துபாய்: வீரம் படம் அறிவித்தபடி நேற்று துபாய் மற்றும் சிங்கப்பூரில் ரிலீஸாகவில்லை.
அஜீத் குமார், தமன்னா, சந்தானம், அப்புக்குட்டி, விதார்த், பாலா உள்ளிட்டோர் நடித்த வீரம் படம் இன்று தமிழகத்தில் ரிலீஸாகியுள்ளது.
படம் துபாய், சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா, மலேசியா, இலங்கை, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஹாலந்து, கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய வெளிநாடுகளில் நேற்று ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ரிலீஸும் ஆனது.
ஆனால் துபாய் மற்றும் சிங்கப்பூரில் மட்டும் படம் அறிவித்தபடி ரிலீஸாகவில்லை. சிங்கப்பூரில் உள்ள ரெக்ஸ் சினிமாஸில் வீரம் படக்காட்சி ரத்து செய்யப்பட்டதால் அங்கு கூடிய அஜீத் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.
கூட்டத்தை கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் போலீசார் வரவழைக்கப்பட்டனர். படப்பெட்டி வராததால் தான் படம் ரிலீஸ் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
வீரம் படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.