'பூஜைக்குதான் வர்ல.. ஷூட்டிங்குக்காவது வருவாரா!'

இன்று நடந்த தனது படத்தின் பூஜைக்குக் கூட வரவில்லை, அஜீத். பூஜைக்கு வந்த பார்வையாளர்களுக்கு பெரும் உறுத்தலாக இருந்ததும் இதுதான்.

முன்பெல்லாம் தான் நடிக்கும் படங்களின் அத்தனை நிகழ்வுகளுக்கும் தவறாமல் ஆஜராவார் அஜீத். பின்னர், தனது படங்கள் வெளியாகும்போது மட்டும் முக்கிய பத்திரிகைகளை அழைத்து பேட்டி கொடுத்துவிட்டு, படம் வெளியான அன்று ஏதாவது ஒரு ஓட்டலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து வந்தார்.

'பூஜைக்குதான் வர்ல.. ஷூட்டிங்குக்காவது வருவாரா!'

இப்போது அனைத்தும் கட். படத்தில் நடிப்பதோடு சரி. படம் தொடர்பாக எதையும் அவர் பேசுவதில்லை. எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதுமில்லை.

அவ்வப்போது மாறும் அஜீத்தின் பாலிசிகளுள் இது ஒன்று என்றே வைத்துக் கொண்டாலும், அட்லீஸ்ட் பூஜை, ஆடியோ ரிலீஸ் போன்றவற்றிலாவது கலந்து கொள்ளலாமே என ஆதங்கப்படும் சில தயாரிப்பாளர்களும் உண்டு.

இந்த நிலையில் இன்று கவுதம் மேனன் இயக்கத்தில் அவர் நடிக்கும் 55வது படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. காலையில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் உள்பட பலரும் வந்துவிட்டனர். கடைசிவரை அஜீத் வரவில்லை. அவருக்கு ஜோடி எனப்படும் அனுஷ்காவும் வரவில்லை.

இவர்களைப் பார்ப்பதற்காக காத்திருந்தவர்கள் அடித்த கமெண்ட் : படத்தோட ஷூட்டிங் அன்னிக்காவது வருவாங்களா?

 

விஜய்யின் கத்தி படத்துக்கு எதிராக அணி திரளும் தமிழ் அமைப்புகள்

பொதுவாக ரிலீஸ் தேதி நெருங்கும் போதுதான் விஜய் படங்களுக்கு பிரச்சினை கிளம்புவது வழக்கம்.

இந்த முறை படம் தொடங்கிய சில தினங்களுக்குள்ளேயே இடியாப்பச் சிக்கலைச் சந்திக்கிறது அவரது கத்தி படம்.

விஜய் - சமந்தா நடிக்கும் இந்தப் படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்குகிறார்.

படத்தை முதலில் ஐங்கரன் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்போது, அவர்களுடன் லைக்கா மொபைல் நிறுவனமும் தயாரிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் கத்தி படத்துக்கு எதிராக அணி திரளும் தமிழ் அமைப்புகள்

இந்த லைக்கா மொபைல் நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மிக நெருக்கமானது. அவரிடம் ஏராளமான சலுகைகளைப் பெற்று வருகிறது. கடந்த ஆண்டு கொழும்பில் நடந்த காமன்வெல்த் மாநாட்டின் ஒரு முக்கிய நிகழ்வுக்கு ஸ்பான்சரே இந்த லைக்காமொபைல்தான். இதன் தலைவர் சுபாஷ்கரன் அல்லிராஜா ஒரு தமிழர். ஆனால் ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே இவரது கூட்டாளி என்பது ஈழத் தமிழர் அறிந்த உண்மை.

இந்தப் பின்னணி கொண்ட லைக்கா மொபைல் நிறுவனம் விஜய் படத்தைத் தயாரிப்பது தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

எக்காரணம் கொண்டும் விஜய் நடிக்கும் இந்த கத்தி திரைப்படத்தை உலகின் எந்தப் பகுதியிலும் திரையிட அனுமதிக்கமாட்டோம் என அமெரிக்க தமிழ் அமைப்புகள் உறுதியாகத் தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய தமிழ் அமைப்புகளும் இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளன.

இந்தப் பிரச்சினை தீர இரண்டு வழிகள்தான் உள்ளதென்றும்,
ஒன்று படத்தைக் கைவிட வேண்டும்... அல்லது தயாரிப்பாளரை மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் படத்துக்கு எழுந்துள்ள இந்த பிரச்சினை குறித்து சில தமிழ் தினசரிகளின் செய்தியாளர்களை மட்டும் ரகசியமாக அழைத்து சந்தித்துள்ளனர் இயக்குநர் முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர்.

இதில் காமெடி என்னவென்றால், இந்த பிரச்சினையை அம்பலத்துக்கு கொண்டுவந்ததே ஒன்இந்தியா உள்ளிட்ட இணையதளங்கள்தான். ஆனால் படக்குழு விளக்கம் தருவதோ, இதைப் பற்றி எதுவுமே எழுதாத செய்தித் தாள்களிடம்...!

 

ஆஸ்கர் விழாவில் யாருக்கும் தெரியாமல் நைசாக மது அருந்திய ஹாலிவுட் நடிகை

நியூயார்க்: ஆஸ்கர் விருது விழாவில் மது அருந்தியதாக ஹாலிவுட் நடிகை ஆன் ஹாதவே தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் நடிகை ஆன் ஹாதவே தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

ஆஸ்கர் விழாவில் யாருக்கும் தெரியாமல் நைசாக மது அருந்திய ஹாலிவுட் நடிகை

என் பர்ஸ் சைஸில் ஒரு பிளாஸ்க் கிடைத்தது. உடனே நான் அதில் டக்கீலாவை ஊற்றி ஆஸ்கர் விருது விழாவுக்கு எடுத்துச் சென்றேன். விழா நடந்த இடத்தில் என்னை என் கணவர் நாங்கள் உட்கார வேண்டிய இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு பார்த்தால் எங்கள் அருகில் என் நண்பர் ஜோசப் கோர்டன் லெவிட் அமர்ந்திருந்தார்.

நான் டக்கீலாவை குடிக்க எடுத்தவுடன் லெவிட் அதை பார்த்துவிட்டு வேண்டாம், வேண்டாம் நடுக்கூடத்தில் வேண்டாம் என்றார். ஆனால் நான் நைசாக குடித்துவிட்டேன் என்றார்.

ஆஸ்கர் விருது விழாவுக்கு வரும் நடிகைகள் கையில் ஒரு குட்டி பர்ஸை எடுத்து வருவார்கள். ஆன் ஹாதவே அதில் மதுவை எடுத்து வந்துள்ளார்.

 

குறும்படம், டிஜிட்டல் படங்களுக்காக புதுபட அதிபர் சங்கம்!

குறும்படம், டிஜிட்டல் படங்களுக்காக புதுபட அதிபர் சங்கம்!

குறும்பட ஆவண படங்களை இச் சங்கத்தில் பதிவு செய்யலாம். இச்சங்கத்தில் இருந்தவர்கள் எடுக்கும் படங்களில் யார் வேண்டுமானாலும் பணியாற்றலாம். சுதந்திரமான அமைப்பாக இது செயல்படும். அரசிடம் பதிவும் செய்யப்பட்டுள்ளது," என்றார்.

தமிழ் இலக்க திரைப்பட குறும்பட ஆவண பட தயாரிப்பாளர் சங்க துவக்க விழாவில் நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, திரைப்பட வர்த்தக சபை தலைவர் கல்யாண், தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர்.மற்றும் டி.ஜி.தியாகராஜன், ஞானவேல்ராஜா, தியாராஜன், அருள்பதி, ஜாகுவார் தங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

கோச்சடையான் மே 1-ல் ரிலீஸாகுமா... அல்லது மேலும் தள்ளிப் போகுமா?

சென்னை: ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படம் வரும் மே முதல் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த தேதியை உறுதிப்படுத்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்காரர்கள் இன்று சென்னையில் கூடியுள்ளனர். இந்தத் தேதியாவது உறுதியாகுமா அல்லது வேறு தேதிக்கு மாற்றப்படுமா என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.

வருகிற 11-ந் தேதி இப்படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்விட்டது.

கோச்சடையான் மே 1-ல் ரிலீஸாகுமா... அல்லது மேலும் தள்ளிப் போகுமா?

மே 1-ந் தேதி படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம், குஜராத்தி, பஞ்சாபி, ஒரியா ஆகிய மொழிகளில் இப்படம் வருகிறது. ஐப்பானிய மொழியிலும் டப்பிங் செய்து வெளியீடுகின்றனர். அனைத்து மொழி டப்பிங்கும் முடிந்து, ஏஆர் ரஹ்மானின் ஸ்டுடியோவில் பின்னணி இசைச் சேர்ப்பு நடந்து வருகிறது.

‘கோச்சடையான்' படம் ‘அவதார்', ‘டின்டின்' போன்ற ஹாலிவுட் படங்களின் தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ளது.

முதல் பாடல் மற்றும் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் 6000 தியேட்டர்களில் இப்படத்தை திரையிடுகின்றனர்.

தமிழகம் முழுவதும் அதிக தியேட்டர்களில் ‘கோச்சடையான்' திரையிடப்பட உள்ளதால் மே 1 முதல் மே 14-ம் தேதிவரை வெளியாகவிருந்த பல படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 

நலமுடன் வீடு திரும்பினார் மனோரமா

நலமுடன் வீடு திரும்பினார் மனோரமா

அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள். 6 நாட்கள் அவர் தீவிர சிகிச்சை பிரிவிலேயே வைக்கப்பட்டிருந்தார்.

மனோரமாவின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் காணப்பட்டது. முழுமையாக சீரானதும், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

அதன்பிறகும் அவர் 2 நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். அவர் பூரண குணம் அடைந்ததைத் தொடர்ந்து நேற்று வீடு திரும்பினார்.

திரையுலகினர் பலரும் அவரை நலம் விசாரித்தனர்.

 

சன் டிவியில் வாரம் 2 முறை படையப்பா: ஓ... அதுக்காகவா?

சென்னை: சன் தொலைக்காட்சியில் வாரத்தில் இரண்டு முறை படையப்பா படம் போடுவது முரட்டு பெண்ணை எதிர்த்து வாக்களிக்க மறைமுகமாக சொல்லப்படுகிறதா என்று ட்விட்டரில் மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து கட்சியினரும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் மக்களும் தேர்தல் பற்றியும், பிரச்சாரக் கூட்டத்தில் தலைவர்கள் பேசுவது பற்றியும் தான் விவாதித்துக் கொண்டிருக்கிறார்.

சன் டிவியில் வாரம் 2 முறை படையப்பா: ஓ... அதுக்காகவா?

இந்நிலையில் ட்விட்டரில் சன் தொலைக்காட்சயில் தேர்தல் நேரத்தில் வாரம் இரு முறை படையப்பா படத்தை ஒளிபரப்புவது பற்றி மக்கள் விவாதிக்கின்றனர்.

படையப்பா படத்தை ஒளிபரப்பி முரட்டு பெண்ணுக்கு எதிராக வாக்களிக்குமாறு மறைமுகமாக கூறகிறார்களா என்று ட்விட்டரில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இனிய தமிழ் மக்கள்!.

 

இந்த நடிகருக்கு எல்லாம் வாழ்வு தான்: கடுப்பில் இளம் ஹீரோக்கள்

சென்னை: இந்த சிவமான நடிகருக்கு வந்த வாழ்வை பாரு என்று வளர்ந்து வரும் இளம் ஹீரோக்கள் கூறி வருகிறார்களாம்.

சுள்ளான், லீடர் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த புஸு புஸு நடிகை ஹீரோ அவதாரம் எடுத்த அரசியல் குடும்பத்து தயாரிப்பாளரின் படத்தில் நாயகியாக நடித்தார். அதன் பிறகு அவர் குமாரு நடிகர், பிக்கப் டிராப் நடிகருடன் ஜோடி சேர்ந்தார். இந்நிலையில் தான் நடிகை சின்னத் திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த சிவமான நடிகருக்கு ஜோடியானார்.

இதை பார்த்த வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களுக்கு புஸு புஸு நடிகையுடன் ஜோடி சேரும் ஆசை ஏற்பட்டுள்ளதாம். இது குறித்து அறிந்த நடிகை இப்படியே போனால் முன்னணி நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்று நினைத்துள்ளார். இதையடுத்து இனி முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பேன் என்று கூறி வருகிறாராம்.

இதனால் அவருடன் ஜோடி சேர ஆசைப்பட்ட வளர்ந்து வரும் சில இளம் ஹீரோக்களுக்கு கவலையாக உள்ளதாம். சிவமான நடிகருக்கு வந்த வாழ்வு நமக்கு வருவேனா என்கிறதே என புலம்புகிறார்களாம்.

 

போலாம் ரைட்… புதுயுகம் டிவியில் சுவாரஸ்ய அனுபவங்கள்

எல்லாருடைய வாழ்க்கையிலும் பயணங்களின் போது கிடைக்கும் அனுபவங்கள் மறக்க முடியாததது. அந்த பயணம் தொலைத்தூர பயணமாகயிருந்தாலும் சரி, குறுகிய தூர பயணமாகயிருந்தாலும் சரி, அந்த பயணத்தின் போது கிடைக்கும் அனுபவங்கள் தான் முக்கியமானவை.

இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் கூட, பெரும்பாலும் நம்ம கூட பயணம் செய்யும் நபர்களை ஒரு முக்கிய காரணமாக கூறலாம்.

இந்த பயணத்தை மேலும் மகிழ்ச்சிகரமானதாக்க வருகிறது புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி "போலாம் ரைட்"

மகிழ்ச்சிகரமான அனுபவங்கள்

தான் விரும்பும் இடத்திற்கு செல்லும் முன் ஒரு நபருக்கு கிடைக்கும் மகிழ்ச்சிகரமான் அனுபங்களே "போலாம் ரைட்" நிகழ்ச்சியின் மையக்கரு என கூறலாம்.

இலவச பயணம்

இந்த போலாம் ரைட் ஆட்டோவில் ஏறும் அனைத்து நபர்களுக்கும் இலவசமான பயணம் மட்டுமல்லாமல், அவங்களுக்கு பிடித்த விளையாட்டுகளும், பாடல்களும், பரிசுகளும் இலவசமாக கிடைக்கிறது.

போலாம் ரைட்… புதுயுகம் டிவியில் சுவாரஸ்ய அனுபவங்கள்

நிகழ்ச்சி தொகுப்பாளருடன்

இந்த ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத அளவிற்கு ஒரு அனுபவம் மட்டுமல்லாமல், ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளருடன் பேசிக்கொண்டே பயணம் செய்யும் ஒரு அரிய வாய்ப்பையும் இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தி தருகிறது.

மறக்க முடியாத அனுபவம்

அனைத்திற்கும் மேலாக சென்னையிலிருக்கும் கூட்ட நெரிசல் மிகுந்த ஒரு பயணத்தை மறக்க முடியாத ஒரு அனுபவமாக மாற்றுவது இந்த போலாம் ரைட் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை பரினா தொகுத்து வழங்குகிறார் .

 

வைகைப் புயலை மிரட்ட தெலுங்குக்காரர்களை தூண்டியவர் இவர்தானாமே?

காமெடிப் புயல் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடித்து வெளியாகும் புதிய படத்தை வெளிவரவிடாமல் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது, அந்த அரசியல் தலைவர்தான் என கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

'ஏன்யா... அவரே தேர்தல்ல மகா பிஸியா இருக்கார். அவர் போயி இந்த மாதிரி சின்னத்தனமான வேலயச் செய்வாரா?' என்று திருப்பிக் கேட்காமலும் இல்லை நடுநிலையாளர்கள்.

ஆனால் அரசியல் தலைவரால், புயலின் அந்த பழைய நக்கல், நய்யாண்டி, எகத்தாள பிரச்சாரத்தை மறக்கவே முடியவில்லையாம். 'அவன் படம் வரவே கூடாது... அதுக்கு என்ன பண்ணனுமோ பண்ணுங்க... ' என்று தெலுங்கு அமைப்பின் தலைவர்களிடம் தெலுங்கிலேயே பேசித் தூண்டிவிட்டார் என அரசியல் தலைவர் மீது குற்றம் சாட்டுகின்றனர் வடிவேலு ஆதரவாளர்கள்.

இந்த உண்மை வெளிவந்ததால்தான், வைகைப் புயலுக்கு தமிழ் அமைப்புகள் பகிரங்கமாக ஆதரவளிக்க கிளம்பிவிட்டனவாம்.

சினிமா சங்கங்கள் அனைத்தும் வாயை மூடிக் கொண்டு சும்மா இருப்பதால், மேலும் சில அமைப்புகளும் வைகைப் புயலுக்கு ஆதரவாகக் களமிறங்கப் போகின்றனவாம்.

அரசியல் தலைவர் தூண்டிவிட்டார் என்றே வைத்துக் கொண்டாலும், அவரை ஆலகால விஷமாய் வெறுக்கும் ஆட்சி மேலிடம் ஏன் வைகைப் புயல் வீட்டுப் பாதுகாப்புக்கு அனுப்பிய போலீசை தடாலென வாபஸ் பெற்றுக் கொண்டது என்றுதான் புரியவில்லை!