ஹீரோ ரேஸில் ஜீவா முன்னணி!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஹீரோ ரேஸில் ஜீவா முன்னணி!

5/11/2011 12:46:57 PM

இது ‌‌ஜீவா வருடம். சிங்கம் புலி, கோ என அடுத்தடுத்த ஹிட்கள். இதுமட்டுமின்றி ஜீவா நடித்து வரும், ரௌத்திரம், வந்தான் வென்றான், நண்பன் என வரப் போகிற படங்களும் எதிர்பார்ப்புக்கு‌ரியவை. ஜீவாவின் மார்க்கெட் ‘கோ’ படத்தின் மூலம் பட்டையை கிளிப்பியுள்ளது. மேலும் ‘கோ’ படம் வசூலிலும் பட்டையை கிளிப்பியுள்ளது. இதனையடுத்து கோலிவுட் தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் ஜீவா கால்ஷீட் வாங்குவதற்குக்காக ஜீவா வீட்டிற்கு படை எடுத்து வருகின்றனர். கோலிவுட் ஹீரோ ரேஸில் ஜீவா படு வேகமாக சென்று கொண்டிருக்கிறார்.

 

பார்வையாளர்களை ஈர்க்கும் 'பிரிவோம் சந்திப்போம்'!

Tags:


விஜய் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ள பிரிவோம் சந்திப்போம் தொடர் அதிக பார்வையாளர்களை ஈர்க்க ஆரம்பித்துள்ளது.

தி‌ங்‌கள்‌ முதல்‌ வெ‌ள்‌ளி‌ வரை‌ இரவு‌ 7.30 முதல்‌ 8.00 மணி‌ வரை‌ ஒளி‌பரப்‌பா‌கி‌ வரும்‌ இந்தத் தொடர் ஆரம்‌பி‌த்‌து தற்‌போ‌து 25 எபி‌சோடுகள்‌ கடந்‌துள்ளன. ஆரம்‌பத்‌தி‌லே‌யே‌ பரபரப்‌போ‌டும்‌ வி‌றுவி‌றுப்‌போ‌டும்‌ உள்ளதால் வழக்‌கமா‌ன பா‌ர்‌வை‌யா‌ளர்‌கள்‌ மட்‌டும்‌ அல்‌லா‌து பு‌தி‌ய பா‌ர்‌வை‌யா‌ளர்‌களை‌யு‌ம்‌ தி‌ரும்‌பி‌‌ப்‌ பா‌ர்‌க்‌க வை‌கத்துள்ளது பிரிவோம் சந்திப்போம்.

தெ‌லுங்‌கி‌ல்‌ பல வெ‌ற்‌றி‌கரமா‌ன தொ‌டர்‌களை‌ தயா‌ரி‌த்‌த எவர்‌கி‌ரீ‌ன்‌ பு‌ரொ‌டக்‌ஷன்‌ஸ்‌ பி‌ரை‌வெ‌ட்‌ லி‌மி‌டெ‌ட்‌ சை‌யத்‌ அன்‌வர்‌ தயா‌ரி‌க்‌க, ரசூ‌ல் இயக்‌கி‌ உள்‌ளா‌ர்‌. க்‌ளை‌ட்‌டன்‌ வசனம்‌ எழுத, மா‌ர்‌டி‌ன்‌ ஜோ ஒளி‌ப்‌பதி‌வு‌ செ‌ய்‌துள்‌ளா‌ர்‌. இந்‌தத்‌ தொ‌டரி‌ன்‌ படப்‌பி‌டி‌ப்‌பு‌ பெ‌ரும்‌ பகுதி‌ கா‌ரை‌க்‌குடி‌, செ‌ட்‌டி‌நா‌டு, இரா‌மே‌ஸ்‌வரம்‌ பகுதி‌களி‌ல்‌ படமா‌க்‌கப்‌பட்‌டுள்‌ளது.

எல்‌. ரா‌ஜா‌, ரா‌ஜலட்‌சுமி‌, கல்‌யா‌ணி‌, மகா‌லட்‌சுமி‌, ஸ்ரீதே‌வி‌, சுங்‌கரலட்‌சுமி‌, உசே‌ன்‌, சுவே‌தா‌, மற்‌றும்‌ சனா உட்‌பட பலர்‌ நடி‌க்‌கி‌ன்‌றனர்‌.

சண்‌முகரா‌ஜன் ‌(எல்‌.ரா‌ஜா‌) – தனம் ( ரா‌ஜலட்‌சுமி‌)‌ தம்‌பதி‌களி‌ன்‌ மகள்‌ ஜோ‌தி.‌ தன்‌ தா‌யை‌ப்‌ போ‌ல கறுத்‌த நி‌றம்‌ உடை‌யவள்‌, அன்‌பா‌னவள்‌. சண்‌முகரா‌ஜனி‌ன்‌ தங்‌கை‌ மகள்‌ ரே‌வதி‌. வெ‌ள்‌ளை‌ நி‌றம்‌, கொ‌ள்‌ளை‌ அழகு. பெ‌ற்‌றோ‌ரை‌ இழந்‌து மா‌மன்‌ சண்‌முகரா‌ஜன்‌ வீ‌ட்‌டி‌ல்‌ வளர்‌கி‌றா‌ர்‌. ஒரே‌ வீ‌ட்‌டி‌ல்‌ இருப்‌பதா‌ல்‌ ரே‌வதி‌யு‌ம்‌ ஜோ‌தி‌யு‌ம்‌ உயி‌ருக்‌கு உயி‌ரா‌ன சகோ‌தரி‌களா‌க, தோ‌ழி‌களா‌க வா‌ழ்கி‌றா‌ர்‌கள்‌.

ஜோ‌தி‌யி‌ன்‌ கறுப்‌பு‌ நி‌றம்‌ அவள்‌ வி‌ரும்‌பு‌ம்‌ எல்‌லா‌வற்‌றை‌யு‌ம்‌ அவளி‌டம்‌ இருந்‌து பி‌ரி‌த்‌து செ‌ன்‌றுவி‌டுகி‌றது. ரே‌வதி‌யி‌ன்‌ வெ‌ள்‌ளை‌ நி‌றம்‌ அவள்‌ வி‌ரும்‌பா‌மலே‌ பல அழகி‌ய வி‌ஷயங்‌களை‌ அவளி‌டம்‌ கொ‌ண்‌டு வந்‌து சே‌ர்‌த்‌துவி‌டுகி‌றது.

ஜோ‌தி‌க்‌கு இயல்‌பா‌கவே‌ கி‌டை‌க்‌க வே‌ண்‌டி‌ய மரி‌யா‌தை‌யு‌ம்‌, அங்‌கீ‌கா‌ரமும்‌ அவள்‌ நி‌றத்‌தா‌ல்‌ அவளுக்‌கு கி‌டை‌க்‌கா‌மல்‌ போ‌குது, தன்‌ மகள்‌ ஜோ‌தி‌யை‌ நி‌னை‌த்‌து தி‌னமும்‌ அழுகி‌றா‌ள், தனம்‌‌.

அதனா‌ல்‌ ரே‌வதி‌யை‌ எப்‌படி‌யா‌வது வீ‌ட்‌டை‌ வி‌ட்‌டு துரத்‌தி‌வி‌ட வே‌ண்‌டும்‌ என்‌று எண்‌ணி‌ பல தி‌ட்‌டங்‌களை‌ தீ‌ட்‌டுகி‌றா‌ள்‌. அவை தோ‌ற்‌றுப்‌ போ‌கி‌ன்‌றன.

இந்‌த சமயத்‌தி‌ல்‌ பெ‌ரும்‌ கோ‌டீ‌‌ஸ்‌வரி‌ அபி‌ரா‌மி‌ கண்‌ணி‌ல்‌ ரே‌வதி‌ படுகி‌றா‌ள்‌. மனநி‌லை‌ பா‌தி‌த்‌த தன்‌ மகன்‌ பி‌ரபு‌வுக்‌கு தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌த்‌தா‌ல்‌ அவன்‌ நி‌லை‌ மா‌றும்‌ என முடி‌வெ‌டுக்‌கும்‌ அபி‌ரா‌மி,‌ ரே‌வதி‌யை‌ தன்‌ குடும்‌ப வலை‌யி‌ல்‌ சி‌க்‌க வை‌க்‌க பெ‌ரும்‌ பணத்‌தை‌ செ‌லவுசெ‌ய்‌கி‌றா‌ள்‌.

சண்‌முகரா‌ஜன்‌ மகன்‌ அருணா‌ச்‌சலம்‌, பி‌சி‌னஸ்‌ கனவோ‌டு பெ‌ரும்‌ தொ‌கை‌ கடன்‌ வா‌ங்‌கி‌ துணி‌க்‌கடை‌ ஒன்‌றை‌ ஆரம்‌பி‌க்‌க, அது ஒரு நா‌ள்‌ நள்‌ளி‌ரவி‌ல்‌ தீ‌ வி‌பத்‌துக்‌குள்‌ளா‌கி‌றது.

இதனா‌ல்‌ கடன்‌ சுமை‌, மன உளைச்‌சல்‌ ஏற்‌பட்‌டு, சண்‌முகராஜன்‌ உடல்‌ நி‌லை‌ பா‌தி‌க்‌கப்படுகி‌றது. குடும்‌பத்‌தை‌ எப்‌படி‌யா‌வது கா‌ப்‌பா‌ற்‌றும்‌ முயற்‌‌ச்‌சி‌யி‌ல்‌ இருக்‌கும்‌ ரே‌வதிக்‌கு,‌ அபி‌ரா‌மி‌ சொல்லும் 3 விதிகளுக்கு உடன்‌படுகி‌றா‌ள்‌. அந்‌த வி‌தி‌கள் என்‌ன என்‌பது இனிவரும் எபிசோடுகளில் பாரக்கலாம்.

ஒரு திரைப்படத்துக்குரிய விறுவிறுப்போடும், வேகமான காட்சி நகர்வுகளோடும் பிரிவோம் சந்திப்போம் உள்ளதால், தாய்மார்களிடம் நலல வரவேற்பு கிடைத்துள்ளது.
 

செல்வராகவன் - ஆண்ட்ரியா லடாய்... தனுஷுடன் நடிக்க மறுப்பு!

Tags:


தனுஷ் நடிக்கும் இரண்டாம் உலகம் படத்தில் நடிக்க மறுத்து வெளியேறினார் நடிகை ஆண்ட்ரியா. இயக்குநர் செல்வராகவன் எவ்வளவோ கேட்டும் மறுத்துவிட்டார் ஆண்ட்ரியா. எனவே ரிச்சா கங்கா பாத்யாய் நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார் செல்வராகவன்.

செல்வராகவனுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் ரகசிய காதல் என்றும், அதனால்தான் சோனியா அகர்வால் செல்வராகவனை விவாகரத்து செய்யும் அளவுக்குப் போனார் என்றும் முன்பு பரபரப்பாகப் பேசப்பட்டது.

ஆனால் இதை செல்வராகவன் மறுத்தார். ஆண்ட்ரியா அமைதி காத்தார்.

இந்த நிலையில் செல்வராகவனுக்கும் கீதாஞ்சலி என்ற பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது.

இந்த நிலையில் செல்வராகவன் இயக்க தனுஷ் நடிக்கும் இரண்டாம் உலகம் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானார் ஆண்ட்ரியா.

ஆனால் படப்பிடிப்பின் ஒரு பகுதி முடிந்து, அடுத்த கட்ட ஷூட்டிங் தொடங்கிய நிலையில், இப்போது நடிக்க மறுத்து வெளியேறியுள்ளார். படத்தை முடித்து கொடுக்குமாறு செல்வராகவன் திரும்ப திரும்ப வேண்டியும் அவர் வரவில்லை.

இதையடுத்து ஆண்ட்ரியாவுக்கு பதில் ரிச்சா கங்கா பாத்யாய் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். ஆண்ட்ரியா நடித்த காட்சிகள் வெட்டி எறியப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. இந்த ரிச்சாதான் ஒஸ்தி படத்தில் சிம்பு ஜோடியாக நடிப்பவர்.
 

'ரமலத்துக்கு துரோகம் செய்த நயன்தாரா சீதையா?'-இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு

Tags:


பிரபுதேவா மனைவி ரமலத்தை பிரியக் காரணமாக இருந்த நயன்தாரா சீதை வேடத்தில் நடிப்பதா, என இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தெலுங்கில் தயாராகும் 'ராம ராஜ்ஜியம்' படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். ராமாயண கதையை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. இதில் நயன்தாரா சீதை வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் நடந்து வருகிறது.

இதில் ராமர் வேடத்தில் பாலகிருஷ்ணாவும், வால்மீகி முனிவர் வேடத்தில் அக்கினேனி நாகேஸ்வரராகவும், லட்சுமணன் வேடத்தில் ஸ்ரீகாந்தும் நடிக்கின்றனர்.

புராண கதை என்பதால் இப்படத்தில் நயன்தாரா நடிக்க பிரபுதேவா சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நயன்தாரா சீதையாக நடிக்க இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:

தெலுங்கில் தயாராகும் ராம ராஜ்ஜியம் படத்தில் நயன்தாரா சீதை வேடத்தில் நடிப்பது இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது. பிரபுதேவா திருமணமானவர். மனைவி ரம்லத் மற்றும் குழந்தைகளுடன் வசிப்பவர். அவர் வாழ்க்கையில் புகுந்து ரம்லத்துக்கு துரோகம் செய்தவர் நயன்தாரா.

எனவே சீதை வேடத்தில் நடிக்க நயன்தாராவுக்கு தகுதி இல்லை. அவரை படத்தில் இருந்து நீக்கவேண்டும். இல்லாவிட்டால் தமிழகத்தில் ராம ராஜ்ஜியம் படத்தை திரையிடவிடாமல் தடுப்போம். ஆந்திர மக்களும் இதை புறக்கணிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டு உள்ளார்.
 

ஆழியாறு அணையை மாசுபடுத்தும் பிரபுதேவா குழு: பொதுமக்கள் அதிருப்தி

Tags:


ஆனைமலை: ஆழியாறு அணையில் பிரபுதேவா படக்குழுவினர் ரசாயனத்தைக் கலந்து நீரை மாசுப்படுத்தவதாக அதிகாரிகளும், பொது மக்களும் குற்றம்சாட்டுகின்றனர்.

பிரபுதேவா இயக்கும் படம்

விஷால், சமீரா ரெட்டி நடிக்கும் படத்தினை பிரபுதேவா இயக்கி வருகிறார். ஆனைமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் படபிடிப்பு நடக்கிறது. இப்படத்தின் பாடல் காட்சி, ஆழியாறு அணை ஜீரோ பாயிண்ட்டில் நேற்று நடந்தது. இதற்காக அணைக்குள் செட் போட்டுள்ளனர்.

கொட்டப்பட்ட ரசாயனம்

முதலில் அணை நீரில் ரசாயனம் ஊற்றப்பட்டு தண்ணீர் பச்சை நிறமாக மாற்றப்பட்டது. பிறகு அந்த நீரில் ஆடு, மாடு, மீன், கொக்கு உருவங்கள் வரையப்பட்ட அட்டைகள் நடப்பட்டன. அணைக்குள் சவுக்கு கட்டைகளை நட்டு, மணல் மூட்டைகள் போடப்பட்டு மேடாக்கப்பட்டு அதன்பின்னரே படப்பிடிப்பு துவங்கியது.

பயணிகளுக்கு அனுமதி இல்லை

அணையின் மேல் பகுதியில் 20-க்கும் அதிகமான வாகனங்களை வரிசையாக நிறுத்தி, சுற்றுலாப் பயணிகள் யாரையும் அணையைப் பார்க்க அனுமதிக்காததால் அவர்கள் எரிச்சல் அடைந்தனர். ரசாயனத்தை அணைக்குள் கொட்டி தண்ணீரின் நிறத்தை மாற்றுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், தண்ணீரை குடிநீராகப் பயன்படுத்துவோரும், வன விலங்குகளும் பாதிக்கும் அபாயமும் உள்ளது.

அனுமதியை மீறும் படக்குழுவினர்கள்

'அணைக்கும், அணையில் உள்ள நீருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் படமெடுக்க வேண்டும்' என்ற நிபந்தனைகளுக்குப் பிறகே அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் அனுமதி கிடைத்ததும் படக்குழுவினர் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டுவிடுகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பிற்கென சென்னை தலைமையிடத்தில் அனுமதி பெற்றுள்ளனர். இரண்டு நாட்களுக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி தரப்பட்டுள்ளது.

படக்குழுவினர் சென்னையில் அனுமதி பெற்று வந்துவிடுவதால், இங்குள்ள அதிகாரிகளால் எந்த கட்டுப்பாடும் விதிக்க முடிவதில்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் வருத்தம் தெரிவித்தனர்.
 

திருமணமாகாமலேயே சித்தார்த்துடன் வசிக்கும் ஸ்ருதி?

Tags:


மும்பை பத்திரிகைகளில் இப்போதைய ஹாட் டாபிக், கமல் மகள் ஸ்ருதியும் நடிகர் சித்தார்த்துபம் லிவிங்-இன் ஸ்டைலில் திருமணம் ஆகாமலேயே ஒன்றாக வசிக்கிறார்கள் என்பதுதான்.

கமல் மகள் ஸ்ருதியும் சித்தார்த்தும் அனக்னக ஓ தீருடு என்ற தெலுங்குப் படத்தில் இணைந்து நடித்தனர். அப்போதிலிருந்தே இருவருக்கும் காதல் என்று செய்திகள் வெளியாகின. சித்தார்த் ஏற்கெனவே மனைவியை விவாகரத்து செய்தவர் என்பதால் இந்த செய்திக்கு கூடுதல் கவன ஈர்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில், மும்பை ஆங்கிலப் பத்திரிகை நேற்று பரபரப்பாக ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் ஸ்ருதியும் சித்தார்த்தும் ஒரே வீட்டில் திருமணமாகாமல் கணவன் மனைவியாய் வசிப்பதாகவும், இது கமல்ஹாசனுக்குத் தெரியும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து ஸ்ருதியிடம் கேட்டபோது, "எனது தனிப்பட்ட விஷயங்களை மீடியாவில் பகிர்ந்து கொள்ள நான் விரும்பவில்லை. அது மீடியாவுக்கு தேவையில்லாததும் கூட", என்றார்.
 

இலியானா நடிப்பதற்கு தடை?

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இலியானா நடிப்பதற்கு தடை?

5/11/2011 12:07:00 PM

விக்ரம் நடித்த தெய்வத்திருமகன் படத்தில் நடிப்பதற்காக இலியானாவுக்கு 35 லட்சங்கள் முன்பணமாக தந்திருக்கிறார் பிரபல தயா‌ரிப்பாளர் மோகன் நடராஜன். என்னிடம் முன்பு கூறிய கதை வேறு, இயக்குனரும் வேறு எனக்கூறி தெய்வத்திருமகனில் நடிக்க மறுத்த இலியான அந்த தேதிகளை நண்பன் படத்துக்கு தந்திருக்கிறார். படத்தில் நடிக்காததுடன் அட்வான்சாக வாங்கிய 35 லட்சத்தையும் அவர் திருப்பி‌த் தரவில்லையாம். 35 லட்சத்தை இலியானா திருப்பி‌த் தரும்வரை அவர் நடிக்க தடை விதிக்க வேண்டும் என சங்கத்துக்கு புகார் தந்திருக்கிறார் மோகன் நடராஜன்.

 

ஜூன் மாதம் முதல் கமலின் விஸ்வரூபம்!

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஜூன் மாதம் முதல் கமலின் விஸ்வரூபம்!

5/11/2011 12:00:20 PM

கமல், செல்வராகவன் இணையும் விஸ்வரூபம் படம் ஜூன் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அமெ‌‌ரிக்கா செல்ல படக்குழுவுக்கு விசா கிடைக்கவில்லை என்பதுதான் இந்தப் படத்தைப் பற்றி வந்த முதல் நெகடிவ் தகவல். அமெ‌ரிக்க விசா மறுக்கப்பட்டதால் கனடாவில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஜூன் மாதம் கனடாவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாம்.




 

தபாங் தமிழ் ‌‌ரீமேக்கில் சிம்பு

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தபாங் தமிழ் ‌‌ரீமேக்கில் சிம்பு

5/11/2011 11:53:37 AM

தபாங் படத்தை தமிழில் ‌ரீமேக் செய்வதை நேற்று சிம்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவர் ஏற்கனவே கூறியது போல் தரணி இந்தப் படத்தை இயக்குகிறார். மலடிஃபிளிக்ஸ் ரசிகர்களை மனதில் வைத்து படங்கள் எடுத்து வந்த பாலிவுட்டுக்கு விழுந்த மரண அடி, தபாங். எண்பதுகளின் தெலுங்கு ஆக்சன் படத்தைப் போல் முன்வ‌ரிசை ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படம்தான் தபாங். பீட்ஸா சாப்பிட்டு வந்த நாக்குகளுக்கு இந்த சால்னா சாப்பாடு ரொம்பவே பிடித்துப்போக படம் சூப்பர் டூப்பர்ஹிட். அறிவு‌ஜிவி படங்களின் கலெக்சன் ‌ரிக்கார்டுகளை எல்லாம் தபாங் அடித்து நொறுக்கிறது. அந்தப் படத்தின் தமிழ் ‌‌ரீமேக்கில் சிம்பு நடிக்கிறார்.

தரணி இயக்கும் இந்தப் படத்துக்கு ஒஸ்தி என்று பெயர் வைத்துள்ளனர். ஒஸ்தி தமிழ் பெயரா என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. பாலா‌ஜி ‌ரியல் மீடியாஸ் சார்பில் டி.ரமேஷ் படத்தை தயா‌ரிக்கிறார். ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. ஒஸ்திக்காக மீசை எடுத்து, மசில் வைக்கப் போகிறார் சிம்பு. தபாங் ஹீரோ போலீஸ் அதிகா‌ரி என்பதால் போலீஸ் அதிகா‌ரிகள் சில‌ரின் பாடி லாங்வேஜை ஸ்டடி செய்யும் பணியும் நடந்து கொண்டிருக்கிறதாம்.

 

அழகர்சாமியின் குதிரை: எழுத்தாளர்களுக்கென சிறப்பு திரையிடல்

Tags:


சென்னை: இயக்குனர் சுசீந்தரனின் இயக்கத்தில் நாளை (12-ம் தேதி) வெளியாக இருக்கும் அழகர்சாமியின் குதிரை திரைப்படம் தமிழ் எழுத்தாளர்களுக்கென பிரத்தியேகமாக இன்று திரையிடப்பட்டது.

சிறுகதை

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய சிறுகதை அழகர்சாமியின் குதிரை. அக்கதை பத்திரிகையில் வெளியான போதே பல்வேறு தரப்பின் பாராட்டுக்களைப் பெற்றது. தேனி அருகேயுள்ள சிறு கிராமத்தில் தான் வளர்க்கும் குதிரையின் மீது அளப்பரிய பிரியம் கொண்ட அப்பாவி கிராமத்தானின் கதையே அது.

திரைப்படம் ஆனது

சுசீந்தரனின் வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல ஆகிய திரைப்படங்களின் வசனகர்த்தாவாக பணியாற்றினார் பாஸ்கர் சக்தி. இருபடங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அழகர்சாமியின் குதிரை என்ற சிறுகதையை திரைப்படமாக்க முடிவு செய்தனர்.

சிறப்பு திரையிடல்

அப்பாக்குட்டி, ஐஸ்வர்யா இவர்களோடு ஒரு குட்டிக்குதிரையும் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து இருக்கும் இப்படத்தின் சிறப்பு திரையிடல் இன்று சத்தியம் தியேட்டர் 6 டிகிரி அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழின் முக்கிய எழுத்தாளர்களுக்கென் ஏற்பாடு செய்திருந்த இத்திரையிடலில் பிரபஞ்சன், மனுஷ்யபுத்திரன், யுகபாரதி உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.
 

ஒரு வார சிகிச்சைக்குப் பிறகு நலமுடன் வீடு திரும்பினார் ரஜினி!

Tags:


ஒரு வார சிகிச்சைக்குப் பிறகு, நேற்று மாலை நலமுடன் வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.

முன்னதாக நேற்று காலை 7 மணிக்கு சென்னை பிராட்வேயில் உள்ள ரஜினி காளிகாம்பாள் கோயிலில் சிறப்பு வழிபாட்டையும், திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் ஆசிரமத்தில் தியானத்தையும் முடித்தக் கொண்டு மீண்டும் மருத்துவமனைக்கே திரும்பினார்.

மாலை 6.15 மணிக்கு அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதுகுறித்து, ரஜினியின் இல்லத்தில் விசாரித்தபோது, "ரஜினி சார் இன்று மாலை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்", என்றனர்.

ஓய்வுக்காக அவர் அமெரிக்கா செல்வது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

அடுத்த மாதம்தான் படப்பிடிப்பில் பங்கேற்பார்...

தற்போது பூரண நலத்துடன் இருந்தாலும், படப்பிடிப்பு தளத்துக்குள் நோய்த் தொற்று எதுவும் அவருக்கு ஏற்படக் கூடாது என்பதால், ஒரு மாதம் வரை ஓய்விலிருப்பார் என்றும், அதன் பிறகே ராணாவில் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது. அதுவரை ரஜினி சம்பந்தப்படாத காட்சிகள் படமாக்கப்படும் என்று தெரிகிறது.
 

திருப்பதியில் இசை பல்கலைக்கழகம்: இளையராஜா-மோகன்பாபு அறிவிப்பு

Tags:


திருமலை: திருப்பதியில் இசை பல்கலைக்கழகம் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இசை அமைப்பாளர் இளையராஜாவும், நடிகர் மோகன்பாபுவும் தெரிவித்தனர்.

சாமி தரிசனம்

பிரபல இசை அமைப்பாளர் இளையராஜாவும், பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவும் நேற்று முன்தினம் இரவு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவிலுக்கு வந்த இருவரையும் தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று சாமி தரிசனம் செய்ய அழைத்து சென்றனர்.

அங்கு இருவரும் ஏழுமலையானை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். தரிசனம் முடிந்ததும் கோவிலில் உள்ள ரங்கநாயகி மண்டபத்தில் இருவருக்கும் லட்டு மற்றும் தீர்த்தப் பிரசாதங்களை கோவில் அதிகாரிகள் அவர்களுக்கு வழங்கினர்.

பின்னர் கோவிலை விட்டு வெளியே வந்த இளையராஜாவும், மோகன்பாபுவும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

இசை பல்கலைக்கழகம்

இசை பல்கலைக்கழகம் ஒன்றை தொடங்க வேண்டும் என்பது எங்களது நோக்கமாக இருந்தது. அதன்படி திருப்பதியில் உள்ள ஸ்ரீவித்யா நிகேதன் பல்கலைக்கழகத்தில் (நடிகர் மோகன்பாபுவுக்கு சொந்தமானது) காலியாக உள்ள இடத்தில் இசைக்கு என்று ஒரு பல்கலைக்கழகம் விரைவில் தொடங்கப்படும்.

இந்தியாவில் இசைக்கென கல்லூரி மட்டுமே உள்ளது. பல்கலைக்கழகம் ஏதும் இல்லை. அந்த குறையை இந்த பல்கலைக்கழகம் தீர்த்து வைக்கும். இந்த இசை பல்கலைக்கழகத்துக்கு இருவரும் சேர்ந்து வேண்டிய உதவிகளை செய்வோம்," என்றனர்.