிறார். நான் மற்ற இயக்குநர்களின் படங்களில் எப்படி வேலை செய்கிறேனோ, அப்படித்தான் இந்தப் படத்திலும் வேலை செய்கிறேன்.

கேள்வி: உங்களுக்கு தனுஷ் உதவியாக இருக்கிறாரா?

ஐஸ்வர்யா: படப்பிடிப்பு தளத்தில் அவர் நடிகர். நான் இயக்குநர். என் வேலையில் அவர் தலையிடுவதில்லை. வீட்டில் எனக்கு உதவியாக இருக்கிறார். குழந்தைகளை பார்த்துக்கொள்வதில் எனக்கு ரொம்ப உதவியாக இருக்கிறார்.

கேள்வி: இந்த படத்தின் கதை தனுஷுக்காக எழுதப்பட்டதா?

ஐஸ்வர்யா: எங்க வீட்டில் இரண்டு நடிகர்கள் இருக்கிறார்கள். கதை எழுதும்போது இரண்டு பேருமே நினைவுக்கு வருவார்கள். இந்த கதையை பொறுத்தவரை தனுஷை மனதில் வைத்து எழுதப்பட்டதுதான்.

ரஜினி நடிப்பாரா?

கேள்வி: இந்த படத்தில் தனுஷூடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்து நடிக்க வாய்ப்பு இருக்கிறதா?

ஐஸ்வர்யா: இல்லை. அப்பாவிடம் நான் இதுபற்றி பேசவே இல்லை.

கேள்வி: அமலா பால்தான் ஹீரோயின் என்பதை நீங்கள் முடிவு செய்தீர்களா? தனுஷா?

ஐஸ்வர்யா: நான்தான் (‘சொன்னா நம்புங்க… நான் இதிலெல்லாம் தலையிடுவதில்லை’ என்கிறார் தனுஷ்!).

கேள்வி: படத்தை இயக்குவது சிரமமாக இருக்கிறதா, சுலபமாக இருக்கிறதா?

ஐஸ்வர்யா: படம் இயக்குவது சுலபம் இல்லை. நிறைய பொறுப்புகளை தோளில் சுமக்க வேண்டியிருக்கிறது.

செல்வராகவன்தான் குரு:

கேள்வி: படம் இயக்குவதைப் பொறுத்தவரை உங்களுக்கு குரு யார்?

பதில்: செல்வராகவனிடம் இரண்டு படங்களில் உதவி இயக்குநராக இருந்தேன். நிறைய விஷயங்களை அவர் எனக்கு கற்றுத் தந்தார். அந்த வகையில் செல்வராகவன்தான் என் குரு.

கேள்வி (தனுஷிடம்): சமீபத்தில் விரதம் இருந்து சபரிமலை சென்றீர்களே… என்ன வேண்டுதல்?

தனுஷ்: வேண்டுதலை வெளியில் சொல்லக்கூடாது.

கேள்வி: நீங்கள் படம் இயக்குவதாக கூறி வந்தீர்கள். இப்போது உங்கள் மனைவி ஆகிவிட்டார். உங்கள் ஆசையை உங்கள் மனைவி மூலம் நிறைவேற்றிக் கொள்கிறீர்களா?

தனுஷ்: எனக்கு முன்பே இயக்குநராகும் திட்டத்தோடு இருந்தவர் ஐஸ்வர்யா. அவர் இயக்குநரானதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நான் இயக்குநராவது குறித்து எதுவும் முடிவு செய்யவில்லை.

-இவ்வாறு இருவரும் பதிலளித்தனர்.

 

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் ரஜினிக்கு சிறப்புப் பூஜை!


காஞ்சீபுரம்: நடிகர் ரஜினிகாந்த் இம்மாத இறுதியில் காஞ்சீபுரம் வருகிறார். புகழ்பெற்ற காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். கால பைரவருக்கு தானே விசேஷ பூஜை நடத்துகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ரானா’ சினிமாப்பட தொடக்க விழா கடந்த ஏப்ரல் மாத இறுதியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று விட்டு திரும்பிய சிறிது நேரத்தில் ரஜினிகாந்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் பின்னர் சிங்கப்பூர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

சமீபத்தில் பூரண நலமடைந்து சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு திரும்பினார்.

தற்போது அவர் பண்ணை வீடு, போயஸ் கார்டன் இல்லம் மற்றும் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா வீடு என விருப்பப்படி ஓய்வு பெற்று வருகிறார். அவர் பூரண உடல்நலம் பெற்று திரும்பியதை அடுத்து ரசிகர்கள் கோவில்களில் மொட்டை அடித்தும் பல்வேறு வகையில் நேர்த்திக் கடன்களை செலுத்தியும் சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இம்மாத (ஆடி மாதம்) இறுதிக்குள் பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ய இருக்கிறார்.

கால பைரவருக்கு சிறப்பு பூஜை

அங்கு அம்பாளுக்கு பட்டுப்புடவை சாற்றி, அம்பாள் சன்னிதானத்தில் சுவாமியை தரிசனம் செய்ய வருவதாக தகவல் அனுப்பியுள்ளார்.

கோவில் வளாகத்தில் உள்ள கால பைரவருக்கு நடைபெறும் விசேஷ பூஜையிலும் கலந்து கொள்கிறார். அங்கு அவர் 108 வடமாலை, சம்பா சாதம் (மிளகு சாதம்) ஆகியவற்றை கால பைரவருக்கு நெய்வேதியம் செய்து சுவாமியை தரிசனம் செய்கிறார்.

இந்த தகவலை காமாட்சியம்மன் கோவில் அர்ச்சகர் ஒருவர் தெரிவித்தார்.

ஏற்கெனவே நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயணன் மூலமாக காமாட்சி அம்மன் கோவிலில் 2 நாட்கள் சண்டி ஹோமம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

அடுத்த ஆண்டு திருமணம்... ஆனால் மணமகன் அம்ருத் இல்லை! - த்ரிஷா


ஒருவழியாக, தனக்கு அடுத்த ஆண்டு திருமணம் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார் நடிகை த்ரிஷா.

அவர் கூறுகையில், எனக்கு அடுத்த ஆண்டு திருமணம் என்பது உண்மைதான். ஆனால் மணமகன் அம்ருத் அல்ல என்று கூறியுள்ளார்.

த்ரிஷாவின் திருமண விவகாரத்தில் அவருக்கும் அவரது அம்மாவுக்கும் மவுன யுத்தம் நடக்கிறது.

த்ரிஷாவுக்கு வயது ஏறிக் கொண்டே போவதால் எப்படியாவது சீக்கிரம் திருமணம் செய்து வைத்துவிடும் நோக்கில் மணமகன்களை அலசி வருகிறார் தாயார் உமா கிருஷ்ணன். அப்படி அவர் முடிவு செய்தவர்தான் அம்ருத் என்ற தொழிலதிபர். இவர் த்ரிஷாவின் நண்பரும் கூட.

ஆனால் காதலித்துதான் திருமணம் செய்வேன் என்று தொடர்ந்து கூறிவரும் த்ரிஷா அவரது அம்மாவின் முடிவை ஏற்கவில்லை.

இதனால் த்ரிஷாவுக்கு திருமணம் என அம்மா உமா செய்தி கொடுப்பதும், அதை மறுத்து த்ரிஷா பேட்டியளிப்பதும் தொடர்ந்தது.

இப்போது ஒருவழியாக அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள சம்மதித்துள்ளாராம் த்ரிஷா.

இதுபற்றி திரிஷாவிடம் கேட்டபோது, “அடுத்த ஆண்டு என் திருமணம் நடக்கும். ஆனால் மணமகன் அம்ருத் அல்ல. அவர் என் நண்பர்தான். பல நிகழ்ச்சிகளில் நாங்கள் இருவரும் கலந்து கொண்டிருக்கிறோம். அவ்வளவுதான். எனக்கு கணவராக வருபவரை இதுவரை நான் சந்திக்கவில்லை,” என்றார்.

 

2 ஹீரோயின் என்றாலே பிரச்னைதான் : முருகதாஸ் வேதனை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
2 ஹீரோயின் என்றாலே பிரச்னைதான் : முருகதாஸ் வேதனை!

8/5/2011 2:56:01 PM

ஜெய், ஷரவானந்த், அஞ்சலி, அனன்யா நடிக்கும் 'எங்கேயும் எப்போதும்' படத்தை தயாரிக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இதன் பாடல் வெளியீட்டில் அவர் கூறியது: ஃபாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறேன். எவ்வளவு முடியுமோ அவ்வளவு செலவை மிச்சப்படுத்தி நிர்ணயித்த பட்ஜெட்டுக்குள் படத்தை முடித்திருக்கிறேன். எங்களிடம் சொன்ன தேதியிலிருந்து 4 நாட்களுக்கு முன்னதாகவே ஷூட்டிங்கை முடித்துக்கொடுத்தார் இயக்குனர் சரவணன். 2 ஹீரோயின்களை வைத்து படம் எடுத்தால் பிரச்னை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதை நான் இயக்கிய படத்திலே அனுபவித்தேன். அந்த பட ஷூட்டிங்கை ரயில் நிலையத்தில் நடத்தினேன். குறிப்பிட்ட காட்சியில் நடிக்க வேண்டிய ஹீரோயின் திடீரென்று வயிற்றுவலி என்று கூறி கேரவனுக்குள் சென்றுவிட்டார். அவர் ஏதோ கோபத்தில்தான் அப்படி செய்தார். அதன்பிறகு அவரே சமாதானம் அடைந்து வந்தார். ஆனால் காட்சியை படமாக்க நான் மறுத்துவிட்டேன். அதே நேரம், 'எங்கேயும் எப்போதும்' படத்தில் 2 ஹீரோயின் நடித்திருக்கிறார்கள். இவர்களுக்குள் பிரச்னை என்று இதுவரை கேள்விப்படவில்லை. இவ்வாறு முருகதாஸ் கூறினார். முருகதாஸ் இயக்கிய 'கஜினி' படத்தில் அசின், நயன்தாரா நடித்திருந்தனர். இப்படத்தில் ஒரு காட்சியில் கடத்தப்பட்ட சிறுமிகளை மீட்டு, ரயிலில் அசின் அழைத்து வருவது போல் காட்சி இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.




 

கிசு கிசு - படம் லாஸ்.. தயாரிப்பு கெஞ்சல்..

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
படம் லாஸ்.. தயாரிப்பு கெஞ்சல்..

8/5/2011 2:59:33 PM

நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

சம்பத்தான வில்லன் நடிகரு, டைரக்டருங்க எங்கே போனாலும் நிழல்போல துரத்துறாராம்... துரத்துறாராம்... இயக்கங்களும் எதுவும் சொல்ல முடியாம அவரோட தொல்லையை பொறுத்துக்கிறாங்களாம். பட வாய்ப்புகளை கேட்ச் செய்வவே இந்த துரத்தலாம்... துரத்தலாம்... இதே டெக்னிக்கை தயாரிப்புங்ககிட்டேயும் நடிகரு யூஸ் பண்ணறாராம்... பண்ணாறாராம்...

பெண் டைரக்டரு எடுத்த திருநங்கை நடிச்ச படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடல. படத்துகாக தயாரிப்பு கடன் வாங்கியிருந்தாரு. அதை வசூலிக்க கடன்காரங்க போனப்போ, செக் போட்டுத் தந்தாராம்... தந்தாராம்... ஆனா அதை பேங்க்ல போட்டதும் பணம் இல்லைன்னு திரும்பிடுச்சாம்... திரும்பிடுச்சாம்... மறுபடியும் பணத்தை கேட்டா, Ôபடம் லாஸ் ஆயிடுச்சி. கொடுக்க வேண்டிய தொகையை பாதியா குறைச்சிக்கங்கÕன்னு தயாரிப்பு கெஞ்சுறாராம்... கெஞ்சுறாராம்...

சமீபத்துல சினிமா விழாவுக்கு வந்தாரு பிரகாச ஹீரோ. அவரை மேடைக்கு அழைக்க தொகுப்பாளர், ஹீரோவை பற்றி ஓவர் பில்டப் தர ஆரம்பிச்சாராம்... ஆரம்பிச்சாராம்... மேடைக்கு வந்த நடிகரு, இப்படியெல்லாம் புகழ வேணாம்னு தொகுப்பாளரை கேட்டுக்கிட்டாரு. ஹீரோவை பேச அழைக்கும்போது திரும்ப பில்டப் கொடுக்க ஆரம்பிச்சாராம். உர்ரான ஹீரோ, தொகுப்பாளரை கடிந்து கொண்டாராம்... கொண்டாராம்... தொகுப்பாளர் பதறிட்டாராம்... பதறிட்டாராம்...