பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பதில் காங்கிரஸ் தோல்வியடைந்து விட்டது: ரோஜா

Cong Failed Check Crime Against Women Raoja

ஹைதராபாத்: நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதில் காங்கிரஸ் அரசு தோல்வியடைந்துவிட்டது என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் நடிகை ரோஜா குற்றம் சாட்டியுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியாகாந்தி வெறும் உற்சவர் போல வலம் வருகிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரோஜா மேலும் கூறியதாவது:

டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டு உள்ளார். இதேபோல் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இந்த கொடுமைகளை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். அரசியலிலும், அதிகாரத்திலும், உயர் பதவியில் இருக்கும் பெண்கள் இதனை தடுக்க முன் வரவேண்டும். ஆனால் அவர்கள் எதுவும் செய்யாமல் கோவில் உற்சவர் சிலை போல் உள்ளனர்.

மேலும் இந்த விசயத்தில் கருத்து கூறிய ஆந்திரமாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சத்யநாராயாணாவை வன்மையாக கண்டிப்பதாகவும் ரோஜா கூறினார். ஆந்திராவில் உள்துறை மந்திரியாக இருக்கும் சபீதா இந்திரா ரெட்டி தொகுதியிலேயே ஒரு பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டு உள்ளார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினாரே தவிர தடுக்க வழி இல்லை. பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க ஆந்திர முதல்வர் கிரண்குமாரும் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.

உயர்ந்த பதவியில் இருப்போர் மற்றவர்களை போல இந்த சம்பவத்துக்கு நானும் வேதனைப்படுகிறேன் என்று சொல்வது வெட்ககேடானது. அதிகாரத்தில் இருப்பவர்கள் வேதனைப்பட்டால் பிரச்சினை தீர்ந்து விடுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த விசயத்தில் சோனியாகாந்தி கோவில் உற்சவர் போல வலம் வருகிறார் என்றும் ரோஜா கூறியுள்ளார்.

 

எனக்கு மலையாள ஹீரோயின்கள்தான் வேணும் - அடம்பிடிக்கும் விமல்!

Vimal Adamant Cast Mallu Heroines

யார் என்ன சொன்னாலும் கவலையில்ல... எனக்கு மலையாள ஹீரோயின்கள்தான் வேண்டும் என அடம்பிடிக்கிறாராம் நடிகர் விமல்.

பசங்க படத்தில் அறிமுகமானாலும், களவாணியில்தான் பளிச்சென்று தெரிந்தார் விமல். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஓவியா. மலையாளப் பெண் இவர்.

விமலின் அடுத்த படம் வாகை சூடவா. இதில் அவருக்கு ஜோடி இனியா. இவரும் மலையாள வரவுதான். அடுத்து நடித்த கலகலப்பு படத்தில் இவருக்கு ஜோடியாக இல்லாவிட்டாலும், ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார் ஓவியா. தொடர்ந்து இப்போது விமல் நடிக்கும் சில்லுனு ஒரு சந்திப்பு நாயகியும் ஓவியாதான்.

புதிதாக விமல் நடிக்க உள்ள களவாணி சற்குணத்தின் மஞ்சப்பை படத்தில் விமலுக்கு ஜோடி லட்சுமி மேனன். இவரும் மலையாள நாயகிதான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

 

6வது எடிசன் விருதுகள் - 28 பேர் போட்டி

6th Edison Awards Nominees List Released

சென்னை: தமிழ் சினிமாவில் பிரபலமான எடிசன் விருதுக்கு 28 பேர் கொண்ட பரிந்துரைப் பட்டியல் நேற்று வெளியானது. இந்த பட்டியலிலிருந்து விருதுக்குரியவர்களை ஆன்லைன் மூலம் வாசகர்கள் தேர்வு செய்கிறார்கள்.

எடிசன் விருது வழங்கும் விழா கடந்த 5 ஆண்டுகளாக பிரமாண்டமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டு நடந்த விழாவில் விஜய், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா தனுஷ், ரிச்சா கங்கோபாத்யாய், அமலா பால், இனியா என தமிழ் திரையுலகமே திரண்டு வந்து பங்கேற்றது.

இந்த ஆண்டுக்கான எடிசன் விருதுகளுக்கு போட்டியிடும் 28 பேரப் கொண்ட பட்டியலை (Nominees) ஹோட்டல் பென்ஸ் பார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்த் திரையுலக நட்சத்திரங்கள் வெளியிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் எடிசன் விருது குழு தலைவர் ஜெ செல்வகுமார் முன்னிலையில் தமிழ் திரைத்துறை சார்ந்த பிண்ணனிப் பாடகி சின்மயி, பாடலாசிரியர் நா. முத்துக்குமார், நடிகர் ஜெயபிரகாஷ், திரைப்பட பெண் இயக்குனர், லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை விஜி சந்திர சேகர், சின்னபொண்ணு, நடன இயக்குனர் பாபி உள்ளிட்டோர் மற்றும் ஆனந்த் திரையரங்கத்தின் உரிமையாளர் கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இனி விருதுக்குரியவர்களை இணையதளம் மூலம் ஓட்டளித்து வாசகர்கள் தேர்வநு செய்யலாம். இதற்கான தனி இணையதளத்தை நட்சத்திரங்கள் தொடங்கி வைத்தனர்.

பின்னர் வாக்குசீட்டு முறையில் வாக்கு பெட்டி மூலம் தேர்ந்தெடுக்கும் முறையை பாடலசிரியர், நா. முத்துக்குமார், நடிகர் ஜெயபிரகாஷ், நடிகை விஜி சந்திர சேகர் மற்றும் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன், நடன இயக்குனர் பாபி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று நன்றி தெரிவித்தார் எடிசன் விருது குழு தலைவர் ஜெ செல்வகுமார்.

 

என் மகள் ஒரு நடிகை ஆனதில் மகிழ்ச்சி.. பெருமை! - நடிகர் அர்ஜுன்

I M Proud Introduce My Daughter As

சென்னை: என் மகள் ஒரு நடிகை ஆக தன் கேரியரைத் தேர்வு செய்தது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது என்றார் ஆக்ஷன் கிங் அர்ஜூன்.

நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா 'பட்டத்து யானை' என்ற படத்தில் விஷால் ஜோடியாக அறிமுகமாகிறார். மைக்கேல் ராயப்பன் எம்எல்ஏ தயாரிக்கும் இந்தப் படத்தை பூபதி பாண்டியன் இயக்குகிறார்.

ஐஸ்வர்யாவை நிருபர்களுக்கு இன்று முறைப்படி அறிமுகம் செய்து வைத்தார் அர்ஜுன்.

அப்போது அவர் கூறுகையில், "30 ஆண்டுகளாகிறது நான் சினிமாத் துறைக்கு வந்து. ஒரு நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக எத்தனையோ முறை பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளேன்.

ஆனால் இந்த சந்திப்பு வித்தியாசமானது. என் மகளை கதாநாயகியாக அறிமுகப்படுத்தும் சந்திப்பு இது. எனக்கு பெருமையாக இருக்கிறது. பணம், புகழ், நண்பர்கள், சந்தோஷம் எல்லாமே இந்த சினிமாவில்தான் எனக்கு கிடைத்தது. சோறு போட்ட அந்த துறையில் என் மகளை அறிமுகப்படுத்துவதில் எனக்குப் பெருமை.

இதனை கேள்விப்பட்டு பலர் பாராட்டினர். இன்னும் சிலர் ஆண் என்றால் பரவாயில்லை. பெண்ணாக இருக்கிறாளே...? பரவாயில்லையா என்றனர். நல்லது, கெட்டது எல்லா துறையிலும் இருக்கிறது. நாம் நடந்து கொள்ளும் முறையில்தான் இருக்கிறது. என் பெண்ணை பையன் மாதிரிதான் வளர்த்துள்ளேன். அவளுக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது. அவளை அவள் பார்த்துக் கொள்வாள் என்று அவர்களுக்கெல்லாம் பதில் சொன்னேன்.

சினிமா என் வீடு. நானே உள்ளே போக பயந்தால் மற்றவர்கள் எப்படி வருவார்கள். அதனால்தான் என் பெண்ணை குடும்பத்துடன், மகிழ்ச்சியுடன் அறிமுகப்படுத்தி உள்ளேன். பூபதி பாண்டியன் திறமையான இயக்குனர். அவர் சொன்ன கதை பிடித்திருந்தது.

விஷால் நாயகனாக நடிப்பது இன்னொரு மகிழ்ச்சி. ஏற்கனவே நான் இயக்கிய வேதம் படத்தில் விஷால் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். சுறுசுறுப்பானவர். அவர் பார்த்து வளர்ந்த பெண்தான் என் மகள்," என்றார்.

 

சல்மானின் தபாங் 2 ரிலீஸான ஆறே நாளில் ரூ.100 கோடி வசூல்

Salman Dabangg 2 Crosses 100 Crore Mark At Box Office

மும்பை: சல்மான் கான் நடித்த தபாங் 2 படம் ரிலீஸான ஆறே நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது.

தபாங் படத்தின் இரண்டாம் பாகத்தை சல்மான் கான் மற்றும் சோனாக்ஷி சின்ஹாவை வைத்து இயக்கினார் அர்பாஸ் கான். இந்த படத்தின் மூலம் சல்மான் கானின் தம்பி அர்பாஸ் இயக்குனராகியுள்ளார். படம் கடந்த மாதம் 21ம் தேதி ரிலீஸ் ஆனது. கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி ரிலீஸான படம் வெறும் 6 நாட்களிலேயே அதுவும் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலை அள்ளியுள்ளது.

படம் ரிலீஸான முதல் 3 நாட்களிலேயே ரூ.64 கோடி வசூல் செய்தது. சல்மானுக்கு போட்டியாக பெரிய நடிகர்களின் படம் எதுவும் ரிலீஸ் ஆகாததால் தபாங் 2 தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.

முன்னதாக சல்மான், கத்ரீனா நடித்த ஏக் தா டைகர் படம் ரிலீஸான 5 நாட்களில் ரூ.100 கோடி வசூலித்தது. இந்திய சினிமா வரலாற்றிலேயே இத்தனை குறுகிய காலத்தில் ரூ.100 கோடி வசூல் செய்த முதலாவது படம் ஏக் தா டைகர் தான். இந்நிலையில் குறுகிய காலத்தில் ரூ.100 கோடி வசூல் செய்த இரண்டாவது படம் என்ற பெருமையை தபாங் 2 பெற்றுள்ளது.

இன்றைய தேதி வரை தபாங் 2 இந்தியாவில் மட்டும் ரூ.139.5 கோடி வசூல் செய்துள்ளது.

 

சன் குடும்ப விருதுகளை தட்டிச் சென்ற ராதிகா

Sun Kudumbam Awards 2012

சன் குடும்ப விருது வழங்கும் விழாவில் நீண்டநாட்கள் சன் குடும்பத்தில் இருந்ததற்கான விருது ராதிகா சரத்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த கதாநாயகனுக்கான விருது திருமுருகனுக்கும், சிறந்த கதாநாயகிக்கான விருது திருமதி செல்வம் அபிதாவிற்கும் வழங்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் தொடர் நாயகர்கள், நாயகிகள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு சன் குடும்ப விருதுகள் வழங்கப்படுகின்றன.

2012ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா சில தினங்களுக்கு முன்பு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. சன் டிவியின் தொடர்களைப் பார்த்து வாசகர்கள் தேர்ந்தெடுத்த நடிகர் நடிகையர்களுக்கு இந்த ஆண்டிற்கான சன் குடும்ப விருதுகள் வழங்கப்பட்டன.

சன் டி.வியில் நாள்தோறும் காலை முதல் இரவு வரை ஒளிபரப்பாகி வரும் தொடர்கள், அதில் நடித்த சிறந்த கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படுகின்றன. சன் டிவியில் நீண்ட நாட்களாகப் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கும் இந்த ஆண்டு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

வாழ்நாள் சாதனையாளர் விருது

சன் டிவியில் மெட்டி ஒலி, ஆனந்தம் உள்ளிட்ட தொடர்களில் நடித்த டெல்லி குமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் வழங்கப்பட்டது.

ராதிகா சரத்குமாருக்கு விருது

நீண்ட நாள் சன் குடும்பத்தில் இருந்ததற்கான விருது ராதிகா சரத்குமாருக்கு வழங்கப்பட்டது. முதலில் நடிகையாக தொடங்கிய பயணம், சித்தி, அண்ணாமலை, செல்வி, செல்லமே என சன் டிவியில் தொடர்கிறது ராதிகாவின் பயணம். இதேபோல் நீண்ட நாட்களாக டி.வி தொடரின் நேரமான இரவு 9.30 மணியை தக்கவைத்துக் கொண்டதற்கான விருது ராதிகாவிற்கு வழங்கப்பட்டது.

சன் குடும்பத்தில் நீண்ட நாட்கள்

இதேபோல் சன் குடும்பத்தில் நீண்டநாட்களாக தொடர்களை ஒளிபரப்பிவரும் விகடன் டெலிவிஸ்டாஸ் பா.சீனிவாசன், விஷன் டைம்ஸ் ராமமூர்த்தி, அபிநயா கிரியேஷன்ஸ் ஜி.கிருஷ்ணமுர்த்தி, சினி டைம்ஸ் சவுந்தர்ராஜன், ஷான் மீடியா கபிலன், சரிகம பி.ஆர்.விஜயலட்சுமி, ஹோம் மீடியா சுஜாதா விஜயகுமார், யுடிவி சந்தோஷ் நாயர், திரு பிக்சர்ஸ் திருமுருகன், நிம்பஸ் குமார் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

சிறந்த கதாநாயகன் திருமுருகன்

நாதஸ்வரம் தொடரை தயாரித்து நடித்து வரும் திருமுருகன் சிறந்த கதாநாயகனாகவும், திருமதி செல்வம் நாயகி அபிதா சிறந்த கதாநாயகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த நடிகை சிறப்பு விருது தங்கம் தொடரில் நடித்த ரம்யா கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த இயக்குநர் குமரன்

சிறந்த இயக்குநராக தென்றல் தொடர் இயக்குநர் எஸ்.குமரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த தொடராக திருமதி செல்வம் தொடர் தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த மாமனாராக நாதஸ்வரம் தொடரில் நடித்த மகாநதி சங்கரும், சிறந்த மாமியாராக வடிவுக்கரசியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பொருத்தமான ஜோடி

சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடரில் பொருத்தமான ஜோடியாக தென்றல் தொடர் நாயகன் நாயகி தீபக், ஸ்ருதி தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிறந்த மருமகனாக சதீஷ், சிறந்த மருமகளாக ஸ்ரித்திகாவும் தேர்ந்தெடுக்கப்பட்டன.

சகோதரன் சகோதரி விருது

சிறந்த சகோதரனாக செல்லமே தொடரில் நடித்த ராதாரவிக்கும், சகோதரியாக தங்கம் தொடரில் நடித்த அனுராதாவிற்கும் விருது வழங்கப்பட்டது. சிறந்த தாய் தந்தையாக விஜி, மவுலி தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.

தேவயானிக்கு விருது

பெண்மையை உயர்த்தும் கவுரவ விருது முத்தாரம் தொடரில் நடித்த தேவயானிக்கு வழங்கப்பட்டது.

காவேரிக்கு நகைக்சுவை விருது

சிறந்த நகைச்சுவை நடிகை விருது தங்கம் தொடரில் நடித்த காவேரிக்கு வழங்கப்பட்டது. நகைச்சுவை நடிகராக முனீஸ்ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த வில்லான பாலாசிங், சிறந்த வில்லியாக ராணியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணை நடிகராக பொள்ளாச்சி பாபு துணை நடிகையாக சந்தியாவும் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருது வழங்கும் விழாவில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

 

'தூங்கா நகரம்' கவுரவ் இயக்கும் 'சிகரம் தொடு' - ஹீரோ விக்ரம் பிரபு!

Thoonga Nagaram Gourav New Movie Sigaram Thodu

தூங்கா நகரம் படத்தை இயக்கிய கவுரவ், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கும் புதிய படம் சிகரம் தொடு. டிஸ்னி யுடிவி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

டிஸ்னி யுடிவி இப்போது சேட்டை என்ற படத்தை தமிழில் தயாரித்து வருகிறது. ஆர் கண்ணன் இயக்கும் இப்படம், டெல்லி பெல்லி என்ற இந்திப் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். ஆர்யா, பிரேம்ஜி, சந்தானம், ஹன்சிகா, அஞ்சலி நடித்து வருகின்றனர்.

இந்தப் படம் முடியும் தறுவாயில் உள்ளது. எனவே புதிய படத்தின் வேலைகளை ஜனவரி 2-ம் தேதி தொடங்கினர். தூங்கா நகரம் படத்தை இயக்கிய கவுரவ் இந்தப் புதிய படத்தை இயக்குகிறார். படத்துக்கு சிகரம் தொடு என பெயர் சூட்டியுள்ளனர்.

விக்ரம் பிரபு

கும்கி படத்தில் நடித்த விக்ரம் பிரபுதான் இந்தப் படத்தின் ஹீரோவாக நடிக்கிறார். இவன் வேறு மாதிரி என்ற படத்தில் இப்போது நடித்துவரும் விக்ரம் பிரபு, அடுத்து இந்த சிகரம் தொடு படத்தில் நடிக்கிறார்.

படத்தை இந்த மாதம் ஆரம்பித்து, ஆண்டின் இறுதியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக டிஸ்னி யுடிவியின் தென்னிந்திய தலைமை அதிகாரியான தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

 

பிரபு மகனை இயக்கிய கையோடு கார்த்திக் மகனை இயக்கும் பிரபு சாலமோன்

Gautham Karthik Is Prabhu Solomon Hero

சென்னை: இயக்குனர் பிரபு சாலமோன் தான் இயக்கும் புதிய படத்தில் கார்த்திக்கின் மகன் கௌதமை ஹீரோவாக ஒப்பந்தம் செய்துள்ளார்.

நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் மணி ரத்னத்தின் கடல் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். கடல் படம் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகிவிட்டன. இந்த படத்தில் கௌதமுக்கு ஜோடியாக ராதாவின் இளைய மகள் துளசி நடித்துள்ளார். இந்த 2 கலைவாரிசுகளையும் படத்தில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் கௌதம் பிரபு சாலமோனின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது. பிரபு சாலமோன் நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரவு, லக்ஷ்மி மேனனை வைத்து எடுத்த கும்கி படம் வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நல்ல வேளையில் புதிய படத்திற்கான முயற்சியை துவங்கிவிட்டார் இயக்குனர்.

முதலில் பிரபுவின் மகனை இயக்கிய அவர் தற்போது கார்த்திக்கின் மகனை இயக்கவிருக்கிறார்.

 

அமைதியாகச் சொன்னாய் உன் காதலை...கபில் சிபலின் கலக்கல் பாட்டு!

Kapil Sibal Writes Luvvy Duvvy Lyrics

டெல்லி: கபில் சிபல் ஒரு நல்ல சட்ட வல்லுநர், திறமையான அமைச்சர், நல்ல பேச்சாளர் என்பது பலருக்குத் தெரியும். ஆனால் அவர் நல்ல இந்தி இலக்கியவாதி என்பது நிறையப் பேருக்குத் தெரியாது. குறிப்பாக தென்னிந்தியாவில். அதுவும் அவர் அபாரமான கவிஞர் என்பது நிறையப் பேருக்குத் தெரியவே தெரியாது. தற்போது கவிஞர் கபில் சிபல், இந்திப் படம் ஒன்றுக்கு ஒரு அருமையான காதல் பாடலை எழுதி, அதுவும் ஹிட்டாகி விட்டது.

தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பணியில் கடும் பிசியாக இருந்து வந்தபோதிலும் இந்திப் படத்துக்கும் அவர் பாடல் எழுத நேரம் ஒதுக்கிக் கொடுத்துள்ளார். இயக்குநர் ஆதித்யா ஓம் என்பவரின் புதிய இந்திப் படமான பந்தூக் படத்தில்தான் சிபலின் பாடல் இடம் பெற்றுள்ளது. இப்படத்துக்கு பாடல் எழுத வேண்டும் என்று ஓம், சிபலை அணுகியபோது மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டாராம் சிபல். இதையடுத்து நான்கு பாடல்களை எழுதிக் கொடுத்துள்ளார். அதில் ஒன்றைப் படத்தில் பயன்படுத்தியுள்ளார் ஓம்.

இரு காதலர்களின் பிரிவின் வலியை அழகான வார்த்தைகளில் காதல் ரசம் சொட்டச் சொட்ட வடித்துள்ளாராம் கபில் சிபல். உண்மையிலேயே இந்தப் பாடல் மிகவும் நயமாகவும், ரசணையாகவும் வந்திருப்பதாக இயக்குநர் ஓம் சிலாகித்துக் கூறுகிறார்.

இலக்கியத்தில் அவருக்கு உள்ள நல்ல ஞானமே இந்தப் பாடல் கவிநயத்துடன் மிளிர முக்கியக் காரணம் என்கிறார் ஓம். அந்தப் பாடலில் வரும் ஒரு வரியைப் பாருங்கள்...

காதல் மிளிரும் உன் கண்கள்
வெட்கம் பூத்த புன்னகை
அமைதியாகச் சொன்னாய் உன் காதலை...

இந்த மாதத்தில் இப்படம் திரைக்கு வருகிறதாம். 64 வயதாகும் கபில் சிபல், ஏற்கனவே 2 கவிதைப் புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். தற்போது பந்தூக் படத்தின் பாடல் ரிங்டோன்களாகவும் மாறி இந்திக்காரர்களை ரசிக்க வைத்து வருகிறதாம்.

 

அஜீத், விஜய், விக்ரம், சூர்யா கூட நடிக்கமாட்டேன் - லட்சுமி மேனன் அதிரடி

Lakshmi Menon Says No Ajith Vijay Surya

முத்தக்காட்சியில் நடி... நெருக்கமா நடின்னு கட்டாயப்படுத்துவாங்க என்பதால் அஜீத், விஜய், விக்ரம், சூர்யா போன்ற நடிகர்கள் யாருடனும் நான் நடிக்க விரும்பவில்லை என்று அதிரடியாக தெரிவித்துள்ளார் நடிகை லட்சுமிமேனன்.

தமிழ் சினிமாவின் இன்றைய ஹாட் நாயகி லட்சுமி மேனன்தான். அவர் நடிக்க சுந்தரபாண்டியன், கும்கி இரண்டுமே அதிரடியாக ஜெயித்துவிட்டன.

தற்போது சசிகுமாருடன் ‘குட்டிப்புலி', விமலுடன் ‘மஞ்சப்பை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ராசியான நாயகி என்ற பெயர் வந்துவிட்டதால், லட்சுமி மேனனை தங்கள் படங்களில் ஹீரோயினாக்க முன்னணி நடிகர்கள் முயன்று வருகின்றனர்.

ஆனால் லட்சுமியோ, முன்னணி நடிகர்களுடன் நடிக்க விருப்பமில்லை என்று அதிரடியாகக் கூறிவிட்டார்.

இதுபற்றி அவர் கூறும்போது, "ஒரு நல்ல நடிகையாக வேண்டும் என்று சென்னைக்கு வந்தேன். வந்த வேகத்தில் அதற்கேற்ற படங்கள் கிடைத்தன. நல்ல நடிகை என்ற பெயரையும் பெற்றுவிட்டேன்.

இனி முன்னணி நடிகையாக வேண்டும். அதற்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்க வேண்டும். ஆனால் அஜித், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோருடன் நடிக்க வேண்டுமென்றால் பாடல் காட்சிகளில் கவர்ச்சியாக நடிக்க வேண்டியிருக்கும். கூடவே, முத்தக்காட்சி, அதிக நெருக்கம் என்றெல்லாம் காட்சி இருக்கும். எனக்கு அது சரிப்பட்டு வராது. அதனால்தான் அவர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையை விட்டுவிட்டேன்.

எனக்கு பொருத்தமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன். படங்களின் எண்ணிக்கை கணக்கல்ல... கொஞ்ச காலம் நடித்தாலும் டீசன்டாக நடித்துவிட்டுப் போய்விட வேண்டும்," என்றார்.

அதுக்குள்ள இவ்வளவு தெளிவா... ரொம்ப பட்டுட்டார் போலிருக்கு!!