சாந்தகுமார் இயக்கத்தில் ஜீவா, கார்த்தி?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அருள்நிதி நடித்த 'மவுனகுரு' படத்தை இயக்கிய சாந்தகுமார், அடுத்து படத்தில் ஜீவா அல்லது கார்த்தி நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம். 'மவுனகுரு' படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்ததால், இயக்குனர் சாந்தகுமார் அடுத்த பட வாய்ப்பு எளிதில் கிடைத்துவிட்டது. இந்த படத்தை ஒரு முன்னணி ஹீரோ நடித்தால் நன்றாக இருக்கும் என சாந்தகுமார் எண்ணியதால், கார்த்தி மற்றும் ஜீவா ஹீரோவாக நடிக்க வைக்க பேச்சு நடந்து வருகிறதாம்.


 

கமல் பட இன்னொரு நாயகியும் வெளியேறினார்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சோனாக்ஷி சின்ஹாவை தொடர்ந்து கமல் படத்திலிருந்து இன்னொரு நாயகியும் வெளியேறினார். கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் புதிய படம் 'விஸ்வரூபம்'. இதன் ஷூட்டிங் வெளிநாடுகளில் நடந்து வருகிறது. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க பாலிவுட் ஹீரோயின் சோனாக்ஷி சின்ஹா தேர்வானார். ஷூட்டிங் தொடங்க தாமதமானதால் கால்ஷீட் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து அவர் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து இஷா ஷெர்வானி நடிக்க  ஒப்பந்தம் ஆனார். தற்போது அவரும் வெளியேறிவிட்டார். இதுபற்றி அவர்கூறும்போது, 'கமல்சார் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் கால்ஷீட் பிரச்னையால் வெளியேற வேண்டியதாகிவிட்டது. கமலுடன் நடிப்பது எனது கனவு. அந்த கனவு நனவாகவில்லை.  மீண்டும் அவருடன் நடிக்க வாய்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறேன்.  மாற்றான் படத்தில் சூர்யாவுடன், டேவிட் என்ற படத்தில் விக்ரமுடன் நடிக்கிறேன். இவ்வாறு இஷா ஷெர்வானி கூறினார்.


 

அர்ஜுன் படத்தில் மாற்றுத்திறன் சிறுவன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அர்ஜுன் மகனாக காது கேட்காத, வாய் பேச முடியாத சிறுவன் நடிக்கிறான். இப்படம் குறித்து இயக்குனர் மனோஜ் சதி கூறியதாவது: தமிழ், தெலுங்கு, கன்னடம் என 3 மொழிகளில் அர்ஜுன் நடிக்கும் படம் 'பிரசாத்'. சாதாரண மெக்கானிக்கான தனக்கு ஆண் குழந்தை பிறந்தால் வளர்ந்து ஆளாகி குடும்ப கஷ்டத்தை போக்குவான் என்று எண்ணுகிறார். ஆண் குழந்தை பிறக்கிறது. மாற்று திறனாளியாக பிறக்கும் அக்குழந்தையால் வாய் பேச முடியாது. காது கேட்காது. அதன்பிறகு அர்ஜுன் எடுக்கும் முடிவு கிளைமாக்ஸ். அர்ஜுன் மகனாக சிறுவன் சங்கல்ப் நடிக்கிறார். இந்த சிறுவன் உண்மையிலேயே மாற்று திறனாளி.  காது கேட்காது, வாய்பேச முடியாது. அர்ஜுன் என்றதும் ஆக்ஷன்தான் ஞாபகம் வரும். இந்த படத்தில் துளிகூட சண்டை காட்சி கிடையாது, டூயட்டும் கிடையாது. ஹீரோயின் மாதுரி பட்டாச்சார்யா. இசை இளையராஜா. தயாரிப்பு அசோக் கேணி.


 

தயாரிப்பாளருடன் பிரகாஷ்ராஜ் மோதல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பிரகாஷ்ராஜுக்கும் தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜுக்கும் நெருக்கமான நட்பு இருந்தது. 'பயணம்' என்ற படத்தை தெலுங்கில் இருவரும் சேர்ந்து தயாரித்தார்கள். அடுத்து 'சீதம்மா வகிட்லோ சிருமல்லே செட்டு' என்ற தெலுங்கு படத்தை தயாரிக்கிறார் ராஜு. இதில் வெங்கடேஷ், மகேஷ்பாபு அண்ணன், தம்பியாக நடிக்கின்றனர். இரு ஹீரோக்களின் தந்தை வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்க ஒப்புக்கொண்டார். கடந்த மாதம் இறுதியில் குற்றாலத்தில் ஷூட்டிங் தொடங்கியது. ஆனால் பிரகாஷ்ராஜ் கலந்துகொள்ளவில்லை. இதற்கு காரணம் கேட்டபோது, பிரகாஷ்ராஜ், தில் ராஜு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டதாக டோலிவுட் வட்டாராங்கள் தெரிவித்தன. இதையடுத்து ராஜு தயாரிக்கும் படத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்க மறுத்து வெளியேறிவிட்டார். தந்தை வேடத்தில் நடிக்க புதிய நடிகரை தேடிக்கொண்டிருக்கிறது பட குழு. ஏற்கனவே இப்படத்தில் மகேஷ்பாபுவின் அண்ணி வேடத்தில் நடிக்க மறுத்து அனுஷ்கா, த்ரிஷா போன்றவர்கள் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.


 

கிசு கிசு - இயக்கத்துக்கு எதிர்ப்பு ஹீரோக்கள் ஜகா

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

லேடீஸ் அழகை ரசிக்கறதுல எனக்கு தனி ஆர்வம்னு வர்மா இயக்கம் வெளிப்படையா சொல்றாராம்... சொல்றாராம்...  தன் படங்கள்ல ஹீரோயினுங்க அழகை வித்தியாசமான கோணத்துல காட்டுறதுக்கு முக்கியத்துவம் தர்றாராம்... இவரோட வெளிப்படையான பேச்சு பிரச்னையை உண்டு பண்ணிடுச்சாம். சில பெண்கள் அமைப்பு வர்மா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிச்சிருக்காம். ஆனா நெருக்கமான ஹீரோயின்கள்  அவர் கருத்து சொன்னதுல தப்பில்லைனு  ஆதரவு கரம் நீட்றாங்களாம்... நீட்றாங்களாம்...

சமீர ஹீரோயின் பேரை கேட்டால் ஹீரோக்கள் ஜகா வாங்கறாங்களாம்... வாங்கறாங்களாம்... ஹீரோக்கள்கிட்ட அவர் மோதல் போக்கு எதையும் கடைபிடிக்கலையாம். ஆனா ஹீரோக்கள போல தனக்கும் ஆக்ஷன் சீன் வையுங்கன்னு இயக்கத்துக்கிட்ட சீக்ரட்டா சொல்றாராம். சீக்ரெட்டா இவர் சொல்ற விஷயத்த சில இயக்கங்கள் ஹீரோக்கள்கிட்ட போட்டுகொடுக்கறதால சத்தமில்லாம ஹீரோக்கள் எஸ்ஸாகறாங்களாம்... எஸ்ஸாகறாங் களாம்...

ஓல்டு ஈஸ்வரி பாடகிக்கு புதுசா லக் அடிச்சிருக்காம்... அடிச்சிருக்காம்... உசத்தியான படத்துல அவர் பாடின பாட்டுக்கு வரவேற்பு இருந்ததால மத்த இயக்கங்களோட பார்வையும் அவர் மேல விழுந்திருக்காம். சத்தமே இல்லாம அமுங்கிகிடந்த பாடகிக்கு திடீர்னு சான்ஸ் கெடச்சதாலே கட்ட குரல்ல பாட்ற பாடகிங்க பயத்துல இருக்காங்களாம்... இருக்காங்களாம்...